Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மும்மொழிக்கல்வி  - இணையத்தில் ஒரு கேள்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் ஒரு கேள்வி.

சிங்கள மாணவர்கள் பாடசாலைகளில் தமிழ் மொழியினை படிக்க வேண்டுமா?

சாயா திசாநாயக்க என்னும் பெண் அளித்துள்ள பதிலில், ஆம், 1 - 9 வகுப்பு வரை மாணவர்கள் மூன்று மொழிகளையும் படிக்க வேண்டும். 

மூன்றினையும் GCE க்கு எடுக்க முடியாவிடில் ஒரு பாடத்தினை விடுத்து தாய் மொழியினை எடுக்கலாம். பின்னர் அந்த ஒரு பாடத்தினை தனியாக முடிக்கலாம்.

இப்போது இலங்கையில் அரச, தனியார் வேலைகளுக்கு மூன்று மொழியும் தேவைப்படுவதால் மாணவர்களும் படிக்கின்றனர் என்கிறார் அவர். (யாழ் புகையிரத நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் இருந்த சிங்கள இளைஞர்கள் பேசிய தமிழால் வியந்தேன். பின்னர், சிங்களவர்கள் அரச வேலை எடுக்க, தமிழ் மொழி பயில்வது உண்மைதான் என அறிந்து கொண்டேன்.)

அத்துடன் GCE க்கு தான் எழுதிய தமிழ் மொழி வினாத்தாளை இணைத்துள்ளார். இரண்டாம் மொழி என தெளிவாக குறிக்கப்படுள்ளது

எனது கேள்வி: யாழ் பாடசாலைகளில் சிங்களம் படிப்பிக்கின்றார்களா?

main-qimg-2d5ba4982f58ebbc51922691effbadf3

இலங்கையில் இத்தகைய கேள்வித்தாள்களில் உமக்கு, நீர், நீங்கள், எழுதுக என்று மரியாதையாக இருக்கும். தமிழகத்தில் கேள்வித்தாள்களில் நீ, உனது, எழுது என ஒருமையாக இருக்கும்.

Edited by Nathamuni

49 minutes ago, Nathamuni said:

எனது கேள்வி: யாழ் பாடசாலைகளில் சிங்களம் படிப்பிக்கின்றார்களா?

படிப்பிக்கிறார்கள்!

ஆனால், பெற்றோர்கள் வழிநடத்தலில் அதை மாணவர்களும் கூடுதல் கவனத்துடன் படித்தால் எதிரியை கையாளுவது இலகுவாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

படிப்பிக்கிறார்கள்!

ஆனால், பெற்றோர்கள் வழிநடத்தலில் அதை மாணவர்களும் கூடுதல் கவனத்துடன் படித்தால் எதிரியை கையாளுவது இலகுவாக இருக்கும். 

 

மும்மொழி   தேர்ச்சி  என்பது கிந்தியாவின் குள்ள நரி அறிவுறுத்தலின் படி, சிங்களம் வரித்துக் கொண்ட வேண்ட வெறுப்பான கொள்கை, நீண்ட கால நோக்கமான தமிழ் மக்களே தமிழீழம் என்பதை கைவிட செய்வதற்கான  ஹிந்திய, சிங்கள இனப்படுகொலையாளர்களின் குயுக்தி.   

கிந்தியாவின் கல்வி கொள்கையை ஹிந்தியை  தொல்புருள், வரலாற்று துறையுடன் ஒருங்கமைத்து , ஹிந்தியை மொழியை ubequitous  ஆக்கி அதன் மூலம் அந்தந்த தேசங்களின் தனித்துவத்தை  பொருளாதார பிணைப்பை வைத்து கிந்தியத்திற்குள் சீரழிக்கும் நீண்ட கால திட்டதை கிந்தியா தான் செய்ய முயற்றசிப்பதை, சிங்களத்துக்கும் சொல்லி கொடுத்துள்ளது. 

