Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, goshan_che said:

 

 

 

Quality of life (டிரைவர், வேலையாள், சனத்திடம் மரியாதை, சிறப்பு அதிதி அழைப்புகள் என) நல்லாய் இருந்தாலும், சம்பளத்தை ஒப்பிட்டோ, அல்லது பிள்ளைகள் எதிர் காலத்தை நினைத்தோ, ஊரில் என்னிடம் இங்கே வருவதை பற்றி வினவிய டாக்டர்கள் அதிகம்.

 


 

Quality of Life உள்ள வைத்தியர்கள் யாரும் விரும்பி வெளியில் செல்வதில்லை.

எல்லா வைத்தியர்களும்,  Quality of Life மனிதர்களாக, இலங்கையிலோ, இங்கிலாந்திலோ இல்லை.

அப்படி வந்தவர்கள், மீண்டும் சென்றால் அவர்களின் நிலை பழைய நிலைக்கு மீண்டு வருவதற்கு நீண்ட நாள் செல்லும்.  அதனால் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply

எப்பிடித்தான் எந்தப்பக்கத்தால கதைச்சாலும் முடிவு கிடைக்காது.... வா மச்சி ஒரு தம் இழுத்து கொஞ்சம் டென்சனைக்குறைப்பம்........

HeartyVelvetyAnnelida-size_restricted.gi

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, vasee said:

அனைத்தும் சரி ஆனால் ஏன் படித்தவர்களிடம் தன்னம்பிக்கை மிகவும் குறைவாகவிருக்கின்றது?

இது திரிக்கு சம்பந்தமில்லா கேள்வி ஆனாலும் தோன்றியது


 

தொடர் தோல்விகள், மனைவி, பிள்ளைகள் பிரச்சனை, சமூகத்தால் ஏற்படும் அழுத்தங்கள்,  எதிர்பார்த்தது கிடைக்காமை, இன்னும் பல புறக் காரணிகள் -  படித்த மனிதனை மேலும் மேலும் பலவீனமாக்கி, தன்னம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது.

படிக்காத மேதைகள், இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டாலும், தனது தோல்விகளை நினைத்து, சிந்திப்பதில்லை. அவர்கள் அடுத்த வேளை சோற்றைப்பற்றி, மட்டும் சிந்திப்பவர்கள். இதனால், அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம்.

இறை நம்பிக்கை, மனிதனிடம் எப்போது குன்றி விடுகிறதோ, அப்போது தன்னம்பிக்கையும் குறையும் -  இது எனது நம்பிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für vadivelu sleeping gif

என்ரை யாழ்கள அனுபவத்திலை ஒரு திரியுக்கையே பாய் விரிச்சு படுத்த ஆளெண்டால் நம்ம கோசான் தான்.....😂
பிளீஸ்.....தயவு செய்து குறட்டை விடாமால் நித்திரை கொள்ளவும்.😎


இல்லாட்டி மனிசனுக்கு வெளியிலை போக வழி தெரியேல்லையோ தெரியாது..🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für vadivelu sleeping gif

என்ரை யாழ்கள அனுபவத்திலை ஒரு திரியுக்கையே பாய் விரிச்சு படுத்த ஆளெண்டால் நம்ம கோசான் தான்.....😂
பிளீஸ்.....தயவு செய்து குறட்டை விடாமால் நித்திரை கொள்ளவும்.😎


இல்லாட்டி மனிசனுக்கு வெளியிலை போக வழி தெரியேல்லையோ தெரியாது..🤔

தாத்தா இந்த‌ திரிக்குள்ள‌ என்ன‌ ந‌ட‌க்குது என்று என‌க்கு சுத்த‌மாய் தெரியாது , அது தான் பேசாம‌ ந‌ல்ல‌ பிள்ளை ஆட்ட‌ம் இருக்கிறேன் /

விருந்துன‌ரா வ‌ந்த‌ ந‌ம்ம‌ ஆதியே ரென்ச‌னில‌ சிக‌ரேட் ப‌த்துகிறார் என்றால் பாருங்கோவேன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für vadivelu sleeping gif

என்ரை யாழ்கள அனுபவத்திலை ஒரு திரியுக்கையே பாய் விரிச்சு படுத்த ஆளெண்டால் நம்ம கோசான் தான்.....😂👨‍👩‍👧‍👧😡
பிளீஸ்.....தயவு செய்து குறட்டை விடாமால் நித்திரை கொள்ளவும்.😎


இல்லாட்டி மனிசனுக்கு வெளியிலை போக வழி தெரியேல்லையோ தெரியாது..🤔

அப்போ நெடுக்காலபோவான் என்ன தக்காளி தொக்கா..?😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

