Jump to content

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியும் மதமும்


Recommended Posts

Bildet kan inneholde: sky, himmel, hav, vann, utendørs og natur

இந்த பாழாய் போன போரிலே எந்த சண்டையும் நடைபெறாமல் 29 வருடமாக (அதிகமான வருடங்கள்) இடம்பெயர்ந்தது காங்கேசன்துறை மக்களே. இங்கு பல்லின, பல்மத பலசாதி மக்கள் ஒன்றாய் கூடி வாழ்ந்த காலமும் ஒன்றிருந்தது. அன்று யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையாகவும் பருத்தித்துறை, காங்கேசன்துறை நகர சபையாவும் கொடிகட்டிப்பறந்தன. எனது வீட்டை சுற்றி இருந்தவர்கள் வேறு ஜாதியினர், வேறு மதத்தவர், வேறு இனத்தவர் +வேறு மொழி பேசுபவர்கள்  - ஆனால் எங்களுக்குள் வேறுபாடு இருந்ததில்லை. இது காங்கேசன்துறை பற்றிய ஒரு அறிமுகம் மட்டுமே.

ஆனால் முப்பது வருடங்களின் பின்னான மாற்றம் - தொடரும்.

Bildet kan inneholde: sky, hav, himmel, skumring, utendørs, vann og natur

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் ஜீவன் ......!   😁

Link to comment
Share on other sites

அன்றொருநாள் காங்கேசன்துறையில் சில இடங்கள் விடுவிக்கப்பட்டிருந்தன. ஓடிச்சென்று பார்த்த ஆயிரக்கணக்கானோர்களில் நானும் ஒருவன். ஆனால் ஒரு காட்டைத்தான் பாக்க முடிந்தது. அதற்குள் மிளிர்ந்தது நடேஸ்வரா கல்லூரி. இராணுவம் குடியிருந்ததால் சேதம் குறைவு. ஆனாலும் பல கட்டிடங்களைக் காணவில்லை. இன்றும் பழைய Home science labதான் பொலிஸாரின் உணவுக்கூடம். 2000 மாணவர்கள் படித்த ஒரு பாடசாலை, எனது வயதினை ஒத்த 5 நண்பர்கள் அங்கிருந்து பொறியியலாளருக்கு தெரிவாகி பெரதேனியாவில் படித்திருந்தார்கள். அதில் இருவர் இன்று புகழ் பெற்ற மேலைத்தேய பல்கலை கழகங்களில் பேராசிரியர்கள். நான் அங்கு படிக்கவில்லையாயினும். எனது வீட்டிற்கு அருகில் உள்ள கல்லூரி என்பதினால் நான் படித்த பாடசாலைகளைவிட இங்கிருந்துதான் எனக்கு அதிக நண்பர்கள் கிடைத்தார்கள். 

நடந்ததை மறந்து குண்டு சட்டிக்குள் இன்னமும் புலியை ஓட்டலாம் என்றால், அதற்குத்தான் யாழ்களம் என்றால் - நீங்களே உங்களுக்குள் ஓட்டுங்கள்.

முற்றும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா, என்ன ஆயிற்று? ஆரம்பித்து 4 மணி நேரத்திலேயே முடித்து விட்டீர்களே? மதம், இனம் பற்றி எழுதும் விடயங்கள் கள விதிகளை மீறாமலிருக்க கொஞ்சம் நூல் மேல் நடப்பது போல் எழுத வேண்டியிருக்கும். கல்லூரியை நீக்கி விட்டு காங்கேசன் துறைபற்றித் தொடருங்களேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா எழுத ஆரம்பித்ததை எழுதி முடியுங்கள் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் ஒவ்வொருவருடைய பார்வையும் வித்தியாசமானது. நீங்கள் உங்கள் பார்வையைப்பதிவு செய்கிறீர்கள். அதிலேன் தயக்கம்? அவரவர்களுக்கு தத்தம் பார்வை மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயே கருத்துகளைப்பதிவிடுகிறார்கள். கருத்தாடல் களம் எல்லோருக்குமானது. உங்கள் நம்பிக்கைகள் உங்கள் பார்வைகள் என்பனவற்றை யாராலும் மறுதலிக்கமுடியாது ஏனெனில் அது உங்கள் சுயமான பார்வை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன் துறைக்கு சென்ற ரயின் பாதியில் நின்றால்போல இருக்கு பயணம் செல்லட்டும் பந்தியாக ஜீவன் அண்ண:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரை மட்டுமல்ல உங்களது புகைப்படங்கள் மிகவும் சிறப்பானவை வந்து அவைகளைத் தொடருங்கள்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் எங்கும் ஓடமாடடார். வருவார். எங்காவது உதவி தேவைப்பட்டிருக்கும்... போட் டது போட்ட படியே விட்டுடு ஓடியிருப்பார் மனிதர். 

