Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டு வெடிப்பு: இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, என முதற் கட்ட தகவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

st.sebastian-720x450.jpg

குண்டு வெடிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களின் முதற்கட்ட விசாரணைகளின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பிலுள்ள ; ஷங்ரி-லா ஹேட்டலில் நேற்று 2 பேர் 616 ஆவது இலக்க அறையில்
தங்கியுள்ளனர்.
 
அதேநேரம், குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில்இந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். குறித் விடயம் அங்கிருந்த கண்காணிப்பு காணொளிப் பதிவிலிருந்து தெரிய வந்துள்ளது.
 
இந்த குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
 
எனினும் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தங்கியிருந்த அறையை உடைத்து பொலிஸ் அதிகாரிகள்; சோதனையிட்டு அங்கிருந்து சில வெடி பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
 
அந்தவகையில், தற்கொலைக் குண்டுதாரிகள் உள்நாட்டவர்களா வெளிநாட்டவர்களா என்பது உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Replies 63
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

arrest-1.jpg

குண்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வான் சாரதி வெள்ளவத்தையில் அதிரடியாக கைது

கொழும்பில் வெடிப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வான் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வானின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/குண்டுகளை-கொண்டு-செல்வதற/

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வெடிப்புகள் சம்பந்தமாக கிடைத்த தகவ‌ல் ஒன்றை அடுத்து தெமட்டகொடைப் பிரதேசத்தில் இருந்த ஒரு மூன்று மாடிக் கட்டடத்தை சிறீ லங்காப் படையினர் சோதனையிட முற்பட்ட வேளை அங்கிருந்த குண்டு ஒன்று வெடித்துள்ளமையை அடுத்து சந்தேகத்தின் பேரில் அக்கட்டிடம் சுற்றி வளைக்கப்பட்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 சந்தேக நபர்கள் உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும், 3 பேர் சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு இந்தக் கட்டிடமே கட்டளை பீடமாகவும், மத்திய நிலையமாகவும் விளங்கியிருக்கலாம் எனப் பாதுகாப்புத் தரப்பு சந்தேகிக்கிறது.

தற்போது மேலும் பலர் இக்கட்டிடத்தினுள் பதுங்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் கட்டடத்துக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு சிறீ லங்கா விமானப்படை, இராணுவம், பொலீஸார் இணைந்து விஷேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி.
‍‍ரூபவாஹினி நேரடிச் செய்திகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கேட்டிருக்கிறார் இப்படி "நியூசிலாந்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒட்டாவாவில் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. ஏன் சிறிலங்காவுக்கு இல்லை என""

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nunavilan said:

ஒருவர் கேட்டிருக்கிறார் இப்படி "நியூசிலாந்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒட்டாவாவில் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. ஏன் சிறிலங்காவுக்கு இல்லை என""

நுணாவிலான்..... கொல்லப் பட்டதில், பெரும்பாலானோர் தமிழர் என்பதால்...
அவர்களுக்கு... நியூசிலாந்து மாதிரி, ராஜ மரியாதை எல்லாம், ஸ்ரீலங்காவில்   கிடைக்காது என்று சொல்லுங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

நுணாவிலான்..... கொல்லப் பட்டதில், பெரும்பாலானோர் தமிழர் என்பதால்...
அவர்களுக்கு... நியூசிலாந்து மாதிரி, ராஜ மரியாதை எல்லாம், ஸ்ரீலங்காவில்   கிடைக்காது என்று சொல்லுங்கள்.  

நியூசிலாந்தில் கொல்லப்பட்ட மக்கள் நியூசிலாந்தின் மக்கள். எங்கள் நாட்டில் கொல்லப்பட்ட மக்கள் சிறீலங்கரா, அல்லது இலங்கையரா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

