Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்கையை புறக்கணித்து, ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்ட சுமந்திரன் மாறுவார் என எதிர்பார்க்க முடியாது: விக்னேஸ்வரன் பதில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ரீதியான தந்திரோபாயமாக ஒற்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்கான நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்.

 

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது.

இன்று (7) காலை யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், உருவாகியுள்ள சவால் மிக்க ஆட்சிக்காலத்தை எதிர்கொள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த அழைப்ப தொடர்பில் பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர் கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது அவசியமானது என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஆனால் கடந்த காலத்தை பார்க்கும் போது சிலர் அந்த ஒன்றுமையை உடைக்கும் வண்ணமாகவும், அந்த கொள்கை ரீதியான ஒற்றுமைக்கு எதிரான சிந்தனையுடனும், செயற்பாட்டுடனும் நடந்து வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

ஆகவே அரசியல் ரீதியான தந்திரோபாயமாக இவ்வாறான ஒன்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம், எப்படிச் செய்யப் போகின்றோம், அதற்கான நாங்கள் ஒருமித்து, ஒன்றித்து, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும்.

ஏதோ ஒரு அரசியல் ரீதியான தந்திரோபாயமாக நாங்கள் எல்லோரும் சேர வேண்டும், நாங்கள் அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்வதில் எந்த பயனும் இல்லை.

இதுவரை காலமும் எங்களுடைய கொள்கை ரீதியான விடயங்களை புறக்கணித்து, அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர்கள்தான சுமந்திரன் போன்றவர்கள். அவர்கள் திடீரென மாறுவார்கள் என்று எங்களால் சிந்திக்க முடியாது. ஆனால் எங்ளிடையே கொள்கை ரீதியான ஒன்றுமை அவசியம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்றார்.

https://www.pagetamil.com/139182/

  • Replies 63
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! உங்களால் தனித்து நின்றோ, சேர்ந்து நின்றோ எதுவும் சாதிக்க முடியாது. எழுபது வருடங்களாக கூடியிருந்து சிக்கடிச்சதை நீங்கள் விடுவித்து விடுவீர்களோ, தாங்கள் மாட்டுப்படுவிடுவோமோ என்கிற பயத்தாலேயே உங்களை தூக்கி எறிந்தவர்கள். அவர்களுக்கு விட்டெறிந்து காரியம் சாதித்தவன் சிங்களவன். கஜேந்திரகுமார் வென்றதுடன் நின்று விடுவாரா? அல்லது சாதகமாக தொடர்ந்து செயற்படுவாரா? சிங்களவன் வளைப்பானா? எதுவும் தெரியவில்லை.. உங்களுக்கு சோதனையான காலம் காத்திருக்கு  ரொம்ப அவமானப் படவேண்டி வரலாம். முன்னெச்செரிக்கையுடன்  செயற்படுங்கள்.

இந்த மானா சுமந்திரன் முனா விக்கியை அரசியலுக்கு கொண்டுவந்தது மகா பெரிய தவறு. மனா , முனா என்னவென்று விளங்குமென்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

15 minutes ago, satan said:

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

அது சரி , விக்கியின் செல்லப்பிள்ளைகள் எல்லோரும் தமிழர்களுடன்தான் வாழ்கிறார்கள். இதுதான் ரெட்டை நாக்கு என்று சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரைக்கும் இனி வரும் காலங்களில் தமிழ் தேசியத்துக்கு இடமில்லாமல் போகும் சந்தர்ப்பம்தான் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவர்களே, சிங்களவனோடு கூடிக் கொண்டாடிய  மயக்கத்தில் எல்லாவற்றையும் இழந்த நம்ம தலைமைகள் தாமே. நேற்று வந்த விக்கினேஸ்வரனை குற்றம் கூறுவது எந்த வகையில் நிஞாயம்? 

Just now, satan said:

அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவர்களே, சிங்களவனோடு கூடிக் கொண்டாடிய  மயக்கத்தில் எல்லாவற்றையும் இழந்த நம்ம தலைமைகள் தாமே. நேற்று வந்த விக்கினேஸ்வரனை குற்றம் கூறுவது எந்த வகையில் நிஞாயம்? 

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

போலிக்கு, மேடைக்கு, வாக்குக்கு தேசியம் பேசியவர்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

சிங்கள தேசியம் இருக்கலாம் தமிழ் தேசியம் இருக்க கூடாது என்று சொல்லுறீயள்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

போலிக்கு, மேடைக்கு, வாக்குக்கு தேசியம் பேசியவர்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. 

 

4 minutes ago, putthan said:

சிங்கள தேசியம் இருக்கலாம் தமிழ் தேசியம் இருக்க கூடாது என்று சொல்லுறீயள்....

