Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானே சிறிலங்காவின் பிரதமர் – என்கிறார் ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அழிக்கவேண்டிய அளவிற்கு என்ன  கெடுதல் வெள்ளையளுக்கு செய்தார்கள்?

இந்த கேள்விக்கு பதில் முதலிலேயே தரப்பட்டு இருக்கிறதே? இதோ மீண்டும் கீழே☺️:

3 hours ago, Jude said:

வடையும் தேத்தண்ணியுமா கொடுத்தார்கள்? கொடுத்தவர்கள் தமக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களை எப்படி அழிக்கலாம் என்று பார்க்க போயிருக்கலாம். இல்லையா?

கெடுதல் செய்யாதவர்களையும் பலரும் அழிப்பது உண்டு.

  1. உதாரணமாக சிங்கள மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்து அவர்கள் அழிந்து போனார்கள். இந்த மாணவர்கள் குண்டு வைத்தவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  2. நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி அங்கே வழிபட்டு கொண்டு இருந்தவர்களை அழித்தார்கள். இந்த பக்தர்கள் குண்டு வீசியவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  3. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டு இருந்தவர்களை சுட்டு கொன்று அழித்தார்கள். அந்த பக்தர்கள் கொலைகாரருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

 

 

  • Replies 78
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
9 hours ago, Jude said:

எப்பொழுதும் மேற்குலகின் காலை பிடிக்கும் உங்கள் அடிமை மனநிலை பற்றி தெளிவாகவே தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். 

மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? 

தமிழ் கூட சரியாக விளங்காத உங்கள் நிலைமை அடிமை என்பதற்கும் மிகமிக மோசமான நிலைமை என்று தெரிகிறது. 
 

  • தொடங்கியவர்

நாளை காலை அமைச்சரவையைக் கூட்டுகிறார் ரணில்

Oct 27, 2018 | 17:21 

ranil-unp-300x200.jpgசிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாளை அலரி மாளிகையில் போட்டி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்பார்கள்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் அமைச்சரவையில் இருக்கிறது என்று, ஐதேக பேச்சாளர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்தார்.

அதேவேளை, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான பாதுகாப்பை நீக்குமாறும், அவரது வாகன அணியை விலக்கிக் கொள்ளுமாறும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தாம் பிரதமர் செயலகத்தை இயக்கி வருவதாகவும், ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்படும் போது அவர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறுவார் என்றும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/27/news/33788

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை ஐ.தே.க கொண்டுவரும் சனாதிபதிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால் மஹிந்த சனாதிபதி ஆகும் வாய்ப்பு உருவாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

By ராமசாமி சிவராஜா
மகிந்த பிரதமர்! அடுத்து  என்ன நடக்கும்?

* முப்படைகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினை  ஜனாதிபதி கையில் எடுக்கலாம்..ஊடக அமைச்சும் கை மாறலாம்..

* ஞாயிறு தினம் நாடாளுமன்றம் அவசரமாகக் கூடலாம்...

* நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பிரதமர் மஹிந்த நிரூபிக்க வேண்டும்...

* ரணில் தனக்கு பெரும்பான்மை இருக்கும் என்றால் அவரும் நிரூபிக்க வேண்டும்..

* பெரும்பான்மையை நிரூபிக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டை பெசில் ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்...கட்சிகள் பல தங்களது ஆதரவை யாருக்கு ஆதரவோ அவர்களுக்கு எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டும்...

* சபாநாயகர் இதில் எடுக்கும் முடிவை பொறுத்து நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் ஒரு அதிகார போட்டி வரக் கூடும்...

* ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு கொடுக்கலாம்.. அதேபோல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையலாம்...

* எல்லாவற்றுக்கும் மேல் ஒரு முக்கிய விடயம் உள்ளது... அரசியல் நெருக்கடி நீடித்தால் ஜனாதிபதிக்கு எதிராக ஒரு இம்பீச்மெண்ட் -  குற்றவியல் பிரேரணை ஒன்றை ரணில் கொண்டுவரலாம்... அப்படி கொண்டு வந்தால் ரணிலுக்கு  ஆட்சியமைக்க உதவி வழங்காத தமிழ்க் கூட்டமைப்பு ஜே வீ பீ போன்ற கட்சிகள் கூட  அதற்கு ஆதரவளிக்கலாம்.. கணிசமான ஆதரவு அதற்கு இருந்தால் - அதனை விவாதிக்க சபாநாயகர் அனுமதித்தால் நாடாளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்காது... 

