Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இது சரிதான்.

ஆனால் இது அதற்கும் மேல்.

இது பிரெக்சிற்காரர்களை போல், டிரம்பை போல் தெரிந்து கொண்டே பொய் சொல்லி அதில் அரசியல் ஆதாயம் அடையும் போக்கு.

நாம் தமிழர் கட்சியும், சீமானும் பெரியாரை பற்றி, சில தமிழ்நாட்டு சாதிகளை பற்றி ஒரு தொகுதி புலம்பெயர் மக்களிடம் இப்படியான பொய்யைத்தான் பரப்பி வைத்துள்ளார்கள்.

அதே போல் ஒரு பொய்தான் இதுவும். ஆனால் இந்த பொய்யை புலம்பெயர் தமிழர் இலகுவில் இனம் காண கூடியதாய் உள்ளது. 

 

 

இலங்கை தமிழர்களுக்கு  Asylum & Citizenship என்று பல விடயங்கள் தெரியும், ஆனால் இந்திய தமிழ் மக்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்

  • Replies 204
  • Views 12k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, Nathamuni said:

எழுத்தில் கண்ணியம் இல்லையே அக்கா.... 🤗

இங்கே சீமானை எதிர்ப்பவர்கள் கூட, ஒருமையில் பேசி எல்லை தாண்டுவதில்லையே.... 🙂

கள்ள உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழனை கழுத்தறுத்தவர்கள் மீது வராத ரோசமும் மானமும் சீமான் என்றவுடன் கொம்பாய் முளைச்சு நிக்குது.😶

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

இலங்கை தமிழர்களுக்கு  Asylum & Citizenship என்று பல விடயங்கள் தெரியும், ஆனால் இந்திய தமிழ் மக்களில் எவ்வளவு பேருக்கு தெரியும்

மீரா,

eastham பக்கம் என்னுடன் வாருங்கள்.... எத்தனை மலையாளிகள், தமிழக, மலேசியா தமிழர்கள், ஈழத்தமிழர்களாக அகதி அந்தஸ்த்து எடுத்து குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள் என்று காட்டுகிறேன்.

கனடாவில் எவ்வளவு பேர் தமிழத்தில் இருந்து நம்மவர்களால், ஈழத்தமிழர்களாக அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று தெரியாதா என்ன?

புலிகள் போராட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து உதவியவர்கள் என்று சொல்லியே asylum அடித்துள்ளார்கள் பலர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மீரா,

eastham பக்கம் என்னுடன் வாருங்கள்.... எத்தனை மலையாளிகள், தமிழக, மலேசியா தமிழர்கள், ஈழத்தமிழர்களாக அகதி அந்தஸ்த்து எடுத்து குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள் என்று காட்டுகிறேன்.

கனடாவில் எவ்வளவு பேர் தமிழத்தில் இருந்து நம்மவர்களால், ஈழத்தமிழர்களாக அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று தெரியாதா என்ன?

நாதம்ஸ்

ஆம் இலங்கை தமிழர்களுடன் பழகியவர்களே இந்த விடயத்தில் கில்லாடிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Nathamuni said:

மீரா,

eastham பக்கம் என்னுடன் வாருங்கள்.... எத்தனை மலையாளிகள், தமிழக, மலேசியா தமிழர்கள், ஈழத்தமிழர்களாக அகதி அந்தஸ்த்து எடுத்து குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள் என்று காட்டுகிறேன்.

கனடாவில் எவ்வளவு பேர் தமிழத்தில் இருந்து நம்மவர்களால், ஈழத்தமிழர்களாக அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று தெரியாதா என்ன?

இங்கே ஜேர்மனியிலும்  நிறையப்பேர் இருக்கின்றார்கள். சில காலங்களுக்கு முன் என்னுடன் ஒரு மலையாளி வேலை செய்தவர். அவர் ஈழத்தமிழன் என்று சொல்லியே அகதி விண்ணப்பம் கோரியவர்.அவரின் மூலம் தான் இப்படி நிறையப்பேர் அசூல் அடிச்சு திரிகின்றனர் என தெரிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

நாதம்ஸ்

ஆம் இலங்கை தமிழர்களுடன் பழகியவர்களே இந்த விடயத்தில் கில்லாடிகள்.

