Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுள் தண்டனை கைதி கண்ணதாசனை விடுவித்து கட்டளை! – விசாரணை நியாயமற்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுள் தண்டனை கைதி கண்ணதாசனை விடுவித்து கட்டளை! – விசாரணை நியாயமற்றது

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.jpg?189db0&189db0

 

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போராளியும், யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறையின் முன்னாள் விரிவுரையாளருமான கண்ணதாசனை விடுவித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) கட்டளை வழங்கியுள்ளது.

தண்டனையை எதிர்த்து கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டின் அடிப்படையில் அவரை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.

இந்த மேன்முறையீட்டு வழக்கின் விளக்கம் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் எழுத்தில் வழங்கப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் 13ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு கண்ணதாசனால் மேன்முறையீடு செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில் வவுனியா மேல் நீதிமன்றினால் வழங்கப்டுள்ள தீர்ப்பினை நியாயப்படுத்த முடியவில்லை என்றும் அதனால் மீண்டும் விசாரணை வேண்டும் என அன்றைய தினம் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் குமார் இரட்ணம் விண்ணப்பத்தை முன்வைத்தார்.

ஏற்கனவே இடம்பெற்ற விசாரணையை நியாப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டுமே அன்றி மீள் விசாரணைக்கு இணங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்திருந்தார்.

அன்றைய தினம் கண்ணதாசனும் மன்றுக்கு அழைத்து வரப்பட்டிருக்கவில்லை. அதனால் குற்றம் சாட்டப்பட்டவரையும் அழைத்துவருமாறும் மீள் விசாரணையா அல்லது விடுதலையா என்பதற்கான கட்டளையை வழங்குவதாக இந்த வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, பிரியங்க பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட அமர்வு கட்டளையை வழங்கியது.

கண்ணதாசன் குற்றவாளியாக காணப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை இரத்துச் செய்த மேன் முறையீட்டு நீதிமன்றம், அவரை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்து கட்டளை வழங்கியது.

https://newuthayan.com/ஆயுள்-தண்டனை-கைதி-கண்ணதா/

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

ஏற்கனவே இடம்பெற்ற விசாரணையை நியாப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டுமே அன்றி மீள் விசாரணைக்கு இணங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்திருந்தார்.

சிறீலங்கா அரசின்மேலுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அதனைக் காப்பாற்றச் சுமந்திரனும் செய்யும் உதவிகளை மேலும் பெறுவதற்காகவும், அவரது வாக்குவங்கி அடியோடு வங்குரோத்தாகாமல் காப்பாற்றவும் கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Paanch said:

சிறீலங்கா அரசின்மேலுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அதனைக் காப்பாற்றச் சுமந்திரனும் செய்யும் உதவிகளை மேலும் பெறுவதற்காகவும், அவரது வாக்குவங்கி அடியோடு வங்குரோத்தாகாமல் காப்பாற்றவும் கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. 

ஆக  கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டது பிழையான நோக்கத்திலேயே 😫

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

ஆக  கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டது பிழையான நோக்கத்திலேயே 😫

நல்ல விடயம் அதை  செய்த நேரம் பிழையானது அதே போல் அங்கவீனர் ஆன  முன்னாள் போராளிகளை சுமத்திரனை  கொல்ல  வந்தார்கள் என்று பொய் குற்றச்சாட்டில் உள்ளே பிடித்து போட்டு உள்ளீர்களே  அவர்களுக்கு எப்ப விடிவு ?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

நல்ல விடயம் அதை  செய்த நேரம் பிழையானது அதே போல் அங்கவீனர் ஆன  முன்னாள் போராளிகளை சுமத்திரனை  கொல்ல  வந்தார்கள் என்று பொய் குற்றச்சாட்டில் உள்ளே பிடித்து போட்டு உள்ளீர்களே  அவர்களுக்கு எப்ப விடிவு ?

ஆக,

வேண்டாப் பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டாக் குற்றம் 😫

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

ஆக,

வேண்டாப் பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டாக் குற்றம் 😫

இது கருத்துக்களம்  சுமத்திரனை  தீவிரமாக ஆதரிக்கும் உங்களால் நாங்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று நேரிடையாக சொல்லிவிடுவது நல்லது அதைவிட்டு திசை திருப்பும் வேலை செய்வதால் சுமத்திரன் நல்லவராகி போயிடார்  மென்மேலும் கெட்ட  பெயருடன் தேர்தலில் படு தோல்வியை சந்திப்பார் . காரணம் தாயகத்தில் இருந்து தினமும் உன்மையை  தேடி யாழ் கருத்து களத்துக்கு  மக்கள் வருகிறார்கள் என்பதை கவனத்தில் எடுக்கவும் .