பெயருக்காவது, சில அதிகாரங்களுடன், தமிழருக்கான நிலம் என்று  இருக்கும் தமிழ் நாடே கிந்தியாவின் நரி திட்டத்தை நிராகரித்து விட்டது.

அதுவும் ஓர் தேசத்தின், இனத்தின் தொல்பொருள், வரலாற்று அடையாளங்களையும், கலாசாரத்தையும், மதத்தையும், பாரம்பரியங்களையும் அழிக்கும் அல்லது மறைக்க எத்தனிக்கும் சொறி சிங்கள அரசுக்கு கீழ் மும்மொழி தேர்ச்சி என்பது வந்து முடியும் இடம் ஈழத்து தமிழர் சிங்களத்துக்குள் முற்றாக சீரழிவது.  
 
இதை இந்த திரியிலேயே கணக்கு கூடியதாக உள்ளது. அதாவது,  வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் (பதிவை இட்டவர்), சிங்களவர் பேசிய தமிழில் விதந்து, தமிழர்களும் இப்படி சிங்களம் படிக்கிறார்களா என்று அவரை வினவ வைத்திருக்கிறது. 

இப்பொது சிங்களவர் தமிழில் பேசினாலும், தமிழரில் ஓர் பெரும்  பகுதியினர் (critical mass) சிங்களத்தை தெரிந்துளார்கள் என்ற நிலை வரும் போது அவர்கள் தமிழ் பேசுவதை தவிர்க்குமாறு சொறி சிங்கள அரசாங்கம் சொல்லும். அத்துடன் முமொழி தேர்ச்சியும் படிப்படியாக நீக்கப்படும். பொருளியல், மற்றும் புவியியல் (தமிழ் நாட்டுடன் நிலத் தொடர்பு இல்லை) பிணைப்பால் வெளியில் சிங்களமும், வீட்டில் தமிழும் என்று ஆகி, பின்பு எல்லாமுமே சிங்களம் ஆகும்.

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

வரலாற்று மற்றும் பொருளியல்  காலப் பரிமாணத்தில், எமது மிகப் பெரிய சந்தை தமிழ் நாடு, நல்லகாலம் சிங்களத்துக்கு அயலில் ஒன்றுமில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

அப்படி செய்ய முடியுமா என்ன?

பள்ளியில் படிப்பிக்கும் ஒரு பாடத்தினை எடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியுமா?

அப்படியானால் சிங்களவர்கள் ஏன் படிக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள முக்கியமான பிரச்னை, மொழிப்பிரச்சனை காரணமாக தொடர்பு கொள்ளுதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்.

நாடு, பிரிகிறதோ இல்லையோ, தமிழனுக்கு அடுத்த வீட்டுக்காரன் சிங்களவன், அவர்களுக்கு தமிழன். ஒருவருடன் ஒருவன் பேசத்தான் வேண்டும். கவலை, சந்தோசங்களை பகிரத்தான் வேண்டும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு சிறீலங்கா என்று சிங்கள அரசு பெயரை மாற்றியபோது, தமிழர்களும், கொதித்தெழுந்தார்கள், தமிழில் இலங்கை என்றே இருக்கும் என்று அதனைச் சிங்களம் சட்டம் ஆக்கியதும்... தமிழ்த் தலைவர்களும் அமைதிகொண்டார்கள்.  

இன்று என்னிடம் யாராவது எந்தநாடு என்று கேட்டால் சிறீலங்கா என்றுதான் சொல்லவருகிறது.

எங்கள் ஊரின் முகவரியை ஆங்கிலத்தில் எழுதும்போதுகூட ILANKAI என்று யாரும் எழுதுவதில்லை என எண்ணுகிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

இலங்கைக்கு சிறீலங்கா என்று சிங்கள அரசு பெயரை மாற்றியபோது, தமிழர்களும், கொதித்தெழுந்தார்கள், தமிழில் இலங்கை என்றே இருக்கும் என்று அதனைச் சிங்களம் சட்டம் ஆக்கியதும்... தமிழ்த் தலைவர்களும் அமைதிகொண்டார்கள்.  

