Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 20:08, விசுகு said:

 

இது பற்றி  எழுதுவதானால் பெரிய  புத்தகமாகிவிடும்

எனக்கொரு  கனவு  உண்டு

தூர நோக்கோடான பாதையது

அப்பாவித்தனம்  என உங்களுக்கு  படுமளவுக்கு  கூட  சில  பொறுப்புக்களிலிருந்தவன்  என்ற ரீதியில் இப்படியான பொறுப்பும் கனமும் வந்து  விட்டது

ஆனால் யாழில் நான்  நிற்கின்ற  நேர்கோட்டில் எவரும் நின்றதில்லை  என்கின்ற அளவுக்கு 

தலைவரை, மாவீரரை, புலிகளை, அதன் செயற்பாட்டாளர்களை தொட்டவரை தூக்கி எறிய பின்னின்றதில்லை.

இதுவும் கடந்து போகும் ரகு...

நாம் கண்டவை சந்தித்தவை குறுக்காலபோனவை  என்பதுடன்  ஒப்பிட்டால்

இதெல்லாம் வெறும்?????

தூர நோக்கு என நினைத்து ஒர் கோடு வரைந்து அந்த கோட்டை தாண்ட முடியாமல் நிற்கிறீர்க்ள் காலம் பதில் சொல்லும் அப்போது ஒரு துளி புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதில் நானும் துரோகி ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை .

14 hours ago, Robinson cruso said:

அப்பொழுது வந்த தீர்வுக்குரிய அளவுக்கு எந்த ஒரு தீர்வும் இனி கிடைக்கப்போவதில்லை. இப்போதிருக்கும் 13 மைனஸை காப்பாற்றினாலே பெரிய காரியம். கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும். இல்லாவிடடாள் இருப்பதையும் இழக்க நேரிடும்.

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

  • Replies 133
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தூர நோக்கு என நினைத்து ஒர் கோடு வரைந்து அந்த கோட்டை தாண்ட முடியாமல் நிற்கிறீர்க்ள் காலம் பதில் சொல்லும் அப்போது ஒரு துளி புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதில் நானும் துரோகி ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை .

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

உங்களது  பல  கேள்விகளுக்கும் 

நீங்கள்  எழுதிய  பல  பதில்களுக்குமான  விளக்கத்தை  நீங்களே  கொடுத்துள்ளீர்கள்

அப்புறம்  புலிகள் அதை  பெற்றிருக்கலாம்  இதை  ஏற்றிருக்கலாம் என்கிறீர்கள்

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

உங்களது  பல  கேள்விகளுக்கும் 

நீங்கள்  எழுதிய  பல  பதில்களுக்குமான  விளக்கத்தை  நீங்களே  கொடுத்துள்ளீர்கள்

அப்புறம்  புலிகள் அதை  பெற்றிருக்கலாம்  இதை  ஏற்றிருக்கலாம் என்கிறீர்கள்

அப்படி எதுவும் கிடைக்காது இலங்கை அரசிடம் அரசின் நிகழ்ச்சி நிரல் வேற சொன்னால் புரியாது அதுக்கும் கேள்விகள் கேட்பீர்கள் 

நான் சொன்னது அவர்கள் தருகிறோம் என்று சொன்னதை அண்ண அதை நீங்களும் புரிந்து கொள்ளவில்லை அந்த மேடையில் இருந்தவர் (பேச்சு மேடையில்) இன்று வரை ஊருக்கு வர முடியாமல் தன் குழந்தைகளை பார்க்க வராமல் மத்திய கிழக்கில் உருகிறார். 

இன்று வெளிநாடுகளில் பாரிய எடுப்பில் மாவீரர் நிகழ்வுகளும் ,கொண்ட்டாட்டங்களா நடைபெறுகிறது மாவீரர் கனவு என்பது அம்மக்கள் அடக்கு முறை இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற நினைப்பு இன்று கொண்டாடுபவர்கள் ஒரு குடும்பத்தை எடுத்து ஒரு வீட்டை கட்டிக்கொடுத்தாலாவது அவர்கள் கண்ட கனவில் கொஞ்சம் நிறைவேறினதாகவும் இருக்கும் . இதை சிலரால் நக்கலாக பார்க்க முடியும் வீடு கொடுத்தால் பிரச்சினை முடிந்துவிடுமா வீட்டிலிருந்தாவது பல பிரச்ச்னைகளை எதிர் நோக்கலாம் இடம் கூட வீடாக இருந்தால் கபளீகரம் செய்யப்படும் நிலமாவது பாதுக்காக்கப்பட்டு வரும் 

இந்த கேள்விகளை கேட்பவர்கள் பக்காவா பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டு நலமாக வாழ்ந்துவிட்டு போகிறவர்கள் . இவர்களால் கேள்விகள் கேட்டுவிட்டு மட்டுமே நகரலாம் . அள்ளிக்கொடுப்பார்கள் நாளைக்கு சிலர் நினைப்பது போராட்டம் ஆரம்பிக்கிறது ஒரு பிள்ள்யை அனுப்புங்கள் என்றால் ?? வெற்றி திலகமிட்டு போருக்கு போய் வாருங்கள் என்று சொல்லமாட்டார்கள் போர் என்றால் அதன் வலிகள் சுமந்த ஆட் களிடம் சொல்ல தேவையில்லை என நான் நினைக்கிறன் கொஞ்சம் யோசிப்பார்கள். இதுதான் உன்மை  இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? இல்லையா ??

