Jump to content

Recommended Posts

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 
மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2019 at 11:43 AM, மல்லிகை வாசம் said:

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 
மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

16 minutes ago, Justin said:

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

இங்கேயுமா  ராசா...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

 

இங்கேயுமா  ராசா...??

விசுகர், தேசியவாதிகள் என்று நான் எழுதிய போது நினைத்தது ட்ரம்ப், விக்ரர் ஊர்பான், நைஜல் fபராஜ், மோடி போன்ற பேர்வழிகளை. வேறெந்த அர்த்தமும் இல்லை. அடையாளங்களில் அதிகம் ஆபத்தான அடையாளம் என்று தீவிர தேசிய அடையாளங்களை நான் கருதுவதால் அப்படிக் குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

6 hours ago, Justin said:

காலத்திற்கேற்ற பதிவிற்கு நன்றி! எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப் படும் போது நமக்கும் சுற்றியிருப்போருக்கும் நன்மை தருவன அல்ல என்று உலகில் நடக்கும் சம்பவங்களே சாட்சி சொல்கின்றன. தேசியவாதிகளால் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எதையும் இன்று சுட்டிக் காட்ட முடியவில்லை! 

உண்மை தான் ஜஸ்ரின். காலணித்துவ காலத்திலோ அல்லது அடக்குமுறை அதிகமாக இருக்கும் வேளைகளில் ஒரு தனிநபரோ, குழுவோ தம் அடையாளத்தை உணர்ந்து அதைப் பேணுவதற்கான வழிகளை முன்னெடுத்தல் தவறில்லை. இங்கே அவர்களின் அடையாளம் பல்வேறு காரணிகளால் வரையறுக்கப்படுகிறது (மொழி, மதம் என்பவை மிக மிக குறுகிய உதாரணங்கள் மட்டுமே). பல்வேறு காரணிகள் கூட்டாகச் சேர்ந்தும் ஒரு அடையாளத்தைக் கொடுக்க முடியும்.

எனினும் நீங்கள் சொல்வது போல 'எல்லா அடையாளங்களும் தூக்கிப் பிடிக்கப்படும் போது' ஆரோக்கியமற்ற ஓர் சூழல் உருவாகிறது. ஏனெனில் ஓர் குழுவானது தாம் சாராத ஏனைய குழுக்களின் அடையாளங்ககளப் புரிந்து மதிக்காத போது அங்கே முரண்பாடுகள் தோன்றுகின்றன. 

இன்று நாமெல்லாம் பரந்து வாழும் பல்லின நாடுகளில் ஓர் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது என்றால் ஒரு சில அடையாளங்களாவது பரஸ்பரம் மதிக்கப்படுவதனால் தான். மீண்டும், இந்த அளவீடு இடத்துக்கு இடம் மாறுபடலாம். தனிமனிதரையோ, குழுவையோ பொறுத்தும் இது பற்றிய அனுபவம் மாறுபடும்.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி ஜஸ்ரின். 😊 இவ்வாறான கருத்துக்கள் தான் தலைப்பை மேலும் சுவாரசியமாக்கும்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறந்த பின் தான் புகழுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படிப்பட்டவராக இருந்தாலும் இறந்த பின் தான் புகழுவார்கள்.

ஈழப் பிரியன் அண்ணை, புகழ் என்பது மற்றவர்கள் உங்களுக்குத் தரும் அடையாளமல்லோ? அது இருக்கும் போது வந்தால் என்ன போனால் பிறகு வந்தால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பையும், பன்பையும் அடையாளமாக்கி மணம் வீச செய்த மல்லிகையின் வாசம் வாசல் வரை கமகமக்கிறது.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு சிந்தனை...!

நான் என்பது தான் அடையாள,ம் எனப் பலர் கருதுகின்றார்கள்|

எனினும்....உற்று நோக்கும்போது...நான் என்பது அகங்காரம் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு எனபது புரியும்!

நான் என்னும்  அகந்தை....ஓரளவுக்கு மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்கு...உந்துதலை அளிக்கின்றது என்பதும் உண்மை தான்!

ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை அது முன்னோக்கி நகர்த்தும் எனப்தும் உண்மை!

எமது சமூகங்களில்....இந்த அடையாளங்கள் பெரிதும் உதவவில்லை ...என்றே நினைக்கிறேன்!

தனது அடையாளத்தைப் பாடும் புலவர்களுக்கு அள்ளிக்கொடுத்ததும்....தனது அடையாளத்தை நிலை நிறுத்தக் கோவில்களும் ..கோபுரங்களும் கட்டியதும் தான் எமது வரலாற்றின் பெரும்பகுதியாகும்!

அப்பூதியடிகள் போன்று....அடையாளத்தை நிலை நிறுத்த அன்னதான மடங்களும்,....அனாதை விடுதிகளும்....மருத்துவ சாலைகளும் அமைத்தவர்கள்  வெகு சிலரே! ஆணவம் அகன்ற நிலையில்... தனது அடையாளத்தை...அடக்கி வாசித்து....திருநாவுக்காரசரின் அடையாளத்துக்குள் மறைந்து ...சமூகப் பணிகளை முன்னெடுத்தார்!

எனினும் நாவுக்காரசரை விடவும் ...அவரது அடையாளமே....இன்னும் வாழ்கின்றது!

சி;எ உண்மைகளை....நாம் ஏற்றுக்கொள்ளாத வரையில்...நமது சமூகத்தில் பெரும் முன்னேற்றத்தை....நாம் எதிர்பார்க்க முடியாது!

பெருமளவிலான பணக்கையிருப்பு எம்மிடமிருந்தும்.....போரின் வடுக்களினால்   பாதிக்கப்படட....உறவுகள்...பெண்கள்...குழந்தைகள்...அனாதைகள் என...எல்லோரையும் கை விட்டு விட்டுத்....தனி மனித அடையாளங்களை நிலை நிறுத்தவே முனைந்தோம்! இதைச் செய்தவர்கள் சாதாரணமாக மனிதர்கள் அல்ல! எமது சமூகத்தைத் துயரங்களிலிருந்து...தூக்கி விடப் புறப்படடவர்கள்! தனி மனித அடையாளங்கள்...சமூக முன்னேற்றத்துக்கு...இங்கே உதவவில்லை!

