Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்?

சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார் என்பது பிழை

கையை விரித்து பாபு செலவு செய்தார்

காதலுக்கு உதவினார்

பால்கடைக்கு கைகொடுத்தார் 

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் படுகொலை தொடர்பில், வெளிச்சத்துக்கு வராததும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக்கூடாத கதைகள் பல உள்ளன. அதுதொடர்பில், சுதத் சில்வா, சகோதர பத்திரிகையான ‘லங்காதீப’விடம் பேசியுள்ளார்.  

சுதத் சில்வா, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் கடமையாற்றிய உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். அரச தலைவர்களுக்கு மிகநெருக்கமாக இருந்த அவர், ‘தகவல் களஞ்சியம்’ போன்றவர். அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இக்கட்டுரை எழுதப்பட்டது.

ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் கடைசி தருணம் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றையதினம், ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணி, இரண்டு வழிகளில் வந்துகொண்டிருந்தது. மெசஞ்சர் வீதி பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். பகல் 12.15யை அண்மித்திருந்தது.

“சுதத், மைத்தானத்தில் மக்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்”?  

ஜனாதிபதி பிரேமதாஸ சுதத் சில்வாவிடம் கேட்டார். அப்போது, பிரேமதாஸ, சுகததாஸ உள்ளரங்கத்துக்கு அண்மையிலுள்ள வீதியொன்றில் இருந்தார்.

 “சேர், மைதானம் நிரம்பி வழிகிறது” என ஜனாதிபதியிடம் சுதத் தெரிவித்தார். 

அந்த வசனத்தை கேட்டவுடன், பிரேமதாஸவின் முகத்தில் ஒருவிதமான புத்துணர்ச்சி தென்பட்டது. பெரும் சந்தோஷம் சூழ்கொண்டிருந்தது. அதற்கான காரணங்களும் இருந்தன. ஐ.தே.கவின் பிரபலங்களான லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க ஆகிய இருவரும், கட்சியில் இருக்கவில்லை. ஜனாதிபதி பிரேமதாஸ, தனியாகவே மே தினப் பேரணியை நடத்தினார். அதில், பெருந்திரளான மக்கள் கூட்டத்தை கூட்ட முடியாமல் போய்விடுமோ, என்ற பயம் அவருக்கு இல்லாமலும் இல்லை.  

சுகததாஸ, விளையாட்டரங்குக்கு அருகில் வாகனத்திலிருந்து இறங்கிய ஜனாதிபதி பிரேமதாஸ, ஆமர்வீதிவரை நடந்தே வந்தார்.  

 

நேரம் 12.30 மணியிருக்கும், கைக்கடிகாரத்தை பார்த்த ஜனாதிபதி, அருகிலிருந்த ஜனாதிபதியின் செய்திச் செயலாளரான எவன்ஸ்ட் குரே என்பவரை அழைத்தார். “வானொலியில் 12.45க்கு செய்தி இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணியில், இலட்சத்தை விடவும் அதிகமான சனத்திரள்” என, செய்தியை ஒலிபரப்புமாறு கேட்டுக்கொண்டார்.  

அச்செய்தியை வழங்குவதற்கான தொலைபேசியை எடுத்துகொண்டு, ‘சுலைமான்’ வைத்தியசாலையின் பக்கமாக, எவன்ஸ்ட் குரே சென்றுவிட்டார். நானும் வாகனத்தில் ஏறிக்கொண்டு, குரேக்கு பின்னாலே சென்றுவிட்டேன்.  

அப்போது, ஜீப்பில் ஏறுவதற்கு ஜனாதிபதி தயாராகிக்கொண்டிருந்தார். மெசஞ்சர் வீதியிலிருந்து வந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் பிரபல ஆதரவாளர்களுக்கு சமிக்ஞையை காட்டுவதற்கே, அச்சந்தியில் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காகவே, ஜனாதிபதியும் காத்திருந்தார்.  

மெசஞ்சர் வீதியின் ஊடாக வந்துகொண்டிருந்த பேரணி, முன்னோக்கி நகர்கையிலேயே குண்டு வெடித்தது. சுமார் 15 மீற்றர் கூட, நாங்கள் இருவரும் சென்றிருக்கமாட்டோம். குண்டு வெடித்துவிட்டது. 