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் சொன்னது அவர்கள் தருகிறோம் என்று சொன்னதை அண்ண அதை நீங்களும் புரிந்து கொள்ளவில்லை அந்த மேடையில் இருந்தவர் (பேச்சு மேடையில்) இன்று வரை ஊருக்கு வர முடியாமல் தன் குழந்தைகளை பார்க்க வராமல் மத்திய கிழக்கில் உருகிறார். 

இன்று வெளிநாடுகளில் பாரிய எடுப்பில் மாவீரர் நிகழ்வுகளும் ,கொண்ட்டாட்டங்களா நடைபெறுகிறது மாவீரர் கனவு என்பது அம்மக்கள் அடக்கு முறை இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழவேண்டும் என்ற நினைப்பு இன்று கொண்டாடுபவர்கள் ஒரு குடும்பத்தை எடுத்து ஒரு வீட்டை கட்டிக்கொடுத்தாலாவது அவர்கள் கண்ட கனவில் கொஞ்சம் நிறைவேறினதாகவும் இருக்கும் . இதை சிலரால் நக்கலாக பார்க்க முடியும் வீடு கொடுத்தால் பிரச்சினை முடிந்துவிடுமா வீட்டிலிருந்தாவது பல பிரச்ச்னைகளை எதிர் நோக்கலாம் இடம் கூட வீடாக இருந்தால் கபளீகரம் செய்யப்படும் நிலமாவது பாதுக்காக்கப்பட்டு வரும் 

இந்த கேள்விகளை கேட்பவர்கள் பக்காவா பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டு நலமாக வாழ்ந்துவிட்டு போகிறவர்கள் . இவர்களால் கேள்விகள் கேட்டுவிட்டு மட்டுமே நகரலாம் . அள்ளிக்கொடுப்பார்கள் நாளைக்கு சிலர் நினைப்பது போராட்டம் ஆரம்பிக்கிறது ஒரு பிள்ள்யை அனுப்புங்கள் என்றால் ?? வெற்றி திலகமிட்டு போருக்கு போய் வாருங்கள் என்று சொல்லமாட்டார்கள் போர் என்றால் அதன் வலிகள் சுமந்த ஆட் களிடம் சொல்ல தேவையில்லை என நான் நினைக்கிறன் கொஞ்சம் யோசிப்பார்கள். இதுதான் உன்மை  இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? இல்லையா ??

 

அவர்கள் தருகின்றோம்  என்று  எதையும்  முன்  வைத்ததில்லை

புலிகள்  பலமுறை  கேட்டார்கள்

நாங்கள்  கேட்டதை தரமறுக்கிறீர்கள்

எனவே உங்களால்  தரமுடிந்ததை  முன் வையுங்கள்  என்று

அப்படி  ஒருபோதும் நடந்ததில்லை

உங்களுக்கு யாரோ  தவறான  தகவல்களை  தருகிறார்கள்

அவதானமாக  இருங்கள்

கவனமாக இருங்கள  (எல்லை  மீறி எழுதவேண்டாம்)

உங்களது  பாதுகாப்பு  முக்கியம்  தம்பி

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

 

அவர்கள் தருகின்றோம்  என்று  எதையும்  முன்  வைத்ததில்லை

புலிகள்  பலமுறை  கேட்டார்கள்

நாங்கள்  கேட்டதை தரமறுக்கிறீர்கள்

எனவே உங்களால்  தரமுடிந்ததை  முன் வையுங்கள்  என்று

அப்படி  ஒருபோதும் நடந்ததில்லை

உங்களுக்கு யாரோ  தவறான  தகவல்களை  தருகிறார்கள்

அவதானமாக  இருங்கள்

கவனமாக இருங்கள  (எல்லை  மீறி எழுதவேண்டாம்)

உங்களது  பாதுகாப்பு  முக்கியம்  தம்பி

நன்றி

இந்தக் கருத்து சரியானதாகத் தெரியவில்லை விசுகர்! சிங்கள அரசு வெள்ளித் தட்டில் வைத்து நீட்டவில்லை. ஆனால்  1987 இல் இந்தியாவும், பின்னர் 2002- 2004 இல் கூட்டுத் தலைமைகளும் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

இந்தக் கருத்து சரியானதாகத் தெரியவில்லை விசுகர்! சிங்கள அரசு வெள்ளித் தட்டில் வைத்து நீட்டவில்லை. ஆனால்  1987 இல் இந்தியாவும், பின்னர் 2002- 2004 இல் கூட்டுத் தலைமைகளும் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்தது உங்களுக்குத் தெரியாதா?

இரண்டு  தீர்வையும்  புலிகள்  

நடைமுறைப்படுத்த சொன்னார்கள்

பொறப்பெடுக்கச்சொன்னார்கள்

ஆனால் .....???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இரண்டு  தீர்வையும்  புலிகள்  

நடைமுறைப்படுத்த சொன்னார்கள்

பொறப்பெடுக்கச்சொன்னார்கள்

ஆனால் .....???

