Jump to content

ஓட் எமக்கு தேவை தானா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டாக்ரர் சிவராமின் அறிவுரைகளைக் கேட்டதிலிருந்து ரொம்பவுமே குழப்பமாக இருக்கிறது.

எனக்கு 1997 இல் இருதயநோய் வந்தது.இந்த நோய்க்கேற்ற சாப்பாடு ஓட் தான் என்று டாக்ரர்கள் மட்டுமல்ல பார்க்க வந்தவர்களுமே சொன்னார்கள்.

மெத்தப் படித்தவர்கள் பெரியவர்கள் எல்லோரும் சொன்னால் தட்ட முடியுமோ?அன்று தொடக்கம் இன்று வரை காலை உணவு ஓட் தான்.எனக்காக நலமாக இருக்கும் எனது மனைவியும் என்னுடன் சேர்ந்து தானும் ஓட்சைத் தான் சாப்பிடுவார்.எங்கேயாவது போனால் கூட நாய்க்குட்டியை கொண்டு திரிவதைப் போல ஒரு ஓட் பொதியையும் சுமந்து கொண்டு தான் வருவார்.

                   இப்போ இந்த டாக்ரரின் உரை அறிவுரையைக் கேட்ட பின் 
ஓட்சை எப்படி தயாரிக்கிறார்கள்?

எந்த எந்த இரசாயனங்கள் ஏன் கலக்கிறார்கள்?

மொத்தத்தில் குதிரைக்காக செய்த உணவை எம்மையும் சாப்பிட வைத்துவிட்டார்கள்.

வெறும் குப்பையிலே போடும் இந்த சாப்பாட்டை உலகம் பூராவும் விரும்பி சாப்பிடுகிறார்களே?  என்று மனவேதனையுடன் பேசுகிறார்.

இவரது பேச்சைக் கேட்டது முதல் ஆயிரம் பேர் சேர்ந்து சவுக்கால் அடித்தது போலவே இருந்தது.இருபது வருடத்திற்கு மேலாக இதையா சாப்பிடுகிறோம்?

          தொடர்ந்து சாப்பிடுவதா?ஏற்கனவே வாங்கி அடுக்கி வைத்திருக்கும் ஓட் முடியவிடலாமா?சரி ஏதோ நடக்கிறது நடக்கட்டும் என்று ஓட்சையே தொடரலாமா? எல்லாமே ஒரே குழப்பமாக இருக்கிறது.
 
        போதாக்குறைக்கு நானும் ஏதோ டாக்ரர் மாதிரி பலருக்கு இலவச அறிவுரையும் வழங்கி இனிமேல் இதைத் தவிர வேறு எதையும் காலையில் சாப்பிட கூடாது என்று சொல்லி அவர்களுக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டேன்.இந்த காணெளியைப் பார்த்த பின் மிகவும் வெட்கமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

On ‎3‎/‎22‎/‎2018 at 4:48 PM, ஈழப்பிரியன் said:

டாக்ரர் சிவராமின் அறிவுரைகளைக் கேட்டதிலிருந்து ரொம்பவுமே குழப்பமாக இருக்கிறது.

எனக்கு 1997 இல் இருதயநோய் வந்தது.இந்த நோய்க்கேற்ற சாப்பாடு ஓட் தான் என்று டாக்ரர்கள் மட்டுமல்ல பார்க்க வந்தவர்களுமே சொன்னார்கள்.

மெத்தப் படித்தவர்கள் பெரியவர்கள் எல்லோரும் சொன்னால் தட்ட முடியுமோ?அன்று தொடக்கம் இன்று வரை காலை உணவு ஓட் தான்.எனக்காக நலமாக இருக்கும் எனது மனைவியும் என்னுடன் சேர்ந்து தானும் ஓட்சைத் தான் சாப்பிடுவார்.எங்கேயாவது போனால் கூட நாய்க்குட்டியை கொண்டு திரிவதைப் போல ஒரு ஓட் பொதியையும் சுமந்து கொண்டு தான் வருவார்.

                   இப்போ இந்த டாக்ரரின் உரை அறிவுரையைக் கேட்ட பின் 
ஓட்சை எப்படி தயாரிக்கிறார்கள்?

எந்த எந்த இரசாயனங்கள் ஏன் கலக்கிறார்கள்?

மொத்தத்தில் குதிரைக்காக செய்த உணவை எம்மையும் சாப்பிட வைத்துவிட்டார்கள்.

வெறும் குப்பையிலே போடும் இந்த சாப்பாட்டை உலகம் பூராவும் விரும்பி சாப்பிடுகிறார்களே?  என்று மனவேதனையுடன் பேசுகிறார்.

இவரது பேச்சைக் கேட்டது முதல் ஆயிரம் பேர் சேர்ந்து சவுக்கால் அடித்தது போலவே இருந்தது.இருபது வருடத்திற்கு மேலாக இதையா சாப்பிடுகிறோம்?

          தொடர்ந்து சாப்பிடுவதா?ஏற்கனவே வாங்கி அடுக்கி வைத்திருக்கும் ஓட் முடியவிடலாமா?சரி ஏதோ நடக்கிறது நடக்கட்டும் என்று ஓட்சையே தொடரலாமா? எல்லாமே ஒரே குழப்பமாக இருக்கிறது.
 
        போதாக்குறைக்கு நானும் ஏதோ டாக்ரர் மாதிரி பலருக்கு இலவச அறிவுரையும் வழங்கி இனிமேல் இதைத் தவிர வேறு எதையும் காலையில் சாப்பிட கூடாது என்று சொல்லி அவர்களுக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டேன்.இந்த காணெளியைப் பார்த்த பின் மிகவும் வெட்கமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.

ஈழப்பிரியன் அண்ணா,

நேரப் பற்றாக்குறை காரணமாக நீங்கள் இங்கு இணைத்து இருக்கும் வீடியோவை பார்க்கவில்லை. ஆனால் உங்கள் பிரதானமான கேள்வி ஓட்ஸ் உண்பது இதய நோயிற்கு நல்லதா என்பதால் எனக்கு தெரிந்தவற்றை எழுதலாம் என நினைக்கின்றேன். நான் இந்த துறையில் வேலை செய்தவனோ அல்லது படித்தவனோ அல்ல.