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச சனத்திற்கு வீடு மேல அபிமானம் இருக்கு, ஆனால் சுமந்திரன் மேல் வெறுப்பு தான், என்ன நடக்குது என்று 06/08 தெரிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

நல்ல விடயம் அதை  செய்த நேரம் பிழையானது அதே போல் அங்கவீனர் ஆன  முன்னாள் போராளிகளை சுமத்திரனை  கொல்ல  வந்தார்கள் என்று பொய் குற்றச்சாட்டில் உள்ளே பிடித்து போட்டு உள்ளீர்களே  அவர்களுக்கு எப்ப விடிவு ?

20 பேர் என்பது உன்மையா ?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

அங்கவீனர் ஆன  முன்னாள் போராளிகளை சுமத்திரனை  கொல்ல  வந்தார்கள் என்று பொய் குற்றச்சாட்டில் உள்ளே பிடித்து போட்டு உள்ளீர்களே  அவர்களுக்கு எப்ப விடிவு ?

நாங்கள் சுமந்திரனை வெல்லவைப்போம். அவர் சிங்கள அரசைப் பாதுகாப்பார். அடுத்துவரும் ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசு சுமந்திரனைக் காரணமாக்கி ஒவ்வொரு போராளிகளாக விடுவிக்கும். நாங்கள் சுமந்திரனை தொடர்ந்து வெல்லவைப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படி இருந்தாலும் இவர் விடுதலையானது மகிழ்ச்சி 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

எது எப்படி இருந்தாலும் இவர் விடுதலையானது மகிழ்ச்சி 

அது தான் உண்மை.இவரால் வந்த விடுதலை வேண்டாம் என்று அவர் சிறையை விட்டு வராமல் இருக்க மாட்டார்.எனக்கு சும் மட்டும் இல்லை தீர்வு என்டு மக்களை ஏமாத்தி பாரளமன்றம் போக நினைப்பவர்கள் அனைவரிலும் வெறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

நல்ல விடயம்

1) அதை  செய்த நேரம் பிழையானது அதே போல்

2அங்கவீனர் ஆன  முன்னாள் போராளிகளை சுமத்திரனை  கொல்ல  வந்தார்கள் என்று பொய் குற்றச்சாட்டில் உள்ளே பிடித்து போட்டு உள்ளீர்களே  அவர்களுக்கு எப்ப விடிவு ?

1) அப்படியானால் தற்போது விடுவிக்கப்பட்டதில் தங்களுக்கு உவப்பில்லையோ 😫

2) பொய்க் குற்றச்சாட்டை யார் சுமத்தியது ? சுமந்திரனா ? 😀

ஒரு விடயத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் புரியாத இடயத்தை தெளிவுறப் புரிந்து கொண்டது போல பசப்புவது தாங்கமுடியவில்லை. 😢

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

சிறீலங்கா அரசின்மேலுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அதனைக் காப்பாற்றச் சுமந்திரனும் செய்யும் உதவிகளை மேலும் பெறுவதற்காகவும், அவரது வாக்குவங்கி அடியோடு வங்குரோத்தாகாமல் காப்பாற்றவும் கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. 

மிகவும் சரியான கணிப்பு. இதனைத்தான் "இறால் போட்டு சுறாப் பிடித்தல்" என்பதோ. இதை நான் சொல்லவில்லை . முன்னோர் சொன்ன பழமொழி சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சந்தித்த கண்னியமான சில மனிதர்களிள் கண்ணதாசனும் ஒருவர். அவரும், அவருடைய குடும்பமும் தேச விடுதலைக்காக கொடுத்த விலை அதிகம். 

எனக்கு சுட்டாலும் சங்கீதம் வராது. அம்மாவின் வற்புறுத்தலால், சிறிது காலம் அவருடைய நால்லூர் வீட்டில் மிருதங்கம் பயின்றேன்.  அன்நேரத்தில், அவருடைய தங்கையார் இராணுவத்துடன் எற்பட்ட மோதலில் வீரச் சாவடைந்திருந்தார்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

சிறீலங்கா அரசின்மேலுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அதனைக் காப்பாற்றச் சுமந்திரனும் செய்யும் உதவிகளை மேலும் பெறுவதற்காகவும், அவரது வாக்குவங்கி அடியோடு வங்குரோத்தாகாமல் காப்பாற்றவும் கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. 

போராளிகளின் வாக்குக்காகவும், சர்வதேச விசாரணை தேவையில்லை எங்களது நீதிச் சேவை நிஞாயமாகவே தீர்ப்பு வழங்குகிறது, என கட்டியம் கூறுவதற்கும் செய்யப்படிருக்கலாம். அவசரமாக இந்தத் தீர்ப்பு வழிவந்து ஒரு சந்தேகம். இவரின் விடுதலை மகிழ்ச்சி. எல்லா உறவுகளும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள், வேண்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

இவரின் விடுதலை மகிழ்ச்சி. எல்லா உறவுகளும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள், வேண்டும்.   

உண்மையான பின்னூட்டம். ஆனால் இதனையும் விமர்ச்சிக்கத் தமிழில் சொற்கள் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.