“அதற்குப் பின்னர் நடந்ததை நினைத்துகூடப் பார்க்கமுடியவில்லை” எனத் தனது ஞாபகங்களை பகிர்ந்துகொண்ட சுதத் சில்வா, ஜனாதிபதி பிரேமதாஸவின் அருகிலிருந்தவர்களை நினைவுபடுத்தினார். “உண்மையில், இறுதி சில நிமிடங்கள் கடுமையாக பாதுகாப்பு வலயத்துக்குள்ளே, ஜனாதிபதி பிரேமதாஸ இருந்தார். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் இருந்தனர். அந்த வலயத்துக்குள் இருந்த எவருமே மிஞ்சவில்லை”  

“எனது முதுகின் இடதுபக்கத்தில் ஏதோவொன்று விழுந்ததைப் போல உணர்ந்தேன், அந்த அதிர்ச்சியில் கையை வைத்துப்பார்த்தேன், சதையொன்று தொங்கிக்கொண்டிருந்தது. ஜனாதிபதி பிரேமதாஸ ரணசிங்க நின்றிருந்த திசையைப் பார்த்தேன், மனிதர்களின் அங்கங்கள் மட்டுமே சிதறி கிடந்தன. அவ்விடத்திலிருந்த பிரதிப் பொலிஸ் அதிகாரியின் பணிப்பில், புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துகொண்டேன்.  

அத்தனை புகைப்படங்களும் என்னிடம் இருக்கின்றன. சிலவற்றை ஊடகங்களில் பயன்படுத்த முடியாது. அந்த உயரதிகாரியிடம், ஜனாதிபதி எங்கே? எனக்கேட்டேன், வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார் என்றார். அதன்பின்னர், ஆமர் வீதி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, என்னுடைய வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தேன். அப்போது, நானும் இறந்துவிட்டதாகவே என்னுடைய தந்தைக்கு யாரோ தகவல் கொடுத்திருந்தனர்.  

அதன்பின்னர், நான், காரியாலயத்துக்குச் சென்றுவிட்டேன், அப்போது தொலைபேசியொன்று அலறிகொண்டிருந்தது; எடுத்தேன். 

“சுதத், இப்போதா வந்தீர்கள்” என, பிரேமதாஸவின் மனைவி கேட்டார். “ஒவ் மெடம்” என்றேன். “சேர் எங்கே?... சேர்க்கு என்ன நடந்தது”? எனக் கேட்டார். “தெரியாது மேடம், அவரை பார்க்கத்தான், காரியாலயத்துக்கு நான் வந்தேன்” எனப் பதிலளித்தேன்.  

அந்த இரண்டொரு நிமிடங்களில்தான், ஜனாதிபதி பிரேமதாஸ, குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்துகொண்டேன்.  

“ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவர், ‘பாபு’ என்பவர்தான் என்பதைப் பலரும் கேள்விபட்டிருப்பீர்கள். அது நீண்டதொரு கதையாகும்” எனக் கதையைத் தொடர்ந்தார்.  

டயஸ் ப்ளேஸின் மாடிவீடுகளின் கீழ், சிங்களவருக்குச் சொந்தமான பால் கடையொன்று இருந்தது. அதில் உதவியாளராகவே ‘பாபு’ வந்திருந்துள்ளார். அந்த கடையிலிருந்து கொஞ்சம் தூரத்திலிருக்கும் வீட்டில், பாபுவின் நண்பர் இருந்துள்ளார். அவரும் சிங்களவர், மதுபானம் அருந்துதல், புகைத்தல் உள்ளிட்ட எந்தவிதமான கெட்டபழக்கங்களும் இன்றி, நல்லொழுக்கமுள்ள நபராக பாபு இருந்துள்ளார்.  

அந்த மாடிவீட்டுத் திட்டம் பிரேமதாஸவால் உருவாக்கப்பட்டது. பாற்கடையின் உரிமையாளருக்கும், மேல்மாடியில் இருக்கும் பாபுவின் நண்பரின் தங்கைக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. காதலுக்கு உதவி செய்த பாபு, மேல்மாடிக்கு ஒருநாள் சென்றுள்ளார். அவ்வீட்டில் பிரேமதாஸவின் புகைப்படங்கள் சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்துள்ளன.  

இதுதொடர்பில், பால் முதலாளியிடம் பாபு கேட்டுள்ளார். அப்போது, மாடிவிட்டு நண்பருக்கும், ஜனாதிபதி பிரேமதாஸவுக்கும் இடையிலிருக்கும் நெருக்கத்தை பாபு புரிந்துகொண்டார்.  

