Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிந்தால் அப்பாவி முஸ்லிம்களுக்காகவும், சுமந்திரன் போராட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வேறு ; நட்பு வேறு - கூத்தாடிகள் 

தொழில் வேறு ; சொந்தம் வேறு - தொழில் முனைவர்

விளையாட்டு வேறு ; அரசியல் வேறு - துடுப்பட்ட ரசிகாஸ் 

கொள்கை வேறு ; கூட்டணி வேறு - அரசியல் சொம்புகள் 

நடிப்பு வேறு ; சமூக சேவை வேறு - ரசிக குஞ்சுகள்

டிஸ்கி 

திருவாளர் சிதம்பரம் நீட்டுக்கு எதிர்ப்பு ; அவரின் மனைவி நீட்டுக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதம் .. 

சட்டதரணி அரசியல்வாதி ஆனால் 

" தொழில் வேறு ; அரசியல் வேறு "

எல்லாமே வேறு ; வேறு ; நாம்தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் போல் கிடக்கு. 👍..😊

  • Replies 54
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கற்பகதரு said:

1. சுமேந்திரன் இந்து தமிழ் மக்கள் சார்பாக இரண்டு பிரபலமான வழக்குகளில் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார் - அவை எவை என்று இணைய செய்திகளில் படித்து அறிந்து கொள்ளுங்கள். 

2. சட்டசபை உறுப்பினராக, சட்டவாக்கத்தில் தமிழ் மக்கள் சார்பான அவரது பணிகளை இலங்கை பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கைகளில் படித்து அறிந்து கொள்ளுங்கள் - இவையும் இணைய மூலம் கிடைக்கும்.

இவற்றை கண்டுபிடிக்கும் ஆற்றல் இல்லாவிட்டால், அல்லது படித்தும் புரியாவிட்டால், பாராளுமன்ற உறுப்பினரின் சேவைகள் பற்றியும் சட்டத்தரணிகளின் சேவைகள் பற்றியும் நீங்ள் அறிந்து கொள்ளும் சாத்தியம் இல்லை. இவையே சுமேந்திரனின் சேவைகள்.

சுதந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த தீமைகள் என்ன? (தனிப்பட இல்லாமல் கூட்டமைப்போடு சேர்ந்தாகவும் இருக்கலாம்) . கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. உங்களுக்கு தெரியாது என மட்டும் சொல்லி விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, kalyani said:

சுதந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த தீமைகள் என்ன? (தனிப்பட இல்லாமல் கூட்டமைப்போடு சேர்ந்தாகவும் இருக்கலாம்) . கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. உங்களுக்கு தெரியாது என மட்டும் சொல்லி விடாதீர்கள்.

தெரியாது 😄

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மொன்றாகலை சிறைச்சலையில் பயங்கரவாதியென பொய் சொல்லப்பட்டு ஓர் தமிழர் ஒருவர் இருக்கிறார் என நினைக்கிறன் இவரைப்போல பல அப்பாவிகள் இருக்கிறார்கள் முடிந்தால் இதே சுமந்து வழக்கு பேசி பிணையிலோ அல்லது நிரந்தரமாக விடுவிக்க முடியுமா தமிழ் மக்களுக்கு எது தேவையோ அதை முதல் செய்ய சொல்லுங்கோ 

சுமேந்திரன் பராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தாலும், சட்டத்தரணி தவிர வேறு வருமானம் இல்லாத காரணத்தாலும், இந்த வழக்கும் அவருக்கு வருமானத்துக்கான ஒரு வழக்காக அமையலாம். அவரை சட்டத்தரணியாக அமர்த்திக்கொள்ள முன்பணம் எவ்வளவு செலுத்துவீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்ன சந்தேகம் எண்டால், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களை தமிழர்களிடம் இருந்து, முஸ்லிம்கள் என பிரித்து தமிழர்களை வீழ்த்திய சிங்களம், இப்போது முஸ்லிம்களை வீழ்த்தும் வேலையினை செய்கிறது.

இவர்களே, முஸ்லீம் பயங்கர வாதிகள் என்ற பெயரில், கிறிஸ்தவர்கள் (தமிழ், சிங்கள) மேல கடந்த வருட ஈஸ்டர் தாக்குதல்களை பின் நின்று நடாத்தி, அதன் பலனாக அரச பீடத்தினை பிடித்துக் கொண்டனர்.

இடையே இங்கே, தமிழ் பெயரில், கிறிஸ்தவ, சைவ பிரிவினை வேலை செய்ய முனைகிறதோ என்று சந்தேகம் வருகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kalyani said:

சுதந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த தீமைகள் என்ன? (தனிப்பட இல்லாமல் கூட்டமைப்போடு சேர்ந்தாகவும் இருக்கலாம்) . கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. உங்களுக்கு தெரியாது என மட்டும் சொல்லி விடாதீர்கள்.

கல்யாணி, அதெப்படி நீங்கள் இவ்வளவு அப்பிராணியாக இருக்கிறீர்கள் (நடிக்கிறீர்கள்)??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எனக்கென்ன சந்தேகம் எண்டால், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களை தமிழர்களிடம் இருந்து, முஸ்லிம்கள் என பிரித்து தமிழர்களை வீழ்த்திய சிங்களம், இப்போது முஸ்லிம்களை வீழ்த்தும் வேலையினை செய்கிறது.

