Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம்: சுமந்திரன்

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம்: சுமந்திரன்

 

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின்  பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம்: சுமந்திரன்

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படப் போவதாக ஈபி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மை நாள்களாகக் கூறிவரும் நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று இதனைத் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Nobody-can-leave-T-N-A

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தில் காணப்படும் பல்வேறு இலட்சணைகளைத் தாங்கிய ஒலிவாங்கிகள் யாழ் ஊடகமையத்திலோ அல்லது இதுக்கென்று யாராவது ஒருவரிடமோ இருக்கும் அதை முன்னால் வைத்துவிட்டு ஒரு கமராவால் படம்மெடுத்துவிட்டு அதை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்புவது திரு சிவாஜிலிங்கம் அவர்களது ஸ்ரைல் 

தம்பி சுமந்திரன் இந்தப்போக்கில் போனால் அவரும் அப்படித்தான் செய்யவேண்டிவரும் எல்லாரையும் அனுப்பிப்போட்டு தனியனா நிக்கப்போறன் என அடம்பிடிக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் யாவருக்கும் அறியத்தருவது என்னவென்றால்,  ஸ்தாபகர் சொல்லிப்போட்டார். எல்லோரும் வெளியேறுங்கோ. அவர் களமிறக்கப்பட்ட வேலையும் முடிஞ்சாச்சுது. வெற்றி வாகையோடு  அவர் பாசறைக்கு திரும்புவார்.

விட்டுக்கொடுக்கிறதுக்கு இவரிடம் இன்னும் என்ன இருக்கிறதாம்? இதில என்ன சொல்ல வாறார்? மறைமுகமாக முதலமைச்சரையும், த. ம. பேரவையையும் அவர்களின் செயற்பாடுகளையும்  சாடுகிறார். வெற்றி அளிக்குமா? இல்லையா அதுவும் தெரியாது. ஆனால் வேறு முயற்சியும் எடுக்கக் கூடாது என்கிறார். பிறகு வெற்றி அளிக்காத பட்ஷத்தில் சாவகாசமாக நிண்ட இடத்தில நிண்டு நாங்களே துவங்குவோம் என்கிறார். அதுக்குள்ள போராட்டம் வெடிக்கும் எண்டும் புலுடா. நமது போராட்டங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் எல்லோரும் தங்களால் இயன்றதை செய்வதும் இல்லை, செய்யிறவையை விடுவதுமில்லை. தாங்கள் ஒன்றும் செய்யாமல் மற்றவர் செய்வதை தடுப்பதிலும், தங்களை வீரர்களாக சித்திரிப்பதிலுமே காலத்தை கடத்தி வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் கூட்டமைப்புக்கும் என்ன தொடர்ப்பு. இவரே சம்மால்.. தமிழரசுக் கட்சிக்குள்ளால்.. கூட்டமைப்புக்குள் பின்வாசலால் வந்தவர். முதலில் இவர் கூட்டமைப்பை விட்டு வெளியேறினாலே போதும்... தமிழ் தேசியக் கூட்டமைப்பு தப்பிப் பிழைக்கும். 

இது தமிழ் மக்களின் உரிமையை தான் தாரை வார்த்தாச்சுன்னு பார்த்தால்.. தமிழ் தேசிய கூட்டமைப்பையும்.. நாசமாக்கிட்டு தான் கிளம்புவினம் போல.  சிங்களவனின் தேவையை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். என்னத்தை இறுதியில் சுருட்டிக்கொள்ள திட்டமோ தெரியல்லை. tw_angry::rolleyes:

  • தொடங்கியவர்

யாரும் வரலாம் எவரும் போகலாம் : எம்.ஏ.சுமந்­திரன்

 

 

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்து போட்­டி­யி­டு­வ­தாக இருந்தால் சுதந்­தி­ர­மாக வெளியில் போய் கேட்­கலாம். இதே­போன்று வேறு கட்­சிகள் கூட்­ட­மைப்பில் சேர்ந்து போட்­டி­யிடப் போகிறோம் என்று கேட்டால் அத­னையும் சாத­க­மாகப் பரி­சீ­லித்து உள்­வாங்­குவோம் என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

sumanthiran.jpg

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் யார் இருக்­கி­றார்கள் யார் இல்­லா­துள்­ளார்கள்  என்­பது தெரி­யா­துள்­ளது. காரணம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு  ஆரம்­பித்­த­போது தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ், தமி­ழீழ விடு­தலை இயக்கம் ஆகிய மூன்றும் கைச்­சாத்­திட்டு கூட்­ட­மைப்பு   ஆரம்­பிக்­கப்­பட்­டது. கைச்­சா­த்தி­டப்­பட்ட ஆவ­ணத்தில் இந்த மூன்று கட­்சி­களும் தான்  கைச்­சாத்­திட்­டுள்­ளன.

தற்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் இருக்­கி­ற­தாக நாங்கள் கூறு­கின்ற இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியோ, புௌாட் அமைப்போ உள்ளே இருக்­க­வில்லை. ஆரம்­பத்தில்  இருந்த தமிழர் விடு­தலைக் கூட்­டணி மாகா­ண­சபைத் தேர்­தலின் போது உள்ளே இருந்­தது தற்­போது இல்­லா­தது போல் தெரி­கின்­றது. ஆரம்­பத்தில் உள்ளே இருந்த அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் இப்­போது உள்ளே இல்லை என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. அப்­படிப் பார்க்கும் போது தமி­ழீழ விடு­தலை இயக்கம் ஒன்­றுதான் ஆரம்­பத்­திலும் இருந்­தது இப்­போதும் இருக்­கின்­றது. 

