Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

உலக நாடுகளுக்கு ஈழத்தமிழர முக்கியத்துவம் கொடுக்காத நிகழ்வுகளை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம் 

 

17 hours ago, Kandiah57 said:

ஈழத்தமிழருக்கு ஒரு அரசாங்கம் இல்லை ஆகையினால் உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது 

என்ன தலை சுத்துதா? முன்னுக்கு பின் முரணாக எழுதுகிறீர்களே? 😃

13 hours ago, Nathamuni said:

என்ன ஒரே குண்டக்க, மண்டக்க கேள்வியா கிடக்குது? 😁

எப்படி இருக்கிறியள்?

கந்தையாவின் கதியை பார்க்க தெரியவில்லையா எப்படி இருக்கிறேன் என்று? 🙂🙃😇

  • Replies 118
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

 

என்ன தலை சுத்துதா? முன்னுக்கு பின் முரணாக எழுதுகிறீர்களே? 😃

கந்தையாவின் கதியை பார்க்க தெரியவில்லையா எப்படி இருக்கிறேன் என்று? 🙂🙃😇

நான்  முன்னுக்கு பின் மரணாக. எழுதவில்லை.  எமக்கு. ஒரு அரசாங்கம் இல்லாததுதால். உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. இதன் பொருள் தமிழர்கள் விருமபவில்லை. என்பது அல்ல  ஈழத்தமிழருக்கு உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்து   கொடுக்காமால் விட்ட நிகழ்வைச். சுட்டிக் காட்டுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கற்பகதரு said:

பக்கத்து நாடான இந்தியா அமிர்தலிங்கம் காலத்தில் அரசியல்ரீதியாகவும், எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் ஆயுதரீதியாகவும் தாராளமாக உதவியது. ஆனால் ஈழத்தமிழர் இந்திய நலன்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் பக்கத்து நாடான இந்தியா ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டது.

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

நீங்கள் இங்கு சொல்வது தமிழ்ஈழம் கேட்டு போராட்டம் செய்யாதீகள் என்பது தான் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

நீங்கள் இங்கு சொல்வது தமிழ்ஈழம் கேட்டு போராட்டம் செய்யாதீகள் என்பது தான் இல்லையா?

தமிழ்ஈழம் அமைய அனுமதியோம் என்று சொன்ன இந்தியா  ஒரு தீர்வைக் குறிப்பிட்டு....இதை கண்டிப்பாகக் ஈழத்தமிழருக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னதில்லை” காரணம் என்ன ?அரை சுயாட்சி கொண்ட தமிழ்நாடு அந்த அரை சுயாட்சி க்கு மேல் கொடுக்க வேண்டும் என இந்தியா கோரவில்லை தன் சொந்த மக்கள் தமிழ்நாடுக்கு பூரண சுயாட்சி கொடுத்து இதைப் போல் இலங்கை தமிழருக்கும் கொடு என்று  கோரி இருக்கலாம்  இந்தியா ஈழத்தமிழனை பல குழுவாக பிரிந்து  ஆயுதப்பயிற்சியையும்....ஆயுதங்களையும் கொடுத்து தமிழனையே ஆழிந்துள்ளது...இனியும்  அதைத்தான் செய்யும் 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

பரசிவன் கழுத்திலிருந்து சுமந்திரன் சொல்கிறார். அவருக்குப் பாலூற்றி வணங்கும் சில பக்தகோடிகள் யாழ் களத்திலும் உண்டு. அவர்களுக்கு ஆமா போடாவிட்டால்..... கந்தையா அவர்களே! உங்கள் கருத்துக்களும்  கந்தலாகும்.😲

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

இனி ஓர் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டியது தான்.

அங்கு வாழும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

நாடு கடந்த அரசுக்கு ஆதரவு கொடுத்து அதனை பலப்படுத்தலாம்.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் சுதந்திரமாக இயங்க வழிவிட வேண்டும்.

தலைவர் பிரபாகரன் தலைமையில் பல்லாயிரம் உயிர்கள், உடமைகள், பல்வேறுபட்ட இழப்புக்களை கொடுத்து பெற முடியாத தீர்வை அங்குள்ள தமிழ் அரசியல் வாதிகள் ஒருபோதும் பெற்று கொடுக்க போவது இல்லை.

அவசியம் என்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கும் அரசியல் கட்சி ஒன்றை இலங்கையில் தொடங்குங்கள் சுமந்திரன் தொடக்கம் இதர இலங்கை தமிழ் அரசியல் அரசியல்வாதிகளை எதிர்பார்க்காமல்.