Eats Ontario எனும் இலாப நோக்கற்ற அமைப்பு மற்றும் சில உணவு தொடர்பான அமைப்புகள் ஓட்ஸ் இனை சிறந்த காலை ஆகாரமாக சிபாரிசு செய்கின்றார்கள். கனடியர்கள் காலை உணவாக அதிக கொழுப்பு உள்ள பர்கர் / சொசேஜஸ் / பேகன் / சலாமி /3 முட்டைகள் அடங்கிய சாண்ட்விச்/ பீஸா பொக்கட் போன்றவற்றை வழக்கமாக உண்ணுகின்றவர்கள் என்பதால் அவர்களுக்கு சிபாரிசு அவசியாமகின்றது.

ஓட்ஸ் ஒரு முழு தானியம்; அதில் உள்ள கார்போஹைதரேட்டில் உள்ள அதிகபடியான Fiber குளுக்கோசாக மாற்றமடையாமல் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை கூட்டாமல் விடுகின்றது. இதுவே ஒரு கோதுமை மா சாப்பாடு என்றால் (புட்டு / இடியப்பம்/ தோசை )  அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைதரேட் (Carbs) நேரடியாக குளுக்கோசாக மாற்றப்பட்டு உடலில் சுகரின் அளவை கூட்டும். இதனால் தான் மற்ற உணவுகளை விட Fiber அதிகம் உள்ள உணவை சிபாரிசு செய்கின்றனர். Fiber இதய நோயையோ அல்லது கொழுப்பையோ அல்லது சுகரின் அளவையோ குறைக்கும் மருந்து அல்ல. ஆனால் மாச்சத்து எக்கச்சக்கமாக அடங்கி இருக்கும் உணவை எடுத்து இவற்றை கூட்டாமல் Fiber அதிகமான ஓட்ஸ் போன்றவற்றை உள்ளெடுக்கும் போது சுகரின் அளவை / கொழுப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கலாம்.

எனக்கு இதுவரைக்கும் சுகர் / கொழுப்பு பிரச்சனை உள்ளது என மருத்துவ அறிக்கைகள் கூறவில்லை. நான் காலையில் உணவாக நான்கு நாட்களுக்கு ஒரு சமன் மீன் துண்டும் ஒரு முட்டை பொரியலும் (Avacado oil ல் பொரித்தது, முட்டையும் Free run hen's egg) உண்பது வழக்கம். ஒரு நாளுக்கு மட்டும் ஓட்ஸ். மிச்ச இரண்டு நாளும் வல்லாரை / கருவேப்பிலை / கீரை கஞ்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியம் நல வாழ்வு  fb குழுமத்தை சிறிது வாசித்து பாருங்கோ. குறை மாவு நிறை கொழுப்பு (paleo) உணவு பழக்கத்தின் நன்மைகள், சலரோகம் கட்டுப்படுத்தல், மற்றும் எடை குறைப்பு எவ்வாறு நிகழ்கிறது  என புரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஓட்ஸ் ஒரு முழு தானியம்; அதில் உள்ள கார்போஹைதரேட்டில் உள்ள அதிகபடியான Fiber குளுக்கோசாக மாற்றமடையாமல் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை கூட்டாமல் விடுகின்றது. இதுவே ஒரு கோதுமை மா சாப்பாடு என்றால் (புட்டு / இடியப்பம்/ தோசை )  அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைதரேட் (Carbs) நேரடியாக குளுக்கோசாக மாற்றப்பட்டு உடலில் சுகரின் அளவை கூட்டும். இதனால் தான் மற்ற உணவுகளை விட Fiber அதிகம் உள்ள உணவை சிபாரிசு செய்கின்றனர். Fiber இதய நோயையோ அல்லது கொழுப்பையோ அல்லது சுகரின் அளவையோ குறைக்கும் மருந்து அல்ல. ஆனால் மாச்சத்து எக்கச்சக்கமாக அடங்கி இருக்கும் உணவை எடுத்து இவற்றை கூட்டாமல் Fiber அதிகமான ஓட்ஸ் போன்றவற்றை உள்ளெடுக்கும் போது சுகரின் அளவை / கொழுப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கலாம்.

நிழலி இந்த காணெளியை 25 ஆவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

நிழலி மட்டுமல்ல ஓட் சாப்பிடும் எல்லோருமே கண்டிப்பாக கேட்க வேண்டியது.

மொத்தத்தில் வெறும் குப்பை குப்பை குப்பை என்று அடித்து சொல்கிறார்.ஆனால் இன்றும் கூட அதே ஓட் தான் சாப்பிட்டேன்.

இத்தனை நாளும் மனம் நிறைவாக சாப்பிட்டேன்.இப்போ மனம் குழம்பி போய் ஒரு விரக்தியான நிலையிலேயே சாப்பிடுகிறேன்.

என்னைப் போலவே நீங்களும் ஓட் மேல் ஒரு உயர்வான எண்ணம் கொண்டவர் போலவே தெரிகிறது.

உங்கள் கருத்துக்கு நன்றி.

1 hour ago, ஏராளன் said:

ஆரோக்கியம் நல வாழ்வு  fb குழுமத்தை சிறிது வாசித்து பாருங்கோ. குறை மாவு நிறை கொழுப்பு (paleo) உணவு பழக்கத்தின் நன்மைகள், சலரோகம் கட்டுப்படுத்தல், மற்றும் எடை குறைப்பு எவ்வாறு நிகழ்கிறது  என புரிந்து கொள்ளலாம்.

நன்றி ஏராளன்.

Link to comment
Share on other sites

3 minutes ago, ஈழப்பிரியன் said:

நிழலி இந்த காணெளியை 25 ஆவது நிமிடத்திலிருந்து கேட்டுப் பாருங்கள்.

நிழலி மட்டுமல்ல ஓட் சாப்பிடும் எல்லோருமே கண்டிப்பாக கேட்க வேண்டியது.

