Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா 

Ex-foreign secretary S Jaishankar new Indian foreign minister, Amit Shah  home minister - Setopati

தமக்கெதிராக முன்வைக்கபடும் என்று இலங்கை எதிர்பார்த்த பிரேரணைக்கு எதிராக நாடுகளின் ஆதரவினைத் திரட்டும் நடவடிக்கைகளில் ஐ நா வின் இலங்கை அதிகாரிகளும், வெளிவிவகார அமைச்சும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது நாம் அறிந்ததே. 

அந்தவகையில், தற்போது நடந்துமுடிந்துள்ள விவாதத்தில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் விவாதத்தில் கலந்து பேசியதாகத் தெரியவருகிறது.

பிரித்தானியா தலைமையிலான முக்கிய நாடுகள் இலங்கைக்கெதிரான இந்தப் பிரேரணையினை கொண்டுவந்திருந்தன. ஆனால், இந்தப் பிரேரணையினை ஏற்றுக்கொள்வதில்லை என்று இலங்கை அதனை முறியடிக்கும் விதமாகச் செயற்பட்டுவந்தது.

தனக்குச் சார்பான நாடுகளை  அணிதிரட்டும் நடவடிக்கைகளை இலங்கை முடுக்கிவிட்டிருந்தநிலையிலேயே இந்த விவாவதம் நடைபெற்றிருக்கிறது. 

ஐக்கிய ராச்சியம், நோர்வே, கனடா, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் நிலையினைக் கடுமையாக விமர்சித்திருந்தன.

ஆனாலும், இலக்கையின் சீனச் சார்பு நிலைப்பாட்டினால் அண்மைக்காலமாக அதிருப்தியுற்றுவரும் நாடுகளான இந்தியாவும், ஜப்பானும் இவ்விவாதத்தில் கலந்துகொள்வதில்லையென்று நடுநிலைமை வகித்தன. மேற்கிற்குச் சார்பான நாடாகவிருந்தாலும், அவுஸ்த்திரேலியா இலங்கை தொடர்பாக மிதவாதப் போக்கினையே இவ்விவாதத்தில் கடைப்பிடித்தது.

இலங்கைக்கு ஆதரவாக விவாதத்தில் பங்காற்றிய 21 நாடுகளில் 10 நாடுகள்  ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சிலில் அங்கத்துவம் வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

இலங்கைக்கு ஆதரவாகவும், பிரேரணையினை எதிர்த்தும் விவாதித்த நாடுகளாவன, 
ரஷ்ஷியா, சீனா, பாகிஸ்த்தான், ஈரான், வியட்னாம், மாலைதீவுகள், கியூபா, நிக்கராகுவா, எரித்ரியா (????? நீயுமா), நேபாளம், கம்போடியா, லாவோஸ், அசர்பைஜான், பெலாரஸ், வடகொரியா, கேபொன், பிலிப்பைன்ஸ், சிரியா மற்றும் எகிப்து என்பனவாகும்.

தமிழரின் முதுகில் மீண்டும் ஒருமுறை ஓங்கிக் குத்தியுள்ள இந்தியா இலங்கையின் காலில் விழுந்திருக்கிறது என்பதே உண்மை. சுமந்திரனும், சொல்கெயிமும் கூறும் இந்தியாவிடம் போங்கள் எனும் கோரிக்கைக்கைக்கு என்னவாச்சு?

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பாஇந்த ஆய்வாளர்,

தமிழருக்குச் சார்பாக நின்று முதுகில் குத்தாவிட்டால்தான் ஆச்சரியமடைய வேண்டும். இது தெரியாத ஆய்வாளர் எல்லாம் ஒரு ஆய்வாளரா..

