Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது!

 

Image

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன்

மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார்.

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார்.

அப்படி அனுப்பி வைத்தவர் மூன்று வாரங்களின் பிறகு மனைவியிடம் சென்று தான் செய்தவைகள் அனைத்துமே தவறு. தயவு செய்து என்னுடன் இணைந்து வாழ். நான் இனிப் பிரிவு பற்றியே கதைக்க மாட்டேன் என மனைவியை அழைத்து வந்துவிட்டார்.

மனைவி அதிர்ச்சியடைந்தாலும் அவருடன் சென்று வாழ ஆரம்பித்து இனிதே இப்போது குடும்பம் நடாத்தி வருகின்றனர் அந்த இளைஞரின் மனமாறுதலிற்கான காரணத்தை மனைவியும் ஏற்றுக் கொண்டார்.

ஆமாம் விவகாரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்யச் சென்ற இளைஞருடன் கதைத்த வழக்கறிஞர் அவருடைய மாத வருமாணம், கையிருப்புப் பணம் போன்றவற்றையெல்லாம் விசாரித்து விட்டு அந்த இளைஞரிடம்,

“நீர் விவகாரத்துப் பெறும் வரை மாதந்தம் 3,400 டொலர்கள் மனைவிக்கும் குழந்தைகளிற்கும் வீட்டு வாடகைக்கு, உணவு உடைக்கு எனக் கொடுக்க வேண்டும். விவகாரத்துப் பெற ஒன்றரை வருடங்கள் எடுக்கலாம்.”

“விவகாரத்துப் பெற்ற பிறகு பிள்ளை பராமரிப்பு பணமாக மாதாந்தம் 1,800 டொலர்கள் கொடுக்க வேண்டும். உமது முன்னைய மனைவி விவாகரத்துப் பெற்ற பிறகும் வேலைக்குச் செல்லாவிட்டால் இந்தத் தொகை அதிகரிக்கும்.”

“உமது மூன்று குழந்தைகளும் 18 வயது வரும் வரை நீர் இந்தப் பராமரிப்பு பணத்தைக் கொடுக்க வேண்டும.; நீர் இப்போது 2000 டொலர்கூட மாத வருமாணமாகப் பெறவில்லையே? விவாகரத்து வேண்டுமா என்பதை ஆழமாக யோசித்துக் கூறும்” எனக் கூறியுள்ளார்.

இளைஞரும் வீட்டின் மேல் கடன்பெற்றுத் தன்னால் தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்க முடியும் எனக் கூறியபோது வீட்டின் அரைப்பகுதிப் பெறுமானம் உமது மனைவிக்குரியது. அவரது அனுமதியில்லாமல் நீர் இரண்டாம் அடமாணமோ, கடனோ பெறமுடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு யோசனையுமில்லாமல் மனைவியின் வீட்டிற்குச் சென்று தான் செய்த தவறை மன்னிக்குமாறு அந்த இளைஞர் நேரடியாக மனைவியிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்து வந்து அமைதியாகக் குடும்பம் நடாத்துகின்றார்.

அந்த இளைஞர் இப்போது குடும்பம் மாத்திரம் நடாத்தவில்லை, தனது நண்பர்களிற்கு இதனைத் தனது அறிவுரையாகவும் கூறி வருகின்றார்.

DIVERS%201.jpg

http://tamilsguide.com/blog/canada-news/4495

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத் தானாக்கும் ,....தாலி கட்டுற நேரத்தில ..மேளத்தில அந்த விளாசல் விளாசிறது...!

நாம கேட்டாத்தானே...!:cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

------

ஆமாம் விவகாரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்யச் சென்ற இளைஞருடன் கதைத்த வழக்கறிஞர் அவருடைய மாத வருமாணம், கையிருப்புப் பணம் போன்றவற்றையெல்லாம் விசாரித்து விட்டு அந்த இளைஞரிடம்,

நீர் விவகாரத்துப் பெறும் வரை மாதந்தம் 3,400 டொலர்கள் மனைவிக்கும் குழந்தைகளிற்கும் வீட்டு வாடகைக்கு, உணவு உடைக்கு எனக் கொடுக்க வேண்டும். விவகாரத்துப் பெற ஒன்றரை வருடங்கள் எடுக்கலாம்.”