மொத்தத்தில் வெறும் குப்பை குப்பை குப்பை என்று அடித்து சொல்கிறார்.ஆனால் இன்றும் கூட அதே ஓட் தான் சாப்பிட்டேன்.

இத்தனை நாளும் மனம் நிறைவாக சாப்பிட்டேன்.இப்போ மனம் குழம்பி போய் ஒரு விரக்தியான நிலையிலேயே சாப்பிடுகிறேன்.

என்னைப் போலவே நீங்களும் ஓட் மேல் ஒரு உயர்வான எண்ணம் கொண்டவர் போலவே தெரிகிறது.

உங்கள் கருத்துக்கு நன்றி.

 

வீட்டை போனபின் பார்க்கின்றேன். 

ஓட்ஸ் பற்றி நல்ல எண்ணம் உள்ளது, ஆனால் அதை வாரத்தில் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு நேரம் மட்டுமே உண்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

வீட்டை போனபின் பார்க்கின்றேன். 

ஓட்ஸ் பற்றி நல்ல எண்ணம் உள்ளது, ஆனால் அதை வாரத்தில் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு நேரம் மட்டுமே உண்கின்றேன்.

முழு காணெளியும் பார்க்க தேவையில்லை.25 ஆவது நிமிடத்திலிருந்து கேட்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ஸ் எனக்கு விருப்பமில்லை.இருந்தாலும் ஓரிரு தடவைகள் சாப்பிட்டுளேன்.ஊரில் மாட்டுக்கு புண்ணாக்கு கரைச்சு ஊத்திய ஞாபகம் வந்து போச்சுது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

காலை உணவாக எனது மனைவி ஓட்ஸ் சாப்பிட்டுக்கொண்டு வந்தார்.....சுகர் கூடிக்கொண்டு வருவதாக மருத்துவர் கூறினார். அன்றுடன்(2010) எனது வீட்டில் ஓட்ஸ் தடைப்பொருள்...

சாப்பாட்டு விசயத்திலை நான் முடிந்தளவுக்கு என்ரை தாய் தகப்பன் பாட்டன் முப்பாட்டன் சாப்பிட்டதையே சாப்பிட்டன்....சாப்பிடுறன்......சாப்பிடுவன்.
நாகரீகம் எண்ட பெயரிலை கண்ட களிசறைகளை சாப்பிட நான் தயாரில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனி, ஞாயிறு தவிர்ந்த மற்றைய நாட்களில்...காலை உணவாக 'ஓட்ஸ்' தான் சாப்பிடுவது வழக்கம்!

சனி, ஞாயிறு...அனேகமாக..தோசை...புட்டு..போன்ற உணவுகள் தான்!

இன்னும் ஈழப்பிரியன் இணைத்த காணொளியைப் பார்க்கவில்லை!

பின்னேரம் பார்த்து விட்டுக் கருத்தை எழுதுகின்றேன்!

முட்டை...அதிக கொழுப்புள்ளது என்று ஒரு காலத்தில் கூறினார்கள்!

தேங்காய் எண்ணெய் அதிக கொழுப்புள்ளது என்றும் கூறினார்கள்!

இப்போது இரண்டுமே...உடலுக்கு நல்லது என்று கூறுகிறார்கள்!

காலத்துக்குக் காலம்...சந்தைப் படுத்தலுக்கு இசைய...இவற்றை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்!

குமாரசாமி அண்ணை மேலே கூறியது போல....இப்போதெல்லாம் இறைச்சி அதிகம் சாப்பிடுவதில்லை! மீன் தான் அதிகம் சாப்பிடுவது!

ஏனெனில் எமது முன்னோர்...சாப்பிட்ட உணவு..அது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புங்கையூரன் said:

முட்டை...அதிக கொழுப்புள்ளது என்று ஒரு காலத்தில் கூறினார்கள்!

தேங்காய் எண்ணெய் அதிக கொழுப்புள்ளது என்றும் கூறினார்கள்!

இப்போது இரண்டுமே...உடலுக்கு நல்லது என்று கூறுகிறார்கள்!

காலத்துக்குக் காலம்...சந்தைப் படுத்தலுக்கு இசைய...இவற்றை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்!

 முந்தியொருக்கால் வருசத்துக்கு இரண்டு தரம் ஆட்டுறைச்சி சாப்பிட்ட என்னை துப்பரவாய் சாப்பிடாதை எண்டு வெருட்டிச்சினம்.....

நான் இப்ப  ஆட்டுறைச்சி சாப்பிடுறேல்லை எண்டால் முறைச்சு பாக்கினம்.tw_blush:

Link to comment
Share on other sites

ஓட் பற்றியும் உடலில் சேரும் சீனி பற்றியும் பலருக்குச் சரியான புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்.

இரத்தத்தில் சீனியின் அளவைக் குறைக்க வேண்டுமாயின் இனிப்புப் பண்டங்களை மட்டும் தவிர்த்தால் போதுமானதல்ல.

நாம் உணவு உட்கொண்ட இரண்டு மணித்தியாலத்துக்கு உட்பட்ட நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவை ( blood sugar level) அதிகரிக்கும் எல்லா உணவுகளும் இனிப்புப் பண்டத்துக்கு ஒப்பானவை.

அது சோறாக இருக்கலாம் ஓட்டாகவும் இருக்கலாம். சோறை நன்றாக அவித்தால் சீனியின் அளவு அதிகரிக்கும். இது குத்தரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குத்தரிசி நல்லது என்ற எண்ணத்தில் கோப்பை நிறைய நன்றாக அவித்த குத்தரிசிச் சோறு சாப்பிடுபவர்கள் உள்ளனர். இதே போல்தான் Omega-3 உள்ளது என்பதற்காக கடைகளில் விற்கும் எண்ணையை அதிகளவில் பாவிப்பவர்களும் உள்ளனர்.

