Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, goshan_che said:

 

என்ன தல எஸ் ஆயிட்டீங்களா?🤣
நினைச்சன் நடக்குமெண்டு....😎

பானையிலை இருந்தால்தானே அகப்பயில் வரும்....😁

இதை சொன்னது எமது முன்னோர்கள்.:cool:

  • Replies 161
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் அந்த 30 வருட ஆயுத போராட்ட காலத்தைவிட மற்றயகாலமெல்லாம் ஜனநாயக முறைப்படிதானே  அரசியல் போராட்டங்கள் நடந்தன. அதனால் கிடைத்த நன்மைகள் என்னெவென்று கொஞ்சும்  சொல்லுங்களேன்.

அப்போ அரசியல்வாதிகளால் எந்தவொரு தீர்வையும் பெற்றுத்தரமுடியாது என்கிறீர்கள். அப்படித்தானே??

1. ஐயோ என்னையா இப்படி படுத்திறீங்கள். இரக்கமே இல்லாமல். 

1948-2020 வரை பூச்சியம் என்று முதலாவது பதிவிலே எழுதிய என்னை பிடித்து இராமநாதன் செய்தது என்ன, இன்னாசிதம்பி செய்தது என்ன என்று கேட்டால் நான் என்ன செய்வேன்? நேக்கு என்ன தெரியும்.

2. அற்பர்களை வைத்துத்தான் எதையாவது பெறமுடியுமா என்று பார்கவேண்டிய நிலையில் நிற்கிறது நம் இனம்.

4 minutes ago, குமாரசாமி said:

என்ன தல எஸ் ஆயிட்டீங்களா?🤣
நினைச்சன் நடக்குமெண்டு....😎

பானையிலை இருந்தால்தானே அகப்பயில் வரும்....😁

இதை சொன்னது எமது முன்னோர்கள்.:cool:

அவசரமா வன் பாத் ரூம் வந்திட்டண்ணை. 

சபைல சொல்ல ஒரு மாரித்தான் கிடக்கு, ஆனாலும் நீங்கள் கேட்டுடியள் அதுதான் சொல்லுறன்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

புலம்=தாயகம்

தாயத்தில் இருந்து பெயர்ந்தோர் = புலம்பெயர்ந்தோர்

புலம் = வெளிநாடு இல்லை

கோஷன் வணக்கம்  தாயகத்திருந்து பெயர்ந்தோர்=புலம்பெயர்நதோர் இது சரிஆனால். தாயகம்=இலங்கை {நாம். இலங்கையர் }

புலம் =வெளிநாடு {இலங்கைதவிர்ந்தநாடுகள்}

புலம்=தாயகமெனில் புலம்பெயர்தோர். இலங்கையிலிருக்கவேண்டும் வெளிநாடுகளிலில்லை.😜👍

1 minute ago, Kandiah57 said:

கோஷன் வணக்கம்  தாயகத்திருந்து பெயர்ந்தோர்=புலம்பெயர்நதோர் இது சரிஆனால். தாயகம்=இலங்கை {நாம். இலங்கையர் }

புலம் =வெளிநாடு {இலங்கைதவிர்ந்தநாடுகள்}

புலம்=தாயகமெனில் புலம்பெயர்தோர். இலங்கையிலிருக்கவேண்டும் வெளிநாடுகளிலில்லை.😜👍

கந்தையா தாயகத்துக்குள் இடம் பெயர்ந்தால் இடம் பெயர்ந்தோர். தாயகத்தை விட்டை வேறு நாடுகளுக்கு சென்றால் புலம் பெயரந்தோர். புலம் என்ற தாயகத்தில் இருந்து பெயர்ந்து  வேறு நாடுகளுக்கோ கண்டங்களுக்கோ சென்றோர் என்று அர்த்தம் 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கந்தையா அண்ணை,

புலம் என்ற சொல்லை நீங்கள் தவறாக விளங்கி கொண்டுள்ளீர்கள்.

நாம் வாழ்ந்த எமது பூமிதான் புலம். அந்த புலத்தில் இருந்து வெளிநாடு வந்த நாம் புலம்-பெயர்ந்தவர்கள்.

