Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Rajesh said:

அவங்க எல்லாம் யாழ்ப்பாண தமிழன் என்டு கண்டுபிடிக்கும் உங்க திறமை அபாரம்!
ஆனா ராஜா! ஏன் இந்த பிரதேசவாதம்?

இது பிரதேச வாதம் இல்லை ராசா தமிழை மறந்த சோகம் மற்றது தமிழன் என்றால் உதவி செய்ய சொல்லுவான் என்ற நிலை  இப்ப டிவியில் பல நிகழ்ச்சிகள் போகிறது லைட்டா இங்கிலிஷ் அதாவது தமிழ் நாட்டு வாடை/ வாசனை வந்துவிட்டது இன்னும் கொஞ்ச காலம் நம்ம தமிழும் இல்லாமல் போகலாம் பிறகு பிரச்சினை எழாது முதலிடம் இரண்டாமிடம் 

  • Replies 83
  • Views 9.3k
  • Created
  • Last Reply
On 10/11/2019 at 10:23 PM, nunavilan said:

CIMG2445-1200x550.jpg_72781110_bafe287f-cf9e-473d-8e84-c0ce2b

C2dHcYSUkAAfvhq.jpg

_72780162_bus_sign.jpg

இதையும் சேர்த்துக்கொள்ளலாம். 😀

EGfidbUX0AAuGqH?format=jpg&name=large

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2019 at 10:39 PM, விசுகு said:

எனது  கவலையெல்லாம்

கூட்டமைப்பின் திருகுதாளங்களாலும் 

சுயநலங்களாலும்

கையாலாகாத்தனங்களாலும்

ஏமாற்றப்பட்டு நொந்து போயிருக்கும் எனது  இனம்

தேசியக்கட்சிகளை  நாடி  போய்விடக்கூடாது  என்பது  தான்

இந்தியாவிலும் தேசியக் கட்சிகளை நாடி தமிழினம் போய்விடக் கூடாது என்ற கவலை தமிழகத்தில் எங்களைப் போன்ற பலருக்கும் உண்டு.

மட்டக்களப்பு விமான நிலையத்திலும் தமிழ் முதலாவதாக உள்ளது.

மிக விரைவில் இதுவும் சர்வதேச விமான நிலையம் என பலகை மாற்றப்பட்டு இந்தியாவுடன் போக்குவரத்தை ஆரம்பிக்கும். 

EGHdBHUUYAA7a0G?format=jpg&name=medium

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Lara said:

மட்டக்களப்பு விமான நிலையத்திலும் தமிழ் முதலாவதாக உள்ளது.

மிக விரைவில் இதுவும் சர்வதேச விமான நிலையம் என பலகை மாற்றப்பட்டு இந்தியாவுடன் போக்குவரத்தை ஆரம்பிக்கும். 

EGHdBHUUYAA7a0G?format=jpg&name=medium

ஈழத்தமிழன் வெற்றிமேல் வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கின்றான்.

1 hour ago, குமாரசாமி said:

ஈழத்தமிழன் வெற்றிமேல் வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கின்றான்.

மட்டக்களப்பு விமான நிலையத்திலும் அபிவிருத்தி பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அண்மையில் மட்டக்களப்புக்கு ரணில் சென்ற போது மட்டக்களப்பு விமான நிலையத்தை “மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம்” என பெயரிட்டிருந்தார்.

விரைவில் இந்தியாவுடனான விமான சேவை ஆரம்பிக்கப்படும் என கூறுகிறார்கள். (ஜனவரி 2020 மட்டில்). பார்ப்போம் என்ன நடக்கிறது என.

Edited by Lara

On 10/11/2019 at 9:50 PM, vanangaamudi said:

கோட்டா அதிபராகி வந்தால் எங்கட ஏர்போட்டை மாட்டு தொளுவமா மாத்திட்டு தான் முதல் வேலை பாப்பாரு.