St.sebastian-church-3-1-720x450.jpg

குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என்பவரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றினை பயன்படுத்தியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர், இன்று காலை ஆராதனை நடப்பதற்கு முன்னதாக பையொன்றை சுமந்துகொண்டு தேவாலயம் அருகில் நடமாடியுள்ளார். இதனை அவதானித்த ஆலயத்தின் குருமார் அவரை உள்ளே வருமாறு அழைத்துள்ளனர். அதனை மறுத்த அவர் வெளியே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், வெளியே வர மறுத்த அவர் பின்னர் சென்று தேவாலயத்தை நோட்டம் விட்டதாக அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் வெளியே சென்ற அந்த நபர், அங்குள்ள கடையொன்றிலிருந்து தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல இடங்களில் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 207 பேர் உயிரிழந்த நிலையில் 450இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/குண்டுவெடிப்பு-சூத்திரத/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

attack-kottava.jpg

தௌஹீத் ஜமாத் அமைப்பு பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

மொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு இலங்கையில் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்த தாக்குதல் திட்டம் குறித்து முன்கூட்டியே புலனாய்வு பிரிவு அறிவுறுத்தி இருந்தது என்ற தகவலை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த அச்சுறுத்தல் குறித்த ஆவணங்கள் உண்மை என அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்தோடு தாக்குதல் நடத்தப்படலாமென புலனாய்வு அதிகாரிகளால் தனது தந்தையார் அறிந்து கொண்டதாகவும் அமைச்சர் ஹரீன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஹரீனின் இந்த தகவல்கள் கொழும்பு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை புறக்கணித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தௌஹீத்-ஜமாத்-அமைப்பு-பல-த/

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தீவிரவாதி...மைத்திரியின்..வால்  கிழக்கின் புல்லா...இவர்தான் காத்தான்குடியில் புல்லுப்போட்டு...புண்ணாக்கு வைத்து வளர்க்கிறர்....மற்ற  ஒருவரின்..சத்ததை (மன்னார் மன்னன்)  காணவில்லை...அவர் நிச்சயம் முல்லைத்தீவு...கிளிநொச்சி ,யாழ்ப்பாணத்தை குறிவைத்து வளர்த்து வருவார்....விரைவில் ..

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான மட்டக்களப்பு தேவாலய அனர்த்தம் தொடர்பில் இதுவரை இந்த ஆளுனர் புல்லா வாயே திறக்கவில்லை. காத்தான்குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளியில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நந்தி said:

கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான மட்டக்களப்பு தேவாலய அனர்த்தம் தொடர்பில் இதுவரை இந்த ஆளுனர் புல்லா வாயே திறக்கவில்லை. காத்தான்குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளியில் வரும்.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

இருக்கலாம் மேலைநாட்டு கிறிஸ்தவர்கள் 
பல மத்திய கிழக்கு நாடுகள் மீது போர்தொடுத்து 
லட்ஷ கணக்கில் மக்களை கொன்று வருகிறார்கள் 
அவ்வப்போது பல அப்பவாவிகளை கொன்று தமது 
மீடியாக்களின் உதவியுடன் பழிகளை வேறு நபர்கள் மீதும் போட்டு விடுவார்கள்.

பள்ளிவாசலில் இறந்தவர்கள் ஆத்திரத்தில் உண்மையை மறந்து இருக்கலாம் 
இப்போ ஆதாரங்கள் மூலம் உண்மையான கொலையாளிகளை கண்டுவிடார்கள் 
என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உண்மை இறைவனுக்கே வெளிச்சம். 
 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

இன்னும் காத்தான்குடி படுகொலையோடு கட்டிக்கொண்டு கிடக்க வேண்டியான். எங்கள் மக்களை மாமாங்கத்தில் இருந்து.. திருக்கேதீஸ்வரம் வரை விரட்டினானுகள்.. கொன்று குவித்திட்டானுகள்... இப்ப தேவாலாயம் மீதான தாக்குதல் பழிவாங்கல் என்று காட்ட நினைக்கும் உங்களின் ஈனப்புத்தி.. எவருக்கும் வராது. 

