Jump to content

‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’ - எம்.சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’ - எம்.சுமந்திரன்

Editorial / 2018 டிசெம்பர் 29 சனிக்கிழமை, பி.ப. 01:13 Comments - 0

-டி.விஜிதா

அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (29) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், நவம்பர் 7ஆம் திகதி வரவிருந்த அரசமைப்பு வரைபைத் தடுப்பதற்காகவே, மஹிந்தவை பிரதமராக நியதித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

19ஆவது திருத்தத்தில் இருந்த தமது அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை அறியாதவர் போன்று இந்த நடவடிக்கைகளை செய்திருந்தாகவும் 19ஆவது திருத்தத்தில் அகற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை இன்னும் தன்னுடன் இருப்பது போன்று ஜனாதிபதி செயற்பட்டு இந்த தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் சுமந்திரன் எம்.பி சாடினார்.

இந்த செயற்பாட்டின் போது தான் தமித்ழ் தேசியக் கூட்டமைப்பு முன்நின்று செயற்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்த செயற்பாட்டில் தான் நாட்டில் பெரும் வரவேற்பு இருக்கிறதெனவும் ஆனால், இதில் சில விமர்சனங்களும் இருக்கின்றனலெனவும் குறிப்பிட்டார்.

அரசமைப்பு மீறப்படுகின்ற போது, அதை மீறப்படாத தடுக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்குத் தான் உள்ளதெனத் தெரிவித்த அவர், ஏனெனில், ஓர் அரசியல் தீர்வை தாம் எதிர்நோக்குவது, அரசமைப்பின் மூலமான ஒரு தீர்வாகுமெனவும் குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்பு மூலமாக அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பு மூலமாக எழுதப்படும் தீர்வையே தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு எழுதப்பட்ட பின்னர் அரசமைப்பு மீறப்படுமாக இருந்தால், அந்த தீர்வில் ஒரு பிரியோசனமும் இல்லாமல் போய்விடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில், நாட்டில் ஜனநாயகத்தைப் பேணுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளதென்ற நல்ல எண்ணம் உதித்துள்ளது. இது புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் மிகப்பெரிய பங்கை வகிக்கும். நாட்டைப் பிரிக்க முயலவில்லை. நாட்டுக்கு கேடு விளைவிக்க விரும்பவில்லை. அதை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளிலே சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் விலகுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆகையினால், மிகத் துரிதமாக புதிய அரசமைப்பு உருவாக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபடுகின்றோம். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவரும் எனவும் அவர் கூறினார்.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பெப்-4க்கு-முன்னர்-வரைவு-வெளிவரும்/150-227245

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்ப வர வர .... எதோ ரஜனி படம் வெளிவர மாதிரி 
போய்க்கொண்டு இருக்கிறது.

இதுக்கும் சினிமாவுக்கும் பெரிதாக ஏதும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

இவ்வரசியல் அமைப்பு திருத்த வரைவில் தமிழர்களுக்கு சாதகமான ஒன்றும் இல்லை என்பதற்கு மேல் ... 

 ... ஒரு அரசியலமைப்பு திருந்த சட்டங்கள் சிறிலங்கா நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டுமாயும்,  மூன்றில் இரண்டு பெரும்பான்மையால்தான் நிறைவேற்றப்பட வேண்டும்!  ...  இல்லையா??

அப்படியாயின், இந்த வரைபும் ஒரு புஸ்வாணமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’ - எம்.சுமந்திரன்

வட்ட மேசை, தீர்வு, தீர்வுப்பொதி, பொக்கிசம் எல்லாம் முடிஞ்சுது..... இனி வரைவாம்.....நடக்கட்டும்....நடக்கட்டும்.
கடைசியிலை எப்பிடி முடியுமெண்டது அனுபவப்பட்ட எங்களுக்கு நல்லவடிவாய் தெரியும்...:127_older_man:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கூட தாம் வடக்குக் கிழக்கு இணைப்பிற்கு ஒருபோதுமே ஆதரவளிக்கப்போவதிலை என்று ஜே வீ பி சூளுரைத்திருந்தது. அவ்வாறே, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் கூட பெள்த்தத்திற்கும்சிங்களத்துக்கும் வழங்கப்படும் விசேட அந்தஸ்த்துக் குறைக்கபடாதென்று ரணில் நேற்றுக் கூறியிருக்கிறார். அப்படியிருக்க அவர்களுடன்  இணைந்து கொண்டுவரப்படும் அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போகிறது? அது இப்போதிருக்கும் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பதில்தான் சென்று முடியப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for sri lanka districts map