சாதாரண அரிசியைக் கூட முக்கால் அவியலாக உண்டால் அதிலுள்ள மாப்பொருள் சீனியாக மாறி இரத்தத்தில் மெதுவாகவே கலக்கும். பச்சையாகக் கரட் சாப்பிடுவதை விட அவித்துச் சாப்பிட்டால் 30 வீதமான சீனி உடலில் உடனடியாகச் சேரும். பச்சைக் கரட்டிலும் அவித்த கரட்டிலும் ஒரே அளவான கலோரிகள் இருந்தாலும் கரட்டை அவித்தால் 30 வீதமான சீனி அதிகரிக்கிறது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். 

இப்போது கீழுள்ள கலோரி அளவுகளைப் பாருங்கள்.

தீட்டாத அரிசி (அவிக்காதது) 100 கிராம்  - 370 கிலோ கலோரிகள்
தீட்டாத கோதுமை மா 100 கிராம்  -  342 கிலோ கலோரிகள்
ஓட் 100 கிராம்  - 389 கிலோ கலோரிகள்

ஓட் எப்படி சீனியையும் கொழுப்பையும் குறைக்கிறது என்று பார்க்கலாம். ஓட் தானியத்தில் உள்ள தவிடு அதன் கனவவைப்போல் 30 மடங்கு கனவளவான திரவத்தைத் தன்னுள் இழுத்து வைத்திருக்கும் தன்மையைக் கொண்டது. இதுதான் முக்கியமாக உடலில் சீனியின் அளவை உடனடியாக அதிகரிக்காமல் தடுப்பது. உடலில் சீனி உடனடியாக ஏறும்போது மிதமிச்சிய சீனியை ஈரல் கொழுப்பாக மாற்றி இரத்தத்தில் கலந்துவிடும். இதைப் புரிந்து கொண்டால் உடல் எடை, நீரிழிவு நோய், கொலஸ்ரறோல் எல்லாவற்றையும் எமது சாப்பாடு மூலம் குறைக்கலாம்.

ஓட் சாப்பிடுவதில் என்ன பிரச்சனை ?
ஓட் கஞ்சியில் ஏனைய தானியங்களைப் போலவே சீனியின் அளவு உள்ளது. அதனை அதிகமாகச் சாபிட்டுக் கொண்டு அதில் உள்ள தவிட்டால் ஓரளவு சீனியைக் குறைத்துக் கொள்வது அதிக பலன் தராது.

ஓட் தவிடு மட்டும் பொடியாக விற்கிறார்கள். அதனை நீங்கள் சாப்பிடும் எல்லாச் சாப்பாட்டிலும் 1 அல்லது 2 தேக்கரண்டி கலந்து சாப்பிட்டால் சீனியை வெகுவாகக் குறைக்கலாம். ஆனால் அதிலும் பிரச்சனை. ஓட் தவிடு சாப்பாட்டிலுள்ள விற்றமின்களையும் உறிஞ்சிக் கொள்ளும். அதிகமாக ஓட் தவிடு சாப்பிடுபவர்கள் விற்றமின்களைக் குறிப்பாக விற்றமின் D போன்றவற்றை மருந்துகளாக உட்கொள்ள வேண்டும்.

அப்படியானால் உடல் எடையைக் குறைக்க வழிதான் என்ன ?
என்னைப் பொறுத்த வரைக்கும் ஒட் சாப்பிடுவது கடைசி முயற்சியாகவே இருக்கும்.

முதலாவதாக உண்ணும் உணைவைப் புரிந்து உண்ண வேண்டும். நிழலி குறிப்பிட்டதுபோல் காலையில் கொழுப்பு, புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்.  உதாரணமாக 2 அவித்த முட்டைகளைச் சாப்பிட்டு வெறும் நீர் குடிப்பது நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ஒரு முட்டையில் வெறும் 90 கி.கலோரிகளே உள்ளன. அத்துடன் பெருமளவு விற்றமின்களும் கனியுப்புகளும் உள்ளன. அல்லது உலகில் சிறந்த காலை உணவான இட்டலி, தேங்காய்ச் சம்பல் நல்லது. எமது ஊரில் சாப்பிட்ட புட்டும் சம்பலும் நல்லெண்ணையில் பொரித்த கத்தரிக்கய்ப் பொருயலையும் சாப்பிட வசதி இருந்தால் தெரிவு செய்வேன்.

இரண்டாவதாக உடற்பயிற்சி. 1 மணித்தியால மிதமான உடற்பயிற்சி சுமாராக 500 கி.கலோரியை (80 கிராம் சீனியையும் 20 கிராம் கொழுப்பையும்) உடலிலிருந்து வெளியேற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் நிறைய தகவல்கள் தந்திருக்கிறீர்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1.4.2018 at 11:19 PM, இணையவன் said:

ஓட் பற்றியும் உடலில் சேரும் சீனி பற்றியும் பலருக்குச் சரியான புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்.

இரத்தத்தில் சீனியின் அளவைக் குறைக்க வேண்டுமாயின் இனிப்புப் பண்டங்களை மட்டும் தவிர்த்தால் போதுமானதல்ல.

நாம் உணவு உட்கொண்ட இரண்டு மணித்தியாலத்துக்கு உட்பட்ட நேரத்தில் இரத்தத்தில் சீனியின் அளவை ( blood sugar level) அதிகரிக்கும் எல்லா உணவுகளும் இனிப்புப் பண்டத்துக்கு ஒப்பானவை.

அது சோறாக இருக்கலாம் ஓட்டாகவும் இருக்கலாம். சோறை நன்றாக அவித்தால் சீனியின் அளவு அதிகரிக்கும். இது குத்தரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குத்தரிசி நல்லது என்ற எண்ணத்தில் கோப்பை நிறைய நன்றாக அவித்த குத்தரிசிச் சோறு சாப்பிடுபவர்கள் உள்ளனர். இதே போல்தான் Omega-3 உள்ளது என்பதற்காக கடைகளில் விற்கும் எண்ணையை அதிகளவில் பாவிப்பவர்களும் உள்ளனர்.

