Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை

1-134-696x522.jpg
 15 Views
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
 
இந்நிலையில், அந்த மக்களின் அவல நிலை குறித்து முக நுால் பதிவு ஒன்றில்,இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
 
“முதல் மாதம் –அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து எமது மாவட்டத்திற்குள் அத்துமீறி காணிகளை பிடித்தார்கள். காடுகளை அழித்தார்கள். முறையிட்டோம்.
ஆளுநர் சொன்னார், சோளம் நாட்ட வந்தவர்கள் 3 மாதத்தில் போய்விடுவார்கள் என்று.
IMG_0104.jpg
 
இரண்டாம் மாதம் சொந்த மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த பண்ணையாளர்களை விரட்டி அடித்தார்கள். கோறிக்கை வழங்கினோம்.
 
மாடு பயிரை மேய்கிறதாம் என்கிறார்கள். இந்த நாட்டின் வேலியே இனவாதம் முற்றி பயிரை மேய்வதை மறைத்து விட்டார்கள்.
IMG_8865.jpg
 
மூன்றாம் மாதம் முடிந்து போனதும் அங்கே 8ஆயிரம் ஏக்கர் அபகரிக்கப்பட்டிருந்தது. மன்னிக்கவும் அம்பாரை, பொலன்னறுவை மாவட்ட ஏழை சிங்கள மக்களால் பயிர் செய்கைக்காக மாத்திரம் துப்பரவு செய்யப்பட்டிருந்தது. போராடினோம்.
கூடி பேசி முடிவெடுப்போம் என்றார்கள். எத்தனை தடவை யாரோடு பேசினார்களோ தெரியவில்லை.
Image may contain: one or more people, people sitting and people sleeping
 
நான்காம் மாதம் அவர்களின் போதை தலைக்கேறிப்போனது. பண்ணையாளர்களை கட்டி வைத்து அடித்தார்கள்.
Image may contain: 1 person, sitting and outdoor
 
5அறிவு மாடுகளை 6 அறிவு மிருகங்கள் கொன்று குவித்தன.
இனி என்ன செய்வது?
 
உறவை சொல்லி கூடவே வளர்த்த மாடுகளை இழந்தோம்.
சொந்த நிலத்தை உரிமை கொண்டாட முடியவில்லை.
வாழ்வாதாரம் படுகுழியில் வாழவும் இனி வழியில்லை.
இனி இழப்பதற்கு உயிர் ஒன்றே மிச்சம்.
அவர்களின் நிகழ்ச்சி நிரல் இனிதே நிறைவேறுகிறது.
 
IMG_8676.jpg
 
மாடுகளின் நிலையே இனி உங்களுக்கும். வெளியேறு என அவர்கள் மொழியில் கூறிவிட்டார்கள்.
 
தமிழன் இந்த நாட்டின் பிரஜை என்று நாம் தாவறாகத்தான் நினைத்து விட்டோம்”
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

தமிழன் இந்த நாட்டின் பிரஜை என்று நாம் தாவறாகத்தான் நினைத்து விட்டோம்”

தமிழனும் இந்த நாட்டின் பிரசை என்று உறுதிப்படுத்த வந்தவனையும் நாம் தவறாகத்தான் நினைத்துத் துரத்தி விட்டோம்.😭

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மாட்டுக்கும் மனிதருக்கும் வித்தியாசம்  தெரியுமா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணர்மார் இரண்டு பேர் இருக்கினம் கவலை வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அண்ணர்மார் இரண்டு பேர் இருக்கினம் கவலை வேண்டாம்.

அவைக்கு இருப்பதை  மேய்க்கவே நேரம் போதாதே???

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

உங்களுக்கு மாட்டுக்கும் மனிதருக்கும் வித்தியாசம்  தெரியுமா???

சிங்களவனுக்கு நல்லாய் வித்தியாசம் தெரியும்.என் கண் முன் நடந்தது.ஒரு மாட்டை தவறுதாலாக கொன்றதுக்கு மலர்கள் வைத்து பிராயச்சிதம் செய்தவர்கள்.இப்ப இங்கு நடப்பது எனக்கு புதினமாக உள்ளது.அதுக்காக யாருக்கும் வெள்ளை அடிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுவைப்பிரியன் said:

சிங்களவனுக்கு நல்லாய் வித்தியாசம் தெரியும்.என் கண் முன் நடந்தது.ஒரு மாட்டை தவறுதாலாக கொன்றதுக்கு மலர்கள் வைத்து பிராயச்சிதம் செய்தவர்கள்.இப்ப இங்கு நடப்பது எனக்கு புதினமாக உள்ளது.அதுக்காக யாருக்கும் வெள்ளை அடிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

அதே தான் எனக்கும் புரியவில்லை ...யுத்தம் முடிந்து கொஞ்ச காலத்தில் ஊருக்கு போகும் போது ஏ 9 வீதியில் நிறைய மாடுகள் திரிந்தது ...எங்களை கூட்டிப் போனவர் சொன்னார் மாடுகளை கொல்ல கூடாது என்பது மகிந்தாவின் உத்தரவாம் .
 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள்போல் மனிதநேயம் மிக்கவர்களை இந்த உலகில் வேறு எங்கிலும் பார்க்கமுடியாது. 

