Jump to content

என்னை உணரவைக்க வந்ததா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னை உணரவைக்க வந்ததா?
-------------------------------------------------------------------
இறுமாப்பில் எழுந்தாய்  
நீ மானிடனே 
என்னை வென்றதாய்
என்னைப் புறந்தள்ளி
இமயத்தையும் கடந்தாய்
ஈரேழு உலகும் பறந்தாய்
மறந்தாய் உன்னை;
உன்னை மட்டுமல்ல
என்னையும் மறந்தாய்
எங்கெங்கோ பறந்தாய்
என்னைப் பாதுகாக்க
என்னோடு இணைந்து செல்ல
சிந்திக்கவும் மறந்தாய்
காணும் பொருளெங்கும்
கண்கள் அலைபாய
விண்ணையும் மண்ணையும்
உன் எண்ணப்படி கடந்தாய்
உன்னை அளப்பாய்
என்னையும் அளப்பாய்
ஆனால் அழிக்காதே! 
முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம் 
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!
பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!
சிந்தை கொள்வாய்
சிறகு விரித்தெழும் மானிடனே
பற பற எதற்காகப் பறக்கின்றாய்
என்றொருமுறை உன்னைக் கேட்பாயா?

உறவுகளே  
நட்புடன்
நொச்சி
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது கவிதை

யாழ்கள 22 வது அகவைப் பகுதியில் பதிந்திருக்கலாமே நீங்கள் இக் கவிதையை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்கத் தூண்டும் சிறப்பான கவிதை நொச்சி....பாராட்டுக்கள்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாக இருக்கிறது கவிதை

யாழ்கள 22 வது அகவைப் பகுதியில் பதிந்திருக்கலாமே நீங்கள் இக் கவிதையை

பாராட்டி ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது நன்றி.

நீங்கள் சுட்டியபடி  22ஆவது அகவை நிறைவுச் சுய ஆக்கப் பகுதிக்கு மாற்றிய நிர்வாகத்தினருக்கும் நன்றி.

29 minutes ago, suvy said:

சிந்திக்கத் தூண்டும் சிறப்பான கவிதை நொச்சி....பாராட்டுக்கள்.....!  👍

பாராட்டி ஊக்குவிக்கும் சுவியவர்களுக்கு எனது நன்றி. என்றாலும் உங்கள் சிந்தனையை விடவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nochchi said:

பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!

உண்மை தான் நொச்சி.
தனியே வந்த மாதிரி தனியே போக வேண்டியது தான்.
கடைசி வழிக்கு கண்ணால் பார்க்கவும் கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை. கொரோனா போக மீண்டும் மரத்தில் ஏறி விடுவோம். 
பாராட்டுக்கள்  நொச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் இயற்கையை வைத்து பாடம் படிக்க வேண்டும்.
மாறக இயற்கைக்கு பாடம் படிப்பிக்கக்கூடாது.
பாராட்டுக்கள் நொச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் நொச்சி.
தனியே வந்த மாதிரி தனியே போக வேண்டியது தான்.
கடைசி வழிக்கு கண்ணால் பார்க்கவும் கிடையாது.

நன்றி . எனது கவிதையை விட உங்கள் கருத்தின் வரிகள் வலிக்கிறது. கடந்த சில வாரங்களாக மக்கள் ஓடும் ஓட்டம்.தேடும் தேடல்கள். நீர் மற்றும் பொருட்களின் கொள்வனவு. மலகூடக்காகிதம் உட்பட காலியான பெருவணிக நிலையங்கள்.....................என்று இந்த உலகுபடும் பாடு. என்ன கரணியம்  புரியாத உலகல்ல. புரிந்தும் அடங்காத உலகு. அடக்க முயலும் இயற்கை............. மீண்டும் நன்றி.

7 minutes ago, Kavallur Kanmani said:

நல்லதொரு கவிதை. கொரோனா போக மீண்டும் மரத்தில் ஏறி விடுவோம். 
பாராட்டுக்கள்  நொச்சி.

உண்மை.தங்களின் பாராட்டுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி.  
மரங்களையாவது மனிதர் பாதுகாத்தால் மட்டுமே இந்த உலகு வாழும். செய்வோமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

மனிதம் இயற்கையை வைத்து பாடம் படிக்க வேண்டும்.
மாறக இயற்கைக்கு பாடம் படிப்பிக்கக்கூடாது.
பாராட்டுக்கள் நொச்சி.

உண்மை.தங்களின் பாராட்டுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி. 

எப்போது உணரும் இந்த உலகு. இயற்கையோடு ஒத்துவாழும் உலகு  தொலைந்து தொலைவுக்குப் போக மனிதரை நோக்கி அழிவு நெருங்கிவந்து அப்பப்போ உணர்த்தகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

என்னை உணரவைக்க வந்ததா?

எங்களை உணர வைக்கவே வந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

எங்களை உணர வைக்கவே வந்தது

தங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் உணர்ந்துகொள்ளுமா உலகு என்பதே விடைகாணமுடியாத வினா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளான

சண்டமாருதன்

குமாரசாமி

காவலூர் கண்மணி

ஈழப்பிரியன்

நுணாவிலான் ஆகியோருக்கு பாராட்டியதோடு படித்துப் பிடித்துப் புள்ளிகளையும் வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

சிந்திக்க வைக்கும் உங்கள் கவிதை பதிவில் இந்த காணொளியையும் இணைப்பது பொருத்தமானது  என நினைக்கின்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம்
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!