கோத்தா ஜனாதிபதியாக வந்தால் மகிந்த தனது குடும்ப பெயரை உள்ளே புகுத்தி “மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்” என பெயரிட்டது போல் “யாழ்ப்பாணம் ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்”, “மட்டக்களப்பு ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்” என பெயர் மாற்றம் செய்தாலும் செய்யக்கூடும். 😀

இதில் தமிழ் 3 ஆம் இடத்தில் உள்ளது. 😀

EHHjIWqX4AI_CUH?format=jpg&name=small

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட பின் பெயர் பலகையில் சிங்களத்தை இரண்டாவது இடத்தில் போட்டதற்கெதிராக சில சிங்கள ஊடகங்கள் எழுதி வருகின்றனவாம்.

தேர்தல் முடிய ஆப்பு விழப்போகுதோ தெரியவில்லை.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே தமிழீழத்தின் விமான நிலையமாக இருந்திருந்தால்.. திறக்கும் போதே உலக தரத்தில் இருந்திருக்கும். தமிழ்.. ஆங்கில மட்டுமே உபயோக மொழியாக இருந்திருக்கும்.

எல்லாம் காட்டிக்கொடுப்பின் விளைவு... தமிழ் 3ம் இடத்தில் தமிழர் நிலத்தில்..?! 

ஹிந்திய ஆக்கிரமிப்பு.. சிங்களத்தின் பக்கதுணையோடு.

1987 இல் தமிழ் மக்களை சாட்டு வைத்து நிகழ்ந்த ஹிந்திய ஆக்கிரமிப்பு.. இப்போ.. சிங்களத்தின் பக்கமாக மீண்டும் தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கிறது. இதில் சிங்களம் தனக்கான ஆதாயத்தை தேடிக் கொள்கிறது.

இதற்குள் எம் மக்களுக்கு என்ன ஆதாயம். எல்லாம் அரசியல் சித்து விளையாட்டின் உச்சமாகவே இருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Lara said:

இதில் தமிழ் 3 ஆம் இடத்தில் உள்ளது. 😀

EHHjIWqX4AI_CUH?format=jpg&name=small

நிரந்தரமாய் இருக்கிற அறிவிப்புகள் தமிழ் கடைசியிலை இருக்கும். தேர்தல் முடிய தூக்குற அறிவிப்புகளுக்கு தமிழ் முதல்லை இருக்கும். 😀

8 hours ago, குமாரசாமி said:

நிரந்தரமாய் இருக்கிற அறிவிப்புகள் தமிழ் கடைசியிலை இருக்கும். தேர்தல் முடிய தூக்குற அறிவிப்புகளுக்கு தமிழ் முதல்லை இருக்கும். 😀

😀😀😀

சீனாக்காரன் சிங்கள ஏரியாவில் சிங்களத்தை மூன்றாவதாக போடுவதுண்டு. 😀

EHN7wI7XkAANx49?format=jpg&name=medium

 

Edited by Lara

9 hours ago, nedukkalapoovan said:

இதுவே தமிழீழத்தின் விமான நிலையமாக இருந்திருந்தால்.. திறக்கும் போதே உலக தரத்தில் இருந்திருக்கும். தமிழ்.. ஆங்கில மட்டுமே உபயோக மொழியாக இருந்திருக்கும்.

மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு செலவழித்த பணத்தின் ஒரு பகுதியை யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு ஒதுக்கியிருந்தாலே இது உலக தரத்தில் உருவாகியிருக்கும். 

image_f0155ddf3f.jpg

ஆனால் இது தமிழர் பகுதியில் உள்ளதால் பணம் செலவழிக்க மாட்டார்கள். இப்பொழுது தேர்தலுக்காக தான் அவசரப்பட்டு திறந்துள்ளார்கள்.

