Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனையும் உட்கார வைத்து, இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை கொழும்பில் நடந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரனிற்கு, இரா.சம்பந்தன் மேற்படி ஆலோசனையை வழங்கினார்.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர். அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன.

இந்த நிலையில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் விவகாரத்தை முதன்மையானதாக விவாதிக்கவில்லை.

பொதுத்தேர்தல், புதிய அரசுடன் பேச்சு, புதிய இந்திய தூதர், ஜனாதிபதி, பிரதமருடன் பேச்ச, அரசியல் கைதிகள் விடயம் என்பன பற்றி ஆராயப்பட்டது.

முக்கியமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து அரசியல் கைதிகள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர். அது குறித்து விவாதிக்கப்பட்டு, இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் அரசுடன் உடனடியாக இது பற்றி பேசுவதென முடிவாகியிருந்தது.

இந்த நிலையில் இன்றைய சந்திப்பிற்கு எம்.ஏ.சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார்.

சுமந்திரனை பதவிவிலக்க வேண்டுமென நாம் தனிப்பட்ட காரணங்களிற்காக வலியுறுத்தவில்லை, ஆனால் அவராக கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை துறக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் வலியுறுத்திய செல்வம் அடைக்கலநாதன் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர் திடீர் உடல்நலக் குறைவிற்குள்ளாகியுள்ளார்.

இன்றைய சந்திப்பில், சுமந்திரனை பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால் அவர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து, மக்களின் உணர்வுகளை புரிந்து பேச வேண்டுமென மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாக குறிப்பிட்டார். அந்த பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமென பரவலாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

“தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்தார்.

“கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும், இது மோதல் களமல்ல. அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டாலே கூட்டமைப்பினால் எதையாவது செய்ய முடியும். அனைவரும் தவறுகளை புரிந்து கொண்டு, முன்னோக்கி செல்ல வேண்டும் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

செல்வம் அடைக்கலநாதனின் உடல் தேறியதும், அடுத்த வார இறுதியில் மீண்டும் கூட்டமைப்பு கூடுவதென முடிவாகியது.

https://www.pagetamil.com/127287/

  • கருத்துக்கள உறவுகள்

                 ( 16 வயத்தினிலே )

x1080

திரி பற்றும் என்டு நினைக்குறன்..👍

  • கருத்துக்கள உறவுகள்

தேவையா இது ☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஐயா விட்டுட்டுப் போடாதைங்கோ.
இன்னும் கொஞ்ச தூரம் தான் சுடலை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனையும் உட்கார வைத்து, இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்குத்தான்.... இப்ப, நெருக்கடி வந்திருக்குது.  :rolleyes:
அதுக்குத்தான்... சுமந்திரனை, கோத்து  விடுகிறார். :grin:

சம்பந்தன் ஐயா... அவர்களே... 
எங்கள் காதில்,  "பூ"  சுற்ற வேண்டாம்.
30 வருட அரசியல் சாணக்கியத்தின்  தோல்வி, என்று..
அரசியலிலிருந்து ஒதுங்கி இருங்களேன்...   ப்ளீஸ். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாக குறிப்பிட்டார். அந்த பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமென பரவலாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

எங்களுக்கு வாக்களித்து தலைவர்களாக்கிய மக்களுக்கு நாங்கள் என்ன செய்தோம், செய்கிறோம், செய்வோம் என்பது முக்கியமல்ல. அவர்கள் வாக்குகள்மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம் என்பதை விடுத்து மக்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொடுக்காது புறம்தள்ளினால் நாளை அவர் கல்லறை இப்படித்தான் காட்சிதரும்.

 tna-traitors-3.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்குத்தான்.... இப்ப, நெருக்கடி வந்திருக்குது.  :rolleyes:
அதுக்குத்தான்... சுமந்திரனை, கோத்து  விடுகிறார். :grin:

சம்பந்தன் ஐயா... அவர்களே... 
எங்கள் காதில்,  "பூ"  சுற்ற வேண்டாம்.
30 வருட அரசியல் சாணக்கியத்தின்  தோல்வி, என்று..
அரசியலிலிருந்து ஒதுங்கி இருங்களேன்...   ப்ளீஸ். 

