Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்கு தீர்மானம்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21%21
 
திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்கு தீர்மானம்..!!
 
35
 
Views
திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்காக எந்தவித எதிர்ப்பும் இன்றி சர்வமத மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் செயலாளர் சி.மோகன் தெரிவித்துள்ளார்.

பௌத்த இந்து ஒற்றுமை சர்வமத மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த மாநாடு தொடர்பான தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய பாரம்பரிய, பொருளாதார, கல்வி, காணி மற்றும் இன பிரச்சினைகளை அரசியலுக்கு அப்பால் இந்து பௌத்த பீடங்களை சேர்ந்தவர்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் எனவும் மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்; மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக இலங்கையின் அதி உச்ச பீடமான அரசாங்கத்திற்;கு அறிவிக்க வேண்டும் எனவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சம்பந்தமான ஒரு தெளிவான கொள்கையினை எடுக்கவேண்டும் என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சி.மோகன் தெரிவித்துள்ளார்.
1 hour ago, nunavilan said:

திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்காக எந்தவித எதிர்ப்பும் இன்றி சர்வமத மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் செயலாளர் சி.மோகன் தெரிவித்துள்ளார்.

சாணக்கியமான நகர்வு போல தெரிகின்றது. இருப்பதை காப்பது முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

சாணக்கியமான நகர்வு போல தெரிகின்றது. இருப்பதை காப்பது முக்கியமானது.

100% உண்மை அம்பனை.நல்லது நடந்தால் நல்லதே......!  🤔

இந்து, பௌத்த மாநாடு யாழில் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் இந்து, பௌத்த ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு நாள் மாநாடு இன்றையதினம் இடம்பெறுகிறது.

01__1_.jpg

இதனை முன்னிட்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதினத்தில் இருந்து இந்து குருமார்கள், பௌத்த துறவிகள் மங்கல வாத்திய இசை மற்றும் கண்டிய நடனத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றன.

01__5_.jpg

தொடர்ந்து யாழ் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் மாநாடு ஆரம்பமாகியது.

01__7_.jpg

 


01__8_.jpg


https://www.virakesari.lk/article/74505

பௌத்தர்களுக்கு தமிழர்கள் மீது எவ்வித முரண்பாடுகளும் கிடையாது - யாழில் சோபித தேரர்

பௌத்த மக்களுக்குத் தமிழர்கள் மீது எந்தவிதமான முரண்பாடுகளும் கிடையாது பௌத்த துறவிகளாகிய எம்முடன் இந்து மத தலைவர்கள் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அணிதிரளுங்கள் நாம் தமிழ் மக்களுக்காக என்றும் துணை நிற்போம் என சோபித தேரர் தெரிவித்தார்.

பௌத்த இந்து ஒற்றுமைக்கான சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிள்ளையார் இன் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.


குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கில் உள்ள இந்து மத தலைவர்களுக்கு நான் ஒன்றைக் கூறி வைக்க விரும்புகின்றேன்,தமிழ் மக்களுக்கு எதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக தலைநிமிர்ந்து நின்று அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள்.இத்தனை காலமும் நீங்கள் பொறுத்தது போதும் இனி வெளியில் வாருங்கள். ஒரு விடயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எம்மை நாசமாக்க வெளியில் பல சதிகள் நடக்கின்றன.

இலங்கையில் இருக்கும் பௌத்த இந்து மதத்தை அழிக்க ஒரு குழு இயங்கிக் கொண்டிருக் கின்றது. இந்த நாட்டில் பௌத்தமும் இந்துவும் ஒன்றிணைய வேண்டும்.


thara.jpg

நாட்டில் உள்ள பௌத்தர்கள் இந்துக்களை மதம் மாற்ற நினைக்கவில்லை அதேபோல இந்துக்களும் இங்கு வாழும் பௌத்தர்களை மதம் மாற்ற நினைக்கவில்லை.எமக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் நன்றாகத் தெரியும். தமிழ் மக்களே ஒரு பொதி சோற்றுக்காக ஆசைப்பட்டு மதம் மாறாதீர்கள். இவ்வாறான மத மாற்றுபவர்கள் சிங்கள கிராமங்களுக்கு வரும் போது அவர்களை விரட்டி அடிக்கின்றோம்.