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மிகவும் சக்தி வாய்ந்த நவீன தொழில்நுட்பத்திற்குரியது , உதாரணமாக இந்த வகை குண்டுகளை வெடிக்கப்பயன்படுத்தப்படும் ஊக்கி கூட ஒரு வெடிகுண்டிற்குரிய சேதத்தை விளைவிக்கக்கூடியது , பல சந்தர்ப்பங்களில் வெறும் ஊக்கி மட்டும் வெடித்து குண்டு வெடிக்காது விட்டிருக்கிறது , இக்குண்டை இணப்பதற்கு நன்றாக பயிர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் பல இடத்தைல் சமகாலத்தில் ஒரு தொடர் தாக்குதலை நடத்தக்கூடிய மிகப்பெரிய வலைப்பின்னல் இருத்தல் வேண்டும் இவ்வளவு ஆட்பலமும் நன்றாக ஒருங்கிணைப்புத்திறனுடன்  அமைப்பு ரீதியாக இந்த தாக்குதலை முஸ்லீம் குழுவால் செய்திருக்கமுடியுமா? அதுவும் இலங்கை புலனாய்வு அமைப்பு அறியாமல் அதுவும் தலைநகரிலேயே முஸ்லீம் குழுவால் செய்திருக்க சாத்தியமேயில்லை ,இதுவரை காலமும் இப்படியான மிகப்பேருந்தாக்குதல் இலங்கை வரலாற்றில் எந்த குழுவாலும் நிகழ்த்த முடியவில்லை , இலங்கை ஆளும் சக்திகள் எப்படி திருனெல்வேலி தாக்குதலுக்கு முன்னரேயே தமிழ் மக்களுக்கெதிராக 1983 இல் இறுதி தீர்வுநடவடிக்கை எனும் பெயரில் தமிழ் மக்களுக்கெதிராக இனப்படுகொலை திட்டமிடல்நடவடிக்கை மேற்கொனண்டார்களோ அது போல் இதுவும் அப்பாவி முஸ்லீம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் திட்டம்

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

Navaly Church Memorial.jpg

The Navaly Church bombing was the bombing of the Church of Saint Peter and Saint Paul in Navaly (or Navali) in the Jaffna peninsula by the Sri Lankan Air Force during the Sri Lankan Civil War. It is estimated that at least 125 civilians, who had taken refuge from the fighting inside the church, died as a result of this incident. The victims included men, women and children.[1][2]

https://en.wikipedia.org/wiki/Navaly_church_bombing

இப்படியான தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எப்போதும் இலங்கைத் தீவில் தண்டிக்கப்பட்டது கிடையாது.

நவாலி தேவாலயம்.. யாழ் பெரிய தேவாலயம்.. மடு தேவாலயம் எல்லாமே.. சிங்கள இனவெறிப்படைகளின் நேரடி இலக்காகவும் மக்களை பலியெடுக்கும் இடமாகும் இருந்துள்ளமை கடந்த கால வரலாறு. அந்த தாக்குதல் சூத்திரதாரிகள் யாரையும் இந்த உலகம் இன்று வரை தண்டிக்கவும் இல்லை.. தட்டிக்கேட்கவும் இல்லை.

அதுவே இந்த மனித அவலத்தின் தொடர்ச்சிகளுக்கு காரணமாகவும் உள்ளது.

இங்கு எல்லாமே அதிகம் இலக்கு வைக்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் கிறிஸ்தவ மக்களாகவர். அதாவது தமிழர்கள் ஆவர். 

இது பல பலமான சக்திகளின் கூட்டுச் சதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாகவே இருக்க முடியும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வரும் கால ஜனாதிபதி ஒருவர் அறிக்கை விட்டார் .....முஸ்லீம்கள் ஐக்கிய இலங்கைக்காக பாடுபட்டார்கள் என்று....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தி said:

கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான மட்டக்களப்பு தேவாலய அனர்த்தம் தொடர்பில் இதுவரை இந்த ஆளுனர் புல்லா வாயே திறக்கவில்லை. காத்தான்குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளியில் வரும்.

 

2 hours ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

 

2 hours ago, Maruthankerny said:

இருக்கலாம் மேலைநாட்டு கிறிஸ்தவர்கள் 
பல மத்திய கிழக்கு நாடுகள் மீது போர்தொடுத்து 
லட்ஷ கணக்கில் மக்களை கொன்று வருகிறார்கள் 
அவ்வப்போது பல அப்பவாவிகளை கொன்று தமது 
மீடியாக்களின் உதவியுடன் பழிகளை வேறு நபர்கள் மீதும் போட்டு விடுவார்கள்.

