Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் வியூகம் வகுக்கும் கருணா! முதல் அறிவிப்பை வெளியிட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வியூகம் வகுக்கும் கருணா! முதல் அறிவிப்பை வெளியிட்டார்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையத் தயாராக உள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஸ்தாபகரும், பிரதமரின் நேரடி ஒருங்கிணைப்பாளருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, நாங்கள் பல தேர்தல்களுக்கு முகம்கொடுத்து பல வெற்றிகளை கண்டுள்ளோம்.

இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற இடங்களில் எமது கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம்.

இம்முறை வடக்கில், முதன் முறையாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எமது கட்சி போட்டியிடுவது தொடர்பாக எனது அமைப்பாளர் உடன் இன்று சந்திக்க உள்ளோம்.

தேசியக் கட்சிகளுடன் இல்லை - தமிழ் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தல்களை சந்திப்பேன் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/157281?ref=home-imp-flag

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையத் தயாராக உள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஸ்தாபகரும், பிரதமரின் நேரடி ஒருங்கிணைப்பாளருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை கூட்டமைப்பில் இணைப்பது சாத்தியமே இல்லை

வி.முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த கருணா, தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவ்விடயம் தொடர்பாக இன்று (4) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவஞானம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்ளுவது தொடர்பாக எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என்று குறிப்பிட்டார்.

கருணாவை கூட்டமைப்பில் இணைப்பது சாத்தியமே இல்லை – NewUthayan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிக்கு வேலையாள் வந்து அண்ணனுக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஒராள் அனல் கக்கப்போற எதுக்கும் பின்னேரம் 7 லிருந்து 10 மணிக்குள் இந்தப்பக்கம் வரக்கூடாது 😄

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

இன்னிக்கு வேலையாள் வந்து அண்ணனுக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஒராள் அனல் கக்கப்போற எதுக்கும் பின்னேரம் 7 லிருந்து 10 மணிக்குள் இந்தப்பக்கம் வரக்கூடாது 😄

நானும் நினைச்சேன்..ஆனாலும் நாங்களாக செய்திகளை எழுதிப் போடுவதில்லையே..😆

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற கொள்ளுப்பாடு காணாது என்று இவர்வேறு கிரகப்பிரவேசம் செய்ய (எரியிற வீட்டில விறகு எடுக்க)  ஆசைப்படுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/1/2021 at 10:25, கிருபன் said:

வடக்கில் வியூகம் வகுக்கும் கருணா! முதல் அறிவிப்பை வெளியிட்டார்

கிழக்கிலை வியூகம் வகுத்து முடிஞ்சுது இனி யாழ்ப்பாணியளுக்கு வியூகம் வகுக்கப்போறாராம்......அடுத்தவர் பிள்ளையானும் மண்வெட்டியை தூக்கிக்கொண்டு ஜப்னா போவாராக்கும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

கிழக்கிலை வியூகம் வகுத்து முடிஞ்சுது இனி யாழ்ப்பாணியளுக்கு வியூகம் வகுக்கப்போறாராம்......அடுத்தவர் பிள்ளையானும் மண்வெட்டியை தூக்கிக்கொண்டு ஜப்னா போவாராக்கும் 🤣

சூச்சூச்சு....... நோ பிரதேச வாதம்... 

முரளீதரனை தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுடன்  இணைக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் பிரதேசவாதம் என்று கத்தப் போறானுகள் சாமியோவ்.. 😀

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தவரிடமிருந்து 

இசுலாமியர்களிடமிருந்து

கிழக்கை மீட்டாச்சு

இனி

எஐமான் பந்தை கிளிநொச்சிக்கு  வீசிட்டான் போல .....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

சூச்சூச்சு....... நோ பிரதேச வாதம்... 

முரளீதரனை தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுடன்  இணைக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் பிரதேசவாதம் என்று கத்தப் போறானுகள் சாமியோவ்.. 😀

அப்ப.... அண்ணர் யாழ்ப்பாணியளை அடிச்சு கலையுங்கோடா சொல்லேக்கை அந்த பிரதேசவாசம் இல்லையா சார்? 😁

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள சொல்லுவம் நாளைக்கு அரசியலில் எதுவும் நடக்கலாம் 😎😎😎😎 ஏனென்றால் இலங்கை அரசியல் டிசைன் அப்படி 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்ப.... அண்ணர் யாழ்ப்பாணியளை அடிச்சு கலையுங்கோடா சொல்லேக்கை அந்த பிரதேசவாசம் இல்லையா சார்? 😁

யாழ்ப்பாணிக்கு மட்டும்தான் applicable ..🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

விட்டா ..ராஜபக்சேவே தமிழ் தேசிய சக்திகளோடு இணைந்து தேர்தலில் போட்டி போடுவார் போல கிடக்கு நிலவரம்கள் .. 👍

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விட்டா ..ராஜபக்சேவே தமிழ் தேசிய சக்திகளோடு இணைந்து தேர்தலில் போட்டி போடுவார் போல கிடக்கு நிலவரம்கள் .. 👍

தமிழ்த் தேசியக்கட்சிகளை இல்லாதொழிப்பது அல்லது தனக்கு கீழ் கொண்டுவருவதே நோக்கம். அது மெல்ல மெல்ல அபிவிருத்தி என்கிற பெயரில் நிறைவேறுகிறது. இன்னும் பிற மாற்றங்கள் அதனை உறுதி செய்கிறது. தேசியக் கட்சிகள் வேண்டுமென்றே விட்டுக்கொடுக்கின்றதா? அல்லது ஏமாற்றப்படுகின்றதா? என்கிற கேள்வி எழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத விடயம் – சிவஞானம்

625.500.560.350.160.300.053.800.900.160.

