Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....?

இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...!

அந்த நாட்களில்  எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன?  மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம்  சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன்  உள்ளூர்  மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்!

அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்!

கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு  உயர்ந்து போயிருக்கும்!

சந்திரனின் மனதிலிருந்து  ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! 

இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி,  குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது!

தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது!

வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்!

அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து  வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..!

இப்போது அவனை ஒருவருக்கும்  தெரியாது..! ஆரோ  வெளிநாட்டுக்காரர்  போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக்  காரனாக்கி விட்டதை நினைக்கக்  காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்!

வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! 

நயினாதீவு நாக  பூஷணி  அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது!

அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்!  ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன்  நினைத்துக் கொள்வதுண்டு!

தேர்த்  திருவிழா பார்க்க வந்து  அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த  இருபத்தியொரு பேரும் ஒரு முறை  வந்து  நினைவில் போனார்கள்!

வள்ளம் எழாத்துப் பிரிவைத்  தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்!

கொஞ்சம்  தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத்  தொடங்கியது!

முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது!

இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்!

முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்!

இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..!

முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம்  ஓடாமையெல்லோ  கிடக்குது!

வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள்.

அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட  எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்!

இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும்,  சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை!

இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்!

தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன!

ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்!

அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்!

இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது!

அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்!

மாவலி  இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது  போல இருந்தது!

அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள்  மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது!

 

அடுத்த பகுதியில் முடியும்…!

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புங்கையூரன் said:

அடுத்த பகுதியில் முடியும்…!

கதை தொடங்கவேயில்லை! எப்படி அடுத்த பகுதியில் முடியும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

கதை தொடங்கவேயில்லை! எப்படி அடுத்த பகுதியில் முடியும்?

யூ மீன் காதல்?

சுருக்கி எழுதலாம் எண்டு யோசிக்கிறன், கிருபன்! 😇

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, புங்கையூரன் said:

யூ மீன் காதல்?

சுருக்கி எழுதலாம் எண்டு யோசிக்கிறன், கிருபன்! 😇

இது சுருக்கி எழுதுகிற விடயமல்ல பெருக்கி எழுதுகிற விடயம்......யோசிக்காமல் எழுதுங்கோ......!   😁

பல நினைவுகளை கொண்டு வருகுது.......!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

இது சுருக்கி எழுதுகிற விடயமல்ல பெருக்கி எழுதுகிற விடயம்......யோசிக்காமல் எழுதுங்கோ......!   😁

பல நினைவுகளை கொண்டு வருகுது.......!

பெருக்கி எழுதினால் காதலியின் பேரன் வந்து கதவை தட்டினால்???😆 

தொடருங்கள் அண்ணா

அருமையான எழுத்து நடை

பரிச்சயமான இடங்கள் பெயர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு தொடக்கமே, தொடருங்கள். தாலாட்டுவது பெண்கள் தானே, வள்ளத்திற்கு பெண்கள் பெயர்தான் சரி

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடு தீவுக்குள் தொடங்கி நயினாதீவைத் தொட்டு நெடுந்தீவுக்குள் இறங்கி விட்டீர்கள்.  அந்த சந்திரன் அண்னாவையும் எனக்கு தெரியும் போலக்கிடக்கு  அருமையாக இருக்கிறது கதை..எனக்கும் ஊரின் நினைவுகள் உள்ளுக்குள் வந்து உசுப்புகிறது.அன்பின் புங்கையூரான் அவர்களே. தொடருங்கள்

4 hours ago, புங்கையூரன் said:

யூ மீன் காதல்?

சுருக்கி எழுதலாம் எண்டு யோசிக்கிறன், கிருபன்! 😇

அந்த வித்தையை எனக்கு கற்றும் தாருங்கள். என்னால் எல்லாம் ஒரு போதும் சுருக்கி எழுத முடியாது. 