“ஜனாதிபதி வெளியிடங்களுக்குச் செல்லும் போது, சமைப்பதற்கான உதவியாளர், தேவையான பொருள்கள், உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவை, முதல்நாளன்றே வாகனத்தில் அனுப்பிவைக்கப்படும். அதில், முதலாளியின் நண்பரும் செல்வார். சில நாள்களில் முதலாளியும் செல்வர். பாபுவும் அவர்களுடன் செல்வார். இது சாதாரணமாகவே நடந்தது. என்றாலும், ஒருநாளேனும், ஜனாதிபதி பிரேமதாஸவை பார்ப்பதற்கு, முகத்தைக் காட்டுவதற்கு பாபு வரவில்லை; நானும் காணவே இல்லை” என்றார் சுதத் சில்வா, 

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, சென்றிருந்த தூரப்பயணங்கள் பலவற்றுக்கு, பாபுவும் முதல் நாளன்றே சென்றிருக்கின்றார். முதலாளியின் நண்பர்தான், பிரேமதாஸவின் கண்ணாடி முதல் சகலவற்றையும் ஏற்பாடு செய்து முகாமைத்துவம் செய்பவர். ஜனாதிபதிக்குத் தூக்கம் வரும் வரையிலும் தலையை ‘மசாஜ்’ செய்துவிடுவார். அவருடன் பாபுவும், காரியாலயத்துக்கு பலமுறை சென்றிருக்கின்றார்.  

அங்கெல்லாம், பாதுகாப்பு கடமைகளில் இருப்போருக்கும் பாபு ஒரு விருந்தாளி அல்ல. பாதுகாப்பு பிரிவினருக்கு பாபு, நெருக்கமானவர். கோவிலுக்குச் செல்வதை பாபு பழக்கமாக கொண்டிருந்தார். எந்தநாளும் கோவிலுக்கு சென்றிருக்கின்றார்.   

இவ்வாறு சென்றுகொண்டிருந்த போது, பாற்கடை நட்டமடைந்தது. எனினும், அக்கடையை மீள கட்டியெழுப்புவதற்கு பாபு பணம் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல, பிரேமதாஸ தூரப்பயணம் செல்லும் போது, முதல்நாளன்று செல்வோருக்கு கையை விரித்து பாபு செலவழித்துள்ளார். அப்பணம் எங்கிருந்து வந்தது என்பதை யாராவது கேட்டார்களா என்பது பிரச்சினையாகும்.  

பிரேமதாஸ, படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், இறுதியாக தூரப்பயணமாக, கதிர்காமத்துக்கு பயணித்திருந்தார். அங்கும் பாபு இருந்துள்ளார். ஜனாதிபதி இரவை கழித்த பங்களாவின் ஒருபகுதியில், பாபும் அவருடைய நண்பர்களும் இருந்துள்ளனர். அன்றிரவு, அவர்கள் மதுவிருந்துபசாரத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர்.  

தன்னுடைய இலக்கை எட்டும் வரையிலும் பாபு, பொறுமையாகக் காத்திருந்துள்ளார். இலக்கை விரைவில் அடைவதற்கு பாபு அவசரப்படவில்லை. பங்களாவில் ஜனாதிபதி இருந்தபோது, அச்சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்தவில்லை, எந்தநேரமும் தான் ஒரு நம்பிக்கையானவர் என்பதைப் பாதுகாத்தார். சந்தேகமில்லாத இலக்குக்காக, மே 1ஆம் திகதி வரையிலும் காத்திருந்தார்.  

மே1 பகல் 11 மணிளவில் வாழைத்தோட்ட கூட்டம் நிறைவடைந்து விட்டது என்பதை குணசிங்புர ஏற்பாட்டாளரிடமிருந்து பாபு அறிந்துகொண்டுள்ளார். ஆமர்வீதி சந்தியில், எந்தப்பக்க பேரணியுடன் ஜனாதிபதி பிரேமதாஸ, இணைந்துகொள்வர் என்பதையும் ஐ.தே.கவின் பிரபல ஆதரவாளர்களின் ஊடாக, பாபு தெரிந்துவைத்துள்ளார்.  

இந்தப் பேரணியை, முன்னோக்கி நகர்த்துவதற்கான சமிக்ஞையைக் கொடுப்பதற்கு சில விநாடிகள் இருக்கும்போது, மனிதக் குண்டு வெடித்துச் சிதறியுள்ளது. அப்போது, பாபு நடந்தே வந்துள்ளார். அவர், சைக்கிளில் வந்தார் என்ற கதை தவறானது. ஏனைய நபர்களின் மீதான தாக்குதல்களின் பின்னர், பாபுவின் தலை, 3 அல்லது 4 மீற்றர் தூரத்தில் கிடந்தது.  