தாத்தா இந்த‌ திரிக்குள்ள‌ என்ன‌ ந‌ட‌க்குது என்று என‌க்கு சுத்த‌மாய் தெரியாது , அது தான் பேசாம‌ ந‌ல்ல‌ பிள்ளை ஆட்ட‌ம் இருக்கிறேன் /

விருந்துன‌ரா வ‌ந்த‌ ந‌ம்ம‌ ஆதியே ரென்ச‌னில‌ சிக‌ரேட் ப‌த்துகிறார் என்றால் பாருங்கோவேன் 😁

ஒரு சில இடங்களிலை  விசயம் தெரியாமல் இருக்கிறதுதான் நல்லது...ஆரோக்கியமானதும் கூட...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்போ நெடுக்காலபோவான் என்ன தக்காளி தொக்கா..?😡

நீங்கள் சொல்லுறது சரிதான்...எண்டாலும்........😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Bildergebnis für vadivelu sleeping gif

என்ரை யாழ்கள அனுபவத்திலை ஒரு திரியுக்கையே பாய் விரிச்சு படுத்த ஆளெண்டால் நம்ம கோசான் தான்.....😂
பிளீஸ்.....தயவு செய்து குறட்டை விடாமால் நித்திரை கொள்ளவும்.😎


இல்லாட்டி மனிசனுக்கு வெளியிலை போக வழி தெரியேல்லையோ தெரியாது..🤔

 நானும் ஒவ்வொரு முறையும் போகலாம் எண்டு பார்த்தா ஆளாளுக்கு ஒரு கேள்வி, ஒரு கருத்து. இப்ப கடைசியா -நீங்கள்😂

ஆனா நீங்கள் எல்லாரும் முறுகினாலும் சுமே அன்ரி ஹப்பி.

2020-21 இல அதிகம் கருத்து பரிமாறிய திரியா அன்ரிண்ட திரிதான் வரப்போது. 

3 பாகத்துகே 13 பக்கம். சான்சே இல்லை.

54 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்போ நெடுக்காலபோவான் என்ன தக்காளி தொக்கா..?😡

புலவரே,

உப்பிடி எல்லாம் கேக்கப்படாது. 

ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறுகண்ணில் நெய் என்பதுதான் அண்ணரின்ர அடிப்படை கொள்கை, கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் 😂.

அவருக்கு இங்க சில “வெள்ளடியன்கள்” இருக்கு. அவையளை எப்பவும் தூக்கி மடியில வச்சு கொஞ்சல்தான். 

நாங்கள் வெறும் “கறுவல்”. பின்னங்காலா ஒரு எத்து 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

 நானும் ஒவ்வொரு முறையும் போகலாம் எண்டு பார்த்தா ஆளாளுக்கு ஒரு கேள்வி, ஒரு கருத்து. இப்ப கடைசியா -நீங்கள்😂

ஆனா நீங்கள் எல்லாரும் முறுகினாலும் சுமே அன்ரி ஹப்பி.

2020-21 இல அதிகம் கருத்து பரிமாறிய திரியா அன்ரிண்ட திரிதான் வரப்போது. 

3 பாகத்துகே 13 பக்கம். சான்சே இல்லை.

நானும் அதேதான் யோசிச்சனான்.அன்ரியும் கொஞ்சநாள் விடிய விடிய இதுக்கை  நிண்டு சிவராத்திரி விரதம் எல்லே பிடிச்சவ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

அனைத்தும் சரி ஆனால் ஏன் படித்தவர்களிடம் தன்னம்பிக்கை மிகவும் குறைவாகவிருக்கின்றது?

இது திரிக்கு சம்பந்தமில்லா கேள்வி ஆனாலும் தோன்றியது

 

நீங்கள் அப்படியானவர்களைப் பற்றி கூறுகிறீர்கள் என்பதை அனுமனித்து...

அவர்கள் வாழ்க்கையைப் படிக்கவில்லை. புத்தகப் பூச்சிகளுக்கு வெளி உலகம் தெரியாது. அவர்களோடு ஒப்பிடுகையில் கோட்டை ரயில் நிலையத்தில் பெட்டி தூக்குபவர் உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தப்பிப் பிழைப்பர். வெளினாடுகளில் உள்ள நம்மவர்களைக் கவனித்தீரென்றால் சிலவற்றை அவதானிக்கலாம். கல்வி அறிவு குறைந்த ஆனால்  கடின உழைப்புள்ள நம்மவர்களில் அனேகர் செல்வ வளத்தில் நிறைவாயும் தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து வாழ்க்கையின் வெற்றிக்கு வழி கோலியிருப்பர். ஆனால் இலங்கையில் நன்கு படித்த அனேகர் வெளினாட்டு வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்ல முடியவில்லை. காரணம் அவர்களால் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு Level க்கு கீள் இறங்கவோ மேல் போகவொ தெவையான வெளி உலக அணுபவங்கள் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மாங்குயில் said:


 

 பிரதர் கோஷான், இப்பொழுது பெரிதாக கொழும்பில் எந்த பாடசாலையில் படித்தார் என்று தராதரம் பார்த்து, வேலை வழங்குவதில்லை.

