Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவரை அம்பிகா சென்றதன் இரகசிய பின்னணி! சுமந்திரனால் கூறமுடியாது - சுதா பகீர்த் தகவல்

Featured Replies

625.187.560.350.160.300.053.800.330.160.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் வேட்பாளராகக் சுமந்திரனால் களமிறக்கப்பட்டவர் அம்பிகா.

இவர் கடந்த ஜெனீவா பயணத்தின் போது அங்கு சிவில் சமூக பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்தார்.

அங்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை ஒருங்கிணைப்பாளர்களரோடு சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

அப்போது இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் கலந்துரையாடிய வேளையில் ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை, இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களினூடாகவே நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தமை ஏனையோருக்கு வேடிக்கையாவே இருந்தது என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளரான சுதா தெரிவித்திருந்தார்.

லங்காசிறியின் 24 மணிநேர செய்திச் சேவையில் கலந்துகொண்டு இலங்கையின் இனப்படுகொலை தொடர்பிலும் மேலும் பல விடயங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/246631?ref=imp-news

22 minutes ago, போல் said:

அப்போது இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் கலந்துரையாடிய வேளையில் ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை, இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களினூடாகவே நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தமை

நாங்கள் ஒரு பொய் சொல்லி எமது இனத்தை ஏமாற்றி அரசியல் செய்ய விரும்புவார்கள் இல்லை 

எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்'  

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா தேர்தலில் ஆசனம் கொடுக்கவிலை என்று கடுப்பில இருக்கின்ற. உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பாக்கின்றோம். 

இங்குள்ள கள உறுப்பினர்கள் இலங்கை நீதி துறையில் நிறைய நமிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அவர் சொன்ன கருது சரியாக இருக்கலாம். அவருக்கு போட்டியிட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்பதட்காக அவர் அப்படி கூறியும் இருக்கலாம் அல்லது அப்படி இல்லாமலுமிருக்கலாம்.

On 22/5/2020 at 01:20, போல் said:

இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் கலந்துரையாடிய வேளையில் ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை, இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களினூடாகவே நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தமை

தமிழினப் படுகொலைகளை மறைக்க முயன்ற அம்சும் கோஷ்டி!

20 hours ago, Rajesh said:

அம்சும்

சம்சும் தொல்லை போதாதென்று அம்சும் வேற வேணுமோ? 

சுமந்திரன் போன்ற சட்டத்தரணிகளின் சுபாவங்கள் நகைச்சுவையா விளக்கப்பட்டுள்ளது 

 

  • தொடங்கியவர்

சுமந்திரன் தனக்கு அம்பிகாவுடன் உள்ள தொடர்புகள், இருவரும் போர்க்குற்றவாளிகள் தப்புவதற்கு செய்த இரகசிய வேலைகளை பகிரங்கமாக சொல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

On 22/5/2020 at 01:44, ampanai said:

நாங்கள் ஒரு பொய் சொல்லி எமது இனத்தை ஏமாற்றி அரசியல் செய்ய விரும்புவார்கள் இல்லை 

எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்'  

சதா பொய் தான்.
சர்வதேச விசாரணை முடிஞ்சு என்று ஒரு பொய்.
ஒற்றை ஆட்சியை சமஸ்டி என்று  ஒரு பொய்.
அம்பிகா பற்றி ஒரு பொய்.
நளினி பற்றி ஒரு பொய்.
இது மாதிரி அடுக்கினா லொறி லோட் காணாது.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎05‎-‎2020 at 11:14, Vankalayan said:

இங்குள்ள கள உறுப்பினர்கள் இலங்கை நீதி துறையில் நிறைய நமிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அவர் சொன்ன கருது சரியாக இருக்கலாம். அவருக்கு போட்டியிட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்பதட்காக அவர் அப்படி கூறியும் இருக்கலாம் அல்லது அப்படி இல்லாமலுமிருக்கலாம்.