சாதாரண அரிசியைக் கூட முக்கால் அவியலாக உண்டால் அதிலுள்ள மாப்பொருள் சீனியாக மாறி இரத்தத்தில் மெதுவாகவே கலக்கும். பச்சையாகக் கரட் சாப்பிடுவதை விட அவித்துச் சாப்பிட்டால் 30 வீதமான சீனி உடலில் உடனடியாகச் சேரும். பச்சைக் கரட்டிலும் அவித்த கரட்டிலும் ஒரே அளவான கலோரிகள் இருந்தாலும் கரட்டை அவித்தால் 30 வீதமான சீனி அதிகரிக்கிறது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். 

இப்போது கீழுள்ள கலோரி அளவுகளைப் பாருங்கள்.

தீட்டாத அரிசி (அவிக்காதது) 100 கிராம்  - 370 கிலோ கலோரிகள்
தீட்டாத கோதுமை மா 100 கிராம்  -  342 கிலோ கலோரிகள்
ஓட் 100 கிராம்  - 389 கிலோ கலோரிகள்

ஓட் எப்படி சீனியையும் கொழுப்பையும் குறைக்கிறது என்று பார்க்கலாம். ஓட் தானியத்தில் உள்ள தவிடு அதன் கனவவைப்போல் 30 மடங்கு கனவளவான திரவத்தைத் தன்னுள் இழுத்து வைத்திருக்கும் தன்மையைக் கொண்டது. இதுதான் முக்கியமாக உடலில் சீனியின் அளவை உடனடியாக அதிகரிக்காமல் தடுப்பது. உடலில் சீனி உடனடியாக ஏறும்போது மிதமிச்சிய சீனியை ஈரல் கொழுப்பாக மாற்றி இரத்தத்தில் கலந்துவிடும். இதைப் புரிந்து கொண்டால் உடல் எடை, நீரிழிவு நோய், கொலஸ்ரறோல் எல்லாவற்றையும் எமது சாப்பாடு மூலம் குறைக்கலாம்.

ஓட் சாப்பிடுவதில் என்ன பிரச்சனை ?
ஓட் கஞ்சியில் ஏனைய தானியங்களைப் போலவே சீனியின் அளவு உள்ளது. அதனை அதிகமாகச் சாபிட்டுக் கொண்டு அதில் உள்ள தவிட்டால் ஓரளவு சீனியைக் குறைத்துக் கொள்வது அதிக பலன் தராது.

ஓட் தவிடு மட்டும் பொடியாக விற்கிறார்கள். அதனை நீங்கள் சாப்பிடும் எல்லாச் சாப்பாட்டிலும் 1 அல்லது 2 தேக்கரண்டி கலந்து சாப்பிட்டால் சீனியை வெகுவாகக் குறைக்கலாம். ஆனால் அதிலும் பிரச்சனை. ஓட் தவிடு சாப்பாட்டிலுள்ள விற்றமின்களையும் உறிஞ்சிக் கொள்ளும். அதிகமாக ஓட் தவிடு சாப்பிடுபவர்கள் விற்றமின்களைக் குறிப்பாக விற்றமின் D போன்றவற்றை மருந்துகளாக உட்கொள்ள வேண்டும்.

அப்படியானால் உடல் எடையைக் குறைக்க வழிதான் என்ன ?
என்னைப் பொறுத்த வரைக்கும் ஒட் சாப்பிடுவது கடைசி முயற்சியாகவே இருக்கும்.

முதலாவதாக உண்ணும் உணைவைப் புரிந்து உண்ண வேண்டும். நிழலி குறிப்பிட்டதுபோல் காலையில் கொழுப்பு, புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்.  உதாரணமாக 2 அவித்த முட்டைகளைச் சாப்பிட்டு வெறும் நீர் குடிப்பது நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ஒரு முட்டையில் வெறும் 90 கி.கலோரிகளே உள்ளன. அத்துடன் பெருமளவு விற்றமின்களும் கனியுப்புகளும் உள்ளன. அல்லது உலகில் சிறந்த காலை உணவான இட்டலி, தேங்காய்ச் சம்பல் நல்லது. எமது ஊரில் சாப்பிட்ட புட்டும் சம்பலும் நல்லெண்ணையில் பொரித்த கத்தரிக்கய்ப் பொருயலையும் சாப்பிட வசதி இருந்தால் தெரிவு செய்வேன்.

இரண்டாவதாக உடற்பயிற்சி. 1 மணித்தியால மிதமான உடற்பயிற்சி சுமாராக 500 கி.கலோரியை (80 கிராம் சீனியையும் 20 கிராம் கொழுப்பையும்) உடலிலிருந்து வெளியேற்றும்.

எங்கடை தாய் தந்தை அப்பு ஆச்சிமாரும் சாப்பிட்டிலை கலோரி கணக்குப்பார்த்து சாப்பிடவுமில்லை....ஓட்சை கலக்கி குடிக்கவுமில்லை...அரையவியல் சோறு சாப்பிடவுமில்லை. எல்லாரும் சாகும் மட்டும் நோய் நொடியில்லாமல் 80,90 வயதுமட்டும் வாழ்ந்தவையள்.
இப்பவெல்லாம் புதுப்புது படிப்புகள் வரவர புதுப்புது வருத்தங்களும் வந்து கொண்டேயிருக்குது.....புதுப்புது மருந்து மாத்திரைகளும் வந்து கொண்டேயிருக்குது...

சாப்பாட்டிலை நஞ்சு...தண்ணியிலை நஞ்சு...சுவாசிக்கிற காத்திலை நஞ்சு....

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

எங்கடை தாய் தந்தை அப்பு ஆச்சிமாரும் சாப்பிட்டிலை கலோரி கணக்குப்பார்த்து சாப்பிடவுமில்லை....ஓட்சை கலக்கி குடிக்கவுமில்லை...அரையவியல் சோறு சாப்பிடவுமில்லை. எல்லாரும் சாகும் மட்டும் நோய் நொடியில்லாமல் 80,90 வயதுமட்டும் வாழ்ந்தவையள்.
இப்பவெல்லாம் புதுப்புது படிப்புகள் வரவர புதுப்புது வருத்தங்களும் வந்து கொண்டேயிருக்குது.....புதுப்புது மருந்து மாத்திரைகளும் வந்து கொண்டேயிருக்குது...