விசுகர், வரலாற்று நிகழ்வுகளை புலிகளின் ஆதரவாளர் என்ற நிலையை மறந்து விட்டுப் பாருங்கள்:

1. இந்தியாவின் மாகாணசபை தீர்வை புலிகள் பொறுப்பெடுக்கச் சொன்னார்களா? யாரைக் கேட்டார்கள்? ஏன் அமிர் கொல்லப் பட்டார்? ஏன் அதை ஏற்றுக் கொண்டோர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டி வந்தது?

2. 2002 இல் ஆரம்பித்த சமாதான நடவடிக்கை எங்கே பிசகியது? "அமெரிக்காவிற்கு அழைக்காததால், ஜப்பானுக்கும் போக மாட்டோம்" என்ற அர்த்தமேயற்ற பிடிவாதம் தானே பேச்சு வார்த்தையை இடை நிறுத்தியது? ரணிலைப் பழிவாங்க உங்கள் மொழியில் "ராசதந்திரமாக" ராஜபக்ஷவை தேர்வு செய்ய வழி செய்தது யார்? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

விசுகர், வரலாற்று நிகழ்வுகளை புலிகளின் ஆதரவாளர் என்ற நிலையை மறந்து விட்டுப் பாருங்கள்:

1. இந்தியாவின் மாகாணசபை தீர்வை புலிகள் பொறுப்பெடுக்கச் சொன்னார்களா? யாரைக் கேட்டார்கள்? ஏன் அமிர் கொல்லப் பட்டார்? ஏன் அதை ஏற்றுக் கொண்டோர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டி வந்தது?

2. 2002 இல் ஆரம்பித்த சமாதான நடவடிக்கை எங்கே பிசகியது? "அமெரிக்காவிற்கு அழைக்காததால், ஜப்பானுக்கும் போக மாட்டோம்" என்ற அர்த்தமேயற்ற பிடிவாதம் தானே பேச்சு வார்த்தையை இடை நிறுத்தியது? ரணிலைப் பழிவாங்க உங்கள் மொழியில் "ராசதந்திரமாக" ராஜபக்ஷவை தேர்வு செய்ய வழி செய்தது யார்? 

1- ஒப்பந்தத்தின் பின்னரான பிரபாகரனின் பேச்சை மீண்டும் கேளுங்கள்

2 -   சமாதானப்பேச்சில் அங்கம் வகித்து பேச்சுவார்த்தையிலுள்ள இரு  தரப்பில்  ஒரு தரப்பை களட்டிவிட்டு அமெரிக்காவில்  பேச்சு நடாத்துவது அர்த்தமற்றதில்லையா???

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

1- ஒப்பந்தத்தின் பின்னரான பிரபாகரனின் பேச்சை மீண்டும் கேளுங்கள்

2 -   சமாதானப்பேச்சில் அங்கம் வகித்து பேச்சுவார்த்தையிலுள்ள இரு  தரப்பில்  ஒரு தரப்பை களட்டிவிட்டு அமெரிக்காவில்  பேச்சு நடாத்துவது அர்த்தமற்றதில்லையா???

சுதுமலைப் பேச்சு? ஆம். ஆனால் அதிலேயே தானே ஒப்பந்தம் மீதான நம்பிக்கையீனமும் வெளிப்பட்டது? பின்னர் அதை சிங்களவன் கையிலெடுத்துக் கொண்டு செய்தவை வரலாறு. இதை முதலே எதிர்வு கூறமுடியாமல் புலிகளின் தலைமை இருந்தது பெரிய விடயம். இந்தியாவை எம் பக்கம் வைத்திருந்திருக்க வேண்டும். அதற்காக அந்த தளபதிகள் கைது, மரணத்தோடு முடியாமல் கையாண்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து   

அமெரிக்காவில் பயங்கரவாதப் பட்டியலில் இருப்போருக்கு அமெரிக்க விசா கிடைக்காது. இதற்காக அமெரிக்கா தடையை நீக்கியிருக்க வேண்டுமென்கிறீர்களா? இது தெரியாமல் என்ன சர்வதேச அரசியல், ஆலோசனை பாலசிங்கத்தார் கொடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை எனக்கு. என்ன இருந்தாலும், சிறிலங்கா உலகத்தின் பார்வையில் அரச தரப்பு, புலிகள் தடை செய்யப் பட்ட அமைப்பு. ஒரு நீண்டகாலத் தீர்வுக்காக இந்த "பெருமையை" பொக்கற்றுக்குள் போட்டு விட்டு ஜப்பானுக்கு போயிருந்தால், மாவிலாறு இன்று பேசப்பட்டுக் கொண்டிருக்காது!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சுதுமலைப் பேச்சு? ஆம். ஆனால் அதிலேயே தானே ஒப்பந்தம் மீதான நம்பிக்கையீனமும் வெளிப்பட்டது? பின்னர் அதை சிங்களவன் கையிலெடுத்துக் கொண்டு செய்தவை வரலாறு. இதை முதலே எதிர்வு கூறமுடியாமல் புலிகளின் தலைமை இருந்தது பெரிய விடயம். இந்தியாவை எம் பக்கம் வைத்திருந்திருக்க வேண்டும். அதற்காக அந்த தளபதிகள் கைது, மரணத்தோடு முடியாமல் கையாண்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து   

அமெரிக்காவில் பயங்கரவாதப் பட்டியலில் இருப்போருக்கு அமெரிக்க விசா கிடைக்காது. இதற்காக அமெரிக்கா தடையை நீக்கியிருக்க வேண்டுமென்கிறீர்களா? இது தெரியாமல் என்ன சர்வதேச அரசியல், ஆலோசனை பாலசிங்கத்தார் கொடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை எனக்கு. என்ன இருந்தாலும், சிறிலங்கா உலகத்தின் பார்வையில் அரச தரப்பு, புலிகள் தடை செய்யப் பட்ட அமைப்பு. ஒரு நீண்டகாலத் தீர்வுக்காக இந்த "பெருமையை" பொக்கற்றுக்குள் போட்டு விட்டு ஜப்பானுக்கு போயிருந்தால், மாவிலாறு இன்று பேசப்பட்டுக் கொண்டிருக்காது!  