என்னுடன் நேர்முகத் தேர்விற்கு வந்தவர்களில் ஒருவர், ஆனந்தா  கல்லூரி.

இன்னொருவர், இசிபதான கல்லூரி. மற்றவர்களை விசாரிக்கவில்லை. 

நான் கொழும்பில் A/L மட்டும்தான் படித்தேன். அது முன்னணிப் பாடசாலையல்ல. 
 

நீங்கள் கூறுவதை நாம்நம்பத்தான் வேண்டும். ஏனெனில் நீங்கள் ஆண்குயிலா பெண் குயிலா என்று கூட எமக்குத் தெரியவில்லை.😂

 

ஏனெனில் எனக்கு கொழும்புப் பள்ளிகள் பற்றியும் தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மாங்குயில் said:



 

 

 

நீங்கள் எழுதியிருப்பதை என்னால் மட்டும்தான் வாசிக்க முடியவில்லையா ???😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மாங்குயில் said:


பிரதர் கோஷான்,  

எனது மச்சான்,  Hatfield University இல், இன்ஜினியரிங் படித்தவர்.  அவர் படித்தவுடனேயே வேலை கிடைத்துவிட்டது.

அவர் நேர்முகத்தேர்விற்கு சென்ற சமயம்,  Oxford  University இல் படித்த ஒருவரும், லண்டனில் பிரபலமான ஒரு University இல் படித்த ஒருவரும், நேர்முகத் தேர்விற்கு வந்திருந்தார்களாம்.

இவர்கள் இருவருக்கும் வேலை கிடைக்கவில்லையாம்.

எனது மச்சானுக்கும்,   Liverpool இல் உள்ள யூனிவர்சிட்டி ஒன்றில் படித்த ஒருவருக்கும் வேலை கிடைத்ததாம்.

Oxford இல் படித்தவருக்கு, ஏன் வேலை கிடைக்கவில்லை என்று பின்னாளில்தான் தெரிய வந்ததாம்.

அவருக்கு தகைமைக்கு அதிகமான தகைமை இருந்ததுதான் காரணமாம்.

That means, the candidate is over-qualified for that Post.

அளவுக்கு அதிகமான தகமை உள்ளவர்களுக்கும் வேலை கிடைக்காது என்று அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் உங்கள் மச்சானுக்குத் தெரிந்த தமிழர்கள் இருவர் தான் அந்த நேர்முகத் தேர்வுக்குப் போயிருக்கிறார்கள் போல இருக்கே. ஏனெனில் அவர்களுக்கு வேலை கிடைக்காத விடயம் உடனேயே உங்கள்  மச்சானுக்குத் தெரிந்திருக்கே. அதிலும் நேர்முகத் தேர்வில் ஏன் வேலை அவர்களுக்குத் தரவில்லை என்றும் கூடக் கூறியிருக்கிறார்கள் உங்கள் மச்சானுக்கு.🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மாங்குயில் said:


 

இங்கிலாந்தில் GP ஆக இருந்து மாரடிப்பதைவிட,  ஒருவர் MBBS ஆக இருந்தால் இலங்கையில் நன்றாக உழைக்கலாம்.

குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கலாம் அங்கே.

என் மகளுக்கு லண்டனில் அல்லது யேர்மனியில் பிறந்த பையன் தான் வேண்டும் என்று விளம்பரத்தில் போட் ட பின்னரும் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் வைத்தியராக இருக்கும் ஒருவரின் அக்கா எம்மிடம் தொடர்புகொண்டு சாதகத்தையும் வற்சப்பில் போட்டார். நான் ஏன் உங்கள் தம்பிக்கு இலங்கையில் ஏற்ற பெண் ஒருவரைப் பார்க்கவில்லை என்று கேட்டதற்கு தம்பிக்கு லண்டன் வர விருப்பம் என்று அவர் நேரடியாகவே கூற நான் அவர்களை நிராகரித்துவிட்டேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஆதிவாசி said:

எப்பிடித்தான் எந்தப்பக்கத்தால கதைச்சாலும் முடிவு கிடைக்காது.... வா மச்சி ஒரு தம் இழுத்து கொஞ்சம் டென்சனைக்குறைப்பம்........