கட்சிகள் கூடிட்டே போனால் பலம் குறையும்  தமிழ்தேசியக்கூட்டமைபில். இளைஞர்களை உள்வாங்கி பயிற்சிகளை கொடுத்து அதில் சிறந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியையும் தமிழர் பலத்தையும் வளர்க்கலாம். இதற்க்கு  கட்சியிலுள்ள ....வயோதிபர்கள். இடம் தர வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

கெரியா ஒரு முடிவுக்கு வாங்கோ இன்னும் கொஞ்சத் தமிழ்ச் சனம் தான ஊரில இருக்கினம்.அவையும் எப்ப வெளியேறலாம் என்டு இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

கெரியா ஒரு முடிவுக்கு வாங்கோ இன்னும் கொஞ்சத் தமிழ்ச் சனம் தான ஊரில இருக்கினம்.அவையும் எப்ப வெளியேறலாம் என்டு இருக்கினம்.

ஆனையிறவோட யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டு படிப்படியாக கடலில் மூழ்கலாமாம். காலநிலை அகதிகள் என்று இங்க இருக்கும் எல்லோரும் வெளிக்கிடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஆனையிறவோட யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டு படிப்படியாக கடலில் மூழ்கலாமாம். காலநிலை அகதிகள் என்று இங்க இருக்கும் எல்லோரும் வெளிக்கிடுவினம்.

நானும் @தமிழ் சிறி அண்ணையும் இதுக்கு ஒரு பிளான் வச்சிருக்கிறம். எங்கட காணியளை இப்பவே கல்லு மண் போட்டு நிரவி சில அடிகள் உயத்த போறம். கடல் உள்ள வந்ததும் island resort ஆகிவிடும். பிறகு குரோசியா எல்லாம் போகதேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ஆனையிறவோட யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டு படிப்படியாக கடலில் மூழ்கலாமாம். காலநிலை அகதிகள் என்று இங்க இருக்கும் எல்லோரும் வெளிக்கிடுவினம்.

அங்குள்ள பலரும் வெளிநாட்டுக்கு ஓடிவிட முடியாதா எனும் அங்கலாய்ப்பிலேயே உள்ளார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் இப்போது இலகுவாக இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாய் உள்ளதால் வெளிநாட்டு வாழ்க்கை, சம்பளம், இதர இன்னோரன்ன விடயங்கள் பற்றி விரிவாகவே அறிந்து வைத்து உள்ளார்கள். எமது நேரங்களை கூட துல்லியமாக கூறுகின்றார்கள். ஆப்கானிஸ்தான் போன்று நாட்டை விட்டு வெளியேற ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின் நிலமையே வேறு. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

கட்சிகள் கூடிட்டே போனால் பலம் குறையும்  தமிழ்தேசியக்கூட்டமைபில். இளைஞர்களை உள்வாங்கி பயிற்சிகளை கொடுத்து அதில் சிறந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி கட்சியையும் தமிழர் பலத்தையும் வளர்க்கலாம். இதற்க்கு  கட்சியிலுள்ள ....வயோதிபர்கள். இடம் தர வேண்டும் 

கடும்போக்காளர்கள், தீவிர சிந்தனை உள்ளவர்கள் தமது எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியை உருவாக்குவதே மேல். 

விடுதலைப்புலிகள் மக்கள் முண்ணனி அது இயங்கிய காலத்தில் தேர்தல்களில் பங்குபற்றவில்லை. பார்வையாளராக மட்டும் விளங்கியது. 

காலமாற்றத்துடன் வயோதிபர்கள், இளைஞர்கள் என்று பாராமல் அனுபவம், ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சியில் இடம் பிடிப்பதற்கு வழி ஏற்படும்.

கலைஞர் கருணாநிதி கதிரையில் கடைசிவரை உட்கார்ந்து சுகம் கண்டதுபோல் சம்மந்தர் அவர்களும் தனது அரசியல் வாழ்வை அனுபவிக்கின்றார். ஆனால், மூத்தவர்களின் வெளியேறலுடன் இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

நாடு கடந்த அரசுக்கு உலகில் உள்ள இலங்கை தமிழ் மக்களின் பெருன்பான்மை ஆதரவு ஒரு காலத்தில் கிடைக்கும் என்றால் பொருளாதார பலம், ஆற்றல்களின் வழி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தவணை முறையிலாவது ஏதும் உடன்படிக்கைகள் மூலம் ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கில் நிர்வாகத்தினை மேற்கொள்ளலாம்.

இலங்கையின் பொருளாதாரத்தின் போக்கு, அதன் சரிவு இப்படியான ஒரு வாய்ப்பு ஏற்பட வழிகோலும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அங்குள்ள பலரும் வெளிநாட்டுக்கு ஓடிவிட முடியாதா எனும் அங்கலாய்ப்பிலேயே உள்ளார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் இப்போது இலகுவாக இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாய் உள்ளதால் வெளிநாட்டு வாழ்க்கை, சம்பளம், இதர இன்னோரன்ன விடயங்கள் பற்றி விரிவாகவே அறிந்து வைத்து உள்ளார்கள். எமது நேரங்களை கூட துல்லியமாக கூறுகின்றார்கள். ஆப்கானிஸ்தான் போன்று நாட்டை விட்டு வெளியேற ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின் நிலமையே வேறு. 