 

வரலாறு எம்மோடு  தான் நடந்தது

சமஷ்டித்தீர்வை வையுங்கள்  பரிசீலிக்க  தயபராக  இருக்கின்றோம்  என  புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில்  மேல்கள் குறுக்கும்  மறுக்குமாக  ஓடித்திரிந்ததை  பார்த்தவர்  நாம்.

தோல்வியை  வைத்துக்கொண்டு  அப்படி  இப்படி செய்திருக்கலாம்  என  சாத்திரம்  எழுதுவதும் களத்தில்  நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

அவர் 2004 ஆம்  ஆண்டில் நடந்த தேர்தலில் மட்டும்தான் தேசியப்பட்டியலில் சென்றார் அதற்கு முன்பெல்லாம் தெரிவுசெய்யப்பட்டே சென்றார்! வரலாற்றை உங்களுக்கேற்றவாறு மாற்றமுடியாது ரதி!

எபோத, அவர் அதற்கு முந்தைய தேர்தல்களில் வென்று அங்குள்ள மக்களுக்கு ஒன்றும் வெட்டி முறிக்காத படியால் தான் கடைசி இலக்சனில் மக்களால் தோக்கடிப்பட்டு தேசிய பட்டியல் மூலம் வந்தார்.
அவரது கொலையை நியாயப்படுத்தவில்லை. ஆனால் அவரை விட திறமையான மக்களுக்கு சேவை கூடியவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட போது அது பத்தோடு ,பதினொன்றாய் போய் விட்டது.
நிமலன் ,செழியன் போன்ற ஆளுமையுள்ளவர்களை கொலை செய்து விட்டு தற்போது உள்ள அப்புகாத்தாக்கள் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று புலம்பித் திரிகிறோம்  

6 hours ago, MEERA said:

நிமலன் உடன் இன்னொருவர் தேர்தவு செய்யப்பட்டிருந்தாரே... அந்த மற்றவர் யார்?

 

மன்னிக்கவும் எனக்கு நினைவில் இல்லை .
 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்? நாடாளுமன்றில் நீதியமைச்சர்

November 28, 2020

சமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிற்கு நீதியமைச்சர் பதிலளித்துள்ளார்.

pillayan-4-300x256.jpeg
 

சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை உண்மையை கண்டறியுமாறும்,நியாயமற்ற விமர்சனங்கள் மூலம சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

https://thinakkural.lk/article/93577

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

வரலாறு எம்மோடு  தான் நடந்தது

சமஷ்டித்தீர்வை வையுங்கள்  பரிசீலிக்க  தயபராக  இருக்கின்றோம்  என  புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில்  மேல்கள் குறுக்கும்  மறுக்குமாக  ஓடித்திரிந்ததை  பார்த்தவர்  நாம்.

தோல்வியை  வைத்துக்கொண்டு  அப்படி  இப்படி செய்திருக்கலாம்  என  சாத்திரம்  எழுதுவதும் களத்தில்  நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்

நன்றி

இது சாத்திரம் என்பதை விட அந்தக் காலப்பகுதியில் உலக நிலைவரத்தின் பால் பட்ட சாத்தியப் பாடுகள் என்பது வரலாற்றை அறிந்தோருக்கு விளங்கும்!

களத்தின் நிலைமையை எதிர்காலத் தீர்வோடு ஒட்ட வைக்கத் தான் இரண்டு ஆண்டுகள் படிப்படியாக பேச்சு வார்த்தை நடந்தது. என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை! இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது! எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன. 

"would have, should have" என்பதை யாரும் சொல்ல முடியும், சொல்ல உரிமை இருக்கிறது! வீண்பெருமையுணர்வால் எங்கள் எடைக்கு அதிகமாக குத்த முனைந்து தமிழர் தரப்பு தோற்றது என்பது என் கருத்து! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மன்னிக்கவும் எனக்கு நினைவில் இல்லை .
 

திரு.ஜோசப் பரராஜசிங்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை! இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது! எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன. 

இரு பகுதிக்கும் அக்கறையில்லை என்பது  பற்றி ஆணித்தரமாக எதுவுமே கூறமுடியாது.இந்தியா என்கிற பின் (ப)புலத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா.

சரி. 

இரு பகுதிக்கும் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது உண்மையானால்......
ஏன் இன்று பல மாற்றுக்கருத்தாளர்கள் புலிகள் தான் பேச்சுவார்த்தையை குழப்பினார்கள் என பல இடங்களில் கூறிவருகின்றார்கள். இது யாழ்களத்திலும் நடக்கின்றது. புலிகளை மட்டும் குறை கூறுகின்றார்கள்.

மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிங்களத்தை குறை கூறியதை நான் எந்த இடத்திலும் பார்க்கைவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இரு பகுதிக்கும் அக்கறையில்லை என்பது  பற்றி ஆணித்தரமாக எதுவுமே கூறமுடியாது.இந்தியா என்கிற பின் (ப)புலத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா.

சரி. 

இரு பகுதிக்கும் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது உண்மையானால்......
ஏன் இன்று பல மாற்றுக்கருத்தாளர்கள் புலிகள் தான் பேச்சுவார்த்தையை குழப்பினார்கள் என பல இடங்களில் கூறிவருகின்றார்கள். இது யாழ்களத்திலும் நடக்கின்றது. புலிகளை மட்டும் குறை கூறுகின்றார்கள்.

மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிங்களத்தை குறை கூறியதை நான் எந்த இடத்திலும் பார்க்கைவில்லை.

அண்ணை, இங்கே சிங்களவன் குழப்பவேயில்லை, நேர்மை என்று யாரும் எழுதியதாக நான் காணவில்லை! 

புலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், "சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன. 

மேலும், யாழில் சிங்களவரையும் சிறிலங்காவையும் நாம் மாறி மாறித் திட்டி என்ன ஆகப் போகிறது? நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும்! சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன்? எதை யாழ் உறவுகள் புதிதாக கற்றுக் கொள்ளப் போகின்றன இந்த முதுகு சொறிதலில் இருந்து?  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இது சாத்திரம் என்பதை விட அந்தக் காலப்பகுதியில் உலக நிலைவரத்தின் பால் பட்ட சாத்தியப் பாடுகள் என்பது வரலாற்றை அறிந்தோருக்கு விளங்கும்!

களத்தின் நிலைமையை எதிர்காலத் தீர்வோடு ஒட்ட வைக்கத் தான் இரண்டு ஆண்டுகள் படிப்படியாக பேச்சு வார்த்தை நடந்தது. என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை! இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது! எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன. 

"would have, should have" என்பதை யாரும் சொல்ல முடியும், சொல்ல உரிமை இருக்கிறது! வீண்பெருமையுணர்வால் எங்கள் எடைக்கு அதிகமாக குத்த முனைந்து தமிழர் தரப்பு தோற்றது என்பது என் கருத்து! 

உங்களுடைய காழ்புணர்வை வைத்து புலிகள் அர்ப்பணிப்பாக செயல் படவில்லையென்று எந்த ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள்? இப்படி உங்கள் ஊகங்களை வதந்திகளாக பரப்ப தேவையில்லை ஆதாரமின்றி. தலைவரும் போராளிகளும் அர்ப்பணிப்புடன்தான் சமாதான காலத்தில் செய்றப்பட்டார்கள், இல்லையென்று எந்த ஆதாரங்களுடன் சொல்கின்றீர்கள், கேவலமான கருத்து. உங்களை போன்றாவர்களால்மதான் எமது போராட்ட வரலாறே இப்ப திரிக்கப்படுகின்றது.

மக்களின் விடுதலைகாக அர்ப்பணிப்புடன் போரிட்ட அவர்களைப்பற்றி கதைக்க உங்களைப்போன்றவர்களுக்கு அருகதையில்லை, அவர்கள் பிழைவிட்டார்கள் என்று காலம் முழுக்க ஊளையிடதான் தெரியும், உங்களை போன்றவர்களுக்கு, அன்றும் சரி இன்றும் சரி அதைதான் செய்கின்றீர்கள். இன்றுதான் இரட்டை குடியுரிமையுடன் உங்களை போன்றவர்களை வாங்க வாங்க என்று கூப்பிடுகின்றார்களே, அங்கு போய் சமரசத்தை வீச வேண்டியது தானே, இங்கிருந்து உங்கள் வாய் சவாடல்களைவிட்டுவிட்டு

உங்கள் முதுகில் இருக்கு ஊத்தைகளை சுத்தப்படுத்திவிட்டு வாருங்கள் மற்றவர்களின் முதுகை சொறிய

 

6 hours ago, விசுகு said:

 

வரலாறு எம்மோடு  தான் நடந்தது

சமஷ்டித்தீர்வை வையுங்கள்  பரிசீலிக்க  தயபராக  இருக்கின்றோம்  என  புலிகள் அறிவித்ததற்கே இங்கே பல மதில்  மேல்கள் குறுக்கும்  மறுக்குமாக  ஓடித்திரிந்ததை  பார்த்தவர்  நாம்.

தோல்வியை  வைத்துக்கொண்டு  அப்படி  இப்படி செய்திருக்கலாம்  என  சாத்திரம்  எழுதுவதும் களத்தில்  நிற்றலும் ஒட்டமுடியாத இரண்டு கோடுகள்

நன்றி

இவர்களுக்கு அதுதான் வேலை, சும்மா இருந்து வாய் சவாடல்கள் விடுவதிற்குதான் சரி பொழுதுபோக

1 hour ago, Justin said:

அண்ணை, இங்கே சிங்களவன் குழப்பவேயில்லை, நேர்மை என்று யாரும் எழுதியதாக நான் காணவில்லை! 

புலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், "சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன. 

மேலும், யாழில் சிங்களவரையும் சிறிலங்காவையும் நாம் மாறி மாறித் திட்டி என்ன ஆகப் போகிறது? நமக்கு நாமே மாறி மாறி முதுகு சொறிந்து கொள்வது போல ஆகும்! சுகமாக இருக்கும் தான், ஆனால் என்ன பயன்? எதை யாழ் உறவுகள் புதிதாக கற்றுக் கொள்ளப் போகின்றன இந்த முதுகு சொறிதலில் இருந்து?  

ஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து கொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

இப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.

மற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

உங்களுடைய காழ்புணர்வை வைத்து புலிகள் அர்ப்பணிப்பாக செயல் படவில்லையென்று எந்த ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள்? இப்படி உங்கள் ஊகங்களை வதந்திகளாக பரப்ப தேவையில்லை ஆதாரமின்றி. தலைவரும் போராளிகளும் அர்ப்பணிப்புடன்தான் சமாதான காலத்தில் செய்றப்பட்டார்கள், இல்லையென்று எந்த ஆதாரங்களுடன் சொல்கின்றீர்கள், கேவலமான கருத்து. உங்களை போன்றாவர்களால்மதான் எமது போராட்ட வரலாறே இப்ப திரிக்கப்படுகின்றது.

மக்களின் விடுதலைகாக அர்ப்பணிப்புடன் போரிட்ட அவர்களைப்பற்றி கதைக்க உங்களைப்போன்றவர்களுக்கு அருகதையில்லை, அவர்கள் பிழைவிட்டார்கள் என்று காலம் முழுக்க ஊளையிடதான் தெரியும், உங்களை போன்றவர்களுக்கு, அன்றும் சரி இன்றும் சரி அதைதான் செய்கின்றீர்கள். இன்றுதான் இரட்டை குடியுரிமையுடன் உங்களை போன்றவர்களை வாங்க வாங்க என்று கூப்பிடுகின்றார்களே, அங்கு போய் சமரசத்தை வீச வேண்டியது தானே, இங்கிருந்து உங்கள் வாய் சவாடல்களைவிட்டுவிட்டு

உங்கள் முதுகில் இருக்கு ஊத்தைகளை சுத்தப்படுத்திவிட்டு வாருங்கள் மற்றவர்களின் முதுகை சொறிய

 

இவர்களுக்கு அதுதான் வேலை, சும்மா இருந்து வாய் சவாடல்கள் விடுவதிற்குதான் சரி பொழுதுபோக

புலிகளுக்கும் சிறிலங்காவிற்கும் 2002 சமாதான முயற்சியில் அக்கறை இருக்கவில்லை. ஒரு இடைவேளை, பணவரவுக்கான வாய்ப்பு (இரு தரப்புக்கும் தான்!) இவை தான் இருந்தன.

கொழும்பில் கட்டுப்பாடில்லாமல் திரியக் கிடைத்த வாய்ப்பில் சிறி லங்காவோடு சேர்ந்திருந்தோர் சிலர் கொல்லப் பட்டனர். புலிகளுக்கு வாகனத்தை இரவல் கொடுத்தல் போன்ற சாதாரண காரியங்கள் செய்த அப்பாவி வவுனியா வாசிகளை சிங்கள உளவாளிகள் கொலை செய்தனர். 

இரு தரப்பும் சமாதான காலத்தில் செய்த வேலைகளில் இவை சில துளிகள். 

நீங்கள் கோபக்கனல் கக்கினாலும் உண்மையைத் தான் எழுத முடியும்! உங்களுக்கு விருப்பமென்றால், நீங்கள் ஊரில் அந்த நேரம் இருந்திருக்கா விட்டால், அந்த நாட்களின் செய்திகளை  தேடி வாசித்தறிய நூலகம். ஒர்க் திறந்தே இருக்கிறது!

(துரதிர்ஷ்ட வசமாக யூரியூப் செய்திகள் இல்லை!)  

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

புலிகளுக்கும் சிறிலங்காவிற்கும் 2002 சமாதான முயற்சியில் அக்கறை இருக்கவில்லை. ஒரு இடைவேளை, பணவரவுக்கான வாய்ப்பு (இரு தரப்புக்கும் தான்!) இவை தான் இருந்தன.

கொழும்பில் கட்டுப்பாடில்லாமல் திரியக் கிடைத்த வாய்ப்பில் சிறி லங்காவோடு சேர்ந்திருந்தோர் சிலர் கொல்லப் பட்டனர். புலிகளுக்கு வாகனத்தை இரவல் கொடுத்தல் போன்ற சாதாரண காரியங்கள் செய்த அப்பாவி வவுனியா வாசிகளை சிங்கள உளவாளிகள் கொலை செய்தனர். 

இரு தரப்பும் சமாதான காலத்தில் செய்த வேலைகளில் இவை சில துளிகள். 

நீங்கள் கோபக்கனல் கக்கினாலும் உண்மையைத் தான் எழுத முடியும்! உங்களுக்கு விருப்பமென்றால், நீங்கள் ஊரில் அந்த நேரம் இருந்திருக்கா விட்டால், அந்த நாட்களின் செய்திகளை  தேடி வாசித்தறிய நூலகம். ஒர்க் திறந்தே இருக்கிறது!