இன்று என்னிடம் யாராவது எந்தநாடு என்று கேட்டால் சிறீலங்கா என்றுதான் சொல்லவருகிறது.

எங்கள் ஊரின் முகவரியை ஆங்கிலத்தில் எழுதும்போதுகூட ILANKAI என்று யாரும் எழுதுவதில்லை என எண்ணுகிறேன். 

ஆங்கிலத்தில் ஸ்ரீ லங்கா என்றே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் நாதமுக்கு ஒரு துரோகிப்பட்டம் கொடுத்திடுவமா.காசா பணமா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சுவைப்பிரியன் said:

பேசாமல் நாதமுக்கு ஒரு துரோகிப்பட்டம் கொடுத்திடுவமா.காசா பணமா.

சுவையர்,

தமிழர்கள் மட்டுமே சிங்களம் படிக்க வேண்டும் என்று இருந்தால், (இருந்தது), நான் சொல்வது பிழை.

தீவின் சகல மாணவர்களும் மூன்று மொழிகளும் படிக்கச் சொன்னால், சரிதானே.

தமிழர்கள், சிங்களத்தினை படித்து, அரச, தனியார் வேலை எடுக்கவேண்டாமா?

8 hours ago, Kadancha said:

இப்பொது சிங்களவர் தமிழில் பேசினாலும், தமிழரில் ஓர் பெரும்  பகுதியினர் (critical mass) சிங்களத்தை தெரிந்துளார்கள் என்ற நிலை வரும் போது அவர்கள் தமிழ் பேசுவதை தவிர்க்குமாறு சொறி சிங்கள அரசாங்கம் சொல்லும்.

சிங்களத்தை படித்து தெரிந்து வைத்துக்கொண்டு சிங்களம் பேசாமல் தமிழர் இருக்கலாம் தானே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

சிங்களத்தை படித்து தெரிந்து வைத்துக்கொண்டு சிங்களம் பேசாமல் தமிழர் இருக்கலாம் தானே!

 

9 hours ago, Kadancha said:

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

 

மும்மொழி   தேர்ச்சி  என்பது கிந்தியாவின் குள்ள நரி அறிவுறுத்தலின் படி, சிங்களம் வரித்துக் கொண்ட வேண்ட வெறுப்பான கொள்கை, நீண்ட கால நோக்கமான தமிழ் மக்களே தமிழீழம் என்பதை கைவிட செய்வதற்கான  ஹிந்திய, சிங்கள இனப்படுகொலையாளர்களின் குயுக்தி.   

கிந்தியாவின் கல்வி கொள்கையை ஹிந்தியை  தொல்புருள், வரலாற்று துறையுடன் ஒருங்கமைத்து , ஹிந்தியை மொழியை ubequitous  ஆக்கி அதன் மூலம் அந்தந்த தேசங்களின் தனித்துவத்தை  பொருளாதார பிணைப்பை வைத்து கிந்தியத்திற்குள் சீரழிக்கும் நீண்ட கால திட்டதை கிந்தியா தான் செய்ய முயற்றசிப்பதை, சிங்களத்துக்கும் சொல்லி கொடுத்துள்ளது. 

பெயருக்காவது, சில அதிகாரங்களுடன், தமிழருக்கான நிலம் என்று  இருக்கும் தமிழ் நாடே கிந்தியாவின் நரி திட்டத்தை நிராகரித்து விட்டது.

அதுவும் ஓர் தேசத்தின், இனத்தின் தொல்பொருள், வரலாற்று அடையாளங்களையும், கலாசாரத்தையும், மதத்தையும், பாரம்பரியங்களையும் அழிக்கும் அல்லது மறைக்க எத்தனிக்கும் சொறி சிங்கள அரசுக்கு கீழ் மும்மொழி தேர்ச்சி என்பது வந்து முடியும் இடம் ஈழத்து தமிழர் சிங்களத்துக்குள் முற்றாக சீரழிவது.  
 