இது கூகிளில் தட்டினால் வரும் 
ஏன் சுமந்திரன் கஸ்ரபட்டு வரைகிறார் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது முதல் வரைபு அல்லவா? எனவே இதில் உள்ளதை விடவும் குறைவாகத் தான் இறுதி வரைபு இருக்கும். ஆனால் ஏதாவது ஒன்று பைப்லைனில் இருக்க வேண்டும், எனவே பெப்.4 இல் வந்தால் வரவேற்கக் கூடியதே. ஒன்றும் செய்யாமல் இருந்தாலும் திட்டுவார்களே? ஆனால், பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பது, எமக்குப் பிடிக்கா விட்டாலும் சிறி லங்காவில் இருக்கத் தான் போகிறது. இதை எழுத்தில் வைத்திருக்கா விட்டாலும் இது எழுதாச்சட்டமாக இருக்கத் தான் போகிறது. உதாரணமாக இந்தியாவைப் பாருங்கள், செகுலர் ஜனநாயகம் என்று தான் சொல்கிறார்கள், ஆனால் பி.ஜே.பி ஆட்சியில் இந்துக்களுக்கு முதலிடம் தான் வழங்கப் படுகிறது. எனவே , பௌத்தம் முதலிடம் பெற்றாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவை உதாரண புருசனாய் காட்டுது ஒரு தெம்மாங்கு சிங்கம்..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலிருந்தபடி ஊடகவியலாளருடன் சந்திப்பு நடத்துவதும் இதுபோன்ற முக்கிய விடயங்களை ஆலோசிப்பதும் வெளியிடுவதும் பின்னர் அது எனது தனிப்பட்ட கருத்து எனக்கூறி நழுவிச்செல்வதும் தவிர்க்கப்பட வேண்டியது. கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வ அலுவலகம் தமிழர்தாயக பகுதிகளில் இல்லையோ? தெற்கில் ஜனநாயகத்தை காத்தோம் என்று மார்தட்டும் சூரர்கள் வடக்கிலும் கிழக்கிலும் மக்கள்மத்தியிலும் கட்சிக்குள்ளும் அதே ஜனநாயகத்தைக்கட்டிக்காக்க முன்வர வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், பெளத்தத்திற்கு முதலிடம் கொடுக்கப்படும் எனும்பொழுது, தமிழர்  தாயகத்தில் ஒவ்வொரு நாளும் முளைக்கும் புத்த விகாரைகளும் அடங்கும். அநியாயம் என்னவென்றால் புதிய யாப்பு இதற்கு அங்கீகாரம் அளிப்பதாக மாறிவிடும் என்பதுதான். 

பெளத்தத்திற்கும் சிங்களத்திற்கு முன்னுரிமை எனும் கோட்பாட்டை நாம் ஏற்பதென்பது அதனோடு இணைந்து வரப்போகும் ஏனைய அடக்குமுறைகளையும் ஏற்பதாகிவிடும்.

பெளத்தத்திற்கும், சிங்களத்திற்கும் முதலிடம், இணையாத வடக்கும் கிழக்கும்.........இனி என்னதான் மீதமாய் இந்த வரைபில் தமிழருக்கு இருக்கப்போகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ragunathan said:

ஜஸ்டின், பெளத்தத்திற்கு முதலிடம் கொடுக்கப்படும் எனும்பொழுது, தமிழர்  தாயகத்தில் ஒவ்வொரு நாளும் முளைக்கும் புத்த விகாரைகளும் அடங்கும். அநியாயம் என்னவென்றால் புதிய யாப்பு இதற்கு அங்கீகாரம் அளிப்பதாக மாறிவிடும் என்பதுதான். 

பெளத்தத்திற்கும் சிங்களத்திற்கு முன்னுரிமை எனும் கோட்பாட்டை நாம் ஏற்பதென்பது அதனோடு இணைந்து வரப்போகும் ஏனைய அடக்குமுறைகளையும் ஏற்பதாகிவிடும்.

பெளத்தத்திற்கும், சிங்களத்திற்கும் முதலிடம், இணையாத வடக்கும் கிழக்கும்.........இனி என்னதான் மீதமாய் இந்த வரைபில் தமிழருக்கு இருக்கப்போகிறது?

