Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரை புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டுக்குள்ளேயே மட்டுப்படுத்துங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டுக்குள்ளேயே மட்டுப்படுத்துங்கள்

சித்திரை புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டுக்குள்ளேயே மட்டுப்படுத்துங்கள்

தமிழ் , சிங்கள புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டினுள் குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் நிலைமையால் நாடு பூராகவும் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்றது. இதனால் புத்தாண்டு சம்பிரதாயங்களையும் வீட்டுக்குள்ளேயே செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நிலைமையை கருத்திற்கொண்டு முடிந்தளவுக்கு தமது வீட்டுக்குள்ளேயே தமது குடும்ப உறுப்பினர்களுடன் அவற்றை அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அந்த காலப்பகுதியில் வீட்டை விட்டு வெளியில் செல்வோ , நிகழ்வுகளை நடத்தவோ வேண்டாமெனவும் மக்களுக்கு அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -(3)

 

http://www.samakalam.com/செய்திகள்/சித்திரை-புத்தாண்டு-அனு-2/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புதுவருடம் கொண்டாட வேண்டிய காலமல்ல – ஆறு திருமுருகன்

spacer.png

இந்தப் புதுவருடம் கொண்டாட வேண்டிய காலமல்ல. இந்தப் பண்டிகையை வணங்குகின்ற காலம். அகவணக்கமாக பிரார்த்திக்கின்ற காலமே இதுவாகும்.இக்காட்டான ஒரு சூழலில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம். உலகமே அதிர்ந்து போயிருக்கின்ற கொரோனா என்கின்ற கொடிய நோயிலிருந்து எங்களைக் காப்பாற்றுவதற்காக மருத்துவ சமூகமும் இலங்கை அரசாங்கமும் மற்றும் உலக அளவிலே மனிதத்துவத்தை பாதுகாக்கின்ற அமைப்புக்கள் யாவும் விடுத்த ஒன்றுதான் ஊரடங்கை அமுல்படுத்தி மக்களை வீடுகளிலேயே தங்கவைக்கின்ற ஒரு ஏற்பாடாகும் என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே, எங்கள் மண்ணிலே ஏற்படுத்தப்பட் சில சட்டதிட்டங்களும் மருத்துவ துறைசார்ந்தவர்களின் அறைகூவலும் எவ்வளவோ வெற்றியைத் தந்திருக்கிறது. எனவே, நாளை எமது சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.இந்தச் சூழலில், புத்தாண்டைக் கொண்டாடும் மக்கள் அனைவரும் கோயில்களுக்கோ அல்லது உறவினர்கள் வீடுகளுக்கோ செல்லவென வெளியில் வராதீர்கள்! நாம் கடைப்பிடிக்கின்ற ஒழுங்கு முறையிலேயே எமது மக்களின் வாழ்வு தங்கியிருக்கிறது.

உலகளாவிய ரீதியில் இன்று இலட்சக் கணக்கானவர்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் அவசியமில்லை என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.எனவே, அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி புத்தாண்டை வீட்டில் இருந்தே அக வணக்கமாக பிரார்த்திக்குமாறு யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவிளலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/இந்தப்-புதுவருடம்-கொண்டா/

மக்கள் அமைதியாக இந்த வருடப்பிறப்பை வீட்டுக்கு உள்ள இருந்தபடியே கொண்டாட வேண்டியது தவிர்க்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Rajesh said:

மக்கள் அமைதியாக இந்த வருடப்பிறப்பை வீட்டுக்கு உள்ள இருந்தபடியே கொண்டாட வேண்டியது தவிர்க்க முடியாது.

வீட்டுக்குள் இருந்து கொண்டாடுவதும் ஒரு வகை சந்தோசம் தான்.😄

முகக் கவசம் அணிந்த வண்ணம் புதுவருடப் பலகாரங்கள் செய்யும் மக்கள் |

thumb_IMG-20200411-WA0045.jpg

thumb_IMG-20200411-WA0044.jpg

thumb_IMG-20200411-WA0040.jpg

தமிழ் புத்தாண்டை கொண்டாடும் தமிழர்கள் யாவருக்கும் ஒளிமயமான புத்தாண்டு வாழ்த்துக்கள்। 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிரவு பிறக்கும் சார்வரி புதுவருடம்: புண்ணிய காலம் எப்போது?

அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 34ஆவது வருடமான ‘சார்வரி’ என்ற பெயரிலான சித்திரைப் புதுவருடம் இன்று 13ம் திகதி திங்கட்கிழமை இரவு மலருகிறது.

வாக்கியபஞ்சாங்கத்தின்படி சார்வரி புதுவருடம் இன்றிரவு 7.26மணிக்குப்பிறக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இரவு 8.23மணிக்குப் பிறக்கிறது. மறுநாள் காலை பொங்கல்வழிபாடு செய்யலாம்.