 

ஜனாதிபதி பிரேமதாஸவின் உடலில் பெரும்பகுதி எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தது. என்றாலும் இனங்கண்டுகொள்ளும் வகையில் இருந்தது. கை உடைந்திருந்தது. அண்மையில் கிடந்த சடலங்களுக்கு இடையே, ஆகக் கூடுதலான பாதிப்புகள், ஜனாதிபதிக்கு அருகிலிருந்த மொஹீதினின் உடலுக்கே ஏற்பட்டிருந்தது, குண்டு வெடிக்கும் போது, ஜனாதிபதிக்கு அருகில், மொஹீதீனே இருந்திருக்கலாமெனத் தன்னுடைய ஞாபகங்களை சுதத் சில்வா பகிர்ந்துகொண்டார். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிரேமதாஸவை-படுகொலை-செய்ய-பாபு-எப்படி-வந்தார்/91-270754

 

Edited by கிருபன்

விடுதலைப் போரின் முடிவுரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட காரணமாக இருந்த பல காரணங்களில் இந்த சம்பவமும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

விடுதலைப் போரின் முடிவுரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட காரணமாக இருந்த பல காரணங்களில் இந்த சம்பவமும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

அப்ப  எப்படி போராடி இருந்தால் சரி வந்து இருக்கும் ?

உங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு யாழை உபயோக படுத்துகிறீர்கள் நான் எங்கு புலியை  பற்றி எழுதினேன் என்று அப்பாவி போல் கேள்வி கேட்கவேண்டாம் .

5 hours ago, பெருமாள் said:

அப்ப  எப்படி போராடி இருந்தால் சரி வந்து இருக்கும் ?

உங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு யாழை உபயோக படுத்துகிறீர்கள் நான் எங்கு புலியை  பற்றி எழுதினேன் என்று அப்பாவி போல் கேள்வி கேட்கவேண்டாம் .

நான் முன்னரே கூறியபடி கண்மூடித்தனமான புலியதிர்ப்பு, கண்மூடித்தனமான புலியாதரவு ஆகிய இரு அரசியலையும் செய்யும் இரு தரப்பும் ஆபத்தான, புறந்தள்ள வேண்டியவர்களே. ஆகவே அந்த இரு தரப்புக்குள்ளும் என்னை சேர்ககவேண்டாம். இத்திரியில் எனது கருத்துடன் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

நான் முன்னரே கூறியபடி கண்மூடித்தனமான புலியதிர்ப்பு, கண்மூடித்தனமான புலியாதரவு ஆகிய இரு அரசியலையும் செய்யும் இரு தரப்பும் ஆபத்தான, புறந்தள்ள வேண்டியவர்களே. ஆகவே அந்த இரு தரப்புக்குள்ளும் என்னை சேர்ககவேண்டாம். இத்திரியில் எனது கருத்துடன் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். 

கருது இல்லை என்றால் உடன்பாடு இல்லை என்று நழுவ வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் செய்தியா??

இவற்றை எல்லாம் எதற்காக தேடி தேடி இங்கே இணைக்கிறார்கள்??

இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வேலை இது

ஏதோ நடாத்தட்டும். 😡

  • கருத்துக்கள உறவுகள்

பல கொலைகள் புலிகள் தலையில் போடப்பட்டன.

பிரேமாவால் தூக்கப்பட்டவர் லலித். காமினி கொலையும் அவ்வாறே என்ற சந்தேகமும் உண்டு.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, பர்சனல் அலுவல் பார்க்க (அவர்களும் மனிதர்கள் தான்: கருத்தடை சாதனங்கள், வயாகரா மாத்திரை, கருத்தடை மாத்திரை, மாதவிடாய் pad போன்றன அவர்களால் வாங்க முடியாது) பர்சனல் வலட் என்னும் ஒருவர் இருப்பார். அவர் மிக ஆரம்ப காலத்தில் இருந்தே அண்மையாக இருப்பார். 

தமிழரான பாபு என்பவர், பிரேமதாசாவை நெருங்கும் அளவுக்கும், மசாஜ் பண்ணுமளவுக்கும் அவ்வளவு நெருக்கம் இருக்க வாய்பில்லை. 

இந்தியாவுடன் மிக மோசமாக முரண்பட்டவர் என்பதால், பாபு, ராஜிவ் காந்தியின் கொலை 7 தமிழர்கள் போல, ஒரு பெரும் சதியின் சிறு சாட்டுதல். 

ரகுராஜ் என்ற தமிழ் இளைஞர், லலித்தினை கொலை செய்தபின்னர், தனது தலையில் சுட்டு இறந்து வீதி ஓரத்தில் உடல் கண்டு எடுக்கப்பட்டது என்று கதை முடிக்கப்பட்டது. 

