Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணில் எம்.பி பதவியை இழந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் எம்.பி பதவியை இழந்தார்

spacer.png

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 42 வருடங்களின் பின்னர் தனது எம்.பி பதவியை இழந்துள்ளார்.

கொழும்பில் போட்டியிட்ட அவரின் ஐக்கிய தேசிய கட்சி 30,875 வாக்குகளையே மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது. இது 2.61 வீதமாகும். இவ்வாறான நிலைமையில் அந்த கட்சி ஆசனங்களை ஒதுக்குவதற்கான மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த கட்சிக்கு ஆசனம் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போயுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்க தோல்வியை தழுவியுள்ளார்.

இதேவேளை இந்த மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 674,603 வாக்குகளையும் , ஐக்கிய மக்கள் சக்தி 387,145 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தி 67,600 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)
 

http://www.samakalam.com/செய்திகள்/ரணில்-எம்-பி-பதவியை-இழந்த/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

யே.ஆர் என்ற நரியால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு  ரணிலென்ற நரிக்கே ஆப்பாகிவிட்டது. இதனைத் தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதோ. பேச்சுக்கு அழைத்துத் தமிழர் தரப்பின் போராட்டசக்தியை அழித்த கட்சி இன்று இறுதி அத்தியாயத்தில் நிற்கிறது.  அதேவேளை மேலெழுந்துள்ள சிங்களப் பெருந்தேசியவாதம் இலங்கைத் தீவைச் சின்னாபின்னமாக்கப்போகிறது.  தமிழர்களின் நிலை மேலும் ஆபத்தினுள் செல்லப்போகிறது. வெற்றிவாத நாயகராக  சிங்களவர்களால் இழுத்துவரப்படும்  இவர்கள் மீணடுமொருமுறை ருவான்வெலிசாயவில் பிரதமர் பதவியேற்கலாம்.

தமிழர் பிரச்சனையை தீர்க்க இரண்டு அருமையான சந்தர்ப்பங்கள் 2002லும் 2015லும் இருந்தும் அதை தவறவிட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

ரணில் எம்.பி பதவியை இழந்தார்

இந்தத் தேர்தலில்
ரணில் தோற்றதும்
கஜன் வென்றதும்
ஒரு நிம்மதி.

34 minutes ago, Dash said:

தமிழர் பிரச்சனையை தீர்க்க இரண்டு அருமையான சந்தர்ப்பங்கள் 2002லும் 2015லும் இருந்தும் அதை தவறவிட்டவர்.

அவர் மட்டுமல்ல. நம்மவரும்  2002ல் இருந்து 2009 வரை சந்ததர்ப்பங்களை தவற விட்டனர் பின்னர 2015 ல் தவற விட்டனர். அவரது தோல்வி தனி மனித தோல்வி. எம்மவர் விட்ட தவறால் வந்த தோல்வி எமது இனத்தில் தோல்வி மட்டுமல்ல பேரிழப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

அவர் மட்டுமல்ல. நம்மவரும்  2002ல் இருந்து 2009 வரை சந்ததர்ப்பங்களை தவற விட்டனர் பின்னர 2015 ல் தவற விட்டனர். அவரது தோல்வி தனி மனித தோல்வி. எம்மவர் விட்ட தவறால் வந்த தோல்வி எமது இனத்தில் தோல்வி மட்டுமல்ல பேரிழப்பு.

அருமையான கருத்து. 👍🏼

ஒவ்வொரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு.

 - நியூட்டனின் மூன்றாம் விதி

2 hours ago, tulpen said:

அவர் மட்டுமல்ல. நம்மவரும்  2002ல் இருந்து 2009 வரை சந்ததர்ப்பங்களை தவற விட்டனர் பின்னர 2015 ல் தவற விட்டனர். அவரது தோல்வி தனி மனித தோல்வி. எம்மவர் விட்ட தவறால் வந்த தோல்வி எமது இனத்தில் தோல்வி மட்டுமல்ல பேரிழப்பு.

2002 இலிருந்து 2009 வரை சந்தர்ப்பங்கள் வந்ததாக ஏமாற்றப்பட்டோம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்படுத்தப்பட்டது ஒரு மாயை. 

6 hours ago, Dash said:

தமிழர் பிரச்சனையை தீர்க்க இரண்டு அருமையான சந்தர்ப்பங்கள் 2002லும் 2015லும் இருந்தும் அதை தவறவிட்டவர்.

போராட்டத்தை உடைத்து கருணாவை வெளியேற்றிய மனிதர். மிகவும் தந்திரமான அரசியல்வாதி. ஒரு வகையில் யுத்தத்தை நிறுத்த சந்தர்ப்பதை வழங்கி மக்களுக்கு நிம்மதியை கொடுத்தார். இருந்தாலு அரசியல் தீர்வையும் வழங்கி இருந்தால் தமிழ் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். சிங்கள மக்களை பொறுத்த வரைக்கும் ரணில் கிராம சபையை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாடடார்கள். ஆனால் ராஜபக்சேக்கள் வட கிழக்கை இணைத்து சுயாட்சி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

8 hours ago, செந்தமிழாளன் said:

2002 இலிருந்து 2009 வரை சந்தர்ப்பங்கள் வந்ததாக ஏமாற்றப்பட்டோம். 

எமது திறமையீனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து எப்போதும் மற்றவன் ஏமாற்றிவிட்டான் என்று கூறுவது எமது வழமை தானே. கத்தியால் என் விரலை நானே வெட்டிக்கொண்டுவிட்டேன் என்று கூறாமல் ‘கத்தி வெட்டிவிட்டது’ என்று கூற பழக்கப்படுத்தி விட்டார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

எமது திறமையீனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து எப்போதும் மற்றவன் ஏமாற்றிவிட்டான் என்று கூறுவது எமது வழமை தானே. கத்தியால் என் விரலை நானே வெட்டிக்கொண்டுவிட்டேன் என்று கூறாமல் ‘கத்தி வெட்டிவிட்டது’ என்று கூற பழக்கப்படுத்தி விட்டார்கள். 

Super Thumbs Up GIF - Super ThumbsUp Vadivelu GIFs

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் அவரின் அரசியல் வாழ்வையும், கட்சியையும் சூனியமாகி, ராஜபக்சே களின் பொறுப்பு  கூறலாய் தடுத்து இருக்கிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.