இவர்களே, முஸ்லீம் பயங்கர வாதிகள் என்ற பெயரில், கிறிஸ்தவர்கள் (தமிழ், சிங்கள) மேல கடந்த வருட ஈஸ்டர் தாக்குதல்களை பின் நின்று நடாத்தி, அதன் பலனாக அரச பீடத்தினை பிடித்துக் கொண்டனர்.

இடையே இங்கே, தமிழ் பெயரில், கிறிஸ்தவ, சைவ பிரிவினை வேலை செய்ய முனைகிறதோ என்று சந்தேகம் வருகின்றது. 

உங்களுடைய   மதப்பற்றா மொழிப்பற்றா உறுதியானது? “நான் முதலில் சைவன், அதற்கு பிறகே தமிழ்” என்று நீங்கள் சொல்லுவீர்களானால், நீங்கள் நேர்மையானவர், ஆனால் கிறிஸ்தவ, சைவ பிரிவினையில் நீங்கள் பக்கசார்பானவராகிவிட்டீர்கள். பிரிவினையில் உங்கள் பங்களிப்பு என்றோ ஆரம்பமாகிவிட்டது. மாறாக, ?“நான் முதலில் தமிழன், அதற்கு பிறகே சமயமும் சாக்கடையும்” என்பீர்களானால், தமிழின ஒற்றுமைக்காக, உங்கள் சமயத்தை தியாகம் செய்து ஒரு தமிழ் கிறீஸ்தவ ஆலயத்துக்கு சென்று ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டாலே உங்கள் நிலைப்பாட்டை நம்பமுடியும். எங்கே, சமயத்தை தியாகம் செய்ய தயார் என்று காட்டுங்கள் பார்க்கலாம்.😃

17 hours ago, Dash said:

அப்படியானால் சம்பந்தன்,மாவை,டக்ளஸ்,கருணா,பிள்ளையான் எல்லம் என்ன மதம், இவர்களை எவ்வள்ளவு கேவலமாக விமர்சிக்கப்படுகின்றனர்... அப்பொழுது மதம் எங்கே போனது.

அதே போல் S J V செல்வநாயகம், அன்டன் பாலசிங்கம், ஜோசேப் பரராஜசிங்கம், தற்போதைய சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றோர் ஏன் விமர்சிக்கப்படுவதில்லை..?  ஆர்னோல்ட் எப்படி யாழ் நகர முதல்வரானார் ? என்பதனியும் விளக்கினால் உபயோகமாக இருக்கும்.

அதெப்படி சைவ அரசியல்வாதியை விமர்சிக்கும் போதும் கிறிஸ்த்தவ அரசியல் வாதியை கொண்டாடும் போதும் வராத மதம் எப்படி கிறிஸ்த்தவ அரசியல்வாதியை விமர்சிக்கும் போது மட்டும் 

சம்பந்தன் , மாவை போன்றோரை பெரிதாக விமர்சிப்பதை நான் காணவில்லை। டக்ளஸ் , கருணா , பிள்ளையான் போன்றோர் தமிழர்களை காட்டிக்கொடுத்ததாக , அரசுடன் இணைந்திருப்பதட்காக தாக்குகிறார்கள்।

மற்றப்படி சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர் என்பதட்காகவே தாக்குகிறார்கள்। நல்லவற்றை செய்பவர்களை விமர்சிக்க தேவை இல்லை। அடைக்கலநாதனை விமர்சிப்பதுண்டு।

இங்கு அவர் கிறிஸ்தவரா , இந்துவா என்பதைவிட எதட்காக விமர்சிக்கிறார்கள் என்று பார்த்தால் விளங்கும்।இங்கு கூடுதலான கருத்துக்கள் மதத்தை வைத்தே விமர்சிக்கப்படுகின்றது। இருந்தாலும் எனக்கோ உங்களுக்கோ அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை।  

17 hours ago, Dash said:

அதெப்படி சைவ அரசியல்வாதியை விமர்சிக்கும் போதும் கிறிஸ்த்தவ அரசியல் வாதியை கொண்டாடும் போதும் வராத மதம் எப்படி கிறிஸ்த்தவ அரசியல்வாதியை விமர்சிக்கும் போது மட்டும் 

அதுதான் மிகமிக மோசமான மதவெறியின் வெளிப்பாடு.
இப்படியானவர்கள் தமிழினத்தின் அழிவுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

எமது மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் - தந்தை செல்வா ! 

கடவுள் எத்தனையோ முறை பலரது வடிவில் காப்பாற்ற வந்தார். அவரை துரோகி என்று ஏளனம் செய்து இந்த மக்கள் விரட்டி விட்டார்கள். அழிவது ஒன்றே எங்கள் இருப்பின் நோக்கம் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை கடவுளும் காப்பாற்ற முடியாது என்பதற்கு அடுத்த நூற்றாண்டில் ஈழத்தமிழர்களை உதாரணமாக காட்டும் சாத்தியம் இருக்கிறது.

