Jump to content

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

 

அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு  முடிவுகளில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள்.


அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது.

2016 தேர்தலுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது டொனால்டு டிரம்பின் பிரச்சாரத்தில் மேலும் உற்சாகம் இருப்பதாக குடியரசுக் கட்சி தங்களது டுவிட்டரில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளது.

ஆனால் மறுபுறம் ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடென் பிரச்சாரத்தில் குறிப்பிடும்படியான உற்சாகத்தை உருவாக்க முடியவில்லை என கூறப்படுகிறது.<

2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடந்த பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் தனது எதிராளியான ஹிலாரி கிளிண்டனுக்குப் பின்னால் இருந்தார்.ஆனால் பின்னர் வெற்றி பெற்றார் என்பதையும் அந்த அணி சுட்டிக்காட்டுகிறது.

புளோரிடா, அரிசோனா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று சவால் மிகுந்த மாகாணங்களில் பிடென் முந்தியிருப்பதாக சிஎன்என் ஞாயிற்றுக்கிழமை ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.ஆனால் டிரம்ப் இந்த மூன்று மாகாணங்களையும் 2016 ல் வென்றிருந்தார்.

தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் பல வாரங்களாக படெனுக்குப் பின்னால் இருக்கிறார். ஆனாலும், பொதுமக்களின் வாக்குகளைவிட மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் அந்த 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/27085046/Biden-holds-daunting-lead-over-Trump-as-US-election.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

பரவாயில்லை.
எங்கு போனாலும் யாழுடன் இணைந்திருங்கள்.

எனது ஜாதகத்திலும் வெளிநாட்டு போவதற்கான பலன் இருக்கென்று சாத்திரி சொல்லுறார் பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

பரவாயில்லை.
எங்கு போனாலும் யாழுடன் இணைந்திருங்கள்.

எனது ஜாதகத்திலும் வெளிநாட்டு போவதற்கான பலன் இருக்கென்று சாத்திரி சொல்லுறார் பாப்பம்.

நிச்சயம் தொடர்ந்து யாழுடன் இணைந்திருப்பேன். சாத்திரத்தில் முழு நம்பிக்கை இல்லாவிட்டாலும் சில விடயங்கள் சொல்லி வச்ச மாதிரித்தான் நடக்குது. தற்போது  நிறைய கிரக மாற்றங்கள் நடக்கும்  காலகட்டம். நீங்கள் எங்கு இடம் மாறினாலும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டுகிறேன்.
நியூசிலாந்து திரும்பி போகும் நோக்கத்துடனேயே 20 வருடங்களுக்கு முன்பு  இங்கு வந்தோம். பல காரணங்களால் போக முடியவில்லை. Auckland  இல் வீடு வாங்குவதற்கு உரிய வேலைகள் தொடங்கியாச்சு. யாழ் வீடும் வேலைகள் நடக்குது. இனி என்ன மாறி மாறி இரண்டு  இடத்துக்கும் சென்று ஆக வேண்டிய விஷயங்களை பார்க்கவேண்டியது தான் அண்ணா. ( யாழ் வீடு திருத்தும் என்ஜினீயர் பொடியன் நல்ல வேலைகாரன் போல இருக்கு. அவரின் விபரங்கள் உள்பெட்டியில் போடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

அண்ணா. ( யாழ் வீடு திருத்தும் என்ஜினீயர் பொடியன் நல்ல வேலைகாரன் போல இருக்கு. அவரின் விபரங்கள் உள்பெட்டியில் போடுகிறேன்.

நன்றி சகோதரி.
ஊருக்கு இப்ப போக இயலாது போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

அங்குதான் இப்ப நல்ல ஆட்சி நடக்கின்றது😀 .  Yogini அக்காவை தெரியுமா, அவரும் வைத்தியர்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

அங்குதான் இப்ப நல்ல ஆட்சி நடக்கின்றது😀 .  Yogini அக்காவை தெரியுமா, அவரும் வைத்தியர்தான் 

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி சகோதரி.
ஊருக்கு இப்ப போக இயலாது போல இருக்கு.