ஒரு சதிக்கு ஹோட்டலில் சர்வர் வேலை செய்து கொண்டிருந்த அப்பாவி தமிழ் இளைஞர் பலியானார்.

ரோகண விஜேவீர கைதான பின்னர், ரஞ்சன் விஜேரத்தின உத்தரவில், சுடப்பட்டு, போலீசார் துப்பாக்கியை பறித்து, சுட்டு தப்பி ஓட முனைந்த போது, சுடப்பட்டார் என்று முடித்தார்கள். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சரி இதை எல்லாம் இப்ப அலச என்ன காரணம். இதெல்லாம்.. பிழைப்பு வாதங்கள் மட்டுமே.

கிளாலிக் கடலில் பிரேமதாச அரசின் இனவெறியாட்டத்துக்கு உறவுகளைப் பறிகொடுத்த எவருமே இது அவருக்கான கடவுளின் தீர்ப்பென்றே தான் எண்ணுவர். அதேபோல்.. அப்பாவி சிங்கள இளைஞர்களை ஜே வி பி சந்தேக நபர்கள் என்று கொன்று மனிதப் புதைகுழி சரிசத்தை இலங்கையில் அதிகப்படுத்திய ஒரு மனித இனப்படுகொலையாளி தான் இவர். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

சரி இதை எல்லாம் இப்ப அலச என்ன காரணம். இதெல்லாம்.. பிழைப்பு வாதங்கள் மட்டுமே.

கிளாலிக் கடலில் பிரேமதாச அரசின் இனவெறியாட்டத்துக்கு உறவுகளைப் பறிகொடுத்த எவருமே இது அவருக்கான கடவுளின் தீர்ப்பென்றே தான் எண்ணுவர். அதேபோல்.. அப்பாவி சிங்கள இளைஞர்களை ஜே வி பி சந்தேக நபர்கள் என்று கொன்று மனிதப் புதைகுழி சரிசத்தை இலங்கையில் அதிகப்படுத்திய ஒரு மனித இனப்படுகொலையாளி தான் இவர். 

அலச காரணம், மாதனமுத்தாக்கள் அலம்பறை.

கோத்தாவுக்கு இன்று பேத்தி பிறந்த கதை தெரியுமே?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2021 at 01:42, கிருபன் said:

ஜனாதிபதி பிரேமதாஸவின் உடலில் பெரும்பகுதி எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தது. என்றாலும் இனங்கண்டுகொள்ளும் வகையில் இருந்தது. கை உடைந்திருந்தது

ஓ இனம் கண்டுகொள்ளக்கூடிய வகையில் இருந்ததா?

பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் டயர் போட்டு எரிக்கப்பட்டும்  படுகொலைசெய்யப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டும் இனம் காணமுடியாது ஆக்கப்பட்ட பல பத்து ஆயிரம்  ஜேவிபியின் குடும்ப உறுப்பினர்கள்..

தென் தமிழீழத்தில்  பெரும் எடுப்பில் நடத்தப்பட்ட படுகொலைகள் இவற்றின்போதெல்லாம் கொல்லப்பட்டவர்களை இன்றும்கூட இனம் காண முடியவில்லை, இன்றுவரை அவர்கள் எங்கே என்றும் தெரியவில்லை, 

அப்படி பார்க்கையில் பிரேமதாஸவை இனம் காணகூடிய அளவில் பாபு நடந்து கொண்டவிதம் பாராட்ட தக்கது.என்ன இருந்தாலும் பாபு பாபுதான். கிரேட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

விடுதலைப் போரின் முடிவுரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட காரணமாக இருந்த பல காரணங்களில் இந்த சம்பவமும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

இடம், பொருள், ஏவல் என்று ஒன்று இருப்பது துல்பனுக்குத் தெரியாதோ..?

☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பல கொலைகள் புலிகள் தலையில் போடப்பட்டன.

அதை இங்கு கதைக்க போக ஜஸ்டின் ஐயா மிரண்டவர் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இதெல்லாம் செய்தியா??

இவற்றை எல்லாம் எதற்காக தேடி தேடி இங்கே இணைக்கிறார்கள்??

இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வேலை இது

ஏதோ நடாத்தட்டும். 😡

தமிழர்களிடம் இருக்கும் ஒற்றுமை என்பது “நான் சொல்லுறன், நீ கேள்” என்று ஒரு சிலரிடம் இருக்கும் ஒற்றுமைதான்!😂

மேதினக் கூட்டத்தில் பிரேமதாஸ கொல்லப்பட்டார். அதுதான் தமிழ் மிரர் நினைவாக கட்டுரை போட்டது. 