சிங்களவர்களே இதன் தரத்தை குறிப்பிட்டு நக்கலடிக்கிறார்கள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2019 at 11:53 AM, விசுகு said:

உங்களது எதிர்   கூறல்  இந்த யென்மத்தில்  நடந்துவிடக்கூடாது என்று  இறைஞ்சுகின்றேன்

6.30 இல் இருந்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

6.30 இல் இருந்து பாருங்கள்.

இதைத்தானே நாங்களும் ஊரில் இருந்து சொல்கிறோம் நம்புறானுகங்களா 

25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதைத்தானே நாங்களும் ஊரில் இருந்து சொல்கிறோம் நம்புறானுகங்களா 

ஏற்கனவே EPRLF கூட்டமைப்பிலிருந்து வெளியேறி போன வருடம் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் TULF உடன் இணைந்து போட்டியிட்டது.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மீண்டும் இணைவார்களா அல்லது இப்படியே போட்டியிடுவார்களா தெரியவில்லை. இணையாவிட்டால் கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்படும்.

கூட்டமைப்பினர் ஒன்றையும் உருப்படியாக செய்யவில்லை என்பதால் மக்கள் தேசிய கட்சிகளை நாடிச்செல்வதும் வருங்காலத்தில் அதிகரிக்கும்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Lara said:

ஏற்கனவே EPRLF கூட்டமைப்பிலிருந்து வெளியேறி போன வருடம் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் TULF உடன் இணைந்து போட்டியிட்டது.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மீண்டும் இணைவார்களா அல்லது இப்படியே போட்டியிடுவார்களா தெரியவில்லை. இணையாவிட்டால் கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்படும்.

கூட்டமைப்பினர் ஒன்றையும் உருப்படியாக செய்யவில்லை என்பதால் மக்கள் தேசிய கட்சிகளை நாடிச்செல்வதும் வருங்காலத்தில் அதிகரிக்கும்.

கிழக்கில் இதுதான் நடக்கிறது அதனால் தான் நான் முதலில் சொன்னேன் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

6.30 இல் இருந்து பாருங்கள்.

இது யனாதிபதி தேர்தல். தேசியக்கட்சிகள் தானே நிற்குது?? மேலும் பேட்டிகளில் கோபத்தை காட்டுபவர்களால் வாக்களிக்கும் போது கோபத்தை மட்டும் காட்டி வாக்களிக்கமுடிவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Lara said:

மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு செலவழித்த பணத்தின் ஒரு பகுதியை யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு ஒதுக்கியிருந்தாலே இது உலக தரத்தில் உருவாகியிருக்கும். 

image_f0155ddf3f.jpg

ஆனால் இது தமிழர் பகுதியில் உள்ளதால் பணம் செலவழிக்க மாட்டார்கள். இப்பொழுது தேர்தலுக்காக தான் அவசரப்பட்டு திறந்துள்ளார்கள்.

சிங்களவர்களே இதன் தரத்தை குறிப்பிட்டு நக்கலடிக்கிறார்கள். 😎

மத்தள விமான நிலையம் சீன கடனில் ராஜபக்ச கட்டியது. யாழ் விமான நிலையம் இந்திய கடனில் யூ.என்பி. கட்டியது. யாருக்கு வாக்களிக்கலாம், ராஜபக்சவுக்கா அல்லது யூ.என்.பிக்கா?

10 hours ago, Jude said:

மத்தள விமான நிலையம் சீன கடனில் ராஜபக்ச கட்டியது. யாழ் விமான நிலையம் இந்திய கடனில் யூ.என்பி. கட்டியது. யாருக்கு வாக்களிக்கலாம், ராஜபக்சவுக்கா அல்லது யூ.என்.பிக்கா?

மத்தல விமான நிலையம் சீன கடனில் மகிந்த கட்டியது. ஆனால் அதற்கு செலவழிக்கப்பட்ட நிதியின் மொத்த தொகையின் ஒரு சிறு பகுதி போதும் யாழ் விமான நிலையத்தை உலக தரத்தில் உருவாக்க.

