Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள்.

ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது.

அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. 

இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது.

இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த்து,  பண்டாரநாயக்க போன்ற பெயர்கள் தெலுங்கு பெயர்கள் என்கிறார்கள். அடுத்த கட்ட நகைசுவையாக அதுலத்முதலி முதலியார் இனம் என்ற புனைவு வேறு.

இவை அனைத்துமே வரலாற்று புனைவுகள். தெற்காசியா முழுவதுமே நாயக், நாயக்க, நாயகம் எனும் பெயர்கள் தலைவன் (hero/leader) என்பதை குறிக்க பல்வேறு இனக் குழுக்களில் பயன்படுகிறன. இவை அனைத்தும் சமஸ்கிருத சொல்லாகிய நாயக்க  எனும் சொல்லில் இருந்து வருகிறன.

சில உதாரணங்களை பார்ப்போம்.

குடும்ப பெயராக -நாயக்க

1.  Maharashtra - வில் இந்த பெயர் மராத்தியர், பிரபோ இன மக்கள், சித்பவ பிராமணர்கள் மற்றும் தேசந்த பிராமணர்களால் ஒரு குடும்ப பெயராக  பாவிக்கபடுகிறது.

2. Karnataka -வில் முஸ்லீம் சித்தீக்குகள்

3. தமிழ் நாட்டில் -வன்னியர் சாதி தமிழ் மக்கள்

4. Orissa -வில் பட்நாயிக் என்ற திரிபில் - நியோகி பிராமணர்கள்.

இவ்வாறு தெலுங்கு/நாயக்கர் சாதி தொடர்பே இல்லாத பல இன குழுக்கள் நாயக்க என்ற பெயரை குடும்ப பெயராக பாவிகின்றனர். 

பதவி பெயராக

1. மராட்டிய அரச படையில் இது ஒரு படை நிலை

2. சிங்களத்தில் இது ஒரு வார்த்தை. அரச தலைவரை “ராஜநாயக்க”, அணித்தலைவரை “கண்டாயமே நாயக்க”, இராணுவ தளபதியை “ஹமுதாவ நாயக்க” என்று அழைப்பார்கள். 

விளக்கம் 

மேலே சொன்னதன் அடிப்படையில் நாயக்க என்ற பெயரை வைத்து மட்டும் ஒருவரை தெலுங்கு வம்சாவளி என சொல்ல முடியாது.

குறிப்பாக இலங்கையில் பண்டார(எனும் குழுவின்) தலைவன் என்ற பொருளே பண்டார நாயக்கவுக்கு. அதே போலதான் அமர (தேவர்களின்) நாயக்க. சேன(சேனை)நாயக்க எல்லாமே.

ஆனால் நம் மக்களுக்கு எதையும் சொந்த வீட்டுக்குள் கொண்டு வந்து விளக்கினால்தானே புரியும்?

எனவே கீழே சில யாழ்பாண தமிழ் பெயர்களை தந்துள்ளேன். அத்தனை பேரும் தெலுங்கு வந்தேறிகளா இல்லையா என நம் பாதி வெந்த வரலாற்று புனைவாளர்கள் கூறட்டும்🤣

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

இப்படி பல தெலுங்கு வந்தேறிகள் யாழ் மண்ணில் இருப்பது எமது பாதி வெந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியுமா ? 

ஐயகோ தமிழ் தேசியத்தின் தந்தையே ஒரு தெலுங்கு வந்தேறியா!!!

இதே போலவே முதலியார் என்பது இலங்கையில் போர்துகேயர் காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பதவிப்பெயர். முதலியார் மகேசன், கேட் முதலியார் ராசமாணிக்கம் இவற்றுள் சில.

இப்படி ஒரு நாட்டின், இனத்தின், பெயரீடின் வரலாறு பற்றிய பூரண விளக்கம் ஏதும் இன்றி விக்கிபீடியாவில் நுனிப்புல் மேயும் அரைவேக்காட்டு வரலாற்று ஆய்வாளர்களிடம் கவனமாய் இருங்கள் மக்களே -

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

  • Replies 269
  • Views 26.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வணக்கம்,

தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள்.

ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது.

அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. 

இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது.

இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த்து,  பண்டாரநாயக்க போன்ற பெயர்கள் தெலுங்கு பெயர்கள் என்கிறார்கள். அடுத்த கட்ட நகைசுவையாக அதுலத்முதலி முதலியார் இனம் என்ற புனைவு வேறு.

இவை அனைத்துமே வரலாற்று புனைவுகள். தெற்காசியா முழுவதுமே நாயக், நாயக்க, நாயகம் எனும் பெயர்கள் தலைவன் (hero/leader) என்பதை குறிக்க பல்வேறு இனக் குழுக்களில் பயன்படுகிறன. இவை அனைத்தும் சமஸ்கிருத சொல்லாகிய நாயக்க  எனும் சொல்லில் இருந்து வருகிறன.

சில உதாரணங்களை பார்ப்போம்.

குடும்ப பெயராக -நாயக்க

1.  Maharashtra - வில் இந்த பெயர் மராத்தியர், பிரபோ இன மக்கள், சித்பவ பிராமணர்கள் மற்றும் தேசந்த பிராமணர்களால் ஒரு குடும்ப பெயராக  பாவிக்கபடுகிறது.

2. Karnataka -வில் முஸ்லீம் சித்தீக்குகள்

3. தமிழ் நாட்டில் -வன்னியர் சாதி தமிழ் மக்கள்

4. Orissa -வில் பட்நாயிக் என்ற திரிபில் - நியோகி பிராமணர்கள்.

இவ்வாறு தெலுங்கு/நாயக்கர் சாதி தொடர்பே இல்லாத பல இன குழுக்கள் நாயக்க என்ற பெயரை குடும்ப பெயராக பாவிகின்றனர். 

பதவி பெயராக

1. மராட்டிய அரச படையில் இது ஒரு படை நிலை

2. சிங்களத்தில் இது ஒரு வார்த்தை. அரச தலைவரை “ராஜநாயக்க”, அணித்தலைவரை “கண்டாயமே நாயக்க”, இராணுவ தளபதியை “ஹமுதாவ நாயக்க” என்று அழைப்பார்கள். 