 

3 hours ago, Nathamuni said:

தமிழரான பாபு என்பவர், பிரேமதாசாவை நெருங்கும் அளவுக்கும், மசாஜ் பண்ணுமளவுக்கும் அவ்வளவு நெருக்கம் இருக்க வாய்பில்லை. 

கட்டுரையில் அப்படி இல்லையே. கவனம் எடுத்துப் படியுங்கள்.

பிரேமதாஸ புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தவர். அதே நேரத்தில் ஜேவியை ஈவிரக்கம் இல்லாமல் அழித்தவர். அதே ஈவிரக்கம் இல்லாத தன்மையை தமிழர்கள் மேல் காட்ட அதிக காலம் எடுத்திருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கட்டுரையில் அப்படி இல்லையே. கவனம் எடுத்துப் படியுங்கள்.

முடியல்ல.

வெளுத்ததெல்லாம் பால் தானே உங்களுக்கு?

எழுதுவதை எல்லாமே நம்புவதா?

5 hours ago, Nathamuni said:

 

தமிழரான பாபு என்பவர், பிரேமதாசாவை நெருங்கும் அளவுக்கும், மசாஜ் பண்ணுமளவுக்கும் அவ்வளவு நெருக்கம் இருக்க வாய்பில்லை. 

 

நாதம்,

கட்டுரையில் பாபு பிரேமதாசாவுக்கு மசாஜ் செய்தார் என குறிப்பிடப்படவில்லை. முதலாளியின் நண்பர் தான் அவ்வாறு செய்வது.

பாபு கொழும்புத்துறை துண்டி சந்தியில் இருந்த புலிகளின் முகாமில் தான் இருந்தவர். சிங்கள ஊர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சரளமாக சிங்களம் கதைக்கவும் எழுதவும் தெரிந்தவர். சில விடயங்களுக்காக நான் துண்டி முகாமுக்கு செல்லும் போது எனக்கும் சிங்களம் தெரியும் என்பதால் அவருடன் சிங்களத்தில் கதைத்து பழகியுள்ளேன்.

கொழும்புக்கு வந்தபின் பிரேமதாசா வசிக்கும் சுச்சரித்த பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் தான் நான் தங்கியிருந்தேன். ஒரு நாள்  தெருவில் பாபுவை கண்டு கதைத்து இருவரும் ரோல்சும் பிளேன் ரீயும் உண்டுள்ளோம். புலிகளில் இருந்து களவாக தப்பி ஓடி கொழும்பு வந்து வெளினாடு செல்ல ஏஜென்சிக்கு காசு கொடுத்து விட்டு காத்து இருக்கின்றேன் என்று சொன்னார். 

அவரை அதன் பின் பிரேமதாசா கொலை தொடர்பான செய்திகளிலேயே காண முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

நாதம்,

கட்டுரையில் பாபு பிரேமதாசாவுக்கு மசாஜ் செய்தார் என குறிப்பிடப்படவில்லை. முதலாளியின் நண்பர் தான் அவ்வாறு செய்வது.

பாபு கொழும்புத்துறை துண்டி சந்தியில் இருந்த புலிகளின் முகாமில் தான் இருந்தவர். சிங்கள ஊர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சரளமாக சிங்களம் கதைக்கவும் எழுதவும் தெரிந்தவர். சில விடயங்களுக்காக நான் துண்டி முகாமுக்கு செல்லும் போது எனக்கும் சிங்களம் தெரியும் என்பதால் அவருடன் சிங்களத்தில் கதைத்து பழகியுள்ளேன்.

கொழும்புக்கு வந்தபின் பிரேமதாசா வசிக்கும் சுச்சரித்த பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் தான் நான் தங்கியிருந்தேன். ஒரு நாள்  தெருவில் பாபுவை கண்டு கதைத்து இருவரும் ரோல்சும் பிளேன் ரீயும் உண்டுள்ளோம். புலிகளில் இருந்து களவாக தப்பி ஓடி கொழும்பு வந்து வெளினாடு செல்ல ஏஜென்சிக்கு காசு கொடுத்து விட்டு காத்து இருக்கின்றேன் என்று சொன்னார். 

அவரை அதன் பின் பிரேமதாசா கொலை தொடர்பான செய்திகளிலேயே காண முடிந்தது.