ஆனால் யாழ் விமான நிலைய அபிவிருத்திக்கு பெரிதாக செலவழிக்கும் எண்ணம் இல்லை. 2.2 பில்லியன் (இலங்கை) ரூபாயில் 300 மில்லியன் (இலங்கை) ரூபாய் தான் இந்தியாவினுடையது, மிகுதி இலங்கையின் பணம்.

நான் சஜித்துக்கு தான் வாக்களிக்கும் படி கூறி வருகிறேன். 😀

Edited by Lara

விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட அன்று அர்ஜுனா ரணதுங்க கூறியது பற்றிய செய்தி.

Arjuna Ranatunga, Minister of Transport & Civil Aviation noted that they initially decided to upgrade the airport in three phases.

He said that for the first phase, they decided to create a system that will only facilitate the landing of aircraft that can accommodate 70 to 80 passengers. He went on to note that they did not want to spend too much as they were concerned about the return of investment as well.

Edited by Lara

19 minutes ago, Lara said:

Arjuna Ranatunga, Minister of Transport & Civil Aviation noted that they initially decided to upgrade the airport in three phases.

He said that for the first phase, they decided to create a system that will only facilitate the landing of aircraft that can accommodate 70 to 80 passengers. He went on to note that they did not want to spend too much as they were concerned about the return of investment as well.

மத்தள விமான நிலையத்தின் அமைவிடத்தோடு ஒப்பிடும் போது பலாலியின் அமைவிடம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டுக்கும் ஈழத்தமிழருகும் இருக்கும் கலை, கலாசார தொடர்புகள் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பயணங்கள் ஆகியன சிறந்த அனுகூலமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் வடமாகணசபை சுற்றுலா துறையை வளர்தெடுக்க ஊக்குவித்தல்  முயற்சிகளை மேற்கொண்டால் பயணிகள் எண்ணிக்கை மேலும்அ திகரிக்க வாய்பபு உள்ளது. அந்நிலை வருமானால் சரவதேச விமான நிறுவனங்கள் வர்தக ரீதியில் வருமானம் ஈட்ட யாழ்பாணத்திற்கு அதிக பறப்புக்களை மேற்கொள்ளவே விரும்பும். அப்படியான நிலை வருமானால் யாழ்பாண விமான நிலையம் மேலும் அபிவிருத்தி அடைவது தவிர்கக முடியாதது என்பது என் கணிப்பு. 

Edited by tulpen

  • 1 month later...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இயங்குகிறதா அல்லது சத்தமில்லாமல் மூடப்பட்டு விட்டதா? அதைப்பற்றிய செய்திகளையும் காணோம். E booker, Swoodoo போன்ற பிரயாண முகவர் தளங்களில் சென்னையில் இருந்து யாழ்பபாணம் விமான நிலையத்திற்கு ரிக்கற் பதிவு செய்ய முடியவில்லை. யாராவது யாழிற்கு விமான சீட்டு பதிவு செய்துள்ளீர்களா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, tulpen said:

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இயங்குகிறதா அல்லது சத்தமில்லாமல் மூடப்பட்டு விட்டதா? அதைப்பற்றிய செய்திகளையும் காணோம். E booker, Swoodoo போன்ற பிரயாண முகவர் தளங்களில் சென்னையில் இருந்து யாழ்பபாணம் விமான நிலையத்திற்கு ரிக்கற் பதிவு செய்ய முடியவில்லை. யாராவது யாழிற்கு விமான சீட்டு பதிவு செய்துள்ளீர்களா? 

ஒரு தேர்தல் முடிந்து விட்டது. மீண்டும் அடுத்த தேர்தலில் சந்திப்போம் :cool:

அவசர அவசரமாக ஐ.தே.க. மற்றும் டெல்லியால் தமிழர்கள் வாக்குகளை வெல்ல நடாத்தப்பட்ட நாடகம்.  

Mission accomplished !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.