ஓமோம் அண்ணா  இப்ப கோரோனோ பிரச்சனையால் எங்கும் போக முடியாது. அது இல்லாவிட்டாலும் எமது நாட்டு நிலைமை தமிழ் மக்களுக்கு எப்பவுமே ஒரு நிச்சயமற்றது தான். அத்துடன் UK  இல் இருந்தால் பயணம் இலகு . இங்கிருந்துகொண்டு போவதென்றால் தூரம் கூடிப்போய்விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 04:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

மனம் போல் வாழ்வு.
வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 23:10, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

வாழ்த்துக்கள் .. ட்ரம்ப் ஆட்சியில் இனி இருக்க ஏலாது என்ற தொனியில் சிரிப்பு குறி இட்டேன் .. மகிழ்ச்சி..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 04:50, nilmini said:

எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

நில்மினி நாம் ஒரு நல்ல படத்தை பார்த்துவிட்டோ அல்லது நல்லதொரு உணவை உண்டு விட்டு அடையும் சந்தோசம் ஒரு குறுகிய காலத்துக்கு தான் இருக்கும் ஆனால் நீங்கள் ஒரு உதவி மனிதர்களுக்கு செய்யும் போது அதனால் ஏற்படும் சந்தோசம் மனத்திருத்தி 
ஒரு காலமும் எம்மை விட்டு அகலாது.அன்பு தான் தெய்வம் அடுத்தவருக்கு உதவுவது தான் அன்பு.நீங்களும் தெய்வமாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎07‎-‎2020 at 03:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

ஊரில் போய் இருக்கும் ஐடியாவை கை விட்டு விட்டீர்களா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 05:37, உடையார் said:

அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல்

tenor.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

மனம் போல் வாழ்வு.
வாழ்த்துக்கள்.

நன்றி குமாரசாமி அண்ணா. 

19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் .. ட்ரம்ப் ஆட்சியில் இனி இருக்க ஏலாது என்ற தொனியில் சிரிப்பு குறி இட்டேன் .. மகிழ்ச்சி..💐

சிரிப்பெல்லாம் பார்த்தேன் புரட்சி. சும்மாவே அமெரிக்கா மிகவும் பிஸியான நாடு. stress உம்  கூட. இந்தாள்  இன்னும் அறுக்குது . நற்புக்கு  நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, uthayakumar said:

நில்மினி நாம் ஒரு நல்ல படத்தை பார்த்துவிட்டோ அல்லது நல்லதொரு உணவை உண்டு விட்டு அடையும் சந்தோசம் ஒரு குறுகிய காலத்துக்கு தான் இருக்கும் ஆனால் நீங்கள் ஒரு உதவி மனிதர்களுக்கு செய்யும் போது அதனால் ஏற்படும் சந்தோசம் மனத்திருத்தி 
ஒரு காலமும் எம்மை விட்டு அகலாது.அன்பு தான் தெய்வம் அடுத்தவருக்கு உதவுவது தான் அன்பு.நீங்களும் தெய்வமாகலாம்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி உதயகுமார். உண்மைதான் எம்மை மட்டும் சார்ந்த சந்தோசங்கள் நீடிப்பதில்லை. அப்பப்போது வந்து போகும். அண்ணல் பிறரையும் முக்கியமாக  ஆதரவற்றவருக்கு, தேவையான நேரத்தில் சந்தோசப்படுத்தி அதனால் கிடைக்கும் சந்தோசம் பன்மடங்கானது. தேவையான நேரத்தில்தான் உதவி செய்யவேணும். காலங்கடந்த உதவிகள் பிரயோசனம் அற்றவை. அதுதான் எனது கொள்கை. தானம், தர்மம், பிறருக்காக ஒரு சில நேரங்களையாவது சிலவழித்தல் போன்றவற்றை நிறையபேர் நினைப்பதில்லை. தனக்குப்பின் தான் தானம் என்பதை பலர் தமது தேவைகள், ஆசைகளை கூட்டிக்கொண்டே  போவதால் அவர்களுக்கு தமது தேவைகளை நிறைவேற்றத்தான் பணமும் நேரமும் போதுமாக இருக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

ஊரில் போய் இருக்கும் ஐடியாவை கை விட்டு விட்டீர்களா ?
 