ஜஸ்டின் ...மேலே குறிப்பிட்ட்து போலத்  தனிமனித அடையாளங்கள்...காலப்போக்கில் அழிந்து போய் விட....செய்த செயல்களின் பயன்கள் மட்டும்.....காலத்தால் அழிந்து போகாது...சமூக வளர்ச்சிக்கு என்றும் துணை போகும்!

நன்றி....மல்லிகை வாசம்!

Link to comment
Share on other sites

6 hours ago, புங்கையூரன் said:

நான் என்பது அகங்காரம் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு எனபது புரியும்!

நான் என்னும்  அகந்தை....ஓரளவுக்கு மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்கு...உந்துதலை அளிக்கின்றது என்பதும் உண்மை தான்!

ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை அது முன்னோக்கி நகர்த்தும் எனப்தும் உண்மை!

எமது சமூகங்களில்....இந்த அடையாளங்கள் பெரிதும் உதவவில்லை ...என்றே நினைக்கிறேன்!

ஜஸ்டின் ...மேலே குறிப்பிட்ட்து போலத்  தனிமனித அடையாளங்கள்...காலப்போக்கில் அழிந்து போய் விட....செய்த செயல்களின் பயன்கள் மட்டும்.....காலத்தால் அழிந்து போகாது...சமூக வளர்ச்சிக்கு என்றும் துணை போகும்!

அடையாளம் பற்றிய தங்கள் பார்வையை இன்னொரு கோணத்தில் அழகாகச் சொன்னீர்கள். ஆன்மீீீக ரீதியான அகங்காரம் என்ற விளக்கம் தான் உண்மையானது எனினும், சடப்பொருள் உலகில் சில 'சமாளிப்புக்களைச்' செய்ய வேண்டியதன் அவசியமும் புரிகிறது.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி புங்கையூரான் அண்ணா! 😊

Link to comment
Share on other sites

41 minutes ago, மல்லிகை வாசம் said:

அடையாளம் பற்றிய தங்கள் பார்வையை இன்னொரு கோணத்தில் அழகாகச் சொன்னீர்கள். ஆன்மீீீக ரீதியான அகங்காரம் என்ற விளக்கம் தான் உண்மையானது எனினும், சடப்பொருள் உலகில் சில 'சமாளிப்புக்களைச்' செய்ய வேண்டியதன் அவசியமும் புரிகிறது.

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி புங்கையூரான் அண்ணா! 😊

வழிமொழிகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றை சுமந்து

அதனை  தம்முடையதாக்கி  தொடர்பவர்கள் அனைவரையும் பார்த்தால்

அவர்கள் தமது அடையாளங்களை  பேணுபவர்களாகவே  இருக்கிறார்கள்

போர்கள் அல்லது வன்முறைகள் கூட இந்த அடையாளத்தை  பேணும்

அல்லது பாதுகாக்கும் ஒரு கருவியே.

அதன்படி   போரில் வென்றவர்கள்

அல்லது வலிமையானவர்களே  இன்றும்

தமது  அடையாளங்களை  பேண  முடிகிறது

இன்று நாமெல்லாம் உலகமெல்லாம்  பரந்து  கலந்து வாழ்கின்ற  போதும்

அதிலும் ஒரு அளவேனும்  கட்டுப்பாடுகளும்

கவனத்திலெடுத்தலும்

காவுதலும் இருக்கவே  செய்கிறது

இந்த  நிலை  தற்காலிகமானது  மட்டுமே

எப்ப  வேண்டுமானாலும்

எப்படி  வேண்டுமானாலும் மாற்றமடையலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

வரலாற்றை சுமந்து

அதனை  தம்முடையதாக்கி  தொடர்பவர்கள் அனைவரையும் பார்த்தால்

அவர்கள் தமது அடையாளங்களை  பேணுபவர்களாகவே  இருக்கிறார்கள்

போர்கள் அல்லது வன்முறைகள் கூட இந்த அடையாளத்தை  பேணும்

அல்லது பாதுகாக்கும் ஒரு கருவியே.

அதன்படி   போரில் வென்றவர்கள்

அல்லது வலிமையானவர்களே  இன்றும்

தமது  அடையாளங்களை  பேண  முடிகிறது

இன்று நாமெல்லாம் உலகமெல்லாம்  பரந்து  கலந்து வாழ்கின்ற  போதும்

அதிலும் ஒரு அளவேனும்  கட்டுப்பாடுகளும்

கவனத்திலெடுத்தலும்

காவுதலும் இருக்கவே  செய்கிறது

இந்த  நிலை  தற்காலிகமானது  மட்டுமே

எப்ப  வேண்டுமானாலும்

எப்படி  வேண்டுமானாலும் மாற்றமடையலாம்

 

இது உண்மை. அடையாளங்கள் வெல்வதால் மட்டுமல்ல, சில சமயங்களில் அடக்கப்படும் போதும் கூர்மை பெற்று மிகையாக வெளிப்படுவதுண்டு. தமிழர்களின் அடையாளம் கூர்மையடைய எங்களை அடக்கியது ஒரு  காரணம். 9/11 இன் பின்னர் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ சம்பவங்கள் அதிகரித்தன. இங்கேயெ பிறந்து அமெரிக்க அடையாளத்தை மட்டுமே பிரதானமாக வைத்திருந்த பல இளம் முஸ்லிம்கள் தமது முஸ்லிம் மத அடையாளத்தை தாடி மூலமோ பர்தா உடை மூலமோ வெளிக்காட்ட இந்த துவேஷ சம்பவங்கள் தூண்டலாக இருந்ததாக நம்புகிறார்கள். இது மனித இயல்பென நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