உண்மை. ஆனால், இவர்போன்றவர்கள் தமிழினத்தின் இறுதிக்கிரியையை முடித்துவிட்டுத்தான் ஒதுங்குவார்க்கள்போல் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பெருமாள் said:

கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொஞ்சம் வெருட்டுற மாதிரி கிடக்கு....😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

“கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

வாய் கிழிய தன்னை சனநாயகவாதிகாகக் காட்ட கத்தும் சுமந்திரன்.. இப்படி சர்வாதிகாரி.. பாசிசவாதி மாதிரி ஆனது எப்படி. பதவி மோகம் மட்டுமே. மக்கள் நலனில் கிஞ்சிதமும் அக்கறையற்றவருக்கு எதுக்கு சனநாயக வேசம். 

 

பெரும்பான்மையான தமிழ் மக்களின் எதிர்ப்பை சந்திக்கும் சுமந்திரன் உடனடியாக தான் வகிக்கும் பதவிகளில் இருந்து விலகுவதே அடிப்படை சனநாயகமாகும். 

11 hours ago, பெருமாள் said:

இன்றைய சந்திப்பில், சுமந்திரனை பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால் அவர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து, மக்களின் உணர்வுகளை புரிந்து பேச வேண்டுமென மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழர்களை ஏமாற்றி பின்கதவால் பெட்டி பெட்டியாக பெறுவதற்கு பெருந்துணையா இருக்கும் சுத்துமாத்து சுமந்திரனை விட்டா கட்டையில சம்பந்தன் மாவை பிழைப்பு என்னாகிறது?

இரண்டு ஏமாற்றுப் பேர்வழிகளை கையாள கூத்தமைப்பில் யாருமில்லை. ஏனெண்டா எல்லாருமே பின்கதவால் கிடைக்கும் சொகுசுகளை கூடக் குறைய அனுபவிச்சு சுகம் கண்டுடார்கள். மேலும் ஏமாறுகிற பாமர மக்கள் இருக்கும் வரைக்கும் தமிழ்மக்களை ஏமாத்தி பிழைப்பு நடத்தலாம் என்ட நம்பிக்கை இன்னும் இந்தக் கோஷ்டிக்கு இருக்கு. இது தகரும் வரை தமிழர்பாடு கஷ்டம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இந்த வார தனிப்பட்ட கருத்துக்குண்டான பைல்ஸ்..☺️..😊

Mani.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள் போர்க்கொடி! பதவியிலிருந்து உடன் விலகுமாறு கோரிக்கை

Report us Rakesh 5 hours ago

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் தானாகவே விலக வேண்டும். அதுவே பொருத்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் பெரும் சர்ச்சை வெடித்திருந்தது. இதன்போது கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சம்பந்தனிடம் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் பேசப்படும்போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின்

பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரனாகவே விலகுவதுதான் பொருத்தமானது. அதுதான் அவருக்கும் நல்லது. நாமாக அவரை நீக்கியதாக இருக்கக் கூடாது என்று

தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, இப்போதைக்கு அவ்வாறு செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.

எனினும், நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமந்திரன் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் புளொட்

தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

https://www.tamilwin.com/politics/01/247327?ref=home-imp-parsely

பதவியிலிருந்து விலக முடியாது! பிடிவாதம் பிடிக்கும் சுமந்திரன்

Report us Rakesh 1 hour ago

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பிலுள்ள கூட்டமைப்பின்

தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து,தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக

பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர். அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்தச்

சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் விவகாரமும் விவாதிக்கப்பட்டது.

சுமந்திரனைப் பதவி விலக்க வேண்டும் என்று நாம் தனிப்பட்ட காரணங்களுக்காக வலியுறுத்தவில்லை, ஆனால், அவராக கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பைத் துறக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் வலியுறுத்திய செல்வம் அடைக்கலநாதன், நேற்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர் திடீர் உடல்நலக் குறைவினால் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

"சுமந்திரனைப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால், அவர் தனிப்பட்ட கருத்துக்களைத் தவிர்த்து, மக்களின் உணர்வுகளைப் புரிந்து பேச வேண்டும்" என்று நேற்றைய கூட்டத்தில் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாகக் குறிப்பிட்டார். அந்தப் பேட்டி

கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தைச் செலுத்தும் எனப் பரவலாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டது எனவும் சம்பந்தன் கூறினார்.

"தமிழ் அரசியல் நெருக்கடியான சூழலில் இருக்கும் இன்றைய வேளையில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் பேச வேண்டும்" என்று இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்தார்.

"கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்" என்று எம்.ஏ.சுமந்திரன் இதன்போது

கூறினார்.