சாப்பாட்டிலை நஞ்சு...தண்ணியிலை நஞ்சு...சுவாசிக்கிற காத்திலை நஞ்சு....

 

உண்மைதான்,  ஆனால் வாழ்விட சூழல் வேறாக இருந்தது. அங்க இயல்பாக வேர்க்கும் ஆனால் இங்கு உடலை வேர்க்க வைப்பதே மிப்பெரிய பிரச்சனை. காசு கொடுத்து உண்ணவேணும் உண்டு உடல் பெருத்த பின்னர் காசுகொடுத்து ஜிம்முக்கு போகவேணும்.

உணவை பார்த்து ஆசைப்பட்டு ரசித்து ருசித்து சாப்பிடும் காலம் போய் பயப்பிடும் நிலமையாகிவிட்டது. 

மேலும் நீங்கள் கூறுவதுபோல் உணவு தண்ணி மருத்துவம் இவைகள் மிகப்பெரிய வியாபாரம்.  ஊரில் எமக்கென்று தோட்டம் இருந்தது அல்லது எங்க உணவுப்பொருட்கள் விளைகின்றது என்பது தெரிந்திருந்தது. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் தொடர்பிருந்தது. இங்கே அதற்கு இடமில்லை. எமக்கும்  சூப்பர்மார்க்கெட்டுக்கும் தான் தொடர்பு. வருங்காலத்தில் அத்தொடர்பும் குறைந்து ஒன்லைனில் ஓடர் செய்தால் வீட்டு பொருட்கள் வரும். எங்க என்ன எப்படி செய்கின்றார்கள் என்ன கலக்கின்றார்கள் எதுவும் தெரியாது. அந்த உணவு நல்லது இந்த உணவு நல்லது என்று கணணியில் பார்த்து அவற்றை உண்ணவேண்டியது தான். நல்லது கூடாது என்ற காணொளிகளிலும் வியாபாரம் எமாற்று வேலைகள் உண்டு. பகல் இருந்தால் இரவு இருப்பது போல் தொழில் நுட்ப வளர்ச்சி மனிதனை மிகப்பெரிய புத்திசாலியாக்கின்ற  அதேநேரம் மிமோசமான முட்டாளாகவும் மாற்றுகின்றது.

Link to comment
Share on other sites

On 4/1/2018 at 4:19 PM, இணையவன் said:

சாதாரண அரிசியைக் கூட முக்கால் அவியலாக உண்டால் அதிலுள்ள மாப்பொருள் சீனியாக மாறி இரத்தத்தில் மெதுவாகவே கலக்கும். பச்சையாகக் கரட் சாப்பிடுவதை விட அவித்துச் சாப்பிட்டால் 30 வீதமான சீனி உடலில் உடனடியாகச் சேரும். பச்சைக் கரட்டிலும் அவித்த கரட்டிலும் ஒரே அளவான கலோரிகள் இருந்தாலும் கரட்டை அவித்தால் 30 வீதமான சீனி அதிகரிக்கிறது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். 

 

நல்ல தகவல்கள்.. நன்றி

 

Link to comment
Share on other sites

19 hours ago, குமாரசாமி said:

எங்கடை தாய் தந்தை அப்பு ஆச்சிமாரும் சாப்பிட்டிலை கலோரி கணக்குப்பார்த்து சாப்பிடவுமில்லை....ஓட்சை கலக்கி குடிக்கவுமில்லை...அரையவியல் சோறு சாப்பிடவுமில்லை. 

உண்மை.
எனது பாட்டனார் தனது ஆயுட்காலம் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று ஒரு பிள்ளை தனது 7 வயதிற்குள் சாப்பிட்டு விடுகிறது.
இன்று ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமானால் கலோரிகளை எண்ணிச் சாப்பிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

 

19 hours ago, குமாரசாமி said:

எங்கடை தாய் தந்தை அப்பு ஆச்சிமாரும் சாப்பிட்டிலை கலோரி கணக்குப்பார்த்து சாப்பிடவுமில்லை....ஓட்சை கலக்கி குடிக்கவுமில்லை...அரையவியல் சோறு சாப்பிடவுமில்லை. எல்லாரும் சாகும் மட்டும் நோய் நொடியில்லாமல் 80,90 வயதுமட்டும் வாழ்ந்தவையள்.

தவறான கருத்து. ஒருசிலரை நோய் நொடியில்லாமல் 80-90 வருடங்கள் வாழ்ந்ததாகக் கூறலாம். 70 - 80 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விடத் தற்போது சராசரி ஆயுட் காலம் அதிகரித்து வருகிறது.
https://data.worldbank.org/indicator/SP.DYN.LE00.IN?locations=LK

Link to comment
Share on other sites

அன்றுபோல் என்றும் வாழ்க்கையும் சுற்றாடலும் ஒன்றாக இருப்பதில்லை. தற்போதைய சுற்றாடலுக்கு ஏற்றவாறு எமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டே செல்லவேண்டுமே தவிர சுற்றாடல் எமக்காக மாறப் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சண்டமாருதன் said:

 

உண்மைதான்,  ஆனால் வாழ்விட சூழல் வேறாக இருந்தது. அங்க இயல்பாக வேர்க்கும் ஆனால் இங்கு உடலை வேர்க்க வைப்பதே மிப்பெரிய பிரச்சனை. காசு கொடுத்து உண்ணவேணும் உண்டு உடல் பெருத்த பின்னர் காசுகொடுத்து ஜிம்முக்கு போகவேணும்.

உணவை பார்த்து ஆசைப்பட்டு ரசித்து ருசித்து சாப்பிடும் காலம் போய் பயப்பிடும் நிலமையாகிவிட்டது. 