இது உண்மை. அடையாளங்கள் வெல்வதால் மட்டுமல்ல, சில சமயங்களில் அடக்கப்படும் போதும் கூர்மை பெற்று மிகையாக வெளிப்படுவதுண்டு. தமிழர்களின் அடையாளம் கூர்மையடைய எங்களை அடக்கியது ஒரு  காரணம். 9/11 இன் பின்னர் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ சம்பவங்கள் அதிகரித்தன. இங்கேயெ பிறந்து அமெரிக்க அடையாளத்தை மட்டுமே பிரதானமாக வைத்திருந்த பல இளம் முஸ்லிம்கள் தமது முஸ்லிம் மத அடையாளத்தை தாடி மூலமோ பர்தா உடை மூலமோ வெளிக்காட்ட இந்த துவேஷ சம்பவங்கள் தூண்டலாக இருந்ததாக நம்புகிறார்கள். இது மனித இயல்பென நினைக்கிறேன். 

இந்த  தாக்குதலும் 

துவேச அதிகரிப்புக்கூட

உண்மையில் தானாக  வந்தததா??

வரவழைக்கப்பட்டதா?? என்ற  கேள்வியும் இல்லாமலில்லை.....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அடையாளங்களும் அடையாளப்படுத்தல்களும் குறிப்பிட்ட கால, உடன் சூழல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆண்-பெண் என்ற பால் அடையாளம் ஒன்றே ஆதியிலிருந்து நிரந்தரமாக உள்ளது. இன, மத, மொழி, சாதி, பிரதேச, பண்பாட்டு அடையாளங்கள் காலவோட்டத்தில் மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். 

அடையாளத்தை முன்னிறுத்துவது தனியன்களாக இல்லாமல் கூட்டாக ஒரு இலக்கை அடைவதற்கும், அல்லது ஒரு குழுவோடு தம்மை அடையாளப்படுத்தி இயங்கவும் உதவுகின்றது. அரசியலில் சிங்களப் பேரினவாதம் சிங்கள, பெளத்த அடையாளங்களைப் பாவித்து தமிழர்களை ஒடுக்குவதும், தமிழர்கள் தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி போராடித் தோற்றதும் எமது வரலாறு. தமிழர்கள் தமிழ்பேசும் இனம் என்ற அடையாளத்துக்குள் முஸ்லிம்களை அடக்க முற்பட்டதும், அதை முஸ்லிம்களோ, மலையகத் தமிழரோ ஏற்காமல் போனதும் தமிழ்த் தேசிய அடையாளத்தை பலவீனப்படுத்தியது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இனமாக ஒன்றுபட்டாலும் இன்று அடையாளச் சிக்கலில் மாட்டுப்பட்டு உள்ளனர். கனடியத் தமிழர், பிரித்தானியத் தமிழர், ஜேர்மனியத் தமிழர் என்று புகலிட நாடுகளுக்கு ஏற்ப புதிய அடையாளங்களைப் பூணுவதும், அதே நேரத்தில் தமது பூர்வீக கிராமம், பிரதேச அடையாளங்களையும் தொடர்வதும் என்று மாறிக்கொண்டே போகின்றது. 

பிற நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், முஸ்லிம் அடையாளம் என்று பெண்கள் முக்காடு அணிவதும் அரசியல் அடையாளமே. 70 களில் முக்காடு அணியாமல் பெண்கள் நடமாடிய எகிப்திய கெய்ரோ, ஈரானிய தெஹ்ரான் போன்ற நகரங்களில் மேற்கு நாட்டவர்கூட தலையை மறைத்துக் கொள்வதும் அடையாள அரசியலினால்தான். 

உலகில் உள்ள வளங்கள் பல்கிப் பெருகியுள்ள மனித இனத்திற்குப் போதாது என்பதால் ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்படுவர்களும் அடையாளங்களைச் சுமந்துதான் தமது இருப்பைப் பேண முயல்கின்றன. எனவே அடையாளம் என்பது ஒரு சமூகத்தின் இருப்பை எப்பாடுபட்டாவது தக்க வைத்துக்கொள்ள ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பைத் தக்கவைத்து கொள்ளவேண்டுமானால் இன்னொரு சமூகத்தை அடக்குமுறை செய்யவேண்டும் அல்லது அடக்குமுறைக்கு எதிராக போராடவேண்டும். 

ஆகவே, பிறரின் அடையாளங்களை மதித்து அன்பைச் சொரிந்து மனிதர்கள் ஒற்றுமையாக வளங்களைப் பகிர்ந்து இப்பூமியில்  வாழலாம் என்பது கனவாகத்தான் இருக்கும்!

 

Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

ஆண்-பெண் என்ற பால் அடையாளம் ஒன்றே ஆதியிலிருந்து நிரந்தரமாக உள்ளது. இன, மத, மொழி, சாதி, பிரதேச, பண்பாட்டு அடையாளங்கள் காலவோட்டத்தில் மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். 

அரசியலில் சிங்களப் பேரினவாதம் சிங்கள, பெளத்த அடையாளங்களைப் பாவித்து தமிழர்களை ஒடுக்குவதும், தமிழர்கள் தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி போராடித் தோற்றதும் எமது வரலாறு. தமிழர்கள் தமிழ்பேசும் இனம் என்ற அடையாளத்துக்குள் முஸ்லிம்களை அடக்க முற்பட்டதும், அதை முஸ்லிம்களோ, மலையகத் தமிழரோ ஏற்காமல் போனதும் தமிழ்த் தேசிய அடையாளத்தை பலவீனப்படுத்தியது.

கனடியத் தமிழர், பிரித்தானியத் தமிழர், ஜேர்மனியத் தமிழர் என்று புகலிட நாடுகளுக்கு ஏற்ப புதிய அடையாளங்களைப் பூணுவதும், அதே நேரத்தில் தமது பூர்வீக கிராமம், பிரதேச அடையாளங்களையும் தொடர்வதும் என்று மாறிக்கொண்டே போகின்றது. 