1985 மே மாதம் 31ம் திகதியுடன் இலங்கையர்களுக்கான, entry visa வை பிரித்தானியா நிறுத்தியது. ஏப்ரல், மே மாதத்தில் எவ்வளவு தென் இந்தியர்கள் கொழும்பு வந்து, கள்ள பாஸ்போர்ட் எடுத்து, இங்கே வந்து சேர்ந்தார்கள் என்று விபரத்தினை, தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் தர்மகத்தா, ஆறு திருமுருகனை சந்தித்தால்  கேட்டு பாருங்கள். 

திருமுருகன், கனடா செல்ல, அமெரிக்க பிசினஸ் விசா எடுத்து இருந்தார். ஆசை யாரை விட்டது.

அப்படியே சுவிஸ் போய், நண்பர்கள், உறவினர்களை பார்த்து, போவம் என்று சுவிஸ் எம்பஸி போய், அவர் அமெரிக்கன் எமபசிக்கு கொடுத்த ஆவணத்தில் இருந்த தவறை கண்டுபிடித்த, சிங்கள பெண், விசா தாறன் இரு என்று சொல்லி, உள்ள போய் அமெரிக்கன் எம்பசிக்கு தகவல் கொடுக்க, வந்து கான்சல் பண்ணி விட்டு போனார்கள்.

பிறகு விசா எடுத்து, சகல நாடுகளுக்கும் ஆன்மிகவாதியாக வந்த அவர், அந்த சம்பவம், தன்னை துர்க்கை அம்மன் தடுத்து ஆட்க்கொண்ட தருணம் என்று சொன்னார் பின்னர். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைய சிங்களவர்களும் தாம் தமிழர் என்று சொல்லி அசேலம் கேட்டதும் உண்டு. 😁

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நிறைய சிங்களவர்களும் தாம் தமிழர் என்று சொல்லி அசேலம் கேட்டதும் உண்டு. 😁

கண பேர்... இருக்கினம்....

****

  • கருத்துக்கள உறவுகள்

 நிரந்தர வதிவிட உரிமை கொடுக்கும் போது போலீஸ் Clearance (எந்த நாட்டில்  இருந்து வந்தாரோ அந்த நாட்டு ..) இவர் ஆபத்தானவர் இல்லை, என்ற  விளக்கம், விபரம். திரடட மாடடார்களோ ? .
 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிலாமதி said:

 நிரந்தர வதிவிட உரிமை கொடுக்கும் போது போலீஸ் Clearance (எந்த நாட்டில்  இருந்து வந்தாரோ அந்த நாட்டு ..) இவர் ஆபத்தானவர் இல்லை, என்ற  விளக்கம், விபரம். திரடட மாடடார்களோ ? .
 

அகதிகளாக வந்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

இப்போது நீங்கள் கனடாவுடன் மேலதிகமாக இலங்கை குடிஉரிமை கேட்டால், அதுக்கு, கனடிய போலீஸ் clearance கொடுக்க வேண்டும்.

பிரித்தானியாவுக்கு, கடந்த வாரம் இருநாட்களில் மட்டும் 1200 அளவில், அகதிகள் பிரான்சில் இருந்து வந்துள்ளனர். 

உயிரை கையில் பிடித்தபடி கடலில் மிதக்கும் ரப்பர் படகுகளில் வருகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனிதாபிமானம் இங்கே இருக்கிறது.

போலந்து நாட்டில் இன்று சட்டம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளார்கள். தமது நாட்டுக்குள் அகதியாக வரும் யாரையும், வந்த வழியே 24 மணிநேரத்தினில் திருப்பி அனுப்ப போவதாக.

அவரகள் இணைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் தவறான சட்டம் என்று எச்சரித்துள்ளது. அதேவேளை, போலந்து நாட்டின் எல்லையோரத்தில், தங்கி மறைவாக, இருந்தவர்களில் குளிரில் இறந்த 6 பேர் உடலை கண்டு எடுத்துள்ளார்கள்.

கடந்த வாரம், பெலாரஸ் நாட்டு எல்லை காவல் படை லிதுவேனியா நாட்டினுள் துரத்தி அடித்த வகையில், ஒரு இலங்கையர் இறந்து போனார்.

அகதி வாழ்வு அவலமிக்கது....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்  கொடுத்த...பரிசீலனை கடிதங்கள்,
அயல் நாட்டு, உயர் பதவிகளில் இருக்கும் தமிழரை சென்றடைந்து...
அதன் மூலம், பலன் கிட்டியிருக்கலாம்.

அதனை... இப்போது வெளிப்படையாக சொல்வது, சரியல்ல.

