Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கானா நாட்டின் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான உயர் விருது இரு ஈழத் தமிழர்களுக்கு!

Featured Replies

கானா நாட்டின் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான உயர் விருது இரு ஈழத் தமிழர்களுக்கு!

மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டில் இரண்டு ஈழத் தமிழர்களுக்கு அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசராசா சதீசன் மற்றும் கரணவாய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குகதாசன் ஆகிய இருவரும் இணைத்து 2000 ஆம் ஆண்டுமுதல் கானா நாட்டில் விவசாய மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அண்மையில், ஏற்றுமதி மூலம் கானா நாட்டிற்கு அன்னியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்ற முன்னணித் தொழிலதிபர்களாக இவர்கள் இருவரும் திகழ்து வருகின்றனர்

இந்நிலையில், கடந்த வருடம் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற இருவரும் இவ்வருடம் கானா நாட்டுத் தொழிலதிபர்களைப் பின்தள்ளி முன்னிலை வகிக்கின்றனர்.

இதனால், கானா நாட்டில் வருந்தோறும் வழங்கப்படுகின்ற சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான ஜனாதிபதி விருதும் தங்கப் பதக்கமும் இவர்களுக்கு கிடைத்துள்ளது.

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த தொழிலதிபர்களில் ஒருவரான கணேசராசா சதீசன், சிறந்த திட்டமிடலுடன், மனந்தளராத முயற்சியுடன் கூடிய கடின உழைப்பினாலேயே முகவரி அறியாத நாட்டில் கால்பதித்த தமக்கு உயர் விருதினைப் பெற்றுத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=46918

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்காவில் சிறந்த, அரிசியல் உறுதிப்பாடு உள்ள நாடுசள் இரண்டு. ஒன்று கானா அடுத்தது பொற்ஸ்வானா.

ஐரோப்பவிற்கு அருகில் இருப்பதால் விவசாய முயற்சிக்கு சிறந்த தேர்வு. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இருவருக்கும் ....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது சாதனையை நினைக்கையில் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.

சொர்கத்தில் அடிமையாக இருப்பதிலும் பார்க்க, நரகத்துக்கு இராஜாவாக இருப்பது மேலானது.

நாம் சொர்கத்தில் அடிமைகள். (ஒரு உவமை)

வாழ்த்துக்கள்.

இவர்கள்தானா இங்குள்ள தமிழ்க் கடைகளுக்கு முருங்கைக்காய் பயித்தங்காய் போன்ற மரக்கறி வகைகளை ஆபிரிக்காவில் விளைவித்து ஏற்றுமதி செய்வது ? :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இருவருக்கும் ....!

  • கருத்துக்கள உறவுகள்

கானா நாட்டில் இருந்து வரும் வாழைப்பழம்தான் தமிழ் கடைகளில் கப்பல் பழம் என்று விற்கின்றார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

வாழ்த்துக்கள்.

இவர்கள்தானா இங்குள்ள தமிழ்க் கடைகளுக்கு முருங்கைக்காய் பயித்தங்காய் போன்ற மரக்கறி வகைகளை ஆபிரிக்காவில் விளைவித்து ஏற்றுமதி செய்வது ? :)

அட, கருவேற்பிலை....

புடலை... கருனை... மட்டுவில் கத்தரி ... வாழைப்பொத்தி.... வாழையிலை..... பச்சைமிளகாய்... வெண்டிக்காய்.... பப்பாளி

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிமார் இருவருக்கும் வாழ்த்துக்கள்.tw_thumbsup:
கெமிக்கல் கலக்காத மிளகாய்த்தூளையும் அரைச்சு வித்தியளெண்டால் போறவழிக்கு புண்ணியமாய் போகும்.:(

சந்தோசமான விடயம் ! வாழ்த்துகள்

 

1 hour ago, குமாரசாமி said:

தம்பிமார் இருவருக்கும் வாழ்த்துக்கள்.tw_thumbsup:
கெமிக்கல் கலக்காத மிளகாய்த்தூளையும் அரைச்சு வித்தியளெண்டால் போறவழிக்கு புண்ணியமாய் போகும்.:(

ஏன், ஜெர்மனியில் மில் அருகில் இல்லையா? நாங்கள் மிளகாய் வறுத்துக் கொண்டு மில்லுக்கு போய்த்தான் திரிப்பது.