விளக்கம் 

மேலே சொன்னதன் அடிப்படையில் நாயக்க என்ற பெயரை வைத்து மட்டும் ஒருவரை தெலுங்கு வம்சாவளி என சொல்ல முடியாது.

குறிப்பாக இலங்கையில் பண்டார(எனும் குழுவின்) தலைவன் என்ற பொருளே பண்டார நாயக்கவுக்கு. அதே போலதான் அமர (தேவர்களின்) நாயக்க. சேன(சேனை)நாயக்க எல்லாமே.

ஆனால் நம் மக்களுக்கு எதையும் சொந்த வீட்டுக்குள் கொண்டு வந்து விளக்கினால்தானே புரியும்?

எனவே கீழே சில யாழ்பாண தமிழ் பெயர்களை தந்துள்ளேன். அத்தனை பேரும் தெலுங்கு வந்தேறிகளா இல்லையா என நம் பாதி வெந்த வரலாற்று புனைவாளர்கள் கூறட்டும்🤣

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

இப்படி பல தெலுங்கு வந்தேறிகள் யாழ் மண்ணில் இருப்பது எமது பாதி வெந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியுமா ? 

ஐயகோ தமிழ் தேசியத்தின் தந்தையே ஒரு தெலுங்கு வந்தேறியா!!!

இதே போலவே முதலியார் என்பது இலங்கையில் போர்துகேயர் காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பதவிப்பெயர். முதலியார் மகேசன், கேட் முதலியார் ராசமாணிக்கம் இவற்றுள் சில.

இப்படி ஒரு நாட்டின், இனத்தின், பெயரீடின் வரலாறு பற்றிய பூரண விளக்கம் ஏதும் இன்றி விக்கிபீடியாவில் நுனிப்புல் மேயும் அரைவேக்காட்டு வரலாற்று ஆய்வாளர்களிடம் கவனமாய் இருங்கள் மக்களே -

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

ennada-innum-onnum-nadakalayaenu-pathen_

சிவ சிவா .. இந்திய நேரப்படி காலை 9:05 .. காலையிலேவா .. கொஞ்சம் கேப் கொடுக்கலாமல்லோ தோழர் .. 😢

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வணக்கம்,

தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள்.

ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது.

அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. 

இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது.

இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த்து,  பண்டாரநாயக்க போன்ற பெயர்கள் தெலுங்கு பெயர்கள் என்கிறார்கள். அடுத்த கட்ட நகைசுவையாக அதுலத்முதலி முதலியார் இனம் என்ற புனைவு வேறு.

இவை அனைத்துமே வரலாற்று புனைவுகள். தெற்காசியா முழுவதுமே நாயக், நாயக்க, நாயகம் எனும் பெயர்கள் தலைவன் (hero/leader) என்பதை குறிக்க பல்வேறு இனக் குழுக்களில் பயன்படுகிறன. இவை அனைத்தும் சமஸ்கிருத சொல்லாகிய நாயக்க  எனும் சொல்லில் இருந்து வருகிறன.

சில உதாரணங்களை பார்ப்போம்.

குடும்ப பெயராக -நாயக்க

1.  Maharashtra - வில் இந்த பெயர் மராத்தியர், பிரபோ இன மக்கள், சித்பவ பிராமணர்கள் மற்றும் தேசந்த பிராமணர்களால் ஒரு குடும்ப பெயராக  பாவிக்கபடுகிறது.

2. Karnataka -வில் முஸ்லீம் சித்தீக்குகள்

3. தமிழ் நாட்டில் -வன்னியர் சாதி தமிழ் மக்கள்

4. Orissa -வில் பட்நாயிக் என்ற திரிபில் - நியோகி பிராமணர்கள்.

இவ்வாறு தெலுங்கு/நாயக்கர் சாதி தொடர்பே இல்லாத பல இன குழுக்கள் நாயக்க என்ற பெயரை குடும்ப பெயராக பாவிகின்றனர். 

பதவி பெயராக

1. மராட்டிய அரச படையில் இது ஒரு படை நிலை

2. சிங்களத்தில் இது ஒரு வார்த்தை. அரச தலைவரை “ராஜநாயக்க”, அணித்தலைவரை “கண்டாயமே நாயக்க”, இராணுவ தளபதியை “ஹமுதாவ நாயக்க” என்று அழைப்பார்கள். 

விளக்கம் 

மேலே சொன்னதன் அடிப்படையில் நாயக்க என்ற பெயரை வைத்து மட்டும் ஒருவரை தெலுங்கு வம்சாவளி என சொல்ல முடியாது.

குறிப்பாக இலங்கையில் பண்டார(எனும் குழுவின்) தலைவன் என்ற பொருளே பண்டார நாயக்கவுக்கு. அதே போலதான் அமர (தேவர்களின்) நாயக்க. சேன(சேனை)நாயக்க எல்லாமே.

ஆனால் நம் மக்களுக்கு எதையும் சொந்த வீட்டுக்குள் கொண்டு வந்து விளக்கினால்தானே புரியும்?

எனவே கீழே சில யாழ்பாண தமிழ் பெயர்களை தந்துள்ளேன். அத்தனை பேரும் தெலுங்கு வந்தேறிகளா இல்லையா என நம் பாதி வெந்த வரலாற்று புனைவாளர்கள் கூறட்டும்🤣

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

இப்படி பல தெலுங்கு வந்தேறிகள் யாழ் மண்ணில் இருப்பது எமது பாதி வெந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியுமா ? 

ஐயகோ தமிழ் தேசியத்தின் தந்தையே ஒரு தெலுங்கு வந்தேறியா!!!

இதே போலவே முதலியார் என்பது இலங்கையில் போர்துகேயர் காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பதவிப்பெயர். முதலியார் மகேசன், கேட் முதலியார் ராசமாணிக்கம் இவற்றுள் சில.