அவர் ஒரு வித்தியாசமான மனிதர். என்ன, கொஞ்சம் கொதியர்... ஆனால் பழகுவதுக்கு இனியவர். இங்கே நாம் நகைச்சுவையாக பார்க்கும் விடயங்களை, ஏன் அவர் மிகவும் சீரியஸ் ஆக அணுகுகிறார் என சில வேளைகளில் யோசிப்பேன். இருந்தாலும், கோபம் என்னுடன் கூடப் பிறந்தது என்று சொல்லும் நேர்மை அவருக்கு இருந்தது.

அவர் செய்யும் சமூகம் சார்ந்த வேலைகள் நம்மால் செய்ய இயலாது. அடுத்த முறை யாழ்ப்பாணம் போகும் போது, அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளேன்.

வேலைகள் முடிந்ததும், வாருங்கள் ஜீவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2019 at 1:25 AM, ஜீவன் சிவா said:

நடந்ததை மறந்து குண்டு சட்டிக்குள் இன்னமும் புலியை ஓட்டலாம் என்றால், அதற்குத்தான் யாழ்களம் என்றால் - நீங்களே உங்களுக்குள் ஓட்டுங்கள்.

முற்றும் 

இதென்ன ஜீவனண்ணா 30 ஆண்டுகால த.வி.பு வின் போராட்ட வரலாறை 10 ஆண்டுகளில் மறக்க முடியுமா?
கொஞ்ச காலம் செல்லும்தானே!
எனது கருத்து த.வி.பு நிறைய தவறுகள் விடுதலை போராட்டத்தின் பெயரால் செய்திருக்கலாம், அதனாலேயே அவர்களுடைய போராட்டம் தவறானது என்று அர்த்தமாகாது.
அந்தந்த அமைப்பின் ஆதரவாளர்கள் தாம் சார்ந்த அமைப்பை உயர்த்தி பிடிப்பது வழமை தானே! 
ஒப்பீட்டளவில் பெரும்பான்மை தமிழ் சமூகம் அவர்கள் பின்னால் இருந்ததை மறந்துவிடலாகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் உங்கள் தனிப்பட்ட பார்வை மனவோட்டம் சிந்தனை அனைத்தும் உங்களுக்குச் சொந்தமானது. அதை வெளிப்படுத்த தயக்கமேன்? அவரவர் பார்வை அவரவர்க்கு சொந்தமானதுதொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2019 at 2:55 PM, ஜீவன் சிவா said:

நடந்ததை மறந்து குண்டு சட்டிக்குள் இன்னமும் புலியை ஓட்டலாம் என்றால், அதற்குத்தான் யாழ்களம் என்றால் - நீங்களே உங்களுக்குள் ஓட்டுங்கள்.

 

இல்லாத புலியை இந்திய இலங்கை அரசியல்வாதிகளில் இருந்து இராணுவம் பொதுமகன் என்று வேறுபாடல்லாமல் தேவைப்படுகிறது.நீங்ளென்ன விதிவிலக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

இல்லாத புலியை இந்திய இலங்கை அரசியல்வாதிகளில் இருந்து இராணுவம் பொதுமகன் என்று வேறுபாடல்லாமல் தேவைப்படுகிறது.நீங்ளென்ன விதிவிலக்கா?