நாம் அழைப்பு விடுக்கின்றோம் இனியும் பொறுமை வேண்டாம் இந்து தமிழ் மக்களைக் காப்பாற்றச் சைவ தலைவர்கள் வெளியில் வாருங்கள். அப்பாவி மக்களைக் காப்பாற்றுவோம்.இங்குள்ள இளைஞர்கள் யுவதிகளே அனைவரும் வாருங்கள் அரசியலுக்கு ஏற்றது போல மாறிக் கொண்டிருக்காது சைவ தலைவர்களுடன் இணைந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய முன்வாருங்கள்.

சைவ மக்களே உங்கள் மத தலைவர்களுடன் ஒன்றிணைந்து பௌத்த துறவிகளாகிய எம்முடன் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அணிதிரளுங்கள்.அவ்வாறு அணி திரண்டால் நாம் தமிழ் மக்களுக்காக நாம் இருப்போம் என்று இந்த சந்தர்ப்பத்திலே கூறிக்கொள்கின்றேன்.

தமிழர்கள் மீது எமக்கு எந்தவிதமான முரண்பாடுகளும் கிடையாது. இந்து மக்களுக்கு ஒரு அநீதி நடந்தால் இங்குள்ள மத தலைவர்கள் அனைவரும் குரல் கொடுங்கள். உங்களுக்கு நாம் எப்போதும் துணையாக நிற்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/74528

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில உள் குத்து முள் குத்து  ஏதும் இல்லையே. நம்பக் கடினமாக உள்ளது ஆனாலும் நம்புவோம் எச்சரிக்கையுடன்.

இதற்குப்பின்னால் இந்தியா ? ஆதலினால் எச்சரிக்கை தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg 

இனிமே லெற்றா வந்தா தூதல் அல்வாவோடதான் வரணும்..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்து கிறிஸ்தவ முரண்பாடுகளை ஏற்படுத்திவிட்டு அந்த பிளவை பயன்படுத்தி தமிழனின் குசினிக்கை விகாரையை எழுப்பிபோட்டு வடக்கும் பவுத்த சிங்களத்துக்கு உரியது என்று உரிமை கோராவிட்டால் சரி. சில நாட்களுக்கு முன் சில தேரர் வடக்கு கிழக்கில் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று முறையிட்டிருந்தார்கள். இவர் இப்பிடி சொல்லுறார். என்ன, கிறிஸ்தவத்தை இந்துக்களை வைத்து அழித்து இந்துக்களை சர்வதேசத்திடம் இருந்து தனிமைப்படுத்தி இறுதி அடி இந்துக்களுக்கு நடக்காமல் இருந்தால் சரி. இல்லையாயின் கிறிஸ்தவம் கேட்கும் என்னையாவது வாழ விட்டிருந்தால் உனக்காக நான் குரல் கொடுத்திருப்பேன்.

3 hours ago, satan said:

இந்து கிறிஸ்தவ முரண்பாடுகளை ஏற்படுத்திவிட்டு அந்த பிளவை பயன்படுத்தி தமிழனின் குசினிக்கை விகாரையை எழுப்பிபோட்டு வடக்கும் பவுத்த சிங்களத்துக்கு உரியது என்று உரிமை கோராவிட்டால் சரி. சில நாட்களுக்கு முன் சில தேரர் வடக்கு கிழக்கில் தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று முறையிட்டிருந்தார்கள். இவர் இப்பிடி சொல்லுறார். என்ன, கிறிஸ்தவத்தை இந்துக்களை வைத்து அழித்து இந்துக்களை சர்வதேசத்திடம் இருந்து தனிமைப்படுத்தி இறுதி அடி இந்துக்களுக்கு நடக்காமல் இருந்தால் சரி. இல்லையாயின் கிறிஸ்தவம் கேட்கும் என்னையாவது வாழ விட்டிருந்தால் உனக்காக நான் குரல் கொடுத்திருப்பேன்.