எங்கே இருந்து பெயர்ந்தோமோ அதுதான் புலம். 

வந்தேறிய இடம் அல்ல. அதை வேணும் என்றால் புறம் எண்டு சொல்லலாம்.

2 minutes ago, Kandiah57 said:

கோஷன் வணக்கம்  தாயகத்திருந்து பெயர்ந்தோர்=புலம்பெயர்நதோர் இது சரிஆனால். தாயகம்=இலங்கை {நாம். இலங்கையர் }

புலம் =வெளிநாடு {இலங்கைதவிர்ந்தநாடுகள்}

புலம்=தாயகமெனில் புலம்பெயர்தோர். இலங்கையிலிருக்கவேண்டும் வெளிநாடுகளிலில்லை.😜👍

 

நானும் முன்னர் வெளிநாட்டை புலம் என்று எழுதி யாரோ ஒரு யாழ்கள உறவுதான் திருத்தினவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

அவசரமா வன் பாத் ரூம் வந்திட்டண்ணை. 

சபைல சொல்ல ஒரு மாரித்தான் கிடக்கு, ஆனாலும் நீங்கள் கேட்டுடியள் அதுதான் சொல்லுறன்.

இதே மாதிரித்தான் மற்றவனுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் வரும்.
இனிமேல் எடுத்த எடுப்பிலை மற்றவனை பாத்து எஸ் வார்த்தையை யூஸ்  பண்ணாதீங்க தல..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இதே மாதிரித்தான் மற்றவனுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் வரும்.
இனிமேல் எடுத்த எடுப்பிலை மற்றவனை பாத்து எஸ் வார்த்தையை யூஸ்  பண்ணாதீங்க தல..

உண்மைதான் ஆனால் நாள் கணக்கில் வன் பாத் ரூம் போவார்கள் என எனக்கு இதுவரை தெரியாது, இனி அறிந்து நடக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

உண்மைதான் ஆனால் நாள் கணக்கில் வன் பாத் ரூம் போவார்கள் என எனக்கு இதுவரை தெரியாது, இனி அறிந்து நடக்கிறேன்.

 

6 minutes ago, குமாரசாமி said:

இதே மாதிரித்தான் மற்றவனுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் வரும்.
இனிமேல் எடுத்த எடுப்பிலை மற்றவனை பாத்து எஸ் வார்த்தையை யூஸ்  பண்ணாதீங்க தல..

 

மற்றவர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்பதை கூர்ந்து கவனித்தால் பல விதண்டாவாதங்களை தவிர்க்கலம்ம் தல...🤠

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 

 

மற்றவர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்பதை கூர்ந்து கவனித்தால் பல விதண்டாவாதங்களை தவிர்க்கலம்ம் தல...🤠

சரி. திண்ணைக்கு shift ஆவம் வாங்கோ. இஞ்ச நிண்டு நியானிக்கு வேலை வையாம.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

சரி. திண்ணைக்கு shift ஆவம் வாங்கோ. இஞ்ச நிண்டு நியானிக்கு வேலை வையாம.

திண்ணை உள்ளதிலையே கெடுபிடியான இடம். நான் அங்கே வர மாட்டேன்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

பிறருக்கு விளக்கம் குறைவென்றே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் மேலும் பண்பட எழுதலாம் என்பது என் கருத்து.... 👍

பிறர் விளக்கம் குறைவாக இருப்பது அவர்கள் உரிமை! குறைவான விளக்கத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு தொடர்ந்து "ரின்" கட்டினால் பண்போடான உபசரிப்பையும் எதிர்பார்க்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பல அமெரிக்கர்கள் வியட்நாம் போரை எதிர்தார்கள், அதன் அர்த்தம் அவர்கள் வியட்நாமில் போராடிய வீரர்களை இகழ்ந்தார்கள் என்பதல்ல. தேசத்துரோகிகள் என்பதுமல்ல.

அற்ப அரசியல்வாதி சீமான் - அவரை நக்கல் அடித்தமைக்காக, இனப்படுகொலையில் உனக்கும் பங்கு உண்டு என எழுத வைப்பதும் இதே மனோநிலைதான்.