இப்படி ஒரு நாட்டின், இனத்தின், பெயரீடின் வரலாறு பற்றிய பூரண விளக்கம் ஏதும் இன்றி விக்கிபீடியாவில் நுனிப்புல் மேயும் அரைவேக்காட்டு வரலாற்று ஆய்வாளர்களிடம் கவனமாய் இருங்கள் மக்களே -

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

கொஞ்சம் அவசரப்படுகிறீர்கள் 
போர்த்துகீசியர் வருகைக்கு முன்பே கண்டி 
கண்டியை ஒட்டிய சிங்கள ராஜ்ஜிய மன்னர்கள் 
தமது மகன்மாருக்கு தஞ்சை நாயக்க வம்ச பெண்களை 
மணம் முடித்து கொடுக்கும் முறைமை இருந்து வருகிறது 
இதை சிங்களம் தமிழ் இரு மொழி வராலறிலும் இருக்கிறது 

தஞ்சை நாயக்கர்கள் முன்பு படையெடுத்து வந்தவர்கள் ஆனாலும் பின்னாளில் 
தமிழர்கள்தான்.


யாழ்ப்பாண தமிழர்கள் பல்லவர்கள் 
வங்கத்தை கைப்பற்றிய பல்லவர்கள்தான் 
அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்தார்கள் 

அதன் தொடர்ச்சியாகவே பின்பு பாலி மொழி (சிங்களவர்களும்) 
வந்தார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொன்னதாக ...
சொன்னதை எதிர்க்கிறேன் என்று 
நீங்கள் ஒரு புது வரலாறு எழுதிவிடாதீர்கள் 

எந்த அடிப்படையில் அதை எதிர்க்கிறீர்கள் 
அதற்கான ஆதாரம் என்ன? 
என்பதையும் எழுதினால் நாமும் அறிய முடியும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருது,

தஞ்சை நாயக்கர் இல்லை- மதுரை நாயக்கர் என நினைக்கிறேன்.

இது பாண்டிய நாட்டுடன் சிங்கள மன்னர்கள் கொண்ட தொடர்பில் தொடங்குகிறது.

சோழருக்கு பயந்து பாண்டியர்கள் மணி முடியை கொடுத்து வைக்கும் அளவுக்கு பாண்டிய-சிங்கள உறவு இறுக்கமானது.

குவேனியை துரத்தி விட்டு - விஜயனும் அவனின் தோழர்களும் பாண்டிய நாட்டில் மணம் முடித்து அதன் வழி வந்தவர்கள் சிங்களவர் என்பது உண்மையாகின் இப்போ நாம் தமிழ்-சிங்களம் எனப் போடுவது சோழ-பாண்டிய சண்டையின் நீட்சியே.

பின்னாளில் பாண்டியர்களை பிரதியீடு செய்தவர்கள் நாயக்கர்கள். மதுரையில் 1752 வரை அவர்கள் ஆட்சி -சிங்களவர்களுக்கும் நாயக்கருக்கும் உள்ள தொடர்பை மறுக்க முடியாது.

 ஆனால் அது அரச குடும்ப மட்டத்திலேயே இருந்தது. படைவீரர்களாயும் சிலர் வந்திருக்கலாம். ஆனால் அப்படி வந்தவர்கள் கூட தமது மொழி அடையாஅடையாளத்தை பேணவில்லை.

இப்போதும் சில சிங்கள பெயர்கள் தமிழில் நல்ல பொருள் தரும் பெயர்களாக ஆனால் சிங்களத்தில் இடுகுறி பெயர்களாக இருப்பதை காணலாம்.

அழகப்பெருமா(ள்)

அழக(கூ) கோன். 

தேவாரபெருமா(ள்)

அழகியவண்ண (வண்ணன்)

ஆக இலங்கை தமிழர்களிலும், சிங்களவர்கலும் பல தென்னிந்திய பெயர்களின் தாக்கம் இருந்துள்ளது. 

இது அந்த காலத்து fashion ஆக கூட இருந்திருக்கலாம்.  இப்போ இலங்கையில் பிறக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு சச்சின், ரொஷான், விதுஷன், மதுஷன் என்று பெயர் வைப்பதால் அவர்களை இன்னும் ஒரு 300 வருடத்தில் வட இந்திய வம்சாவளி என சொல்ல முடியுமா?

ஆகவே பெயர்களை வைத்து வரலாற்றை புனைவது சுத்த பைத்தியக்காரத்தனம்.

பண்டாரநாயக்க தெலுங்கன் என்பதை நிறுவும் அதே எடுகோளை வைத்து செல்வநாயகமும் தெலுங்கன் என நாம் நிறுவ முடியும்.

இதைதான் நான் சொல்கிறேன்.

4 hours ago, Maruthankerny said:

கொஞ்சம் அவசரப்படுகிறீர்கள் 
போர்த்துகீசியர் வருகைக்கு முன்பே கண்டி 
கண்டியை ஒட்டிய சிங்கள ராஜ்ஜிய மன்னர்கள் 
தமது மகன்மாருக்கு தஞ்சை நாயக்க வம்ச பெண்களை 
மணம் முடித்து கொடுக்கும் முறைமை இருந்து வருகிறது 
இதை சிங்களம் தமிழ் இரு மொழி வராலறிலும் இருக்கிறது 

தஞ்சை நாயக்கர்கள் முன்பு படையெடுத்து வந்தவர்கள் ஆனாலும் பின்னாளில் 
தமிழர்கள்தான்.


யாழ்ப்பாண தமிழர்கள் பல்லவர்கள் 
வங்கத்தை கைப்பற்றிய பல்லவர்கள்தான் 
அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்தார்கள் 

அதன் தொடர்ச்சியாகவே பின்பு பாலி மொழி (சிங்களவர்களும்) 
வந்தார்கள்  

 

அவர் சொல்லும் சகலதையும் நான் எதிர்கவில்லை. நீட், இந்தி எதிர்பு, தமிழ் தேசிய மீட்சி, இப்படி பலதில் அவரின் கருத்துக்களை ஆதரிதே எழுதியுள்ளேன்.