HeartyVelvetyAnnelida-size_restricted.gi

 

என்ன சகாரா வந்து எதையும் எழுதாமல் செல்கிறீர்கள் 😂

10 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für vadivelu sleeping gif

என்ரை யாழ்கள அனுபவத்திலை ஒரு திரியுக்கையே பாய் விரிச்சு படுத்த ஆளெண்டால் நம்ம கோசான் தான்.....😂
பிளீஸ்.....தயவு செய்து குறட்டை விடாமால் நித்திரை கொள்ளவும்.😎


இல்லாட்டி மனிசனுக்கு வெளியிலை போக வழி தெரியேல்லையோ தெரியாது..🤔

 

9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்போ நெடுக்காலபோவான் என்ன தக்காளி தொக்கா..?😡

 

ராத்திரி இது ரெண்டையும் வாசிச்சு நான் சிரித்த சிரிப்பில் மனிசன் கட்டிலாலை தள்ளி விழுத்தாத குறை😂😂

8 hours ago, goshan_che said:

 நானும் ஒவ்வொரு முறையும் போகலாம் எண்டு பார்த்தா ஆளாளுக்கு ஒரு கேள்வி, ஒரு கருத்து. இப்ப கடைசியா -நீங்கள்😂

ஆனா நீங்கள் எல்லாரும் முறுகினாலும் சுமே அன்ரி ஹப்பி.

2020-21 இல அதிகம் கருத்து பரிமாறிய திரியா அன்ரிண்ட திரிதான் வரப்போது. 

3 பாகத்துகே 13 பக்கம். சான்சே இல்லை.

புலவரே,

உப்பிடி எல்லாம் கேக்கப்படாது. 

ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறுகண்ணில் நெய் என்பதுதான் அண்ணரின்ர அடிப்படை கொள்கை, கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் 😂.

அவருக்கு இங்க சில “வெள்ளடியன்கள்” இருக்கு. அவையளை எப்பவும் தூக்கி மடியில வச்சு கொஞ்சல்தான். 

நாங்கள் வெறும் “கறுவல்”. பின்னங்காலா ஒரு எத்து 😂

🤗😎

hin_thanks_cs-2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

 

நீங்கள் அப்படியானவர்களைப் பற்றி கூறுகிறீர்கள் என்பதை அனுமனித்து...

அவர்கள் வாழ்க்கையைப் படிக்கவில்லை. புத்தகப் பூச்சிகளுக்கு வெளி உலகம் தெரியாது. அவர்களோடு ஒப்பிடுகையில் கோட்டை ரயில் நிலையத்தில் பெட்டி தூக்குபவர் உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தப்பிப் பிழைப்பர். வெளினாடுகளில் உள்ள நம்மவர்களைக் கவனித்தீரென்றால் சிலவற்றை அவதானிக்கலாம். கல்வி அறிவு குறைந்த ஆனால்  கடின உழைப்புள்ள நம்மவர்களில் அனேகர் செல்வ வளத்தில் நிறைவாயும் தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து வாழ்க்கையின் வெற்றிக்கு வழி கோலியிருப்பர். ஆனால் இலங்கையில் நன்கு படித்த அனேகர் வெளினாட்டு வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்ல முடியவில்லை. காரணம் அவர்களால் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு Level க்கு கீள் இறங்கவோ மேல் போகவொ தெவையான வெளி உலக அணுபவங்கள் இல்லை.

 

வெளி உலக அனுபவம் இல்லையென்பது சிலருக்குப் பொருந்தினாலும் படித்தவர்கள் சட்டம், ஒழுங்கு, மான அவமானம், தண்டனைகள் என்று பலவற்றையும் சிந்தித்து சிலவற்றைச் செய்யத் தயங்கும்போது  சாதாரணர்கள் அவை எவை பற்றியும் கவலை கொள்ளாது தாம் எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற நோக்கம்மட்டுமே மனதில் கொண்டு சிலர் சட்டத்துக்குப் புறம்பான பல வழிகளில் பணமீட்டியும்  நன்கு வசதியாக வாழ்கின்றனர் என்று கொள்ளலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் உங்கள் மச்சானுக்குத் தெரிந்த தமிழர்கள் இருவர் தான் அந்த நேர்முகத் தேர்வுக்குப் போயிருக்கிறார்கள் போல இருக்கே. ஏனெனில் அவர்களுக்கு வேலை கிடைக்காத விடயம் உடனேயே உங்கள்  மச்சானுக்குத் தெரிந்திருக்கே. அதிலும் நேர்முகத் தேர்வில் ஏன் வேலை அவர்களுக்குத் தரவில்லை என்றும் கூடக் கூறியிருக்கிறார்கள் உங்கள் மச்சானுக்கு.🤔

 


 


 

 

நேர்முகத்தேர்விற்கு வந்தவர்கள் தமிழர்கள் அல்ல.

இந்த நேர்முகத்தேர்வு நடந்தது 7 வருடங்களுக்கு முன். 

எனது மச்சான், அந்த இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணியாற்றுவது,  Senior Position இல்.

Engineering Field  இல் உள்ளவர்களை வழிநடத்துபவரும் அவர்தான்.  