ஆகா... சிங்கன் wanted ஆக வந்து வண்டீல ஏறி மாட்டிக்கிட்டாரு... 😎

உங்களை தான் தேடிக்கொண்டிருக்கிறம்.... வாழைத்தோட்டத்தில, தெருவோர சின்ன சிவன் கோவிலுக்கு பக்கத்தில இருந்த ஒருத்தரோட, ரோல்சும் பிளேன் ரீயும் அடிச்சு தான் திட்டம் தீட்டினார்கள் என்று தான் ரெக்கோர்டில இருக்குது. 🤠

(சப்பா... வேணுமெண்டு பிழையா எழுதினா, தூண்டிலில வந்து எப்படி மாட்டுகினம் பாருங்கோ மக்களே) 🧐

😁

Edited by Nathamuni

10 minutes ago, Nathamuni said:

உங்களை தான் தேடிக்கொண்டிருக்கிறம்.... வாழைத்தோட்டத்தில, தெருவோர சின்ன சிவன் கோவிலுக்கு பக்கத்தில இருந்த ஒருத்தரோட, ரோல்சும் பிளேன் ரீயும் அடிச்சு தான் திட்டம் தீட்டினார்கள் என்று தான் ரெக்கோர்டில இருக்குது. 🤠

 

😁

இரவு ஷாம்னாத் வீடியோக் கடையில எடுத்த தமிழ் பட காசட்டுகளில் படம் பார்த்து போட்டு காலம எழும்பி அங்கு இருக்கும் வாளிக் கிணத்துல குளிச்சு போட்டு தான் பிளான் போட்டது என்பதை எழுத மறந்து விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய குண்டை வெடிக்க வைத்து புலிகளின் குறியிலிருந்து தப்பியதாக பிரச்சாரம் செய்ய பிரேமதாச திட்டம் போட, பாவுவோ கிலோ கணக்கில் குண்டை வைத்து பிரேமதாசாவை போட்டு விட்டார்...

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

ஆகா... சிங்கன் wanted ஆக வந்து வண்டீல ஏறி மாட்டிக்கிட்டாரு... 😎

உங்களை தான் தேடிக்கொண்டிருக்கிறம்.... ரோல்சும் பிளேன் ரீயும் அடிச்சு தான் திட்டம் தீட்டினார்கள் என்று தான் ரெக்கோர்டில இருக்குது. 🤠

(சப்பா... வேணுமெண்டு பிழையா எழுதினா, தூண்டிலில வந்து எப்படி மாட்டுகினம் பாருங்கோ மக்களே) 🧐

நிழலி  இருந்த நேரத்தில் வாழைதோட்டம் சிங்கராசபுரம் பகுதியில் எனக்கு தெரிந்த நண்பர்கள் அந்த நேரம் இருந்தார்கள் .சில கரும்புலிகளின் வரலாறு இப்படியும் அசுரத்தனமான வேலைகள் செய்வார்களா என்ற எல்லை தாண்டி சாதனைகளையும் தியாகத்தையும் செய்த ஒரு இயக்கத்தை இங்கு வந்த சிலர் எள்ளி  நகையாடுவதை  என்னவென்று சொல்வது ?

15 minutes ago, பெருமாள் said:

.சில கரும்புலிகளின் வரலாறு இப்படியும் அசுரத்தனமான வேலைகள் செய்வார்களா என்ற எல்லை தாண்டி சாதனைகளையும் தியாகத்தையும் செய்த ஒரு இயக்கத்தை இங்கு வந்த சிலர் எள்ளி  நகையாடுவதை  என்னவென்று சொல்வது ?

இத்தகைய அர்ப்பணிப்புகள் நிறைந்த ஆயிரக்கணக்கானோரின் தியாங்களின் முடிவு தமிழ் மக்களுக்கு முன்னர் இருந்ததை விட அரசியல் ரீயிலும், பொருளாதார ரீதியிலும் மிக மோசமான விளைவுகளை கொடுத்து இருப்பதால், அதற்கான காரணங்களை பின்னோக்கி சென்று ஆராய முற்படுவதிலும் கேள்விக்குட்படுத்துவதிலும் தவறு இல்லை. 

ஏதாவது ஒரு வழியில் போராடியே ஆக வேண்டும் என்ற நிலையை தொடர்ந்து சிங்களம் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே இருப்பதால் எமது இன்றைய இளைய தலைமுறையும் எதிர்காலத் தலைமுறையும் கண்டிப்பாக விருப்பு வெறுப்பு அற்று பின்னோக்கி சென்று ஒவ்வொரு விடயத்தையும் ஆராயவும் கேள்விக்குட்படுத்தவும் செய்யும். இது ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் கொச்சைப்படுத்துவதாக அமையாது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

இத்தகைய அர்ப்பணிப்புகள் நிறைந்த ஆயிரக்கணக்கானோரின் தியாங்களின் முடிவு தமிழ் மக்களுக்கு முன்னர் இருந்ததை விட அரசியல் ரீயிலும், பொருளாதார ரீதியிலும் மிக மோசமான விளைவுகளை கொடுத்து இருப்பதால், அதற்கான காரணங்களை பின்னோக்கி சென்று ஆராய முற்படுவதிலும் கேள்விக்குட்படுத்துவதிலும் தவறு இல்லை. 

