Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் வெளிநாடுகளில் கோயில்களுக்குப் போவதில்லை ஆயினும் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறமுடியாது. அதுபோல்  நல்ல காரியங்களுக்கு கடவுளிடம் நேர்த்தி வைத்து அவரும் எதோ இரக்கப்பட்டு எனக்கு சிலசில நன்மை செய்தாலும் சில விடயங்களில் இன்னும் கண்டும் காணாமல் தான் இருக்கிறார்.

கொஞ்ச நாளா இரண்டு மூன்று பண முடிப்பு முடிஞ்சு வச்சாச்சு. ஒண்டும் நல்லதா நடக்கிறதாக் காணேல்ல. நாட்டுக்குப் போறன் எண்டு சொன்னதும்  என் நண்பியும்  தனக்கும் சேர்த்து சுவாமி கும்பிட்டு வா என்றாள். சரி அவ்வளவு தூரம் போரம் வன்னியில உள்ள அந்தக் கோவிலுக்கும் போட்டு வருவம் என எண்ணி கடவுளே எந்தத் தடையையும் ஏற்படுத்தி விடவேண்டாம். நானும் கணவரும் உம்மிடம் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். 

அது காட்டுக்குள் இருக்கும் ஒரு கோவில். மதியம்தான் பூசை. மாலையில் பூட்டிவிடுவார்கள். பூசை எத்தனை மணிக்கு என்று யாருக்கும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அந்தக் கோவிலுக்குப் போவதற்கு பஸ்சும் இல்லை. அதனால் கிளிநொச்சியில் இருந்து ஓட்டோ பிடித்துக்கொண்டு ஒரு மணித்தியாலம் மேடு பள்ளங்கள் எல்லாம் கடந்து பத்து மணிக்குக் கோயிலை அடைந்தோம். தம்பி உங்கள் போன் நம்பரைத் தாங்கோ. பூசை எப்ப முடியும் என்று கேட்டுவிட்டு உங்களுக்குப் போன் செய்யிறம் எங்களைத் திரும்ப வந்து ஏற்றுவீர்கள் தானே என்றார் கணவர். எப்பிடியும் நான் முடியிற நேரம் இந்தப் பக்கம் வந்திடுவன். நீங்கள் போன் செய்யுங்கோ அண்ணா என்றுவிட்டு இலக்கங்களைத் தந்துவிட்டுப் போய்விட்டார். 

அக்கம் பக்கம் சிறு பெட்டிக்கடை கூட இல்லை. சுற்றிவரக் காடும் தொட்டம் தொட்டமாக சில வீடுகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. காலைக் கழுவிவிட்டு கோயிலினுள்ளே சென்றால் இரண்டொரு வயோதிபர்களே உள்ளே இருந்தனர். நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வாறம். எத்தினை மணிக்குப் பூசை என்று கேட்டதற்கு அது பன்னிரண்டு ஒண்டு செல்லும் என்றுவிட்டு நேத்திக்கடனோ என்றனர். ஓம் ஆர் இங்க பொறுப்பாய் இருக்கினம் என்று கேட்டதுக்கு ஒரு பக்கத்தைக் கைகாட்டிச்சினம். அங்கு சென்று பார்த்தால் காணிக்கையோ அல்லது கோயில் நிவாரணப் பணிக்கு உதவுவோரோ பிரதான குருக்களிடம் பணம் செலுத்திப் பற்றுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று போட்டிருந்துது. 

அதில் போட்டிருந்த இலக்கத்துக்கு கணவர் போன் செய்ய இருங்கோ உடன வாறன் என்றபடி வந்து சேர்ந்தார் பிரதம குருக்கள். அவரைப் பார்க்க நல்ல சாந்தமானவராக இருந்தார். நீங்கள் வெளிநாடோ என்று உடனே கேட்டார். இல்லை என்று கூறுவோமோ என்று நான் என்னமுதலே ஓம் ஐயா என்றார் கணவர். இண்டைக்கு மோதக பூசை இருக்கு. நீங்களும் ஒரு  பூசை செய்யுங்கோவன் என்றவுடன்  எனக்கு முந்திக் கணவரும் தலையாட்ட, பணத்தைச் செலுத்திவிட்டு ஒருபக்கத்தில் போய் அமர்ந்தோம்.