நித்தியானந்தரிடம் பயிற்சி எடுத்திருப்பீர்களோ ஒருவேளை .. ம்ம் .. எப்படியும் இருக்கலாம் , அல்லது இல்லாமலும் இருக்கலாம் ...

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2020 at 13:14, ampanai said:

எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்'  

“எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்' “ என்று கவலைப்படுகிறீர்கள். படிக்காதவர்களை பிடித்து ஆயுதமும் கொடுத்த தமிழ் மக்கள் அதனால் சிறப்பாக வாழ்ந்தார்களா? இந்த ஆயுதங்களால் படிக்காதவர்கள் தமிழ் மக்களை அழித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

52 minutes ago, கற்பகதரு said:

“எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்' “ என்று கவலைப்படுகிறீர்கள். படிக்காதவர்களை பிடித்து ஆயுதமும் கொடுத்த தமிழ் மக்கள் அதனால் சிறப்பாக வாழ்ந்தார்களா? இந்த ஆயுதங்களால் படிக்காதவர்கள் தமிழ் மக்களை அழித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

தந்தை செல்வா பின்னரான அரசியல் தலைமைகள் எமது மக்களை ஏமாற்றி வருகின்றனர். 

படிப்பை விட இனப்பற்றையும் பலவேறு பொருளாதார, செயல்திட்ட, தொழில்நுட்ப, சர்வதேச அரசியல் திறமையையும் கொண்டிருந்தவர்கள். தமக்கு தெரியாததை தெரிந்து கொண்டவர்கள் இல்லை தெரிந்தவர்களை அணுகி உதவிகளை பெற்றவர்கள், நியமித்தவர்கள். 

ஆயுதம் தாங்கிய தலைமைகளுக்குள், குறிப்பாக விடுதலைப்புலிகள், நாட்டில் பற்றும் மக்கள் பால் நேர்மையாகவும் நடந்தவர்கள். அதனால் தான் தமிழர்கள் மத்தியில் இருந்து சகல தரப்பினரும் அவர்களுடன் இணைந்தார்கள், பயணித்தார்கள், இன்றும் அந்த போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றார்கள். 

23 minutes ago, ampanai said:

படிப்பை விட இனப்பற்றையும் பலவேறு பொருளாதார, செயல்திட்ட, தொழில்நுட்ப, சர்வதேச அரசியல் திறமையையும் கொண்டிருந்தவர்கள். தமக்கு தெரியாததை தெரிந்து கொண்டவர்கள் இல்லை தெரிந்தவர்களை அணுகி உதவிகளை பெற்றவர்கள், நியமித்தவர்கள். 

25 வைகாசி,  நேற்று, அமெரிக்காவில் போர் வீரர்கள் தினம் கொண்டாடினார்கள். நாட்டை ஆயுதம் தாங்கி, பயங்கரவாதி என பிரித்தானியாவில் அழைக்கப்பட்டவர் கூட கல்வி அதிகம் கற்காதவர். ஆனால், உலகின் தலைசிறந்த ஒரு குடியரசு கொள்கையை பொருளாதாரத்தை நிறுவ அடித்தளம் போட்டவர். 

கல்வி அறிவை விட தலைமைத்துவம், நேர்மை, நாட்டுப்பற்று போன்ற குணாதியசயங்கள் அவரிடம்  இருந்தன.அதனால் தான் அவரை அமெரிக்க  மக்கள் மதிக்கின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

“எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்' “ என்று கவலைப்படுகிறீர்கள். படிக்காதவர்களை பிடித்து ஆயுதமும் கொடுத்த தமிழ் மக்கள் அதனால் சிறப்பாக வாழ்ந்தார்களா? இந்த ஆயுதங்களால் படிக்காதவர்கள் தமிழ் மக்களை அழித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