பிற நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், முஸ்லிம் அடையாளம் என்று பெண்கள் முக்காடு அணிவதும் அரசியல் அடையாளமே. 70 களில் முக்காடு அணியாமல் பெண்கள் நடமாடிய எகிப்திய கெய்ரோ, ஈரானிய தெஹ்ரான் போன்ற நகரங்களில் மேற்கு நாட்டவர்கூட தலையை மறைத்துக் கொள்வதும் அடையாள அரசியலினால்தான்

 

 

On 2/3/2019 at 3:43 AM, மல்லிகை வாசம் said:

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது;  
ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️

 

கிருபன், மேலே நீங்கள் எழுதிய கருத்துகளையும், எனது தலைப்பான பதிவையும் மீண்டும் ஒரு முறை நன்கு வாசித்துப் பார்த்தால் நான் சொல்ல வந்த கருத்துக்கும், நீங்கள் கொடுத்த பதிலுக்குமான முரண்பாடு நன்கு புரியும். 😊

நீங்கள் குறிப்பிட்ட தேசிய, சர்வதேச அளவில் அல்லது இனம், மொழி, மதம், ஆண், பெண் என்ற பாரிய பாகுபாட்டின் அடிப்படையில் நான் எனது ஆரம்பப் பதிவை எழுதவில்லை. எனது பதிவின் நோக்கம் எவ்வாறு ஓர் தனி மனிதனானவன் தன்னுடன் உறவாடுவோரின் / தொடர்பாடுவோரின் அடையாளத்தை / தனித்துவத்தைப் நன்கு புரிந்துகொண்டு அவற்றை மதித்து நடப்பதன் மூலம் தான் தொழிற்படும் தளங்களாகிய குடும்பம், வேலைத்தளம், கல்விச்சாலை, வழிபாட்டு இடங்கள் ஏனைய சிறு சமூக அமைப்புகளில் (இது யாழ் இணையம் போன்ற சமூக மன்றங்கள் / வலைத்தளங்களுக்கும் பொருந்தும்!) நேர்மறையான நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் கோடிட்டுக் காட்டுவது தான்.

நீங்கள் குறிப்பிட்ட தேசிய, சர்வதேச, அரசியல், சமூக அளவிலான உலகப்பார்வை தேவையான ஒன்று என்பது மறுப்பதற்கு இல்லை. இந்த விடயங்களில் தேடலும், அறிவும் ஓர் தனி மனிதனுக்குத் தேவை தான். ஆனால் இந்த விவகாரங்களில் அவனது கட்டுப்பாடு (control) அல்லது செல்வாக்கு (influence) மிகக் குறைவாகவே இருக்கும். தனி ஒருவனின் சக்திக்கு மீறியது. ஆனால், நான் மேற்குறிப்பிட்ட அவன் தினமும் தொழிற்படும் தளங்களில் அவனால் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி-பிள்ளைகள் இடையான புரிந்துணர்வையோ அல்லது ஓர் வகுப்பறையில் ஆசிரியர்-மாணவன்-மாணவர்கள் இடையேயான புரிந்துணர்வையோ சொல்லலாம். இவ்வாறு இச்சிறு குழுக்களில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒருவரின் அடையாளத்தை, மற்றவர் புரிந்து நடப்பதால் ஏற்படும் நல்லிணக்கம் அல்லது இசைவு நிலை (harmony) மற்றய சிறு சிறு குழுக்களுக்கும் பரவ முடியும். இதை வலியுறுத்தவே இப்பதிவை எழுதினேன். என்ன காரணமோ தெரியவில்லை இந்தத்திரி சற்று வேறு திசையில் பயணித்துவிட்டது! 😃

Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

ஆகவே, பிறரின் அடையாளங்களை மதித்து அன்பைச் சொரிந்து மனிதர்கள் ஒற்றுமையாக வளங்களைப் பகிர்ந்து இப்பூமியில்  வாழலாம் என்பது கனவாகத்தான் இருக்கும்!

 

அந்த அளவுக்கு உயர்ந்த குறிக்கோள் எனக்கில்லை, கிருபன். 😁 

உலக அரசியல் அதற்கு இடம்கொடுக்காது. எனினும், அப்படி ஒரு கனவு கண்டு கனவோடு மட்டும் நின்றுவிடாது, மேலே கூறியபடி சிறு அளவிலேனும், நமது சக்திக்குட்பட்ட வகையில் சக மனிதரைப் புரிந்து மதித்துப் பழகினால் நமக்கு ஒரு குறையும் வரப்போவதில்லையே! தற்போது இருப்பதை விட சிறிய முன்னேற்றம் கண்டாலும் அது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான வெற்றி தானே! 😊

On 2/8/2019 at 9:46 AM, மல்லிகை வாசம் said:

இன்று நாமெல்லாம் பரந்து வாழும் பல்லின நாடுகளில் ஓர் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது என்றால் ஒரு சில அடையாளங்களாவது பரஸ்பரம் மதிக்கப்படுவதனால் தான். மீண்டும், இந்த அளவீடு இடத்துக்கு இடம் மாறுபடலாம். தனிமனிதரையோ, குழுவையோ பொறுத்தும் இது பற்றிய அனுபவம் மாறுபடும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, மல்லிகை வாசம் said:

இவ்வாறு இச்சிறு குழுக்களில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒருவரின் அடையாளத்தை, மற்றவர் புரிந்து நடப்பதால் ஏற்படும் நல்லிணக்கம் அல்லது இசைவு நிலை (harmony) மற்றய சிறு சிறு குழுக்களுக்கும் பரவ முடியும். இதை வலியுறுத்தவே இப்பதிவை எழுதினேன். என்ன காரணமோ தெரியவில்லை இந்தத்திரி சற்று வேறு திசையில் பயணித்துவிட்டது! 😃

இந்தப் பதிவை பல தடவைகள் வாசித்திருந்தேன். ஆனாலும் அடையாளம் என்பது மிகவும் சிக்கலான சொல். திரியை வேறு திசையில் நகர்த்த முனையவில்லை. எனக்கு அடையாளம் மேல் உள்ள பல குழப்பங்களை மாத்திரமே பதிந்தேன். அதில் அடையாள அரசியல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை!