அரை மணிநேரம் கழிய நேரம் எனக்குப் பசிக்க ஆரம்பித்துவிட்டது. குடிக்கப் பச்சைத் தண்ணீர் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் தானே மூண்டு நேரம் சாப்பிடுறாய். ஒரு அரை நாள் உனக்குப் பட்டினி கிடக்கேலாமல் இருக்கு என்று மனிசன் இதுதான் சாட்டு என்று என்னை வார வெளிக்கிட, பசிக் களைப்பைவிட உங்கள்  கதை தான் களைக்கப் பண்ணுது  என்று ஒருவாறு அவரின் வாயை அடைத்துவிட்டு கடவுளே எனக்கு இது சோதனையோ என்றுவிட்டு கொஞ்சநேரம் புதினம் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் பூணூல் போட்ட ஒரு ஐயர் கோவிலுக்குள் வந்தார். எல்லோரையும் சுற்றிவரப் பார்த்துவிட்டு எம்மையும் பார்த்துத் தலையாட்டிவிட்டு மூலஸ்தானத்துக்குக் கிட்டப் போனார். பின் பரபரப்பாகத் தானே எல்லாம் செய்வதுபோல் அங்கும் இங்கும் போய்வந்தவர். இவர் தான் பூசை செய்யப் போகிறாரோ என்று எண்ணிய என் மனம் சீச்சீ இவராக இருக்காது, இவரின் கண்களைப் பார்க்க எதோ நேர்மை அற்றவர் போல் தெரிகிறது என்று எண்ணியதை என் கணவருக்கும் கூறினேன். உனக்கு ஆரைப் பார்த்தாலும் சந்தேகம் தான். நாங்கள் புது ஆட்கள் என்று எம்மை அடிக்கடி பாக்கிறார. உனக்குப் பசி கண்ணை மறைக்குது போல என்று நக்கலாகக் கூறியபடி ஐந்து சென்று அங்கு நின்ற ஒருவரிடம் மனிசன் எதோ கேட்பதும் திரும்புவதுமாக இருக்க, என்னப்பா விஷயம் என்றேன் நான்.

பக்கத்தில எங்காவது கடையள் இருக்கோ என்று விசாரிச்சனான். அரை மணித்தியாலம் போகவேணுமாம். நான் போய் ஏதும் உனக்குக் குடிக்க வாங்கிக்கொண்டு வரட்டோ என்றார் கணவர். வேண்டாம் அப்பா. இண்டைக்கு ஒருநாள் தானே விரதம் இருக்கிறன் என்றேன். திட்டினாலும் அவருக்கு என்னில அன்புதான் என்று மனதுள்ளே நான் எண்ணியதை வெளியே சொல்லவில்லை. இப்போது அந்தச் சின்ன ஐயர் மூலஸ்தானத்தை திறந்து உள்ளே இருக்கும் கடவுள் எமக்குத் தெரியாதபடி கேட்டின் ஒன்றை இழுத்து மூடிவிட்டு உள்ளே போவதும் வருவதுமாக இருந்தார். இடையிடை பெரிய ஐயாவும் அங்கு சென்றுவிட்டபடியால்  இனிப் பூசை தொடங்கிவிடும் என்று எண்ணியபடி நான் எழுந்திருந்தேன்.