இது கூட ஒரு கூட்டத்தில் அவர் போன போக்கில் சொன்ன விடயமே - அவரின் கைபுள்ளைகள்தான் அதை வேத வாக்காக எடுத்து, தமது கற்பனையையும் சேர்த்து புதிய புதிய கயிறுகளை விக்கிபீடியா உதவியோடு திரிக்கிறார்கள்.

இந்த கோமாளித்தனத்தை போட்டுடைக்கும், அம்பலப்படுத்தும் பதிவே இது. 

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ennada-innum-onnum-nadakalayaenu-pathen_

சிவ சிவா .. இந்திய நேரப்படி காலை 9:05 .. காலையிலேவா .. கொஞ்சம் கேப் கொடுக்கலாமல்லோ தோழர் .. 😢

🤣 தோழர் நான் படுக்கைக்கு போக முன்னம் போட்ட இடுகை அது. உங்க முழுவியளமே போச்சா 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பை வச்சே பலபேர் தமிழர் தெலுங்கர் தான் எண்டு முத்திரைக் குத்தப்போறாங்களே! ஆண்டவா! 😃😎

  • கருத்துக்கள உறவுகள்

#ஆறு கோடிக்கு மேல் மக்கள் தொகை....!!

#ஆண்களில் பாதி #மதுவிற்கு அடிமை....!!!

ஆண்களில் மீதி #திரையுலக போதைக்கு  அடிமை.....!!!

#பெண்களில் பாதி தொலைக்காட்சி நாடகத்திற்கு அடிமை....!!!

பெண்களில் மீதி  #பெருத்த ஊளசதைக்கு அடிமை.....!!!

#உடல் உழைப்பை வெறுத்து....!!!

#உட்கார்ந்த இடத்தை தேய்க்க....!!

#ஏட்டு சுரைக்காய் கல்வியை வியாபாரம் ஆக்கிய கல்வி கொள்கை(கொள்ளை)....!!!

#மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்....!!!

#மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம் ..... ! 

#மண்ணை விற்று....!!!
#மாடமாளிகை கட்டி....!!!
#வெட்டி விளம்பரம் தேட  ஒரு தற்பெருமை வாழ்வு ‌.....!!!

#உடலை வருத்தி உழைக்க ஆள் இன்றி....!!
#மாற்று மாநில இளைஞர்களை நம்பி பல தொழில்கள்....!!!

#சாதி அடிப்படையில் சலுகைகள் பல வழங்கி....!! 
#பொருளாரத்தில் பின்தங்கிய பலரது முன்னேற்ற கனவுகளை தகர்த்த ஒரு மானம் கெட்ட #சட்டம்.....!!!

மிரட்டி தின்ன அரசு அதிகாரிகள் என்ற பெயரில்  ஒரு கூட்டம்....!!

அவர்களிடம் பிடுங்கி தின்ன #அரசியலவாதிளின்  சுயநல ஆட்டம்....!!!

குமரி கண்டத்தை ஆண்ட என் #தமிழினம்.....!!!

தங்களின் #உரிமைக்கு போராடி
பாதி மேல்  மண்ணுக்கு உரமாக #இலங்கையில்....!!!

மீதி மானகெட்ட #திராவிட அரசியலுக்கு துதிபாடி தன் வாழ்வை தொலைத்த அடிமைகளாக #தமிழ்நாட்டில்....!!

இதுவே இன்றைய என் தமிழகத்தின் #நிலைமை....!!!

#இயலாமை.....!!

#முதுமை.....!!!!😓😓😓😓😓😓👎👎👎👎👎👎👎👎👎

#உழவை தொலைத்த  எந்த தேசமும் உயர்ந்த இடத்தை தொட்டதாக வரலாறு இல்லை என்பதற்கு நாளைய உதாரணமாக.......!!!!

 திராவிட கொள்ளையால் சீரழிக்கப்பட்ட என்  #தமிழகம்..!!!

... 😔

தனிமடலில் கிடைத்தது

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

வணக்கம்,

தலைப்பை கண்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருப்பீர்களே? எல்லாம் காரணமாய்தான். மேலும் படியுங்கள்.

ஒரு பொய்யை மீள மீள சொல்வதால் அது வரலாறு ஆகி விடாது. அப்படி ஒரு பொய் அண்மைகாலமாக யாழ் தளத்தில், சீமான் சொன்னதாக சில பாதி வெந்த விக்கிபீடியா-வரலாற்று-ஆய்வாளர்களால் முன் வைக்கப் படுகிறது.

அந்த பொய்தான் சில சிங்கள தலைவர்கள் தெலுங்கர்கள் என்பது. 

இந்த புனைவு - சீமானின் அரசியலுக்கு -அவரின் தெலுங்கர் எதிர்ப்பு அரசியலுக்கு தேவைபடுகிறது. தமிழரின் வரலாற்று வைரிகளான சிங்கள இனத்துடன் தெலுங்கு இனத்தையும் கோர்த்து விட்டால், தன் வேலை இலகு ஆகி விடும் என்ற கணிப்பில் இந்த புனைவு பரப்பபடுகிறது.

இவர்கள் நாயக்க எனும் சிங்கள பெயரை நாய்க்கர் எனும் தெலுங்கு சாதியுடன் சேர்த்து,  பண்டாரநாயக்க போன்ற பெயர்கள் தெலுங்கு பெயர்கள் என்கிறார்கள். அடுத்த கட்ட நகைசுவையாக அதுலத்முதலி முதலியார் இனம் என்ற புனைவு வேறு.

இவை அனைத்துமே வரலாற்று புனைவுகள். தெற்காசியா முழுவதுமே நாயக், நாயக்க, நாயகம் எனும் பெயர்கள் தலைவன் (hero/leader) என்பதை குறிக்க பல்வேறு இனக் குழுக்களில் பயன்படுகிறன. இவை அனைத்தும் சமஸ்கிருத சொல்லாகிய நாயக்க  எனும் சொல்லில் இருந்து வருகிறன.

சில உதாரணங்களை பார்ப்போம்.