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒட்டு மொத்த தமிழ் கட்சிகளையும் ஆட்களையும் தான் இங்கே விமர்சிக்கிறார்கள் அதற்குள் சுமந்திரனை ஏன் நீங்க தூக்கி பிடிக்கிறீங்க நீங்க அவன் சைவமாக இருந்தாலும் கிறிஸ்த்தவனாக இருந்தாலும் விமர்சிப்போம் . ஒருவேளை அந்தாள் கிறிஸ்த்தவம் எனும் போதும் விமர்சிக்கும் போது  கொஞ்சம் உங்களுக்கு எரிகிறது போல 

பதிலுக்கு மாவை ,சம்மந்தர் , சிறி ,இவர்களை எவ்வளவேனும் நீங்கள் விமர்சிக்கலாம்  எங்களுக்கு ஒன்றுமே ஆவப்போவதில்லை 

அப்படி என்றால் சிறியைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்। மற்றைய இருவரும் வயது போனதுகள்  பாவம்। ஸ்ரீதரன் ஐயா யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்தவர் இப்போது கிளிநொச்சியில் அரசியல் செய்கிறார் ।

எல்லோரும் அறிந்த ஒரு பெரியத்திடடம்தான் இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டுபோகும் திடடம்। இதுக்காக ADB மூலம் பெரும்தொகை பணம் ஒதுக்கி திடடமும் தயாரிக்கப்பட்ட்து। இதை தடுத்து நிறுத்தியது கிளிநொச்சி விவசயிகள் என்று நினைக்க வேண்டாம்। இவர்களை தூண்டி விட்ட்து அங்குள்ள பொறியாளர்களும் , ஸ்ரீதரனும்தான்।

என் என்றால் இவர்கள் அங்கு வேலை செய்வதைவிட காணி வாங்கி விவசாயம் செய்வதுதான் தொழில்। இதைப்பற்றி நிறைய எழுதலாம்। இத்தனைக்கும் இதன் கட்டு இரண்டு அடியாள உயர்த்தப்பட்டு மேலதிக நீரே கொண்டுசெல்ல திடடமிடப்பட்ட்து ।

சிறிதரனுக்கு இரண்டு நன்மைகள்। இனி தண்ணீர் ஒரு இடமும் போகாது , எனவே வருடம் முழுவதும் விவசாயம் செய்யலாம்। மக்களுக்காக (?) போராடிய மாவீரன் என்ற வகையில் அடுத்தமுறையும் அந்தக்கதிரையை கைப்பற்றலாம் । இருந்தாலும் இப்போது அங்கு ஒரு பெரிய ஆபத்து வருவதை இவர்கள் இன்னும் உணரவில்லை ।  தந்திர அரசியல்வாதிகள்।

இங்கு என்ன பிரச்சினை என்றால் எல்லா அரசியல்வாதிகளைப்பற்றி செய்திகள் வந்தாலும் , சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர் என்பதால் அது கண்ணை உறுதிக்கிறது। இருந்தாலும் இதில் எழுதுவதால் எந்த துரும்பும் அசையப்போவதில்லை।  

17 hours ago, MEERA said:

அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்


2018 சுமந்திரன் கூறியது

 

என்ன செய்யலாம்। தேர்தல் வருகிறது , மக்களிடமே விட்டு விடுவோமே। மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு। நீங்கள் எதாவது செயட்படுத்தக்கூடிய காரியங்களை செய்யலாம்। 

15 hours ago, அக்னியஷ்த்ரா said:

இப்போ Mr .கற்பகம் அடுத்த கேள்வியுடன் குதிப்பார் பாருங்கோ ...எல்லோருக்கும் அடை மொழி பெயர் வைத்த நீங்கள் ஏன் சிறிக்கு பெயர் வைக்கவில்லை அவர் இந்துவென்பதாலா என்று ...

இரணைமடு ஸ்ரீதரன் என்று பெயர் வைத்தால் போச்சுது ।

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மொன்றாகலை சிறைச்சலையில் பயங்கரவாதியென பொய் சொல்லப்பட்டு ஓர் தமிழர் ஒருவர் இருக்கிறார் என நினைக்கிறன் இவரைப்போல பல அப்பாவிகள் இருக்கிறார்கள் முடிந்தால் இதே சுமந்து வழக்கு பேசி பிணையிலோ அல்லது நிரந்தரமாக விடுவிக்க முடியுமா தமிழ் மக்களுக்கு எது தேவையோ அதை முதல் செய்ய சொல்லுங்கோ 

 

உங்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால் இவர் எல்லா சிறைச்சாலைகளுக்குப்போய் அங்கு தமிழர்கள் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து வழக்கு தொடர்ந்து விடுதலாய்க்க வேண்டும்। நல்ல எண்ணம் (?)। நீங்கள் எல்லாம் இதில் எழுதிப்போட்டு இருப்பீர்கள் அவர் போய்  எல்லாவற்றையும் செய்ய வேண்டும் । இதுக்காக ஒரு சிறு உதவியாவது செய்திருப்பார்களா எண்டால் விடை பூச்சியம்தான் । 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Vankalayan said:

உங்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால் இவர் எல்லா சிறைச்சாலைகளுக்குப்போய் அங்கு தமிழர்கள் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து வழக்கு தொடர்ந்து விடுதலாய்க்க வேண்டும்। நல்ல எண்ணம் (?)। நீங்கள் எல்லாம் இதில் எழுதிப்போட்டு இருப்பீர்கள் அவர் போய்  எல்லாவற்றையும் செய்ய வேண்டும் । இதுக்காக ஒரு சிறு உதவியாவது செய்திருப்பார்களா எண்டால் விடை பூச்சியம்தான் । 

அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்லது ஏக பிரதிநிதிகளில் ஒருவர்  என்று தன்னை அடையாளப்படுத்தும்வரை 
அவர் தமிழ் மக்களுக்கு சேவை செய்யத்தான் வேண்டும், அவர் ஒரு சட்டத்தரணியாக இருக்கும்வரை யாரும் அவருடைய செயற்பாட்டை விமர்சிக்கவில்லை அது அவர்களுக்கு அவசியமும்  இல்லை , எப்போது அவர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கினாரோ அவர் சேவை செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
அவரது துறை சார் நிபுணத்துவ சேவை தொடர்பான எதிர்பார்ப்பும் மக்களிடையே வலுப்பெறும் காரணம் அவர் மக்கள் சேவகன் , அப்பிடியில்லை நான் ஆயுள்முழுவதும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பென்ஷன் எடுக்கவும் ,தீர்வையில்லா பிராடோ TX ஓடவும் தான் பாராளுமன்றம் வந்தேன் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்  என்று  பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்து விட்டு அவரது வேலையை பார்க்கலாம்.
யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை     

36 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்லது ஏக பிரதிநிதிகளில் ஒருவர்  என்று தன்னை அடையாளப்படுத்தும்வரை 
அவர் தமிழ் மக்களுக்கு சேவை செய்யத்தான் வேண்டும், அவர் ஒரு சட்டத்தரணியாக இருக்கும்வரை யாரும் அவருடைய செயற்பாட்டை விமர்சிக்கவில்லை அது அவர்களுக்கு அவசியமும்  இல்லை , எப்போது அவர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கினாரோ அவர் சேவை செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
அவரது துறை சார் நிபுணத்துவ சேவை தொடர்பான எதிர்பார்ப்பும் மக்களிடையே வலுப்பெறும் காரணம் அவர் மக்கள் சேவகன் , அப்பிடியில்லை நான் ஆயுள்முழுவதும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பென்ஷன் எடுக்கவும் ,தீர்வையில்லா பிராடோ TX ஓடவும் தான் பாராளுமன்றம் வந்தேன் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்  என்று  பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்து விட்டு அவரது வேலையை பார்க்கலாம்.
யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை     

அதாவது மற்ற எல்லா MP இக்களைப்போல இருக்க சொல்லுகிறீர்கள்। நல்ல ஐடியா। 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Vankalayan said:

அதாவது மற்ற எல்லா MP இக்களைப்போல இருக்க சொல்லுகிறீர்கள்। நல்ல ஐடியா। 

 

26 minutes ago, Vankalayan said:

அப்பிடியில்லை நான் ஆயுள்முழுவதும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பென்ஷன் எடுக்கவும் ,தீர்வையில்லா பிராடோ TX ஓடவும் தான் பாராளுமன்றம் வந்தேன் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்  என்று  பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்து விட்டு அவரது வேலையை பார்க்கலாம்.

இப்பிடி பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்த மற்ற எம் பிக்கள் என்று நீங்கள் குறிப்பிடுபவர்கள்  யார் ....?

12 hours ago, கற்பகதரு said:

கடவுள் எத்தனையோ முறை பலரது வடிவில் காப்பாற்ற வந்தார். அவரை துரோகி என்று ஏளனம் செய்து இந்த மக்கள் விரட்டி விட்டார்கள். அழிவது ஒன்றே எங்கள் இருப்பின் நோக்கம் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை கடவுளும் காப்பாற்ற முடியாது என்பதற்கு அடுத்த நூற்றாண்டில் ஈழத்தமிழர்களை உதாரணமாக காட்டும் சாத்தியம் இருக்கிறது.

அவர் அகிம்சை வழியில் போராடினார் 
பின்னர் வந்தவர் ஆயுதம் ஏந்தி போராடினார் 

தற்பொழுது உள்ளவரும் போராடித்தான் ஆகவேண்டும் 

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

உங்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால் இவர் எல்லா சிறைச்சாலைகளுக்குப்போய் அங்கு தமிழர்கள் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து வழக்கு தொடர்ந்து விடுதலாய்க்க வேண்டும்। நல்ல எண்ணம் (?)। நீங்கள் எல்லாம் இதில் எழுதிப்போட்டு இருப்பீர்கள் அவர் போய்  எல்லாவற்றையும் செய்ய வேண்டும் । இதுக்காக ஒரு சிறு உதவியாவது செய்திருப்பார்களா எண்டால் விடை பூச்சியம்தான் । 

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று ஏன் கூவிக்கொண்டு திரிய வேண்டும் ஆக பொட்டி எல்லாத்துக்கும் பணம்  காசு கொடுத்தால் தான் வாதாடுவார் என்று சிம்பிளா சொல்லுங்களன்

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி அல்லது ஏக பிரதிநிதிகளில் ஒருவர்  என்று தன்னை அடையாளப்படுத்தும்வரை 
அவர் தமிழ் மக்களுக்கு சேவை செய்யத்தான் வேண்டும், அவர் ஒரு சட்டத்தரணியாக இருக்கும்வரை யாரும் அவருடைய செயற்பாட்டை விமர்சிக்கவில்லை அது அவர்களுக்கு அவசியமும்  இல்லை , எப்போது அவர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கினாரோ அவர் சேவை செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
அவரது துறை சார் நிபுணத்துவ சேவை தொடர்பான எதிர்பார்ப்பும் மக்களிடையே வலுப்பெறும் காரணம் அவர் மக்கள் சேவகன் , அப்பிடியில்லை நான் ஆயுள்முழுவதும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பென்ஷன் எடுக்கவும் ,தீர்வையில்லா பிராடோ TX ஓடவும் தான் பாராளுமன்றம் வந்தேன் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்  என்று  பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்து விட்டு அவரது வேலையை பார்க்கலாம்.
யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை     

யெப்பா கல்முனை பக்கம் வந்து ஓடினவர் இவர்தானே இவர்ர செருப்பு இப்பவும் கிடக்காம் உன்மையாப்பா??