அதன் மூலம்... அவர்களின், குடியுரிமை... 
மீண்டும்,  பறிக்கப் படக் கூடிய.. வாய்ப்புகள் உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

சீமான்  கொடுத்த...பரிசீலனை கடிதங்கள்,
அயல் நாட்டு, உயர் பதவிகளில் இருக்கும் தமிழரை சென்றடைந்து...
அதன் மூலம், பலன் கிட்டியிருக்கலாம்.

அதனை... இப்போது வெளிப்படையாக சொல்வது, சரியல்ல.

அதன் மூலம்... அவர்களின், குடியுரிமை... 
மீண்டும்,  பறிக்கப் படக் கூடிய.. வாய்ப்புகள் உள்ளது.

மீராவுக்கு மேலே, taken out of context ஆக இருக்கலாம் என்று சொல்லி இருந்தேன்.

அதுதான் கதை போலுள்ளது. யாரோ தமக்கு தேவையானதை வெட்டி, ஒட்டி உள்ளனர்.

15:30 யில் இருந்து கேட்டுப்பாருங்கள்.

என்ன சொல்கிறார் என்றால், சுருக்கமாக, ஒரு ஆங்கீகாரம் கொண்ட அரசியல் கட்சியாக தான் கொடுக்க கூடிய கடிதங்களை வெளிநாடுகளில் அகதி விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றன. 

ஆனால் 35 வருடமாக இங்கே அகதி முகாமில் இருக்கும் ஈழத்தமிழனுக்கு வைக்கும் குடியுரிமைக் கோரிக்கை மீது எதுவுமே நடக்கவில்லை என்கிறார்.

இதனை தான் சொல்வது....தோப்பை விட்டு, தனி மரத்தினை மட்டும் பார்க்கும் வேலை என்று.  

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

அகதிகளாக வந்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

இப்போது நீங்கள் கனடாவுடன் மேலதிகமாக இலங்கை குடிஉரிமை கேட்டால், அதுக்கு, கனடிய போலீஸ் clearance கொடுக்க வேண்டும்.

பிரித்தானியாவுக்கு, கடந்த வாரம் இருநாட்களில் மட்டும் 1200 அளவில், அகதிகள் பிரான்சில் இருந்து வந்துள்ளனர். 

உயிரை கையில் பிடித்தபடி கடலில் மிதக்கும் ரப்பர் படகுகளில் வருகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனிதாபிமானம் இங்கே இருக்கிறது.

போலந்து நாட்டில் இன்று சட்டம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளார்கள். தமது நாட்டுக்குள் அகதியாக வரும் யாரையும், வந்த வழியே 24 மணிநேரத்தினில் திருப்பி அனுப்ப போவதாக.

அவரகள் இணைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் தவறான சட்டம் என்று எச்சரித்துள்ளது. அதேவேளை, போலந்து நாட்டின் எல்லையோரத்தில், தங்கி மறைவாக, இருந்தவர்களில் குளிரில் இறந்த 6 பேர் உடலை கண்டு எடுத்துள்ளார்கள்.

கடந்த வாரம், பெலாரஸ் நாட்டு எல்லை காவல் படை லிதுவேனியா நாட்டினுள் துரத்தி அடித்த வகையில், ஒரு இலங்கையர் இறந்து போனார்.

அகதி வாழ்வு அவலமிக்கது....

கனடாவில் நிரந்தர விஸாகொடுக்க இலங்கை  யை சேர்ந்த படியால்  இலங்கை clearance    கேட்பர் இந்திய நாட்டுக்கு காரன் இலங்கைபாஸ் போட்டில் போய் பிரான்சில் நிரந்தர விசா கேடடால் எந்த நாட்டு போலீஸ் கிளியரன்ஸ் கொடுப்பார்   .  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்கள் சிலர் வெளிநாட்டில் இருந்து இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பித்து பணம் டிபபோசிட் செய்து குடியுரிமை பெற்று கொண்டனர் என்று கேள்விபட்டேன் . நான் அதை  அவர்கள் இலங்கை  Citizenship  தான் பெற்று கொண்டார்கள் என்று விளங்கி கொண்டுவிட்டேன்.   இப்போது சீமானின் தம்பிகள் சொன்ன பின்பு தான் தெரியும் குடியுரிமை என்றால் அகதியாக இருப்பதிற்கான அனுமதி.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தியாகிராமப்புற மக்களுக்கு அகதிஅந்தஸ்த்து எண்டா என்னெண்டு தெரியா.. குடி உரிமைஎண்டா கொஞ்சம் விளங்கும்.. அவங்களுக்கு ஏற்றமாதிரி பேசி இருக்கிறார்..