ஆனால் இந்தக் கதைதை இன்னொரு பகுதியுடன் முடித்தால், அது பெரிய நல்ல நாவல் ஒன்றின் முன் குறிப்பு மாதிரி ஆக சுருக்கமாக அமைந்து விடவும் வாய்ப்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும். உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது, போல் தெரிகிறது.  விரிவாக எழுதவும். காதலும் நினைவுகளும் ஏற்றும் அழியாதவை    

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் எம் தீவகக் கடல்களில் பயணித்து ஏழாத்துப்பிரிவு எனப்படும் கடல் சுழலில் அலைபட்டு எம் பழைய ஞாபகங்களை தட்டி எழுப்பி இருக்கிறீர்கள். வழக்கம்போல் உங்கள் எழுத்து லாவகமாகச் செல்கிறது. தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் தொடக்கமே அட்டகாசமா இருக்கு 

நைனாதீவுக்கு நான் சென்ற நேரம் நம்ம கள  உறவு ஜீவன் சிவா அண்ண கூட்டிக்கொண்டு சென்றார் அப்போது எனக்கு முன் ஓர் அழகிய  2 பெண் பிள்ளைகள் ஏன்டா இதுகளுல ஒன்றைப்பார்த்து கல்யாணம் கட்டிட்டு இங்க செட்டில் ஆகன்டா என்றார் மனுசன்  அந்த நேரம் காஞ்ச மாடு கம்பில பாயுற ரைம்  கல்யாணம் ஆகல எனக்கு புள்ள ஓகே சொன்னா நான் வேண்டாம் என்றா சொல்லப்போறன் என மனதுக்குள் நினைத்துக்கொண்டன் இந்த யாழ்ப்பாண சனம் மட்டக்களப்பார கல்யாணம்  கட்டுமா? குறிப்பு அது இது என எக்கச்செக்க பிரச்சினை வரும்  நான் யோசித்து அவளப்பார்ப்போம் என முன்னே நிமிர்ந்தேன் ஏனென்றால் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம்  அவளைப்பார்க்கிறேன் . அவளும் என்னைப்பார்க்கிறாள் ஆகா அந்தப்பயணம் நெடுந்தீவுக்கும் செல்லாதா என நான் நினைத்தால் நைனாதீவில் படகு கரைதட்ட நான் முதலில் பாய்ந்து தரையில் இறங்கினன் அண்ணன் ஜீவன் சிவாவை வெளியே இழுத்து எறியாத குறையாக அவளை தூக்கிவிட கையை கொடுத்தேன் அவளும் சிரித்துவிட்டு கையை கொடுத்தாள் மெதுவாக தூக்க மனுசன் அங்கால திரும்பிட்டு நான் இந்த கூத்தையெல்லாம் பார்க்கல என ஓடிட்டார் பின்னர் மடத்தில் சோறு சாப்பிட போனோம் அங்கேயே நின்றாள் பார்வைகள் மட்டும் பேசி கதைத்து விடை பெற்றது .


குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யோசிக்க வேண்டாம் அக்னீ இதையெல்லாம் போய் சொல்ல மாட்டார் ......!  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, புங்கையூரன் said:

முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது!

இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்!

முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்!

இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..!

முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம்  ஓடாமையெல்லோ  கிடக்குது!

ஊருக்கு ஊர் ஒரு குசும்பனாவது இருப்பாங்கள்.😁
தொடருங்கள் புங்கையர். கதை வித்தியாசமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாவ் தொடக்கமே அட்டகாசமா இருக்கு 