இப்படி ஒவ்வொன்றும் தெளிவான  விளக்கங்கள் 👍

2 hours ago, goshan_che said:

புலம்=தாயகம்

தாயத்தில் இருந்து பெயர்ந்தோர் = புலம்பெயர்ந்தோர்

புலம் = வெளிநாடு இல்லை

உங்கள் தமிழ் விளக்கங்களை படிக்க இலகுவாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி ஒவ்வொன்றும் தெளிவான  விளக்கங்கள் 👍

உங்கள் தமிழ் விளக்கங்களை படிக்க இலகுவாக உள்ளது.

நீங்கள் விளங்க நினைப்பவன் அல்ல.

மற்றவர் பின்னால் அலைபவன். 🤪

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி ஒவ்வொன்றும் தெளிவான  விளக்கங்கள் 👍

உங்கள் தமிழ் விளக்கங்களை படிக்க இலகுவாக உள்ளது.

நன்றி,

ஒருவரை மனம் விட்டு பாராட்டும் உங்கள் விசால மனத்துக்கு வாழ்துதல்களும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் விளங்க நினைப்பவன் அல்ல.

மற்றவர் பின்னால் அலைபவன். 

பொறாமை படுவதை கைவிட்டு நீங்களும் தெளிவுகள் பெற்று கொள்ளலாமே பெறாமைபடுவதால்  பிரஷர் தான் வரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பொறாமை படுவதை கைவிட்டு நீங்களும் தெளிவுகள் பெற்று கொள்ளலாமே பெறாமைபடுவதால்  பிரஷர் தான் வரும்

நன்றி...நன்றி உங்கள் ஆலோசனைக்கு.....


தற்கணம் இங்கிருந்து ஓய்வு பெற செல்வதால் நான் எஸ் ஆகி விட்டேன் என எண்ண வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

 

பிள்ளைகளையும் கூட கொடுத்தோமே? அதை விட்டுவிட்டீர்களே? நகையும் பணமும் தானா உங்களுக்கு புண்ணியம் சேர்க்கிறது? நாங்கள் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே? 

ஐயா ஜூட்! இயக்கங்கள் உருவாகுமுன், என் நெருங்கிய உறவுகள் பல தலைநகரில்   தம் சொத்துக்களை தீக்கு இரையாக்கிவிட்டு கப்பலில் வெறுங்கையோடு  வந்து இறங்கினார்கள், சில இனைஞர்கள் படிப்பதற்கு, வேலைக்கு சென்ற சகோதரர்கள் ரயர் போட்டு எரிக்கப்பட்டார்கள். கொழும்பு சென்ற உறவினர் அனுராதபுரத்தில் ரயிலில் இருந்து இறக்கப்பட்டு கூட்டிச் செல்லப்பட்டார்கள் திரும்பவேயில்லை. வவுனியாவில் உறவினர் முன்னிலையில், விசாரித்து விட்டு அனுப்புகிறோம் என்று அழைத்துச் சென்ற தம் பிள்ளைகள் எங்கே என்று கேட்டு மழையிலும் வெயிலிலும் போராடுகிறார்கள் அவர்தம் உறவுகள். அவர்கள் எல்லாம்   எங்கே? என்று ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2020 at 08:02, goshan_che said:

பிரித்தானிய தூதுவரை யார் சந்திப்பது என்பதை தீர்மானிப்பது சுமந்திரனோ, கஜனோ, விக்கியில் அல்ல. பிரித்தானிய தூதுவராலயம்.

அவர்கள் “நீங்கள் வாங்கோ” எண்டு கூப்பிட்டால் “துணைக்கு செல்வத்தையும் கூட்டியரட்டே, வந்து பற்றீஸ் மட்டும் சாப்பிடுவார்” என்றா கேட்க முடியும்?

சே விவாதததுக்கு உவப்பான அமைபுக்களிலா இருந்தார்?