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது நேற்றைய தினம், கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த விநாயகமூர்த்தி முரளிதரன், தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிவஞானம், கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்வது தொடர்பாக எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என கூறியுள்ளார்.

https://thamilkural.net/newskural/mainnews/110628/

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவருக்கு கெத்து தான் ...வடக்கு அரசியல்வாதிகள் ஒழுங்காய் இருந்தால் இவர் ஏன் போய் வடக்கில் அரசியல் செய்யப் போறார் 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, ரதி said:

உண்மையில் இவருக்கு கெத்து தான் ...வடக்கு அரசியல்வாதிகள் ஒழுங்காய் இருந்தால் இவர் ஏன் போய் வடக்கில் அரசியல் செய்யப் போறார் 

 

உந்த கெத்து படலைலைக்கை கிடக்கட்டும்...
கிழக்கின் வெடிவெள்ளி இது வரைக்கும் கிழக்கிற்கு என்ன செய்தார்?

 

Bild könnte enthalten: 11 Personen, Personen, die stehen und im Freien

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2021 at 04:18, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விட்டா ..ராஜபக்சேவே தமிழ் தேசிய சக்திகளோடு இணைந்து தேர்தலில் போட்டி போடுவார் போல கிடக்கு நிலவரம்கள் .. 👍

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது இலகு என்று கணக்குப் போட்டுவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த கெத்து படலைலைக்கை கிடக்கட்டும்...
கிழக்கின் வெடிவெள்ளி இது வரைக்கும் கிழக்கிற்கு என்ன செய்தார்?

Image may contain: 9 people, people standing, people dancing and outdoor

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் அந்த வட்டத்துக்குள் இருப்பவ  யார் ?

Edited by பெருமாள்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உண்மையில் இவருக்கு கெத்து தான் ...வடக்கு அரசியல்வாதிகள் ஒழுங்காய் இருந்தால் இவர் ஏன் போய் வடக்கில் அரசியல் செய்யப் போறார் 

 

கடுப்பாக்கிட்டிங்க முதலில் கிழக்கு மக்களை பிள்ளையானும் அவரும் கவனிக்கட்டும் உங்களுக்கு உண்மை தெரிந்தும் சும்மா சங்கு ஊத  வேண்டாம் உண்மையில் உங்களுக்கு கிழக்கு தமிழ் மக்கள் மேல அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வந்துள்ளது சிங்களவர்களால் முஸ்லீம் களால் அதிக பாதிப்பு அடைவது கிழக்கு தமிழ் சனம்  தெரிந்தும் இதுவே என் அன்னார் செய்தால் கதை வேறு ....................

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎01‎-‎2021 at 23:05, பெருமாள் said:

கடுப்பாக்கிட்டிங்க முதலில் கிழக்கு மக்களை பிள்ளையானும் அவரும் கவனிக்கட்டும் உங்களுக்கு உண்மை தெரிந்தும் சும்மா சங்கு ஊத  வேண்டாம் உண்மையில் உங்களுக்கு கிழக்கு தமிழ் மக்கள் மேல அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வந்துள்ளது சிங்களவர்களால் முஸ்லீம் களால் அதிக பாதிப்பு அடைவது கிழக்கு தமிழ் சனம்  தெரிந்தும் இதுவே என் அன்னார் செய்தால் கதை வேறு ....................

உங்களுக்கு என்ன பிரச்சனை ? ....நான் எங்கு இதில் கடுப்பானேன்? ... நான் கடுப்பாகும் அளவிற்கு அப்படி என்ன கூடாத விசயம் நடந்தது ...சும்மா எழுத வேணும் என்பதற்காய் எழுத வேண்டாம் 

On ‎06‎-‎01‎-‎2021 at 22:56, பெருமாள் said:

Image may contain: 9 people, people standing, people dancing and outdoor

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் அந்த வட்டத்துக்குள் இருப்பவ  யார் ?

அது அவரது மகள் 
 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2021 at 04:18, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விட்டா ..ராஜபக்சேவே தமிழ் தேசிய சக்திகளோடு இணைந்து தேர்தலில் போட்டி போடுவார் போல கிடக்கு நிலவரம்கள் .. 👍

ஜவ்னா ஸ்டாலியன் என்று தேசிய வீரர்களை வைத்து கிரிக்கட் விளையாடி கோப்பையை தூக்கி கொண்டு வந்து பைலா போடலாம் என்றால் ....அது அரசியலிலும் நடக்கலாம்...😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.