மூலஸ்தானத்துக்கு வெளியே வந்த சின்ன ஐயர் இடுப்பில் செருகியிருந்த தொலைபேசியை எடுத்து அவதியாகக் கதைப்பதுபோல் ஏதோ கதைத்தபடியும் எம்மைப் பார்த்தபடியும் வெளியே சென்றார். மீண்டும் எம்மை நோக்கி வந்தார். ஏனோ தெரியவில்லை எனக்கு மனதில் பிசைவதுபோல்  ஒரு எண்ணம் தோன்றியது. கணவரிடம் வந்தவர் உங்களிடம் ஒரு மூவாயிரம் ரூபாய் இருக்குமா? பூசை முடியத்தருகிறேன் என்றார். என்னிடம் ஐயாயிரம் ரூபாய்த் தாளும் கொஞ்சச் சில்லரையும் தான் இருக்கு. மாதத்தின காசு இல்லை என்றார் கணவர். பரவாயில்லை அதைத் தாங்கோ பூசை முடிஞ்ச உடன தாறன் என்றார் மீண்டும். உடனே நான் என்னட்டை இரண்டாயிரம் இருக்கு என்று கூறி என் கைப்பையில் இருந்ததை எடுத்துக் குடுத்தேன். மீண்டும் வெளியே சென்ற அவர் வருவாரோ மாட்டாரோ என நான் எண்ணிக்கொண்டு இருக்கத் திரும்பிவந்து பூசைகளுக்கான உதவியைச் செய்யத் தொடங்கினார்.

மனம் கொஞ்சம் நின்மதியானாலும் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இப்ப கிட்டத்தட்ட ஒரு முப்பது பேராவது கோவிலினுள்ளே வந்திருந்தார்கள். முப்பதுபேரும் அர்ச்சனை செய்தாலும் ஐநூறு வருமோ என்று என் மனதில் சந்தேகம் இருந்தது. சரி கோவிலுக்கு வந்த இடத்தில எதுக்கு கண்டதையும் நினைச்சுக் குளம்பவேணும். எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்ளுவார் என்று மனதை ஒரு நிலைப் படுத்தியபடி கடவுளை வணங்க  ஆரம்பித்தேன். பூசை எல்லாம் முடிந்து அர்ச்சனை எல்லாம் முடிந்து கொண்டம் கொஞ்சமாக ஆட்கள் வெளியேறிக்கொண்டு இருந்தனர்.

பூசைக்குக்காசு கட்டினவை எல்லாம் வாங்கோ வந்து உங்கட பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போங்கோ என்று பிரதம குருக்கள் கூற நான் வாங்கோ அப்பா என்றேன் கணவரைப் பார்த்து. நீ போய் வாங்கிக் கொண்டு வா நான் ஓட்டோவுக்கு போன் செய்யிறன் என்றார் கணவர்.  பிரசாதத்தை வாங்கி வந்தவுடன் உடனே அதில் இரண்டு மோதகங்களை எடுத்துக் கணவனுக்கும் ஒன்றைக் கொடுத்து நானும் உண்ணத் தொடங்கினன். இன்னும் பசி கூடின மாதிரி இருக்க வெண் பொங்கல், சக்கரைப்பொங்கல்  என்று கட கடவென்று உண்ணத் தொடங்க ஓட்டோவில போகேக்குள்ள சாப்பிடலாம் தானே. உப்பிடிச் சாப்பிட விக்கப் போகுது என்ற கணவர், வெளியே போன ஐயரையும் காணேல்ல. காசைத் தருவாரோ அல்லது அப்பிடியே போட்டாரோ தெரியவில்லை என்றார்.