சர்வதேசத்திற்கு(முதலாளித்துவ/ஜனநாயக நாடுகளுக்கு) உவப்பான‌ அமைப்பில் தான் இருந்தார்....ஆகவே தான் அவரை பிரேசில் நாட்டில் வைத்து  அமேரிக்காவின் உதவியுடன் படுகொலை செய்தனர் ....செகுவாரா தனது தனிநபர் புரட்சிகர சிந்த‌னைகளை தென் அமெரிக்காவுக்கு புகுத்திவிடுவார் என்ற பயத்தில்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

சர்வதேசத்திற்கு(முதலாளித்துவ/ஜனநாயக நாடுகளுக்கு) உவப்பான‌ அமைப்பில் தான் இருந்தார்....ஆகவே தான் அவரை பிரேசில் நாட்டில் வைத்து  அமேரிக்காவின் உதவியுடன் படுகொலை செய்தனர் ....செகுவாரா தனது தனிநபர் புரட்சிகர சிந்த‌னைகளை தென் அமெரிக்காவுக்கு புகுத்திவிடுவார் என்ற பயத்தில்

புத்தன்,

நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியவில்லை.

1. நான் சொன்னேன் விவாததுக்கு இடமில்லாத அமைபுகள் நீண்டகால நோக்கில் தாக்கு பிடிப்பது கடினம் என்று.

2. அப்போ சே எப்படி என்று கேட்டீர்கள்.

3. சே ஒரு விவாதத்துக்கு உவப்பான அமைப்பில் இருந்து வரவில்லை. தவிரவும் அவர் ஒரு தனி மனித போராளி. அமைப்பல்ல. உலகில் எங்கெல்லாம் கம்யூனிச புரட்சி நடந்ததோ அங்கெல்லாம் போய் அடிபட்ட மனிதர். கியூபாவில் அரசில் கிடைத்த மந்திரி பதவியையும் தூக்கி எறிந்து விட்டு போனார்.

4. பொலிவியாவில் வைத்து (பிரேசில் அல்ல) அமெரிக்க அனுசரணையுடன் கொல்லப்பட்டார்.

அவருக்கும் ஒரு விவாதமில்லாத அமைப்பு நிலைக்காது என நான் கூறியதற்கும் என்ன சம்பந்தம்?

உண்மையிலேயே விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

புத்தன்,

நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியவில்லை.

1. நான் சொன்னேன் விவாததுக்கு இடமில்லாத அமைபுகள் நீண்டகால நோக்கில் தாக்கு பிடிப்பது கடினம் என்று.

2. அப்போ சே எப்படி என்று கேட்டீர்கள்.

3. சே ஒரு விவாதத்துக்கு உவப்பான அமைப்பில் இருந்து வரவில்லை. தவிரவும் அவர் ஒரு தனி மனித போராளி. அமைப்பல்ல. உலகில் எங்கெல்லாம் கம்யூனிச புரட்சி நடந்ததோ அங்கெல்லாம் போய் அடிபட்ட மனிதர். கியூபாவில் அரசில் கிடைத்த மந்திரி பதவியையும் தூக்கி எறிந்து விட்டு போனார்.

4. பொலிவியாவில் வைத்து (பிரேசில் அல்ல) அமெரிக்க அனுசரணையுடன் கொல்லப்பட்டார்.

அவருக்கும் ஒரு விவாதமில்லாத அமைப்பு நிலைக்காது என நான் கூறியதற்கும் என்ன சம்பந்தம்?

உண்மையிலேயே விளங்கவில்லை.

சே.... அதாவது கொம்னிச சித்தாந்த அமைப்பில் இருந்து வந்தவர் அந்த கொம்னிச சித்தாந்தம் ஒரு சாரருக்கு உவப்பானது என்று சொல்லவருகின்றேன்... நீங்கள் கொம்னிச சிந்தாந்த அடிப்படையில் பார்க்கின்றீர்கள் ...நான் பொதுப்படையாக பார்க்கின்றேன்...கொம்னிச சித்தாந்த வாதிகள் இறுதியில் சர்வாதிகார நோக்கில் செயல் படுகின்றனர் முதலாளித்துவாதிகள் போன்று ....