தனித்துவமாக இருக்கும் ஒவ்வொருவரும் அடையாளங்களைப் பூணுவது ஏதோ ஒரு வகையில் பிற அடையாளங்களில் இருந்து வேறுபடுத்தவும், அடையாளங்களின் அடைப்படையில் ஒன்றிணையவும்தான். அடையாளங்களை மதித்து ஒன்றிணைந்து சமூகங்கள் வாழுகின்றன. ஆனால் அதே சமூகங்கள் பிரச்சினைகள் என்று வரும்போது இலகுவாக அடையாளங்களின் அடைப்படையில் பிரிந்து முரண்படுகின்றன. இப்படியான அடையாளச் சிக்கலில்தான் இருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

21 hours ago, கிருபன் said:

எனக்கு அடையாளம் மேல் உள்ள பல குழப்பங்களை மாத்திரமே பதிந்தேன். அதில் அடையாள அரசியல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை!

தனித்துவமாக இருக்கும் ஒவ்வொருவரும் அடையாளங்களைப் பூணுவது ஏதோ ஒரு வகையில் பிற அடையாளங்களில் இருந்து வேறுபடுத்தவும், அடையாளங்களின் அடைப்படையில் ஒன்றிணையவும்தான். அடையாளங்களை மதித்து ஒன்றிணைந்து சமூகங்கள் வாழுகின்றன. ஆனால் தே சமூகங்கள் பிரச்சினைகள் என்று வரும்போது இலகுவாக அடையாளங்களின் அடைப்படையில் பிரிந்து முரண்படுகின்றன. இப்படியான அடையாளச் சிக்கலில்தான் இருக்கின்றோம்.

இது தமிழர் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளில் 'அடையாளம்' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்பட்டதன் பாதிப்பாக இருக்கலாம், கிருபன்.

எனினும் தனிமனித அடையாளம் என்பது ஒருவரது தனித்துவத்தை (uniqueness / individuality / identity) குறிக்கும் சொல்லாகும். மேலும் அடையாளம் என்பது 'பூணப்படுவது அல்ல' - இயல்பாக அமைவது; அது மனிதனுக்கு பிறப்பிலேயே இயற்கையாக அமைந்த (nature) குணாதிசயங்கள் மற்றும் சூழலின் தாக்கத்தால் அவனில் ஏற்படும் 'இயல்பான' மாற்றங்களின் விளைவான ஓர் அம்சமாகும். 

பூணப்படுவது உண்மையான அடையாளம் அல்ல - அது முகமூடி - வேஷம் - போலி; பல அரசியல் தலைவர்கள் அல்லது இன்னும் பலர் தமது சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவது. ஆனால் இது ஓர் தனி மனிதனின் உண்மை இயல்பை சரியாக வெளிக்கொணர்ந்து காட்டாது.

சமூகப் பிரச்சினை என்று பல்வேறு வடிவங்களில் மனித குலம் பிளவுபட்டிருந்தாலும், தனிமனித அடையாளத்தை (தனதும், பிறரதும்) நன்கு புரிந்துணர்ந்த மனிதர்கள் சமுதாய வகுப்பை / குழுவைத் தாண்டி சக மனிதருடன் நல்லுறவைப் பேணலாம் என சாதாரணமாக நமது நாளாந்த வாழ்க்கையில் அனுபவரீதியாகக் காரணலாம். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

இது தமிழர் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளில் 'அடையாளம்' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்பட்டதன் பாதிப்பாக இருக்கலாம், கிருபன்.

எனினும் தனிமனித அடையாளம் என்பது ஒருவரது தனித்துவத்தை (uniqueness / individuality / identity) குறிக்கும் சொல்லாகும். மேலும் அடையாளம் என்பது 'பூணப்படுவது அல்ல' - இயல்பாக அமைவது; அது மனிதனுக்கு பிறப்பிலேயே இயற்கையாக அமைந்த (nature) குணாதிசயங்கள் மற்றும் சூழலின் தாக்கத்தால் அவனில் ஏற்படும் 'இயல்பான' மாற்றங்களின் விளைவான ஓர் அம்சமாகும். 

பூணப்படுவது உண்மையான அடையாளம் அல்ல - அது முகமூடி - வேஷம் - போலி; பல அரசியல் தலைவர்கள் அல்லது இன்னும் பலர் தமது சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவது. ஆனால் இது ஓர் தனி மனிதனின் உண்மை இயல்பை சரியாக வெளிக்கொணர்ந்து காட்டாது.

சமூகப் பிரச்சினை என்று பல்வேறு வடிவங்களில் மனித குலம் பிளவுபட்டிருந்தாலும், தனிமனித அடையாளத்தை (தனதும், பிறரதும்) நன்கு புரிந்துணர்ந்த மனிதர்கள் சமுதாய வகுப்பை / குழுவைத் தாண்டி சக மனிதருடன் நல்லுறவைப் பேணலாம் என சாதாரணமாக நமது நாளாந்த வாழ்க்கையில் அனுபவரீதியாகக் காரணலாம். 😊

அடையாளம் என்பது எளிமையான விடயம் அல்ல என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் இயற்கையான அடையாளம் என்று நீங்கள் குறிப்பிடுவது ஒவ்வொருவரின் குணாதிசயங்கள் என்றால் அது பிறப்பினலும் வாழும் சூழலினாலும் கட்டியமைக்கப்படுவது. வாழும் சூழல் என்று வரும்போது பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி ஒருவரின் morality ஐ செதுக்கும். அதுவும் நிலையானது அல்ல.