😂

இந்தியா 1985 இலேயே தமிழ் ஈழக்கோரிக்கையை முற்றாக நிராகரித்து ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தது. அதன் பின் 1987 ல் இலவங்கை இந்திய ஒப்ந்தம்,  இந்திய இராணுவ- புலிகள் யுத்தம் நடைபெற்று  1991 ராஜிவ் கொலையின் பின்னர் முற்றாகவே ஶ்ரீலங்கா அரசுக்கு சார்பாகவே  வெளிப்படையாக செயற்பட்டு வருகிறது.  இப்படியிருக்க, இப்போதும் இந்தியா முதுகில்  குத்திவிட்டது என்றும் துரோகம் செய்துவிட்டதாகவும் அடிக்கடி இப்படி ஒப்பாரி வைப்பது சுத்த பைத்தியக்காரத்தனம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இந்தியா 1985 இலேயே தமிழ் ஈழக்கோரிக்கையை முற்றாக நிராகரித்து ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தது. அதன் பின் 1987 ல் இலவங்கை இந்திய ஒப்ந்தம்,  இந்திய இராணுவ- புலிகள் யுத்தம் நடைபெற்று  1991 ராஜிவ் கொலையின் பின்னர் முற்றாகவே ஶ்ரீலங்கா அரசுக்கு சார்பாகவே  வெளிப்படையாக செயற்பட்டு வருகிறது.  இப்படியிருக்க, இப்போதும் இந்தியா முதுகில்  குத்திவிட்டது என்றும் துரோகம் செய்துவிட்டதாகவும் அடிக்கடி இப்படி ஒப்பாரி வைப்பது சுத்த பைத்தியக்காரத்தனம். 

அதே  தான் நமக்கு எப்போதே குத்திவிட்டார்கள் முதுகில் 

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தியா முதுகில்  குத்திவிட்டதை இன்னும் உணராதவர்கள் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, tulpen said:

இந்தியா 1985 இலேயே தமிழ் ஈழக்கோரிக்கையை முற்றாக நிராகரித்து ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தது.

சார்! 85க்கு பின்னர் இன்று வரைக்கும் இந்தியாவால் ஈழத்தமிழருக்கு என்ன உரிமையை வாங்கி கொடுக்க முடிந்தது ?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

இந்தியா 1985 இலேயே தமிழ் ஈழக்கோரிக்கையை முற்றாக நிராகரித்து ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தது. அதன் பின் 1987 ல் இலவங்கை இந்திய ஒப்ந்தம்,  இந்திய இராணுவ- புலிகள் யுத்தம் நடைபெற்று  1991 ராஜிவ் கொலையின் பின்னர் முற்றாகவே ஶ்ரீலங்கா அரசுக்கு சார்பாகவே  வெளிப்படையாக செயற்பட்டு வருகிறது.  இப்படியிருக்க, இப்போதும் இந்தியா முதுகில்  குத்திவிட்டது என்றும் துரோகம் செய்துவிட்டதாகவும் அடிக்கடி இப்படி ஒப்பாரி வைப்பது சுத்த பைத்தியக்காரத்தனம். 

 

பெருமாளை இந்தியாவுக்கு அனுப்பி, ஈழத்தமிழர் சார்பாக மோடியிடம் பேசி, தமிழீழத்துக்கு ஆதரவு கேட்டுப்பார்க்கலாமா?🙂

2 hours ago, குமாரசாமி said:

சார்! 85க்கு பின்னர் இன்று வரைக்கும் இந்தியாவால் ஈழத்தமிழருக்கு என்ன உரிமையை வாங்கி கொடுக்க முடிந்தது ?

சாரி, ஏன் இந்தியா ஈழத்தமிழருக்கு உரிமை வாங்கி கொடுக்க வேண்டும்…? அதோடு எங்கே உரிமை விற்கிறார்கள் என்று சொன்னால் தானே பெருமாள் மோடியிடம் வாங்கித்தரச்சொல்லி கேட்கலாம்? 😇

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

பெருமாளை இந்தியாவுக்கு அனுப்பி, ஈழத்தமிழர் சார்பாக மோடியிடம் பேசி, தமிழீழத்துக்கு ஆதரவு கேட்டுப்பார்க்கலாமா?🙂

சாரி, ஏன் இந்தியா ஈழத்தமிழருக்கு உரிமை வாங்கி கொடுக்க வேண்டும்…? அதோடு எங்கே உரிமை விற்கிறார்கள் என்று சொன்னால் தானே பெருமாள் மோடியிடம் வாங்கித்தரச்சொல்லி கேட்கலாம்? 😇

கற்பகம் மாதிரி நாலுபேர் இருந்துருந்தால் இப்பணியைல்லாம் நடந்திருக்குமா. கற்பகம் மாதிரி படித்த நாலுமனிதரிடம் கேட்டிப்பார்ப்பமர எப்படி எங்கள் பிரச்சனையை தீர்க்கலாம் என்று

7 hours ago, குமாரசாமி said:

சார்! 85க்கு பின்னர் இன்று வரைக்கும் இந்தியாவால் ஈழத்தமிழருக்கு என்ன உரிமையை வாங்கி கொடுக்க முடிந்தது ?