குடும்ப பெயராக -நாயக்க

1.  Maharashtra - வில் இந்த பெயர் மராத்தியர், பிரபோ இன மக்கள், சித்பவ பிராமணர்கள் மற்றும் தேசந்த பிராமணர்களால் ஒரு குடும்ப பெயராக  பாவிக்கபடுகிறது.

2. Karnataka -வில் முஸ்லீம் சித்தீக்குகள்

3. தமிழ் நாட்டில் -வன்னியர் சாதி தமிழ் மக்கள்

4. Orissa -வில் பட்நாயிக் என்ற திரிபில் - நியோகி பிராமணர்கள்.

இவ்வாறு தெலுங்கு/நாயக்கர் சாதி தொடர்பே இல்லாத பல இன குழுக்கள் நாயக்க என்ற பெயரை குடும்ப பெயராக பாவிகின்றனர். 

பதவி பெயராக

1. மராட்டிய அரச படையில் இது ஒரு படை நிலை

2. சிங்களத்தில் இது ஒரு வார்த்தை. அரச தலைவரை “ராஜநாயக்க”, அணித்தலைவரை “கண்டாயமே நாயக்க”, இராணுவ தளபதியை “ஹமுதாவ நாயக்க” என்று அழைப்பார்கள். 

விளக்கம் 

மேலே சொன்னதன் அடிப்படையில் நாயக்க என்ற பெயரை வைத்து மட்டும் ஒருவரை தெலுங்கு வம்சாவளி என சொல்ல முடியாது.

குறிப்பாக இலங்கையில் பண்டார(எனும் குழுவின்) தலைவன் என்ற பொருளே பண்டார நாயக்கவுக்கு. அதே போலதான் அமர (தேவர்களின்) நாயக்க. சேன(சேனை)நாயக்க எல்லாமே.

ஆனால் நம் மக்களுக்கு எதையும் சொந்த வீட்டுக்குள் கொண்டு வந்து விளக்கினால்தானே புரியும்?

எனவே கீழே சில யாழ்பாண தமிழ் பெயர்களை தந்துள்ளேன். அத்தனை பேரும் தெலுங்கு வந்தேறிகளா இல்லையா என நம் பாதி வெந்த வரலாற்று புனைவாளர்கள் கூறட்டும்🤣

1. SJV செல்வ -நாயக்க(ம்)

2. வணபிதா தனி-நாயக்க(ம்) அடிகளார்

3. Handy பேரின்ப-நாயக்க(ம்)

4. புல-நாயக்க(ம்)

5. அருமை-நாயக்க(ம்)

6. ராச-நாயக்க(ம்)

7. வி-நாயக்க-மூர்த்தி

8. கருணை நாயக்க(ம்)

9.வேல்-நாயக்க(ம்)

இப்படி பல தெலுங்கு வந்தேறிகள் யாழ் மண்ணில் இருப்பது எமது பாதி வெந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு தெரியுமா ? 

ஐயகோ தமிழ் தேசியத்தின் தந்தையே ஒரு தெலுங்கு வந்தேறியா!!!

இதே போலவே முதலியார் என்பது இலங்கையில் போர்துகேயர் காலம் தொட்டு இருந்து வரும் ஒரு பதவிப்பெயர். முதலியார் மகேசன், கேட் முதலியார் ராசமாணிக்கம் இவற்றுள் சில.

இப்படி ஒரு நாட்டின், இனத்தின், பெயரீடின் வரலாறு பற்றிய பூரண விளக்கம் ஏதும் இன்றி விக்கிபீடியாவில் நுனிப்புல் மேயும் அரைவேக்காட்டு வரலாற்று ஆய்வாளர்களிடம் கவனமாய் இருங்கள் மக்களே -

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

இப்படி ஆதரமற்ற அறிவியல் பூர்பமற்ற கட்டுரைகளை யாழ் இணையம் வரவேற்கின்றாத? 

ஏன் என்றால் இப்படி பல இணைக்க ஏதுவாக இருக்கும்😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஆதாரமற்ற அபத்த பேச்சுக்களுகான எதிர்வினை🤣

கட்டுரையாளர், கட்டுரையின் முடிவில் தடித்த எழுத்தில் போட்டிருக்கும் செய்தியை மீள வாசிக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தத் தலைப்பை வச்சே பலபேர் தமிழர் தெலுங்கர் தான் எண்டு முத்திரைக் குத்தப்போறாங்களே! ஆண்டவா! 😃😎

இப்படிதானே இப்ப போய்கொண்டிருக்கிறது நமது “அறிவார்ந்த” பிள்ளைகளின் ஆராய்சி. 

சினிமா கதாசிரியர், டைரக்டர், நடிகரிடம் எமது வரலாற்றை படிக்க விழைந்தால் இப்படித்தான் ஆகும்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இப்படி ஆதரமற்ற அறிவியல் பூர்பமற்ற கட்டுரைகளை யாழ் இணையம் வரவேற்கின்றாத? 

ஏன் என்றால் இப்படி பல இணைக்க ஏதுவாக இருக்கும்😀

உடையார் ஜி,

நான் அங்கதமாக எழுதியதற்கே இப்படி கடுப்பாகிறீங்க. இன்னொரு திரியில் சீரியசாகவே கீழ் கண்ட வசனம் எழுத பட்டுள்ளது 

வரலாற்று சான்றுகள் இல்லாமல், பெயரை மட்டும் வைத்துக்கொண்டு செல்வநாயகம், தெலுங்கரா  என்றால்??? 

தெலுங்கராக அவரது மூதாதையினர்  இருந்திருக்கலாம். வரலாறு ஆம் என்று சொல்கிறது.

அவ்வளவுதான் மேட்டர்🤣

பாவம் செல்வா. இந்த இனத்தை கடவுள்தான் காப்பாற்றனும்னு சொன்னார். இப்ப அவரை காப்பாற்றவே ஆளில்லை 😂

 

நாளைய “ஆராய்சியின்” கருப்பொருள். பிரபாகரனின் தந்தையார் பெயர் திருவேங்கடம். வேங்கடம் என்றால் திருப்பதி. திருப்பதி இருப்பது ஆந்திராவில்.....