வாக்கிய பஞ்சாங்கம்

வாக்கிய பஞ்சாங்கப்படி விசுபுண்ணியகாலம் பிற்பகல் 3.26 மணிமுதல் முன்னிரவு 11.26 மணிவரையிலான காலபப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் யாவரும் மருத்துநீர் சங்கற்பித்து சிரசில் இலவமிலையும் காலில் விளாவிலையும் வைத்து ஸ்ஞானம் செய்யவேண்டும்.

வெள்ளைப் பட்டாடையாயினும் வெள்ளைக் கரை அமைந்த புத்தாடையாயினும் அணிதல் நல்லது.

 

தோசநட்சத்திரங்களாகஅஸ்வினி கார்த்திகை 2ஆம் 3ஆம் 4ஆம் பாதங்கள் மிருகசீரிடம் 1ஆம் 2ஆம் பாதங்கள் மகம் பூரம் மூலம் உத்தராடம் 1ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்துநீர் சங்கற்பித்து ஸ்ஞானம்செய்து தானதருமம் செய்து இறைவழிபாடு செய்யவேண்டும்.

கைவிசேடம் வியாழன் 16.04.2020 முன்னிரவு 10.37 முதல் 12.23 வரை வெள்ளி 17.04.2020 அதிகாலை 4.17முதல் 5.47வரை திங்கள் பிற்பகல் 12.06 முதல் 1.46 வரை நடாத்தலாம்.

 

வித்தியாரம்பம் மற்றும் விருந்துண்ணல் என்பன 20.04.2020 பகல் 12.06 – 01.46 வரையும் 27ஆம் திகதி பகல் 12.40 – 01.18வரையான காலப்பகுதியில் நடாத்தலாம்.

திருக்கணித பஞ்சாங்கம்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அன்று மாலை நாழிகை 25.52 (மாலை 04.23 மணி) முதல் நள்ளிரவு நாழிகை 45.52 (இரவு 12.23 மணி) வரையும் புண்ணியகாலம் ஆகும்.

இப்புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மருத்து நீர் வைத்து தலையில் விளாவிலையும் காலில் கடம்பமிலையும்இவைத்து ஸ்நானஞ்செய்து வெண்ணிறப்பட்டாயினும் அல்லது வெள்ளைப்புது வஸ்திரமாயினுந் தரிக்கலாம்..

சங்கிரம தோஷ நட்சத்திரங்களாக பரணி கார்த்திகை 2,3,4 ஆம்பாதங்கள் ரோகிணி மிருகசீரிடம் 1,2 ஆம்பாதங்கள் பூரம் மூலம் பூராடம் உத்தராடம் 1ம்பாதம் ஆகியன. இவர்கள் கட்டாயம் மருத்துநீர் வைத்து வழிபடலவசியமாகும்.

 

கைவிசேடம் திங்கள் 13.04.2020 பின்னிரவு 5.20 _ 5.50 வரை வியாழன் 16.04.2020 இரவு 07.00 – 08.00 வரை வியாழன் 16.04.2020 இரவு 10.25 – 11.30 வரை நடாத்தலாம்.

வித்தியாரம்பம் 20.04.2020 காலை 09.15 – 09.45 யும் விருந்துண்ணல் : 20.04.2020 பகல் 09.15 – 09.45 வரை 22.04.2020 மாலை 06.00 – 07.30 வரையும் இடம்பெறலாம்.

http://thinakkural.lk/article/38598

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை புதுவருடம் இப்படி அமையட்டும்! ஸ்ரீலங்கா மக்களுக்கு பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அழைப்பு

 

இம்முறை புதுவருடத்தை எளிமையாகவும் குடும்ப அங்கத்தினர்களுடன் மட்டும் இணைந்து கொண்டாடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுவருடத்தையொட்டி பிரதமர் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இம்முறை புதுவருட வாழ்த்துக்களை தீர்க்கமான எச்சரிக்கையுடன் தெரிவிக்க வேண்டிய நிலையே உள்ளது.

நாட்டு மக்கள் இம்முறை புதுவருடத்தை சுகாதாரத்துறையின் எச்சரிக்கை மற்றும் பரிந்துரைகளுக்கு இணங்கவே அனுஷ்டிக்க வேண்டியுள்ளது.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் தடைகளை புதுவருட தினங்களிலும் செயல்படுத்த வேண்டியுள்ளது என்பதை நினைவு கூறுகின்றேன்.

தமிழ், சிங்கள புது வருடமானது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சக வாழ்வையும் ஏற்படுத்துகிறது. ஒரே நேரத்தில் பணிபுரியும் எமக்கு மக்களின் ஒரே நிலைப்பாட்டை காட்ட முடியும்.

வீட்டிலிருந்தவாறு மட்டுமே நாம் மேற்கொள்ளும் சம்பிரதாயங்களை நாம் எதிர்காலத்திலும் முன்னெடுக்க முடியும்.

