Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரில் ஒரு வீடு வேணும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்கா , மீரா உங்கள் இருவரது வீட்டை பார்க்க ஆசையாய் உள்ளது .
சகாறா அக்கா உங்கள் வீடு எத்தனை அறைகளை கொண்டது...அதற்கு அண்ணளவாய் எவ்வளவு முடிந்தது என்று சொல்ல முடியுமா?
 

  • Replies 277
  • Views 41.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி எல்லாரும் உங்கடைவிலாசத்தை சொல்லுங்கோ போய்ப் பாத்திட்டு வாரன்;

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

சரி சரி எல்லாரும் உங்கடைவிலாசத்தை சொல்லுங்கோ போய்ப் பாத்திட்டு வாரன்;

அண்ணா, திருகோணமலை பக்கம் போவதென்டால் தனிமடலில் தெரிவியுங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழர்கள்  குடும்பத்துக்கு ஒரு வீடாவது தங்கள் தங்கள் ஊரில் கட்ட வேண்டும்.இல்லையேல் இருக்கும் வீடுகளையாவது புனரமைத்து பரமாரிக்க வேண்டும்.

 எமது சந்ததிகளுக்கு சொந்த இருப்பிடம் ஒன்று நிச்சயம் வேண்டும்.இவர்கள் இங்கு பிறந்து வளர்ந்தாலும் இலங்கை எமது பூர்வீகம் என்று சொல்லாமல் எமது மண் என்று என்று சொல்ல வைக்க வேண்டும். 
நாளைய பொழுதும் உலகமும் எப்படி மாறுமென்று யாருக்கும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயர் தமிழர்கள்  குடும்பத்துக்கு ஒரு வீடாவது தங்கள் தங்கள் ஊரில் கட்ட வேண்டும்.இல்லையேல் இருக்கும் வீடுகளையாவது புனரமைத்து பரமாரிக்க வேண்டும்.

 எமது சந்ததிகளுக்கு சொந்த இருப்பிடம் ஒன்று நிச்சயம் வேண்டும்.இவர்கள் இங்கு பிறந்து வளர்ந்தாலும் இலங்கை எமது பூர்வீகம் என்று சொல்லாமல் எமது மண் என்று என்று சொல்ல வைக்க வேண்டும். 
நாளைய பொழுதும் உலகமும் எப்படி மாறுமென்று யாருக்கும் தெரியாது.

உண்மை தான் தாத்தா
எப்ப‌வும் சூழ் நிலை ஒரு மாதிரி இருக்காது ,

முர‌ட்டு சிங்க‌ள‌வ‌னின் குன‌ம் யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியாம‌ இல்லை , 

புல‌ம்பெய‌ர் நாட்டில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டில் தான் வாழ் விரும்புவின‌ம் , 

நான் என் ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ மேலே எழுதி விட்டேன் , என‌க்கும் ஊரில் வீடு க‌ட்ட‌ விருப்ப‌ம் ஆனால் சிங்க‌ள‌ ஓனாய்க‌ளுக்கு கீழ‌ அடிமை வாழ்க்கை வாழ‌ பிடிக்காது என்று /

இனி த‌மிழ‌ர்க‌ளுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கும் விரிச‌ல் வ‌ந்தா 1983ம் ஆண்டு முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ன் என்ன‌ செய்தானோ அதை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அட்டூழிய‌த்தை செய்வான் 😡 / இது என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து 🤞

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2020 at 04:56, Knowthyself said:

 

தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது

உடையது விளம்பேல்

ஊரில் காணிபூமி வாங்கியோ இருக்கிற வீட்டையோ யாராவது புதிதாக்கி போயிருக்க அவர்களுக்கு ஆதரவாக இருங்கள்.எல்லாவற்றுக்குள்ளும் தமிழ்தேசியத்தை புகுத்தி கோவணத்தோடு தமிழனை அலைய விடாதீர்கள்.
        வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் அனேகமாக கோடை விடுமுறைக்கு போகிறார்கள் ஊர் சுற்றி பார்க்கிறார்கள்.பகலில் மாத்திரமல்ல இரவில் கூட நித்திரை கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.ஒரு பக்கம் வெக்கை மறு பக்கம் நுளம்பு.இதற்காகவே பலபேர் இரவுகளில் விடுதிகளில் போய் தங்குகிறார்கள்.
         75-80 லட்சம் செலவு செய்து வீடு கட்டும் போது ஓரிரு லட்சம் செலவு செய்து குளிரூட்டி போடுவது தவறல்ல.
         யாராவது வீடு கட்டிப் போகிறேன் திருத்தப் போகிறேன் என்றால் ஓரிரு அறைகளுக்காவது குளிரூட்டியை போடுங்கள்.அத்தோடு இன்னுமொரு 2 லட்சம் செலவு செய்து கமராவும் போடுங்கள்.அரசு மக்களை பாதுகாப்பது போல தெரியவில்லை.சிறிய பாதுகாப்பாவது எங்களுக்கு இருக்கட்டும்.
         தமிழ்தேசியத்தை கதைப்பதற்கு சந்தோசம்.உங்க பெயரே சொல்ல கஸ்டமாக உள்ளது.தமிழில் ஒரு பெயரை வைக்க முயற்சி பண்ணுங்கள்.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2020 at 03:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணாஅதுசரி எந்த ஊரில் உள்ளது உங்கள் வீடு ???😎