பள்ளிவாசலில் இறந்தவர்கள் ஆத்திரத்தில் உண்மையை மறந்து இருக்கலாம் 
இப்போ ஆதாரங்கள் மூலம் உண்மையான கொலையாளிகளை கண்டுவிடார்கள் 
என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உண்மை இறைவனுக்கே வெளிச்சம். 
 

நான் நினைத்ததை மிகச் சரியாக எழுதி விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.

1 hour ago, nedukkalapoovan said:

இன்னும் காத்தான்குடி படுகொலையோடு கட்டிக்கொண்டு கிடக்க வேண்டியான். எங்கள் மக்களை மாமாங்கத்தில் இருந்து.. திருக்கேதீஸ்வரம் வரை விரட்டினானுகள்.. கொன்று குவித்திட்டானுகள்... இப்ப தேவாலாயம் மீதான தாக்குதல் பழிவாங்கல் என்று காட்ட நினைக்கும் உங்களின் ஈனப்புத்தி.. எவருக்கும் வராது. 

மேலே நந்திக்கும் மரூதங்க்கேணிக்கும் அதே "ஈனப் புத்தி" இருந்து இருக்கிறது பாருங்கள். 😀

அது ஏன் இந்த காத்தான்குடி உங்களுக்கு அப்படி சுடுகிறது? உங்கள் மக்களை மாமாங்கத்தில் இருந்து.. திருக்கேதீஸ்வரம் வரை விரட்டியதுடன் பழிவாங்கலை அவர்கள் நிறுத்தி விட்டார்கள் என்று உங்கள் ஈனம் இல்லாத புத்திக்கு புரிகிறது. எங்கள் ஈனப் புத்திக்கு இந்த பழிவாங்கல் இன்னமும் தொடரும் என்று தெரிகிறது. உங்களுக்கும் இப்படி ஈனப் புத்தி தேவை என்றால் யாழ் களத்தில் நாங்கள் எழுதுவதை தொடர்ந்து படியுங்கள் - உங்களுக்கும் ஈனப் புத்தி இலவசமாக கிடைக்கும் 😜.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

அப்போ உங்கள் பார்வையில்  கொச்சிக்கடை ,நீர்கொழும்பு  தேவாலயங்களில் கொல்லப்பட்ட சிங்கள கிறிஸ்தவர்களும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையில் சம்பந்தபட்டவர்களாயிருக்குமா?

இன்னுமொருபதிவில் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக  பதிவிட்டிருக்கிறீர்கள் பின்பு எப்படி உங்களால் இப்படி ஒரு சந்தேக கேள்வி எழுப்பமுடிகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, valavan said:

அப்போ உங்கள் பார்வையில்  கொச்சிக்கடை ,நீர்கொழும்பு  தேவாலயங்களில் கொல்லப்பட்ட சிங்கள கிறிஸ்தவர்களும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையில் சம்பந்தபட்டவர்களாயிருக்குமா?

இன்னுமொருபதிவில் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக  பதிவிட்டிருக்கிறீர்கள் பின்பு எப்படி உங்களால் இப்படி ஒரு சந்தேக கேள்வி எழுப்பமுடிகிறது?

என்னால் சந்தேகித்து கேள்வி எழுப்ப முடியாவிட்டால் எனது அறிவு மட்டுப்படுத்தப் பட்டு விடும். நான் எதையும் சந்தேகிக்கிறேன் - கேள்வி கேட்கிறேன். அறிவை வளர்த்து கொள்ள நான் கேள்வி கேட்கிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் - அறிவு வளரும்.

 எந்த தத்துவமும் (theory) எடுகோளும் (hypothesis) அதற்கு மாற்றான தத்துவத்தையும் (alternate theory) மாற்றான எடுகோளையும் (alternate hypothesis) கொண்டு இருக்கின்றன. அவை உண்மையானால் மாற்றான தத்துவத்தை நாம் ஏற்று கொள்கிறோம். இப்படி தான் உலக அறிவு வளர்ந்தது. இன்னமும் வளர்ந்து வருகிறது.

எனக்கு தெரிந்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எங்கள் அறிவை இப்படி நாம் வளர்த்து கொள்கிறோம். நான் சொல்வதில் நீங்களும் சந்தேகித்து கேள்வி கேளுங்கள். மற்றவர்கள் கேட்டார்கள். நானும் எனது அறிவு உண்மையானதா என்று சந்தேகித்து கேள்வி கேட்கிறேன். உண்மையை தேடுவோம். 