இதை இந்த திரியிலேயே கணக்கு கூடியதாக உள்ளது. அதாவது,  வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் (பதிவை இட்டவர்), சிங்களவர் பேசிய தமிழில் விதந்து, தமிழர்களும் இப்படி சிங்களம் படிக்கிறார்களா என்று அவரை வினவ வைத்திருக்கிறது. 

இப்பொது சிங்களவர் தமிழில் பேசினாலும், தமிழரில் ஓர் பெரும்  பகுதியினர் (critical mass) சிங்களத்தை தெரிந்துளார்கள் என்ற நிலை வரும் போது அவர்கள் தமிழ் பேசுவதை தவிர்க்குமாறு சொறி சிங்கள அரசாங்கம் சொல்லும். அத்துடன் முமொழி தேர்ச்சியும் படிப்படியாக நீக்கப்படும். பொருளியல், மற்றும் புவியியல் (தமிழ் நாட்டுடன் நிலத் தொடர்பு இல்லை) பிணைப்பால் வெளியில் சிங்களமும், வீட்டில் தமிழும் என்று ஆகி, பின்பு எல்லாமுமே சிங்களம் ஆகும்.

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

வரலாற்று மற்றும் பொருளியல்  காலப் பரிமாணத்தில், எமது மிகப் பெரிய சந்தை தமிழ் நாடு, நல்லகாலம் சிங்களத்துக்கு அயலில் ஒன்றுமில்லை. 

இவ்வளவு காலம் நீங்கள் எழுதிய கருத்தில் மொக்கை கருத்து என்றால் இது தான் ...மன்னிக்கவும் 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எல்லா மொழியும் தெரிந்திருப்பது அவசியமான ஒன்று. அதை அரசே அமுல்படுத்தியிருப்பதும் நல்லதுதான். ஆனால் எமது விசர்த் தமிழர் தமிழை வேண்டாத மூன்றாம் மொழியாக்கி ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் ஆவலோடு படிக்குதுகள். அதுதான் எரிச்சலாயிருக்கு. மடத் தமிழர் எண்டு  அவங்கள் சொல்லுறது சரிதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லோருக்கும் எல்லா மொழியும் தெரிந்திருப்பது அவசியமான ஒன்று. அதை அரசே அமுல்படுத்தியிருப்பதும் நல்லதுதான். ஆனால் எமது விசர்த் தமிழர் தமிழை வேண்டாத மூன்றாம் மொழியாக்கி ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் ஆவலோடு படிக்குதுகள். அதுதான் எரிச்சலாயிருக்கு. மடத் தமிழர் எண்டு  அவங்கள் சொல்லுறது சரிதான்.

இதென்னே புதுக்கதை...

தாய்மொழி, முதல்மொழி, அதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. தமிழருக்கு சிங்களமும், சிங்களவருக்கு தமிழும் இரண்டாவது மொழி.

இதில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாக யாருக்கு வந்தது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, Nathamuni said:

இதென்னே புதுக்கதை...

தாய்மொழி, முதல்மொழி, அதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. தமிழருக்கு சிங்களமும், சிங்களவருக்கு தமிழும் இரண்டாவது மொழி.

இதில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாக யாருக்கு வந்தது?

கொழும்பிலை இருக்கிற எங்கடை கலம்பு ரமில்சை சொல்லுறா போல :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கொழும்பிலை இருக்கிற எங்கடை கலம்பு ரமில்சை சொல்லுறா போல :rolleyes:

எப்படி பார்த்தாலும், மூன்றாவதாக வர ஏலாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

எப்படி பார்த்தாலும், மூன்றாவதாக வர ஏலாது.