அன்று பிரபாகரன் படைகளால் கைதிகளாகச் சிறைப்பட்டிருந்த சிங்களப் படையைச் சேர்ந்தவர்கள், சிலகாலத்தின்பின் அவர்களின் பெற்றோரின் வேண்டுதலுக்கு இரங்கி விடுவிக்கப்பட்டார்கள். கல்வி அறிவோ, பிறமொழி அறிவோ அற்ற தங்கள் பிள்ளைகள், தமிழர் சிறையிலிருந்து மீண்டுவந்தபோது கொண்டிருந்த கல்வி அறிவுடன், சரளமாக ஆங்கிலம் பேசும் திறனும்கண்டு வியந்ததை, சிங்களப் பத்திரிகைகள் சிலவும் அன்று மறைக்காது வெளியிட்டிருந்தன. இத்தனை சிறப்புடைய பிரபாகரன்படையானது, படிக்காத தமிழர்களின் கையில் ஆயுதம் கொடுக்கும்போது, அவர்களுக்கு அறிவூட்டாமலா கொடுத்திருக்கும்..??   

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 03:14, Vankalayan said:

இங்குள்ள கள உறுப்பினர்கள் இலங்கை நீதி துறையில் நிறைய நமிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அவர் சொன்ன கருது சரியாக இருக்கலாம். அவருக்கு போட்டியிட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்பதட்காக அவர் அப்படி கூறியும் இருக்கலாம் அல்லது அப்படி இல்லாமலுமிருக்கலாம்.

வங்காலையில் கடற்படையினர் தாயை வல்லுறவு செய்து கொலை செய்தும், கணவனையும் மகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்தபின்னர் கழுத்தில் சுருக்கிட்டு கூரையில் கட்டித் தொங்க விட்டிருந்தனரே அந்த வழக்கின் நிலை என்னவென்று வங்காலையானுக்குத் தெரியுமா ☹️

 

அது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் பெயரில்தானே வங்காலையான். சொந்த இடம் வங்காலை இல்லைத்தானே ☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

“எப்பொழுதுமே பொய்யை சொல்லி ஏமாற்றி தமிழ் மக்களை அழிக்க முனையும் 'அதிகம் படித்தவர்கள்' “ என்று கவலைப்படுகிறீர்கள். படிக்காதவர்களை பிடித்து ஆயுதமும் கொடுத்த தமிழ் மக்கள் அதனால் சிறப்பாக வாழ்ந்தார்களா? இந்த ஆயுதங்களால் படிக்காதவர்கள் தமிழ் மக்களை அழித்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

படித்த, சமூகத்தில் பொருளாதார ரீதியில்  பலமாக இருந்த,  சாதிக் கட்டமைப்பில் உயர் நிலையிலிருந், தமிழர் அரசியலைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு பிரிவினரே ஆயுதப் போராட்டத்திற்கான அடித்தளத்தை போட்டார்கள் என்பதை அன்பர் கற்பகதரு அடிக்கடி மறந்து போகின்றீர்களா அல்லது மறைக்க முயல்கின்றீர்களா அல்லது தமிழர் அரசியல் போராட்ட வரலாறு தெரியாமல் கதைக்கின்றீர்களா ☹️

அந்த ஆயுதப் போராட்டம், அரசியல்  அதிகாரத்தை இக் குறிப்பிட்ட பிரிவினரிடமிருந்து  ஆயுதம் தாங்கியோரிடம் கையளித்தபோது , ஆயுதம் தூக்க வைத்தவர்களே பின்னர் ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியது கற்பகதரு தெரிந்திருக்க நியாயம் இல்லை. ☹️

On 26/5/2020 at 09:45, Gowin said:

சதா பொய் தான்.
சர்வதேச விசாரணை முடிஞ்சு என்று ஒரு பொய்.
ஒற்றை ஆட்சியை சமஸ்டி என்று  ஒரு பொய்.
அம்பிகா பற்றி ஒரு பொய்.
நளினி பற்றி ஒரு பொய்.
இது மாதிரி அடுக்கினா லொறி லோட் காணாது.

