Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

எழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் காலமானார்

image_b38694f027.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி)  மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக சென்றதுடன், அங்கு திரைப்பட துறையில் ஆர்வம் கொண்டவராக திரைப்படங்கள் உருவாக்கப்படுவதை கற்றுக்கொண்டார்.

மீண்டும் 1991 ஆம் ஆண்டு தாயகத்துக்கு திரும்பிய அவர் திரைப்படம் எடுக்கும் ஆவலில் இயக்குநர் தாசனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

முதல் முதல் செவ்வரத்தம் பூ, எதிர்காலம் கனவல்ல பேன்ற  குறும்படங்களை இயக்கிய இவரின் நடிப்பு திறனை தூண்டுவதற்கு காரணமாக இருந்தது சேரலாதன் என்பவராவார்.

உதிரிப்பூக்கள் இயக்குநர் மகேந்திரன், ஜான் மகேந்திரன் போன்ற இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்றிய பெருமையுடன் நீலமாகி வரும் கடல் சிறுகதை தொகுதியும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக இயக்குநர் பாராதிராஜா, மற்றும் நடிகர் மணிவண்ணன் போன்ற தென்னிந்திய இயக்குநர்கள், நடிகர்களுடன் நண்பனாக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு 

இறுதிக்காலத்தில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றிய நிலையில், உயிரிழந்துள்ளார்.

செ.கீதாஞ்சன்

 

 

http://www.tamilmirror.lk/வன்னி/எழததளரம-நடகரமன-மலல-யசதசன-கலமனர/72-245137
 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து நவீன காட்ச்சி ஊடகம் மற்றும் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரான கலைஞர் முல்லை யேசுதாசன் (சாமி) அவர்களுக்கு  ஆழ்ந்த மரியாதையும் அஞ்சலியும் செலுத்துகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

9-DD5-E71-B-B2-E7-4-AC9-87-FE-417-CAB06-

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை யேசுதாசன்....  அவர்களது, பெயரை...
நான், இலங்கையில் வசிக்கும் போது... பெருமளவில் கேள்விப் பட்டிருக்கின்றேன்.

இலங்கை வானொலியிலிலும்...  இவரின் பெயர்கள், ஆக்கங்கங்கள்... அதிகம் வந்தது.
அதுகும்... கே. எஸ். ராஜாவின், குரலில் கேட்டது , நல்ல நினைவாக உள்ளது. 

அன்னாரின்... மறைவுக்கு, ஆழ்ந்த அஞ்சலிகள்.  

இப்படி ஒரு மண்ணின் மைந்தன் வாழ்ந்தார், கலைஞனாக பரிணமித்தார், ஒரு நல்ல கதை சொல்லியாக இருந்தார் என்பதை எல்லாம் அவர் இறந்த பின் தான் நான் அறிகின்றேன். நானே என்னை நினைத்து வெட்கப்பட வேண்டி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இப்படி ஒரு மண்ணின் மைந்தன் வாழ்ந்தார், கலைஞனாக பரிணமித்தார், ஒரு நல்ல கதை சொல்லியாக இருந்தார் என்பதை எல்லாம் அவர் இறந்த பின் தான் நான் அறிகின்றேன். நானே என்னை நினைத்து வெட்கப்பட வேண்டி இருக்கு.

புலிகள் இல்லாத இக்காலகட்டத்தில், நிதர்சனத்தில் 1990 களில் இருந்து குறும்படங்கள்,  முழுநீளப்படங்களில் பணியாற்றிய கலைஞரின் பெயரைக் கேள்விப்படாவிட்டாலும் அவரின் படைப்புக்களை பார்த்திருப்பீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரு. சந்தியோகு ஜேசுதாசன் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது.!

08.02.2020

சந்தியோகு ஜேசுதாசன் அவர்கள்

‘‘மாமனிதர்’’ என மதிப்பளிப்பு.

தமிழீழ மண்ணையும், மக்களையும் ஆழமாக நேசித்து  எமது விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும்பணியாற்றிய கலைஞர் திரு. முல்லை ஜேசுதாசன் (சாமியப்பா) அவர்களை 07.02.2020 அன்று தமிழீழத் தேசம் இழந்துநிற்கின்றது. தமிழர் மனங்களிலெல்லாம் தனது கலைப்படைப்புக்களுக்கூடாகப் போராட்டம் பற்றிய உன்னத கருத்துக்களைக் கொண்டுசென்றவரை இன்று நாம் இழந்துநிற்கின்றோம்.

WhatsApp-Image-2020-02-07-at-17.23.10.jpஇவர் எழுத்தாளர், நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல்துறை ஆளுமைமிக்க படைப்பாளியாக மக்கள் மனங்களில் இடம் பிடித்தது மட்டுமன்றி தாயகத்தின் கலைபண்பாட்டுக்கழகம், நிதர்சனம், தமிழீழத் தேசியத்தொலைக்காட்சி, புலிகளின் குரல், ஈழநாதம் பத்திரிகை, வெளிச்சம் இதழ் என்பவற்றிற்கூடாக விடுதலைவேட்கையை மக்களிடையே கொண்டுசென்றவர். ‘‘நீலமாகிவரும் கடல்’’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் இவரது எழுத்தாற்றலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.

தமிழீழத்தில் பல குறும்படங்களை இயக்கியும், நடித்தும் எமது போரியல் வாழ்வை வெளிக்கொணர்ந்த விடுதலைப் படைப்பாளியாவார். இவர் இயக்கிய ‘‘செவ்வரத்தம் பூ’’ என்ற குறும்படத்திற்காக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பாராட்டுதலையும், மதிப்பளிப்பையும் பெற்றவர். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றையும், எம்மக்களின் வலிசுமந்த வாழ்வியலையும் தனது படைப்புக்களுக்கூடாக பதியமிட்டுள்ளமை என்பது இன்றைய படைப்பாளிகளுக்கு எதிர்கால வரலாற்றைச் சுட்டிநிற்கின்றது.

WhatsApp-Image-2020-02-08-at-10.59.38.jpபல இடர்களையும், துன்பங்களையும் சந்தித்த வேளையிலும் அடக்கமாகவும், அமைதியாகவும், எளிமையாகவும் வாழ்ந்த கலைத்தேடல் மிக்கவரை இழந்துநிற்கின்றோம். இவரது இழப்பில் தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன்  கலைஞர் முல்லை ஜேசுதாசன் அவர்களின் இனப்பற்றிற்கும்,  இவர் ஆற்றிய விடுதலைப் பணியினையும் மதிப்பளித்து ‘‘மாமனிதர்’’ என்ற அதியுயர் தேசியவிருதை வழங்குவதில் நாம் பெருமையடைகின்;றோம். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

https://www.thaarakam.com/news/112689

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.