* இப்படி ஒரு குற்றவியல் பிரேரணை வந்து நிறைவேறினால் ஜனாதிபதி மஹிந்த  பதவிக்கு ஆப்பு வரும்... அப்போது பிரதமர் மஹிந்த  ஜனாதிபதியாக மாறலாம்... எனவே மஹிந்த தரப்பு இந்த குற்றவியல் பிரேரணை வரும்போது மௌனம் காக்கலாம்...ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை மஹிந்த தரப்பு அடிக்கக் கூடும்.. மறுபுறம் ஐ தே க தனது வஞ்சத்தையும் தீர்த்துக் கொள்ளலாம்..

* இதற்கும் மேல் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல நாடாளுமன்றத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தீர்மானம் எடுக்கக் கூடும்...

?

 

https://www.facebook.com/100002317331150/posts/2005827039504521/

விசேட செய்தி....

கொழும்பு அரசியலில் என்ன நடக்கிறது?

1.அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிசியாக உள்ளார்... மஹிந்த மற்றும் பசிலுடன் அடிக்கடி ஆலோசனைகள் பெற்றாலும் இறுதியாக மைத்திரியே எந்தெந்த அமைச்சுக்களுக்கு அமைச்சர்களை நியமிப்பதென தீர்மானம் எடுப்பார்.. 

2.இன்று மாநாயக்க தேரர்களை சந்திக்கும் பிரதமர் மஹிந்த பின்னேரம் கொழும்பு திரும்பியவுடன் ஜனாதிபதியிடம் கலந்து பேசி புதிய அமைச்சரவை தொடர்பில் இறுதி பட்டியலை பார்வையிடுவார்...

3. ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்...

4. முக்கியமான  பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பது , தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினை  என்பன இதில் அடக்கம்... முதலாளிமார் சம்மேளனத்தினை நேரடியாக அழைத்து பேச மஹிந்த தீர்மானம் ...

5. தொண்டமான் , டக்ளஸ் தேவானந்தா , ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள்... அரவிந்த்குமார் மற்றும் மலையகத்தில் இருந்து இணையவுள்ள தமிழ் எம் பி ஒருவருக்கு பிரதியமைச்சுப் பொறுப்புக்கள்...

6. அலரி மாளிகையில் இருந்து ரணில் வெளியேற தீர்மானம்... கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளிடம் தனது எதிர்காலத் திட்டம் குறித்து அவர் விபரிப்பு...

7. கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை ஜீ எல் பீரிஸ் சந்திக்க ஏற்பாடு..

8. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க இன்னமும் தீர்மானம் இல்லை ..

9. நிதியமைச்சின் செயச்செயலாளராக சிரேஷ்ட திறைசேரி அதிகாரி ஆர்ட்டிகலவை நியமிக்க முடிவு...

10. ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நாளை முதல் நடத்த யூ என் பி முடிவு..

11. ரவி கருணாநாயக்கவுக்கு நிதியமைச்சை வழங்குவதா வெளிவிவகார அமைச்சை வழங்குவதா என்பதில் இழுபறி... நிதித்துறை நிறுவகங்களை இணைத்து புதிய அமைச்சு ஒன்றை வழங்க உத்தேசம்...

12. ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி எம் பிக்களிடம் இன்று கையொப்பங்கள் பெறப்படுகின்றன...

 

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அழிக்கவேண்டிய அளவிற்கு என்ன  கெடுதல் வெள்ளையளுக்கு செய்தார்கள்?

குசா அடிமைத்தனமான, மனநிலை குன்றிய,,விளக்கமில்லாத ஜடங்களின் கருத்துகளுக்கெல்லாம் ஏன்  வீணாக உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள். இந்தத்திரியின் போக்கையும் மாற்றி தனது அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்த .குத்தி முறிகிறார்..

  • தொடங்கியவர்

அலரி மாளிகையை விடமாட்டோம் – ஐதேகவும் சூளுரை

ஜனநாயகத்துக்கு முரணான ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை அலரி மாளிகையை பாதுகாப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையிலேயே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

“ராஜபக்ச குழுவினர் வன்முறையை ஏவிவிடலாம். எம்மை அச்சுறுத்த குண்டர்களை அனுப்பலாம். ஆனால், நாங்கள் நாட்டின் சட்டபூர்வமான பிரதமர் என்ற வகையில் எமது கட்சித் தலைவரைப் பாதுகாப்போம்.