மிதிலா சிறிபத்மநாதனிடம் கேட்டா கப்பல் லோட் பொய்கள் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 03:33, Kapithan said:

அந்த ஆயுதப் போராட்டம், அரசியல்  அதிகாரத்தை இக் குறிப்பிட்ட பிரிவினரிடமிருந்து  ஆயுதம் தாங்கியோரிடம் கையளித்தபோது , ஆயுதம் தூக்க வைத்தவர்களே பின்னர் ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியது கற்பகதரு தெரிந்திருக்க நியாயம் இல்லை. ☹️


அதிகம் படித்த  ஆயுதம் தூக்க வைத்தவர்களே பின்னர்   அதிகம் படிக்காதவர்களின்  ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியது எனக்கு நிச்சயமாக தெரியும். அதிகம் படிக்காதவர்களாதலால்  ஆயுதம் தூக்கியவர்களால் தாமும் அழிந்து மற்றவர்களையும் தாம் அழிப்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.  ஆயுதப் போராட்டம் பெரும் அழிவில் முடியும் என்று கண்டவுடன்   அதிகம் படித்தவர்கள் அதற்கு எதிராக திரும்பினார்கள். அதிகம் படிக்காதவர்களோ எல்லாம் அழிந்தபிறகே ஆயுதப்போராட்டத்தை கைவிட்டார்கள். படிப்பு வித்தியாசம் தெரிகிறது,  இல்லையா?

 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கற்பகதரு said:


அதிகம் படித்த  ஆயுதம் தூக்க வைத்தவர்களே பின்னர்   அதிகம் படிக்காதவர்களின்  ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியது எனக்கு நிச்சயமாக தெரியும். அதிகம் படிக்காதவர்களாதலால்  ஆயுதம் தூக்கியவர்களால் தாமும் அழிந்து மற்றவர்களையும் தாம் அழிப்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.  ஆயுதப் போராட்டம் பெரும் அழிவில் முடியும் என்று கண்டவுடன்   அதிகம் படித்தவர்கள் அதற்கு எதிராக திரும்பினார்கள். அதிகம் படிக்காதவர்களோ எல்லாம் அழிந்தபிறகே ஆயுதப்போராட்டத்தை கைவிட்டார்கள். படிப்பு வித்தியாசம் தெரிகிறது,  இல்லையா?

 

ஆக,

நான் சொல்லிய, சொல்ல விரும்பிய விடயத்தை விடயத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் 😂😂

நான் கூறியது இதுதான்;

படித்த, பொருளாதார பலம் மிக்க, சைவ  வேளாள + முக்கியமாக,  படித்த, பொருளாதார பலம் மிக்க, தென்னிந்திய திருச்சபையினைப் பின்னணியாகக் கொண்ட,  ஆங்கிலக் கல்வியறிவு ஊட்டப்பட்ட (தெரியாதவர்களுக்கு - அமெரிக்கன் மிசன்) வேளாள அதிகார வர்க்கத்தினர் தமது அதிகாரத்திற்காக தமிழர் நலன் என்கின்ற போர்வையில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆனால் ஆயுதப் போராடத்தின் விளைவாக, அரசியல் அதிகாரம் சாமானியர் கைகளுக்குப் போனவுடன் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெகுசன ஆயுதப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தனர். 

ஆயுதப் போராட்டத்தை தொடங்கியோரே அதனைக் காட்டிக் கொடுத்தனர்.

😂😂நான் கூறியதை திரித்துக் கூறி, விடயத்தை வேறுபக்கம் திருப்பலாம் என நினைக்காதீர். 😂😂

உண்மையான, நேர்மையான தலைமை எப்போதுமே போராட்டத்தை வழிநடாத்துமே தவிர, அதனைக் காட்டிக் கொடுக்காது.

ஆனால் உமது ஆட்களெல்லோருமே தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தனர். அது மட்டுமல்ல எதிரியோடு சேர்ந்து நின்றுகொண்டு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிராக செயற்பட்டனர்.

ஏன் ? 

அதிகாரத்திற்காக. அதிகாரத்திற்காக மட்டுமே 😏😏

எனக்கு கதை விடலாமென்று நினைக்காதீர். அமெரிக்கன் மிசன் தொடர்பாக ஆதியோடந்தமறிந்தவன். என்னால் புடுப் புட்டு வைக்க முடியும். 

