Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவனை கொல்ல பாம்பு வாங்கிய மனைவி ; இறுதியில் பாம்பு தீண்டி மனைவியும் கள்ளக்காதலனும் பலி

Featured Replies

கணவனை கொல்ல பாம்பு வாங்கிய மனைவி ; இறுதியில் பாம்பு தீண்டி மனைவியும் கள்ளக்காதலனும் பலி

 

 

கள்ளக்காதலன் மீது கொண்ட மோகத்தினால் கணவனைக் கொலைசெய்ய எண்ணிய மனைவின் கள்ளக்காதலனுடன் இணைந்து வாங்கிய பாம்பு இறுதியில் அவர்கள் இருவரின் உயிரை பறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கைநிறைய சம்பாதித்து வீடு கார் என்று நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளார். தனது மனைவி கோகிலவாணி மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரையில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.இவர்களுக்கு இடையில் தண்ணீர் கொண்டுவரும் பையன் மூலம் பிரச்சினை உருவெடுத்தது. சகஜமாக அக்கா என்றபடி வாரம் இரு முறை தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து சென்ற வந்த பையனுடன் வாணியும் மரியாதையுடன் பழகியுள்ளான்.

வாணியும் குறும்பாக பேசக்கூடியவர். களங்கமின்றி  பழகினாள் .ஆனால் அந்த தண்ணீர் பையன் கொஞ்சம் கொஞ்சமாக வாணியின் மனதில் ஆசைகளைத் தூண்டி ஒரு நாள் தனிமையில் தன்வசப்படுத்தி தன்னாசையினை தீர்த்து கொண்டான்.வாணி தண்ணீர் கொண்டுவரும்  பையனின் கபட பேச்சில் மயங்கி அவனின் காதல் வலையில் சிக்குண்டு அவன்மேல் பைத்தியமாகிப் போனாள். நினைத்த நேரம் எல்லாம் அவனை வரவைத்து தனது ஆசையினை தீர்த்துக்கொண்டு அவனுடன் சந்தோஷமாக இருந்தாள். 

snakeinblanket.jpg

வாணியின் கணவனுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வாணியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தினை சொல்லி விட வீட்டில் பிரச்சினை தொடங்கியது. கள்ளக்காதலன் மேல் தீர்க்க முடியாத ஆசையினை கொண்டிருந்த வாணி தன் கணவனை கொலைச்செய்ய தீர்மானித்தாள். 

தண்ணீர் பையனின் உதவியுடன் பாம்பு வாங்கி வந்து கணவன் நித்திரைக்கு சென்ற பின் அவரின் படுக்கையறைக்குள் நாகபாம்பினை விட்டுள்ளனர்.ஆனால் அந்த பாம்பு காணாமல் போய் விட்டது. கணவனை கொலை செய்யும் முயற்சி தோல்வியுற்றதால் வாணி மிகவும் ஏமாந்து போனாள் . 

இன்னொரு முறையில் கொலைசெய்ய திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள் வாணி. இதற்கிடையில் ஒருவாரம் கடந்து விட்டது.தனது கணவன் இன்று முழுவதும் வர மாட்டான் என்பதை  அறிந்து கொண்டு வாணி தனது கள்ளக்காதலனான  தண்ணீர் கொண்டு வரும் பையனுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று எண்ணி அவனை  வரவைத்தாள். இருவரும் சேமிப்பு அறையில் தங்களின் இச்சையினை தீர்த்துக்கொள்ள ஒதுங்கினர். 

இருவரும் உடலுறவில் சந்தோசமாக இருந்த நேரத்தில் அந்த சேமிப்பு அறையில் பதுங்கி கிடந்த அந்த நாகம் இருவரையும் கொத்தியது. காப்பாற்ற யாருமில்லாத நிலையில் நிர்வாண கோலத்திலேயே சம்பவயிடத்திலே உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://www.virakesari.lk/article/12136

  • கருத்துக்கள உறவுகள்

8TEbRRezc.jpg

:D:

  • கருத்துக்கள உறவுகள்

காதலா இது காமம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பும் நல்ல பசியோட இருந்திருக்கும் போல கிடக்கு......!

பனையிலும் பார்க்க 'வடலி' எப்பவும் வடிவாய்த் தான் இருக்கும்!

ஆனால் வடலியும் பனையாகும் போது...இன்னும் பல வடலிகள் அதன் கீழ் முளைத்திருக்கும்!

 

பி.கு:  புங்கை...என்ன சொல்ல வாறீங்கள் எண்டு வழக்கம் போல விளங்கவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

snakeinblanket.jpg

செய்தியை விட போட்ட படம் பயங்கரமாய் கிடக்குது......tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

snakeinblanket.jpg

செய்தியை விட போட்ட படம் பயங்கரமாய் கிடக்குது......tw_astonished:

ம்

 

இந்த செய்தியை தனிமடலில் பொதி செய்து நெடுக்கருக்கு அனுப்ப இருக்கிறேன் 

அந்த பாம்புக்கு எப்படி தான் கண் தெரிஞ்சுதோ :116_eye:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

snakeinblanket.jpg

செய்தியை விட போட்ட படம் பயங்கரமாய் கிடக்குது......tw_astonished:

animated snake gif

குமாரசாமி அண்ணை.... அந்தப் பாம்பும், பொறுத்த இடத்தில தான்...  கடிச்சிருக்குது. animated-snake-image-0090

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லொழுக்கப் பெண் கண்ணகி வாழ்ந்த மதுரையில்.. இப்படி ஒருத்தியான்னு.. பாம்புக்கே கோபம் வந்திடுச்சு. இதெல்லாம்.. போட்டுத் தள்ள வேண்டிய கேசுன்னு போட்டிடிச்சு. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசயத்தை எப்படி எல்லாம் திரித்து எழுதுகிறார்கள்....