ஆகவே இந்தியாகிராமப்புற தமிழ் மக்களை முட்டாளாக வைத்திருந்தே அரசியல் செய்ய விரும்புகிறர் சீமான்.😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆகவே இந்தியாகிராமப்புற தமிழ் மக்களை முட்டாளாக வைத்திருந்தே அரசியல் செய்ய விரும்புகிறர் சீமான்.😂

இப்ப தமிழ் நாட்டிலை இருக்கிற  பெரிய/சின்னக் கட்சிகள் என்ன செய்யுது? 😜

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிலாமதி said:

கனடாவில் நிரந்தர விஸாகொடுக்க இலங்கை  யை சேர்ந்த படியால்  இலங்கை clearance    கேட்பர் இந்திய நாட்டுக்கு காரன் இலங்கைபாஸ் போட்டில் போய் பிரான்சில் நிரந்தர விசா கேடடால் எந்த நாட்டு போலீஸ் கிளியரன்ஸ் கொடுப்பார்   .  

உங்கள் சந்தேகம் எனக்கும் இருந்தது ஆனால் குறித்த பெயரில் உள்ள நபர் இலங்கையை சேர்ந்தவர் ஆனால் சரியான தரவுகள் அற்றவர்  அல்ல என்று முடித்துக்கொள்வார்களாம் .கொஞ்சம் குழப்பம்தான் .

2 hours ago, குமாரசாமி said:

கள்ள உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழனை கழுத்தறுத்தவர்கள் மீது வராத ரோசமும் மானமும் சீமான் என்றவுடன் கொம்பாய் முளைச்சு நிக்குது.😶

வணக்கம் அண்ணா,

கள்ள உண்ணாவிரதம் இருந்தவர்கள் யாரும், ஈழத்தமிழர்களை இரட்சிக்க வந்ததாகவும், தலைவரின் அவதாரமாகவும் சொல்லிக் கொள்வதில்லையே? அதனால் அவர்கள் எப்படிப் போனால் நமக்கென்ன?

பலரும் அகதி அந்தஸ்தா, குடியுரிமையா என்ற ஆராய்சியில் இறங்கி விட்டிருப்பது தெரிகின்றது.. அது தேவையற்றது என்பது என் கருத்து... பல கடித, ஆவணங்களில் ஒன்றாக சிலருக்கு நாம் தமிழர் கடிதமும் உதவி இருக்கலாம்... முன்னாளில் நாம் தமிழரில் இணைந்து பயணித்த அய்யநாதன் தான் பலமுறை சீமான் கையெத்துப் பெற்று கடிதங்களை நாடு கடத்தப்பட இருந்தவர்களுக்கு அனுப்பியதாக கூறியுள்ளார்...

சரி. திரு.சீமான் இப்போது இதனை கூற காரணம் என்ன? என் தனிப்பட்ட ஆய்வு (my own analysis).

நாம் தமிழர் இயக்கம் பின்னர் கட்சி, ஈழத்தமிழர் பொருளாதாரத்தைக் கொண்டு கட்டி எழுப்பபட்ட, வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கென தனியான ஆராய்ச்சி எதுவும் தேவையற்றது...

கட்சி ஓரளவில் வளர்ந்து பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்கத்தொடங்கியதும் நாம் தமிழர் தொனி (tone) கொஞ்சம் மாறத்தொடங்கியது.. ஈழத்தமிழரும் கொஞ்சம் தருவதாக...

இன்று, ஈழத்தமிழருக்கு குடியுரிமை பெற்றுக்கொடுத்ததே நான் தான் என சொல்வதன் பொருள், நாளை நான் ஈழத்தை பெற்றுத் தருவேணே இல்லையே, பணம் தரவேண்டியது உங்கள் கடமை என ஒரு கருத்தியலை உருவாக்குவதற்கான முதற்படி...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் வைக்கோ கடிதம் கொடுத்து, தமிழகத்தில் ஈழ அகதி முகாமில் இருந்து வந்து அகதி அந்தஸ்து கிடைத்த ஒருவரை எனக்கு தெரியும். 

பிரபாகரன் அண்ணர், மனோகரன், கப்பலில் வேலை செய்து, தமிழகத்துக்கு, தாய், தந்தை பார்க்க போய் வந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவரை கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்த திட்டம் போட்டது, மத்திய அரசு.