சரி எனக்கு உதுகளைப்பத்தி கனக்கத்தெரியாது. எதுக்கும் நாளைக்கு சீமாட்டி  வந்து அப்பித்தப்பி பூசி மெழுகுவா தானே அப்ப பாப்பம். 🤭

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இவ்வளவு காலம் நீங்கள் எழுதிய கருத்தில் மொக்கை கருத்து என்றால் இது தான்

அது உங்களுக்கு உள்ள மொழி, புவியியல், வரலாறு மற்றும் மானிடவியல், அதை பற்றி  ஓர் இனத்தை மற்றும் தேசத்தை அழிப்பதே தமது தேசத்தின் இனத்தின் இருப்பை தக்க வைக்கும் என்ற சிந்தனை  கருவை வரலாறாக தமது  (சிங்கள) தேசத்தில்  விதைக்கும்  ஓர் அரசின்    கொள்கைகளை வடிவமைக்கும் மற்றும் அந்த கொள்கைகளின் விளைவுகளை அறுவடை செய்யும் காலப் பரிமாணம்   போன்றவற்றின்  விளக்கத்தின் மற்றும் அறிவு  எல்லைக்கு உட்பட்ட புரிதல்.

அப்படி இருந்தும், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை தூரத்தில் வைத்து கையாள வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

நீங்கள் ஒன்றை கவனிக்கவில்லை, சிங்களம் தனது வரலாற்று கற்பிப்பதில் உண்மைகளை சொல்லி மாற்றம் கொண்டு வந்து இருந்தால், இந்த மொழி கொள்கையும் சமாதானத்தை அடைவதில் ஒரு தடமாக இருந்திருக்கும் என்பது தோற்றமளவில் எற்புடையதாகலாம்      

Edited by Kadancha
amend

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மடத் தமிழர் எண்டு  அவங்கள் சொல்லுறது சரிதான்.

சரி இல்லை. ஒரு மொழியை ஆவலோடு படிப்பது மடத்தனம் இல்லை.

On 27/5/2020 at 02:59, குமாரசாமி said:

கொழும்பிலை இருக்கிற எங்கடை கலம்பு ரமில்சை சொல்லுறா போல :rolleyes:

கலம்பு ரமில்ஸ் ஒன்றில் சிங்களவன் தமிழ்ல கதைச்சாலும் சிங்களத்துல பதில் சொல்ற கூட்டமா இருக்கும் அல்லது சுமந்திரன் போல எனக்கு நோர்த்-ஈஸ்ட் தமிழரை விட சிங்கள மினிசூக்களை தான் பிடிச்சு தொங்குவன் என்கிற கூட்டமா இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kali said:

கலம்பு ரமில்ஸ் ஒன்றில் சிங்களவன் தமிழ்ல கதைச்சாலும் சிங்களத்துல பதில் சொல்ற கூட்டமா இருக்கும் அல்லது சுமந்திரன் போல எனக்கு நோர்த்-ஈஸ்ட் தமிழரை விட சிங்கள மினிசூக்களை தான் பிடிச்சு தொங்குவன் என்கிற கூட்டமா இருக்கும் 

ஆம் சிங்களவன் எவ்வளாவே மேல்

சாதரணமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து பழ‌கியவருக்கு, இதெல்லம் ஒரு பிரச்சினையில்லை. எனக்கு தெரிந்து இலங்கையை போல உலகில் எந்த நாட்டிலும் தமிழ் மொழி சிறப்பாக அங்கீகரிக்கபடவில்லை.

7 minutes ago, colomban said:

ஆம் சிங்களவன் எவ்வளாவே மேல்

யாரைவிட மேல்? 
கொழும்பு ரமில்ஸ்சை விடவா? கொழும்பு முஸலிம்சை விடவா?  

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எனது கேள்வி: யாழ் பாடசாலைகளில் சிங்களம் படிப்பிக்கின்றார்களா?

இருக்கிற ஆமியிட்டை படிச்சாலே ஆயிரம் பாடசாலைக்கு சமம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 14:08, Nathamuni said:

தீவின் சகல மாணவர்களும் மூன்று மொழிகளும் படிக்கச் சொன்னால், சரிதானே.

தமிழர்கள், சிங்களத்தினை படித்து, அரச, தனியார் வேலை எடுக்கவேண்டாமா?

