Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக ஒருவரை சுயேச்சையாகப் போட்டியிட வைக்கத் தீர்மானம் - இந்து குருமார் பேரவை

Featured Replies

எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார்.


mannar.jpg

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர் கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்து மக்களை  அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளார்கள்.

எதிர் வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்   மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைக்குழுவாக  போட்டியிட உள்ளோம்.

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

கடந்த 2 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் எங்களுக்கு ஒரு பிரதி நிதியை; கேட்டிருந்தோம்.ஆனால் கைகூடாமல் போய் விட்டது.

இந்த முறையும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடங்களுடன் இவ்விடையம் தொடர்பாக கதைத்த போதும் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கான ஆசன ஒதுக்கீடு வளங்க அவர்கள்; விரும்ப வில்லை.ஆசன ஓதுக்கீடு தரவும் இல்லை.

அதன் அடிப்படையில் எங்களுடைய மக்கள் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும்.

ஏன் என்றால் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு வேட்பாளர் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

ஒவ்வொறு மாவட்டத்தில் இருக்கின்றவர்களும் ஒவ்வொறு சமையத்தில் இருக்கின்றவர்களும் தங்களுடைய பிரதி நிதிகள் வர வேண்டும் என விரும்புகின்ற போது எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய சமூகத்தில் இல்லாத காரணத்தினால் நாங்கள் இம்முறை மன்னாரில் இருந்து ஒரு வேட்பாளரை சுயேட்சையாக போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற  பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்விடையம் தொடர்பில் ஆலயத்தின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,புத்தி ஜீவிகள்,கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டோம்.அதற்கமைவாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு  எங்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாங்கள் உறுவாக வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர். அதற்கமைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எந்த எந்த மாவட்டங்களில் யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்து ஆலோசித்து வருகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் பிரதி நிதிகள்,இந்துக் குருக்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/75902

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சரியான போட்டி. 

பாவம் பிரபாகரனும் அவனின் பிள்ளைகளும்.

(அடுத்தது என்ன சாதிக்கொரு வேட்பாளரா ?)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதங்கள் அரசியலுக்கு ஏற்றதல்ல......
இதனால் தான் இனவாத பிக்குகளை திட்டுகின்றோம்.

  • தொடங்கியவர்
6 hours ago, ampanai said:

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

 

6 hours ago, ampanai said:

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

சிங்கள அரசு புத்த மதத்தை முதன்மை மதமாக்கி, சிறுபான்மை மதங்களை அழித்து வருகின்றது. இங்கே, தமிழ் பேசும் அரசியல் வாதிகள் உட்பட சிறுபான்மை அரசியல்வாதிகளால் எதுவுமே செய்ய முடியாத நிலை.

ஆனால், அதற்கு தீர்வாக இவ்வாறான அணுகுமுறை தீர்வை தருமா என தெரியவில்லை. இருந்தாலும், சிங்கள தரப்பில் பல வேறு புத்த மதத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகளும் அமைப்புக்களும் உள்ளன. அவைகள் அரசியல் செல்வாக்கும் கொண்டவை, பாராளுமன்றத்திலும் உள்ளார்கள். அதனால், இந்த அணுகுமுறையும் சரியாக இருக்கலாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

எப்படி 

சாதிக்கொரு கட்சி, சமயத்திற்கு ஒரு கட்சி என்றா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

இந்தியா, சிரியா, ஈராக், மத்திய கிழக்கு மற்றும் பல கிறீத்துவக் குழுக்கள் ........

  • கருத்துக்கள உறவுகள்

மோடியும் மஹிந்தவும் சேர்ந்து காய்ச்சிய கூழின் பருக்கை இவர்கள். சீ நல்லிணக்கம்.  தமிழரை கூறு போடுகினமாம் மானங்கெடட தமிழன் இருந்தாலென்ன அழிந்தாலென்ன?