1 hour ago, நிழலி said:

சந்தோசமான விடயம் ! வாழ்த்துகள்

 

ஏன், ஜெர்மனியில் மில் அருகில் இல்லையா? நாங்கள் மிளகாய் வறுத்துக் கொண்டு மில்லுக்கு போய்த்தான் திரிப்பது.

இங்கு மில் இருப்பதாக நான் கேள்விபடவேயில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இருவருக்கும்

6 hours ago, Nathamuni said:

இவர்களது சாதனையை நினைக்கையில் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.

சொர்கத்தில் அடிமையாக இருப்பதிலும் பார்க்க, நரகத்துக்கு இராஜாவாக இருப்பது மேலானது.

நாம் சொர்கத்தில் அடிமைகள். (ஒரு உவமை)

 

6 hours ago, Nathamuni said:

இவர்களது சாதனையை நினைக்கையில் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.

சொர்கத்தில் அடிமையாக இருப்பதிலும் பார்க்க, நரகத்துக்கு இராஜாவாக இருப்பது மேலானது.

நாம் சொர்கத்தில் அடிமைகள். (ஒரு உவமை)

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

சந்தோசமான விடயம் ! வாழ்த்துகள்

 

ஏன், ஜெர்மனியில் மில் அருகில் இல்லையா? நாங்கள் மிளகாய் வறுத்துக் கொண்டு மில்லுக்கு போய்த்தான் திரிப்பது.

மில்லோ....

இவர் கனடாவிலையோ.... இருக்கிறார். :grin: 

அல்லது ஊர் நினைவிலே இருக்கிறாரோ? :unsure:

15 minutes ago, Nathamuni said:

மில்லோ....

இவர் கனடாவிலையோ.... இருக்கிறார். :grin: 

அல்லது ஊர் நினைவிலே இருக்கிறாரோ? :unsure:

நாதம், இதுக்குத்தான் ரொரன்டோ வை குட்டி 'ஊர்' என்பது (குட்டி என்றால் மற்ற அர்த்தம் இல்லை)

எனக்குத் தெரிந்து இங்கு இரண்டு இடங்கள் இருக்கு. ஒன்று ஸ்கார்புரோவில் மற்றது பிரம்டனில்.  சிவத்த மிளகாயை, அதற்குள் தேவையான மிச்ச அய்டங்களுடன் வறுத்துக் கொண்டு போனால் திரித்து தருவார்கள்.  அதே  போன்று அரிசிமாவையும் திரித்து தருவதுடன், வறுத்தும் தருவார்கள். அரிசி மாவிலும் மிளகாய்த் தூளிலிலும் கலப்படம் செய்வதால் நாம் இப்ப கடையில் வாங்குவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நாதம், இதுக்குத்தான் ரொரன்டோ வை குட்டி 'ஊர்' என்பது (குட்டி என்றால் மற்ற அர்த்தம் இல்லை)

எனக்குத் தெரிந்து இங்கு இரண்டு இடங்கள் இருக்கு. ஒன்று ஸ்கார்புரோவில் மற்றது பிரம்டனில்.  சிவத்த மிளகாயை, அதற்குள் தேவையான மிச்ச அய்டங்களுடன் வறுத்துக் கொண்டு போனால் திரித்து தருவார்கள்.  அதே  போன்று அரிசிமாவையும் திரித்து தருவதுடன், வறுத்தும் தருவார்கள். அரிசி மாவிலும் மிளகாய்த் தூளிலிலும் கலப்படம் செய்வதால் நாம் இப்ப கடையில் வாங்குவது இல்லை.