 

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

வாழும் சூழல் என்று வரும்போது பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தி ஒருவரின் morality ஐ செதுக்கும். அதுவும் நிலையானது அல்ல.

கண்டிப்பாக கிருபன். 😊 ஒரு தனிமனிதனின் அடையாளம் என்பது கால ஓட்டத்தில் பல்வேறு பரிணாமங்களில் மாறக்கூடியது தான்.  ஆகவே, தான் தொடர்பாடும் / உறவாடும் சக மனிதர்களில் மட்டுமல்ல தன்னிலும் ஏற்படும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு நடப்பவன் கூட்டுறவான, ஒத்திசைவான ஒரு சமூகம் ஒன்றின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறான் என்பது எனது கருத்து.

இருந்தாலும் கூட, அடையாளம் என்ற சொல் ஆன்மிகப் பார்வையில் மேலே புங்கையூரான் சொன்னது போல ஆழமான பொருளுடையது. 'நான் என்பது என் ஆத்மா' என்று முழுமையாகத் தெளிவு பெற்றவன் ஞானி ஆகிறான். அவன் சக மனிதர் மற்றும் அனைத்து உயிரினங்களில் தன்னைக் காண்கிறான். அவ்வாறு தெளிவு பெறாத நாம் உலக வாழ்வெனும் மாயையில் சிக்கிப் போராடுகிறோம், குழம்புகிறோம். நான் மேலே கூறிய மாற்றங்களை மேலும் புரிந்து கொண்டு, உலகியலில் செயற்பட இந்த ஆன்மிகப் பார்வையும் அவ்வப்போது கைகொடுக்கிறது. யோகா, தியானம் என்பவை சிறு உதாரணங்கள். 😊 ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி கிருபன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2019 at 3:43 AM, மல்லிகை வாசம் said:

 நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 

முற்றிலும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் உண்மை.

அடையாளம் என்பது தனித்துவமானது. அனேகமானவர்கள் தமக்கான அடையாளத்தை அறியாமலேயே வாழ்வை முடித்துவிடுவார்கள். ஒவ்வொரு பிறப்பிற்குள்ளும் அந்தப்பிறப்பிற்கான இரகசியம் ஒளிந்திருக்கிறது அவற்றைப் பற்றி ஆழமாக அறிய முற்படுவதில்லை. அறிந்து கொண்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்களாக திகழ முடியும். அடையாளத்தை அடையாளம் கண்டு கொள்வது எப்படி?

Link to comment
Share on other sites

5 hours ago, வல்வை சகாறா said:

அடையாளத்தை அடையாளம் கண்டு கொள்வது எப்படி?

மிக நல்ல, மிக முக்கியமான கேள்வி அக்கா. 😊

உங்களுக்கு இது பற்றிய விளக்கம் அதிகம் தேவையிராது என நினைக்கிறேன். உங்களதுப் பிடித்த 'ஆன்மாவுடன் பேசுதல்' என்பதே மிகச்சுருக்கமான ஆனால் நேரடியான பதிலாக இருக்கும்! 😊

எனினும் மற்றோருக்கும் புரியக்கூடியதாக இருக்கும் என்பதால் இது பற்றிய எனது பார்வையை இங்கு பதிய நினைக்கிறேன்:

நமது அடையாளத்தை / தனித்துவத்தை உணர்வதற்கு பல்வேறு தத்துவாசிரியர்களும், ஞானிகளும், ஆன்மீக நெறியாளர்ளும் பல்வேறு நெறிமுறைகளையும், விளக்கங்களையும் தந்து சென்றுள்ளனர். இவை மதங்கள், ஆன்மீக இயக்கங்கள், தத்துவ சமூகங்கள் மூலமாகக் காலம் காலமாக உலகெங்கும் வாழும் சாமானிய மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது / சொல்லப்படுகிறது. 

கடல் போன்ற விசாலமான இந்த விடயங்களின் சாராம்சம் 'உன்னை அறி' என்பது இற்றை வரை எனக்குள்ள புரிதல். பல்வேறு மதங்கள் பற்றிய விமர்சனங்கள் இருப்பினும் , மதங்களிலுள்ள நல்ல அம்சங்களாக இருப்பவை என்னவென்று பார்த்தால் 'நம்மை அறியும்' வழிமுறைகளை சடங்குகள், பிரார்த்தனைகள், விரதங்கள் மூலமாக மறைமுகமாக நம் நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்கச் செய்தமை தான். மனச் சுத்தியுடன் விரதமிருந்து பிரார்த்தனை செய்யும் போது நமக்கு ஏற்படும் ஓர் தெய்வீக உணர்வு ஓர் சிறு உதாரணமாகும். எனினும் முறையற்ற, போலியான சில சடங்குகளால் தான் மதங்கள் மீதான விமர்சனம் எழுகிறது. இவற்றுக்கான காரணம் ஓர் மதம் தூய்மையான நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டாலும், காலம் காலமாக உள்வாங்கப்பட்ட குப்பைகளாகும். எனவே இந்தக் குப்பைகளை மட்டும் விலக்கி நல்ல விடயங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடிப்பது நமது அடையாளத்தை அறிய ஓர் வழியாக அமையும்.

அப்போ மத நம்பிக்கை இல்லாதோர் என்ன பண்ண? மதத்துக்கான மாற்று வழிகள் தான் தத்துவ சமூகங்கள், ஆன்மீக இயக்கங்கள் காட்டும் மார்க்கமாகும். எனினும், மதங்கள் போல் இவற்றின் மீதும் விமர்சனங்கள் உண்டு. எனவே இங்கும் நாம் சரியான நெறிமுறைகளை ஆராய்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

உண்மையில் மேற்கூறிய எல்லா நெறிகளும், இயக்கங்களும் நம்மை நாமே உணர வழிகாட்டிகளாக இருக்கின்றன. விவேகானந்த சுவாமிகள் சொன்னது போல் "நதிகள் வேறு, ஆனால் அவை சென்று கலக்கும் சமுத்திரம் ஒன்றே". என்னைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பதே எல்லா மதங்களின் அடிப்படையாகும். ஆன்மீகம் + கலாச்சாரம் = மதம். எனவே வெவ்வேறு கலாச்சாரங்களில் ஆன்மீக நெறி வெவ்வேறு மதங்களாக உருவெடுத்துள்ளது என்பது எனது கருத்து.