ஜனநாயகத்துக்கான இந்தப் போராட்டத்தில் பங்கேற்க, கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை அலரி மாளிகையில் இன்று ஒன்று கூடுமாறும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கூட்டும் வரை போராடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இன்று காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு ரணில் வெளியேறாவிடின், உள்ளே புகுந்து அவரை வெளியேற்றுவோம் என்று கூட்டு எதிரணி நேற்று எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவில் பாதுகாப்பை அகற்றவும், சிறிலங்கா அதிபர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அலரி மாளிகைக்குள் இன்று சிறிலங்கா படையினர், அல்லது காவல்துறையினர் அனுப்பப்படவோ, மகிந்த ஆதரவாளர்கள் நுழையவோ முயற்சிக்கலாம் என்பதால், அங்கு ஐதேக ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ் நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2018/10/28/news/33809

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பத்து பேர் கொண்ட பாதுகாப்பை மட்டும் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ,பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமசிங்கவை பணித்துள்ளார்...

ரணிலுக்கு ஒட்டுமொத்தமாக 800 பேர் கொண்ட பாதுகாப்பு முன்னர் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

 

 

  • தொடங்கியவர்

கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பம்; மகிழ்ச்சியில் ரணில்! என்ன செய்யப்போகிறார் மஹிந்த?

ஜனாதிபதி மைத்திரி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க ஜக்கிய தேசிய கட்சியின் வசம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தொடர்பில் சுதந்திர கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/108237?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

அலரி மாளிகைக்கான... மின்சாரம், தண்ணீர்   விநியோகம்  துண்டிக்கப் பட்டதாக  அறிய முடிகின்றது.

Edited by தமிழ் சிறி

6 hours ago, தமிழ் சிறி said:

அலரி மாளிகைக்கான... மின்சாரம், தண்ணீர்   விநியோகம்  துண்டிக்கப் பட்டதாக  அறிய முடிகின்றது.

இது தானே சிங்களவர்களின் கலாச்சாரம்!

இலங்கையையும் விட்டு வைக்காத Me too

நான் இலங்கை பிரதமர் - மகிந்த

நானும் இலங்கைப் பிரதமர் - ரணில் Me too

  • கருத்துக்கள உறவுகள்
On 10/27/2018 at 9:14 PM, Jude said:

இந்த கேள்விக்கு பதில் முதலிலேயே தரப்பட்டு இருக்கிறதே? இதோ மீண்டும் கீழே☺️:

கெடுதல் செய்யாதவர்களையும் பலரும் அழிப்பது உண்டு.

  1. உதாரணமாக சிங்கள மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்து அவர்கள் அழிந்து போனார்கள். இந்த மாணவர்கள் குண்டு வைத்தவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  2. நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி அங்கே வழிபட்டு கொண்டு இருந்தவர்களை அழித்தார்கள். இந்த பக்தர்கள் குண்டு வீசியவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  3. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டு இருந்தவர்களை சுட்டு கொன்று அழித்தார்கள். அந்த பக்தர்கள் கொலைகாரருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

 

 

பாதிக்கப்பட்டவர்கள் மேற்குலகத்தவர்களா??

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

பாதிக்கப்பட்டவர்கள் மேற்குலகத்தவர்களா??

மேற்குலகத்தவர் பாதிக்கப் பட்டால் மட்டும் தான் மேற்குநாடுகள்.  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

"மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்டது  யார்?  

6 hours ago, nunavilan said:

"மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்டது  யார்?  

தலைக்கேறிய போதை இறங்கினால் சொன்னது மறந்துபோவது இயல்புதானே! ?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/27/2018 at 1:47 AM, Jude said:

மேற்குலக நலன்களுக்கு தமிழர் என்றும் ஆதரவாக இருந்தது இல்லை. இந்திய நலன்களுக்கே தமிழர் என்றும் ஆதரவாக இருந்து வந்துள்ளார்கள். மேற்குலக நலன்களுக்கு தேவையானதை தமிழர் முதலில் இலங்கையில் செய்து காட்டினால் தான் மேற்குலக அனுதாபம் கிடைக்கும். 

On 10/27/2018 at 9:02 AM, போல் said:

அடிமை மனநிலை உடையவர்கள் இதைப் போன்றே எப்போதும் சிந்திப்பார்கள்.

 

 

On 10/27/2018 at 9:28 AM, Jude said:

 

எப்பொழுதும் மேற்குலகின் காலை பிடிக்கும் உங்கள் அடிமை மனநிலை பற்றி தெளிவாகவே தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். 

மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? 

 

On 10/27/2018 at 10:26 AM, குமாரசாமி said:

கிளிநொச்சிக்கு வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் வடை சாப்பிட்டு தேத்தண்ணியும் குடிக்கவா போனார்கள்?