கைவிடவில்லை ரதி. வீட்டு திருத்த வேலைகள் மும்மரமாக நடக்குது. நியூசிலாந்துக்கு திரும்பிப்போவதற்கு சில காரணங்கள் இருக்கு . அத்துடன் ஈழத்தில் தமிழர்களின் நிலை இப்போதைக்கு கேள்விக்குறிதான். போய் தொடர்ந்து அங்கேயே இருக்க விருப்பமில்லை. யாழ்  மருத்துவ கல்லூரியில்  கொஞ்ச காலம் படிப்பித்துக்கொண்டு  ஒரு சமூக சேவை அமைப்புடன் இணைந்து சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் தொடர்ந்து பண வருவாய் இருக்க வேணும். நியூசிலாந்து அழகான அமைதியான இடம். நிறய வேண்டப்பட்டவர்களும் இருப்பதனால் அங்கிருந்துகொண்டு அடிக்கடி யாழ் போய் வருவதாக இருக்கிறேன். கடவுள்தான் வழி காட்டவேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nilmini said:

கைவிடவில்லை ரதி. வீட்டு திருத்த வேலைகள் மும்மரமாக நடக்குது. நியூசிலாந்துக்கு திரும்பிப்போவதற்கு சில காரணங்கள் இருக்கு . அத்துடன் ஈழத்தில் தமிழர்களின் நிலை இப்போதைக்கு கேள்விக்குறிதான். போய் தொடர்ந்து அங்கேயே இருக்க விருப்பமில்லை. யாழ்  மருத்துவ கல்லூரியில்  கொஞ்ச காலம் படிப்பித்துக்கொண்டு  ஒரு சமூக சேவை அமைப்புடன் இணைந்து சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் தொடர்ந்து பண வருவாய் இருக்க வேணும். நியூசிலாந்து அழகான அமைதியான இடம். நிறய வேண்டப்பட்டவர்களும் இருப்பதனால் அங்கிருந்துகொண்டு அடிக்கடி யாழ் போய் வருவதாக இருக்கிறேன். கடவுள்தான் வழி காட்டவேணும். 

சிறிலங்கா-அமெரிக்கா-நியூசிலாந்து.
ஏதோ கரவெட்டிக்கும் துன்னாலைக்கும் போய் வாற மாதிரி கதைக்கிறியள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இடம் மாறினாலும் யாழ் களத்தையும் மறக்க வேண்டாம்.
 இங்கும்  உங்கள் சேவை எல்லோருக்கும் தேவை . உங்கள் எதிர்கால திட்ட்ங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் உடல் உள நலமோடு வாழ்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிலாமதி said:

 இடம் மாறினாலும் யாழ் களத்தையும் மறக்க வேண்டாம்.
 இங்கும்  உங்கள் சேவை எல்லோருக்கும் தேவை . உங்கள் எதிர்கால திட்ட்ங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் உடல் உள நலமோடு வாழ்க .