நாம் தமிழரின் பொது செயலாளர், அய்யா தடா சந்திரசேகர், டெல்லிக்கு அழைத்து போய், UNHRC மூலம் டென்மார்க் தூதரகத்தினை அணுகி, தேவையான கடிதங்களை, பத்திரங்களை கொடுத்து, அகதி அந்தஸ்து வாங்கி கொடுத்து, அனுப்பி வைத்தனர்.

அது எப்படி நடந்தது? 🤔

***

அகதிகளாக, வந்திருந்தால் தெரியும், அவர்கள் அவலம். கிடைக்கும் எந்த கடிதத்தினையும் வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

கிடைத்த பின்னர், அதனால் தான் கிடைத்தது என்று, நன்றியுடன் சொல்லி இருப்பார்கள். கொடுத்தவர்கள் மகிழ்வுடன், வேறு யாருக்கும் அதே உதவி செய்வார்கள் என்று.

அட, நாம வந்து சேர்ந்து விட்டோம்.... அகதி அந்தஸ்து கிடைத்து, பிள்ளைகளையும் வளர்த்து விட்டோம். யாரு எக்கேடு கேட்டால் என்ன என்று நினைப்பது, துடிக்கும் அகதிகளுக்கு கிடைக்கும், சிறு, கொழு கொம்பை இல்லாமல் செய்யும் ஈனச் செயல்.

உதவி செய்யாவிடில், உபத்திரவம் செய்யாமல், கடந்து போவது நல்லது. 

நான். விசா எடுத்து, மேல் படிப்பு படிக்க வந்தனான் எல்லோ, பல்கலைக்கழக படிப்பு முடித்து, migrate பண்ணின ஆள் எல்லோ என்று அடித்து விடுபவர்களானால்.... பெரும் தன்மையுடன் நகர்ந்து செல்லலாமே...

திரியை ஆரம்பித்தவரோ, தென்பகுதியில் பிறந்த... மத்திய கிழக்கில்....வேலை பார்க்கும், அகதி அவலம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவர்.

 

 

நாதம் இன்னும் கள விதிகளைப் படிக்கவில்லைப் போல:

ஒருவர் உங்கள் கருத்துக்குப் பதில் எழுதிய பின்னர் மீளப் போய் உங்கள் கருத்தை மாற்றுவது தவறு!

பொதுவான திரியில் "எனக்கு முதுகு சொறி அல்லது விலகிப் போ" என்பதும் விதி மீறல்! இதை பற்றி ஒரு நாற்சந்திக் காவியமே இருக்கிறது!

எனவே காணொளி வடிவில் வரும் வரை இருக்காமல் போய் விதிகளை வாசியுங்கோ!

தவித்த அகதிக்குக் கிடைத்த சிறு குச்சி "நான் மட்டும் தான் கொம்பானேன்" என்று பொய் சொல்வது மிகுந்த "பெருந்தன்மை" என நினைக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?😎 முடிவாக நாம் சொல்வது, சீமானின் வழமையான புழுகு மூட்டைகளில் இது ஒன்று அவ்வளவே!  

Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் வழமை போல் சீமான் பொய் சொல்கிறார் என்று நாம் சொன்னால் - “ஐயோ அகதிகள் பாவம்” என சம்பந்தமில்லாமல் நீலிகண்ணீர் வடிக்கிறார்🤣.

மேலே யார் அகதிகள் பற்றி தப்பாக பேசியது? யாருமில்லை.

இங்கே பேச்சு சீமானின் பொய்யை பற்றி மட்டுமே.

அகதிகள் பற்றிய கரிசனை எல்லாருக்கும் உண்டு. 

மேலே மிக தெளிவாக குறிப்பிட்டேன் சீமான் கடிதம் கொடுத்திருந்தால் அது ஒரு வழக்கின் ஆதாரம் என்பதாக மட்டுமே கருதப்பட்டிருக்கும். 

ஏற்கனவே இலங்கையில் உயிராபத்து உள்ளவராக உள்ள இலங்கையர் ஒருவரை - அவரின் உயிருக்கு ஆபத்து என்பதை நிறுவ சீமானின் கடிதத்தையும் ஒரு சாட்சியாக நீதி மன்றம் ஏற்றிருக்கலாம்.  இலங்கை எம்பிகள் கொடுக்கும் கடிதம், இலங்கை வக்கீல்கள் கொடுக்கும் கடிதம் போல, தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சின்ன கட்சியின் தலைவரின் கடிதம் என்ற அளவில் அதை நீதி மன்று கையாண்டிருக்கும்

ஆனால் சீமான் சொல்வது போல் ஏதோ இவர் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் உடனே அந்தஸ்து கொடுத்தது என்பது விளக்கம் இல்லாத மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலைதான்.