அப்பிடிச் செய்ய மாட்டார். சரி வாங்கோ வெளியில போய்ப் பார்ப்பம். நேரம் செல்லுது என்றபடி கொண்டுவந்த பைகளைத் தூக்கினேன். நாம் வெளிப் படியைக் கடக்கும்போது சின்ன ஐயர் உள்ளே வந்துகொண்டிருந்தார். என் கணவர் எதுவும் கேட்க முன்னரே ஓட்டக் காரரிடம் உங்கட காசு குடுத்திருக்கிறன். வாங்குங்கோ. என்று கூறியபடி உள்ளே சென்றுவிட நாம் ஓட்டோ நிற்கும் இடத்துக்குப் போனோம். ஓட்டோக்காரரின் கையில் மடித்தபடி  பணமிருந்தது. ஐயர் காசு தந்தவரோ என்று கணவர் கேட்க, ஓமண்ணா இந்தாங்கோ என்றபடி அந்த ஆட்டோக்காரர் காசைக் கணவரிடம் நீட்டினார். நீங்கள் தான் எங்கள் ஓட்டோக்காரர் என்று எப்பிடி ஐயருக்குத் தெரிந்தது என்று நான் அவரைக் கேட்க, இங்குள்ளவை ஓட்டோவில் வாறதில்லை அக்கா. வெளியில இருந்து வாரவைதான் ஓட்டோவில வாறவை என்று ஐயாவுக்குத் தெரியும். என்னட்டை வந்து நீர்தான் வெளிநாட்டுக் காரரை ஏற்றிக்கொண்டு வந்ததோ என்று கேட்டவர். நான் ஓம் என்றவுடன் காசைத் அவையிட்டைக் குடுங்கோ என்று காசைத் தந்துவிட்டுப் போட்டார் அக்கா என்றவர் ஓட்டோவைத் திருப்பி வேகம் எடுக்கத் தொடங்கினார். 

அட ஐயர் கெட்டிக்காரர் தான் எண்டு நான் எண்ணி முடிக்கமுதல் தம்பி ஓட்டோவை நிப்பாட்டுங்கோ என்றார் கணவர். என்னப்பா ஏதும் விட்டிட்டு வந்திட்டியளே என்று நான் கணவரைப்பார்க்க அவர் கையில் ஐயர் கொடுத்துவிட்டுப் போன பணம். ஆயிரத்தி முன்நூறுதான் இருக்கு. மிச்சக்காசைத் தராமல் விட்டதுகூடப் பரவாயில்லை. எங்களை விசரர் ஆக்கிப் போட்டாரே ஐயர் என்று கடுப்போடு இறங்கிய கணவரை கையைப் பிடித்து  மீண்டும் ஓட்டோவுக்குள் இருத்திவிட்டு தம்பி நீங்கள் ஓட்டோவை எடுங்கோ என்றேன். கோயில்ல பூசை செய்துகொண்டு இதென்ன அங்கிடுதத்தித் தனம் என்றபடி அங்கலாய்த்த கணவனிடம் கடவுள் அவரைப் பார்த்துக் கொள்ளுவார். இதுவும் நேர்த்திக்காகக் குடுத்தது என்று நினைத்து இனி அதுபற்றிக் கதைக்கவேண்டாம் என்றேன். அண்ணர் சொல்லுறது சரிதான் அக்கா. உங்களிடம் நேரே விசயத்தைச் சொல்லிக் காசைத் தந்திருக்கலாம் என்று கூறிய ஓட்டோக்காரருக்கு எதுவும் கூறாது. கணவனின் கையை ஆறுதலாகப் பற்றினேன்.

 

சின்ன அய்யர் கெட்டிக்காரர் தான். நல்ல வேளை உங்கள் கணவர் 5000 ரூபாவை கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஐயரை நினைத்தால் பரிதாபமாய் இருக்கு..... அவருக்கு சரியாய் திருடக்கூடத் தெரியவில்லை.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நிழலி said:

சின்ன அய்யர் கெட்டிக்காரர் தான். நல்ல வேளை உங்கள் கணவர் 5000 ரூபாவை கொடுக்கவில்லை.

அதனால்த்தான் நான் முந்திக்கொண்டு என்னிடம் இருந்ததைக் கொடுத்தது tw_blush:

27 minutes ago, suvy said:

அந்த ஐயரை நினைத்தால் பரிதாபமாய் இருக்கு..... அவருக்கு சரியாய் திருடக்கூடத் தெரியவில்லை.....!  tw_blush:

நானும் கணவரிடம் அதைத்தான் கூறினேன். அந்தாள் காசைத் தராமல் போயிருந்தாலும் நாங்கள் பேசாமல் வரவேண்டித்தான் இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுமானப்படி...ஐயர் ஐநூறைத் தான் வெட்டியிருப்பார்!

மிச்சம் இருநூறை....ஓட்டோக்காரன் வெட்டியிருப்பான்!

எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா சுமே?

அது தொழில் இரகசியம்!

அனுபவம் நல்லாயிருக்கு! கடையெல்லாம் வைச்சு அனுபவப் பட்ட உங்களையே ஏமாற்றுகிறார்கள் என்றால்.. எங்களைப் போன்றவர்கள் படப்போகும்...பாட்டை நினைக்கத் தலையே சுத்துது!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

...திட்டினாலும் அவருக்கு என்னில அன்புதான் என்று மனதுள்ளே நான் எண்ணியதை வெளியே சொல்லவில்லை.

....எதுவும் கூறாது. கணவனின் கையை ஆறுதலாகப் பற்றினேன்.

இந்த இரு வரிகள்தான் எனக்கு பிடித்தது.. heureux071.gif

இந்த அந்நோன்யம்தான், வாழ்க்கையின் அர்த்தமே..!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது செய்ய கடவுளுக்கு இலஞ்சம் கொடுக்கலாம் என்றால் சின்ன ஐயர் .....

அனுபவம் புதுமை. நன்றாக இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட ஐயர் கெட்டிக்காரர் தான் எண்டு நான் எண்ணி முடிக்கமுதல் தம்பி ஓட்டோவை நிப்பாட்டுங்கோ என்றார் கணவர். என்னப்பா ஏதும் விட்டிட்டு வந்திட்டியளே என்று நான் கணவரைப்பார்க்க அவர் கையில் ஐயர் கொடுத்துவிட்டுப் போன பணம். ஆயிரத்தி முன்நூறுதான் இருக்கு. மிச்சக்காசைத் தராமல் விட்டதுகூடப் பரவாயில்லை. எங்களை விசரர் ஆக்கிப் போட்டாரே ஐயர் என்று கடுப்போடு இறங்கிய கணவரை கையைப் பிடித்து  மீண்டும் ஓட்டோவுக்குள் இருத்திவிட்டு தம்பி நீங்கள் ஓட்டோவை எடுங்கோ என்றேன். கோயில்ல பூசை செய்துகொண்டு இதென்ன அங்கிடுதத்தித் தனம் என்றபடி அங்கலாய்த்த கணவனிடம் கடவுள் அவரைப் பார்த்துக் கொள்ளுவார். இதுவும் நேர்த்திக்காகக் குடுத்தது என்று நினைத்து இனி அதுபற்றிக் கதைக்கவேண்டாம் என்றேன்.

கோவிலுக்கு பணம் கொடுப்பதே ஐயர் என்ற இனத்தை வாழ வைக்கவே..
 
செருப்பில்லாதவனுக்கு செருப்பு

பணமில்லாதவனுக்கு பணம்.

ஒன்று விரும்பி கொடுப்பது இன்னொன்று

கொடுத்துவிட்டு விரும்புவது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

எனது அனுமானப்படி...ஐயர் ஐநூறைத் தான் வெட்டியிருப்பார்!

மிச்சம் இருநூறை....ஓட்டோக்காரன் வெட்டியிருப்பான்!

எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா சுமே?

அது தொழில் இரகசியம்!

அனுபவம் நல்லாயிருக்கு! கடையெல்லாம் வைச்சு அனுபவப் பட்ட உங்களையே ஏமாற்றுகிறார்கள் என்றால்.. எங்களைப் போன்றவர்கள் படப்போகும்...பாட்டை நினைக்கத் தலையே சுத்துது!

எனக்கும் அந்தச் சந்தேகம் வந்ததுதான். ஆனாலும் என்ன செய்வது ?

13 hours ago, ராசவன்னியன் said:

இந்த இரு வரிகள்தான் எனக்கு பிடித்தது.. heureux071.gif

இந்த அந்நோன்யம்தான், வாழ்க்கையின் அர்த்தமே..!

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்.

2 hours ago, Kavi arunasalam said:

நல்லது செய்ய கடவுளுக்கு இலஞ்சம் கொடுக்கலாம் என்றால் சின்ன ஐயர் .....