இந்த நெறிமுறைகள் ஆரம்பநிலையில் தன்னை அறிய முனைவோருக்குக் கைகொடுக்கலாம். எனினும் அனுபவம் அதிகமாக சுய விசாரணை செய்து நாமாகவே நமக்குள்ளேயே அந்தத் தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது சான்றோர் வாக்கு. தினமும் தியானம், பிரார்த்தனை, சுய விசாரணை இவற்றிற்குச் சிறிது நேரமாவது ஒதுக்குதல் நமது அடையாளம் பற்றிய தெளிவைத் தரும். அத்துடன் மேற்கூறிய ஏதாவது ஒரு நெறிமுறையும் கைகொடுக்கும். 

ஆக்கபூர்வமான பங்களிப்புக்கு நன்றி சகாறா அக்கா. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் வாசிக்கவும் களைக்குதே மல்லிகைவாசம்.

எல்லோருக்கும் அடையாளம் உண்டுதான் எனினும் எல்லோரும் ஆன்மீகத்தில் பற்றுக்கொண்டு தம் அடையாளங்களை அறிய முயன்றால் .., அது இயல்பு வாழ்வை ஏற்றுக்கொள்ளுமா????

சக மனிதரை மதிக்கத் தெரிந்தாலே போதுமே அதைவிட்டு சக மனிதரின் அடையாளத்தை அறிந்து அதன்பின் அவரை மதிப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாததே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 27 APR, 2024 | 01:12 AM   (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியின் உண்மை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராமல் இருப்பது கவலைக்குரியது.  பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள்.ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு  குற்றப்புலனாய்வு  திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் யுடியுப் வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார்.இந்த தாக்குதலின் பின்னணியில்  இந்திய பிரதமரின்  பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்க போவதில்லை என்று உத்வேகமாக உரையாற்றினார்.அக்காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டது.இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெறுமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றார்.தேர்தலில் வெற்றிப்பெற்ற கோட்டபய ராஜபக்ஷவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இந்திய தேர்தலில் தான் மாற்றம் ஏற்படுத்தியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கத்தோலிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். பயங்கரவாதி சஹ்ரான் சுதேசிய முஸ்லிம்களின் பாரம்பரிய மத நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டான். 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சுதேசிய முஸ்லிம்களின் 117 குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டன.காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில்  சுதேசிய முஸ்லிம்கள் அப்போதைய அரசாங்கத்திடமும்,பாதுகாப்பு தரப்பினரிடமும் முறைப்பாடளித்தார்கள்.ஆனால் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள்.அதனை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது.இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலாக உச்சமடைந்தது.ஆகவே சமூக கட்டமைப்பில் மறைந்துள்ள அடிப்படைவாதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/182060
    • மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள் பட மூலாதாரம்,KERALATOURISM படக்குறிப்பு,இடுக்கி ராமக்கல்மேடு 10 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் கள்ளழகர் திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற கலாசார நிகழ்வுகளுக்கும் பெயர் போனது. இவைதவிர பல சுற்றுலா தலங்களும் குறிப்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இங்குள்ளன. குறிப்பாக, மதுரைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள் உள்ளன. தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அப்படி, இந்த கோடைக்காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள சில இயற்கை சூழல் நிறைந்த இடங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களையும் இங்கு அறியலாம். இடுக்கி ராமக்கல்மேடு ‘டைட்டானிக்' புகழ் ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகேப்ரியோ, தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இடம் என ராமக்கல்மேட்டைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். பசுமையான மலைகள், குளிர்ச்சியான மலைக்காற்று இரண்டும் ராமக்கல்மேட்டுக்கு செல்பவர்களை மயக்கிவிடும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமக்கல்மேடு, தேக்கடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ராமக்கல்மேடு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வீசும் இதமான காற்றுக்கு ராமக்கல்மேடு மிகவும் புகழ்பெற்றது. ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் பகுதிகளுள் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பழங்குடியின தம்பதியான குருவன்-குருவாட்டியின் மிக உயர்ந்த சிலைதான் இங்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்று. கேரளாவில் உள்ள மிக உயர்ந்த சிலைகளுள் இதுவும் ஒன்று. ஹைக்கிங், பாரா கிளைடிங் போன்றவற்றை இங்கு மேற்கொள்ளலாம். ‘தமிழ்நாடு வியூ பாயிண்ட்', ‘ஆமைப் பாறை வியூ பாயிண்ட்’ போன்ற இடங்களுக்கும் இங்கு செல்லலாம். இடுக்கியின் நெடுங்கண்டம் எனும் இடத்திலிருந்து சுமார் 12.4 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நெடுங்கண்டத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.   திண்டுக்கல் மலைக்கோட்டை பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,திண்டுக்கல் மலைக்கோட்டை மலைக்கோட்டை என்றாலே திருச்சிதான் உடனே நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் பகுதியிலும் மலைக்கோட்டை உள்ளது. வரலாற்று ரீதியாக பல முக்கியத்துவம் இந்த இடத்திற்கு உண்டு. மதுரை நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பின்னர் விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர்கள் உட்படப் பல ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. சுமார் 280 அடி (85 மீட்டர்) உயரமுள்ள பாறையில் அமைந்துள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையின் கட்டடக்கலை உண்மையிலேயே நம்மைப் பிரம்மிக்க வைக்கும். இது பண்டைய இந்திய கல்வெட்டு கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கோட்டை வளாகத்தில் கோவில், தானியக் கிடங்கு, தண்ணீர் தொட்டி உட்படப் பல கட்டமைப்புகள் உள்ளன. இவை அனைத்தும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு மத முக்கியத்துவம் வாய்ந்த பல பழமையான கோவில்களும் உள்ளன. கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தில் நாட்டம் உள்ளவர்கள் செல்லலாம். 