ஆவலோடு எதிர்பாருங்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

உடையார் ஜி,

நான் அங்கதமாக எழுதியதற்கே இப்படி கடுப்பாகிறீங்க. இன்னொரு திரியில் சீரியசாகவே கீழ் கண்ட வசனம் எழுத பட்டுள்ளது 

வரலாற்று சான்றுகள் இல்லாமல், பெயரை மட்டும் வைத்துக்கொண்டு செல்வநாயகம், தெலுங்கரா  என்றால்??? 

தெலுங்கராக அவரது மூதாதையினர்  இருந்திருக்கலாம். வரலாறு ஆம் என்று சொல்கிறது.

அவ்வளவுதான் மேட்டர்🤣

பாவம் செல்வா. இந்த இனத்தை கடவுள்தான் காப்பாற்றனும்னு சொன்னார். இப்ப அவரை காப்பாற்றவே ஆளில்லை 😂

 

நாளைய “ஆராய்சியின்” கருப்பொருள். பிரபாகரனின் தந்தையார் பெயர் திருவேங்கடம். வேங்கடம் என்றால் திருப்பதி. திருப்பதி இருப்பது ஆந்திராவில்.....

ஆவலோடு எதிர்பாருங்கள்🤣

முடியல கோஷன், இனி கொஞ்ச நாளுக்கு மாலை போடனும் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

முடியல கோஷன், இனி கொஞ்ச நாளுக்கு மாலை போடனும் 😂

மாலை=கேரளா= மலையாளி🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

மாலை=கேரளா= மலையாளி🤣

ரூம் போட்டு யோசிக்கிறாரோ🤔

நானும் எனார்ங்குள குட்டிக்குதான் ரூட் போட்டனான், அட இது தெரியாம போச்சே, இப்ப அங்கே சேச்சியோட செற்றில் ஆகியிருப்பேன், 

வடை போட்டுது😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இப்படிதானே இப்ப போய்கொண்டிருக்கிறது நமது “அறிவார்ந்த” பிள்ளைகளின் ஆராய்சி. 

சினிமா கதாசிரியர், டைரக்டர், நடிகரிடம் எமது வரலாற்றை படிக்க விழைந்தால் இப்படித்தான் ஆகும்🤣

நான் பல திரிகளில் எழுதியதுதான். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். மற்றவர்களின் அறிவை/கருத்துக்களை விமர்சிக்குமுன் உங்கள் அறிவு/தகுதிகளை கொஞ்சம் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு எழுதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

 

நாளைக்கு உங்களையும் இவர்கள் தமது மொக்கு தியரிகளை வைத்து தெலுங்கு வந்தேறிகள் என்பார்கள்.

 

நேற்றையில இருந்து பலாலி லோங் றேஞ் ஆட்டிலறி வந்து விழுந்து கொண்டே இருக்குது! பதில் சொல்ல வேண்டிய எல்லாரும் பங்கருக்குள்ள! (குழல் சூடாகாமப் பார்த்துக் கொள்ளுங்கப்பு! நீண்ட காலப் பாவனை முக்கியம்!😁)

கோசான் சீரியசாக: கொழும்பு பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் இலங்கையின் தமிழர், சிங்களவர், இந்தியாவின் சில மாநில மக்கள் என டி.என்.ஏயை ஆராய்ந்ததாக போன வருடம் கேள்விப் பட்டேன். முடிவு வெளி வந்து விட்டதா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

நான் பல திரிகளில் எழுதியதுதான். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். மற்றவர்களின் அறிவை/கருத்துக்களை விமர்சிக்குமுன் உங்கள் அறிவு/தகுதிகளை கொஞ்சம் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு எழுதவும்.

எல்லாம் சுய பரிசோதனை செய்துவிட்டுத்தான் எழுதுகிறேன் எ.பொ.த.

இது இன்னொருவர் அறிவை மட்டம்தட்டும் முயற்சி அல்ல. மாறாக ஒரு கருத்தை யாரோ ஒருவர் சொல்கிறார், அவர் நல்ல கவர்சியாக பேசுகிறார், அவர் நான் கேட்க விரும்புவதை பேசுகிறார், என்பதால் கேள்வி இல்லாமல் அவர் சொல்லும் சகலதையும் ஏற்று, விழுங்கி அதை இங்கே வந்து மீண்டும் மீண்டும் எழுதுவதால் ஏற்பட்ட, அறம் சார்ந்த கோபமே இது.

அறிவு கொண்டு சிந்தித்துருந்தால், பண்டாரநாயக்க தெலுங்கன் என்றால் அப்போ செல்வநாயகம் யார்? என்ற கேள்வி எழுந்திருக்குமா இல்லையா?

அடுத்தபடியாக அறிவை கொண்டு யோசித்தால்  செல்வநாயகமும் தெலுங்கன் என்றால்- சிங்களவன் சொல்வது போல் நாம் வந்தேறிகள் என்பதை நாமே ஏற்று கொள்கிறோம் என்று ஆகிவிடும் என்பது விளங்கி இருக்குமா இல்லையா?

இன்னும் கொஞ்சம் அறிவை கொண்டு யோசித்தால் - பெரியாரை, கருணாநிதியை தமிழர் இல்லை என்பதற்கு சீமான் பாவிக்கும் அதே அளவிடை, செல்வநாயகத்துக்கும் ஒவ்வொரு யாழ்பாணத்தமிழனுக்கும் பொருந்தும் என்ற உண்மை விளங்கும் அல்லவா?

இந்த உண்மை விளங்கினால், இதன் ஆபத்து புரிந்தால் பண்டாரநாயக்க தெலுங்கன் என்று ஏன் சொல்லகூடாது என்பது புரியுமா இல்லையா?