நைனாதீவுக்கு நான் சென்ற நேரம் நம்ம கள  உறவு ஜீவன் சிவா அண்ண கூட்டிக்கொண்டு சென்றார் அப்போது எனக்கு முன் ஓர் அழகிய  2 பெண் பிள்ளைகள் ஏன்டா இதுகளுல ஒன்றைப்பார்த்து கல்யாணம் கட்டிட்டு இங்க செட்டில் ஆகன்டா என்றார் மனுசன்  அந்த நேரம் காஞ்ச மாடு கம்பில பாயுற ரைம்  கல்யாணம் ஆகல எனக்கு புள்ள ஓகே சொன்னா நான் வேண்டாம் என்றா சொல்லப்போறன் என மனதுக்குள் நினைத்துக்கொண்டன் இந்த யாழ்ப்பாண சனம் மட்டக்களப்பார கல்யாணம்  கட்டுமா? குறிப்பு அது இது என எக்கச்செக்க பிரச்சினை வரும்  நான் யோசித்து அவளப்பார்ப்போம் என முன்னே நிமிர்ந்தேன் ஏனென்றால் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம்  அவளைப்பார்க்கிறேன் . அவளும் என்னைப்பார்க்கிறாள் ஆகா அந்தப்பயணம் நெடுந்தீவுக்கும் செல்லாதா என நான் நினைத்தால் நைனாதீவில் படகு கரைதட்ட நான் முதலில் பாய்ந்து தரையில் இறங்கினன் அண்ணன் ஜீவன் சிவாவை வெளியே இழுத்து எறியாத குறையாக அவளை தூக்கிவிட கையை கொடுத்தேன் அவளும் சிரித்துவிட்டு கையை கொடுத்தாள் மெதுவாக தூக்க மனுசன் அங்கால திரும்பிட்டு நான் இந்த கூத்தையெல்லாம் பார்க்கல என ஓடிட்டார் பின்னர் மடத்தில் சோறு சாப்பிட போனோம் அங்கேயே நின்றாள் பார்வைகள் மட்டும் பேசி கதைத்து விடை பெற்றது .


குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀

ஓ....தம்பியர் ஊர் பாக்க போன இடத்திலையும் நூல் விட்டு பாத்திருக்கிறார்....😎

மற்றது ராசன் நைனாதீவு இல்லை நயினாதீவு. நீங்கள் டெய்லி காத்தான்குடியை ஊடறுத்து போய் வாறதாலை நைனாவிலையே நிக்கிறியள்.😜

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀

ஆகா.......சிங்கன் வசமா மாட்டி. இதை வைச்சே ஆளை கொஞ்ச நாளைக்கு வறுத்தெடுக்கலாம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

சூடை மீனும்,

முன்னர் மீன் வாங்கப் போனால் சூடை அல்லது சூவாரை பொரியலுக்கு வாங்குவேன்.

13 hours ago, புங்கையூரன் said:

அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..!

வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்.
குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்.

https://ta.m.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

இது சுருக்கி எழுதுகிற விடயமல்ல பெருக்கி எழுதுகிற விடயம்......யோசிக்காமல் எழுதுங்கோ......!   😁

பல நினைவுகளை கொண்டு வருகுது.......!

பெருக்கலாம் தான் சுவியர்...!

கன காலமாய்க் கராச்சுக்குள்ள, பார்க் பண்ணியிருந்த காரை வெளியால எடுத்துக் கொஞ்சம் எண்ணெய், தண்ணியைக் காட்டிப் போட்டு....கை வேயில ஓடக் கொஞ்சம் பயமாய்க் கிடக்குது!

யாழ் களம் முந்தி மாதிரி இல்லை!  மிகவும் தரமான கவிதைகளும், கவிதைகளும் இப்போது அதில் பதியப் படுகின்றன..!

20 hours ago, விசுகு said:

பெருக்கி எழுதினால் காதலியின் பேரன் வந்து கதவை தட்டினால்???😆 

மிக்க நன்றி, விசுகர்....!

பேத்தி  தான் வந்து தட்டினாலும்.....தட்டுவா!😜

19 hours ago, உடையார் said:

நன்றாக இருக்கு தொடக்கமே, தொடருங்கள். தாலாட்டுவது பெண்கள் தானே, வள்ளத்திற்கு பெண்கள் பெயர்தான் சரி

வரவுக்கும், கருத்துக்கும் நன்றி, உடையார்...!