17 hours ago, கற்பகதரு said:

தெரியாது 😄

சுமேந்திரன் பராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தாலும், சட்டத்தரணி தவிர வேறு வருமானம் இல்லாத காரணத்தாலும், இந்த வழக்கும் அவருக்கு வருமானத்துக்கான ஒரு வழக்காக அமையலாம். அவரை சட்டத்தரணியாக அமர்த்திக்கொள்ள முன்பணம் எவ்வளவு செலுத்துவீர்கள்? 

பணம் என்றால் தானே வழக்கே எடுப்பீர்கள்  அவர் தமிழ் மக்களை விடுவிக்க எவ்வளவு கேட்கிறாரோ அவ்வளவையும் கட்ட தயாராக இருக்கிறோம் தமிழ் மக்களிடம் அறவீடு செய்தாவது கொடுக்க இருக்கிறோம் தமிழ் மக்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யெப்பா கல்முனை பக்கம் வந்து ஓடினவர் இவர்தானே இவர்ர செருப்பு இப்பவும் கிடக்காம் உன்மையாப்பா??

அவரே தான் ,எல்லோரும் போய் (போதாக்குறைக்கு பிக்கியும் ) சீனைப்போடுகிறார்கள் ,நாமளும் வந்து ஒரு சீனைப் போட்டுப்பார்ப்போம் என்று வந்தார், சனம் விளக்குமாத்தையும் கதிரையையும் தூக்கி எறிஞ்ச ஏறியில் 
பின்னங்கால் பிடரியிலடிபட இவரும் ,இவரோடு வந்த குற்றத்திற்காக மனோ கணேசனும் ஓட வேண்டிவந்தது,
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியை தமிழ்மக்களே அன்று  விட்டு கலைத்தனர் ,  பார்க்கவே கண் கொள்ளா காட்சியது 

 

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பணம் என்றால் தானே வழக்கே எடுப்பீர்கள்  அவர் தமிழ் மக்களை விடுவிக்க எவ்வளவு கேட்கிறாரோ அவ்வளவையும் கட்ட தயாராக இருக்கிறோம் தமிழ் மக்களிடம் அறவீடு செய்தாவது கொடுக்க இருக்கிறோம் தமிழ் மக்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி 

 

On 28/4/2020 at 06:19, கற்பகதரு said:

சுமேந்திரன் பராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தாலும், சட்டத்தரணி தவிர வேறு வருமானம் இல்லாத காரணத்தாலும், இந்த வழக்கும் அவருக்கு வருமானத்துக்கான ஒரு வழக்காக அமையலாம். அவரை சட்டத்தரணியாக அமர்த்திக்கொள்ள முன்பணம் எவ்வளவு செலுத்துவீர்கள்?

👍 ....சபாஷ் தனி  ...Mr.கற்பகம் தலீவரிடம் கேட்டு சொல்வாரா ,எவ்வளவு செலவாகும் என்று ,புலத்திலிருக்கும் தமிழர்கள் மட்டுமே போதும், மொத்த வழக்கு செலவையும் கவனிக்க நாங்க ரெடி...உங்க தலீவர் ரெடியா....?
நாவிதன்வெளியை சேர்ந்த சிறுமியின் மூளை சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தை முழு தமிழ் சமூகமும் ஒன்று சேர்ந்து மிக  குறுகியகாலத்தில் சேகரித்து  வெற்றிகரமாக நடத்திக்காட்டியதை Mr.கற்பகம் அறியவில்லை போலும்     

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பணம் என்றால் தானே வழக்கே எடுப்பீர்கள்  அவர் தமிழ் மக்களை விடுவிக்க எவ்வளவு கேட்கிறாரோ அவ்வளவையும் கட்ட தயாராக இருக்கிறோம் தமிழ் மக்களிடம் அறவீடு செய்தாவது கொடுக்க இருக்கிறோம்.

பணம் சேர்த்துத்தான் விடுதலை போராட்டமே நடந்தது. எல்லாவற்றுக்கும் பணம் தேவை. அதை திரட்டி, தேவைப்படும் மக்களுக்கு உதவும் முயற்சிக்கு நீங்கள் முன்னணியில் வழிகாட்ட முன்வந்திருப்பதை அனைவரும் பாரட்டுவார்கள். முதல் படியாக, பின்வரும் விடயங்களை விளக்கும் ஆவணம் ஒன்றை தயாரித்து இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்:

1. மக்களுக்கு முக்கியமான தேவைகளான வழக்குகள் எவை? உதாரணமாக, காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட கோரும் வழக்குகள், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான வழக்குகள்,  நீராவியடி பிள்ளையார்கோவில் வழக்கு (சுமேந்திரனை ஏற்கனவே சட்டத்தரணியாக கோவில் நிருவாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.), சிறுகடன் நிவாரண வழக்குகள், அங்கவீனமானவருக்கு நட்டயீடு, இப்படியான வழக்குகளை பட்டியலிட்டு அவற்றின் முக்கியத்துவப்படி இலக்கமிடுங்கள்.