1977 கலவரத்திற்கு முன்னையா நாட்களில் நாட்டின் அரசியற் சூழல் எவ்வாறிருந்தது,  உம்மவர்களில்  எவர் எவரெல்லாம் UK விற்கும் US ற்கும் போனவர்கள். ஏன் போனவர்கள். யார் யாருடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள் என்கின்ற தகவலெல்லாம் என்னிடமுண்டு. அவர்கள் திரும்பி வந்தவுடன் கலவரம் எப்படி ஆரம்பித்தது  என்பதும் எனக்குத் தெரியும்.

நீர் ஆயத்தமென்றால் நானும் விடயங்களை வெளிப்படுத்த  ஆயத்தம். 😏

எப்படி வசதி ? 😡

(குறிப்பு; பிரச்சனையின் ஆரம்பத்தைக் காட்டவே / பின்னணியைக் காட்ட / வாசிப்போர் புரிந்து கொள்ள சாதியை இங்கே குறிப்பிட்டேன். சாதியைக் குறிப்பிட்டு அதனை ஒரு பேசு பொருளாக்கும் நோக்கம் எனக்கில்லை என்பதை வாசிப்போர் கவனத்திற் கொள்க)

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:


அதிகம் படித்த  ஆயுதம் தூக்க வைத்தவர்களே பின்னர்   அதிகம் படிக்காதவர்களின்  ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியது எனக்கு நிச்சயமாக தெரியும். அதிகம் படிக்காதவர்களாதலால்  ஆயுதம் தூக்கியவர்களால் தாமும் அழிந்து மற்றவர்களையும் தாம் அழிப்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.  ஆயுதப் போராட்டம் பெரும் அழிவில் முடியும் என்று கண்டவுடன்   அதிகம் படித்தவர்கள் அதற்கு எதிராக திரும்பினார்கள். அதிகம் படிக்காதவர்களோ எல்லாம் அழிந்தபிறகே ஆயுதப்போராட்டத்தை கைவிட்டார்கள். படிப்பு வித்தியாசம் தெரிகிறது,  இல்லையா?

 

இப்படிக்கதைப்பதன் மூலம், நீங்கள் மெத்த படித்தவர் என்று சொல்லுகிறீர்களா. அது சரி படித்தவர் என்பதன் அர்த்தம். என்ன?  PhD வரை படித்திருக்க வேண்டுமா. 

என்னதான் ஆணவம், படித்தவர்கள் ஆயுதப்போராட்டத்தை அங்கீகரிக்கவில்லையாம்!

நீங்கள் படித்தறிவை புலிகள் பட்டறிவால் அறிந்துகொன்டார்கள்.

நிறைகுடம் தழும்பாது குறைகுடங்கள் இப்படித்தான் தழும்பிக்கொன்று கெக்கரிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

படித்த, பொருளாதார பலம் மிக்க, சைவ  வேளாள + முக்கியமாக,  படித்த, பொருளாதார பலம் மிக்க, தென்னிந்திய திருச்சபையினைப் பின்னணியாகக் கொண்ட,  ஆங்கிலக் கல்வியறிவு ஊட்டப்பட்ட (தெரியாதவர்களுக்கு - அமெரிக்கன் மிசன்) வேளாள அதிகார வர்க்கத்தினர் 

 

1 hour ago, Kapithan said:

ஆனால் உமது ஆட்களெல்லோருமே தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தனர். அது மட்டுமல்ல எதிரியோடு சேர்ந்து நின்றுகொண்டு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிராக செயற்பட்டனர்.

 

1 hour ago, Kapithan said:

எனக்கு கதை விடலாமென்று நினைக்காதீர். அமெரிக்கன் மிசன் தொடர்பாக ஆதியோடந்தமறிந்தவன். என்னால் புடுப் புட்டு வைக்க முடியும். 

இந்த தரத்தை சேர்ந்தவர்களுடன் நான் கருத்து பரிமாறுவதில்லை. 

2 minutes ago, ragaa said:

நீங்கள் படித்தறிவை புலிகள் பட்டறிவால் அறிந்துகொன்டார்கள்.