 

On 10/27/2018 at 2:41 PM, Jude said:

வடையும் தேத்தண்ணியுமா கொடுத்தார்கள்? கொடுத்தவர்கள் தமக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களை எப்படி அழிக்கலாம் என்று பார்க்க போயிருக்கலாம். இல்லையா?

 

On 10/27/2018 at 3:20 PM, குமாரசாமி said:

அழிக்கவேண்டிய அளவிற்கு என்ன  கெடுதல் வெள்ளையளுக்கு செய்தார்கள்?

 

On 10/27/2018 at 6:14 PM, Jude said:

இந்த கேள்விக்கு பதில் முதலிலேயே தரப்பட்டு இருக்கிறதே? இதோ மீண்டும் கீழே☺️:

கெடுதல் செய்யாதவர்களையும் பலரும் அழிப்பது உண்டு.

  1. உதாரணமாக சிங்கள மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்து அவர்கள் அழிந்து போனார்கள். இந்த மாணவர்கள் குண்டு வைத்தவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  2. நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி அங்கே வழிபட்டு கொண்டு இருந்தவர்களை அழித்தார்கள். இந்த பக்தர்கள் குண்டு வீசியவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  3. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டு இருந்தவர்களை சுட்டு கொன்று அழித்தார்கள். அந்த பக்தர்கள் கொலைகாரருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

 

 

 

21 hours ago, nunavilan said:

பாதிக்கப்பட்டவர்கள் மேற்குலகத்தவர்களா??

 

10 hours ago, Jude said:

மேற்குலகத்தவர் பாதிக்கப் பட்டால் மட்டும் தான் மேற்குநாடுகள்.  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?

 

8 hours ago, nunavilan said:

"மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்டது  யார்?  

 

2 hours ago, Rajesh said:

தலைக்கேறிய போதை இறங்கினால் சொன்னது மறந்துபோவது இயல்புதானே! ?

உங்கள் போதை இறங்கி விட்டதால் உங்களுக்கு மறந்து போனவற்றை.நினைவூட்ட எல்லாம் ஒன்றாக மேலே உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Jude said:

மேற்குலகத்தவர் பாதிக்கப் பட்டால் மட்டும் தான் மேற்குநாடுகள்.  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?

இல்லையே..

  1. Quote

     

    1. உதாரணமாக சிங்கள மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்து அவர்கள் அழிந்து போனார்கள். இந்த மாணவர்கள் குண்டு வைத்தவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
    2. நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி அங்கே வழிபட்டு கொண்டு இருந்தவர்களை அழித்தார்கள். இந்த பக்தர்கள் குண்டு வீசியவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
    3. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டு இருந்தவர்களை சுட்டு கொன்று அழித்தார்கள். அந்த பக்தர்கள் கொலைகாரருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

     

    மேற்கண்ட நடவடிக்கைகளூக்கு ஏன் புலிகளை மேற்கு நாடுகள் அழிக்க வேண்டும்.??? சிங்களவர்களும் தமிழர்களை கொன்று குவித்தார்கள். அப்போ ஏன் அவர்களை மேற்கு நாடுக|ள் அழிக்கவில்லை??

"மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?" எஙிகிறீர்கள். பிறகு மேற்குலகத்தவர் பாதிக்கப் பட்டால் மட்டும் தான் மேற்குநாடுகள்.  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?  :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

இல்லையே..

  1. மேற்கண்ட நடவடிக்கைகளூக்கு ஏன் புலிகளை மேற்கு நாடுகள் அழிக்க வேண்டும்.??? சிங்களவர்களும் தமிழர்களை கொன்று குவித்தார்கள். அப்போ ஏன் அவர்களை மேற்கு நாடுக|ள் அழிக்கவில்லை??

"மேற்குலகு ஏன் உங்கள் இனவெறி சண்டை தீர்வு பற்றி அக்கறை படவேண்டும்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?" எஙிகிறீர்கள். பிறகு மேற்குலகத்தவர் பாதிக்கப் பட்டால் மட்டும் தான் மேற்குநாடுகள்.  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?  :grin::grin:

அவரவர்   தத்தமக்கு  கொடுக்கப்பட்ட  வேலைகளை  செய்கிறார்கள்

தமிழரிடம் அவுக்க  இனி என்ன  இருக்கு???

யாருடைய  வயிற்றிலும் அடித்த  பாவம்   எமக்கெதற்கு??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 10/27/2018 at 6:14 PM, Jude said:

கெடுதல் செய்யாதவர்களையும் பலரும் அழிப்பது உண்டு.