இருபாலை

6 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரில் காணிபூமி வாங்கியோ இருக்கிற வீட்டையோ யாராவது புதிதாக்கி போயிருக்க அவர்களுக்கு ஆதரவாக இருங்கள்.எல்லாவற்றுக்குள்ளும் தமிழ்தேசியத்தை புகுத்தி கோவணத்தோடு தமிழனை அலைய விடாதீர்கள்.
        வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் அனேகமாக கோடை விடுமுறைக்கு போகிறார்கள் ஊர் சுற்றி பார்க்கிறார்கள்.பகலில் மாத்திரமல்ல இரவில் கூட நித்திரை கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.ஒரு பக்கம் வெக்கை மறு பக்கம் நுளம்பு.இதற்காகவே பலபேர் இரவுகளில் விடுதிகளில் போய் தங்குகிறார்கள்.
         75-80 லட்சம் செலவு செய்து வீடு கட்டும் போது ஓரிரு லட்சம் செலவு செய்து குளிரூட்டி போடுவது தவறல்ல.
         யாராவது வீடு கட்டிப் போகிறேன் திருத்தப் போகிறேன் என்றால் ஓரிரு அறைகளுக்காவது குளிரூட்டியை போடுங்கள்.அத்தோடு இன்னுமொரு 2 லட்சம் செலவு செய்து கமராவும் போடுங்கள்.அரசு மக்களை பாதுகாப்பது போல தெரியவில்லை.சிறிய பாதுகாப்பாவது எங்களுக்கு இருக்கட்டும்.
         தமிழ்தேசியத்தை கதைப்பதற்கு சந்தோசம்.உங்க பெயரே சொல்ல கஸ்டமாக உள்ளது.தமிழில் ஒரு பெயரை வைக்க முயற்சி பண்ணுங்கள்.
நன்றி.

 

முன்னர் இலங்கையில் ஏற்றதாழ்வுகளின் இடைவெளி குறைவு, இதை இந்தியாவாக மாற்றி விடாதீர்கள் 

சதுரமாக வீடு கட்டுவதால் காற்றின் வேகத்தையும் சுழற்சியையும் தடுக்கிறீர்கள், இன்னும் நிறைய விசையங்கள் இருக்கு

வீட்டின் உள்ளக வடிவமைப்புக்காக பாவிக்கபடும் பொருட்கள் இத்தாலியிலையும் இருந்து வருது. இதுக்கவேற பொருளாதார நிபுனர்கள் போல் வேலைவாய்ப்பை பெற்று தருகிறார்களாம், நெஞ்சதொட்டுசொல்லுங்கோ, கடசி தொழிலாலிக்கு ஒரு 10,000 ரூபாய் கூட கிடைத்திருக்காது, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதை உறுதிப்படுதுகிறீர்கள்.

எனது பூமித்தாயை நாசம் பன்னாம நீங்கள் வேண்டுமென்றால் சந்திரனில் வீடுகட்டி குளிரூட்டி போட்டு தங்கு திங்கென்று ஆட்டம் போடுங்கோ, விடுதலை புலிகள் செய்த்தையென்றாலும் கொஞ்சம் செய்ய முயற்சிசெய்யுங்கள். குனிஞ்சு ஒரு சாமான்கள் எடுக்கேலாத வெளிநாட்டு குஞ்சுகள் படுக்க கரச்சலென்டால் கஸ்ட்டம்தான்.

சமயமென்றோம், சாதியென்றோம், சிங்களர் மொழியை, கானியை, கல்வியை, அபிவிருத்தி தரவில்லை/செய்யவில்லையென்றோம், இயக்மென்றோம். இப்ப (நாங்களாகவே), பொருளாதாரத்தில் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி அன்போடும் மதிப்போடும் இருந்த எங்களை கள்ளர்களாகவும் காடையர்களாகவும் வண்மம்மிக்கவர்களாகவும் துண்டு துண்டாக்கி வைத்துள்ளீர்கள்.

எனது அழகான அன்புமிகு குடும்பமும் இடம்பெயர்ந்தது, எங்களுக்த்தெரிந்த களவுசெய்பவர் ஒருவரும் எல்லா வீடுகளிலும் களவு எடுப்பதாக கேள்விபட்டோம், ஆனாலும் திரம்பி சென்று பார்க்கும் போது எல்லாம் அப்படியே இருந்தன, ஏனென்றால் அப்பா உதவியென்று வருவோர்க்கு அள்ளியள்ளி கொடுத்தார் நெல்லாக காய்கறியாக, அந்த கள்ளருக்கும் அடங்கலாக, அன்பாகவும் இருந்தார்.

எனது புனைபெயர் தமிழில் அர்த்த படுத்தினால் மிகவும் இலகு, உனை நீ அறி, திரும்பவும் சொல்கிறேன் உனை நீ அறி.

சொந்த பெயரில் யாழில் இணையவேண்டுமென்று சட்டமில்லையென்று நினைக்கிறேன். உங்களுக்கு கட்டாயம் தேவையென்றால் தனிமடலில் தொடர்புகொள்ளலாம்.

 

இதுக்கவேற யாழிலும் குழுயிருக்கு

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா 


நான் ஒரு PRINCIPAL லோட வாழுறவன் புரியலே ஒரு கோடுபோட்டு வாழுறவன்

[5:50]

 

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Knowthyself said:

முன்னர் இலங்கையில் ஏற்றதாழ்வுகளின் இடைவெளி குறைவு, இதை இந்தியாவாக மாற்றி விடாதீர்கள் 

சதுரமாக வீடு கட்டுவதால் காற்றின் வேகத்தையும் சுழற்சியையும் தடுக்கிறீர்கள், இன்னும் நிறைய விசையங்கள் இருக்கு

வீட்டின் உள்ளக வடிவமைப்புக்காக பாவிக்கபடும் பொருட்கள் இத்தாலியிலையும் இருந்து வருது. இதுக்கவேற பொருளாதார நிபுனர்கள் போல் வேலைவாய்ப்பை பெற்று தருகிறார்களாம், நெஞ்சதொட்டுசொல்லுங்கோ, கடசி தொழிலாலிக்கு ஒரு 10,000 ரூபாய் கூட கிடைத்திருக்காது, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதை உறுதிப்படுதுகிறீர்கள்.