நல்ல பதில், சாத்தான் & புத்தன்.  👍:)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவை மக்கள் 

 1) மத்தியில் கூட்டாட்சி  மாநிலத்தில் சுயாட்சி
2) ஒரு நாடு இரு தேசம்
3) 13 ஆம் திருத்ததையும் தாண்டி அதிகார  பகிர்வு ..இந்தியாவின் உதவியுடன்
4) தமிழர்கள் சம உரிமையுடன் வாழ சகல நடவடிக்கை (அங்கஜன்)
 
இப்படி சகலரையும் அனுப்பி இருக்கின்றனர்.....எ

மாகாணசபை இல்லாமல் செய்யப்பட்டு  தொகுதிவாரியான தேர்தல்கள் அறிமுகப்படுத்துவார்கள் ....எம்.பி க்கள் தொகுதியைஅபிவிருத்தி செய் ய வேண்டும் என அறிவிப்பார்கள்

அங்கஜன் உடுப்பிட்டி தொகுதியை (வடமாராட்சியை) சிங்கப்பூராக மாற்றுவார்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள்.

மக்கள் சாட்டில் சாயம் வெளுத்து விட்டது. இனி வீழ்ந்து போன இனத்தின் நீதிக்கான குரலை எதிர் பார்ப்பது மடைமை. அது வெறும் போலியாகவே இருக்கும். எத்தனையோ பேர் தேர்தலில் போட்டியிட விக்கினேஸ்வரனை மட்டும் கரித்துக்கொட்டுவதன் மூலம் இவரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி  புரிகிறது.  "நிரபராதி வெகுசன விரோதி". விக்கினேஸ்வரனை சொன்னேன்.

2 hours ago, Robinson cruso said:

அது சரி , விக்கியின் செல்லப்பிள்ளைகள் எல்லோரும் தமிழர்களுடன்தான் வாழ்கிறார்கள். இதுதான் ரெட்டை நாக்கு என்று சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரைக்கும் இனி வரும் காலங்களில் தமிழ் தேசியத்துக்கு இடமில்லாமல் போகும் சந்தர்ப்பம்தான் அதிகம். 

விக்கியும், கஜேந்திரகுமார், நிர்மலநாதன் போன்றோர் எப்படி தெரிவாகினர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

விக்கியும், கஜேந்திரகுமார், நிர்மலநாதன் போன்றோர் எப்படி தெரிவாகினர்.

இன்னும் சில நாள் பொறுங்கள் கோத்தபாயாவுக்கு சிறப்பு சான்றிதழ் கொடுப்பார்கள் இவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அங்கஜன் உடுப்பிட்டி தொகுதியை (வடமாராட்சியை) சிங்கப்பூராக மாற்றுவார்...🤣

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாதத்தை எதிர்க்க ஒருங்கிணைந்து செயற்பட தயார் – விக்னேஸ்வரன்

wicki.jpg?189db0&189db0

எமது இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யப்பட்டுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றது. இதற்கு நானும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருக்கின்றோம்.”

இவ்வாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற தேர்தரில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

  • IMG_20200808_134101.jpg?189db0&189db0
  • IMG_20200808_134115.jpg?189db0&189db0
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

நாங்களும் தான் எவன் புலம் பெயர்ந்து பிச்சை எடுக்கிறது....அப்ப கடை வீதி hoppers hut road  மாறிவிடும் நாங்கள் சும்மா shorts தொப்பி போட்டு,  வெள்ளைகாரன்(கூலிக்கு) அப்பம் சுட்டு தர வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருக்க வேண்டியான்..

  • கருத்துக்கள உறவுகள்

கனடாபணம் ஒருபுறம், அரசாங்கப்பணம் மறுபுறம், கொள்ளை அடித்த பணம் இன்னொருபுறம் வேலை செய்ய, வறுமையில், கொரோனாவால் இழப்புகள் மத்தியில் இருந்த மக்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கையே உயர்த்தியது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

நீங்கள் சிங்கப்பூர் போய் இருக்கவேண்டுமானால் சூட்கேஸ் நிறைய கட்டு கட்டாக பணம் கொண்டு போனால் தான் முடியும். ஸ்கை பார்க் பார்க்க ஆசைபட்டு வெறுத்துவிட்டது.

6 hours ago, கிருபன் said:

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

வடமராட்சியோ யாழ்ப்பாணமோ செழிப்படைய விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் தடைகளாக இருக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கிளிநொச்சி யாழப்பாணம் ஆகிய மாவட்டங்களை யப்பான் மாதிரி ஆக்குவேன் என்றார்.நீங்கள் உங்கள் இடங்களுடன் மட்டும் அவரின் பங்களிப்பை குறுக்கிப் போடாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, சுவைப்பிரியன் said:

அவர் கிளிநொச்சி யாழப்பாணம் ஆகிய மாவட்டங்களை யப்பான் மாதிரி ஆக்குவேன் என்றார்.நீங்கள் உங்கள் இடங்களுடன் மட்டும் அவரின் பங்களிப்பை குறுக்கிப் போடாதீர்கள்.