ஆக,   Oxford University இல் படித்தவரின் நேர்முகத் தேர்வு தட்டிக் கழிக்கப்பட்டது பின்னாளில் தெரிய வாய்ப்பிருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் மகளுக்கு லண்டனில் அல்லது யேர்மனியில் பிறந்த பையன் தான் வேண்டும் என்று விளம்பரத்தில் போட் ட பின்னரும் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் வைத்தியராக இருக்கும் ஒருவரின் அக்கா எம்மிடம் தொடர்புகொண்டு சாதகத்தையும் வற்சப்பில் போட்டார். நான் ஏன் உங்கள் தம்பிக்கு இலங்கையில் ஏற்ற பெண் ஒருவரைப் பார்க்கவில்லை என்று கேட்டதற்கு தம்பிக்கு லண்டன் வர விருப்பம் என்று அவர் நேரடியாகவே கூற நான் அவர்களை நிராகரித்துவிட்டேன். 

 



 

 கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் வைத்தியராக இருப்பவர், புதிதாக MBBS பட்டம் பெற்றவராக இருப்பார். 

MBBS பட்டம் எடுத்தவுடன், உடனே உழைத்துக் குவிக்க முடியாது. 

அதற்கு அனுபவமும் காலமும் வேண்டும்.

MBBS  பட்டம் இலங்கையில் எடுத்தவுடன், வெளிநாட்டில் வேலை செய்வதற்கு பலர் ஆர்வம் காட்டுவர்.

Junior Doctors இற்கு, இலங்கையில் சம்பளம் குறைவு. 

UK யில் கூட,   ஆரம்ப  சம்பளம்,   28K  தானாம்.

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெளி உலக அனுபவம் இல்லையென்பது சிலருக்குப் பொருந்தினாலும் படித்தவர்கள் சட்டம், ஒழுங்கு, மான அவமானம், தண்டனைகள் என்று பலவற்றையும் சிந்தித்து சிலவற்றைச் செய்யத் தயங்கும்போது  சாதாரணர்கள் அவை எவை பற்றியும் கவலை கொள்ளாது தாம் எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற நோக்கம்மட்டுமே மனதில் கொண்டு சிலர் சட்டத்துக்குப் புறம்பான பல வழிகளில் பணமீட்டியும்  நன்கு வசதியாக வாழ்கின்றனர் என்று கொள்ளலாம். 



சட்டத்திற்கு புறம்பான  செயல்கள் செய்வது, அதிகமானோர் படித்த கூட்டம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெளி உலக அனுபவம் இல்லையென்பது சிலருக்குப் பொருந்தினாலும் படித்தவர்கள் சட்டம், ஒழுங்கு, மான அவமானம், தண்டனைகள் என்று பலவற்றையும் சிந்தித்து சிலவற்றைச் செய்யத் தயங்கும்போது  சாதாரணர்கள் அவை எவை பற்றியும் கவலை கொள்ளாது தாம் எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற நோக்கம்மட்டுமே மனதில் கொண்டு சிலர் சட்டத்துக்குப் புறம்பான பல வழிகளில் பணமீட்டியும்  நன்கு வசதியாக வாழ்கின்றனர் என்று கொள்ளலாம். 

எங்கேயும் எல்லாவற்றிலும் புற நடைகள் உண்டு. அவற்றை கருத்திலெடுக்க வேண்டிய தேவை இல்லை. எல்லா சமூகங்களிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:


சட்டத்திற்கு புறம்பான  செயல்கள் செய்வது, அதிகமானோர் படித்த கூட்டம்தான். 

அதற்குப் பெயர் வெட்டி ஓடுவது. ஓட்டைக்குள்ளால புகுந்து வெளியே வாறது. இந்த விளையாட்டு நடைபெறும் முக்கியமான இடம் Taxation .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

தாத்தா இந்த‌ திரிக்குள்ள‌ என்ன‌ ந‌ட‌க்குது என்று என‌க்கு சுத்த‌மாய் தெரியாது , அது தான் பேசாம‌ ந‌ல்ல‌ பிள்ளை ஆட்ட‌ம் இருக்கிறேன் /

விருந்துன‌ரா வ‌ந்த‌ ந‌ம்ம‌ ஆதியே ரென்ச‌னில‌ சிக‌ரேட் ப‌த்துகிறார் என்றால் பாருங்கோவேன் 😁

இப்பவே கண் தெரியாமல் வந்திட்டுதா ???🤔😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெளி உலக அனுபவம் இல்லையென்பது சிலருக்குப் பொருந்தினாலும் படித்தவர்கள் சட்டம், ஒழுங்கு, மான அவமானம், தண்டனைகள் என்று பலவற்றையும் சிந்தித்து சிலவற்றைச் செய்யத் தயங்கும்போது  சாதாரணர்கள் அவை எவை பற்றியும் கவலை கொள்ளாது தாம் எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற நோக்கம்மட்டுமே மனதில் கொண்டு சிலர் சட்டத்துக்குப் புறம்பான பல வழிகளில் பணமீட்டியும்  நன்கு வசதியாக வாழ்கின்றனர் என்று கொள்ளலாம். 