அனுபவம் புதுமை. நன்றாக இருக்கிறது

அனுபவங்கள் அடுத்த தடவைக்கான தற்காப்பு நிகழ்வுதானே.

1 hour ago, ஈழப்பிரியன் said:

கோவிலுக்கு பணம் கொடுப்பதே ஐயர் என்ற இனத்தை வாழ வைக்கவே..
 
செருப்பில்லாதவனுக்கு செருப்பு

பணமில்லாதவனுக்கு பணம்.

ஒன்று விரும்பி கொடுப்பது இன்னொன்று

கொடுத்துவிட்டு விரும்புவது.

நல்லாத்தான் கண்டு பிடிச்சியள்

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா சொன்னமாதிரி ஓட்டோக்காரனும் சின்ன ஐயரும் டீல் போட்டிருப்பார்கள் என்றுதான் நினைக்கின்றேன். சின்ன ஐயர் இடையில் ஓட்டோக்காரனுடன் ஃபோனில் கதைத்திருக்கலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புங்கை அண்ணா சொன்னமாதிரி ஓட்டோக்காரனும் சின்ன ஐயரும் டீல் போட்டிருப்பார்கள் என்றுதான் நினைக்கின்றேன். சின்ன ஐயர் இடையில் ஓட்டோக்காரனுடன் ஃபோனில் கதைத்திருக்கலாம்!

இருவரும் நன்றாகத் தெரிந்தவர்களாகக் கூட இருக்கலாம். சரி ஐயர் நல்லா இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 காசை உங்களிடம் தராமல்  ஒட்டொ காரனிடம் கொடுத்த போதே நினைத்தேன் எதோ தில்லாலங்கடி   வேலை என்று ... உங்க கணவன் காசை எண்ணிப்பார்த்து நல்லதாக போய் விட்ட்து .(  இப்படி எத்தனை   வெளிநாட்டு காரரிடம்   ரீல் விடடாரோ   சின்ன அய்யர்   )

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி உங்கடை நேர்த்தி என்ன மாதிரி.:)

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி உங்கடை நேர்த்தி என்ன மாதிரி.:)

அடுத்த தடவை வரக்க பவுன் அல்லது டொலர் கொண்டு வந்து தாரம் இதான் நேர்த்தி 

எங்கட ஆட்கள் வெளீநாடு என்றாலே காசு காய்க்கிற மரம் மாதித்தான் பார்க்கிரவங்க நீங்க வெறும் 2000 ரூபா தானே அவனவன் லட்சங்களை கொடுத்து விட்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்னை சந்திச்ச இத சொல்ல வில்லையே tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளாக தாயக  மக்கள் ரொம்ப  மாறிவிட்டார்கள்  என  எழுதியதை  காணமுடிந்தது

இன்று  இந்தக்கதை  வருகுது

ஆனால்  இதில் தவறு முழுவதும் உங்கள் மீது  தான்

முன்  பின்  தெரியாத ஒருவருக்கு கேட்டவுடன் பணம் கொடுப்பது எந்தவகை??

அவ்வாறு ஏமாற்றப்பட்டால்

அதை  தட்டிக்கேட்காது கடவுளிடம்  பாரத்தை போடுவது எந்தவகை??

நியாயத்தை  கேட்டிருந்தால் இனிமேலாவது வேறு  ஆட்கள் ஏமாறதிருக்க  முடியுமே

அந்த பொறுப்பை  நீங்கள் தட்டிக்கழித்தது எவ்வாறு??

ஒன்றுமே புரியல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/02/2018 at 12:48 AM, நிலாமதி said:

 காசை உங்களிடம் தராமல்  ஒட்டொ காரனிடம் கொடுத்த போதே நினைத்தேன் எதோ தில்லாலங்கடி   வேலை என்று ... உங்க கணவன் காசை எண்ணிப்பார்த்து நல்லதாக போய் விட்ட்து .(  இப்படி எத்தனை   வெளிநாட்டு காரரிடம்   ரீல் விடடாரோ   சின்ன அய்யர்   )

நானே பேசாமல் வந்திட்டன் என்றால் அப்பாவியள் காசைக் கேட்காமலேயே போயிருப்பினம்.