ஆட்டுவித்தால்.....யாரொருவர் ஆடாதாரோ......கண்ணா...!

ஆனால்....இது ஒரு குழந்தை பாடும் தாலாட்டு...!  😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2021 at 00:17, பசுவூர்க்கோபி said:

புங்குடு தீவுக்குள் தொடங்கி நயினாதீவைத் தொட்டு நெடுந்தீவுக்குள் இறங்கி விட்டீர்கள்.  அந்த சந்திரன் அண்னாவையும் எனக்கு தெரியும் போலக்கிடக்கு  அருமையாக இருக்கிறது கதை..எனக்கும் ஊரின் நினைவுகள் உள்ளுக்குள் வந்து உசுப்புகிறது.அன்பின் புங்கையூரான் அவர்களே. தொடருங்கள்

நன்றி.... பசுவூர்க் கோபி..!

சந்திரனை உங்களுக்குத் தெரியும் போல உள்ளதா? மிகவும் நல்லது!

சந்திரன் அடுத்த முறை...அங்கு வரும்போது உங்களைக் கட்டாயம் சந்திக்கும் படி சொல்லி விடுகின்றேன்...! 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2021 at 00:50, நிழலி said:

அந்த வித்தையை எனக்கு கற்றும் தாருங்கள். என்னால் எல்லாம் ஒரு போதும் சுருக்கி எழுத முடியாது. 

ஆனால் இந்தக் கதைதை இன்னொரு பகுதியுடன் முடித்தால், அது பெரிய நல்ல நாவல் ஒன்றின் முன் குறிப்பு மாதிரி ஆக சுருக்கமாக அமைந்து விடவும் வாய்ப்பு உள்ளது.

வித்தையைக் கற்றுத் தருவது....பிரச்சனையில்லை,நிழலி!

காதலை ஒரு நாளும் சுருக்கக் கூடாது! உடன் படுகின்றேன்!

முன்னர் அலைமகள் என்று உறவு யாழில் இருந்தார்...உங்கட கனடாப் பக்கம் என்று தான் நினைவு!

அவர் எழுதிய கருத்தொன்று  அப்படியே ....மனதில் பதிந்து போய் விட்டது!

யாரோ எழுதிய காதல் கதையொன்றுக்கு அவர் எழுதிய கருத்து இது தான்...!

குளிர் காலம் வந்து விட்டால்....எல்லோருடைய பழைய காதலிகளும் வரிசையில....வரத் துவங்குவினம்!

அந்தக் கருத்துத் தான்....இந்தக் கதையை எழுத உந்து கோலாக இருந்தது....!

உங்கள் ஆலோசனைப் படி....விதி விட்ட வழியே நடக்கட்டும் என்று முடிவெடுத்து விட்டேன்! 🥰

On 3/3/2021 at 03:31, நிலாமதி said:

பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும். உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது, போல் தெரிகிறது.  விரிவாக எழுதவும். காதலும் நினைவுகளும் ஏற்றும் அழியாதவை    

வணக்கம்.....நிலாக்கா!

உங்களுடைய கருத்தைப் பார்த்த பின்னர்.....கையைக் காலை நீட்டிக் கருத்தெழுதக் கொஞ்சம் பயமாய்க் கிடக்கு!😀

விரிக்கக் கூடிய அளவுக்கு விரிவாக எழுத முயற்சிக்கிறேன்!நன்றியும்...அன்பும்....!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர் ..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2021 at 04:22, Kavallur Kanmani said:

மீண்டும் எம் தீவகக் கடல்களில் பயணித்து ஏழாத்துப்பிரிவு எனப்படும் கடல் சுழலில் அலைபட்டு எம் பழைய ஞாபகங்களை தட்டி எழுப்பி இருக்கிறீர்கள். வழக்கம்போல் உங்கள் எழுத்து லாவகமாகச் செல்கிறது. தொடருங்கள்

நன்றி....காவலூர் கண்மணி..!