பணமீட்டுவதல்ல சகோதரி கேள்வி தன்னம்பிக்கை பற்றியது கேள்வி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


திருமணப் பேச்சு 4

கணவர்  : வணக்கம்

அவர் : கலோ யார் பேசுறீங்கள்?

கணவர்  :  நான்  உதயன் கதைக்கிறன். என்னுடைய மகளுக்கு பொருத்தமான பையனைத் தேடுறம். உங்கட மகனுக்கும் நீங்கள் பார்க்கிறதாய் என் நண்பன் குமார் உங்கள் போன் இலக்கமும் மகனின் சாதகமும் தந்தவர்.
நாங்கள் பொருத்தம் பார்த்ததில 80 %  பொருத்தம் இருக்கெண்டு சாத்திரி சொன்னவர். அதுதான் மேற்கொண்டு உங்களோட கதைப்பம் எண்டு ............

அவர் : குமாரோ ??? எந்தக் குமார்? என்னட்டை ஒரு வார்த்தையும் அவர் சொல்லேல்லை. எங்க இருக்கிறவர்?

கணவர் : கரோவில சொலிசிற்றராய் இருக்கிறார். நேற்று உங்களோட கதைச்சதெண்டு சொன்னாரே. மகளின் படமும் உங்களுக்குப் போட்டதாகச் சொன்னார்.

அவர் : ஓமோமோமோம் ஓ ஐஸீ அது நீங்கள் தானா ......உங்கடமகள் என்ன படிச்சவ?

கணவர் : சிவில் இன்ஜினியர். உங்கட மகனும் இன்ஜினியர் எண்டு சொன்னார்.

அவர் :  ஓமோம் மகன் இப்ப திரீ இயேர்சா வேலை பார்க்கிறார். சலரி இயேளி  58 தவுசண்ட்.  உங்கட மகளும் வேலைபார்க்கிறாவோ அல்லது ...........

கணவர் : அவவும் இரண்டு வருடங்களா வேலை செய்யிறா.

அவர் : எவ்வளவு சம்பளம் எடுப்பா. ஒரு போர்ட்டி எடுப்பாவே ???

கணவர் : 38  தான் எடுக்கிறா. போகப் போகக் கூடும். நாங்கள் நேர்ல ஒருக்கா சந்திச்சுக் கதைப்பமா?

அவர் : உங்கட மகளை எனக்கும் மனிசிக்கும் நல்லாய் பிடிச்சுது. மகனிட்டை நாளைக்குத்தான் காட்டவேணும்.

கணவர் : சரி அவரிட்டைக் காட்டீற்று பிடிச்சிது எண்டா  சொல்லுங்கோ. மேற்கொண்டு நேர்ல கதைப்பம்.

அவர் : பொறுங்கோ தம்பி அவசரப்படாதேங்கோ. இன்னுமொரு விஷயம் கேட்கவேணும்.

கணவர் : சொல்லுங்கோ

அவர் : எவ்வளவு சீதனம் தருவியள் எண்டு சொன்னால் மேற்கொண்டு கதைப்பம்.

கணவர் : சீதனமோ ?? யாருக்கு சீதனம்??

அவர் : நாங்கள் மகனை நாலு வருசம் சொந்தக் காசில படிப்பிச்சனாங்கள் தம்பி.

கணவர் : நாங்களும் தான் எங்கட பிள்ளையைப் படிப்பிச்சு விட்டிருக்கிறம்.

அவர் : உங்களுக்குத் சீதனம் தர விருப்பம் இல்லை எண்டால் நீங்கள் வேறை ஆரையன் பாருங்கோ.

கணவர் : சீதனம் தந்து உங்கட மகனுக்கு கட்டுறநேரம் என்ற மகளை ஒரு கழுதைக்கு கட்டிவைக்கலாம்.

டொங் - கணவர் போனை அடித்து வைக்கும் சத்தம் குசினிவரை கேட்கிறது.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ணக்கம் சுமே

சர்வதேச மகளிர்தின வாழ்த்துகள்

“கல்யாணம் பேசட்டோ” இன்றைய நாளில் பேசப்படவேண்டிய விவாதிக்க வேண்டிய விடயம்.