2. நிதி சேர்ப்பதற்கான திட்டம். உள்ளூரில் எப்படி சேகரிக்கலாம்? உலகளாவிய அளவில் எப்படி சேகரிக்கலாம்? என்று இரண்டு பிரிவாக பட்டியலிடுங்கள். உதாரணமாக, உள்ளூர் தனவந்தர்கள் அடுத்தவருக்கு தெரியாமல் உதவுவது வழக்கம். அவர்களை எப்படி அணுகப்போகிறீர்கள்? புலம்பெயர்ந்த மக்களிடம், திரைப்படம், கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் திரட்டும் வழக்கம் உண்டு. மேலும் முகப்புத்தகம் போன்ற இணையவழிகளும் உள்ளன. ஆகவே உங்கள் திட்டத்தை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் இணைவார்கள்.

 

7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

👍 ....சபாஷ் தனி  ...Mr.கற்பகம் தலீவரிடம் கேட்டு சொல்வாரா ,எவ்வளவு செலவாகும் என்று ,புலத்திலிருக்கும் தமிழர்கள் மட்டுமே போதும், மொத்த வழக்கு செலவையும் கவனிக்க நாங்க ரெடி...உங்க தலீவர் ரெடியா....?
நாவிதன்வெளியை சேர்ந்த சிறுமியின் மூளை சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தை முழு தமிழ் சமூகமும் ஒன்று சேர்ந்து மிக  குறுகியகாலத்தில் சேகரித்து  வெற்றிகரமாக நடத்திக்காட்டியதை Mr.கற்பகம் அறியவில்லை போலும்     

இதோ ஒருவர் ஏற்கனவே இணைந்துவிட்டார். சுமேந்திரன் தவிர வேறு சிறந்த சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். நல்ல திட்டம் இருந்தால் பொருத்தமான சட்டத்தரணியை தெரிவு செய்யலாம். முயற்சி திருவினையாக்க வாழ்த்துகள்.

22 hours ago, அக்னியஷ்த்ரா said:

 

இப்பிடி பட்டவர்த்தனமாக மக்கள் முன் அறிவித்த மற்ற எம் பிக்கள் என்று நீங்கள் குறிப்பிடுபவர்கள்  யார் ....?

யாரும் அறிவிக்கவும் இல்லை। யாரும் அரசியலையும் , அந்தஸ்த்தையும் , சுகபோகங்களையும் விட்டு போகவில்லை। சுமந்திரனும் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே।

மற்றைய அரசியல் வாதிகள் வியாபாரம் , விவசாயம் , மீன்பிடி , பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவது போல தங்கள் வேலையே பார்க்கிறார்கள்। சுமந்திரனும் தனது தொழிலை செய்கிறார்। எல்லோரையும்போல அவரும் செய்கிறார்। எல்லா அரசியல்வாதிகளையும் சமமாக பார்க்க வேண்டும்।

அதனால்தான் மற்ற MP ய்களைப்போல என்று எழுதினேன்। வேறு ஒன்றுமில்லை। 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கற்பகதரு said:

இதோ ஒருவர் ஏற்கனவே இணைந்துவிட்டார். சுமேந்திரன் தவிர வேறு சிறந்த சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். நல்ல திட்டம் இருந்தால் பொருத்தமான சட்டத்தரணியை தெரிவு செய்யலாம். முயற்சி திருவினையாக்க வாழ்த்துகள்.

ஐயோ ...ஐயோ ...Mr.கற்பு 
நீங்க அந்நியன் படத்தில்வரும் யாராச்சும்  சோடாவாங்கிவாங்களேன்...யாராச்சும் அம்பியூலன்சை கூபிடுங்களேன் வகையாறா என்பது எனக்கு முன்பே தெரியும். 
நீங்கள் கேட்ட கேள்வி சும்முக்கு எவ்வளவு கொடுப்பீர்கள் என்று , அதற்கு தந்த பதில், கொடுக்க நாங்கள் ரெடி  
கேட்க அவர் ரெடியா ...தென்னை மரத்தை பற்றி கேட்டால் இப்போது  மாட்டை இழுத்துக்கொண்டு வருகிறீர்கள்,
சும்மை தவிர வேறு சட்டத்தரணிகள் இருப்பது எங்களுக்கு தெரியாதா.... திரி போவது சும்மைப்பற்றி, 
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ,பதில் இல்லாவிட்டால் கண்டவற்றை இழுத்துக்கொண்டு வந்து சளப்புவதை விட மௌனமே சிறந்தது   

அரசியல் எப்போதும்  அரசியலாகவே  இருக்கிறது .....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

பணம் சேர்த்துத்தான் விடுதலை போராட்டமே நடந்தது. எல்லாவற்றுக்கும் பணம் தேவை. அதை திரட்டி, தேவைப்படும் மக்களுக்கு உதவும் முயற்சிக்கு நீங்கள் முன்னணியில் வழிகாட்ட முன்வந்திருப்பதை அனைவரும் பாரட்டுவார்கள். முதல் படியாக, பின்வரும் விடயங்களை விளக்கும் ஆவணம் ஒன்றை தயாரித்து இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்:

1. மக்களுக்கு முக்கியமான தேவைகளான வழக்குகள் எவை? உதாரணமாக, காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட கோரும் வழக்குகள், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான வழக்குகள்,  நீராவியடி பிள்ளையார்கோவில் வழக்கு (சுமேந்திரனை ஏற்கனவே சட்டத்தரணியாக கோவில் நிருவாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.), சிறுகடன் நிவாரண வழக்குகள், அங்கவீனமானவருக்கு நட்டயீடு, இப்படியான வழக்குகளை பட்டியலிட்டு அவற்றின் முக்கியத்துவப்படி இலக்கமிடுங்கள்.