On 24/02/2018 at 2:19 PM, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி உங்கடை நேர்த்தி என்ன மாதிரி.:)

அதுதான் இன்னும் நிறைவேறேல்லtw_blush:tw_blush:

On 24/02/2018 at 2:31 PM, தனிக்காட்டு ராஜா said:

அடுத்த தடவை வரக்க பவுன் அல்லது டொலர் கொண்டு வந்து தாரம் இதான் நேர்த்தி 

எங்கட ஆட்கள் வெளீநாடு என்றாலே காசு காய்க்கிற மரம் மாதித்தான் பார்க்கிரவங்க நீங்க வெறும் 2000 ரூபா தானே அவனவன் லட்சங்களை கொடுத்து விட்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்னை சந்திச்ச இத சொல்ல வில்லையே tw_blush:

புரியவில்லையே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

புரியவில்லையே :unsure:

என்னை சந்தித்த போது உதுகளை சொல்ல வில்லையே சிரிச்சிருப்பன் கொஞ்சம் அனுபவங்கள் சொல்லி தந்திருப்பன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

கொஞ்ச நாளாக தாயக  மக்கள் ரொம்ப  மாறிவிட்டார்கள்  என  எழுதியதை  காணமுடிந்தது

இன்று  இந்தக்கதை  வருகுது

ஆனால்  இதில் தவறு முழுவதும் உங்கள் மீது  தான்

முன்  பின்  தெரியாத ஒருவருக்கு கேட்டவுடன் பணம் கொடுப்பது எந்தவகை??

அவ்வாறு ஏமாற்றப்பட்டால்

அதை  தட்டிக்கேட்காது கடவுளிடம்  பாரத்தை போடுவது எந்தவகை??

நியாயத்தை  கேட்டிருந்தால் இனிமேலாவது வேறு  ஆட்கள் ஏமாறதிருக்க  முடியுமே

அந்த பொறுப்பை  நீங்கள் தட்டிக்கழித்தது எவ்வாறு??

ஒன்றுமே புரியல.....

முன்பின் தெரியாத ஒருவர் தான் எனினும் கோயில் ஐயர்என்ற ஒரு நம்பிக்கைதான். போக எதோ அவசரமாக்கும் . தருவார் தானே என்ற நம்பிக்கை. நியாயத்தைக் கேட்டிருந்தால் மட்டும் மற்றவரை எமாற்றமாட்டார் என்று கூற முடியாதுதான்.

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்னை சந்தித்த போது உதுகளை சொல்ல வில்லையே சிரிச்சிருப்பன் கொஞ்சம் அனுபவங்கள் சொல்லி தந்திருப்பன் 

அய்யய்யோ நீங்கள் யார் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முன்பின் தெரியாத ஒருவர் தான் எனினும் கோயில் ஐயர்என்ற ஒரு நம்பிக்கைதான். போக எதோ அவசரமாக்கும் . தருவார் தானே என்ற நம்பிக்கை. நியாயத்தைக் கேட்டிருந்தால் மட்டும் மற்றவரை எமாற்றமாட்டார் என்று கூற முடியாதுதான்.

அய்யய்யோ நீங்கள் யார் ?

கன வருஷத்திற்கு பிறகு  யாழுக்க வந்தால் என்ன தெரியும் முனிவர் இப்ப தனிக்காட்டு ராஜாவாக ம்கும் tw_blush: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனியா ???உங்களைச் சந்தித்த பின்னர் தான் ஐயரைச் சந்தித்தது .

 

அம்பாறை என்றதும் யோசித்தேந்தான்

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2018 at 7:23 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நல்ல அனுபவம். விறுவிறுப்பாக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/02/2018 at 3:14 AM, கந்தப்பு said:

நல்ல அனுபவம். விறுவிறுப்பாக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். 

நன்றி கந்தப்பு வருகைக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.