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Dash said:

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

அரசியல் என்னும் சாக்கடை.

11 hours ago, ampanai said:

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

முதல்ல கோவில்களில் கொள்ளையடிப்பதை நிப்பாட்டுங்க.
அதுக்கு பிறகு உங்க கோஷ்டி அரசியலுக்கு லாயக்கா இல்லையா என்டு யோசிப்பம்.

3 hours ago, Dash said:

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

உங்கள் கருது சரியாக இருந்தாலும் தற்போதைய நிலவரம் வேறுமாதிரி இருக்கிறது।

சட்டத்தரணி புனிதநாயகம் தலைமையில் கத்தோலிக்கர்கள் இப்போது ஒரு அணியாக போட்டியிடப்போகிறார்கள்। இந்துக்கள் தமது அணியாக போட்டியிடப்போகிறார்கள்।

கத்தோலிக்கர்கள் வாக்குப்பலம் அங்கு அதிகமாக இருப்பதால் நிச்சயமாக இந்த அணி வெல்லக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது। இதட்கு அங்குள்ள ஆயர்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகின்றது।

எனவே நிச்சயமாக அடைக்கலத்துக்கு இம்முறை ஆப்பு வைக்கப்படும் போலத்தான் தெரிகிறது। அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வளர்க்க  முயட்சிக்கிறார்களே ஒழிய மக்களை பற்றி சிந்திப்பதில்லை। இதுதான் கள நிலவரம்।

18 hours ago, ampanai said:

எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார்.


mannar.jpg

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர் கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்து மக்களை  அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளார்கள்.

எதிர் வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்   மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைக்குழுவாக  போட்டியிட உள்ளோம்.

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

கடந்த 2 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் எங்களுக்கு ஒரு பிரதி நிதியை; கேட்டிருந்தோம்.ஆனால் கைகூடாமல் போய் விட்டது.

இந்த முறையும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடங்களுடன் இவ்விடையம் தொடர்பாக கதைத்த போதும் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கான ஆசன ஒதுக்கீடு வளங்க அவர்கள்; விரும்ப வில்லை.ஆசன ஓதுக்கீடு தரவும் இல்லை.

அதன் அடிப்படையில் எங்களுடைய மக்கள் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும்.

ஏன் என்றால் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு வேட்பாளர் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

ஒவ்வொறு மாவட்டத்தில் இருக்கின்றவர்களும் ஒவ்வொறு சமையத்தில் இருக்கின்றவர்களும் தங்களுடைய பிரதி நிதிகள் வர வேண்டும் என விரும்புகின்ற போது எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய சமூகத்தில் இல்லாத காரணத்தினால் நாங்கள் இம்முறை மன்னாரில் இருந்து ஒரு வேட்பாளரை சுயேட்சையாக போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற  பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்விடையம் தொடர்பில் ஆலயத்தின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,புத்தி ஜீவிகள்,கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டோம்.அதற்கமைவாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு  எங்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாங்கள் உறுவாக வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர். அதற்கமைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எந்த எந்த மாவட்டங்களில் யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்து ஆலோசித்து வருகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் பிரதி நிதிகள்,இந்துக் குருக்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/75902

நிச்சயமாக உங்களால் மன்னர் மாவட்த்திலிருந்து இந்த அமைப்பூடாக ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியாது। மன்னாரில் ஏறக்குறைய ஐந்து வீதமான இந்துக்களே இருக்கிறார்கள்। அப்படி என்றால் ஒரு இந்து அமைப்பால் வெல்வது மிக கடினம் ।

அத்துடன் வவுனியா, முல்லைத்தீவில் எந்தவொரு கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை।

எனவே நீங்கள் செய்ய நினைப்பது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்। இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ வாக்குகள் மத ரீதியாக பிரியும்போது முஸ்லிம்களுக்கு அது வாய்ப்பாக அமையும்। அல்லது தமிழர் அல்லாத தரப்புக்கு வாய்ப்பாக அமையும்।