அதற்கு, சொறி சிங்களம் செய்ய வேண்டியது, வடக்கு, கிழக்கில் பாரிய தனியா, அரச முதலீடுகளை, ஆக்க குறைந்தது வீதாசாரப் படி பகிர வேண்டும், அதற்கான சட்ட சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

அதற்கு  சொறி சிங்கள அரசு மட்டுமல்ல, மிக குறைந்த சிங்களவர்களை தவிர சொறி சிங்களமே  எதிர்க்கிறது.

கோத்தபாயவின் தெரிவும் இதுவும்  ஓர் அடிப்படை.

இப்போதைய நிலையில், வடக்கு, கிழக்கில் இருக்கும் முழு தனியார், அரச வேலை வாய்ப்புகளுக்காக சிங்களவர் தமிழ் படித்தாலும், தமிழர்களில் ஏறத்தாழ அனைத்து இளவயதினர் அல்லது சுய தொழில் தவிர்த்து வேலை வேண்டும் என்பவர்கள்  சிங்களம் படித்தே ஆக வேண்டும்.

இப்படியாக காலம் செல்ல, தமிழர்கள் ஏறத்தாழ அனைவருக்கும் சிங்களம் தெரியும், சிங்களத்தில் தமிழர் தொகையிலும் குறைந்த தொகைக்கே சிங்களம் தெரியும் என்ற நிலை உருவாகும், அதிலும் தமிழ் தெரிந்த சிங்களவர்கள் எப்போதுமே தமிழ் பாவிக்க வேண்டிய நிலை என்பதும் இல்லை.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kadancha said:

அதற்கு, சொறி சிங்களம் செய்ய வேண்டியது, வடக்கு, கிழக்கில் பாரிய தனியா, அரச முதலீடுகளை, ஆக்க குறைந்தது வீதாசாரப் படி பகிர வேண்டும், அதற்கான சட்ட சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

அதற்கு  சொறி சிங்கள அரசு மட்டுமல்ல, மிக குறைந்த சிங்களவர்களை தவிர சொறி சிங்களமே  எதிர்க்கிறது.

கோத்தபாயவின் தெரிவும் இதுவும்  ஓர் அடிப்படை.

இப்போதைய நிலையில், வடக்கு, கிழக்கில் இருக்கும் முழு தனியார், அரச வேலை வாய்ப்புகளுக்காக சிங்களவர் தமிழ் படித்தாலும், தமிழர்களில் ஏறத்தாழ அனைத்து இளவயதினர் அல்லது சுய தொழில் தவிர்த்து வேலை வேண்டும் என்பவர்கள்  சிங்களம் படித்தே ஆக வேண்டும்.

இப்படியாக காலம் செல்ல, தமிழர்கள் ஏறத்தாழ அனைவருக்கும் சிங்களம் தெரியும், சிங்களத்தில் தமிழர் தொகையிலும் குறைந்த தொகைக்கே சிங்களம் தெரியும் என்ற நிலை உருவாகும், அதிலும் தமிழ் தெரிந்த சிங்களவர்கள் எப்போதுமே தமிழ் பாவிக்க வேண்டிய நிலை என்பதும் இல்லை.
 

மும்மொழிக் கல்வி, கோத்தாவின் திட்டம் இல்லை.

இது இரு மொழிக் கல்வியாக, தமிழ் இல்லாமல் போனால் அது கோத்தாவின் திட்டமாக இருக்கும்.

நாம் வெளி நாட்டில் இருந்து பார்வையினை செலுத்துவதில் தவறலாம்.

அங்கே, ஒரு அரசியல், சமாதான உறுதிப்பாடு வரவேண்டும் என்றே வளவளத்த ரணில் + மைத்திரி வீட்டுக்கு அனுப்பப்பட்டு,  உறுதியான கோத்தா ஆட்சிக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலையில், மீசையினை முறுக்கிக் கொண்டு, கோத்தாவும், மகிந்தவும் வாயால வடை சுட்டுக் கொண்டே இருக்க முடியாது.