 

11 hours ago, Kandiah57 said:

இந்தியாவின் நலன் இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டுமென்பது. இலங்கையில் தமிழ்ஈழம் அமைய ஒருபோதும் அனுமதியோமென்று. இந்திராகாந்தியும். அவர் மகன் ராஜிவ்காந்தியும் ஜே.ஆர்க்கு உறுதி அளித்துள்ளார்கள் தமிழ்ஈழத்துக்குப் போராடும் தமிழர் எப்படி  இதற்கு உடன்படமுடியும்? ........இந்தியா நலனுக்கு முக்கியத்துவம்  கொடுக்க சொல்வது =சமன் தமிழ்ஈழம்  கேட்டு போராடதே என்பதாகும்

நீங்கள் இங்கு சொல்வது தமிழ்ஈழம் கேட்டு போராட்டம் செய்யாதீகள் என்பது தான் இல்லையா?

தமிழீழம் கேட்டு போராடாமல் விட்டால் மிச்ச சனம் எப்பிடி வெளிநாடு வரயேலும்? தாராளமாக தமிழீழம் கேட்டு போராடுங்கோ. எல்லாரும் வெளியில வந்தால்தானே நல்லா வரலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

குசும்பு பண்ணவென்றே சிலர் அலைவதுபோல் தோன்றுகிறது. நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கற்பகதரு said:

தமிழீழம் கேட்டு போராடாமல் விட்டால் மிச்ச சனம் எப்பிடி வெளிநாடு வரயேலும்? தாராளமாக தமிழீழம் கேட்டு போராடுங்கோ. எல்லாரும் வெளியில வந்தால்தானே நல்லா வரலாம்?

தமிழீழம் கேட்கமுதல் ஈழத்தமிழர் வெளிநாடுகளுக்கு வரவில்லையா? வெளிநாடுகளில் வேலை செய்ய வில்லையா?

அது சரி தாங்கள் எந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து கடலை வறுக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

தமிழீழம் கேட்கமுதல் ஈழத்தமிழர் வெளிநாடுகளுக்கு வரவில்லையா? வெளிநாடுகளில் வேலை செய்ய வில்லையா?

அது சரி தாங்கள் எந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து கடலை வறுக்கின்றீர்கள்?

சிலருக்கு தங்களின் நிலை தான் மற்றவர்களினதும் என்ற நினைப்பு….

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தமிழீழம் கேட்கமுதல் ஈழத்தமிழர் வெளிநாடுகளுக்கு வரவில்லையா? வெளிநாடுகளில் வேலை செய்ய வில்லையா?

அது சரி தாங்கள் எந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து கடலை வறுக்கின்றீர்கள்?

 

2 hours ago, MEERA said:

சிலருக்கு தங்களின் நிலை தான் மற்றவர்களினதும் என்ற நினைப்பு….

நாங்கள் பெரும்பான்மை, நீங்கள் சிறுபான்மை. 😄

  • கருத்துக்கள உறவுகள்

  தமிழர் புலம்பெயர்ந்தபோது, சில பெரும்பான்மையினரும் போலி பெயரில் அகதிகளாக புலம்பெயர்ந்தனர்  வருவாய்க்காக. சில பெரும்பான்மையினரையும், ஒட்டுக்குழுக்களையும் அரசு அனுப்பிவைத்தது, சிங்களத்துக்கு முட்டுகுடுக்கவும், புலம்பெயர்ந்த தமிழரின் அறவழிப்போராட்டங்களை குழப்பியடிக்கவும்.

அட ராமா இந்த புல்லுருவிக்கு கொரோனா பிடிக்குது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிரபாதாசன் said:

அட ராமா இந்த புல்லுருவிக்கு கொரோனா பிடிக்குது இல்லை

எப்படி பிடிக்கும்??