என்னை பொருத்தவரை சே ,பெடல் போன்றோரை எம்மால் வரவேற்க்க முடியுமென்றால் பிரபாகரனையும் வரவேற்க்கதான் முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

பிறர் விளக்கம் குறைவாக இருப்பது அவர்கள் உரிமை! குறைவான விளக்கத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு தொடர்ந்து "ரின்" கட்டினால் பண்போடான உபசரிப்பையும் எதிர்பார்க்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம்!

எல்லோராலும் இதே பதிலை எழுத முடியும். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

எல்லோராலும் இதே பதிலை எழுத முடியும். ☹️

உண்மையில் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு முள்ளிவாய்க்கால் வரை ஆதரவு கொடுத்தோம் ஆனால் எங்களை அவர்கள் மாயைக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் யார் யாரை முட்டாள்கள் என்கிறார்கள் என்பது புரியும். ஒரு விடுதலை போராட்டத்தின் தற்காலிக தோல்வியை வைத்து கொண்டு???

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

உண்மையில் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு முள்ளிவாய்க்கால் வரை ஆதரவு கொடுத்தோம் ஆனால் எங்களை அவர்கள் மாயைக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் யார் யாரை முட்டாள்கள் என்கிறார்கள் என்பது புரியும். ஒரு விடுதலை போராட்டத்தின் தற்காலிக தோல்வியை வைத்து கொண்டு???

விசுகு அண்ணா,
இதே போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் இங்கே போரட்டம் தவறு என்று குத்திமுறியிற எல்லாரும் வேறை விதமாக கதைப்பினம் விடுங்கோ. சிலபேர் தங்களது தனிப்பட்ட இழப்பை மட்டும் வைத்து பொதுப்படையான முடிவுக்கு வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வாதவூரான் said:

விசுகு அண்ணா,
இதே போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் இங்கே போரட்டம் தவறு என்று குத்திமுறியிற எல்லாரும் வேறை விதமாக கதைப்பினம் விடுங்கோ. சிலபேர் தங்களது தனிப்பட்ட இழப்பை மட்டும் வைத்து பொதுப்படையான முடிவுக்கு வருகிறார்கள்.

உண்மை தான் சகோ. 2003இல் நான் தாயகத்துக்கு போயிருந்தபோது 2 கிழமை வன்னியில் எனக்கு கொடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் மூழ்கி இருக்க இது போல் இங்கே என் கண்முன்னாலேயே பேசியவர்கள் எழுதியவர்கள் தலைவருடன் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

சே.... அதாவது கொம்னிச சித்தாந்த அமைப்பில் இருந்து வந்தவர் அந்த கொம்னிச சித்தாந்தம் ஒரு சாரருக்கு உவப்பானது என்று சொல்லவருகின்றேன்... நீங்கள் கொம்னிச சிந்தாந்த அடிப்படையில் பார்க்கின்றீர்கள் ...நான் பொதுப்படையாக பார்க்கின்றேன்...கொம்னிச சித்தாந்த வாதிகள் இறுதியில் சர்வாதிகார நோக்கில் செயல் படுகின்றனர் முதலாளித்துவாதிகள் போன்று ....

என்னை பொருத்தவரை சே ,பெடல் போன்றோரை எம்மால் வரவேற்க்க முடியுமென்றால் பிரபாகரனையும் வரவேற்க்கதான் முடியும்

1. தமது நலனுக்கு எதிரானவர்கள் யாராயினும், அவர்கள் விவாதத்தை ஏற்ற அமைப்பில் இருந்து வந்தாலும் ஏகாதிபத்தியம் அவர்களை அழிக்கும். பிடல், சே போல புரட்சியாளரை மட்டும் அல்ல, சல்வடோர் அலந்தே போல் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்றோரையும் கூட. சேக்கு, பிடலுக்கு வேறு வழி இருக்கவில்லை அவர்களது 1ம் எதிரியே ஏகாதிபத்தியம்தான்.

