Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் இவ்வாறு இராணுவப் படைவீரர்களை கொன்றொழித்ததாகத் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் கொரோனா வைரஸ் தொற்றை விடவும் அபாயமானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/248995?ref=home-imp-parsely

  • Replies 225
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருணா... காணாமல் போக, ஆயத்தப் படுத்துகிறரர் போலுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் கொரோனாவை விட பயங்கரமானவன்’: அம்மான் அதகளம்!

நான் கொரோனாவை விட பயங்கரமானவன் என ஒருவர் கூறியிருக்கிறார். அது உண்மைதான். கொரோனாவினால் உயிரிழந்தவர்களை விட, என்னால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம்“ என கூறியுள்ளார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா).

அம்பாறை, நாவிதன்வெளியில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டமான்றில் இதனை தெரிவித்துள்ளார்.

பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் அண்மையில் நடந்த கூட்டமொன்றில் கருணா கொரோனாவை விட ஆபத்தானவர் என தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்து உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார்

“நான் கொரோனாவை விட ஆபத்தானவன் என்று பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் கூறியுள்ளார். ஆம், நான் கொரோனாவை விட ஆபத்தானவன். நான் விடுதலைப் புலியில் இருந்தபோது, கிளிநொச்சியிலுள்ள ஆனையிறவு முகாமில் 2,000 முதல் 3000 இராணுவத்தை கொன்றேன். இலஙகையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்“ என்றார்.

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகவும், தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.pagetamil.com/130906/

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம். இவர் ஆனையிறவு பக்கம் போனவரோ தெரியாது. இதில வெட்டிப் பெருமை வேற. ஆனையிறவு வெற்றிக்கு பாடுபட்டவர்களை காட்டிக்கொடுத்து கொன்றொழித்தது.. கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை விட அதிகம். அதனால் தான் இப்படி பேச முடிகிறது. 

Edited by nedukkalapoovan

கொரேனாவும் கண்ணுக்குத் தெரியாமல்தான் இருக்கு. இவரும் கண்ணுக்குத் தெரியாமல்தான் இருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகமூர்த்தி முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.

 

நான் மக்களின் ஆணையுடன் நாடாளுமன்றம் வருவேன் தேசிய பட்டியலில் எனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நான் கொவிட் 19தை விட ஆபத்தானவன் என தெரிவித்துள்ள கருணா நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவேளைஆனையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 வரையிலான இராணுவத்தினரை கொலை செய்தவன்,இது கொரோனா வைரஸ் பலியெடுத்த உயிர்களை விட அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.jaffnamuslim.com/2020/06/2000-3000.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவுச் சமருக்கும் கும்மானுக்கும் என்ன தொடர்பு?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கான படையினரை கொலை செய்தேன் – கருணாவிற்கு கருத்திற்கு ருவான் விஜயவர்த்தன எதிர்ப்பு

Post Views: 85
June 20, 2020

ஆனையிறவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்தேன் என விநாயகமூர்த்தி முரளீதரன் வெளியிட்டுள்ள கருத்திற்கு முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

ruwan-wije-1-300x241.jpg

டுவிட்டர் பதிவில் ருவான் விஜயவர்த்தன தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
நான் கொரோனா வைரசினை விட ஆபத்தானவன், ஆனையிறவில் 2000 முதல் 3000 படையினரையும் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான படைவீரர்களையும் கொலை செய்தேன் என கருணா தெரிவித்துள்ளார் எனருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

karuna-3-1-300x169.jpg

ராஜபக்ச தேசியவாதமும் தேசப்பற்றும் பேசும் அதேவேளை கிழக்கில் அவர்களுடைய நபர் ஆயிரக்கணக்கான படைவீரர்களை கொலை செய்தேன் என தெரிவிக்கின்றார் என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/48103

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

ஆனையிறவுச் சமருக்கும் கும்மானுக்கும் என்ன தொடர்பு?