கொரோனாவுக்கே முதுகில் குத்தும் வல்லமை தெரிந்தவர்களாச்சே?☹️

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வக்கீலிடம் ஒரு வழக்கைக் கொடுத்தால் அவர் இருக்கிற ஆதாரங்களை வைத்துக் கொண்டு மேரும் ஆதாரங்களைக் கண்டு பிடித்து  அதிக பட்சம் அந்த வழக்கை வெல்வதற்கு முயற்சிக்க வேண்டும் அதை விடுத்து வழக்கிற்கு ஆதாரம் போதாது வழக்கை வெல்ல முடியாது என்று வொல்வது ஒரு வழக்கறிஙருக்கு அழகல்ல.இவர் ஒரு சட்டத்தரணியாக இருப்பதற்கே தகுதியற்றவர்.இதற்குள் ஜனாதிபதி சட்டத்தரணி என்று பட்டம் வேறு.அதுவும் இனப்படுகொலையாளர்களை கூண்டிலேற்றுவோம் என்று சொல்லி தமிழ்மக்களிட்ம் வாக்குக்கேட்டு பதவி பெற்றுக்கொண்டு இப்பொழுது தமிழர்மீது நடத்தப்பட்டது இனப்படுகொலை என்பதற்கு ஆதாரங்கள் கிடையாது ஆனால் தமிழ்களதான் முஸ்லழம்களை இனச்சுத்திகரிப்புச் செய்தார்கள் என்று சேம்சைட் கோல் போடுகிறார். உண்மையில் இவரைத் தெரிவு செய்த தமிழ்மக்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2021 at 22:39, குமாரசாமி said:

மிஸ்டர் சுமந்திரனை சிலோன் தொடக்கம் சிறிலங்கா ஈறாக முள்ளிவாய்க்கால் அழிவுகள் வரை உள்ள வரலாறுகளை படித்துவிட்டு அறிக்கை விடச்சொல்லுங்கள்.
காட்டிக்கொடுப்போர் வெளியேற்றத்திற்கும் இன சுத்திகரிப்பிற்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கின்றார்.

சிங்களத்திற்கு வெள்ளை அடிப்பவர்கள் இந்த படத்தை கவனிக்கவும்.
சிங்களச்சிறிலங்காவின் இனவாத வரலாறுகளில் இதுவும் ஒன்று.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கும் சுமத்திரன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.முஸ்லிம்கள் யாழ்ப்பபாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பொழுது ஒரு முஸ்லிம் கூட உயிர் ஆபத்து ஏற்படவில்லை. சிறு காயந்தானும் ஏற்படவில்லை. ஒரு இராணுவ அமப்பு தனது பாதுகாப்புக் கருதி தற்காலிகமாக அவர்களை வெளியேற்றினார்கள். அதற்காக வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டு அவர்கள் மீளக்குடியேறலாம் என்று எத்தரவாமும் கொடுக்கப்பட்டது.ஆனால் முஸ்லிம்கள் சிங்களவரோடு சேர்ந்து தமிழினப் படுகொலைக்குத் துணை போனார்கள் அதற்கு இந்தப்படமே சாட்சி .முஸ்லமா தமழனா என்று சோதனை பேட்டு இராணுவம் தமிழின அழிப்பு செய்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

2010 இற்குப் பிறகு அதுவும் பின்கதவால் அரசியலுக்கு வந்த சுமத்திரன்  வரலாற்றைப் படிக்க வேண்டும். சுமத்திரன் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து விட்டு இந்தக் கருத்தைச் சொன்னால் யாரும் அதை  ஒரு குற்றமாக கருதமாட்டார்கள். தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டுவோம் என்று கூறி வாக்குப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு இதைப் பேசுவது தன்மானமுள்ள தமிழர்களால் ஏற்க முடியாது. அவரது சொம்புகள் வேண்டுமானால் ஏற்றுக்கொண்டு அவருக்காக மல்லுக்கட்டலாம். எனே;றால் நக்கினார் நாவிழந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புலவர் said:

உண்மையில் இவரைத் தெரிவு செய்த தமிழ்மக்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தமிழரசுக்கட்சியை மழிச்சுக்கட்டவே புகுத்தப்பட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தலில் ஐயா பெரிய திக்குமுக்காடி பாராளுமன்று போனவர்.அடுத்த முறை அதுவும் தேறாறு என்று நினைத்தோ என்னவோ

குட்டி கதிர்காமர் ஆக பார்க்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2021 at 00:08, Kandiah57 said:

நான்  முன்னுக்கு பின் மரணாக. எழுதவில்லை.  எமக்கு. ஒரு அரசாங்கம் இல்லாததுதால். உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் இல்லை. இதன் பொருள் தமிழர்கள் விருமபவில்லை. என்பது அல்ல  ஈழத்தமிழருக்கு உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்து   கொடுக்காமால் விட்ட நிகழ்வைச். சுட்டிக் காட்டுங்கள் 

கந்தையா சந்திரனுக்கு சென்று தமிழீழ கொடியை நாட்டாத சந்தர்ப்பமும் இல்லை, ஒலிம்பிக்கில் தங்கம் பெற்று தமிழீழத்துக்கு பெருமை சேர்க்காத சந்தர்ப்பமும் இல்லை, அப்படித்தானே? 😄 இந்தமாதிரி, சர்வதேச அரசியல்தலைவர்களின் காதில் பூச்சுற்ற வெளிக்கிட்டுத்தான் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். மாற்றங்களை விரும்பாத நீங்கள் அப்படியே தொடருங்கள்.

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.