Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்

இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என்பதோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்களுடைய இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும்.

மேலும் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே எமது கட்சியானது ஆளும் தரப்பிலேயே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

நமது பாரம்பரியத்தை, நமது மூதாதையர்களது எண்ணக்கருவை நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

குறித்த காலப்பகுதி வரும்போது அரசியலும் நிர்வாகமும் மக்களும் ஒன்றித்து பயணிக்க முடியும்.  இப்போதும் நாங்கள் ஆளும் தரப்பிலேயே இருக்கின்றோம். அந்த அடிப்படையில் கூட இந்த மண்ணுக்கு செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் நாம் தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இலங்கையில்-தமிழ்-சமூகம்/

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே TMVP ஆளும் தரப்பிலேயே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது : பிள்ளையான்

 
pillayan-4%2B%25281%2529.jpg


இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என்பதோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்களுடைய இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும்.

மேலும் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே எமது கட்சியானது ஆளும் தரப்பிலேயே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

நமது பாரம்பரியத்தை, நமது மூதாதையர்களது எண்ணக்கருவை நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

குறித்த காலப்பகுதி வரும்போது அரசியலும் நிர்வாகமும் மக்களும் ஒன்றித்து பயணிக்க முடியும். இப்போதும் நாங்கள் ஆளும் தரப்பிலேயே இருக்கின்றோம். அந்த அடிப்படையில் கூட இந்த மண்ணுக்கு செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் நாம் தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.battinews.com/2021/01/tmvp.html

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருந்த நா இப்படி ஆயிட்டே.. ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

எப்படி இருந்த நா இப்படி ஆயிட்டே.. ☹️

நமது மூதாதையர் எண்ணக்கரு...? அது என்னவென்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் தயவு செய்து சொல்லவும்...

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

நமது மூதாதையர் எண்ணக்கரு

தமது சொந்த இனத்திற்குத் துரோகம் செய்து எதிரியுடன் கூடிக் குலாவுவதாக இருக்குமோ அண்ணை? 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

நமது மூதாதையர் எண்ணக்கரு...? அது என்னவென்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் தயவு செய்து சொல்லவும்...

புரியலே.. 😀

1 minute ago, ரஞ்சித் said:

தமது சொந்த இனத்திற்குத் துரோகம் செய்து எதிரியுடன் கூடிக் குலாவுவதாக இருக்குமோ அண்ணை? 

புரிஞ்சதுங் தானே.. 😔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Kapithan said:

புரியலே.. 😀

Quote

நமது பாரம்பரியத்தை, நமது மூதாதையர்களது எண்ணக்கருவை நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.


என்னத்தை....?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தலைவர்கள் கூட்டங்களில் முன்வரிசையில் சோபாவிலா உட்காருவார்கள்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

எப்படி இருந்த நா இப்படி ஆயிட்டே.. ☹️

pillayan-4%2B%25281%2529.jpg

அந்த... உடல் மொழி (body language)
அவர், எப்படிப் பட்ட மனநிலையில்.. இருக்கின்றார் என்பதனை,
தெள்ளத்  தெளிவாக... காட்டுகின்றது.

அதிலும்... அவரின், சப்பாத்து வைத்திருக்கும் விதத்தையும், கையையும்...
கவட்டை...  விரித்து,  இருக்கும் கோணத்தையும்  பார்க்க.... அருவருப்பாக  உள்ளது.

இதே... ஆள், போன கிழமை வரை... 
"கை  விலங்குடன்"  மறியலில்,  இருந்தவர் என்பதனை...
நாம்... மறக்கவில்லை. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

pillayan-4%2B%25281%2529.jpg

அந்த... உடல் மொழி (body language)
அவர், எப்படிப் பட்ட மனநிலையில்.. இருக்கின்றார் என்பதனை,
தெள்ளத்  தெளிவாக... காட்டுகின்றது.

அதிலும்... அவரின், சப்பாத்து வைத்திருக்கும் விதத்தையும், கையையும்...
கவட்டை...  விரித்து,  இருக்கும் கோணத்தையும்  பார்க்க.... அருவருப்பாக  உள்ளது.

இதே... ஆள், போன கிழமை வரை... 
"கை  விலங்குடன்"  மறியலில்,  இருந்தவர் என்பதனை...
நாம்... மறக்கவில்லை. 