மீண்டும் கவி வரிகளோடு உங்கள் காணபதில் மகிழ்ச்சி ,பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம்
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!


மீண்டும் கவி வரிகளோடு உங்கள் காணபதில் மகிழ்ச்சி ,பாராட்டுக்கள்

வணக்கம் நிலாமதி
நீண்ட காலத்தின் பின் உங்களைக் கண்டது மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

On 3/23/2020 at 7:02 AM, nochchi said:

உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!
பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!

உலக மகாயுத்தங்கள், பிரளயத்துக்கு நெருங்கிய காலங்களுக்கு ஒப்பானது இன்றைய கொறோனா வைரஸ் உலகெங்கும் பரவிய நிலை. பலரையும் சுயபரிசோதனை செய்ய வைத்திருக்கும் நீங்கள் இந்த அழகிய கவிதை மூலம் வெளிக்காட்டியது போல். 

நோய் ஒழிந்து உலக ஒழுங்கு மாறும் போது, மனித மனங்களில் நல்லபடியான மாற்றங்கள் ஏலவே ஏற்பட்டிருக்கும் என நம்புவோம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 9:02 PM, nochchi said:

பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!
சிந்தை கொள்வாய்
சிறகு விரித்தெழும் மானிடனே
பற பற எதற்காகப் பறக்கின்றாய்
என்றொருமுறை உன்னைக் கேட்பாயா?

உறவுகளே  
நட்புடன்
நொச்சி
 

இந்த நோயை.. நினைத்து, வீதியில்... காண்பவர் முகங்களில் எல்லாம்.. 
மிகப் பெரிய சோகம்  குடி கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சித்திக்க வைத்த... அருமையான கவிதை. நொச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சண்டமாருதன் said:

சிந்திக்க வைக்கும் உங்கள் கவிதை பதிவில் இந்த காணொளியையும் இணைப்பது பொருத்தமானது  என நினைக்கின்றேன்

 

 சண்டமாருதன் அவர்களே  பொருத்தமாக இணைத்துள்ளீர்கள்
.
நன்றி.

6 hours ago, நிலாமதி said:

முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம்
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!


மீண்டும் கவி வரிகளோடு உங்கள் காணபதில் மகிழ்ச்சி ,பாராட்டுக்கள்

நிலாமதியவர்களே

பாராட்டி மகிழும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. படித்துப் பதிவிட்டமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

உலக மகாயுத்தங்கள், பிரளயத்துக்கு நெருங்கிய காலங்களுக்கு ஒப்பானது இன்றைய கொறோனா வைரஸ் உலகெங்கும் பரவிய நிலை. பலரையும் சுயபரிசோதனை செய்ய வைத்திருக்கும் நீங்கள் இந்த அழகிய கவிதை மூலம் வெளிக்காட்டியது போல். 

நோய் ஒழிந்து உலக ஒழுங்கு மாறும் போது, மனித மனங்களில் நல்லபடியான மாற்றங்கள் ஏலவே ஏற்பட்டிருக்கும் என நம்புவோம். 🙂


மல்லிகை வாசம்  அவர்களே படித்துக் கருத்தை பதிவுசெய்தமைக்கு நன்றி.

 மக்கள் முகங்களில்  ஒருவித அமைதியும் கேள்வியுமான தோற்றம் தெரிவதுபோல் மாற்றங்களும் தோன்றும் என்று நம்புவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த நோயை.. நினைத்து, வீதியில்... காண்பவர் முகங்களில் எல்லாம்.. 
மிகப் பெரிய சோகம்  குடி கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சித்திக்க வைத்த... அருமையான கவிதை. நொச்சி. 

தமிழ்சிறிஅவர்களே படித்துப் பாராட்டிக் கருத்தை பதிவுசெய்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 8:02 PM, nochchi said:

சிறகு விரித்தெழும் மானிடனே
பற பற எதற்காகப் பறக்கின்றாய்
என்றொருமுறை உன்னைக் கேட்பாயா?

சிறகு விரிப்பதால்தானே சிகரம் தொடமுடிகின்றது. கொரோனாவுக்கு அடிபணியாமல் உலகம் வெல்லும்தான். ஆனால் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

சிறகு விரிப்பதால்தானே சிகரம் தொடமுடிகின்றது. கொரோனாவுக்கு அடிபணியாமல் உலகம் வெல்லும்தான். ஆனால் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும்.

முதலில் படித்து கருத்திட்டமைக்கு நன்றி. 

உண்மை. தனியே இருந்து யோசித்தால் அச்சமூட்டுவதாக நிலமை இருக்கிறது. ஆனால் இந்த உலகு இன்னும் உணர்வதாகத் தெரியவில்லை. சில காணொளிகளைப் பார்த்தேன் இளைய தலைமுறையினர் கூட உணராதநியைைக் காண்கின்றேன்.  இந்த அவலத்தில் இருந்து உலகம் விடுபட வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பம். நீங்கள் கூறியதுபோல் உலகு கொடுத்துக் கொண்டிருக்கும் விலை தாங்கமுடியாததாக இருக்கிறது. 

கிருபன், தமிழ் சிறி, தமிழினிஆகியோரே உங்கள் அனைவருக்கும் பச்சைப்புள்ளிகளை வழங்கி உற்சாகமூட்டியமைக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாசலம் மற்றும் இணையவன் ஆகியோரே உங்கள் இருவருக்கும் பச்சைப்புள்ளிகளை வழங்கி உற்சாகமூட்டியமைக்கும் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.