மனிதாபிமான மீட்புநடவடிக்கை நடத்தியே ஒன்றரை லட்சம் தமிழர்களை கருணைக் கொலைசெய்த காருண்யவாதிகள் அல்லவா அவர்கள்!!!

சத்தியமாக நான் வெள்ளைதான் அடிக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

பொயின்ட் ; மனிதர்களை கொல்லும் அவர்கள் மாடுகளை கொல்ல மாட்டார்கள் ...அவர்களை பொறுத்த வரை மனிதனை விட  மாடு முக்கியம் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

பொயின்ட் ; மனிதர்களை கொல்லும் அவர்கள் மாடுகளை கொல்ல மாட்டார்கள் ...அவர்களை பொறுத்த வரை மனிதனை விட  மாடு முக்கியம் 

BJP யின் கொள்கைக்கும் சிங்களத்தின் கொள்கைக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. 😳

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விட அடக்குமுறை, பேராசை, சுயநலம், போலி வீரம்  இவற்றை அடைய  போலிப்போதனை முக்கியம். பொறுத்திருங்கள் எம்மிடம் வீரம் காட்டி முடிய, அது தன்னைத்தானே விழுங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

சிங்களவனுக்கு நல்லாய் வித்தியாசம் தெரியும்.என் கண் முன் நடந்தது.ஒரு மாட்டை தவறுதாலாக கொன்றதுக்கு மலர்கள் வைத்து பிராயச்சிதம் செய்தவர்கள்.இப்ப இங்கு நடப்பது எனக்கு புதினமாக உள்ளது.அதுக்காக யாருக்கும் வெள்ளை அடிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

சிங்களவனுக்கு நல்லா தெரியும். கேட்க நாதியற்றவனை தான் வெட்டலாம் என்று. வீதி வீதியா ஓட ஓட தமிழனை வெட்டியதை நேரில் கண்டவன். என்ன 4 தசாப்தங்களாக பிராயச்சித்தம் தேடக்கூட தேவைப்படாத உயிராய் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சிங்களவனுக்கு நல்லா தெரியும். கேட்க நாதியற்றவனை தான் வெட்டலாம் என்று. வீதி வீதியா ஓட ஓட தமிழனை வெட்டியதை நேரில் கண்டவன். என்ன 4 தசாப்தங்களாக பிராயச்சித்தம் தேடக்கூட தேவைப்படாத உயிராய் போச்சு.

திருப்பி மட்டும் அடிச்சு,வெட்டி  பாருங்கோ 
எத்தனை பேர் (வெள்ளைகள் உட்பட)  சாரணை மடிச்சு கட்டிவிட்டு வருவினம் நியாயம் கேட்க  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரஞ்சித் said:

சிங்களவர்கள்போல் மனிதநேயம் மிக்கவர்களை இந்த உலகில் வேறு எங்கிலும் பார்க்கமுடியாது. 

மனிதாபிமான மீட்புநடவடிக்கை நடத்தியே ஒன்றரை லட்சம் தமிழர்களை கருணைக் கொலைசெய்த காருண்யவாதிகள் அல்லவா அவர்கள்!!!

சத்தியமாக நான் வெள்ளைதான் அடிக்கிறேன்!

இதைத்தான் சொல்வது ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்டு.நான் எங்கை மனிநேயத்தைப்பற்றி எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

1-134-696x522.jpg

 

இந்தப் படம்... மிகவம் வருருந்தத் தக்கது,
அதற்குப்  பதில் கூற,  வேண்டிய  பொறுப்பு...
முன்நாள்  எதிர்க்கட்சி  தலைவர் சம்பந்தனுக்கும்..
இந் நாள்... இளிச்ச வாயன், சுமந்திரனுக்கும்  சமர்ப்பணம்.

உங்கள்.... குறிகோள்  அற்ற, அரசியலால்..
பசு, மாடு... கழுத்தில் வெட்டு, வாங்கி அழுகுது.

இதே.. வெட்டு... உங்கள், கழுத்தில் விழுந்து இருந்தால்...
என்ன செய்வீர்கள்?

லூஸு... வேலைகள் பார்த்துக் கொண்டிருக்காமல், 
உருப்படியான வேலைகளை பாருங்களேன்.

முக்கிய; செய்தி... இங்கு சரியான குளிர் என்ற படியால்... 
கிழட்டு  சம்பந்தன் ஊரில்.. இருந்து, "குறட்டை" விடுவது நல்லது.
ஐநா பக்கம்... எட்டியும், பாரக்கக் கூடாது. 
நீங்கள்... இது, வரை... கிழிச்சது  போதும், ஐயா..

அடுத்த... பிறவியில்.. நீங்கள்,
தமிழ் இனத்தில் வந்து, பிறந்து விடாதீர்கள்.
இப்படி... ஒரு,  கேவலம் கெட்ட...
பிச்சைக்  கார, எதிர்க் கட்சி  தலைவர்....
வேண்டவே... வேண்டாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.