இருந்தாலும் மன்னாரில் கத்தோலிக்கர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட்தாக அறிகிறேன்। அவர்களும் கத்தோலிக்க ஆயர்களின் துணையுடன் ஒரு சடடதரணி தலைமையில் போட்டியிடப்போகிறார்கள்। எனவே அவர்கள் நிச்சயமாக மன்னாரில் வெல்லுவார்கள்।

இது தமிழர்களுக்கு ஒரு பின்னடைவே . நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைக்கு காரணம்.. சிக்கல்களை சரியாகக் கையாளத் தெரியாத... தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம் சும் மாவை சாவை கும்பலே.

அவர்கள்.. தமிழர்களை முற்றாக அரசியல் அநாதைகளாக்கும் வேலையையே 2009 மே க்குப் பின்னிருந்து செய்து வருகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்க விடயம். 

இதனைச் சீர்செய்ய வேண்டியது தமிழர் மண்ணின் மீது மக்கள் மீது பற்றுறுதி கொண்ட இளையோரே. 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Vankalayan said:

நிச்சயமாக உங்களால் மன்னர் மாவட்த்திலிருந்து இந்த அமைப்பூடாக ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியாது। மன்னாரில் ஏறக்குறைய ஐந்து வீதமான இந்துக்களே இருக்கிறார்கள்। அப்படி என்றால் ஒரு இந்து அமைப்பால் வெல்வது மிக கடினம் ।

அத்துடன் வவுனியா, முல்லைத்தீவில் எந்தவொரு கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை।

எனவே நீங்கள் செய்ய நினைப்பது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்। இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ வாக்குகள் மத ரீதியாக பிரியும்போது முஸ்லிம்களுக்கு அது வாய்ப்பாக அமையும்। அல்லது தமிழர் அல்லாத தரப்புக்கு வாய்ப்பாக அமையும்।

இருந்தாலும் மன்னாரில் கத்தோலிக்கர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட்தாக அறிகிறேன்। அவர்களும் கத்தோலிக்க ஆயர்களின் துணையுடன் ஒரு சடடதரணி தலைமையில் போட்டியிடப்போகிறார்கள்। எனவே அவர்கள் நிச்சயமாக மன்னாரில் வெல்லுவார்கள்।

இது தமிழர்களுக்கு ஒரு பின்னடைவே . நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।

அப்போ வட கிழக்கிலுள்ள கிறீத்துவர்களின் நிலை ? அவர்கள் தமிழர்கள் இல்லையா? இது பிற மாவட்டங்களிலுள்ள கிறீத்துவர்களை காட்டிக் கொடுக்கும் செயல் இல்லையா ? முத்தையா (😜) முரளீதரனின் செய்கைக்கும் இதற்கும் வேறுபாடு இல்லையே ?

 

ஐயா பிரபாகரா ! நீ எங்கேயய்யா இருக்கிறீர்? உன்னுடைய சனத்தின் கேவல நிலையை ஒரு தரம் திரும்பிப் பாருமையா!

இந்த கேடுகெட்ட இனத்துக்காகவா நீயும் உன்னுடைய பிள்ளைகளும் உயிர் கொடுத்தீர் !

47 minutes ago, Kapithan said:

அப்போ வட கிழக்கிலுள்ள கிறீத்துவர்களின் நிலை ? அவர்கள் தமிழர்கள் இல்லையா? இது பிற மாவட்டங்களிலுள்ள கிறீத்துவர்களை காட்டிக் கொடுக்கும் செயல் இல்லையா ? முத்தையா (😜) முரளீதரனின் செய்கைக்கும் இதற்கும் வேறுபாடு இல்லையே ?

 

ஐயா பிரபாகரா ! நீ எங்கேயய்யா இருக்கிறீர்? உன்னுடைய சனத்தின் கேவல நிலையை ஒரு தரம் திரும்பிப் பாருமையா!