இலங்கையில் இந்தியா மாதிரி மிக பெரிய ஏற்றதாழ்வுகள் இடைவெளிகள் ஏற்படுத்தி மாற்றியமைப்பது வெளிநாடுகளில் உள்ள ஒரு பகுதி ஈழ தமிழர்களினால் மிகவும் விரும்பபடுகிறது.சிங்க‌ள‌வ‌ன் ஓட‌ கை குலுக்கிவிட கூடாது அது மட்டும் தான் நிபந்தனை மற்றபடி 😂

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பூமியில் வீடு கட்டுவது பிரச்சனையா அல்லது ஊரில் கட்டுவது பிரச்சனையா.

உங்களுக்கு பொறாமை & எரிச்சல் 

அங்கு இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட இடத்திலேயே குடியிருக்க சனம்இல்லை.

மேற்கு நாடுகளில் நீங்கள் சுடுநீருக்காகவும் வீட்டை வெப்பமாக்கவும் உபயோகிக்கும் bioler இருந்து வெளியிடும் Co2 இனால் உங்கள் பூமித்தாய் நாசமடையாதா அதுமட்டுமல்ல உங்களது கார்களிலிருந்து வெளியிடும் Co2 இன் நிலை என்ன?

ஏதோ தாங்கள் மட்டும்தான் பூமித்தாயில் அக்கறை என்டு பீலா காட்ட வேண்டாம். 

ஊரியேலே படித்து உழைத்து எத்தனையோ பேர் கோடிக்கணக்கான பெறுமதியில் வீடுகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து Planning permission இல் ventilation ற்கு  Air condition எல்லாம் போட்டு காட்டேலாது...எதிர் சுவர் அல்லது எல்லையிலிருந்து 5 அடி இடைவெளி. அத்தோடு air condition க்கு அனுமதி தேவையில்லை.

சாதாராண உதவித் தொழிலாளிக்கு 1500/= நாள் சம்பளம். Slap concrete போடும் போது எல்லோருக்கும் 500/= கூடுதல்.

நகர சபையின் அனுமதி இல்லாமல் எதுவும் கட்ட ஏலாது அதிலும் 2000 சதுர அடிக்கு மேல் என்றால் Urban Development Authority அனுமதி. அவர்கள் planning permission இல் சதுரமா வட்டமா என்று பார்த்துதான் அனுமதிப்பார்கள். சதுரமாக கட்ட கூடாது என்று ஒரு தடையும் இல்லை....

 

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்திலிருந்து அரச திணைக்களங்கள் வங்கிகள் தனியார் நிறுவனங்கள்  இலத்திரனியல் கடைகள், பலசரக்கு கடைகள் வரை குளிரூட்டிகள் உபயோகிக்கிறார்கள். 

தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைத்த நிலை தான்.....

நீங்க கோடு போட்டு வாழுங்கோ அல்லது வட்டம் போட்டு வாழுங்கோ, அது உங்கட சுதந்திரம் / பிரச்சனை.

இப்போ சுமோக்கு விளங்கியிருக்கும்  காணி வாங்கியவுடன் சுற்று மதிலை ஏன் கட்ட வேண்டும் என்று.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Knowthyself said:

எனது அழகான அன்புமிகு குடும்பமும் இடம்பெயர்ந்தது, எங்களுக்த்தெரிந்த களவுசெய்பவர் ஒருவரும் எல்லா வீடுகளிலும் களவு எடுப்பதாக கேள்விபட்டோம், ஆனாலும் திரம்பி சென்று பார்க்கும் போது எல்லாம் அப்படியே இருந்தன, ஏனென்றால் அப்பா உதவியென்று வருவோர்க்கு அள்ளியள்ளி கொடுத்தார் நெல்லாக காய்கறியாக, அந்த கள்ளருக்கும் அடங்கலாக, அன்பாகவும் இருந்தார்.

கள்வர்கள் சொந்தக்காரர் வீடுகளில் கன்னம் வைப்பதில்லை .

 

நீங்கள் எப்படியும் கட்டலாம், எனது வாதம் எந்த இடத்தில் எந்த காலக்தில், எந்த சூல்லுக்கேற்ப கட்டபடுவது பற்றியது பற்றி.

உ+ம்; நீங்கள் மேல்மாடியில் போட்டிருக்கும் இரும்பு கம்பிகளில் இருந்து மன்சூன் மழைக்கு குறைந்தது இரண்டு வருடத்தில் கறள் ஒழுகுவது உறுதி, உனக்கென்ன அதுக்கு என்று எழுதமாட்டிங்கள் என்று நினைக்கிறன்

On 17/5/2020 at 02:59, MEERA said:

நீங்கள் அண்மையில் ஊருக்கு சென்றிருக்கிறீர்களா??

வெளிநாட்டு உதவியின்றி சொந்த முயற்சியில் முன்னேறிய மக்கள் அங்கு

 

அது ஒகானிக்குறோத் வெளிநாட்டில் போவோரால் செய்யபடுவது பலன்சில்லாமல் ஆக்கும் வேலை

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Knowthyself said:

 

நீங்கள் எப்படியும் கட்டலாம், எனது வாதம் எந்த இடத்தில் எந்த காலக்தில், எந்த சூல்லுக்கேற்ப கட்டபடுவது பற்றியது பற்றி.

உ+ம்; நீங்கள் மேல்மாடியில் போட்டிருக்கும் இரும்பு கம்பிகளில் இருந்து மன்சூன் மழைக்கு குறைந்தது இரண்டு வருடத்தில் கறள் ஒழுகுவது உறுதி, உனக்கென்ன அதுக்கு என்று எழுதமாட்டிங்கள் என்று நினைக்கிறன்

Anti rust paint கேள்விப்பட்டதில்லையா?