2. நிதி சேர்ப்பதற்கான திட்டம். உள்ளூரில் எப்படி சேகரிக்கலாம்? உலகளாவிய அளவில் எப்படி சேகரிக்கலாம்? என்று இரண்டு பிரிவாக பட்டியலிடுங்கள். உதாரணமாக, உள்ளூர் தனவந்தர்கள் அடுத்தவருக்கு தெரியாமல் உதவுவது வழக்கம். அவர்களை எப்படி அணுகப்போகிறீர்கள்? புலம்பெயர்ந்த மக்களிடம், திரைப்படம், கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் திரட்டும் வழக்கம் உண்டு. மேலும் முகப்புத்தகம் போன்ற இணையவழிகளும் உள்ளன. ஆகவே உங்கள் திட்டத்தை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் இணைவார்கள்.

 

இதோ ஒருவர் ஏற்கனவே இணைந்துவிட்டார். சுமேந்திரன் தவிர வேறு சிறந்த சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். நல்ல திட்டம் இருந்தால் பொருத்தமான சட்டத்தரணியை தெரிவு செய்யலாம். முயற்சி திருவினையாக்க வாழ்த்துகள்.

 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஐயோ ...ஐயோ ...Mr.கற்பு 
நீங்க அந்நியன் படத்தில்வரும் யாராச்சும்  சோடாவாங்கிவாங்களேன்...யாராச்சும் அம்பியூலன்சை கூபிடுங்களேன் வகையாறா என்பது எனக்கு முன்பே தெரியும். 
நீங்கள் கேட்ட கேள்வி சும்முக்கு எவ்வளவு கொடுப்பீர்கள் என்று , அதற்கு தந்த பதில், கொடுக்க நாங்கள் ரெடி  
கேட்க அவர் ரெடியா ...தென்னை மரத்தை பற்றி கேட்டால் இப்போது  மாட்டை இழுத்துக்கொண்டு வருகிறீர்கள்,
சும்மை தவிர வேறு சட்டத்தரணிகள் இருப்பது எங்களுக்கு தெரியாதா.... திரி போவது சும்மைப்பற்றி, 
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ,பதில் இல்லாவிட்டால் கண்டவற்றை இழுத்துக்கொண்டு வந்து சளப்புவதை விட மௌனமே சிறந்தது   

ஓ.... ஏதோ மக்கள் மீது அக்கறை உள்ளவர் நீங்கள் என்று தவறாக நினைத்துவிட்டேன். வெறும் அலப்பலுக்கு தானா நீங்கள் ரெடி?

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2020 at 06:19, கற்பகதரு said:
On 27/4/2020 at 23:39, தனிக்காட்டு ராஜா said:

மொன்றாகலை சிறைச்சலையில் பயங்கரவாதியென பொய் சொல்லப்பட்டு ஓர் தமிழர் ஒருவர் இருக்கிறார் என நினைக்கிறன் இவரைப்போல பல அப்பாவிகள் இருக்கிறார்கள் முடிந்தால் இதே சுமந்து வழக்கு பேசி பிணையிலோ அல்லது நிரந்தரமாக விடுவிக்க முடியுமா தமிழ் மக்களுக்கு எது தேவையோ அதை முதல் செய்ய சொல்லுங்கோ 

சுமேந்திரன் பராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தாலும், சட்டத்தரணி தவிர வேறு வருமானம் இல்லாத காரணத்தாலும், இந்த வழக்கும் அவருக்கு வருமானத்துக்கான ஒரு வழக்காக அமையலாம். அவரை சட்டத்தரணியாக அமர்த்திக்கொள்ள முன்பணம் எவ்வளவு செலுத்துவீர்கள்? 

Mr. கற்பு ...நாம் எழுதியதை நாமே வாசிப்பது சிறந்தது,
வந்தது போனது எல்லாவற்றையும்  பட்டியல் போடுகிறேன் பேர்வழி என்று மூஞ்சுறு விளக்குமாற்றை தூக்கிக்கொண்டு ஓட வெளிக்கிட்டது போல் இல்லாமல் ,முதலில் மேலே குறிப்பிட்ட வழக்கை மட்டும் முடிப்போமா....? அடுத்த வழக்குகளை பிறகு ஒவொன்றாக பார்க்கலாம்.
அம்மா இறந்துபோய் அப்பா இருந்தும் இல்லாத அந்த பெண் குழந்தைக்கு அப்பா கிடைக்கட்டும் ...என்ன நாங்க ரெடி ...எவ்வளவு கொடுப்பீர்கள் என்று தில்லா கேட்ட நீங்கள் ரெடியா எவ்வளவு வேண்டும் என்று சொல்ல ...
முதலில்  பேரம் பேசுதலில் டீலை முடியுங்க ,கொமிட்டி அமைப்பது Negotiate பண்ணுவது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

பணம் சேர்த்துத்தான் விடுதலை போராட்டமே நடந்தது. எல்லாவற்றுக்கும் பணம் தேவை. அதை திரட்டி, தேவைப்படும் மக்களுக்கு உதவும் முயற்சிக்கு நீங்கள் முன்னணியில் வழிகாட்ட முன்வந்திருப்பதை அனைவரும் பாரட்டுவார்கள். முதல் படியாக, பின்வரும் விடயங்களை விளக்கும் ஆவணம் ஒன்றை தயாரித்து இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்:

1. மக்களுக்கு முக்கியமான தேவைகளான வழக்குகள் எவை? உதாரணமாக, காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட கோரும் வழக்குகள், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான வழக்குகள்,  நீராவியடி பிள்ளையார்கோவில் வழக்கு (சுமேந்திரனை ஏற்கனவே சட்டத்தரணியாக கோவில் நிருவாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.), சிறுகடன் நிவாரண வழக்குகள், அங்கவீனமானவருக்கு நட்டயீடு, இப்படியான வழக்குகளை பட்டியலிட்டு அவற்றின் முக்கியத்துவப்படி இலக்கமிடுங்கள்.