இந்த கேடுகெட்ட இனத்துக்காகவா நீயும் உன்னுடைய பிள்ளைகளும் உயிர் கொடுத்தீர் !

கபித்தான், என்ன செய்வது। இப்படி இந்துக்கள் தனியே போனால் , கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் தனியேதான் போக வேண்டும்। வேறு ஏதும் வழி இருப்பதாக தெரியவில்லை।

பார்ப்பம் மாற்று  தலைமையும் வந்துவிட்ட்து।  இணையப்போராளிகளும் இருக்கிறார்கள்। அவர்களாவது எதாவது செய்யட்டும்।பிரபாகரன் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது।

யுத்தம் நடந்த காலத்தில் இந்து குருமார் மக்களுக்காக சர்வதேசத்திடம் நியாயம் கேட்டதான எனக்கு ஞாபகம் இல்லை. ஒப்புக்கு சில சர்வமத பேரணிகளில் கலந்து கொண்டிருப்பார்கள். அதைக்கூட  ஒழுங்கு செய்தவர்கள் வேறு அமைப்புக்கள் தான். அதே வேளை யுத்த காலத்தில் ஐரோப்பிய பத்திரிகளில் புலிகளுக்கு எதிராகவும் தமிழரின் போராட்டதை கொச்சைப்படுத்தி  வந்த அத்தனை கட்டுரைகளுக்கும் மூலம் எது என்று பார்த்தால் அத்தனையும் டெல்லியில் இருந்து இந்து பார்பன பத்திரிகையாளர்களால் எழுத‍ப்பட்டவையாகவே இருந்தன.  இந்த லட்சனத்தில் தமிழர்களிடம் மத ரீதியான பிளவுகளை உருவாக்க  முனையும் இப்படியான மதகுருமார் என்ற விஷ செடிகளை தமிழ் மக்கள் இணைந்து தோற்கடிப்பதோடு நில்லாது வேரறுக்க வேண்டும். 

Edited by tulpen

  • தொடங்கியவர்
2 hours ago, nedukkalapoovan said:

இந்த நிலைக்கு காரணம்.. சிக்கல்களை சரியாகக் கையாளத் தெரியாத... தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம் சும் மாவை சாவை கும்பலே.

அவர்கள்.. தமிழர்களை முற்றாக அரசியல் அநாதைகளாக்கும் வேலையையே 2009 மே க்குப் பின்னிருந்து செய்து வருகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்க விடயம். 

இதனைச் சீர்செய்ய வேண்டியது தமிழர் மண்ணின் மீது மக்கள் மீது பற்றுறுதி கொண்ட இளையோரே. 

 

ஆம், கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்பின் தோல்வியே காரணம். அவர்கள் பதவியில் இருந்து மக்களை ஏமாற்றியதால் ஒரு அரசியல் தலைமை இல்லாத இனமாக மாறி உள்ளோம். 

விளைவு - இவ்வாறான தன்னிலை முன்னெடுப்பு. 

ஆனால், இறுதியில் நீங்கள் குறிப்பிட்டது போன்று, அடுத்த அரசியல் தலைமுறை உருவாக்கம் பெற இது வழிகோலுகின்றது.    

  • கருத்துக்கள உறவுகள்

fNeMN5.gifமன்னார்ஸ்தான்..