 

கொஞ்சம் பொறுங்க கூகிள், விக்கிபீடியாவ பார்த்து சொல்லுறன் 

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் உள்ளுக்கு போக போகின்றார் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடி வெறி கூடிப்போச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தான் தனித்து கணணி  கேம் விளையாடி  மாதிரி  ஆனையிறவுக்கதையையும் விடுகிறார்

அந்த மீட்சிக்காக  தமிழர்களும்  அவர்களது  சேனையும்  கொடுத்த விலையையும் தியாகத்தையும்  மிதித்தபடி.....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

 

. நான் விடுதலைப் புலியில் இருந்தபோது, கிளிநொச்சியிலுள்ள ஆனையிறவு முகாமில் 2,000 முதல் 3000 இராணுவத்தை கொன்றேன்.

 நீங்கள் விடுதலைபுலிகள் அமைப்பில் இருந்திருக்காவிட்டால்

ஒரு  சிங்களபடைவீரனின் வீட்டு நாயைகூட உங்களால் கொல்ல முடிந்திருக்குமா அம்மான்?

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தை கொன்றதாக பெருமை பேசுவதா ஜனாதிபதியை வாழ்த்தும் முறை?

Mangala-1.jpg?189db0&189db0

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, ‘தாம் கொன்ற படையினரின் எண்ணிக்கையைக்கூறிப் பெருமையடைவது தான்’ பொதுஜன பெரமுன வேட்பாளர் கருணா யுத்த நாயகன் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறும் முறையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் கொரோனாவை விட ஆபத்தானவன், புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஆணையிறவில் ஒரே இரவில் இராணுவத்தினரில் 2000 – 3000 பேரைக் கொலை செய்தார் என்று கருணா எனும் வி.முரளிதரன் தெரிவித்த கருத்து தொடர்பிலே மேற்கண்டவாறு மங்கள கேள்வி எழுப்பியுள்ளார்.

 

https://newuthayan.com/இராணுவத்தை-கொன்றதாக-பெரு/

1 hour ago, valavan said:

 நீங்கள் விடுதலைபுலிகள் அமைப்பில் இருந்திருக்காவிட்டால்

ஒரு  சிங்களபடைவீரனின் வீட்டு நாயைகூட உங்களால் கொல்ல முடிந்திருக்குமா அம்மான்?

சரியான கேள்வி - இந்த கருநாய்க்கு இது விளங்குமா? அற்ப உடல் காம பசிக்காக எம் விடுதலை போராட்டத்தை காட்டிக்ககொடுத்த இந்த கழிசடையிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? கேட்டாலும், பதிலிருக்குமா??? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

 நீங்கள் விடுதலைபுலிகள் அமைப்பில் இருந்திருக்காவிட்டால்

ஒரு  சிங்களபடைவீரனின் வீட்டு நாயைகூட உங்களால் கொல்ல முடிந்திருக்குமா அம்மான்?

அவர் விடுதலைபுலிகள் அமைப்பில் இருந்திருக்காவிட்டால் அம்மான்  எப்படி  வந்தது?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் 2000 தொடக்கம் 3000 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பின கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும் பாரதூரமான விடயமல்ல.

தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான இரகசிய தகவல்களை இவர் இறுதியில் வழங்கியதன் காரணமாகவே யுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யுத்த காலத்தில் ஆணையிறவு பகுதியில் 2000 தொடக்கம் 3000 ஆயிரம் இராணுவத்தினரை கொன்றதாக கருணா அம்மான் குறிப்பிட்ட செய்தி தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவா று செய்தி ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்த காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினால் விடுதலை புலிகள் அமைப்பினர் யுத்த களத்தில் கொல்லப்பட்டார்கள்.

இராணுவத்தினருக்ககு எதிராகவும் புலிகள் அமைப்பு பல்வேறு வழிமுறைகள் ஊடாக தாக்குதல்களை முன்னெடுத்தார்கள். யுத்த காலத்தில் கருணா அம்மான் கிழக்கு மாகாண படைத்தளபதி பொறுப்பாளராக செயற்பட்டார். இதன் போதே இத்தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம்.

கருணா அம்மான் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினார் இதன் பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் இவர் பல்வேறு இரகசிய தகவல்களை அரசாங்கத்தற்கு வழங்கினார். இவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இறுதிக்கட்ட யுத்தம் குறுகிய காலத்தில் நிறைவுக் கு கொண்டு வரப்பட்டது.

ஆகவே தற்போது இவர் குறிப்பிட்டுள்ள கருத்து இராணுவத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.

இவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தை மிக விரைவில் நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால் இவரது உதவியை அப்போது பெற்றுக் கொண்டோம்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரண்டு தரப்பிலும் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தத்தை நோக்கி பயணிக்கையில் இழப்புக்களை நிச்சயித்துக் கொள்ளவேண்டும் என்பது இராணுவத்தினருக்கு சாதாரண ஒரு விடயமாகும். 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே இன்று தமிழ் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்றா

https://www.tamilwin.com/special/01/249054?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான் நாக்கிலே சனி...

சிங்களவர்கள் பொருமிக் கொண்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

ம்ம். இவர் ஆனையிறவு பக்கம் போனவரோ தெரியாது. இதில வெட்டிப் பெருமை வேற. ஆனையிறவு வெற்றிக்கு பாடுபட்டவர்களை காட்டிக்கொடுத்து கொன்றொழித்தது.. கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை விட அதிகம். அதனால் தான் இப்படி பேச முடிகிறது. 

இப்படியான விசயங்களில் கருத்தெழுதாமல்  இருப்பது உங்களுக்கு மரியாதை தம்பி 🙂
 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

இப்படியான விசயங்களில் கருத்தெழுதாமல்  இருப்பது உங்களுக்கு மரியாதை தம்பி 🙂
 

ஏன் ஆனையிறவுச் சமருக்கு கும்மானோட போனனீங்களோ...?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

ஏன் ஆனையிறவுச் சமருக்கு கும்மானோட போனனீங்களோ...?

நீங்கள் விரும்புகிறீர்களோ ,இல்லையோ ஆனையிறவு சமரில் கருணாவின் பங்கும் இருந்தது .
 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நீங்கள் விரும்புகிறீர்களோ ,இல்லையோ ஆனையிறவு சமரில் கருணாவின் பங்கும் இருந்தது .
 

எந்தப் பக்கத்தால எந்த ரீமை கொண்டு போனவர்?

  • கருத்துக்கள உறவுகள்

கொலைக்காரன் கருணாவை, உடனடியாக கைது செய்யுங்கள் - ராவணா பலய

(எம்.மனோசித்ரா)

 

கருணா அம்மான் முன்வைத்துள்ள கருத்துக்கள் பாரதூரமானதாகும். 2000 - 3000 இராணுவ வீரர்களை கொன்றதாகக் கூறுவது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு முரணானதாகும்.

 

எனவே அவரை மனித கொலையுடன் தொடர்புபட்ட சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். இதற்கான நேரடியாக நடவடிக்கையை  முன்னெடுக்குமாறு ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

 

இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விடவும் இது மிகப் பாரதூரமானதாகும்.

 

இந்த சம்பவம் மாத்திரமின்றி இதே போன்று இவர் இன்னும் பல மனிதப்படுகொலைகளுடன் தொடர்புபட்டவராவார். எனவே தற்போது அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

 

தான் செய்த குற்றத்தை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். சஹரானைப் போன்றே இவரும் மனிதப் படுகொலையைச் செய்துள்ளார்.

 

தேர்தல் களத்தில் இருந்து கொண்டு இவ்வாறான  கருத்தினை பகிரங்கமாக  தெரிவிப்பதன் மூலம் மீண்டும் தனி ஈழ கோரிக்கையை முன்வைக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது.

 

எனவே ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

 

நாட்டிலுள்ள சாதாரண மக்களின் பிள்ளைகளே இராணுவ வீரர்களாக யுத்த களத்திற்குச் சென்றனர். அவர்களே எல்.டி.டி.ஈ. பயங்கரவாத குழுவுக்கு எதிராக முகாம் அமைத்தார்கள். அவ்வாறான அப்பாவிகள் 2000 - 3000 பேரை ஒரே நேரத்தில் கொன்ற இவர் அரசியலில் அங்கத்துவம் வகிக்க முடியுமா ?

 

கொலைகாரரொருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியுமா? நாட்டின் சட்டத்தை சவாலுக்குட்படுத்திய இது போன்ற நபர்களுக்கு அரசியலில் வாய்ப்பளிக்க முடியுமா ? எனவே கருணா அம்மானுக்கு ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றேன். முன்னரை போல தற்போது விளையாட முடியாது. காரணம் தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தக் கூடிய தலைவர் உருவாகியுள்ளார்

http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_337.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

யுத்த காலத்தில் 2000 தொடக்கம் 3000 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பின கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும் பாரதூரமான விடயமல்ல.

தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான இரகசிய தகவல்களை இவர் இறுதியில் வழங்கியதன் காரணமாகவே யுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யுத்த காலத்தில் ஆணையிறவு பகுதியில் 2000 தொடக்கம் 3000 ஆயிரம் இராணுவத்தினரை கொன்றதாக கருணா அம்மான் குறிப்பிட்ட செய்தி தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவா று செய்தி ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்த காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினால் விடுதலை புலிகள் அமைப்பினர் யுத்த களத்தில் கொல்லப்பட்டார்கள்.

இராணுவத்தினருக்ககு எதிராகவும் புலிகள் அமைப்பு பல்வேறு வழிமுறைகள் ஊடாக தாக்குதல்களை முன்னெடுத்தார்கள். யுத்த காலத்தில் கருணா அம்மான் கிழக்கு மாகாண படைத்தளபதி பொறுப்பாளராக செயற்பட்டார். இதன் போதே இத்தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம்.

கருணா அம்மான் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கினார் இதன் பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் இவர் பல்வேறு இரகசிய தகவல்களை அரசாங்கத்தற்கு வழங்கினார். இவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இறுதிக்கட்ட யுத்தம் குறுகிய காலத்தில் நிறைவுக் கு கொண்டு வரப்பட்டது.

ஆகவே தற்போது இவர் குறிப்பிட்டுள்ள கருத்து இராணுவத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.

இவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தை மிக விரைவில் நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால் இவரது உதவியை அப்போது பெற்றுக் கொண்டோம்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரண்டு தரப்பிலும் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யுத்தத்தை நோக்கி பயணிக்கையில் இழப்புக்களை நிச்சயித்துக் கொள்ளவேண்டும் என்பது இராணுவத்தினருக்கு சாதாரண ஒரு விடயமாகும். 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே இன்று தமிழ் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்றா

https://www.tamilwin.com/special/01/249054?ref=imp-news

இந்தச் செய்தி உண்மையானால், இச் செய்தியில் கூறப்பட்டது தொடர்பாக  இரதி அக்காவின் நிலைப்பாடு என்ன 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தச் செய்தி உண்மையானால், இச் செய்தியில் கூறப்பட்டது தொடர்பாக  இரதி அக்காவின் நிலைப்பாடு என்ன 🤔

கருணா காட்டிக் கொடுத்து தான் புலிகள் தோத்தார்கள் என்பது புலிகளையும்,தலைவரையும் அவமதிக்கும் செயல் என்று நான் நினைக்கிறேன் .
கருணா காட்டிக் கொடுக்கா விட்டாலும் அந்த யுத்தத்தில் புலிகள் தோத்து இருப்பார்கள்.
கருணாவும் ,அவரது படைகளும் அந்த நேரத்தில் புலிகளோடு நின்றிருந்தாலும் கூட அந்த சண்டையில் தோத்து தான் இருப்பார்கள்...ஆனால் இன்னும் கொஞ்ச நாள் போராட்டம் நீடித்து இருக்கும்...இன்னும் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டு இருக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

எந்தப் பக்கத்தால எந்த ரீமை கொண்டு போனவர்?

 

8 minutes ago, ரதி said:

கருணா காட்டிக் கொடுத்து தான் புலிகள் தோத்தார்கள் என்பது புலிகளையும்,தலைவரையும் அவமதிக்கும் செயல் என்று நான் நினைக்கிறேன் .
கருணா காட்டிக் கொடுக்கா விட்டாலும் அந்த யுத்தத்தில் புலிகள் தோத்து இருப்பார்கள்.
கருணாவும் ,அவரது படைகளும் அந்த நேரத்தில் புலிகளோடு நின்றிருந்தாலும் கூட அந்த சண்டையில் தோத்து தான் இருப்பார்கள்...ஆனால் இன்னும் கொஞ்ச நாள் போராட்டம் நீடித்து இருக்கும்...இன்னும் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டு இருக்கும்  

சரி இதை விட்டிட்டு, ஆனையிறவிற்கு வாங்கோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.