ஏதாவது ஒரு வழியில் போராடியே ஆக வேண்டும் என்ற நிலையை தொடர்ந்து சிங்களம் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே இருப்பதால் எமது இன்றைய இளைய தலைமுறையும் எதிர்காலத் தலைமுறையும் கண்டிப்பாக விருப்பு வெறுப்பு அற்று பின்னோக்கி சென்று ஒவ்வொரு விடயத்தையும் ஆராயவும் கேள்விக்குட்படுத்தவும் செய்யும். இது ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் கொச்சைப்படுத்துவதாக அமையாது.

அதை நீங்களோ நானோ அல்லது நடுநிலையானவர்கள் ஆராய்வது பிழையில்லை 

ஆனால் புலிகளால் தண்டனை பெற்றவர்களும் புலி மீது கொலைவெறியில் இருப்பவர்களும் கொலை கொள்ளைக்கு இயக்கம் என்று பெயர் வைத்தவர்கள்  ஆராய முட்படுவது குரங்கு அப்ப  கதை போல் முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

குருநகர் சேர்ந்த பாபுவுக்கு காதலியும் இருந்தார் யாழ்ப்பாணத்தில் 

9 hours ago, nedukkalapoovan said:

சரி இதை எல்லாம் இப்ப அலச என்ன காரணம். இதெல்லாம்.. பிழைப்பு வாதங்கள் மட்டுமே.

கிளாலிக் கடலில் பிரேமதாச அரசின் இனவெறியாட்டத்துக்கு உறவுகளைப் பறிகொடுத்த எவருமே இது அவருக்கான கடவுளின் தீர்ப்பென்றே தான் எண்ணுவர். அதேபோல்.. அப்பாவி சிங்கள இளைஞர்களை ஜே வி பி சந்தேக நபர்கள் என்று கொன்று மனிதப் புதைகுழி சரிசத்தை இலங்கையில் அதிகப்படுத்திய ஒரு மனித இனப்படுகொலையாளி தான் இவர். 

இது கடவுளின் தீர்ப்பு என்று உண்மையில் நீங்களும் இக்கருத்துக்கு விருப்பகுறி இட்டவர்களும் நம்புவீர்களானால் முள்ளிவாய்கால் இறுதி பேரழிவையும் கடவுள் கொடுத்ததாக நீங்கள் நம்பியேயாகவேண்டும். ஆனால் இரண்டுமே மனித  வக்கிரத்தின் செயற்பாடு என்றே நான் நினைக்கிறேன். 

6 hours ago, Kapithan said:

இடம், பொருள், ஏவல் என்று ஒன்று இருப்பது துல்பனுக்குத் தெரியாதோ..?

☹️

மன்னிக்கவும் நீங்கள் கூறிய இடம் பொருள் ஏவலுக்கும் இக்கருத்துக்கும் என்ன தொடர்பு? 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

இது கடவுளின் தீர்ப்பு என்று உண்மையில் நீங்களும் இக்கருத்துக்கு விருப்பகுறி இட்டவர்களும் நம்புவீர்களானால் முள்ளிவாய்கால் இறுதி பேரழிவையும் கடவுள் கொடுத்ததாக நீங்கள் நம்பியேயாகவேண்டும். ஆனால் இரண்டுமே மனித  வக்கிரத்தின் செயற்பாடு என்றே நான் நினைக்கிறேன். 

மன்னிக்கவும் நீங்கள் கூறிய இடம் பொருள் ஏவலுக்கும் இக்கருத்துக்கும் என்ன தொடர்பு? 

சிந்தனையாளர், துல்பன் என்கிற கடவுள் மறுப்பாளர் எங்களுக்கு கிடைத்ததும், கடவுள் செயல் தான்.  😁

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

இதெல்லாம் செய்தியா??

இவற்றை எல்லாம் எதற்காக தேடி தேடி இங்கே இணைக்கிறார்கள்??

இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வேலை இது

ஏதோ நடாத்தட்டும். 😡

ஏதோ  இந்த செய்தியை இங்கு போட்டு உருட்டுவது நல்லதுக்கில்லை போல் படுது  கெடு  குடி சொல் கேளாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.