வேலைகள் தலைக்கு மேல் போகும்போதும் மனம் கவலைப்படும்போதும் யாழ் தான் மனதுக்கு உற்சாகம் தரும். மறக்கவே முடியாது. எல்லாப்பதிவுகளுக்கும் பதில் போடாவிட்டாலும் பொதுவாக எல்லாமே வசித்து அறிந்து கொள்வேன். முக்கியமா நகைச்சுவையாக எழுதும் குமாரசாமி அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா , சிறி அவர்களது பதிவுகள் மனம் விட்டு சிரிக்க வைப்பவை. நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பிப்போவதற்கு சில காரணங்கள் இருக்கு

வணக்கம் நில்மினி.
நியூசிலாந்தில் எனது மனைவியின் மச்சான் பேரின்பநாயகம்(பேராசிரியராக இருக்கலாம்)என்பவரைத் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 04:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

 

உங்களது எழுத்துக்களை  அடிக்கடி  வாசித்தாலும் 

உங்களது பதிவுகள் சார்ந்து

இன்றைய சூழ்நிலையில் (கொரோனா) அதிகம்  எழுதமுடியவில்லை

தொடர்ந்து  இணைந்திருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

tenor.gif

சரியாத்தான்  குத்தாட்டம் போடுறார் போல கிடக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

tenor.gif

சிங்கனுக்கு தனியா ஆடிப் பழக்கமில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2020 at 19:40, nilmini said:

நியூசிலாந்துக்கு திரும்பி போக இருக்கிறேன் 

 

On 28/7/2020 at 04:50, nilmini said:

நல்ல ஒரு நாடு. அதை விட்டுட்டு வர மனமில்லாமல் தான் இங்கு வந்தேன். மீண்டும் போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. யோகினியை  தெரியவில்லை. ஆனால் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.  1996 இல் இருந்து 2001 வரை எத்தனையோ எமது  தமிழ் இளைஞர்கள் Auckland  விமான நிலையத்தில்  வந்திறங்கி யாரும் இல்லமால் தவிக்கும்போது நாங்கள் அவர்களை அழைத்து வந்து, உபசரித்து, மற்ற இளைஞர்கள் இருக்கும் வீட்டில் கொண்டுபோய் சேர்த்து விடுவோம். அடிக்கடி அவர்கள் எல்லோரும் எமது வீட்டுக்கு வருவார்கள். சில குழப்பங்காசிகளும் இருந்தன. அப்போது English-Tamil மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. நான் ஒரு unofficial Translator ஆக இருந்தேன். நிறைய பேருக்கு அகதி விண்ணப்பம் கோருவதற்கு statements நானே எழுதிக்கொடுத்தேன். மெடிக்கல் certificate அது எது என்று அவர்களை அழைத்துக்கொண்டு நாங்கள் எவ்வளோவாளோ உதவிகளை அந்த நேரத்தில் செய்து கொடுத்தோம். எனது husband spoken English  உம் படிப்பித்தார். . சில போராளிகளும் வேறு வேறு விடயமாக வந்து போவார்கள்.அதெல்லாம் ஒரு காலம்.  நான் 2017 ஆம் ஆண்டு 16 வருடங்களுக்கு பிறகு போனபோது நான் உதவி செய்த அனைவரும் வந்து பார்த்தார்கள். இப்படியாவது எமது மக்களுக்கு உதவ கிடைத்ததே என்று நினைத்து மிகவும் மகிழ்ச்சி.

நில்மினி, 
யாழ். களத்தில்... உலகில் தமிழர் வசிக்கும் நாடுகளில் எல்லாம் இருந்து,
அங்கத்தவர்கள்   கருத்து எழுத தினமும் வருகின்றார்கள்.
ஆனால்... நியூசிலாந்தில் இருந்து, ஒருவரும் வருவதில்லை என நினைக்கின்றேன்.

நீங்கள்... நியூசிலாந்துக்கு  சென்றால்,
ஒரு ஐந்து பேரையாவது... யாழ். களத்தில் இணைத்து விடும் படி வேண்டுகின்றேன். :)

மனிதர், தனக்குப் பிடித்தவற்றை  செய்யும் போதுதான்... மகிழ்ச்சியாக இருக்கும்.
அதே போல்... உங்களுக்குத் பிடித்த, நியூசிலாந்துக்கு செல்வது எமக்கும் மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.