  1. உதாரணமாக சிங்கள மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டிகளில் குண்டுகள் வெடித்து அவர்கள் அழிந்து போனார்கள். இந்த மாணவர்கள் குண்டு வைத்தவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  2. நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி அங்கே வழிபட்டு கொண்டு இருந்தவர்களை அழித்தார்கள். இந்த பக்தர்கள் குண்டு வீசியவர்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?
  3. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டு இருந்தவர்களை சுட்டு கொன்று அழித்தார்கள். அந்த பக்தர்கள் கொலைகாரருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

 

 

 

15 hours ago, nunavilan said:

 

  1. மேற்கண்ட நடவடிக்கைகளூக்கு ஏன் புலிகளை மேற்கு நாடுகள் அழிக்க வேண்டும்.??? 

அது தானே?  "நவாலி தேவாலயத்தில் குண்டு வீசி ... " புலிகளா குண்டு வீசினார்கள் இல்லையே? 

திரும்பவும் தெளிவாகவும் ஆறுதலாகவும் எழுதப்பட்டதை படித்து பாருங்கள் புரிகிறதா என்று பார்க்கலாம்!

எங்கள் மக்களுக்கு சிக்கலான விடயங்களை கொடுத்தால் புரிவதில்லை - அதனால் உடனே கோபம் வருகிறது ...

இலங்கை பிரச்சினையும் சர்வதேச அரசியலும் சிக்கலானவை.  புரிவதற்கு கடினமானவை. எங்கள் மக்கள் இவற்றை ஆராய்ந்து புரிந்து தீர்வு காண ஆற்றல் இல்லாத நிலையில் கோபப்பட்டார்கள். அழிவை கண்டு கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இந்த கருத்தாடலில் இருந்தாவது  சிக்கலான சர்வதேச அரசியலை கொஞ்சம் அவதானமாக புரிந்து கொள்ள பார்க்கலாமே??

21 hours ago, Jude said:

உங்கள் போதை இறங்கி விட்டதால் உங்களுக்கு மறந்து போனவற்றை.நினைவூட்ட எல்லாம் ஒன்றாக மேலே உள்ளன.

தொப்பி உங்களுக்கு அளவாக இருப்பதால் எடுத்து போட்டுவிட்டீர்கள். நன்றி.

பலது முன்னுக்கு பின் முரணாகவே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு உபதேசம் செய்யும் பல்லி.. தான் கூழ்பானைக்க விழுந்திச்சாம். அணிலாரின் நிலை அதுதான். ஆனால்.. இந்தக் குள்ள நரிக்கு.. இதுவும் வேணும்.. இன்னும் வேண்டும்.

இந்த இரண்டு நாசகாரிகளும்.. ஒன்றை ஒன்று மோதனும். அதோடு சொறீலங்கா.. சிதையனும். ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ஊருக்கு உபதேசம் செய்யும் பல்லி.. தான் கூழ்பானைக்க விழுந்திச்சாம். அணிலாரின் நிலை அதுதான். ஆனால்.. இந்தக் குள்ள நரிக்கு.. இதுவும் வேணும்.. இன்னும் வேண்டும்.

இந்த இரண்டு நாசகாரிகளும்.. ஒன்றை ஒன்று மோதனும். அதோடு சொறீலங்கா.. சிதையனும். ?

சீன ஏகாபத்தியத்தினுள் வீழ்ந்தால் 
மீட்பது கடினம் 
ஆரம்பத்தில் புது ரோட்டு புது பஸ் என்று பார்க்க்க பளபளப்பாக 
இருக்கும் ........ எல்லாம் அவர்கள் சரக்குகளை விநியோகிக்கும் யுத்திக்காகவே 
என்பது புரியும் போது நாட்டின் பொருளாதாரமும் கடனும் மீள முடியாது இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இணைக்க முடியாத ஆனால் கருத்தாழம் மிக்க இன்றைய இலங்கை அரசியல் நிலைமையின் தெளிவாக விபரிக்கும் படம் ஒன்று வாட்ஸ் அப் மூலம் வைரல் ஆகி உள்ளது.

மூன்று நாய்கள். இரு ஆண், ஒரு பெண்... 

ஆண் நாயும், பெண் நாயும் இணைந்த  நிலையில் (இனப்பெருக்க காலம்) காணப்படுகின்றது. 

மூன்றாவது ஆண் நாயும் தாவுகின்றது.... 

Three in bed....என்று வேறு  போட்டு உள்ளனர்.

யாரோ, ரூம் போட்டு யோசித்திருக்கிறார்கள் ....:grin:

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.