மேலும் நீங்கள் கூறுவதுபோல் உணவு தண்ணி மருத்துவம் இவைகள் மிகப்பெரிய வியாபாரம்.  ஊரில் எமக்கென்று தோட்டம் இருந்தது அல்லது எங்க உணவுப்பொருட்கள் விளைகின்றது என்பது தெரிந்திருந்தது. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் தொடர்பிருந்தது. இங்கே அதற்கு இடமில்லை. எமக்கும்  சூப்பர்மார்க்கெட்டுக்கும் தான் தொடர்பு. வருங்காலத்தில் அத்தொடர்பும் குறைந்து ஒன்லைனில் ஓடர் செய்தால் வீட்டு பொருட்கள் வரும். எங்க என்ன எப்படி செய்கின்றார்கள் என்ன கலக்கின்றார்கள் எதுவும் தெரியாது. அந்த உணவு நல்லது இந்த உணவு நல்லது என்று கணணியில் பார்த்து அவற்றை உண்ணவேண்டியது தான். நல்லது கூடாது என்ற காணொளிகளிலும் வியாபாரம் எமாற்று வேலைகள் உண்டு. பகல் இருந்தால் இரவு இருப்பது போல் தொழில் நுட்ப வளர்ச்சி மனிதனை மிகப்பெரிய புத்திசாலியாக்கின்ற  அதேநேரம் மிமோசமான முட்டாளாகவும் மாற்றுகின்றது.

ஏன் தோட்டம் துரவு என்று பெரிய வார்த்தையெல்லாம் எழுதுகின்றீர்கள்?

நாம் வாழும் மேலைத்தேய நாடுகளிலும் எமக்கிருக்கும் அதே உணவுப்பிரச்சனைதான் இவர்களுக்கும் இருக்கின்றது.

புதுப்புது உணவுகளின் வருகையால் இவர்களும் அவதிப்படுகின்றார்கள். இங்கிலாந்தில் புதிதாக இனிப்பு பதார்த்தங்களுக்கு மேலதிக வரி அறவிடப்போகின்றார்களாம்.

நிலவரம் இப்படியிருக்க....

ஆரோக்கிய உணவுகளை உண்ணும் நாடுகளில் இருந்து வந்த எம்மவர்களோ விபரம் தெரியாமல் நுணுக்கம் பிடிக்கின்றார்கள்.
இங்கேயும் எமது ஆசிய நாட்டு உணவுகளுக்கீடான காய்கனிகள் தானியங்கள் நிறையவே உள்ளன.

அவற்றை எமது நாட்டு முறையில் செய்து சாப்பிட்டு பாருங்கள். அசந்து போவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

அன்றுபோல் என்றும் வாழ்க்கையும் சுற்றாடலும் ஒன்றாக இருப்பதில்லை. தற்போதைய சுற்றாடலுக்கு ஏற்றவாறு எமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டே செல்லவேண்டுமே தவிர சுற்றாடல் எமக்காக மாறப் போவதில்லை.

 ஒவ்வொரு மனிதனும் வியாபாரிகளுக்கேற்ப தன் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று சொல்ல விழைகின்றீர்கள்?

சூழலையும் சுற்றாடலையும் வியாபாரிகள் தான் தீர்மானிக்கின்றார்கள். அதை  மாற்றும் சிந்தனை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சூழலையும் சுற்றாடலையும் வியாபாரிகள் தான் தீர்மானிக்கின்றார்கள். அதை  மாற்றும் சிந்தனை ஒவ்வொரு மனித உள்ளத்திலும் வரவேண்டும்.

இதற்காகவே சிறு சிறு முதலாளிகளை ஒழித்து பெரு முதலாளிகளை உருவாக்குகிறார்கள்.அவர்கள் தான் அரசுகளுக்கு விசுவாசமாக இருந்து வேண்டியன செய்து கொண்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

25 minutes ago, குமாரசாமி said:

ஏன் தோட்டம் துரவு என்று பெரிய வார்த்தையெல்லாம் எழுதுகின்றீர்கள்?

நாம் வாழும் மேலைத்தேய நாடுகளிலும் எமக்கிருக்கும் அதே உணவுப்பிரச்சனைதான் இவர்களுக்கும் இருக்கின்றது.

புதுப்புது உணவுகளின் வருகையால் இவர்களும் அவதிப்படுகின்றார்கள். இங்கிலாந்தில் புதிதாக இனிப்பு பதார்த்தங்களுக்கு மேலதிக வரி அறவிடப்போகின்றார்களாம்.

நிலவரம் இப்படியிருக்க....

ஆரோக்கிய உணவுகளை உண்ணும் நாடுகளில் இருந்து வந்த எம்மவர்களோ விபரம் தெரியாமல் நுணுக்கம் பிடிக்கின்றார்கள்.
இங்கேயும் எமது ஆசிய நாட்டு உணவுகளுக்கீடான காய்கனிகள் தானியங்கள் நிறையவே உள்ளன.

அவற்றை எமது நாட்டு முறையில் செய்து சாப்பிட்டு பாருங்கள். அசந்து போவீர்கள்.

 

ge-map.png

 

நீங்கள் கூறுவது ஒரு பார்வை. இருக்கும் நாடுகளைப் பொறுத்து சில நுணுகக்கங்களை பாரக்கவேண்டியுள்ளது.  கனடாவைப் பொறுத்தவரை மரபணுமாற்றப்பட்ட உணவுகள் எது என்று கண்டுபிடிக்க அதற்கான லேபிள் எதுவும் பிரத்தியோகமாக இல்லை. அதற்கான சட்டமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட வளர்ப்பு மீன்கள், பன்றிகள் காய்கறிகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றது. பல நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை தனித்துக்காட்டும் லேபிளுடன் தான் விற்க முடியும் என்ற சட்டங்களை கொண்டுள்ளது பல நாடுகள் வியாபாரிகளுக்குச் சாதகமாக உள்ளது. உணவு விசயத்தில் பல விசயங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றது. இவ்வாறான சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தான் அறியா சிங்களம் தன் பிடரிக்கு சேதம்"

காரசாரமான விவாதம் நடக்கும்போது இப்போ "ஓட்"டுக்குள்ள 
போறது பொருத்தமாக இருக்காது என்று எண்ணி 
பொதுவாக எங்கு பிரச்சனை குழப்பம் வருகிறது என்று பார்க்கலாம்.