நிறைகுடம் தழும்பாது குறைகுடங்கள் இப்படித்தான் தழும்பிக்கொன்று கெக்கரிக்கும்

முள்ளிவாய்க்கால் நினைவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

இந்த தரத்தை சேர்ந்தவர்களுடன் நான் கருத்து பரிமாறுவதில்லை. 

இதற்கு இன்னுமொரு பெயர் இருக்கிறது - எஸ்கேப்பிசம்.😂 Escape-ism 😎

 

நான் பிறருடைய தரத்தை ஒருபோதும் அளவிடேன். எனக்கூட்டப்பட்ட கல்வி எல்லோருமே சமமானவர்கள் என எனக்கு புகட்டியுள்ளது. 😀

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கற்பகதரு said:

 

 

இந்த தரத்தை சேர்ந்தவர்களுடன் நான் கருத்து பரிமாறுவதில்லை. 

முள்ளிவாய்க்கால் நினைவுகள்.

அந்த முள்ளவாய்காலிற்கு வித்திட்டவர்கள் ந்நீங்களும் உங்களைப்போன்று படித்தவரகள் என்று கொக்கரிப்பவர்களும் தான். 

ஒரு தகவல்: சிங்கப்பூர் மற்றும் இஸரேல் போன்ற நாடுகளில் கட்டாய ராணுவ சேவை உள்ளது. மற்றும் மேற்கத்தய நாடுகளில் ஒரு போர் என்று வந்தால் 50 வயதிறகு உடபட்டோர் எல்லோரும் ராணுவ சேவைக்கு போக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

 

 

இந்த தரத்தை சேர்ந்தவர்களுடன் நான் கருத்து பரிமாறுவதில்லை. 

முள்ளிவாய்க்கால் நினைவுகள்.

உங்களைப் பற்றி அறிய இந்த பொன்னான கருத்து போதும், தரம் பார்த்துதான் பழகுவீர்களா, உங்களில் மேட்டுகுடி இரத்தம் நன்றாக ஊறிபோயுள்ளது. படித்தவனைவிட படிக்காத பல மேதைகள் உண்டு, அவர்களால்தான் நாம் உண்ணும் உணவிலிருந்து உடுப்பு வரை உற்பத்தியாகின்றது. அவர்களை போன்று சுத்தமான இதயம் யாருடமும் இல்லை. அதுதான் அவர்களில் பலர் சுயநலமின்றி போராடினார்கள் நம் விடுதலைக்காக. நாம் கோழைகள், இப்ப இணைய போராளிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

உங்களைப் பற்றி அறிய இந்த பொன்னான கருத்து போதும், தரம் பார்த்துதான் பழகுவீர்களா, உங்களில் மேட்டுகுடி இரத்தம் நன்றாக ஊறிபோயுள்ளது. படித்தவனைவிட படிக்காத பல மேதைகள் உண்டு, அவர்களால்தான் நாம் உண்ணும் உணவிலிருந்து உடுப்பு வரை உற்பத்தியாகின்றது. அவர்களை போன்று சுத்தமான இதயம் யாருடமும் இல்லை. அதுதான் அவர்களில் பலர் சுயநலமின்றி போராடினார்கள் நம் விடுதலைக்காக. நாம் கோழைகள், இப்ப இணைய போராளிகள் 

உண்மையில் இவர் மேட்டுக் குடி அல்ல. மேட்டுக் குடியாகும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர் என எண்ணுகிறேன்.😏

ஒரு கருத்தை முன்வைத்தால் அதிலுள்ள குறைகளை அல்லது தவறான வாதத்தை சுட்டிக் காட்டி வாதாடுவதுதான் முறை. அதை விடுத்து , வாதாடுபவரின் நிறம் சரியில்லை, வாதாடுபவர் மீசை வைத்திருக்கிறார். அவர் அப்படி. இவர் இப்படி. அதனால் இவருடன் வாதாடமாட்டேன் என்று கூறுவது நகைப்பிற்குரியது. 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.