இருவர் இறந்து விட்டனர்... பாம்புக்கடியால்...

கணவனைக் கொல்ல வாங்கிய பாம்பு என்று எதை வைத்து சொல்கிறார்கள்? மனைவி சொன்னாரோ, சாக முதல் ?

ஏன் கணவரே, இவர்களது தொடர்பு தெரிந்து பாம்பை வாங்கி உள்ள விட்டிருக்கலாமே?

உண்மையில் இவர்கள் பாம்பாலா அல்லது (கள்ளத்தொடர்பால்) விசம் வைத்து கொல்லப்பட்டார்களா என்பது கடவுளுக்குத் தான் தெரியும்.

சொல்லாறாங்கய்யா, டீடெய்லு...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாம்பு என்று நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நல்ல பாம்பு என்று நினைக்கின்றேன்

கெட்ட பாம்பு... tw_angry:

நேரகாலம் தெரியாம அந்தமாதிரியா நேரத்திலா கொத்துவது... ? :rolleyes:

இவை இரண்டுபேரும், இச்சாதாரி ஆவீகளா வந்து, பாம்புக்கு, அந்தமாதிரி நேரத்தில, சரியான அலுப்புக் குடுப்பினம்...

அப்பப் தான் புரியும்... :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

கெட்ட பாம்பு... tw_angry:

நேரகாலம் தெரியாம அந்தமாதிரியா நேரத்திலா கொத்துவது... ? :rolleyes:

இவை இரண்டுபேரும், இச்சாதாரி ஆவீகளா வந்து, பாம்புக்கு, அந்தமாதிரி நேரத்தில, சரியான அலுப்புக் குடுப்பினம்...

அப்பப் தான் புரியும்... :grin:

பாம்பு என்னத்தையோ கண்டு.....என்னவெண்டோ.....நினைச்சுக் கொத்தியிருக்கலாம் அல்லவா?

 

ஏன் இன்னுமொருவரும்.. வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

ஒரு விசயத்தை எப்படி எல்லாம் திரித்து எழுதுகிறார்கள்....

இருவர் இறந்து விட்டனர்... பாம்புக்கடியால்...

கணவனைக் கொல்ல வாங்கிய பாம்பு என்று எதை வைத்து சொல்கிறார்கள்? மனைவி சொன்னாரோ, சாக முதல் ?

ஏன் கணவரே, இவர்களது தொடர்பு தெரிந்து பாம்பை வாங்கி உள்ள விட்டிருக்கலாமே?

உண்மையில் இவர்கள் பாம்பாலா அல்லது (கள்ளத்தொடர்பால்) விசம் வைத்து கொல்லப்பட்டார்களா என்பது கடவுளுக்குத் தான் தெரியும்.

சொல்லாறாங்கய்யா, டீடெய்லு...

Nodding in office meetings like

நாத முனி அண்ணே......  "செய்தி திரட்டியில்"   வரும், செய்திகளை,
பகிடியாக எடுத்து விட்டு... நம்ம போக்கிலை போக வேணும்.
இதுக்கெல்லாம்..., "நதி மூலம்,  ரிஷி மூலம்."  தேட  வெளிக்கிட்டால், மண்டை.... காஞ்சு போயிடும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Nodding in office meetings like

சிறி அண்ணோய்,

உந்தப் படத்தினைப் பார்க்க, கந்தர்மடத்தில உங்களை அந்தநாளில பார்த்த மாதிரியே இருக்குது..

  • கருத்துக்கள உறவுகள்

வாணி 
பாம்பு 
பையன் 
தண்ணி 

உண்மையோ பொய்யோ கொலையோ ... மரணமோ 

கொம்பினேஷன் மட்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 07/10/2016 at 11:20 AM, Nathamuni said:

ஒரு விசயத்தை எப்படி எல்லாம் திரித்து எழுதுகிறார்கள்....

இருவர் இறந்து விட்டனர்... பாம்புக்கடியால்...

கணவனைக் கொல்ல வாங்கிய பாம்பு என்று எதை வைத்து சொல்கிறார்கள்? மனைவி சொன்னாரோ, சாக முதல் ?

ஏன் கணவரே, இவர்களது தொடர்பு தெரிந்து பாம்பை வாங்கி உள்ள விட்டிருக்கலாமே?

உண்மையில் இவர்கள் பாம்பாலா அல்லது (கள்ளத்தொடர்பால்) விசம் வைத்து கொல்லப்பட்டார்களா என்பது கடவுளுக்குத் தான் தெரியும்.

சொல்லாறாங்கய்யா, டீடெய்லு...

கொத்தின  பாம்பு சொன்னது என்று பாம்மை சிறையில் வைத்து போட்டுவிட்டு

கேசை மூடிவிடும் தமிழக காவல்த்துறை..

இதென்ன முதல் தரமா??

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.