எல்லாரும் சாப்பாட்டு விசயத்தில...வலு அவதானமாய்த் தான் இருக்கினம் போல கிடக்கு!

நாம தான் விசரன் மாதிரி...தமிழ்க் கடை 'இரசாயனங்களைச்' சாப்பிட்டுத் துலைக்கிறது போல கிடக்கு!

ம்ம்ம்... இந்தச் சனி ஞாயிறுக்கு '''''மில்' ஒண்டு தேடிப்பிடிக்கிறது தான் வேலை!

நன்றி  நிழலி...நன்றி குமாரசாமியண்ணர்!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புங்கையூரன் said:

எல்லாரும் சாப்பாட்டு விசயத்தில...வலு அவதானமாய்த் தான் இருக்கினம் போல கிடக்கு!

நாம தான் விசரன் மாதிரி...தமிழ்க் கடை 'இரசாயனங்களைச்' சாப்பிட்டுத் துலைக்கிறது போல கிடக்கு!

ம்ம்ம்... இந்தச் சனி ஞாயிறுக்கு '''''மில்' ஒண்டு தேடிப்பிடிக்கிறது தான் வேலை!

நன்றி  நிழலி...நன்றி குமாரசாமியண்ணர்!

உதுக்கு மில் ஏன்?

கிரைண்டர் வாங்கி வைத்துக் கொண்டு தேவையான போது அரைக்கலாமே.

எம்மில் சிலருக்கு, கோபால் பல்பொடி, ராணி சோப்... இன்னும் தேவைதான்.

old habits die hard ?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

உதுக்கு மில் ஏன்?

கிரைண்டர் வாங்கி வைத்துக் கொண்டு தேவையான போது அரைக்கலாமே.

எம்மில் சிலருக்கு, கோபால் பல்பொடி, ராணி சோப்... இன்னும் தேவைதான்.

old habits die hard ?

 

 

ஐயோ...ஐயோ....இதென்ன புதுப் பிரச்சனையாய்க் கிடக்குது!

நாங்கள் சாதாரணமான மனுசர் தான்.... ஊரிலேயே.. கங்குமட்டைக் கரி தான்...!

மற்றது.. லைப் போய்..!

ஆனால் அரிசி மாவும்...மிளகாய்த் தூளும்....இன்னும் விட்டுப் போகவில்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை!

அதைச் சொல்லுவதில் எனக்கு எந்த விதமான வெட்கமும் இல்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நிழலி said:

சந்தோசமான விடயம் ! வாழ்த்துகள்

 

ஏன், ஜெர்மனியில் மில் அருகில் இல்லையா? நாங்கள் மிளகாய் வறுத்துக் கொண்டு மில்லுக்கு போய்த்தான் திரிப்பது.

தம்பியருக்கு குசும்பு கூடிப்போச்சு.....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இருவருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.....
தமிழர்கள் அதிகம் வசிக்காத.... கானா நாட்டில், துணிந்து குடியேறி....
அங்கு தமது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும், அந்த நாட்டின் உயர் விருதுகளைப் பெற்ற 
கணேசராசா சதீசன் மற்றும்  கந்தசாமி குகதாசன் ஆகிய இருவரையும் நினைக்க பெருமையாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வசிக்கும் இடத்தில் சீலன் என்று ஒருவர். அவர் கடையும் எந்நேரமும் சனம் முட்டிமோதியபடி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆபிரிக்க நாடு ஒன்றில் நிலங்களை வாங்கி மரக்கறிகளை விளைவித்து தன் கடைக்கும் மற்றைய கடைகளுக்கும் கொடுத்தார். இப்ப ஒரு ஆண்டாக கடையை நல்ல விலைக்கு விற்றுவிட்டு  மரக்கறி ஏற்றுமதியையே முழு ஈடுபாட்டுடன் செய்கிறார்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் அவர் மரக்கறி ஏற்றுமதி செய்வதில்லை, இந்தியாவிலிருந்து மளிகை பொருட்களை ஏற்றுமதி செய்கிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.