உண்மை தான், இது இப்படியே ஏற்றுக் கொள்ளப் பட்டால் அது நடக்கும். பௌத்த முன்னுரிமையை அகற்றச் சொல்வதை விட, மாகாண மட்டத்தில் தனியொரு மதத்திற்கு முன்னுரிமை இல்லாமலிருக்க ஒரு ஏற்பாட்டைச் செய்யலாம். அல்லது விகாரை கட்டக் காணி வழங்குவதில் மதச் சார்பின்மை மாதிரி ஒரு ஏற்பாட்டைக் காணி அதிகாரத்தை மாகாண மட்டத்திற்கு மாற்றுவதால் கட்டுப் படுத்தலாம். இவை ஐடியாக்கள் மட்டுமே, எனவே யாரும் தங்கள் கலைத்திறன் மிக்க ஜோக்குகளை எடுத்து விட அழைக்கிறேன்!

ஆனால், பௌத்த முன்னுரிமையை விடவே மாட்டார்கள்! எழுதாச் சட்டமாகவேனும் அது இருக்கும். அது இருப்பதால் வரைபைக் கடாசி விடலாம்! பதிலாக ஒன்றும் கிடைக்காது. வட-கிழக்கு இணைப்பு சாத்தியம் என நினைக்கிறேன். முஸ்லிம்கள் கிழக்கில் செறிந்து விடுவதால் வரக்கூடிய பயம் சிங்களவர்களை கொஞ்சமாவது வட்-கிழக்கு இணைப்பு நோக்கி நகர்த்தலாம்! அல்லது இந்தியாவின் வழியாக கை முறுக்க வேண்டும். 

1 hour ago, vanangaamudi said:

வீட்டிலிருந்தபடி ஊடகவியலாளருடன் சந்திப்பு நடத்துவதும் இதுபோன்ற முக்கிய விடயங்களை ஆலோசிப்பதும் வெளியிடுவதும் பின்னர் அது எனது தனிப்பட்ட கருத்து எனக்கூறி நழுவிச்செல்வதும் தவிர்க்கப்பட வேண்டியது. கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வ அலுவலகம் தமிழர்தாயக பகுதிகளில் இல்லையோ? தெற்கில் ஜனநாயகத்தை காத்தோம் என்று மார்தட்டும் சூரர்கள் வடக்கிலும் கிழக்கிலும் மக்கள்மத்தியிலும் கட்சிக்குள்ளும் அதே ஜனநாயகத்தைக்கட்டிக்காக்க முன்வர வேண்டும். 

ம்..வீட்டிலிருந்த படியே அலுவலக வேலைகளைச் செய்யும் காலத்தில் இப்படியொரு கவலையா உங்களுக்கு? இது உத்தியோக பூர்வ த.தே.கூ என்று  கூட இங்கே சொல்லப் படவில்லை. வரைபு வருகிறது என்பதை வீதியில் நின்று சொன்னால் கூட வரைபு வந்த பின்னர் தானே மிச்சம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உண்மை தான், இது இப்படியே ஏற்றுக் கொள்ளப் பட்டால் அது நடக்கும். பௌத்த முன்னுரிமையை அகற்றச் சொல்வதை விட, மாகாண மட்டத்தில் தனியொரு மதத்திற்கு முன்னுரிமை இல்லாமலிருக்க ஒரு ஏற்பாட்டைச் செய்யலாம். அல்லது விகாரை கட்டக் காணி வழங்குவதில் மதச் சார்பின்மை மாதிரி ஒரு ஏற்பாட்டைக் காணி அதிகாரத்தை மாகாண மட்டத்திற்கு மாற்றுவதால் கட்டுப் படுத்தலாம். இவை ஐடியாக்கள் மட்டுமே, எனவே யாரும் தங்கள் கலைத்திறன் மிக்க ஜோக்குகளை எடுத்து விட அழைக்கிறேன்!

ஆனால், பௌத்த முன்னுரிமையை விடவே மாட்டார்கள்! எழுதாச் சட்டமாகவேனும் அது இருக்கும். அது இருப்பதால் வரைபைக் கடாசி விடலாம்! பதிலாக ஒன்றும் கிடைக்காது. வட-கிழக்கு இணைப்பு சாத்தியம் என நினைக்கிறேன். முஸ்லிம்கள் கிழக்கில் செறிந்து விடுவதால் வரக்கூடிய பயம் சிங்களவர்களை கொஞ்சமாவது வட்-கிழக்கு இணைப்பு நோக்கி நகர்த்தலாம்! அல்லது இந்தியாவின் வழியாக கை முறுக்க வேண்டும். 