இந்த தலைப்பில் எழுத முற்படும்போது “திருமணம் அவசியமா” என்ற கருத்து என்னுள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. இக்கேள்வி எனக்குள் எழுவதற்கான காரணங்கள் பல அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

 

முதலில் திருமணம் பேசுதல் என்பது ஒரு ஆணோ பெண்ணோ தம்மை தம்முடைய வாழ்வை நிர்ணயிக்கும் திறமையற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் பெற்றோரால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஆக பெற்றோரால் சுட்டிக்காட்டப்படும் வரன்களுக்குள் முடக்கப்பட்டதாகவே அந்த ஆண், பெண் இருவருக்குமான கனவு குறுக்கப்படுகிறது. பெற்றோரால் இந்த பரந்த வெளியில் விரிந்து பயணிக்கமுடியாது. புலம் பெயர்ந்து வாழும் பிள்ளைகளால் முடியும், ஆனால் அவர்களுக்கான அனுமதி பெற்றோர் தமக்குள் வகுத்திருக்கும் எல்லை மீறிப் போனால் மாத்திரமே கிடைக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த நிலைக்குள் தத்தளிக்கும் பிள்ளைகள் அதிகம். பெற்றோரை மீறுவதா இல்லை தமக்கான எல்லைகளை பெற்றோர் சமூகத்திற்கு ஏற்ப மட்டுப்படுத்திக் கொள்வதா என்பதில் இருதலை கொல்லியாக தடுமாறி தோற்றுப்போனவர்களும் உண்டு. வெற்றி பெற்றவர்களும் உண்டு. ஆக திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் குடும்ப, சமூக வாழ்விற்கேற்ப மாறுபடும்.

 

முற்போக்கு என்று எடுத்துக் கொண்டால் ஆணோ , பெண்ணோ தனக்கான துணையை தானே தெரிவு செய்து வாழ்வது ஆகும். அங்கு இனம்,  சாதி , மதம் , பிரதேசம், தராதரம் , சாதகம் என்பன விடை பெற்றிருக்கும். அவர்கள் திருமணம் செய்வது கூட அவர்கள் விரும்பினால் மாத்திரமே. இதில் துணை மாற்றங்கள் கூட அடிக்கடி நிகழ வாய்ப்புண்டு. இதை நமது சமூகம் மிருகவாழ்விற்குள் உள்ளடக்கிவிடும். ஆக கூடிய சுதந்திரம் என்பதை நம்மால் ஒருகாலமும் ஏற்றுக்கொள்ளமுடியாது. தனது இனத்திற்கான வாழ்வியல் பண்பை எந்த ஒரு இனமும் அவ்வளவு சீக்கிரம் இழந்து விடாது. அந்த வகையில்தான் நாம் இன்று.,

கடந்த 3 வருடங்களாக ஒரு திருமண ஒருங்கிணைப்பாளராக பயணித்துக் கொண்டிருக்கிறேன். எனது அடிப்படை அநுபவத்திலிருந்தே இங்கு எழுத முற்படுகிறேன். “கல்யாணம் பேசுதல்” என்பது பெற்றோரின் விருப்பு அடிப்படையிலேயே நிகழ்கிறது. முக்கியமாக சமூக குழும ம் (சாதி) மதம், பிரதேசம், தராதரம், உத்தியோகம், சாதகம் இந்த ஆறுவகையாக எதிர்பார்ப்புகளும் நிரவப்படும்போதே பெற்றோரால் பிள்ளைகளுக்கு அவர்களுக்காக தாங்கள் தெரிவு செய்தவர்களின் படங்களைக்காட்டி உனக்குப் பிடிக்கிறதா? என்ற கேள்வியே முன்வைக்கப்படுகிறது. அங்குதான் விருப்பம் அல்லது இல்லை என்பதை பிள்ளைகளுக்கு முடிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. படத்தை மட்டுமல்லாமல் கதைக்கவும் அதன் பின்னர் முடிவெடுக்கவும் பெற்றோர் சுதந்திரம் வழங்குகிறார்கள். அதாவது தாங்கள் தீர்மானித்தவர்களுக்குள் மாத்திரமே பிள்ளைகள் தெரிவு செய்ய வேண்டும் என்று பெற்றோரின் எதிர்பார்ப்பு இருக்கிறது. உண்மையிலேயே பல வழிகளிலும் வடிகட்டி பிள்ளைகளுக்கான தெரிவுகளை மட்டுப்படுத்தி பிள்ளைகளில் திணிக்க முற்படுகிறார்கள். இக்காரணத்தாலேயே இன்றைய காலத்தில் புலம் பெயர்ந்த நமது சமூகத்தில் அதிகபடியான பிள்ளைகள் திருமணம் செய்யும் எண்ணமே குறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதிலும் 83 ஆம் ஆண்டுக்கும் 90 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த பலரின் திருமணம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. பெற்றோர் பிள்ளைகளின் விருப்பிற்கேற்ற துணையைத் தெரிவு செய்வதைக்காட்டிலும் தம்முடைய விருப்பிற்கேற்ப பிள்ளைகளுக்கான துணைகளைத் தேடி தோற்றுப் போய்கொண்டிருக்கிறார்கள். 90 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட பிள்ளைகள் தமக்கு முன்னரானவர்களின் நிலையை உணர்ந்து தமது வாழ்வை நிர்ணயிக்கும் வலிமையை அதிகம் பெற்றிருக்கிறார்கள்.