இப்போதே பாராதியார் கூட “சிங்கள தீவு” என்றார் எனவே நீங்கள் வந்தேறிகள் என்கிறார்கள். வெள்ளைகளை கூப்பிட்டு தமிழர் தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய வந்தவர்கள் என்கிறார்கள். நாளைகே “சீமானே சொல்லீட்டார், நீங்கள் எல்லாம் கொல்டியாம்,  ஆந்திரா போங்கள், ஜருகண்டி, ஜருகண்டி” என்பார்கள்.

இந்த சொந்த செலவுச் சூனியம் தேவைதானா? 

3 minutes ago, Justin said:

நேற்றையில இருந்து பலாலி லோங் றேஞ் ஆட்டிலறி வந்து விழுந்து கொண்டே இருக்குது! பதில் சொல்ல வேண்டிய எல்லாரும் பங்கருக்குள்ள! (குழல் சூடாகாமப் பார்த்துக் கொள்ளுங்கப்பு! நீண்ட காலப் பாவனை முக்கியம்!😁)

கோசான் சீரியசாக: கொழும்பு பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் இலங்கையின் தமிழர், சிங்களவர், இந்தியாவின் சில மாநில மக்கள் என டி.என்.ஏயை ஆராய்ந்ததாக போன வருடம் கேள்விப் பட்டேன். முடிவு வெளி வந்து விட்டதா? 

😂

ஓம் வந்துவிட்டது. கிராப் எல்லாம் போட்டு மனுசன் பிச்சி எடுத்திருக்கு. எனக்கு சிலது விளங்கியது, பலது விளங்கவில்லை. தேடி எடுத்து பதிகிறேன்.

நீங்களோ அல்லது வேறு யாருமோ தரவுகளை என் போன்ற சாமன்யரும் விளங்கும் படி விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

நேற்றையில இருந்து பலாலி லோங் றேஞ் ஆட்டிலறி வந்து விழுந்து கொண்டே இருக்குது! பதில் சொல்ல வேண்டிய எல்லாரும் பங்கருக்குள்ள! (குழல் சூடாகாமப் பார்த்துக் கொள்ளுங்கப்பு! நீண்ட காலப் பாவனை முக்கியம்!😁)

கோசான் சீரியசாக: கொழும்பு பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் இலங்கையின் தமிழர், சிங்களவர், இந்தியாவின் சில மாநில மக்கள் என டி.என்.ஏயை ஆராய்ந்ததாக போன வருடம் கேள்விப் பட்டேன். முடிவு வெளி வந்து விட்டதா? 

நீங்கள் கேட்ட ஆராய்சியின் முடிவு 

https://www.nature.com/articles/jhg2013112?fbclid=IwAR3yK-L21mKb1HzFoK27xtyDDCfSAKxk1UgP66EfrSeMcyXnmqzzAsA9kPw 

பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘ஹிட்லர் உமாநாத்’ என்ற படத்தில் ஒரு வில்லுப்பாட்டு காட்சி வரும். அதில் சுருளி சொல்வதற்கெல்லாம்  எல்லோரும் ஆமா என்று ஜால்ரா போட ஒருவர் மட்டும் கொஞ்சம் அறிவு பூர்வமாக கேள்வி கேட்பார். அப்போது சுருளி அவரைப் பார த்து பின்வருமாறு  கூறுவார். 

“ நான் எவ்வளவு கஷ்ரப பட்டு நாலு முட்டாள சேர்தது ஒரு கச்சேரி வைக்க ட்ரை பண்ணுறன்.  இவன் கொஞ்சம் படிச்சிட்டு வந்து எல்லாதையும் கெடுத்துடுவான் போல இருக்கு அடுத்த கச்சேரிக்கு நீ வரவேண்டாம்”. 

கோசான் உங்கள் கேள்விகளை  அந்த ‘அவர்’ (சுருளி என்றே வைப்போமே) பார்த்தால் இவ்வாறுதான் கூறுவார் 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நீங்கள் கேட்ட ஆராய்சியின் முடிவு 

https://www.nature.com/articles/jhg2013112?fbclid=IwAR3yK-L21mKb1HzFoK27xtyDDCfSAKxk1UgP66EfrSeMcyXnmqzzAsA9kPw 

அட இது 2014 இலேயே வந்து விட்டதே? சிங்களவரும் தமிழரும் ஏன் இதைப் பற்றி கம்மென்றிருக்கீனம் என்று விளங்குது. இது சுருக்கமான விளக்கம், விரிவாக பின்னர் எழுதுகிறேன்:

இலங்கையின் 271 பேரின் டி.என்.ஏ (வேடுவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், சிங்களவர்) யை பரிசோதித்து இந்தியாவின் அதே தரமுடைய டி.என்.ஏ தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்.

1. வேடுவர் தனித்துவமாகத் தெரிகின்றனர்.

2. வேடுவரின் டி.என்.ஏ யுடன் இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்கும் , இந்தியத் தமிழரை விட அதிக தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.

3. முடிவாக, வேடுவர் தனித்துவமான குழுவாக தெரிகின்றனர். தமிழரும் சிங்களவரும் இந்திய துணைக்கண்ட டி.என்.ஏயோடு அதிக தொடர்பு காட்டுகின்றனர். 

( Journal of Human Genetics நேச்சர் குடும்ப Journal: Impact factor  2.8, சுமார் தான் என்றாலும் போலி விஞ்ஞான சஞ்சிகை அல்ல! தரமான பேப்பர் தான் இது!) 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

அட இது 2014 இலேயே வந்து விட்டதே? சிங்களவரும் தமிழரும் ஏன் இதைப் பற்றி கம்மென்றிருக்கீனம் என்று விளங்குது. இது சுருக்கமான விளக்கம், விரிவாக பின்னர் எழுதுகிறேன்:

இலங்கையின் 271 பேரின் டி.என்.ஏ (வேடுவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், சிங்களவர்) யை பரிசோதித்து இந்தியாவின் அதே தரமுடைய டி.என்.ஏ தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்.

1. வேடுவர் தனித்துவமாகத் தெரிகின்றனர்.

2. வேடுவரின் டி.என்.ஏ யுடன் இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்கும் , இந்தியத் தமிழரை விட அதிக தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.