(துரதிர்ஷ்ட வசமாக யூரியூப் செய்திகள் இல்லை!)  

அப்ப உங்களிடம் ஆதரமில்லை, சகட்டு மேனிக்கு, செய்திகளை தேடிப்பாருங்கள் என கூறுகின்றீர்கள், இதே செய்தி ஊடகங்களின் நம்பிக்கைதன்மையை கேள்வியெழுப்பியவர் நீங்கள்,

சிங்களவன் தன் வெற்றியை கொண்டாட புலிகளில் எப்படி தீவிரவாதிகள் சமாதானத்தில் நாட்டமில்லாதவர்கள் என பரப்ப முனைகின்றார்களோ, அதையே கை கூலி பெறாமல் நன்றாக நீங்களும் செய்கின்றீர்கள், அதற்குள் தமிழரின் விடிவுக்க தீர்வு என்னவென்று வேஷம்வேறு,

இங்கு உங்களுக்கு கோப கனலை கக்கவில்லை, உங்கள் வேடங்களை நினைக்க சிரிப்பாக இருக்கு.

நீங்கள் அந்த நாட்களில் ஊரில் இல்லாமல் இந்த செய்தி ஊடகங்களை நம்பி கருத்துகளை எழுவதைப்போல் மற்றவர்களையும் நினைக்க வேண்டாம்.

2 hours ago, Robinson cruso said:

ஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து கொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

இப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.

மற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

விளங்கநினைப்பவரே உங்கட சிங்கள அரசை திட்டவுமில்லை ஆதரிக்கவுமில்லை, அவர்கள் செய்கின்ற அடக்குமுறையைதான் பதிகின்றோம். உங்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு என்ன வழியென்று கூறுங்களேன், அல்லது என்ன நல்ல தீர்வுவென்றாலும் கூறுங்களேன. அல்லது எப்படி இனி போராட்டகளை முன்னேடுக்க வேண்டெமென்றாலும் உங்கள் திருவாய் மலர்ந்து கூறுங்களேன் விளங்கநினைப்பவரே

விளங்கநினைப்பவரே எப்படி சிங்களவன் ஆக்கிரமித்து முன்னேறுவதை தடுப்பது, பின்னோக்கி செல்லும் நாம் எப்படி முன்னோக்கி செல்வது? நல்ல விளக்கமாக பதியுங்களேன். உங்கள் சிங்களவனை யாரும் திட்டமாட்டார்கள், வசைபாட மாட்டார்கள் இது சத்தியம், நல்ல வழிகளை கூறினால்😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Robinson cruso said:

ஜஸ்டின் , எல்லாவற்றிட்கும் ஒரு காலம் உண்டு. யுத்தம் செய்ய காலமுண்டு, சமாதானமாக காலமுண்டு. சரித்திர வரலாறுகள் அப்படிதான் இருக்கின்றன. இல்லாவிட்ட்தால் அழிவுகள்தான் மிஞ்சும். எப்போதுமே யுத்தம் செய்து கொண்டிருந்தால் மக்களே வெறுப்புற்று காட்டிக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

இப்போதும் என்ன மக்கள் அரச பக்கம் சாய்வதட்கான சமிக்கையை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதை சிலர் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதும் பிரயோசனம் இருக்குமாக இருந்தால் நல்லது.

மற்றபடி சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

இதைதான் நாங்களும் சொல்கிறோம் ஆனால் அந்த காலத்திலே சிலர் நிற்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

இதைச் சிங்களவனோடு சேர்ந்து நின்றால் உங்களால் தடுக்க முடியுமா? முடிந்தால் தாராளமாக நிற்கலாம். 

சிங்களவனை எதிர்த்து, அவன் செய்யும் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே அவனால் இந்தளவு செய்யமுடிகிறதென்றால், அவனை எதிர்க்காமல், அவனுடனேயே சேர்ந்து, "எங்களுக்கு வேண்டியதெல்லாம் அபிவிருத்தியும், சலுகைகளும் தான், உரிமையெல்லாம் வேண்டாம்" என்று சொல்லும்போது எதுவித எதிர்ப்பும் இல்லாமல், நாம் அவனுக்கு கைக்கூலிகளாக, மாமா வேலை பார்த்தால் (இப்போது கிழக்கில் சிலர் செய்வதுபோல) இன்னும் எத்தனை மடங்கு மும்முரமாகச் செய்வான் என்று நினைக்கிறீர்கள்?

அதுசரி, கிழக்கில் சிங்களவர்களாலும், தொல்பொருள் திணைக்களத்தாலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் நிலங்கள் பற்றி இந்த "உரிமை வேண்டாம்" அணியினர் என்ன சொல்கிறார்களாம்? ஏன் இதுவரை எதையுமே காணோம்? 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஐயோ! பிள்ளையான் பாவம்... யாரோ பிள்ளையானுக்கு எதிராக ஆயுதத்தைக்காட்டி பயமுறுத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். அநிஞாயமாய் ஐந்து வருடங்கள் சிறையில் கழித்திருக்கிறார் தியாகி. உலகத்தரம் வாய்ந்த காவற்துறை, நீதித்துறை சும்மா வேடிக்கை பாத்துக்கொண்டிருந்திருக்கு. அப்படியென்றால் பிள்ளையான் இலங்கை காவற்துறைக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரலாம். ஒரு முன்னாள் முதலமைச்சர், அரசாங்க தரப்பு அமைச்சருக்கே இந்தகதியென்றால்...? நாடு ரொம்ப கெட்டுபோய்க்கிடக்குது. 