வட துருவத்தில் பிறந்த துருவக் கரடிக்கு.....மைனஸ் மூன்று....பாகை தானே....கோடை காலம்...!

தீவகத்தில் பிறந்தவனுக்குக் கடலின் அலைகள் எழுப்பும்  சத்தம் தானே...சங்கீதம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2021 at 04:39, தனிக்காட்டு ராஜா said:

வாவ் தொடக்கமே அட்டகாசமா இருக்கு 

நைனாதீவுக்கு நான் சென்ற நேரம் நம்ம கள  உறவு ஜீவன் சிவா அண்ண கூட்டிக்கொண்டு சென்றார் அப்போது எனக்கு முன் ஓர் அழகிய  2 பெண் பிள்ளைகள் ஏன்டா இதுகளுல ஒன்றைப்பார்த்து கல்யாணம் கட்டிட்டு இங்க செட்டில் ஆகன்டா என்றார் மனுசன்  அந்த நேரம் காஞ்ச மாடு கம்பில பாயுற ரைம்  கல்யாணம் ஆகல எனக்கு புள்ள ஓகே சொன்னா நான் வேண்டாம் என்றா சொல்லப்போறன் என மனதுக்குள் நினைத்துக்கொண்டன் இந்த யாழ்ப்பாண சனம் மட்டக்களப்பார கல்யாணம்  கட்டுமா? குறிப்பு அது இது என எக்கச்செக்க பிரச்சினை வரும்  நான் யோசித்து அவளப்பார்ப்போம் என முன்னே நிமிர்ந்தேன் ஏனென்றால் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம்  அவளைப்பார்க்கிறேன் . அவளும் என்னைப்பார்க்கிறாள் ஆகா அந்தப்பயணம் நெடுந்தீவுக்கும் செல்லாதா என நான் நினைத்தால் நைனாதீவில் படகு கரைதட்ட நான் முதலில் பாய்ந்து தரையில் இறங்கினன் அண்ணன் ஜீவன் சிவாவை வெளியே இழுத்து எறியாத குறையாக அவளை தூக்கிவிட கையை கொடுத்தேன் அவளும் சிரித்துவிட்டு கையை கொடுத்தாள் மெதுவாக தூக்க மனுசன் அங்கால திரும்பிட்டு நான் இந்த கூத்தையெல்லாம் பார்க்கல என ஓடிட்டார் பின்னர் மடத்தில் சோறு சாப்பிட போனோம் அங்கேயே நின்றாள் பார்வைகள் மட்டும் பேசி கதைத்து விடை பெற்றது .


குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀

நயினா தீவும் நல்ல ஒரு இடம், தனி!

சிலப்பதிகாரத்தில் வரும் மணிபல்லவம் என்னும் பெயருள்ள தீவும் இது தான்!

கௌதம புத்தர் நயினாதீவு ஊடாகத் தான்..இலங்கைக்கு வந்தார் என்று...குறிகாட்டுவான் துறையில் எழுதியிருந்தார்கள்!

அந்தக் காலத்தில்...இராமர் பாலத்தால் அவர் நடந்து வந்திருக்கும் சாத்தியங்களே அதிகம் உள்ளன!

அவரைக் காரில் கொண்டு திரிந்தது போல...இப்போது புத்த பிக்குமார் சிலர் கதை விடுகின்றார்கள்!

யாழ், மட்டக்களப்பு இளைஞர்களில் கைகள் குடும்பம் என்னும் கயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன!

கையைக் கொடுத்து அவளைத் தூக்கி விடுவதுடன் கையைக் காட்டி விட வேண்டியது தான்!

இப்போது கையைக் காலைக் கொஞ்சம் நீட்ட முடியும் என்று நம்புகின்றேன்!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எம்முடன் வேம்படியில் படித்த நிர்மலா என்ற பெண்ணும் அப்படக்கில் வெட்டிக் கொல்லப்பட்டதாக அறிந்தேன். உணக்களுக்கு அவளைத் தெரியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.