ம்..வீட்டிலிருந்த படியே அலுவலக வேலைகளைச் செய்யும் காலத்தில் இப்படியொரு கவலையா உங்களுக்கு? இது உத்தியோக பூர்வ த.தே.கூ என்று  கூட இங்கே சொல்லப் படவில்லை. வரைபு வருகிறது என்பதை வீதியில் நின்று சொன்னால் கூட வரைபு வந்த பின்னர் தானே மிச்சம்? 

இணைந்த வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம், இந்த ஒருங்கிணைந்த மாகாண சபையிடம் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம். இவையே புதிய வரைபிற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இதன்மூலம், 100% சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடிவதுடன், மழைக்காலக் காளான்கள் போல தமிழர் தாயகமெங்கும் முளைவிடும் சிங்களக் குடியேற்றங்களையும் கற்புத்தர்களையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragunathan said:

இணைந்த வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம், இந்த ஒருங்கிணைந்த மாகாண சபையிடம் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம். இவையே புதிய வரைபிற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இதன்மூலம், 100% சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடிவதுடன், மழைக்காலக் காளான்கள் போல தமிழர் தாயகமெங்கும் முளைவிடும் சிங்களக் குடியேற்றங்களையும் கற்புத்தர்களையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

இது தான் நடக்காது. கல்வி காணி பொலிஸ் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க சிங்கள அரசுகள் தயாரில்லை.

Link to comment
Share on other sites

11 hours ago, ragunathan said:

இணைந்த வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம், இந்த ஒருங்கிணைந்த மாகாண சபையிடம் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம். இவையே புதிய வரைபிற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இதன்மூலம், 100% சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடிவதுடன், மழைக்காலக் காளான்கள் போல தமிழர் தாயகமெங்கும் முளைவிடும் சிங்களக் குடியேற்றங்களையும் கற்புத்தர்களையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

ராணுவத்தினை மீறி எதுவும் செய்ய முடியாது. இராணுவத்தை வைத்திருப்பதே குடியேற்றங்களையும் புத்தர் சிலைகளையும் தங்கு தடையின்றி மேற்கொள்ளவும்  மக்களை அச்சுறுத்தவும் தான்.

Link to comment
Share on other sites

16 hours ago, ragunathan said:

இணைந்த வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம், இந்த ஒருங்கிணைந்த மாகாண சபையிடம் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம். இவையே புதிய வரைபிற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

இதன்மூலம், 100% சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடிவதுடன், மழைக்காலக் காளான்கள் போல தமிழர் தாயகமெங்கும் முளைவிடும் சிங்களக் குடியேற்றங்களையும் கற்புத்தர்களையும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

2004 /2005 இல் வன்னி உட்பட தமிழர் தாயகத்தின் அநேகமான முக்கிய பிரதேசங்களையும் இலங்கையின் 45 வீதத்துக்கு மேற்பட்ட, முக்கியமாக சர்வதேச கடற் போக்குவரத்து பாதைகளில் செல்வாக்கு செலுத்தக் கூடிய கடல் பிரதேசங்களை தம் செல்வாக்குள் வைத்திருந்தனர் புலிகள்.

ஓயாத அலைகள் 3 இன் மூலம் யாழ் தீபகற்பத்தை துண்டாடிக் கொண்டு இருந்த ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றியும் இருந்தனர்.

தீச்சுவாவலை எனும் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ நடவடிக்கையை முறியடித்து இலங்கை அரச படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

அதற்கும் முதல் கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி இலங்கை அரசுக்கு தம்மால் இலங்கை எங்கும் விரும்பிய இடத்தில் தாக்குதல் செய்யலாம் என நிரூபித்து இருந்தனர்.

இப்படி கடும் பலத்துடன் புலிகள் இருந்தும் புலிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட PTOMS எனப்படும் சுனாமிக்கு பின்னரான மக்களின் துயர் துடைக்கும் ஒரு திட்டத்தை சிங்களம் புலிகளுடன் / தமிழர்களுடன் செய்ய அங்கீகரிக்கவில்லை. இதில் ஜேவிபி / ஐதேக மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரஸ் கூட PTOMS இற்கு ஒத்துழைக்கவில்லை.

30 வருடங்களும்மு மேலாக போராடிய புலிகள் பலமாக இருக்கும் போது கூட சிங்கள பெளத்த பேரினவாதம் இயற்கை அழிவுக்கான துயர் நீக்கும் நடவடிக்கையில் இணைந்து செயலாற்ற முன்வரவில்லை.