மீன் உண்ணுவதால் பாரிய அளவில் உடலுக்கு பாதிப்பு இல்லை 
என்பது பொதுவான கருத்து..... அது உண்மையும் கூட.
ஆனால் .......... நாம் சாப்பிடும் மீனில் பிரச்சனை இருக்கா இல்லையா ?
என்பதுதான் குழப்பம். அதை புரிந்து தெளிய 
இந்த மீன் எங்கு வளர்க்க படுகிறது ?
இதற்கு இரையாக எதை ஊட்டுகிறார்கள் ?
நெரிசலான இடத்தில் வளருவதால் நோய் தோற்று இல்லாமல் 
இருக்க நீரில் என்ன இரசாயனம் கலக்கிறார்கள்??

போன்ற கேள்விகளுக்கான விடைகளில்தான் 
குறித்த மீன் ஆரோக்கியமா ? உடலுக்கு அழிவா?
என்பதை நிற்னயிக்க போவது 

இது ஓட் டுக்கும் பொருந்தும் ........உருளைக்கிழங்கிக்கும் பொருந்தும். 
இப்போ கெட்டுவிடாமல் இருக்க ..... குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைய 
கூடிய விளைச்சல் தர என்று பல தரப்படட இரசாயனம் கலக்கப்பட்டு இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ஸ் கஞ்சி (Porridge) எனது காலை உணவாக நீண்ட காலம் உள்ளது. மாற்றும் எண்ணமில்லை. Process பண்ணாத உணவுகளை உண்பதுதான் ஆரோக்கியம். 

தானியங்களான தினை, வரகு, குரக்கன், கொள்ளு எல்லாம் சாப்பிடலாம். தமிழ்க் கடைகளில் கிடைக்கின்றது.

Link to comment
Share on other sites

ஓட்ஸ் காலையில் நேரத்தை மீதப்படுத்தி தயாரிக்க முடியும்.இதனால் சில வருடங்கள் இதனையே தொடர்கிறேன். ஆராய்ச்சி எனும் பெயரில் வரும் கதைகள் எந்தளவு சரியானவை என்று தெரியவில்லை. எதுவும் அளவோடு சாப்பிட்டு வந்தால் சரி. இதுவே என் நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

நான் துபாய்க்கு வேலைக்கு போன புதிதில் காணாததை கண்டமாதிரி கண்ட கண்ட பீசா பர்கர் எல்லாம் சாப்பிட்டு 1 1/2  வருடத்தில் வெயிட் 100kg ஐ தாண்டிவிட்டது. அத்துடன் வெயிட் கூடினதால முழங்கால் வலி வேறு வந்துவிட்டது. அப்போதுதான் இந்த மரமண்டைக்கு தெரிஞ்சது, வெயிட்  கடுமையாக கூடிவிட்டது எப்படியாவது குறைக்க வேண்டும் என்று. எனக்கு தெரிந்த சில நண்பர்களின் ஆலோசனைப்படி, காலைச்சாப்டாக ஓட்ஸ் சாப்பிட தொடங்கினான். காலையில் ஓட்ஸ்  சாப்பிடுவதால் மத்தியானம் கடுமையான பசி பசிக்கும் எனவே ஒரு full கட்டு காட்டுவதுதான் வேலை. வெயிட் குறைந்தபாடில்லை. 

இப்படியே சில மாதங்கள் போனபின்பும் சொல்லிக்கொள்ளும்படி வெயிட் குறையவில்லை. ஒருமுறை ஊருக்கு விடுமுறையில் சென்றபொது, எதேச்சயாக ஒரு தமிழ்வைத்திய பரியாரியார் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் உரையாடும்போது, வெயிட் குறைப்பது பற்றியும் ஓட்ஸ் சாப்பிடுவது பற்றியும் கதைத்தேன். அவர் சொன்னார் "தம்பி ஓட்ஸ் சாப்பிடுவதால் வெயிட் ஐ குறைப்பது கடினம். நீ மூன்று நேரமும் அளவான (மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது) ஆரோக்கியமான சாப்பாடு  சாப்பிடு, சாப்பாடுக்கு இடையில் பசித்தால் நொறுக்கு தீனி சாப்பிடாமல் ஏதாவது பழம் சாப்பிடு. ஒவொருநாளும் குறைந்தது 1 மணித்தியாலம் வியர்வை வரும்படி ஏதவது வேலைசெய். ஒரு 5 அல்லது 6 மாதத்தில் குறிப்பிடத்தக்க வெயிட் குறையும்." என்று சொன்னார். எனக்கு அதில் அப்போது பெரிதாக நம்பிக்கை இல்லை என்றாலும் கொஞ்ச நாளுக்கு அவர் சொன்னதை செய்வது என்ற முடிவுடன் விடுமுறை முடிந்த மீண்டும் துபாய்க்கு வந்துவிட்டேன்.

பிறகு அவர் சொன்னமாதிரி 3 நேரமும் நல்ல உணவு அளவாக சாப்பிட்டு, குறைந்தது 1 மணித்தியாலம் நடை பயிற்சி செய்து வந்தேன் (பீசா பர்கர் மற்றும் பாஸ்ட் food சாப்பிடுவதை முற்றாக நிறுத்திவிட்டன்). அவர் சொன்ன மாதிரி சிறிது சிறிதாக வெயிட் குறைய தொடங்கியது. இப்படியே தொடந்து செய்துவர 1 வருடத்தில் கிட்ட த்தட்ட 15kg குறைந்து விட்டது.இதன் மூலம் உற்சாகம் அடைந்த நான் நடக்கும் நேரத்தை 1.5 மணியாக அதிகரித்து இப்பொது 78kg வெயிட் ல இருக்கிறான். இப்ப நான் எல்லாசப்படும் சாப்பிடுகிறானான் ஆனால் அளவாக. எவ்வளவு டேஸ்ட் ஆக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவதில்லை. அத்துடன் ஒவொருநாளும் குறைந்தது 1.5 மணித்தியாலம் உடற்பயிற்சி செய்ய தவறுவதில்லை. வெயிட் ம் கண்ட்ரோலுக்குள்ளை இருக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.