திருக்கேதீஸ்வரம் எப்போதும் புனிதபூமிதான்। இப்போது அந்த Hindu ஆலயத்துக்கு அருகில் மிகப்பெரிய பவுத்த ஆலயத்தை கட்டி முடித்துவிடடார்கள்। அது வரைக்கும் இவர்கள் இந்த புனித  பூமி குறித்து பேசவே இல்லை।

இன்னும் சிறிது காலம் போன பின்னர் பாருங்கள் என்ன நடக்கபோகிறதென்று। இப்போதே அந்த பகுதியில் தொல் பொருட்கள் திணைக்களத்தினால் அதை சுற்றி உள்ள பகுதிகளை எல்லாம் அவர்களுடைய பகுதியாக எல்லை போட்டுள்ளார்கள்। இன்னும் கொஞ்ச நாட்களில் பவுத்த சின்னங்களெல்லாம் அங்கிருந்து வெளிவரப்போகின்றது।

அப்போதுதான் இவர்களுடைய திருவிளையாடல் வெளியே தெரிய வரும்। அப்போது அந்த பகுதி பவுத்தர்கள் வாழ்ந்த பகுதியாக பிரகடனப்படுத்தப்படும்। அது சிங்கள பவுத்தர்களா, தமிழ் பவுத்தர்களா என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும்। 

22 hours ago, nunavilan said:

திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்கு தீர்மானம்..!!

ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாதவர்கள் எல்லாம் உறுதி மொழி வழங்கீனமாம். அதெல்லாம் ஒரு பெரிய செய்தியாம்.

19 hours ago, ampanai said:

,தமிழ் மக்களுக்கு எதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக தலைநிமிர்ந்து நின்று அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள்.இத்தனை காலமும் நீங்கள் பொறுத்தது போதும் இனி வெளியில் வாருங்கள். ஒரு விடயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எம்மை நாசமாக்க வெளியில் பல சதிகள் நடக்கின்றன.

தமிழ் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு என்ன ஆச்சு? எல்லாம் விட்டாச்சா?

On 1/30/2020 at 5:00 PM, ampanai said:

சாணக்கியமான நகர்வு போல தெரிகின்றது. இருப்பதை காப்பது முக்கியமானது.

இருப்பதை காப்பது என்று எதை காப்பது என்று கருதுகின்றீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு எங்கு கைவைத்தால் தன்னாலே அழிவான் என்று நன்றாக அறிந்து வைத்து காய் நகர்த்துகிறான் சிங்களவன். மதவாதம், பிரதேசவாதம், சாதீயம். மிஞ்சி இருக்கிறதை இதை ஏவியே அழிக்கப்போகிறான். தமிழர் மிக அவதானமாக செயற்படவேண்டும். தான் சிக்க முதல் கேள்வி கேட்க யாருமில்லாமல், எல்லாம் தனது அடிமைகளாக, ஏதிலிகளாக  ஆக்கப்போகிறான் தமிழரை.

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச புனித பூமியென்று சொல்லி போட்டு அங்கால திருகோணமலை பக்கம் மலைக்கால புத்தர் ஒருவர் வெளிக்கிட்டு வந்து  விட்டார் இது யாருக்காவது தெரியுமா  என்ன??

  • கருத்துக்கள உறவுகள்

இந்து கிறிஸ்தவ வார்த்தையாடலில் அதை யார் கவனிச்சா? 

  • கருத்துக்கள உறவுகள்

புனித பூமி என்றாக்கிட்டு.. சர்வமத ஐக்கியம் என்று கோவிலுக்கு அருகில்.. அல்லது கோவிலுக்குள் புத்த விகாரையை அமைக்காவிட்டால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

புனித பூமி என்றாக்கிட்டு.. சர்வமத ஐக்கியம் என்று கோவிலுக்கு அருகில்.. அல்லது கோவிலுக்குள் புத்த விகாரையை அமைக்காவிட்டால் சரி. 

எனக்கும்... அந்தச் சந்தேகம் உள்ளது.
கதிர்காமம், திருக்கோணேஸ்வரத்துக்கு நடந்த மாதிரி, 
இதற்கும் நடந்து விடுமோ... என்று அச்சமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

எனக்கும்... அந்தச் சந்தேகம் உள்ளது.
கதிர்காமம், திருக்கோணேஸ்வரத்துக்கு நடந்த மாதிரி, 
இதற்கும் நடந்து விடுமோ... என்று அச்சமாக உள்ளது.

அச்சப்படவேண்டாம் சர்வமும் நிச்சயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.