2. நிதி சேர்ப்பதற்கான திட்டம். உள்ளூரில் எப்படி சேகரிக்கலாம்? உலகளாவிய அளவில் எப்படி சேகரிக்கலாம்? என்று இரண்டு பிரிவாக பட்டியலிடுங்கள். உதாரணமாக, உள்ளூர் தனவந்தர்கள் அடுத்தவருக்கு தெரியாமல் உதவுவது வழக்கம். அவர்களை எப்படி அணுகப்போகிறீர்கள்? புலம்பெயர்ந்த மக்களிடம், திரைப்படம், கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் திரட்டும் வழக்கம் உண்டு. மேலும் முகப்புத்தகம் போன்ற இணையவழிகளும் உள்ளன. ஆகவே உங்கள் திட்டத்தை பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் இணைவார்கள்.

 

இதோ ஒருவர் ஏற்கனவே இணைந்துவிட்டார். சுமேந்திரன் தவிர வேறு சிறந்த சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். நல்ல திட்டம் இருந்தால் பொருத்தமான சட்டத்தரணியை தெரிவு செய்யலாம். முயற்சி திருவினையாக்க வாழ்த்துகள்.

போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிறது ரஞ்சன் ராமநாயக்காவுக்கு ஆஜரான சுமந்திரன் ஐயா மற்றவர்களுக்கு ஆஜராகுவாரா என்பது  கேள்விக்குறி ஆனால் புலிகளால் பலவந்தமாக பிடித்து செல்லப்பட்டவகள் மீது விசாரிக்க வேண்டுமென்று சொன்னவர் முன்னாள் புலிகளுக்கு ஆஜராக மாட்டார் என நான் நினைக்கிறன் 

சில சட்டத்தரணிகள் புத்திசாலிகளாக இருப்பார்கள் ஆனால் அவர்கள்  குறிக்கோள் பணம் மாத்திரமே மட்டக்களப்பில் மலசலகூடத்தில் இறைச்சியை வெட்டிய ஒரு மூஸ்லீம் ஹோட்டலில் கையும்களவுமாக பிடித்தனர் பொது சுகாதார பரிசோதகர் பிடித்து சீல் வைக்க்ப்பட்டது ஆனால் அந்த கேசுக்கான வாதாடியவர் தமிழர் கேசை உடைத்து தற்போது திறந்து இருக்கிறது இதுதான் வக்கீல் தர்மம் 

நான் ஆட்டை பிடித்துக்காட்ட நீ மணி கட்டி கொண்டு செல்லுங்கள்  என்று சொல்கிறீர்கள்  கற்பகம் 

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

Mr. கற்பு ...நாம் எழுதியதை நாமே வாசிப்பது சிறந்தது,
வந்தது போனது எல்லாவற்றையும்  பட்டியல் போடுகிறேன் பேர்வழி என்று மூஞ்சுறு விளக்குமாற்றை தூக்கிக்கொண்டு ஓட வெளிக்கிட்டது போல் இல்லாமல் ,முதலில் மேலே குறிப்பிட்ட வழக்கை மட்டும் முடிப்போமா....? அடுத்த வழக்குகளை பிறகு ஒவொன்றாக பார்க்கலாம்.
அம்மா இறந்துபோய் அப்பா இருந்தும் இல்லாத அந்த பெண் குழந்தைக்கு அப்பா கிடைக்கட்டும் ...என்ன நாங்க ரெடி ...எவ்வளவு கொடுப்பீர்கள் என்று தில்லா கேட்ட நீங்கள் ரெடியா எவ்வளவு வேண்டும் என்று சொல்ல ...
முதலில்  பேரம் பேசுதலில் டீலை முடியுங்க ,கொமிட்டி அமைப்பது Negotiate பண்ணுவது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்  

அரசியற் கைதிகள் என்று யாரும் இல்லை என்று சொல்லாதவரைக்கும் ஓகே அக்கினி இதெல்லாம் கண்ணில் படாது ஆனந்த சுதாகரன் தற்போதும் சிறையில் தான் ஆனால் கொலை குற்றம் சாட்டப்பட்டவன் வெளியில் உலாவுகிறான் மீண்டும் அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியுமா ?? முடியாது 

3 hours ago, Thamarai.k said:

அரசியல் எப்போதும்  அரசியலாகவே  இருக்கிறது .....

அரசியல் அரசியலாகவே இருக்கிறது ஆனால் மக்கள் மீது நுட்பமாக சுமக்க சொல்லி ஏத்தப்படுகிறது ஆனால் அந்த சுமையில் பயணம் செய்யும் அரசியல் வாதிகள் நம் அரசியல் வாதிகள் 

முஸ்லீம்கள் , சிங்கள அரசியல் வாதிகள் மக்களுக்காக இனத்துக்காக மட்டும் இதற்கும் நம்ம அரசியல் வாதிகள் இல்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.