 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

என்னால் சந்தேகித்து கேள்வி எழுப்ப முடியாவிட்டால் எனது அறிவு மட்டுப்படுத்தப் பட்டு விடும். நான் எதையும் சந்தேகிக்கிறேன் - கேள்வி கேட்கிறேன். அறிவை வளர்த்து கொள்ள நான் கேள்வி கேட்கிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் - அறிவு வளரும்.

 எந்த தத்துவமும் (theory) எடுகோளும் (hypothesis) அதற்கு மாற்றான தத்துவத்தையும் (alternate theory) மாற்றான எடுகோளையும் (alternate hypothesis) கொண்டு இருக்கின்றன. அவை உண்மையானால் மாற்றான தத்துவத்தை நாம் ஏற்று கொள்கிறோம். இப்படி தான் உலக அறிவு வளர்ந்தது. இன்னமும் வளர்ந்து வருகிறது.

 

எதையும் சந்தேகிக்கும் நீங்கள் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்பதை மட்டும் எப்படி ஆணித்தரமாக கூறினீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

எதையும் சந்தேகிக்கும் நீங்கள் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்பதை மட்டும் எப்படி ஆணித்தரமாக கூறினீர்கள்?

காரணம் எழுதி இருந்தேனே? படித்தீர்களா? அந்த காரணங்கள் பற்றி நீங்கள் முன்னர் கேள்வி பட்டு இருக்கிறீர்களா? இவை உண்மையான தகவல்கள் அல்ல என்று அறிந்து இருந்தால் உங்களுக்கு தெரிந்த அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. இந்த "ஆணித்தரம்" பற்றி எனக்கு தெரியாது. அதுவும் சந்தேகத்துக்கு உரியதே.😀

ரஞ்சித் சொன்னார் தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் முன்னரும் தாக்குதல் நடத்தினார்கள் என்று. இணைப்பு ஒன்றும் தந்தார். ஆனால் அந்த இணைப்பில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி எதுவும் இல்லை. உங்களுக்கு தெரிந்த தகவல் இருந்தால் தாருங்கள். 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Jude said:

காரணம் எழுதி இருந்தேனே? படித்தீர்களா? அந்த காரணங்கள் பற்றி நீங்கள் முன்னர் கேள்வி பட்டு இருக்கிறீர்களா? இவை உண்மையான தகவல்கள் அல்ல என்று அறிந்து இருந்தால் உங்களுக்கு தெரிந்த அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

ரஞ்சித் சொன்னார் தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் முன்னரும் தாக்குதல் நடத்தினார்கள் என்று. இணைப்பு ஒன்றும் தந்தார். ஆனால் அந்த இணைப்பில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி எதுவும் இல்லை. உங்களுக்கு தெரிந்த தகவல் இருந்தால் தாருங்கள். 

ரஞ்சித் தந்த இணைப்பில் தேவாலயங்கள்மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் செய்யவில்லை என்பதனால்தான் நீங்கள் ,இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யமாட்டார்கள் என்று பதிவிட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

ரஞ்சித் தந்த இணைப்பில் தேவாலயங்கள்மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் செய்யவில்லை என்பதனால்தான் நீங்கள் ,இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யமாட்டார்கள் என்று பதிவிட்டீர்களா?

இல்லையே? நீங்கள் நான் எழுதியதை படிக்கவே இல்லையா? முற்றிலும் வேறான காரணம், படித்து பாருங்கள் - உங்களுக்கு முன்னர் தெரியாத ஒன்றை அறிந்து கொள்வீர்கள். இன்னமும் ஆழமாக அறிய விரும்பினால்  Abrahamic religions பற்றி படித்து பாருங்கள். ஈசா நபி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நீங்கள் அவரை அறிந்து கொள்ள வேண்டும். உலகில் மிகப் பெரும்தொகையானவர்களை - முஸ்லிம்களை மட்டுமல்ல, கிறீஸ்தவர்களையும் தான் - மயக்கிய புரட்சிக்காரன் அவர். அவரை பற்றியும் படித்து பாருங்கள்.