“விவகாரத்துப் பெற்ற பிறகு பிள்ளை பராமரிப்பு பணமாக மாதாந்தம் 1,800 டொலர்கள் கொடுக்க வேண்டும். உமது முன்னைய மனைவி விவாகரத்துப் பெற்ற பிறகும் வேலைக்குச் செல்லாவிட்டால் இந்தத் தொகை அதிகரிக்கும்.”

“உமது மூன்று குழந்தைகளும் 18 வயது வரும் வரை நீர் இந்தப் பராமரிப்பு பணத்தைக் கொடுக்க வேண்டும.; நீர் இப்போது 2000 டொலர்கூட மாத வருமாணமாகப் பெறவில்லையே? விவாகரத்து வேண்டுமா என்பதை ஆழமாக யோசித்துக் கூறும்” எனக் கூறியுள்ளார்.

இளைஞரும் வீட்டின் மேல் கடன்பெற்றுத் தன்னால் தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்க முடியும் எனக் கூறியபோது வீட்டின் அரைப்பகுதிப் பெறுமானம் உமது மனைவிக்குரியது. அவரது அனுமதியில்லாமல் நீர் இரண்டாம் அடமாணமோ, கடனோ பெறமுடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு யோசனையுமில்லாமல் மனைவியின் வீட்டிற்குச் சென்று தான் செய்த தவறை மன்னிக்குமாறு அந்த இளைஞர் நேரடியாக மனைவியிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்து வந்து அமைதியாகக் குடும்பம் நடாத்துகின்றார்.

இங்கும்... இந்தப் பயத்தில் தான்,  பல ஜேர்மன்காரர்  விவாக ரத்து எடுக்காமல் இருக்கிறார்கள்.
அப்படி  ஏண்டாப்புக்கு.... விவாகரத்து   எடுத்த ஆண்களின் வாழ்க்கை,  பாழாய்ப்  போனதை, நேரில் கண்டு இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வக்கீல்..பணம் புடுங்கும் நோக்கமில்லாது பணியாற்றுகிறார் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடேய்ங்கப்பா, லிவிங் ரூகெதரில் முடியப் போகுது எதிர்காலம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது!

 

Image

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன்

மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார்.

இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார்.

.....

http://tamilsguide.com/blog/canada-news/4495

சும்மா வருவாளா சுகுமாரி..?

கல்யாணம் கட்டமுன் ஆயிரம் முறை யோசிக்கவேண்டும்..!

கல்யாணமும் கட்டி, இல்லற வாழ்வை அனுபவித்துவிட்டு எந்தவித பொறுப்புமின்றி ஒரு பாலரை தண்டிக்கும்விதமாக டாட்டா காட்டிச்செல்பவர்களுக்கு(ஆணானாலும், பெண்ணானாலும்) இன்னமும் அதிக தண்டனை கொடுக்க சட்டத்தில் வழிவகை செய்ய வேன்டும்..!!

  • கருத்துக்கள உறவுகள்

கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்ததன் பயன் பிள்ளைகள்.இது தொடக்கநிலை.பிள்ளைகள் பிறந்ததன் பயன் கணவனும்மனைவியும்  சேர்ந்தே வாழ வேண்டி இருப்பது. இது இறுதி நிலை. என்னே விதியின் விளையாட்டு. மேலும் கனடா நாட்டில் பிரிந்து வாழ முயற்சித்தால் பெண்களுக்கு சலுகைகள் அதிகம்.கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைதான் கணவனுக்கு.இதனால்தான் வெள்ளைகள் கட்டுறதே இல்லை "அவளைத் தொடுவானேன் .கவலைப் படுவானேன்".

 

  • கருத்துக்கள உறவுகள்

விவாகரத்து, பெரும் விவகாரமா போய்விட்டது.

சும்மா just like that என்று கழற்றி விட்டு புது பொம்பிளை தேடிய பெரும் செல்வந்தர்கள் அண்மைய தீர்ப்புகளில் அரண்டு போய் இருக்கிறார்கள்.