மஹிந்த ராஜபக் ஷ ஒரு­த­டவை சொன்­னது போல தங்­க­ளு­டைய கட்சி சலூன் கதவு போல யாரும் வரலாம் யாரும் போகலாம். அது மாதி­ரித்தான் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் இருக்­கி­றது போல தென்­ப­டு­கின்­றது. ஆகையால் தேர்­தலின் போது தனியே சென்று கேட்­ப­தற்கு  யாருக்கும் பூரண சுதந்­திரம் இருக்­கி­றது.  வலுக்­கட்­டா­ய­மாக பிடித்து யாரையும் அமர்த்­த­மாட்டோம்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்துக் கேட்பதாக இருந்தால் சுதந்திரமாக வெளியில் போய் கேட்கலாம். அல்லது வேறு கட்சிகள் கூட்டமைப்பில் சேர்ந்து போட்டியிடப் போகிறோம் என்று கேட்டால் அதனையும் சாதகமாகப் பரிசீலித்து உள்வாங்குவோம் என்றார்.

http://www.virakesari.lk/article/26631

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கூட்டமைப்புக்கு யாரும் வரலாம் போகலாம் எனக்கூறியதுகேட்டு இவரது அலுவலக வாசலில் ஒரு சொறிநாயும் நிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2017 at 7:26 PM, satan said:

நமது போராட்டங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் எல்லோரும் தங்களால் இயன்றதை செய்வதும் இல்லை, செய்யிறவையை விடுவதுமில்லை. தாங்கள் ஒன்றும் செய்யாமல் மற்றவர் செய்வதை தடுப்பதிலும், தங்களை வீரர்களாக சித்திரிப்பதிலுமே காலத்தை கடத்தி வருகிறார்கள்.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் புலியையும் ....

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் வரலாம் போகலாமுன்னா ..........
விபச்சார  விடுதி ரேஞ்சுக்கு வந்துட்டுது 
என்று சொல்ல வாறாரா தலீவர் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

யாரும் வரலாம் போகலாமுன்னா ..........
விபச்சார  விடுதி ரேஞ்சுக்கு வந்துட்டுது 
என்று சொல்ல வாறாரா தலீவர் 

நான் அறிந்த அளவுக்கு கோவிலுக்கு தான் யாரும் வரலாம் .. போகலாம் ... 

 

On 11/3/2017 at 7:53 PM, நவீனன் said:

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின்  பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சுமந்திரன் ஏதோ தன்னுடைய வீட்டுக்குள்ள யாரும் வரலாம் யாரும் போகலாம் என்று சொல்லுறமாதிரி தெரியுது.
தன்னுடைய வீட்டுக்குள்ள என்ன ரக விடுதி நடத்துறார் என்று ஒரு விளம்பரம் செய்தால் உரியவர்களுக்கு பயனாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் கூட்டமைப்பில எம்பியா இருக்கிறதே கள்ள வோட்டால தான். அதுல பந்தா வேறை .

தமிழ்க்கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் பின்கதவால் வந்த சுமந்திரன் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6.11.2017 at 2:21 AM, Jude said:

நான் அறிந்த அளவுக்கு கோவிலுக்கு தான் யாரும் வரலாம் .. போகலாம் ... 

 

கோயில்களில் எல்லோரும் பூசையாக்கலாமா? இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2017 at 6:51 AM, Jude said:

நான் அறிந்த அளவுக்கு கோவிலுக்கு தான் யாரும் வரலாம் .. போகலாம் ... 

 

பொது கழிப்பிடத்தையும் சொல்லலாமே

2 hours ago, குமாரசாமி said:

கோயில்களில் எல்லோரும் பூசையாக்கலாமா? இல்லையே

இல்லையே ஆனால் நான் தான்  ஐய்ர் என்று பொய் சொல்பவரை என்ன செய்யலாம் சாமியார்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎04‎.‎11‎.‎2017 at 6:11 AM, நவீனன் said:

யாரும் வரலாம் எவரும் போகலாம் : எம்.ஏ.சுமந்­திரன்

sumanthiran.jpg

அவுசிலிருந்து தப்பி வந்தவருக்குப் பயம் தெளிந்து எப்படி இத்தனை துணிவு வந்தது என்று யோசித்தேன்...? காரணம் புரிந்தது....!! :103_point_down:

 

சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் அதி உச்ச பாதுகாப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகன தொடரனிக்கும் விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ____ todayjaffna.com

  • கருத்துக்கள உறவுகள்

58bafb.jpg

ஓட்டு என்று உள்ளதால்தான இவனுங்க இப்புடி பேசுறாங்க பேசாம எலக்சனை கேன்சல் பண்ணுடுவம். பேசாம மன்னராட்சி கொண்டுவந்துறுவம் ( பின்கதவு ) என் பிள்ளை மந்திரி அப்புறம் உன் பிள்ளை மந்திரி அப்படி பரம்பரை பரம்பரையாக வந்திடுவம்

டிஸ்கி :

தங்களின்ட செயல்பாடு பிடிக்கவில்லை ..! ஆகையால் நான் முதலில் வெளியெறுகிறேன் .. ஓகே :cool:

 

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.