6 minutes ago, Jude said:

காரணம் எழுதி இருந்தேனே? படித்தீர்களா? அந்த காரணங்கள் பற்றி நீங்கள் முன்னர் கேள்வி பட்டு இருக்கிறீர்களா? இவை உண்மையான தகவல்கள் அல்ல என்று அறிந்து இருந்தால் உங்களுக்கு தெரிந்த அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. இந்த "ஆணித்தரம்" பற்றி எனக்கு தெரியாது. அதுவும் சந்தேகத்துக்கு உரியதே.😀

ரஞ்சித் சொன்னார் தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் முன்னரும் தாக்குதல் நடத்தினார்கள் என்று. இணைப்பு ஒன்றும் தந்தார். ஆனால் அந்த இணைப்பில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி எதுவும் இல்லை. உங்களுக்கு தெரிந்த தகவல் இருந்தால் தாருங்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மிகவும் சக்தி வாய்ந்த நவீன தொழில்நுட்பத்திற்குரியது , உதாரணமாக இந்த வகை குண்டுகளை வெடிக்கப்பயன்படுத்தப்படும் ஊக்கி கூட ஒரு வெடிகுண்டிற்குரிய சேதத்தை விளைவிக்கக்கூடியது , பல சந்தர்ப்பங்களில் வெறும் ஊக்கி மட்டும் வெடித்து குண்டு வெடிக்காது விட்டிருக்கிறது , இக்குண்டை இணப்பதற்கு நன்றாக பயிர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் பல இடத்தைல் சமகாலத்தில் ஒரு தொடர் தாக்குதலை நடத்தக்கூடிய மிகப்பெரிய வலைப்பின்னல் இருத்தல் வேண்டும் இவ்வளவு ஆட்பலமும் நன்றாக ஒருங்கிணைப்புத்திறனுடன்  அமைப்பு ரீதியாக இந்த தாக்குதலை முஸ்லீம் குழுவால் செய்திருக்கமுடியுமா? அதுவும் இலங்கை புலனாய்வு அமைப்பு அறியாமல் அதுவும் தலைநகரிலேயே முஸ்லீம் குழுவால் செய்திருக்க சாத்தியமேயில்லை ,இதுவரை காலமும் இப்படியான மிகப்பேருந்தாக்குதல் இலங்கை வரலாற்றில் எந்த குழுவாலும் நிகழ்த்த முடியவில்லை , இலங்கை ஆளும் சக்திகள் எப்படி திருனெல்வேலி தாக்குதலுக்கு முன்னரேயே தமிழ் மக்களுக்கெதிராக 1983 இல் இறுதி தீர்வுநடவடிக்கை எனும் பெயரில் தமிழ் மக்களுக்கெதிராக இனப்படுகொலை திட்டமிடல்நடவடிக்கை மேற்கொனண்டார்களோ அது போல் இதுவும் அப்பாவி முஸ்லீம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் திட்டம்

நியாயமான சந்தேகம். இவர்கள் கூலிப்படைகள். தற்கொலை தாக்குதல்கள் என்பதும் சிறி லங்காவின் தரம் குறைந்த ஆய்வாளர்களின் தவறான கணிப்பீடு.

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்
ஈசா நபியை தான் இஸ்லாம் ஏற்கிறதே ஒழிய. கிறீஸ்தவத்தை அல்ல. ஆபிரகாம் ஈசா முகமட் உட்பட்ட சில பத்து நபிகளை ஏற்கும் இஸ்லாம். ஆபிரகாமின் ஏக இறைவன் கொள்கையையே ஈசா வலியுறுத்தியதாயும் அதை தடம் மாற்றி காபிர்களும் முனாபிகக்குகளும் செய்த சதியே சுருவ வழிபாட்டு முறை கிறீஸ்தவம் என்கிறது இஸ்லாம்.

இஸ்லாமியர் தேவாலத்தின் மீது தாக்கியதுக்கான பதிவுகள் கீழே.

https://www.bbc.co.uk/news/world-middle-east-45827450 

https://www1.cbn.com/ibrahim-36

https://en.m.wikipedia.org/wiki/Peshawar_church_bombing

 

 

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.