ஏன் அவர்கள் வாங்கி கொடுக்க வேண்டும்? அவர்களது தலையீடு 1987 ல் எம்மால் நிராகரிக்கப்பட்டு விட்டதே! 

பெறக்கூடிய எமது உரிமைகளைக் கூட பெற எந்த முயற்சியும் எடுக்காமல்  “அடைந்ததால் மகாதேவி இன்றேல் மரணதேவி”என்ற பொறுப்பற்ற அதிகார வெறி அரசியலில் நடவடிக்கைகளை மேற்கொண்ட எமது தலைமைகளுக்கு இல்லாத அக்கறை வெளித்தரப்புகளுக்கு இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.

குறிப்பு: எமது தலைமைகள் என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எல்லா தலைமைகளுக்கும் பொருந்தும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பெறக்கூடிய எமது உரிமைகளைக் கூட பெற எந்த முயற்சியும் எடுக்காமல்  “அடைந்ததால் மகாதேவி இன்றேல் மரணதேவி”என்ற பொறுப்பற்ற அதிகார வெறி அரசியலில் நடவடிக்கைகளை மேற்கொண்ட எமது தலைமைகளுக்கு இல்லாத அக்கறை வெளித்தரப்புகளுக்கு இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.

மகாதேவி ஒரு மாகாராணியார் அல்லது அவர்களுக்கு பிடித்த சினிமா நடிகை போலும்.
என்ன செய்வது அவர்களை திருமணம் செய்ய சம்மதிக்கும் பெண்ணை பேசி பார்க்க கூட விரும்பாமல் எச்சில் இலை சோறு வேண்டாம் என்கிறார்கள். அப்போ மரணதேவி தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

ஏன் அவர்கள் வாங்கி கொடுக்க வேண்டும்? அவர்களது தலையீடு 1987 ல் எம்மால் நிராகரிக்கப்பட்டு விட்டதே! 

பெறக்கூடிய எமது உரிமைகளைக் கூட பெற எந்த முயற்சியும் எடுக்காமல்  “அடைந்ததால் மகாதேவி இன்றேல் மரணதேவி”என்ற பொறுப்பற்ற அதிகார வெறி அரசியலில் நடவடிக்கைகளை மேற்கொண்ட எமது தலைமைகளுக்கு இல்லாத அக்கறை வெளித்தரப்புகளுக்கு இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.

குறிப்பு: எமது தலைமைகள் என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எல்லா தலைமைகளுக்கும் பொருந்தும். 

2009க்கு பின்னர் ஒன்றுபட்ட ஒன்றுக்குள் என்கிறார்களே? 
அல்லது பட்டத்தின் நூல் அறுந்து போனது போல் போனதுதானா? சந்தர்ப்பமேயில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

ஏன் அவர்கள் வாங்கி கொடுக்க வேண்டும்? அவர்களது தலையீடு 1987 ல் எம்மால் நிராகரிக்கப்பட்டு விட்டதே! 

பெறக்கூடிய எமது உரிமைகளைக் கூட பெற எந்த முயற்சியும் எடுக்காமல்  “அடைந்ததால் மகாதேவி இன்றேல் மரணதேவி”என்ற பொறுப்பற்ற அதிகார வெறி அரசியலில் நடவடிக்கைகளை மேற்கொண்ட எமது தலைமைகளுக்கு இல்லாத அக்கறை வெளித்தரப்புகளுக்கு இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.

குறிப்பு: எமது தலைமைகள் என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எல்லா தலைமைகளுக்கும் பொருந்தும். 

 

தலையீடு???

அதாவது இந்தியா  நல்லது செய்ய  விளைந்தது???

தமிழர்  தரப்பு  போட்டுடைத்தது???

இந்த வகை அறிவுரைகளையும்  அனுபவங்களையும்   வைத்துக்கொண்டு 

தமிழர்களின் தலைமைகளுக்கு ஆலோசனை??

 

 

.இலங்கையில் இருந்து இந்தியாவை சீனா கழுத்தை பிடித்து தள்ளும் நோக்கத்தில் தமிழரையும் சிங்களவரையும் சமாதானம் ஆக்க நினைத்தால் காந்தி தேசத்தின் நிலை பரிதாபம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.