வீட்டை கட்டினால் மட்டும் போதாது, நன்றாக பராமரிக்கவும் வேண்டும்

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Knowthyself said:

நான் ஒரு PRINCIPAL லோட வாழுறவன் புரியலே ஒரு கோடுபோட்டு வாழுறவன்

நடை முறைக்கு சாத்தியமில்லாத கொள்கைகளைக் கொண்டுள்ளீர்கள்.
தனி நபராக இருந்தா என்ன ஒரு நாடாக இருந்தா என்ன காலத்துக்கு காலம் உலக சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டே போகிறார்கள்.
     உங்களுடன் முரண்பட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லை.
ஆனாலும் ஒரு வேண்டுகோள்.
    புலம் பெயர்ந்தவர்கள் ஊர் திரும்பும் போது அதைஇத சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Knowthyself said:

முன்னர் இலங்கையில் ஏற்றதாழ்வுகளின் இடைவெளி குறைவு, இதை இந்தியாவாக மாற்றி விடாதீர்கள்

 

1 hour ago, Knowthyself said:

உங்கள் முன்னேற்றம் என்ன, உழைப்பில்லா ஊதின உதவாத மக்கள்கூட்டத்தை உருவாக்குவதிலா?

வெளிநாட்டில் உழைப்பவர்கள், அங்கு காசை அனுப்பும் பொது. அதுவும் தொடர்ச்சியாக, ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. 

பலவழிகளில் அது உண்மையில் தீங்கில் முடிகிறது. அத்துடன், உழைப்பவரையும் பாரதூரமாக  தாக்குகிறது. பொதுவாக அங்கிருக்கும் வெளிநாட்டில் உழைப்பவரின் பெற்றோர் கூட, உடனடியாக கிடைக்கும் வசதி வாய்ப்புகளையே உவக்கின்றனர். இங்கு உழைப்பவரின் நிலையை, எதிர் காலத்தை புறக்கணிக்கின்றனர்.

இதை நான் பொதுவாகா மிகவும் கண்டிக்கிது இங்கு எழுதி உள்ளேன். ஓர் பயனுள்ள தேவைக்காக, அது அநேகமாக முதலீடாகத்தான் இருக்கும், கல்வி தொழில் கல்வி கூட, மேற்கல்வி, அல்லது தொழில் முயற்சிற்கு அனுப்படுவது வேறு. ஆனால் அப்படி அனுப்பப்படுவத்து வெகு குறைவு.      

அனுப்புவது நின்றவுடன் எத்தனையோ  பெற்றோர் கூட உறவில்லை என்று முறித்தது  என்பதை  நம்பவேண்டி உள்ளது.      

 

4 hours ago, Knowthyself said:

வீட்டின் உள்ளக வடிவமைப்புக்காக பாவிக்கபடும் பொருட்கள் இத்தாலியிலையும் இருந்து வருது. இதுக்கவேற பொருளாதார நிபுனர்கள் போல் வேலைவாய்ப்பை பெற்று தருகிறார்களாம், நெஞ்சதொட்டுசொல்லுங்கோ, கடசி தொழிலாலிக்கு ஒரு 10,000 ரூபாய் கூட கிடைத்திருக்காது, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதை உறுதிப்படுதுகிறீர்கள்.

Housing economy ஐ முழுதும் அறியாதவராக இருக்கிறீர்கள்.

ஒருவர் தன் உழைத்த பணத்தில் காணியை வாங்கி அல்லது ஏற்கனவே இருக்கும் வெறுமையான காணியில் புதிதாக தான் உழைத்த பணத்தை கொண்டு வீடு கட்டப்படும் போது, அது பரந்த சமூகத்தில் ஏதோ ஓர் விதமாக productive economy ஐ, தற்காலிகமாகவேனும் உருவாக்கும்.

ஏற்கனவே தன்னிடம் இருக்கும் வீட்டை, சொந்த பணத்தில் புனருத்தாரணம் செய்யும் போதும், அது பரந்த சமூகத்தில் ஏதோ ஓர் விதமாக productive economy ஐ,  உருவாக்கும்.

உழைத்த பணத்தில் செய்வது, ஒருவர் தான் அடையும் பலனால்    (அதாவது வீட்டில் வசதிகளுடன் வசிப்பது மற்றும் மனத்திருப்தி போன்றவை ) அவரை மட்டுமின்றி, சமூகத்திற்கு தன்னாலான பொருளியல் பங்களிப்பு செய்து விட்டே பலனை அனுபவிக்கிறார் என்பதே பொருளியல் உண்மை.

அப்படி அந்த வீட்டை (அல்லது எதுவாககட்டும்) கட்டும்போது அதற்கான பொருட்கள் (கட்டுமான பொருட்கள் மற்றும் finishing items) , அந்த வீடு உள்ள பகுதியில், வடகிழக்கில் (தமிழர்கலின் பொருளாதாரத்தை மட்டும் வைத்து பார்க்கும் போது), அல்லது இலங்கைத் தீவில் வாங்கப்பட்டால், அந்த பொருட்கள் இத்தாலியில்  செய்யப்பட்டு வந்ததாயினும் (முகவர் அல்லது நேரடியாக), அது பரந்த சமூகத்தில் productive economic activity.    
 
இதனால் தான் housing boom (new construction, reconstruction, repairing and refurbishment, and as a result value rise) , சொந்த பணத்தால் மட்டும் ஏற்பட்டால், சமூகம் உண்மையான பொருளாதார அபிவிருத்தியும், வளர்ச்சியும், வாழ்க்கைத்தரமும் உண்மையில் உயரும்.
      
இதை ஒருவர் வங்கியிடம் இருந்து பணத்தை கடனாக பெற்று செய்வாராயின், பரந்த சமூகத்தையும் எதோ ஒரு விதமாக  கடன் சுமையை சுமக்கச் செய்யும்.