350 படிகள் ஏறி மேலே சென்ற பிறகு, பார்வையாளர்கள் அழகான காட்சியை அனுபவிக்க முடியும்.   கும்பக்கரை அருவி பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,கும்பக்கரை அருவி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகான கும்பக்கரை அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கோடை நாட்களில் தண்ணீரின் அடர்த்தி குறைவாகவும், குளிர்கால நாட்களில் அதிகமாகவும் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து இதற்கு நீராதாரம் கிடைக்கிறது. எனினும், கும்பக்கரை நீர்வீழ்ச்சி ஆபத்தானது என்பதால், மிகவும் பாதுகாப்பாகவே இங்கு குளிக்கச் செல்ல வேண்டும். கும்பக்கரை அருவிக்குச் சென்றால் அதன் அருகிலுள்ள சுருளி அருவிக்கும் செல்லலாம். சுற்றுலாத் தலமாக விளங்கும் இன்றைய கும்பக்கரை, ஒரு காலத்தில் அருவிகள் நிறைந்த காடாகவே இருந்தது. அந்தக் காலத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த வசதியான தொழிலதிபர் கே.செல்லம் ஐயர் கும்பக்கரை நீர்வீழ்ச்சியை குற்றாலத்தைப் போலவே மற்றொரு சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்பி,1942ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று அந்தப் பகுதியில் தனது சொந்த செலவில் ஆடை அறைகள், படிக்கட்டுகள் மற்றும் குளியலறைகளைக் கட்டியதாக, கும்பக்கரை அருவியில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.   தேனி மேகமலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேனி மேகமலை தேனி மாவட்டத்தின் மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ள மேகமலை, மேகங்களுக்கு நடுவே அமைந்துள்ளது போன்றே இருக்கும். 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மேகமலையை அடையும்போது அதற்கு இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தம் என்பது உங்களுக்கே புரியும். தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைத் தொடர்கள் என மேகமலை உண்மையில் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. மேகமலை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சிகள், அணைகள், மகாராஜா மெட்டு ‘வியூ பாயிண்ட்', தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், வெள்ளிமலை ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்கள். யானை, புள்ளிமான் போன்ற காட்டுயிர்களையும் நீங்கள் இங்கு காணலாம். கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெள்ளி மலைக்குச் செல்லுங்கள். வெள்ளி மலை என்பது, மேகமலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மதுரை யானைமலை பெயருக்கு ஏற்றாற்போல் இந்த மலை பார்ப்பதற்கு யானை உருவில் இருக்கும். விமானத்திலிருந்தோ, வெகு தூரத்திலிருந்தோ பார்த்தால், ஒரு யானை காலை மடக்கிக்கொண்டு படுத்திருப்பது போன்று இருக்கும். இந்த மலையில் சமண படுகைகளும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மதுரை மாநகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையை ஒட்டி, இந்த யானை மலை அமைந்துள்ளது. சுமார் 4 கி.மீ. நீளம் கொண்ட இந்த மலை, சுமார் 1,200 மீட்டர் அகலம் உடையது. பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. யானை மலையில் ஏறுவது சற்று சிரமம் என்பதால், கவனத்துடன் செல்ல வேண்டும். இது, இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. சமணர் மலைகள் பட மூலாதாரம்,TAMILNADUTOURISM மதுரையில் உள்ள சமணர் மலைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலை என அழைக்கப்படும் இந்த சமணர் மலை மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மலைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. கோமதேஸ்வரர், மகாவீரர், யக்ஷி மற்றும் யக்ஷா ஆகியோரின் சிற்பங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செட்டிபொடவு தளம் மற்றும் பேச்சிப்பள்ளம் தளம் ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்கள். செட்டிப்பொடவு தளத்தில் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் உருவம் உள்ளது. சமண துறவிகள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திய தட்டையான கற்கள் அல்லது கல் படுக்கைகளையும் இங்கு காணலாம். பேச்சிப்பள்ளத்தில் பாகுபலி, மஹாவீர் மற்றும் பார்ஸ்வநாதர் உள்ளிட்ட எட்டு சமண சிற்பங்கள் அரிய சின்னங்களுடன் உள்ளன. இந்த தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கிமு 9ஆம் நூற்றாண்டில் சமண துறவிகளால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் 200 ஆண்டுகளுக்கும் மேலானவை என நம்பப்படுகிறது. சமணர் மலையில் உள்ள தொல்பொருள் ஆய்வுகள் மலையின் மேல் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறுகின்றன. இந்த இடத்தின் அமைதியான சூழல் மலைகளின் அடிவாரத்தில் உள்ள தாமரைக் குளத்தால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2x075gy0eo
    • 26 APR, 2024 | 09:33 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் உதவித்தொகை கொடுப்பனவு  5000 ரூபாவிலிருந்து  7500 ரூபா  வரை அதிகரிக்கப்பட்டாலும் அவை குறித்த திகதிகளில் கிடைப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாக்காமல் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை 1988/27இன் பிரகாரம், அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கும்போது மாற்றுத் திறனாளிக்கு 3 வீத  வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என இருந்தாலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டாலும் இதுவரை அது கொண்டுவரப்படவில்லை. குறித்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் என்ன? சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், இந்நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.  இவர்களது உரிமைகள் தொடர்பில் பல முறை கேள்வியெழுப்பியுள்ளேன். சைகை மொழி சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதை நாட்டின் சட்டமாக மாற்றுங்கள். பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரவேச  அணுகல் விடயத்தில் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற்  வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கான தீர்வுகளை வழங்குங்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் காப்புறுதி குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/182038
    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.