மனைவிக்கு எவ்வளவு மாதம், 5 தானே, பத்தே தருகிறேன், பிள்ளைகளுக்கு இன்னெரு 10, ச, சா, 20 மாதம் 30 தருகிறேன், கொடு விவாகரத்து என்று போய் நின்றவர்கள் அதிரும் வகையில்.... உனது பிள்ளைகளையும், வீட்டையும் இது நாள் வரை பொறுப்பாக மனைவி கவனித்து உன்னை யாபாரத்தை கவனிக்க விட்டதாலே பணம் குடும்பத்துக்கு வந்தது. உனக்கு அல்ல.

மறுதலையாக, நீர் வீட்டையும், பிள்ளைகளையும் பார்த்து, மனைவியை யாபாரத்தை பார்க்க விட்டிருந்தால் அதேயளவு பணத்தை உழைத்திருக்க முடியும் என்பது உண்மை.

ஆகவே, குடும்பமாக தீர்மானித்து, அதன்படி வந்த பணம் குடும்பத்துக்கானது. தனியே கணவருக்குரியதல்ல. எனவே பணம், சொத்து இருபங்காக பிரிகிறது என்ற தீர்ப்பில் பெரிய இடத்து ஆட்கள் அக்ரிமென்ட் போட்டு இனைகிறார்கள்.

ஆனால் அக்கிரிமெண்ட் போட, திருமண சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி , மனைவி விவாகரத்து கேட்டால் என்ன சொல்வார்கள்.....! :unsure:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலியாணம்  கட்டாம      முசுப்பாத்திக்கு இருந்துட்டுப் போனா என்ன தப்பாம் கனடாவில  tw_blush:tw_blush:

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அதுசரி , மனைவி விவாகரத்து கேட்டால் என்ன சொல்வார்கள்.....! :unsure:  tw_blush:

யாரு கேட்ட்டாலும், கதை கந்தல் தான். காசு, கலியாணத்துக்கு பின் வந்திருந்தால், யாரிடம் உள்ளதோ, அவையள் பாதி இழக்க நேரிடும்.

இப்ப போடுற அக்ரீமெண்ட், கலியாணத்துக்கு முன்னம் என்னிடம் இருந்தது இமளவு. அதுக்கும் உனக்கும் தொடர்பு இருக்காது எண்டு.

ஆனால், உள்ளதை சொல்ல வெளிக்கிடடால், முதலுக்கே மோசம். ஆளை, கெட்டித்தனமா முடித்தால், அது ஆட்டோமெட்டிக்கா வந்து சேரும்.

தவிர, விவாகரத்தானாலும் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டியதை அக்ரீமெண்ட் தடுக்காது.

என் தமிழ்  நண்பர்கள் இருவர் அண்மையில் (ஒருவர் 2015 இல், மற்றவர் 2016) விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளார்கள். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டு உள்ளது போன்று மோசமாக சொத்து / பணம் தொடர்பாக  நடக்கவில்லை. இருவரும் Mutual consent  ஆக பிரிந்தமையால் போலும். இதில் ஒரு நண்பன்  அடுத்த பெண்ணையும் ஊரில் பார்த்து கலியாணத்துக்கு  தயாராகி விட்டார் 

பொதுவாக இணைந்து இருக்கும் போது சேர்த்த சொத்து ரெண்டாக பங்கிடப்படுவது நடைமுறை. மனைவியின் / கணவனின் பெயர் போடாமல் வீடு வாங்கி இருப்பினும்  கூட மனைவிக்கு 50 விகித பங்கு இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்  உண்மையான பாசத்தினால் மனைவியோடு சேர்ந்து இருக்கவில்லை.எல்லாம்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வழக்கறிஞர் கூறிய கணக்கு சரியா என்பது தெரியவில்லை. சரியாக இருந்தாலும், விருப்பமில்லாத இருவரை ஒன்றாக இருக்கச்செய்துளார்.
இதைவிட பிரிந்திருப்பது பரவாயில்லை.

கனடாவில் கணவன் மனைவி பிரிந்தால் ஒருவர் மற்றவருக்கு அண்ணளவாக எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பதை கீளுள்ள லிங்கில் பார்க்கலாம்.
உங்கள் உண்மையான பெயர் கொடுக்கத்தேவையில்லை.

https://www.mcgurk.ca/spousal-support-calculator/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.