அதனால், சொந்த பணத்தில் வீடு கட்டுவது, பரந்த சமூகத்திற்கு productive economy (as opposed to Rentier economic activities and  practices, which is  exploitative) ஐ சமூகத்திற்கு வழங்கும். Rentier economy இல் ஒரு பகுதி வளரும், மாரு பகுதி தேயும்.

வடகிழக்கில் பொதுவாக (அங்கிருப்பர்வர்களும், வெளிநாட்டில் இருப்பவர்களும்) தம்முடைய உழைத்த பணத்திலேயே கட்டுகிற படியால், அது அபிவிருத்தியாகவும், வளர்ச்சியாகவும், வளைக்கைத்தரம் உயர்வடைகிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.   

ஆனால், எந்தவொரு economic system ஆலும்  இதுவரை extreme poverty (dirt poor, இது கூட ஒப்பீட்டளவில்) ஐ நீக்க முடியவில்லை என்பதும் உண்மை.

ஆனால், யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட உதவிகள் தேவை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு விக்கி மிகவும் முயன்றார் (முதலமைச்சர் நிதியம் மூலம் நேரடியாகவே வட மாகாண சபை சட்ட அடிப்படையில் நிதி பெறுவதத்திற்கு), சிங்களளம் தடுத்து விட்டது.

ஆயினும், யுத்தத்தில் அகப்பட்டு மீண்டவர்கள், வேலை செய்யக் கூடியவர்கள்,  இத்தகைய பொருளாதார பங்களிப்பு மறைமுகமான உதவிகளை செய்யும், அதாவது productive economic activities பரந்த சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் ஊடாக.        
   

 குறிப்பிட்ட ஓர் வீடு கட்டப்படும் போது வேண்டிய நாட்கூலி மூலம் மட்டும் 10000 உழைத்தார்களா என்று சொல்ல முடியாது, ஆனாலும் நான் அறிந்த  வரையில், நாட்கூலி செய்பவர், ஆகக் குறைந்தது  15-20 நாட்கள் (நினைவில் உள்ளவரை 2015 க்கு முதல்) இற்கு வேலை செய்தால், 10000 க்கு மேல் உழைப்பார்கள். நாட்கூலியின் பெறுமதி அவ்வளவு ஏறி விட்டது.  

 இலங்கையில் உள்ளவர்களும் வசதி இருந்தால், இப்படி வீடுகளை கட்டுகின்றனர். அதை பற்றிய உங்கள் கருத்து என்ன. 

Edited by Kadancha
amend

28 minutes ago, ஈழப்பிரியன் said:

நடை முறைக்கு சாத்தியமில்லாத கொள்கைகளைக் கொண்டுள்ளீர்கள்.
தனி நபராக இருந்தா என்ன ஒரு நாடாக இருந்தா என்ன காலத்துக்கு காலம் உலக சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டே போகிறார்கள்.
     உங்களுடன் முரண்பட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லை.
ஆனாலும் ஒரு வேண்டுகோள்.
    புலம் பெயர்ந்தவர்கள் ஊர் திரும்பும் போது அதைஇத சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள்.

 

எனது அழகான இலங்கை தீவைப்பற்றி கதைக்கிறேன், wealth well-being பற்றி கதைக்கிறேன் நீங்கள் பணம் பார்பது, வறட்டு கௌவுரவத்தை பற்றி கதைக்கிறீங்கள்

நீங்கள் தானேசொல்கிறீங்கள் நாங்கள் நினைத்ததைதான் செய்வோமென்று. உள்ளார்ந்த அர்த்தங்களுடன் எழுதுபவைகளை கொச்சைப்படுத்திறேன் என்று விளங்கிகொண்டால் என்ன செய்ய

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

 

வெளிநாட்டில் உழைப்பவர்கள், அங்கு காசை அனுப்பும் பொது. அதுவும் தொடர்ச்சியாக, ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. 

பலவழிகளில் அது உண்மையில் தீங்கில் முடிகிறது. அத்துடன், உழைப்பவரையும் பாரதூரமாக  தாக்குகிறது. பொதுவாக அங்கிருக்கும் வெளிநாட்டில் உழைப்பவரின் பெற்றோர் கூட, உடனடியாக கிடைக்கும் வசதி வாய்ப்புகளையே உவக்கின்றனர். இங்கு உழைப்பவரின் நிலையை, எதிர் காலத்தை புறக்கணிக்கின்றனர்.

இதை நான் பொதுவாகா மிகவும் கண்டிக்கிது இங்கு எழுதி உள்ளேன். ஓர் பயனுள்ள தேவைக்காக, அது அநேகமாக முதலீடாகத்தான் இருக்கும், கல்வி தொழில் கல்வி கூட, மேற்கல்வி, அல்லது தொழில் முயற்சிற்கு அனுப்படுவது வேறு. ஆனால் அப்படி அனுப்பப்படுவத்து வெகு குறைவு.      

அனுப்புவது நின்றவுடன் எத்தனையோ  பெற்றோர் கூட உறவில்லை என்று முறித்தது  என்பதை  நம்பவேண்டி உள்ளது.      

👍 100% சரிமாக சொன்னீர்கள், சும்மா உதவாமால் முதலீட்டுக்கு உதவினால், பலர் ஒருவரின் முதலீட்டால் முன்னேறுவார்கள். சரியான் வழி நடத்தலின்றி சிலர் வெளியிலிருத்து அனுப்பும் பணத்தை செலவழிக்கின்றார்கள், இது மன வேதனை.

என் தம்பிக்கு தொழிலை காட்டினேன், அவனும் அவனை சார்ந்தோரும் நன்றாக இருக்கின்றார்கள், எனக்கும் பிரச்சனையில்லை வாழ்நாள் முழுக்க பொறுப்பெடுக்க 

40 minutes ago, MEERA said:

Anti rust paint கேள்விப்பட்டதில்லையா?