 

தகுதி இல்லாதவர்களை பதவியில் அமர்த்தி, இன்னும் எங்களை கடுப்பேத்துகிறான். சிங்களவன்  இருக்கிறவர்களையும் முட்டாள்களாக்கி  தன் பின்னால் அணி சேர்க்கும் திட்டம் இது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும்

ஆளுந்தரப்போடு கூடியிருந்து யாரோடு போராடப்போகிறார்? தமிழ்ச் சமூகம் வாழும்வரை அவர்களை விற்று தனது  கறிவேப்பிலை அரசியல் தொடருவார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavi arunasalam said:

spacer.png

கவி அருணாசலம்... நன்றி, ஐயா .
ஒருவர்... வேதனையில், குமுறியதை...
குறிப்பிட்ட  மணித்தியாலங்களுக்குள், 
வரை படமாக... வரைந்த....
உங்கள்... திறமைக்கு... தலை வணங்குகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம்.. நாமும் அதுவரை.. சாகும் வரை.. காட்டிக்கொடுத்து கொலை செய்து.... வெள்ளை ஜிப்பா சட்டையோடு.. சிங்கள எஜமான விசுவாசிகளாக வலம் வரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210123-123334.jpg 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

அந்த... உடல் மொழி (body language)
அவர், எப்படிப் பட்ட மனநிலையில்.. இருக்கின்றார் என்பதனை,
தெள்ளத்  தெளிவாக... காட்டுகின்றது.

அதிலும்... அவரின், சப்பாத்து வைத்திருக்கும் விதத்தையும், கையையும்...
கவட்டை...  விரித்து,  இருக்கும் கோணத்தையும்  பார்க்க.... அருவருப்பாக  உள்ளது.

இதே... ஆள், போன கிழமை வரை... 
"கை  விலங்குடன்"  மறியலில்,  இருந்தவர் என்பதனை...
நாம்... மறக்கவில்லை. 

pillayan-4%2B%25281%2529.jpg

இதை நாங்கள் "இராஜ கம்பீரம்" என்று சொல்வோம்..எண்டு நான் சொன்னால்.....?:cool:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

pillayan-4%2B%25281%2529.jpg

 

 

ஏன் சாதாரண மக்களைப்போல்

சாதாரண  கதிரையில் ஐயா  இருக்கமாட்டாரோ???

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20210123-123334.jpg 

குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு. நல்ல மப்பிலை சொல்லுறார், கண்களும் சொல்லுது.Bildergebnis für %e0%ae%ae%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் தலைவர்கள் கூட்டங்களில் முன்வரிசையில் சோபாவிலா உட்காருவார்கள்? 

பிரதம அதிதிகள் முன்வரிசையில் தான்  இருப்பார்கள் 

 

18 hours ago, satan said:

தகுதி இல்லாதவர்களை பதவியில் அமர்த்தி, இன்னும் எங்களை கடுப்பேத்துகிறான். சிங்களவன்  இருக்கிறவர்களையும் முட்டாள்களாக்கி  தன் பின்னால் அணி சேர்க்கும் திட்டம் இது.

 இவருக்கு மக்கள் தான் வாக்களித்தார்கள் அப்ப அந்த மக்கள் யார் சிங்களவர்களா  இல்லையே அம்மக்களின் வாக்கால்தான் அவருக்கு அரசு பதவி அளித்துள்ளது என்பதை கூட உங்களால் விளங்கிள்கொள்ளாமல் இருக்கிறதே 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிரதம அதிதிகள் முன்வரிசையில் தான்  இருப்பார்கள் 

 கூட்டங்களில் முக்கியமானவர்கள் முன்வரிசையில் சோபாவில் இருப்பது தான் எனக்கு புதுமையாக இருந்தது

 6365056-3x2-940x627.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு பியோனைக்கூட வேலைக்கமர்த்த அதிகாரமில்லை என்று முதலமைச்சராக இருந்தபோது புலம்பியுள்ளார் இந்த சந்திரகாந்தன். இதிலிருந்தே இவரை தெரிந்தெடுத்த மக்கள் மனநிலை புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஈழத்தில் தமிழர்கள் என்கிற இனம் இருக்கும்வரையில், அவர்களின் உரிமைகளையும், தாயகத்தினையும் சிங்களவனுக்குப் பங்குபோட்டு விற்கும் தமது அரசியல் இருப்பிற்கான போராட்டம் தொடரும் என்று அவர்கூறுகிறார்.

எவரும் இதனைத் தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டம் என்று தவறாக விளங்கிக்கொண்டால் அது அவரது பொறுப்பல்ல. 

எம்மை அழித்து, ஆக்கிரமிப்பவனின் கூலியாக, ஏவற்படை நாயாக இருக்கும் ஒருவரால் தமிழரின் உரிமைபற்றியும், அதற்கான போராட்டம்பற்றியும் பேசுவது அபத்தம் என்பதைப் புரியாத ஒருவரையா கிழக்கு மக்கள் தமது பிரதிநிதியாகத் தெரிவுசெய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.