உந்த விசயம் இவருக்கு தெரியுமோ? :grin:

ஜப்பான் விசேட தூதுவரை இலங்கை ...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

சிங்களவருடன் நாம் எப்படி வாழலாம் அல்லது வாழவேண்டும்  என்பது  தொடர்பாக உங்கள் கருத்து என்ன ? 

சிறிது ஆற அமர யோசித்து நடைமுரைச் சாத்தியமான வழிமுறையைக் கூறுங்கள் 👍

11 hours ago, Robinson cruso said:

அது சரி , விக்கியின் செல்லப்பிள்ளைகள் எல்லோரும் தமிழர்களுடன்தான் வாழ்கிறார்கள். இதுதான் ரெட்டை நாக்கு என்று சொல்லுவார்கள். என்னை பொறுத்தவரைக்கும் இனி வரும் காலங்களில் தமிழ் தேசியத்துக்கு இடமில்லாமல் போகும் சந்தர்ப்பம்தான் அதிகம். 

தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டியது நாம்தான். அழியவிட்டாலும் எமது பிழைதான்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

அதைவிட பெரிய தவறு சிங்களவருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் சுமந்திரனை வீட்டுக்கை அடுத்தது. இன்று குடி முழுகிப்போச்சு. 

சிங்களவனுடன் சேர்ந்தவாழலாம் என்று சொல்பவர்கள் தமது மேற்குலக குடியுரிமையைத் துறந்து இலங்கைக் குடியுரிமையைப் பெற்று  அவர்போனவர் நல்லா இருக்கிறார் இவர்போனவர் ஒரு பிரச்சினையும் இல்லமை இருக்கிறார் என்று சொல்லாமல் செய்து காட்டினால் மற்றவர்களுக்கும் நம்பிக்கை வரும்தானே? 

 சாவுகளை விசாக்காளகவும் குடியுரிமைகளாகவும் சூடியவாறு   தமிழினத்தின் இனத்தின் இருப்பு சிங்கள இனவாதத்தால்  சிதறடிக்கப்படும்  சூழலில் தமிழ்த் தேசியத்தைப் பரிகசிப்பதும் அதற்காகத்தம்மால் முடிந்தளவு செயற்படுவோரை நையாண்டி செய்ய என்றும் தமிழர்களே இருக்கிறார்கள் என்பதும் துயரம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Robinson cruso said:

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

உங்கள் மொழிப்பிரயோகத்தைக் கொஞ்சம் அவதானத்துடன் கையாழுங்கள். ☹️

தமிழ் என்பது உங்களுக்கு பொருளற்றதாக இருக்கலாம். ஆனால் அதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகள் தமதி இன்னுயிர்களை ஈந்திருக்கிறார்கள்.  அந்த ஈகத்தை கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை

😡

8 hours ago, கிருபன் said:

எனக்கு சிங்கப்பூர் போய் இருக்கவேண்டும் என்பது நெடுநாளைய கனவு! இன்னும் 5 வருடத்தில் ஊரில் போய் இருந்தால் நிறைவேறிவிடும்.

யாழ் மக்களின் அதி விருப்பத்துக்குரிய அங்கயன் புண்ணியத்தில் வடமராட்சி செழிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை!

அங்கஜன் வடமராட்சியை விற்காமலிருந்தாலே புண்ணியம். 

மறதிக்கு மருந்தேதும் உண்டோ 😂😂 (மக்களின் மறதிக்கு மருந்து)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Robinson cruso said:

அதுதான், இனி தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுப்பார்கள். இப்போதுதான் யாழ்ப்பாணம், மடடக்கலப்பு , அம்பாறை போன்ற இடங்களில் தொடக்கி இருக்கிறார்கள். வன்னி மக்களும் திருந்த வேண்டும். இனி நிச்சயமாக இது நடக்கும்.

நடந்து முடிந்த தேர்தல் தமிழ்தேசியத்தை முன்னிறுத்தி நடந்ததா ?

இல்லை போட்டியிட்ட வேட்ப்பாளர்களில் யாராவது  ஒரு வேட்ப்பாளர்தன்னும்  தமிழ்த்தேசியத்தை மறுத்து போட்டியிட்டனரா ?

ஏன் உங்களின் தமிழ்தேசிய வெறுப்பை கனவில் கண்டு வந்து இங்கு எழுதுகிறீர்கள் ?

1 hour ago, Kapithan said:

அங்கஜன் வடமராட்சியை விற்காமலிருந்தாலே புண்ணியம். 

மறதிக்கு மருந்தேதும் உண்டோ 😂😂 (மக்களின் மறதிக்கு மருந்து)

அவர் சொன்னதை செய்யாமல் விட்டால் அடுத்த தேர்தலில்  சுமத்திரன் போல் நடுசாமத்தில் போய்  தேர்தல் அதிகாரியின் காலை பிடித்து கதறவேண்டி வரும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.