வீட்டை கட்டினால் மட்டும் போதாது, நன்றாக பராமரிக்கவும் வேண்டும்

 

AFTER 20 YEARS, உந்த மக்கா கழிவுகளை,  PLASTIC RUBBER AND ETC. எங்கே கொட்டுவது இலங்கையில்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Knowthyself said:

 

AFTER 20 YEARS, உந்த மக்கா கழிவுகளை,  PLASTIC RUBBER AND ETC. எங்கே கொட்டுவது இலங்கையில்?

Recycling - ஆனால் இது அரசின் கைகளில் தங்கி உள்ளது

 

12 minutes ago, MEERA said:

Recycling - ஆனால் இது அரசின் கைகளில் தங்கி உள்ளது

 

அரசு என்பது மக்கள் அல்லவா?

 

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Knowthyself said:

 

 

அரசு என்பது மக்கள் அல்லவா?

 

எனது பேச்சை கேளுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று அரச ஊழியர்களை விரட்டும் அரசா மக்கள் அரசு..

தெரிந்தும் தெரியாமலும் மருத்துவக் கழிவுகளை இறக்குமதி செய்யும் அரசா மக்கள் அரசு

42 minutes ago, Kadancha said:

 

வெளிநாட்டில் உழைப்பவர்கள், அங்கு காசை அனுப்பும் பொது. அதுவும் தொடர்ச்சியாக, ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. 

பலவழிகளில் அது உண்மையில் தீங்கில் முடிகிறது. அத்துடன், உழைப்பவரையும் பாரதூரமாக  தாக்குகிறது. பொதுவாக அங்கிருக்கும் வெளிநாட்டில் உழைப்பவரின் பெற்றோர் கூட, உடனடியாக கிடைக்கும் வசதி வாய்ப்புகளையே உவக்கின்றனர். இங்கு உழைப்பவரின் நிலையை, எதிர் காலத்தை புறக்கணிக்கின்றனர்.

இதை நான் பொதுவாகா மிகவும் கண்டிக்கிது இங்கு எழுதி உள்ளேன். ஓர் பயனுள்ள தேவைக்காக, அது அநேகமாக முதலீடாகத்தான் இருக்கும், கல்வி தொழில் கல்வி கூட, மேற்கல்வி, அல்லது தொழில் முயற்சிற்கு அனுப்படுவது வேறு. ஆனால் அப்படி அனுப்பப்படுவத்து வெகு குறைவு.      

அனுப்புவது நின்றவுடன் எத்தனையோ  பெற்றோர் கூட உறவில்லை என்று முறித்தது  என்பதை  நம்பவேண்டி உள்ளது.      

 

Housing economy ஐ முழுதும் அறியாதவராக இருக்கிறீர்கள்.

ஒருவர் தன் உழைத்த பணத்தில் காணியை வாங்கி அல்லது ஏற்கனவே இருக்கும் வெறுமையான காணியில் புதிதாக தான் உழைத்த பணத்தை கொண்டு வீடு கட்டப்படும் போது, அது பரந்த சமூகத்தில் ஏதோ ஓர் விதமாக productive economy ஐ, தற்காலிகமாகவேனும் உருவாக்கும்.

ஏற்கனவே தன்னிடம் இருக்கும் வீட்டை, சொந்த பணத்தில் புனருத்தாரணம் செய்யும் போதும், அது பரந்த சமூகத்தில் ஏதோ ஓர் விதமாக productive economy ஐ,  உருவாக்கும்.

உழைத்த பணத்தில் செய்வது, ஒருவர் தான் அடையும் பலனால்    (அதாவது வீட்டில் வசதிகளுடன் வசிப்பது மற்றும் மனத்திருப்தி போன்றவை ) அவரை மட்டுமின்றி, சமூகத்திற்கு தன்னாலான பொருளியல் பங்களிப்பு செய்து விட்டே பலனை அனுபவிக்கிறார் என்பதே பொருளியல் உண்மை.

அப்படி அந்த வீட்டை (அல்லது எதுவாககட்டும்) கட்டும்போது அதற்கான பொருட்கள் (கட்டுமான பொருட்கள் மற்றும் finishing items) , அந்த வீடு உள்ள பகுதியில், வடகிழக்கில் (தமிழர்கலின் பொருளாதாரத்தை மட்டும் வைத்து பார்க்கும் போது), அல்லது இலங்கைத் தீவில் வாங்கப்பட்டால், அந்த பொருட்கள் இத்தாலியில்  செய்யப்பட்டு வந்ததாயினும் (முகவர் அல்லது நேரடியாக), அது பரந்த சமூகத்தில் productive economic activity.    
 
இதனால் தான் housing boom (new construction, reconstruction, repairing and refurbishment, and as a result value rise) , சொந்த பணத்தால் மட்டும் ஏற்பட்டால், சமூகம் உண்மையான பொருளாதார அபிவிருத்தியும், வளர்ச்சியும், வாழ்க்கைத்தரமும் உண்மையில் உயரும்.
      
இதை ஒருவர் வங்கியிடம் இருந்து பணத்தை கடனாக பெற்று செய்வாராயின், பரந்த சமூகத்தையும் எதோ ஒரு விதமாக  கடன் சுமையை சுமக்கச் செய்யும்.

அதனால், சொந்த பணத்தில் வீடு கட்டுவது, பரந்த சமூகத்திற்கு productive economy (as opposed to Rentier economic activities and  practices, which is  exploitative) ஐ சமூகத்திற்கு வழங்கும். Rentier economy இல் ஒரு பகுதி வளரும், மாரு பகுதி தேயும்.