எனினும், "இது மோதல் களமல்ல. அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டாலே கூட்டமைப்பினால் எதையாவது செய்ய முடியும். அனைவரும் தவறுகளைப் புரிந்துகொண்டு, முன்னோக்கிச் செல்ல வேண்டும்" என்று இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

https://www.tamilwin.com/politics/01/247329?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, இப்போதைக்கு அவ்வாறு செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்தப் பூம் பூம் மாட்டுக்குத் தெரியும், இப்போ சுமந்திரனை விலக்கினால் தாங்கள் சிங்களத்திடம் பெற்ற கையூட்டுகளின் விபரம், விக்கியருக்கு எதிராக செயற்பட்ட விதம் ஆகியவற்றை  சுமந்திரன் புட்டு புட்டு வைத்து விடுவார்.  தேர்தலில் துண்டும் மிஞ்சாது. ஆகவே அடக்கி வாசிக்க முடிவு செய்திருப்பார். அதை வைத்தே சுமந்திரனும் இந்த இரண்டு மாடுகளையும் பூட்டி இழுக்கிறார்.

2 minutes ago, satan said:

இந்தப் பூம் பூம் மாட்டுக்குத் தெரியும், இப்போ சுமந்திரனை விலக்கினால் தாங்கள் சிங்களத்திடம் பெற்ற கையூட்டுகளின் விபரம், விக்கியருக்கு எதிராக செயற்பட்ட விதம் ஆகியவற்றை  சுமந்திரன் புட்டு புட்டு வைத்து விடுவார்.  தேர்தலில் துண்டும் மிஞ்சாது. ஆகவே அடக்கி வாசிக்க முடிவு செய்திருப்பார். அதை வைத்தே சுமந்திரனும் இந்த இரண்டு மாடுகளையும் பூட்டி இழுக்கிறார்.

ம்ம்!
ரணிலோட சேர்ந்து தங்களின் திருகுதாளங்களுக்கு இடைஞ்சலா இருந்த விக்கி, அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சுரேஷ், சிவசக்தி ஆனந்தன் போன்றோரை கழட்டிவிட்ட கோஷ்டி இப்ப திருதிரு என்டு முழிக்குது.
சம்பந்தனும் சம்பந்தனின் திருட்டு அரசியல் கோஷ்டிகளும்!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிலிருந்து யாரும் விலகமாட்டார்கள் காரணம் அப்படியான சொகுசு வாழ்க்கை இவர்கள் அனுபவிப்பதில் கால்பங்கு மக்கள் அனுபவிப்பார்களா இல்லை அரசாங்கம் கொடுக்க நினைப்பதையே தடுத்து நிறுத்தி அதை பங்கு போட நினைப்பவர்கள் 

இவர்களும் திருந்த வாய்ப்பும் இல்லை இவர்களுக்கு வாக்களிக்கும் மக்களும் திருந்த அறவே வாய்ப்பில்லை

11 hours ago, பெருமாள் said:

"கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்" என்று எம்.ஏ.சுமந்திரன் இதன்போது கூறினார்.

சூடு, சொரணை, மானம், ரோஷம் எதுவுமே இல்லாத ஜென்மங்கள் இப்பிடி தான் பேசும்!

  • கருத்துக்கள உறவுகள்

முந்தா நாத்து யாரோ ஒருவர் சொன்னார். சுமந்திரனுக்கு இருக்கிற  திறமைக்கு,  ஐ . தே கட்சியில் இணைந்து போட்டியிட்டே, பாராளுமன்றம் போகலாம் என்றார். இங்கு, இன்று இவரோ பேச்சாளர் பொறுப்பிலிருந்தே விலகமாட்டேன். என்று அடம் பிடிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் கூட்டத்தினால் ஓரம்கட்டப்பட்டவர்களை ஒன்றிணைத்தால் அங்கு தமிழினத்திற்கு ஓர் உண்மையான, நம்பிக்கையான தலைமை தோற்றம்பெறலாம் என எண்ணத் தோன்றுகிறது. 🤔

4 hours ago, Paanch said:

சம்பந்தர் கூட்டத்தினால் ஓரம்கட்டப்பட்டவர்களை ஒன்றிணைத்தால் அங்கு தமிழினத்திற்கு ஓர் உண்மையான, நம்பிக்கையான தலைமை தோற்றம்பெறலாம் என எண்ணத் தோன்றுகிறது. 🤔

செயற்பாட்டுத் திறனுடைய சார்ள்ஸ் நிர்மலநாதன் புதிய அணியை வழிநடத்த தகுதியானவர்.

அவர் முன்வந்தால் இதை சாத்தியமாக்குவது பெரும் காரியமல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.