ஆனால் இன்று

எமக்கென்று எம் கட்டுப்பாட்டில் ஒரு பிரதேசமும் இல்லை, இராணுவ பலமும் இல்லை, காத்திரமான பொருளாதார பலமும் இல்லை, உருப்படியான அரசியல் தலமையும் இல்லை, ஒரு ம**ரும் இல்லை.

பலமாக இருக்கும் போதே ஒன்றையும் தராத சிங்களம் இப்ப மட்டும் தமிழர் தாயகத்தை அங்கீகரித்து வடக்கு கிழக்கை இணைத்து ஒரு தீர்வை தரும் என நம்புகின்றீர்களா?

இல்லை எனில் இப்போதைக்கு கிடைக்க கூடிய ஆகக் கூடிய விடயங்களை பெற்று மக்களை ஓரளவுக்கேனும் பொருளாதார, கல்வி, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தி தொடர்ந்து செல்லும் ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் பலத்தை கொடுக்க வேண்டும் என நினைப்பதை தவறு என்பீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

2004 /2005 இல் வன்னி உட்பட தமிழர் தாயகத்தின் அநேகமான முக்கிய பிரதேசங்களையும் இலங்கையின் 45 வீதத்துக்கு மேற்பட்ட, முக்கியமாக சர்வதேச கடற் போக்குவரத்து பாதைகளில் செல்வாக்கு செலுத்தக் கூடிய கடல் பிரதேசங்களை தம் செல்வாக்குள் வைத்திருந்தனர் புலிகள்.

ஓயாத அலைகள் 3 இன் மூலம் யாழ் தீபகற்பத்தை துண்டாடிக் கொண்டு இருந்த ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றியும் இருந்தனர்.

தீச்சுவாவலை எனும் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ நடவடிக்கையை முறியடித்து இலங்கை அரச படைகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

அதற்கும் முதல் கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி இலங்கை அரசுக்கு தம்மால் இலங்கை எங்கும் விரும்பிய இடத்தில் தாக்குதல் செய்யலாம் என நிரூபித்து இருந்தனர்.

இப்படி கடும் பலத்துடன் புலிகள் இருந்தும் புலிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட PTOMS எனப்படும் சுனாமிக்கு பின்னரான மக்களின் துயர் துடைக்கும் ஒரு திட்டத்தை சிங்களம் புலிகளுடன் / தமிழர்களுடன் செய்ய அங்கீகரிக்கவில்லை. இதில் ஜேவிபி / ஐதேக மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரஸ் கூட PTOMS இற்கு ஒத்துழைக்கவில்லை.

30 வருடங்களும்மு மேலாக போராடிய புலிகள் பலமாக இருக்கும் போது கூட சிங்கள பெளத்த பேரினவாதம் இயற்கை அழிவுக்கான துயர் நீக்கும் நடவடிக்கையில் இணைந்து செயலாற்ற முன்வரவில்லை.

ஆனால் இன்று

எமக்கென்று எம் கட்டுப்பாட்டில் ஒரு பிரதேசமும் இல்லை, இராணுவ பலமும் இல்லை, காத்திரமான பொருளாதார பலமும் இல்லை, உருப்படியான அரசியல் தலமையும் இல்லை, ஒரு ம**ரும் இல்லை.

பலமாக இருக்கும் போதே ஒன்றையும் தராத சிங்களம் இப்ப மட்டும் தமிழர் தாயகத்தை அங்கீகரித்து வடக்கு கிழக்கை இணைத்து ஒரு தீர்வை தரும் என நம்புகின்றீர்களா?

இல்லை எனில் இப்போதைக்கு கிடைக்க கூடிய ஆகக் கூடிய விடயங்களை பெற்று மக்களை ஓரளவுக்கேனும் பொருளாதார, கல்வி, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தி தொடர்ந்து செல்லும் ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் பலத்தை கொடுக்க வேண்டும் என நினைப்பதை தவறு என்பீர்களா?

 

நீங்கள் கூறுவதும் சரிதான்,

சிங்களம் எதையுமே தரப்போவதில்லை. இப்போது இருப்பதையாவது தக்கவைத்துக்கொள்ள ஒரு அதிகாரமாவது இருந்தால்ப் போதும் என்கிற நிலைமைதான் இப்போது. அதுக்குக்கூட சிங்களம் விரும்பினால்த்தான்.

எங்கள் தலைவிதியை நினைத்து எங்களையே நொந்துகொள்வதைத்தவிர வேறு வழியில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.