வடகிழக்கில் பொதுவாக (அங்கிருப்பர்வர்களும், வெளிநாட்டில் இருப்பவர்களும்) தம்முடைய உழைத்த பணத்திலேயே கட்டுகிற படியால், அது அபிவிருத்தியாகவும், வளர்ச்சியாகவும், வளைக்கைத்தரம் உயர்வடைகிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.   

ஆனால், எந்தவொரு economic system ஆலும்  இதுவரை extreme poverty (dirt poor, இது கூட ஒப்பீட்டளவில்) ஐ நீக்க முடியவில்லை என்பதும் உண்மை.

ஆனால், யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட உதவிகள் தேவை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு விக்கி மிகவும் முயன்றார் (முதலமைச்சர் நிதியம் மூலம் நேரடியாகவே வட மாகாண சபை சட்ட அடிப்படையில் நிதி பெறுவதத்திற்கு), சிங்களளம் தடுத்து விட்டது.

ஆயினும், யுத்தத்தில் அகப்பட்டு மீண்டவர்கள், வேலை செய்யக் கூடியவர்கள்,  இத்தகைய பொருளாதார பங்களிப்பு மறைமுகமான உதவிகளை செய்யும், அதாவது productive economic activities பரந்த சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் ஊடாக.        
   

 குறிப்பிட்ட ஓர் வீடு கட்டப்படும் போது வேண்டிய நாட்கூலி மூலம் மட்டும் 10000 உழைத்தார்களா என்று சொல்ல முடியாது, ஆனாலும் நான் அறிந்த  வரையில், நாட்கூலி செய்பவர், ஆகக் குறைந்தது  15-20 நாட்கள் (நினைவில் உள்ளவரை 2015 க்கு முதல்) இற்கு வேலை செய்தால், 10000 க்கு மேல் உழைப்பார்கள். நாட்கூலியின் பெறுமதி அவ்வளவு ஏறி விட்டது.  

 இலங்கையில் உள்ளவர்களும் வசதி இருந்தால், இப்படி வீடுகளை கட்டுகின்றனர். அதை பற்றிய உங்கள் கருத்து என்ன. 

 

உங்கள் விளக்கங்கள் சரியானவையாக இருக்கலாம், படித்ததெல்லாம் இலங்கைக்கு சரிபட்டு வருமா?

தேவையில்லாமல் REALTORS களையும் ARTIFICIAL லா விலையை கூட்டி கீழ் நிலையில் உள்ளவர்கள் எந்த காலத்திலும் வீடு வேண்டாமல் செய்வது தர்மமா ஞயமா? 

4 minutes ago, MEERA said:

எனது பேச்சை கேளுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று அரச ஊழியர்களை விரட்டும் அரசா மக்கள் அரசு..

தெரிந்தும் தெரியாமலும் மருத்துவக் கழிவுகளை இறக்குமதி செய்யும் அரசா மக்கள் அரசு

 

இது மடையை திருப்பும் வேலை, இது இன்னொரு தலைப்பில் விவாதிக்க வேண்டியது

நன்றி சகோதரா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Knowthyself said:

உங்கள் விளக்கங்கள் சரியானவையாக இருக்கலாம், படித்ததெல்லாம் இலங்கைக்கு சரிபட்டு வருமா?

படித்ததல்ல, practical ஆக நடைமுறையில் இருக்கும் பொருளாதாரங்களின் ஏற்ற தாழ்வுகளை  அடிப்படையாக வைத்து ஆராய்ந்து   நிறுவப்பட்ட பொருளியல் நடைமுறைகள், கட்டுப்படுத்தாத (artificially controlled) economy இல்லாமல் இருக்கும் வரைக்கும். 

ஆனால் சிங்களம் தேசியவளமான பொருளாதாரம், தனக்கு மட்டுமே ஏக போக உரிமையாக இருக்க வேண்டும் என்று கருதி செய்யும் குளறுபடிகளும், அடக்கு முறையும் வேறு. 

இலங்கை தீவின் பொருளாதாரம் திறந்த பொருளாதாரம், எவர் ஆட்சிக்கு வந்தாலும், சிங்களம் தனது ஏக போக உரிமையாக வைத்திருக்க முயன்றாலும். 

 

1 hour ago, Knowthyself said:

தேவையில்லாமல் REALTORS களையும் ARTIFICIAL லா விலையை கூட்டி கீழ் நிலையில் உள்ளவர்கள் எந்த காலத்திலும் வீடு வேண்டாமல் செய்வது தர்மமா ஞயமா? 

"எனது அழகான இலங்கை தீவைப்பற்றி கதைக்கிறேன், wealth well-being பற்றி கதைக்கிறேன் நீங்கள் பணம் பார்பது, வறட்டு கௌவுரவத்தை பற்றி கதைக்கிறீங்கள்"

இலங்கைத் தீவு இப்போது middle income country. அதனால், ஒப்பீட்டளவில் இலங்கைத் தீவின் நீங்கள் சொல்லிய wealth well-being கூடி உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வீதாசாரமும் குறைந்து உள்ளது. பொதுவாக ஏற்றத் தாழ்வுகள் குறைந்து உள்ளது.             

வடகிழக்கு, அதில் ஒப்பீட்டளவில் பின்னுள்ளது. ஆயினும், பல  சிங்கள பகுதிகள் (மாகாணங்கள் அல்ல) வடகிழக்கை விட பின்னுள்ளன. 

ஆயினும் மலையகத்தில் இப்போதும் லயங்களில் இருப்பவருக்கும், ஓர் பிறிம்பான, சிறப்பான நிறுவனமயப்படுத்தப்பட்ட கரிசனை வேண்டும் அவர்களின் economic status ஐ உயர்ச்சி அடையச் செய்ய என்பதை ஏற்றுக் கொள்கிறேன். யுத்தத்திற்கு பின்னும்  இலங்கைத் தீவில் dirt poor community ஆக இருப்பது அவர்களே. இதை அவர்களின் அரசியல் தலைமை வெளியார் (சிங்களம் கூட) செய்வதை  தடுக்கிறது.