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ, தமிழரசுகட்சி, த .தே. கூட்டணியில் எத்தனை கிறிஸ்தவ உறுப்பினர் இருக்கிறார்கள்? ஓரிருவரை தவிர எல்லோருமே இந்துக்கள் தானே. இதுபற்றி கிறிஸ்தவர்கள் யாரும் கவலைப்படவில்லையே. இப்போமட்டும் இந்துக்களுக்கு ஏனிந்த வீணான கவலை? முன்னாள்  மன்னார் ஆயர், சிங்கள அரசியலின் அநீதிகளை  எடுத்துக்காட்டும்போது கிறிஸ்தவன், இந்து என்கிற பேதம் இல்லாமல் தமிழர் என்கிற ஒருமைப்படியே நடந்தார். கிறிஸ்தவர்களில் என்ன பெரிய பிழையைக்கண்டு இப்பிடி பிரிச்சுக்கொண்டு நிக்கினம். பதவி, பணம், சொந்தப் புத்தி இல்லை.  மக்களை செம்மறிக் கூட்டம் எண்டு நினச்சு மேய்க்க நிக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎18‎/‎2020 at 10:41 PM, குமாரசாமி said:

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

ஓம் அண்ணா ...இல்லாட்டில் ஒரு காலத்தில் முஸ்லீம்களது நாடாயிருக்கும் 

 

On ‎2‎/‎18‎/‎2020 at 10:32 PM, Kapithan said:

எப்படி 

சாதிக்கொரு கட்சி, சமயத்திற்கு ஒரு கட்சி என்றா ?

குட்டக்  குட்ட ஓரளவுக்குத் தான் குனியலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

ஓம் அண்ணா ...இல்லாட்டில் ஒரு காலத்தில் முஸ்லீம்களது நாடாயிருக்கும் 

 

குட்டக்  குட்ட ஓரளவுக்குத் தான் குனியலாம் 

சமயத்திற்கொரு கட்சிச்,  சாதிக்கொரு கட்சி தொடங்கலாம் என்கிறீர்கள். 

நானும் இரதியை ஓரளவு வளர்ந்தவர் என நினைத்திருந்தேன். இப்பத்தான் தெரிகிறது வினாயகமூர்த்தியருக்கு சிறிய வயதிலும் மகள் இருக்கிறார் என்று. 😜

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2020 at 7:42 PM, Vankalayan said:

 நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।

மன்னார் மறைமாவட்டத்தின் கவலை, உண்மையான எல்லா தமிழனுக்கும் உள்ள கவலை. வாக்குறுதிகளை காெடுத்து, வாக்கு வாங்கி பாராளுமன்றம் செல்பவர்கள் அந்த மக்களை, அவர்களது தேவைகளை தட்டி கழித்து, சர்வாதிகாரிகளைப் பாேல் அவர்களுக்கு பதிலளிப்பது ஏற்புடையதல்ல. அதனாலேயே இந்துவான விக்கினேஸ்வரனை அரசியலுக்கு காெண்டுவர ஊக்கம் காெடுத்தது. ஆனால் சதி எல்லாவற்றையும் பழைய நிலையிலிருந்து நகர விடவில்லை. அதனால் இப்படி சிந்தித்து செயற்பட்டு உரிமைகளை பெற நினைக்கலாமே ஒழிய, இந்துக்களுக்கு எதிராகவாே, அரச நன்மைகளுக்காகவாே செயற்படமாட்டார்கள். செயற்படவும் கூடாது. அப்படி செயற்பட்டால் அது உண்மையான கத்தாேலிக்க, அப்பாேஸ்தலிக்க திருச்சபையாகாது. சில விலைபாேனதுகள் அவ்வாறு கருதலாம் அல்லது அவர்களையும் மாற்ற நினைக்கலாம். அது தவறானது. சிலர் தீட்டிய மரத்தில் கூர் பார்க்க நினைத்து, அவதூறு செய்வதன் மூலம் தங்கள் சின்னத்தனத்தையும், நன்றிகெட்ட தனத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

நானும் இரதியை ஓரளவு வளர்ந்தவர் என நினைத்திருந்தேன். இப்பத்தான் தெரிகிறது வினாயகமூர்த்தியருக்கு சிறிய வயதிலும் மகள் இருக்கிறார் என்று.

அது அவர்களின் தப்பல்ல, சுயநலத்திற்கு விலைபாேகிறவர்களின்பாெதுப்பண்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.