விரைவாக அமைதியை கொண்டு வரவே அவர் ஜனாதிபதி தேர்தலில் நின்று வெல்ல, அமெரிக்கா உதவி உள்ளது. ரணிலிலும் பார்க்க, வெட்டு ஒன்று துண்டு ரெண்டு கோத்தா, நல்ல தெரிவு தான்.

அப்படி அமைதி திரும்பினால், முதலீடு செய்யப்போவது, புகலிடத்தமிழர்கள் தான் முதலிடம் வகிப்பார்கள்.

அப்போது வேலை, தமிழ் பேசும் சிங்களவர்களுக்கும் கிடைக்கும் என்பது, சிங்களவர்களுக்கு புரிந்துள்ளது.

ஊரில் கோவில் அய்யர் சொன்னார்.  வெளிநாட்டில் இருந்து பணம் தாராளமாக வருகிறது. ஆனால் மணி அடிக்க, கோவில் வேலைகள் செய்ய ஆளில்லை. தமிழ் பேசக்கூடிய சிங்களவர்கள் வந்தாலும் எடுக்க ரெடி. இந்த செய்தி தென் பகுதி போனால், சவூதி போறவன், உங்க வந்து நிப்பான்.

கிழக்கில், ஒரு கோவிலில், இந்துவாக வேலை செய்து, ஒரு இஸ்லாமியர் பிடிபட்ட கதை தெரியும் தானே. அவர் பொட்டு, விபூதியுடன் வீதியால் வேலை முடிந்து போகும் போது, போலீஸ் காரர்கள் ID கேட்டதால் மாட்டினார்.

இருந்தாலும், அவர் எதுவும் பூசிக்க கொண்டு போவது, எங்கே வேலை செய்வது என்ற சுதந்திரம் கொண்டவர். அதிகாரிகளிடம் தனது சரியான அடையாளத்தினையே சமர்ப்பித்தார் என அவரில் எந்த தவறும் இல்லை என நீதிமன்று விடுவித்தது. 

ஆகவே, பொருளாதாரத்தினை அடிப்படையாக வைத்து பார்த்தால், மும்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் புரியும்.

முன்பு தமிழர்கள் சிங்களம் படிதோம். அரச, தனியார் வேலைகளின் பின்னால் ஓடியதால். இப்ப, தமிழர்கள் லண்டன், டொரோண்டோ, சிட்னி, மெல்போர்ன், நியூயார்க் எண்டு வேலை தேடுகினம் எல்லோ. 

உந்த ஸ்ரீ லங்கன் வேலைகள் யாருக்கு வேணுமப்பா எண்ட மாதிரி திரியினம் கண்டியளே

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, colomban said:

ஆம் சிங்களவன் எவ்வளாவே மேல்

சாதரணமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து பழ‌கியவருக்கு, இதெல்லம் ஒரு பிரச்சினையில்லை. எனக்கு தெரிந்து இலங்கையை போல உலகில் எந்த நாட்டிலும் தமிழ் மொழி சிறப்பாக அங்கீகரிக்கபடவில்லை.

உண்மைதான் கொழும்பார்.

ஆனாலும் சும்மா வரேல்ல, சிங்கள சிறீ எழுத்தை எதிர்பதில் தொடங்கி அடிபட்டு, சண்டை போட்டு தானே அந்த அங்கீகாரம் வந்தது.

இன்று சிங்களம் படித்தால் தான் அரச வேலை என்ற நிலை மாறி, தமிழும் படிக்கவேண்டும் என்ற நிலை.

இன்றைய நிலையை மாத்தி, தமது மொழிவாதம் பேசும், பழைய நிலைக்கு கொண்டு போக இனவாதிகளால் முடியாது.

முடியுமாயின், சிங்களம் தமக்கென்று தனிநாடு அடைந்த பின்பே சாத்தியம்.

முடிந்தால் அடைந்து பார்க்கட்டும். 😜

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.