பெற்றோர் திருமணம் பேசுவதில் தவறில்லை. ஏனெனில் புலம் பெயர்ந்த இனமாக இருக்கும் நாம் நம் இனத்தின் அடையாளத்தை பேணுதல் வரவேற்கவேண்டிய விடயமே ஆனால் நாமோ வச்சா குடுமி அடிச்சா மொட்டை என்பதற்கு ஒப்பாகவே உள்ளோம். பிற நாட்டவரை பிள்ளைகள் திருமணம் செய்தால் ஏற்றுக்கொள்வதில் காட்டும் அக்கறையை நம்மவர்களுக்குள் பிள்ளைகள் காதலித்தால் காட்டுவதில்லை. ஏகப்பட்ட விசாரணகளூடாகவே கடக்கிறோம். அல்லது பிள்ளைகளின் மனங்களில் விசவிதைகளை நம்மை அறியாமலே திணித்துவிட்டு திருமணத்திற்கு சம்மதிக்கிறோம். பெற்றோர் சம்மதித்து திருமணம் செய்து கொடுத்த பிற்பாடு பிள்ளைகள் மனதில் அவர்கள் விதைத்த விசவிதைகள் இளங்குடும்பத்தில் பிரச்சனையையும் பிரிவினையையும் ஏற்படுத்தி விடுகின்றன.

 

விவாதிக்க வேண்டிய விடயத்தை விட்டுவிட்டு வேறு எங்கோ செல்கிறேன் என்று எண்ண வேண்டாம்.

 

இத்திரியில் கல்யாணம் பேசட்டோ என்று ஆரம்பித்து தராதரத்தில் வந்து நிற்கிறோம். நமக்குள் மாற்றங்கள் சாத்தியமற்றது( இன்றைய பெற்றோர்) இந்த தலைப்பை தொடக்கிய சுமேயே பல இடங்களில் முற்போக்காக இருந்தாலும் நம் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாபங்களின் எச்சத்தையும் அவரிடம் காணமுடிகிறது.

 

என்னுடைய அநுபவத்தில்… என்னிடம் திருமணம் பேசத் தந்தால் தங்கள் பிள்ளைக்கு வேற சாதி ஆட்களை தருகிறீர்கள் என்று என்னிடமிருந்து தம்முடைய விண்ணப்பங்களை மீளப்பெற்ற அதி உச்ச சாதிய திமிரில் என்னைக் காயப்படுத்தியர்களையும் கடந்திருக்கிறேன். தீவுப்பகுதி , மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குள் மணமக்கள் வேண்டாம் என்று நிபந்தனைகள் இட்டவர்களையும் கண்டுள்ளேன், யூனியில்கூட தராதரம் தேடுபவர்களோடும் பயணிக்கின்றேன். நம்மவர்களுக்குள் இரத்த த்தோடு ஊறிப்போனவை சாதி , மதம், பிரதேசம், தராதரம் , சாதகம் ஆக்குறைந்த பட்சம் இதில் ஏதாவது ஒன்றாகிலும் கல்யாணம் பேசும் பெற்றோரிடம் கண்டிப்பாக இருந்தே தீரும். சாதியே தேவையில்லை என்று விண்ணப்படிவத்தில் கேள்வியைச் சேர்க்காமல் விட்டேன். பதிவு செய்பவர்கள் கேள்வியைக்காணாமல் தேடிவிட்டு சொல்கிறார்கள். நாங்கள் நல்ல ஆட்கள் பாருங்கோ மற்ற ஆட்களுக்குள் எங்களுக்கு மணமகனோ மணமகளோ வேண்டாம். நானும் அப்படியா நல்ல ஆட்கள் என்றால் யார் என்று கேட்பேன். பதில் இதில் வாசிக்கும் அனைவருக்கும் விளங்கும். இந்த இடத்தில் நான் தென் தமிழீழ மக்களுக்கு மிகப்பெரிய சல்யூட் அடிக்கவேண்டும். இன்னொரு இனத்தால் அதிக துன்பத்தை அநுபவிக்கும் அவர்களுக்குள் சாதி, மதம், தராதரம், பிரதேசம் என்ற எண்ணப்பாடு மிகக்குறைவு. திருமணத்திற்குத் தகுதியான பெண் அல்லது ஆண் என்பதை மாத்திரமே எதிர்பார்க்கின்றார்கள்.

 

சுமே கல்யாணம் பேசட்டோ என்ற கேள்வியில் நீங்கள் பேச முற்பட்ட விடயங்களுக்கு தீர்வு கிடைக்காது. விவாத்தில் தெளிதலை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் முடிவை அடைவது மிகக்கடினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.