3. முடிவாக, வேடுவர் தனித்துவமான குழுவாக தெரிகின்றனர். தமிழரும் சிங்களவரும் இந்திய துணைக்கண்ட டி.என்.ஏயோடு அதிக தொடர்பு காட்டுகின்றனர். 

( Journal of Human Genetics நேச்சர் குடும்ப Journal: Impact factor  2.8, சுமார் தான் என்றாலும் போலி விஞ்ஞான சஞ்சிகை அல்ல! தரமான பேப்பர் தான் இது!) 
 

நன்றி அண்ணா,

நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிய அண்மைய ஆராய்சி இதுதான் என்று🤦‍♂️.

எனக்கு வாசித்து விளங்கிய மட்டிலும் நீங்கள் மேலே சொன்ன முடிவுக்கே நானும் வந்தேன்.

நேரம் கிடைக்கும் போது தரவுகளை மேலும் விளக்கி எழுதினால் நல்லாய் இருக்கும்.

அட்வான்ஸ் நன்றி🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கு வந்தேறிகள் என்று பெயர்களை வைச்சு அடிச்சுவிடும் இந்தத் திரி நகைச்சுவைப் பக்கம் இருக்கவேண்டும். 😁 

யாழ்ப்பாணிகள் சேரவம்சத்தைச் சேர்ந்த மலையாளிகளாகத்தான் இருக்கவேண்டும். 😂🤣

தமிழர்களும் தமிழ் மொழியும் இந்தப் பூமியில் தோன்றிய முதல் மனிதர்கள், முதல் மொழி என்று வேர்ச்சொற்களை வைத்து ஒருவர் ஆராய்ச்சி செய்து யாழில் இணைக்கின்றார். அதுமாதிரி கோஷானும் சதிக்கோட்பாட்டு ஆராய்ச்சி செய்கின்றார்! 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

தெலுங்கு வந்தேறிகள் என்று பெயர்களை வைச்சு அடிச்சுவிடும் இந்தத் திரி நகைச்சுவைப் பக்கம் இருக்கவேண்டும். 😁 

யாழ்ப்பாணிகள் சேரவம்சத்தைச் சேர்ந்த மலையாளிகளாகத்தான் இருக்கவேண்டும். 😂🤣

தமிழர்களும் தமிழ் மொழியும் இந்தப் பூமியில் தோன்றிய முதல் மனிதர்கள், முதல் மொழி என்று வேர்ச்சொற்களை வைத்து ஒருவர் ஆராய்ச்சி செய்து யாழில் இணைக்கின்றார். அதுமாதிரி கோஷானும் சதிக்கோட்பாட்டு ஆராய்ச்சி செய்கின்றார்! 

 

அட, இது சிரிக்க சிறக்கவில் இல்லையா?🤔 இப்ப தான் கவனித்தேன் எங்கள் மண்ணில் இருக்கிறதென்று. இது ஆபத்தானது, யாராவது வெட்டி ஒட்டும் ஊடகங்கள் இதை சீரியஸாக எடுத்து முகநூலில் மிதக்க விட்டு விடுவர்! 

ஆனால், வந்த பதில்களும் சிரிப்பாகத் தான் இருக்கு! "குமரிக்கண்டம் ஆண்ட இனம்" என்று விசுகர் தந்த பட்டியலில் இருக்கிறது. யப்பா, குமரிக்கண்டமே கற்பனையாக இருக்கையில் அதை ஆண்டவன் தமிழன் என்று சொல்லி ஏன் சொந்த செலவில் சூனியம் வைக்கிறீங்கள்? இதைக்கேட்டால் அதி மேதாவி, அறிவாளியென்று நக்கல் வேற அடிப்பார்கள்! இப்பவெல்லாம் அது இல்லாமல் இருந்தால் தான் "தெனாவெட்டா" நிக்க முடியுது. அறிவு இருந்தால் நாணி கோணி நிலம் நோக்கி நடக்க வேணும் போல இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

அட, இது சிரிக்க சிறக்கவில் இல்லையா?🤔 இப்ப தான் கவனித்தேன் எங்கள் மண்ணில் இருக்கிறதென்று. இது ஆபத்தானது, யாராவது வெட்டி ஒட்டும் ஊடகங்கள் இதை சீரியஸாக எடுத்து முகநூலில் மிதக்க விட்டு விடுவர்! 

கோஷான் யாவும் கற்பனைக்கு பதிலாக எழுதப்பட்ட கற்பனை என்றாவது போட்டுவிடலாமே 😝😝😝

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

! "குமரிக்கண்டம் ஆண்ட இனம்"

அட்லாண்டிஸ் என்று கடலுக்குள் மறைந்திருக்கும் கண்டம்தான் லெமூரியக் கண்டம் என்றுன் குமரிக் கண்டம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஏழாம் அறிவு படைத்த ஏழு அடி உயரத்திற்கும் மேலான ரெலிபதி மூலம் பேசும்  ஆணும், பெண்ணும் ஒரே உடலான அர்த்தநாரீஸ்வரன் தொல் தமிழன் லெமூரியன். தொல்தமிழன் லெமூரியன் வம்சத்தினன்! கண்டம் மறைய ரெலிபதியும் போய் அவர்கள் பேசிய மொழி தமிழ். அவர்களில் இருந்து தோன்றியதுதான் இந்த மானிடகுலமும் மற்றைய மொழிகளும். எனவே தெலுங்கும், சமஸ்கிரதமும், ஏன் உலகத்து மொழி அனைத்துக்கும் தாய்மொழி தமிழ்!

எனது கனடா நண்பர் “கண்டம்” என்று ஒரு படம் தயாரித்து யாழ்பாணத்தில் எல்லாம் போய் ஷூட்டிங் செய்து எடுத்தார். அதுவும் இந்த குமரிக் கண்டம் பற்றித்தான். படத்தின் இலண்டனில் premiere show க்கு தயாரிப்பாளர் நண்பருடனும் இயக்குநருடனும் ஒரு கிழமைக்கு மேலாக அலைந்து ரிக்கெற்றுகளும் விற்றுக்கொடுத்தேன்😉

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.