உங்களின் வாதப்படி, இலங்கைத் தீவு என்று நீங்கள் கரிசனைப்படுவதால், தமிழர்களோ, சிங்களவர்களோ,
இல்லை முன்னேறிய மலையகத் தமிழர்களோ  1948 இற்கு பின் இப்போதுள்ள பழைய வீடுகளை கட்டிய இருக்க கூடாது.

ஏற்கனவே சொல்லி விட்டேன், சொந்தமாக உழைத்த மற்றும் உழைக்கும்  பணத்தில் காணிகள் வாங்கப்படுவதும், வீடுகள் கட்டப்படுவதும் வாழ்க்கைத்தரம் ஏறும் அளவிற்கு மட்டுமே காணிகளின், வீடுகளின் விலையும் கூடும். விதிவிலக்காக சில இடங்களில் மட்டும் சராசரி விலை உயர்வுக்கு கூடுதலான உயர்வு இருக்கும். பொதுவாக கனிகள், வீடுகள் வாங்குவதற்கு சராசரி மக்களின் பொறுக்க கூடிய (பணச் சுமை (affordability) மாற்றமடையாது. 

கடன், அதுவும் வங்கி கடன் அல்லது நிறுவனமயப்படுபட்ட கடன் வசதி, காணிகள், வீடுகள் வாங்குவதற்கு உள்ள போதே, முக்கியமாக அரச வரியும் (வாடகைக்கு வீடுகள் விடப்படும் போது) அதற்கு உகந்ததாக அமைந்தால் மாத்திரமே, விலைகள் artificial ஆக ஏற்றப்படுவதற்கான தளம் இருக்கும். இலங்கையில் வீடு கட்டுவதற்கு கூட வங்கி கடன், காணி சொந்தமாக இருந்தால் மட்டுமே, வங்கி கரிசனையில்  எடுக்கும், கடன் கிடைப்பது நிச்சயமல்ல. எனது அவதானித்த, கேள்விப்பட்ட தரவுகளின் படி, வங்கிக்கடன், வீடு கட்டியவுடன் இருக்கும் முழுப் பெறுமதியில்  ஏறத்தாழ 20 - 25% அப்பால் செல்வது மிகவும் கடினம். எனவே இலங்கையில் விலை artificial ஆக ஏறுவதற்கு வாய்ப்புக்கள் இது  வரை இல்லை.  

வெளிநாட்டில் வசிப்பவர்கள், குறிப்பாக தமிழர்,  பொதுவாக இருக்கும் வீட்டை திருத்துவது, அல்லது அது முடியாமல் போனால் கட்டுவது, புதிதாக காணி வாங்கி கட்டுவது பொதுவாக குறைவு. அப்படி புதிதாக வாஙகிலனும், எழுந்த மானத்தில்  கேட்ட  விலையை கொடுக்கமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் உழைத்த  பணம், எவ்வளுவு விலை நடை முறையில் உள்ளது என்பதை விசாரித்தே பேரம் பேசப்படும். விதிவிலக்காக வெகு அருமையாக கேட்ட  விலையிலும் கூடிய விலையை கொடுக்க கூடும். எனவே விலைகளையும், விலை ஏற்றத்தையம் தீர்மானிப்பது பொதுவாக அங்கிருப்பவர்கள் வாங்கு திறனும், இலங்கைத் தீவின் பொருளாதார நிலையும். இங்கே தான் முஸ்லிமகள் பிரச்சனையாக வருகிறார்கள், அவர்களுக்கு middle east இல் இருந்து மதத்தின் பெயரால் பணம் வரும் போது,  காணி, வீடுகளின் விலைகளை தீர்மானிப்பதில் நிச்சயமாக அது பெரும் பங்கு செலுத்தும்.
                    
   
இதுவே வீடு கட்டுவத்திலும், பெரும்பாலும் புலம் பெயர் வாசிகள் பெரும் பணத்தை கொட்டி அங்கு வீடு கட்டுவது அருமை அல்லது விதி விலக்கு. இதனால், புதிய வீடுகளின் விலையை தீர்மானிப்பது அங்குள்ளவர்களின் செலவழிக்கும் திறன், நாட்டின் பரந்த பொருளாதாரம், முக்கியமாக கனி வீடு பற்றிய அரசாங்கத்தின் கொள்கைகள், கடன் பெறும் வசதிகள் மற்றும்காணி வீடு பற்றிய அரச வரிக் கொள்கைகள்.

சுருக்கமாக, விலையும், ஏற்றமமும் தீர்மானிக்கப்படுவது அங்கு. அதனால், புலம் பெயர் தமிழர்கள், அங்கு தீர்மானிக்கப்படும்  விலைகளை கொண்டு காணி வாங்குவது காணி வாங்குவது, வீடு கட்டுவது, அங்குள்ள local economy இல் contributory participants ஆக ஆக்கமுள்ள பொருளியல் செயற்பாடுகளை மேற்றுக்கொள்கிறார்கள், அவர்களின் முதலீட்டிற்கு  குறிப்பிடத்தக்க ஆபத்து இருந்தும். 

 

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் நோக்கி போறவர்களை கன்டிப்பாக ஊக்குவிக்க வேணும்.அதுஇந்த திரியில் கான முடியுது.ஊர் நோக்கி நகர்வது எமது இருப்பை தாயகத்தில் தக்க வைப்பதில் காத்திரமான பங்களிப்பை வளங்கும்.மற்றது உரில உழைத்து நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்பவரகள் இங்கு பலர் உள்ளனர்.ஆனால் என்ன உழைக்கத் தெரிய வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.