அது மிகவும் எளிமையாக புதுவருட மகிழ்ச்சியை வரவேற்பதாகும். அந்த எளிமையானது மக்களின் வாழ்க்கைக்கு சிறந்தது என்பதை நமது வரலாறுகள் தெரிவிக்கின்றன.

பல்லாயிரம் வருடங்களாக நாம் சிதையாமல் மேற்கொண்டு வரும் எமது சம்பிரதாயங்களுக்குள் வெளிப்படும் உணர்வுகளின் பெறுமதியை இன்று எமக்கு ஏனைய சந்தர்ப்பங்களை விட தெளிவாக உணர முடிகிறது.

இன்று முழு உலகையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் கொடிய வைரஸை நாட்டில் சாத்தியமாக எதிர்கொள்வதற்கு மக்களுக்கு இடையிலான அந்த பிணைப்பும் கலாசார பின்புலமும் உறுதுணையாகி உள்ளது.

இந்த நிலையில் இம்முறை புதுவருடத்தை எளிமையாக உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் இணைந்து கொண்டாடுமாறு அனைவரையும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

 

https://www.ibctamil.com/srilanka/80/141103?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரும் தமிழரும் ஒரே நாளில் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் அளவுக்கு பொதுக்கலாச்சாரத்தை கொண்ட மக்கள். ஆகவே இந்த மக்கள் இந்த ஆண்டிலும் வரப்போகும் ஆண்டுகளிலும் ஒற்றுமையாக தங்கள் பொதுக்கலாச்சாரத்தில் மகிழ்ந்திருக்க வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கற்பகதரு said:

சிங்களவரும் தமிழரும் ஒரே நாளில் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் அளவுக்கு பொதுக்கலாச்சாரத்தை கொண்ட மக்கள். ஆகவே இந்த மக்கள் இந்த ஆண்டிலும் வரப்போகும் ஆண்டுகளிலும் ஒற்றுமையாக தங்கள் பொதுக்கலாச்சாரத்தில் மகிழ்ந்திருக்க வாழ்த்துகள்

ஓமோம்..... தமிழரும் சிங்களவரும் ஒரு கலியாணம் கலாச்சாரம். ஆனால் உரிமைகள் உனக்கு வேறை எனக்கு வேறை.😎

  • கருத்துக்கள உறவுகள்

நோமலாய் வேலை என்று ஓடுற  புலம் பெயர் தமிழர்களும் இந்த வருசம் வீட்டிலிருந்து வருடப்பிறப்பை கொண்டாடுவினம் .

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த இந்தப் புத்தாண்டு-உங்களுக்கு

சிறந்த ஒரு பொன்னாண்டாய்

நிறைந்த இன்பம் தந்திடட்டும்-நீங்கள்

நினைத்தவை எல்லாம் நிறைவேறட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காசு போனாப்போகுது... இந்தவருடம் வடிவா கொண்டாடவோனும்.

நாளைக்கு காலை பக்கிங்ஹாம் பாலசுக்கு முன்னால பொங்கி, வருசப்பிறப்பு கொண்டாட, ராணி அம்மா ஓம் பட்டிருக்கிறா.

யாழ் கள உறவுகள் அனைவரையும் அழைக்கிறேன். எல்லோரும் வாருங்கோ. போக்குவரத்துக்கு செலவு பொறுப்பேற்கப்படும்.

நல்ல திண்டு, குடித்து, சந்தோசமா போகலாம் - எண்ட கணக்கில.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

காசு போனாப்போகுது... இந்தவருடம் வடிவா கொண்டாடவோனும்.

நாளைக்கு காலை பக்கிங்ஹாம் பாலசுக்கு முன்னால பொங்கி, வருசப்பிறப்பு கொண்டாட, ராணி அம்மா ஓம் பட்டிருக்கிறா.

யாழ் கள உறவுகள் அனைவரையும் அழைக்கிறேன். எல்லோரும் வாருங்கோ. போக்குவரத்துக்கு செலவு பொறுப்பேற்கப்படும்.

நல்ல திண்டு, குடித்து, சந்தோசமா போகலாம் - எண்ட கணக்கில.

கொரோனா யாரிட கணக்கில?🦇

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

கொரோனா யாரிட கணக்கில?🦇

அட வாங்கோவன்... காதில விவரமா சொல்லுறன் 😂

யாழ்களவாசிகள் அனைவரும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ள பிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட கொண்டாட்டங்கள் வழக்கத்தில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் நாம் ஏன் தனித்திருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே வீட்டிலேயே இருங்கள். தேசிய சுகாதார சேவை மற்றும் உயிர்களை இந்த புத்தாண்டில் காப்பாற்றுங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதுடன் அண்மையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/10DowningStreet/status/1249956604319092736?s=20https://www.tamilwin.com/community/01/243481?ref=home-top-trending

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.