வணக்கம் ஈழப்பிரியன்!  இரண்டு வரிகளுக்கு மேற்படாமல் நல்லதொரு கருத்தை சொல்லியுள்ளீர்கள். 👍

Link to comment
Share on other sites

On 3/2/2019 at 5:46 AM, வல்வை சகாறா said:

ஜீவன் சிவா எழுத ஆரம்பித்ததை எழுதி முடியுங்கள் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் ஒவ்வொருவருடைய பார்வையும் வித்தியாசமானது. நீங்கள் உங்கள் பார்வையைப்பதிவு செய்கிறீர்கள். அதிலேன் தயக்கம்? அவரவர்களுக்கு தத்தம் பார்வை மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயே கருத்துகளைப்பதிவிடுகிறார்கள். கருத்தாடல் களம் எல்லோருக்குமானது. உங்கள் நம்பிக்கைகள் உங்கள் பார்வைகள் என்பனவற்றை யாராலும் மறுதலிக்கமுடியாது ஏனெனில் அது உங்கள் சுயமான பார்வை

எனது கருத்து புலிகளுக்கு எதிரானதாக இருக்கும்போது கேட்டு கேள்வியின்று மட்டுநிறுத்தினரால் தூக்கப்படும்போது இதே கேள்வியை நிர்வாகத்திடம் அல்லது சக உறுப்பினரிடம் கேட்டிருந்தால் தொடர்ந்திருப்பேன்.

பழைய பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

எனது கருத்து புலிகளுக்கு எதிரானதாக இருக்கும்போது கேட்டு கேள்வியின்று மட்டுநிறுத்தினரால் தூக்கப்படும்போது இதே கேள்வியை நிர்வாகத்திடம் அல்லது சக உறுப்பினரிடம் கேட்டிருந்தால் தொடர்ந்திருப்பேன்.

பழைய பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு 😀

சகாராவுக்குத் தெரிந்திருக்காது இதெல்லாம்! எல்லாரும் எல்லாத் திரிகளையும் பார்ப்பதில்லையே?

ஆனால், தகவல்கள், தரவுகள் அடிப்படையில் தங்கள் கருத்துகளை உருவாக்காதோர் சிலரால் எல்லோருக்கும் பிரச்சினை தான்! என்ன செய்வது? அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முதுகைச் சொறிந்து சுகம் காணட்டும்! நீங்கள் தொடருங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சகாராவுக்குத் தெரிந்திருக்காது இதெல்லாம்! எல்லாரும் எல்லாத் திரிகளையும் பார்ப்பதில்லையே?

ஆனால், தகவல்கள், தரவுகள் அடிப்படையில் தங்கள் கருத்துகளை உருவாக்காதோர் சிலரால் எல்லோருக்கும் பிரச்சினை தான்! என்ன செய்வது? அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முதுகைச் சொறிந்து சுகம் காணட்டும்! நீங்கள் தொடருங்கள்! 

அவர் இன்னமும் எழுதவே இல்லை 
எந்த அடிப்படையில் அவர் தகவல்கள் தரவுகள் அடிப்படையில்தான் எழுதுகிறார் 
என்பது உங்களுக்கு தெரியும்? 
ஒருவரை எழுத உற்சாக படுத்துவது பாராட்டுக்கு உரியது 
திரிக்கு திரி ஓர் சர்ச்சையை எதோ ஒரு மமதையில் நீங்கள் தொடர்கிறீர்கள் 
எல்லா விசைக்கும் ஓர் எதிர்விசை உண்டு 

இன்னொரு திரியில் நீங்கள் எனக்கு எழுதிய பதிலுக்கு 
இன்னமும் நான் விளக்கம் எழுதவில்லை ... பதிலுக்கு நன்றி 
இன்னொரு மேஜரில் ஒரு டிகிரி முடிக்கலாம் என்பதால் 
மீண்டும் கல்லூரி போய்க்கொண்டு இருக்கிறேன் .... நேரம் இல்லை 
இரண்டு வேலை  கல்லூரி வீட்டு பாடம் என்று ஓடி திரிவதால் யாழில் எழுத முடியவில்லை 
நேரம் இருக்கும் பொது பதில் எழுதுகிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.