8 hours ago, உடையார் said:

 

விளங்கநினைப்பவரே உங்கட சிங்கள அரசை திட்டவுமில்லை ஆதரிக்கவுமில்லை, அவர்கள் செய்கின்ற அடக்குமுறையைதான் பதிகின்றோம். உங்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு என்ன வழியென்று கூறுங்களேன், அல்லது என்ன நல்ல தீர்வுவென்றாலும் கூறுங்களேன. அல்லது எப்படி இனி போராட்டகளை முன்னேடுக்க வேண்டெமென்றாலும் உங்கள் திருவாய் மலர்ந்து கூறுங்களேன் விளங்கநினைப்பவரே

விளங்கநினைப்பவரே எப்படி சிங்களவன் ஆக்கிரமித்து முன்னேறுவதை தடுப்பது, பின்னோக்கி செல்லும் நாம் எப்படி முன்னோக்கி செல்வது? நல்ல விளக்கமாக பதியுங்களேன். உங்கள் சிங்களவனை யாரும் திட்டமாட்டார்கள், வசைபாட மாட்டார்கள் இது சத்தியம், நல்ல வழிகளை கூறினால்😂

இனி தீர்வு என்று ஒன்று இல்லை. அதுவும் இந்த அரசாங்கத்தில் நடப்பதென்பது நினைக்கவும் முடியாது. இப்போது ராணுவ ஆட்சி இங்கு நடக்கிறது. நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

இலங்கை இந்தித்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறியிருக்க வேண்டியதுதான் இருந்த ஒரே சந்தர்ப்பம். அதை முழுமையான தீர்வாக ஏற்றுக்கொள்ளவிடடாலும் ஒரு ஆரம்பமாக இருந்தது. இதேபோல நோரவேய் அரச அனுசரணை இப்படியாக நிறைய சந்தர்ப்பங்களை தவற விடடாயிற்று. வேணுமென்றால் இன்னுமோர் எழுபது வருடம் போராடலாம்.

முடியுமென்றால் இப்பபோதைக்கு இருப்பதை தக்க வைக்க முயட்சிக்கலாம். இருந்தாலும் , அவர்கள் ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரித்துள்ளார்கள். அதை மாற்ற முடியுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும். அல்லது புலம்பெயர் சமூகத்தால் எதாவது செய்ய முடியுமென்றால் முயட்சிக்கலாம்.

5 hours ago, ரஞ்சித் said:

இதைச் சிங்களவனோடு சேர்ந்து நின்றால் உங்களால் தடுக்க முடியுமா? முடிந்தால் தாராளமாக நிற்கலாம். 

சிங்களவனை எதிர்த்து, அவன் செய்யும் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே அவனால் இந்தளவு செய்யமுடிகிறதென்றால், அவனை எதிர்க்காமல், அவனுடனேயே சேர்ந்து, "எங்களுக்கு வேண்டியதெல்லாம் அபிவிருத்தியும், சலுகைகளும் தான், உரிமையெல்லாம் வேண்டாம்" என்று சொல்லும்போது எதுவித எதிர்ப்பும் இல்லாமல், நாம் அவனுக்கு கைக்கூலிகளாக, மாமா வேலை பார்த்தால் (இப்போது கிழக்கில் சிலர் செய்வதுபோல) இன்னும் எத்தனை மடங்கு மும்முரமாகச் செய்வான் என்று நினைக்கிறீர்கள்?

அதுசரி, கிழக்கில் சிங்களவர்களாலும், தொல்பொருள் திணைக்களத்தாலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் நிலங்கள் பற்றி இந்த "உரிமை வேண்டாம்" அணியினர் என்ன சொல்கிறார்களாம்? ஏன் இதுவரை எதையுமே காணோம்? 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

புலிகளும் பேச்சு வார்த்தையை சீரியசாக எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை போன்ற கருத்துகள் எப்போது வைக்கப் படுகின்றன என்று பார்த்தால், "சர்வதேசம் சதி செய்தது, இந்தியா சதி செய்தது, ரணில் சதி செய்தது" போன்ற சில மூக்குச் சிந்தும் கருத்துகளுக்கு துலங்கலாகத் தான் வைக்கப் பட்டிருக்கின்றன. 

முன்னொரு காலத்தில்  ஈழ தமிழினத்திற்காக உரிமை கோரிக்கை  முன் வைக்கப்பட்டது. அது நிறைவேற்றப்படவில்லை.பிறிதொரு காலத்திலும் ஈழத்தமிழினத்தின் அடிப்படை உரிமைக்காக போராடப்பட்டது. அப்போதும் கொடுக்கப்படவில்லை.பயங்கரவாத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் என்றார்கள். பேச்சுவார்த்தைக்கு  போனார்கள் அப்போது இழுத்தடிக்கப்பட்டார்கள்.போராட்டதை அழித்து மூடினார்கள்.

இன்றுவரை ஈழத்தமிழினத்திற்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை.

உவங்களோடை பேசிப்பயனில்லை என்று சொன்னது சரியாகத்தானே இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.