2. ஆனால் ஏகாதிபத்தியம் எமக்கோ சதாமுக்கோ எதிரியல்ல. ஏகாதிபத்தியத்தின் சேவகர்களாக இருக்கும் படி விடுக்க பட்ட தொடர் உத்தரவுகளை புறம் தள்ளியபடியாலே நாம் ஏகாதிபத்தியத்தின் எதிரிகளாக்கப்பட்டோம். இவ்வாறு தேவையிலாமல் நாம் ஏகாதிபத்தியத்தை பகைத்து கொள்ள வேண்டாம் என்ற குரல் தலைமைக்கு நெருக்கமான ஒரே ஒருவரிடம் இருந்து மட்டுமே வந்தது. அந்த “குரல்” கூட உதாசீனப்படுத்த பட்டு, மனம் நொந்து அமைதியாகியது. இந்த குரல் மேலும் உரத்து கேட்க, இதையொத்த குரல்கள் ஒருமித்து தலைமையை அணுக, அதை தலைமை செவிமடுக்க, இதை விவாதிக்க, இருந்தததை விட மேலும் ஒரு விசாலமான விவா-வெளி இருந்திருந்தால், முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும்.

ஆனால் தலைமையை சூழ நின்று வீடியோ எடுத்தவர்களும், படம் பிடித்தவர்களும், கவிதை எழுதி சிடி வெளியிட்டவர்களும் போகும் வழியை பற்றி ஒரு வார்த்தை தானும் சொல்ல முடியாத நிலையில்தானே இருந்தார்கள். கூட்டமைப்பு எம்பிகள் கூட சொல்லுவதை சொல்லும் கிளி பிள்ளைகள் ஆக அல்லவா இருந்தார்கள்.

போராட்டம் வென்று இருந்தால் இந்த விமர்சனம் எழுந்திராது என்பதும், இப்போ விமர்சிப்பவர்கள் அப்படி ஒரு நிலையில் “தலைவரின் மதி நுட்பத்தை பார்த்தாயா” என்றும் எழுதி இருக்க கூடும் என்பது ஒன்றும் அரிய புதிய கண்டுபிடிப்பல்ல, நான் உட்பட விமர்சனம் எழுதும் எல்லாரும் ஏற்று கொள்வதுதான்.

ஆனால் இதி இயற்கையானதுதான். Failure is an orphan but success is a bastard என்பார்கள். அதாவது தோல்விக்கு யாரும் உரிமை கோராமல் அது அநாதையாகும் ஆனால் வெற்றிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தந்தைகள் உரிமை கோருவார்கள் என்பது.

ஆகவே ஒரு தோல்வியின் முடிவில் ஏன் தோற்றோம் என்ற கேள்வி எழுவதும், அதில் இருக்கும் குறைகள் ஆராயப்படுவதும் இயற்கையானது. தேவையானதும் கூட.

இப்போ நாம் வெறும் வாய்சொல் வீரர்கள்தான் ஆனால் இன்னும் அடுத்த இரெண்டு தலைமுறைக்கு பின்னும் தாயகத்தில் இருக்கும் தமிழ் பரம்பரை இனப் பிரச்சனைக்கு முகம் கொடுக்கும், இப்போதிருந்தே விவாத-ஏது சூழல் ஒன்றை உருவாக்குவது, அவர்களாவது வெற்றி அடைய உதவும்.

3. மேலே சொன்னது போல் இது உண்மையில் யார் மீதான விமர்சனம் கூட இல்லை. நடந்ததை நடந்தபடி சொல்வது மட்டுமே. இங்கே

விமர்சனம் = அவமரியாதை

என்ற ஒரு மிக இலகுவான சூத்திரம் உள்ளது.

தவிரவும் இது மிகவும் எமசனலான விடயம் ஆகவே ஹிட்லரை உதாரணமாக எடுத்தேன். கேள்விகள் முறுபடியும் வரவிரும்பாத இடத்துக்கு இழுத்து வந்துள்ளன.

ஆனால் நான் செயல்வீரன், செயல்தான் முக்கியம், வாய் சொல்லில் ஒன்றும்  இல்லை என்ற போக்கு ஆபத்தானது. 

4. பிரபாகரன், சே மற்றும் பிடலுக்கு நிகரான புரட்சியாளர் மட்டும் இல்லை, தனிமனித ஒழுக்கத்தில், அந்த ஒழுக்கத்தை கூட்டு ஒழுக்கமாக பேணியதில் இவர்களிருவரையும் விட ஒரு படி மேலானவரும் கூட.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.