அதில் கூட 10 வருடத்துக்கு முன் ஒரு தடவை இலங்கை போன சீமானுக்கு - இப்போ இலங்கையில் ஒருவருக்கு உயிராபத்து என்பது எப்படி தெரியும் என்ற கேள்வி நிச்சயம் எழும். 

ஆகவே 400 பேர் என்பதும் நம்பவியலாதது.

மூன்று நாட்டில் 400 கடிதம் என்றால் ஒரு நாட்டில் அண்ணளவாக 125 கடிதம். 

கொடுக்கும் கடிதம் ஒவ்வொன்றிலும் அந்த நபரை தனக்கு எப்படி தனிப்பட்டு தெரியும், அவருக்கு என்ன ஆபத்து, அதைதான் இந்தியாவில் இருந்தபடி எப்படி தனிப்பட்டு அறிந்தேன் என விளக்க வேண்டும்.  சும்மா போட்டோ கொப்பி மாரி அடித்து அனுப்பினால் அதை கனம் பண்ண மாட்டார்கள். அல்லது கூலிக்கு கடிதம் கொடுக்கும் professional witness என்றே கருதுவார்கள்.

ஏலவே சீமான் பல பொய்களை நா கூசாமல் சொல்பவர் என்பதால் இதையும் ஒரு மிகைப்படுத்தல் என்றே பார்க்க முடியும்.

கெளரவம்,  விதி, போன்ற சினிமா படங்கள் போலன்றி evidence ஐ ஒரு நீதி மன்று எப்படி அணுகும் என்ற அடிப்படை புரிதல் இருந்தாலே சீமானின் 400 பேர், கப்ஸா என்பது வடிவாக புரியும். 

சீமான் இலங்கையில் சந்தித்த ஒரு சிலரின் வழக்குகளுக்கு இப்படி கடிதம் கொடுத்திருக்கலாம்.

சீமான் பின் வருமாறு கூறி இருந்தால் அதில் யாரும் பிழை காண முடியாது. 

“எனக்கு தெரிந்த சில ஈழத்தமிழர்களுக்கு உயிராபத்து என்பதை உறுதி செய்து நான் கொடுத்த்த கடிதத்தை, ஆதாரங்களில் ஒன்றாக ஏற்று இந்த நாடுகள் அவர்களுக்கு தஞ்சம் அளித்தன”. 

ஆனால் சீமான் சொன்னது? ஏதோ தான் கடிதம் கொடுத்தால் இந்த நாடுகள் எல்லாம் உடனே குடியுரிமை கொடுக்கும் என்பதான சோடிப்பு.

இதைதான் கருணாநிதியும் செய்தார். 

ஆனால் கருணாநிதி பரம்பரை கள்ளன் - லேசில் மாட்ட மாட்டார்.

சீமான் பஞ்சத்துக்கு கள்ளன் - பொய் சொல்லி மக்களை ஏய்க்க வேண்டும் என்று தெரிகிறது ஆனால் எப்படி மாட்டு படாமல் பொய் சொல்வது என தெரியவில்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அன்று மட்டுமல்ல இன்றும் தலைவர் பிரபாகரனையும் ஆமை ,ஆமைக்கறி என நக்கலடிக்கும் கோஷ்டிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

தலைவர் பிரபாகரன் என்ற மனிதரை புரிந்து கொள்ளாத உங்களுக்கும் சீமானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

சீமான் மீதான உங்கள் பக்தியை நீங்கள் வெளிப்படுத்துங்கோ. இல்லை சீமானே கடவுளாகவே வணங்குங்கள். அது உங்கள் உரிமை. யாரும் அவரைப் பற்றி கதைக்க வேண்டும் என கட்டளை இடுவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

10 hours ago, Nathamuni said:

எழுத்தில் கண்ணியம் இல்லையே அக்கா.... 🤗

இங்கே சீமானை எதிர்ப்பவர்கள் கூட, ஒருமையில் பேசி எல்லை தாண்டுவதில்லையே.... 🙂

பாருங்கள், தாயக உள்ளூர் அதிகளுக்காக, நேசக்கரம் அமைப்பு நடத்தும், உங்கள் சமூக பொறுப்பு நிலைப்பாடு, உங்கள் இந்த தேவையில்லாத கருத்துக்களால் சிக்கலுக்கு உள்ளாகும் என்று முன்பு, உரிமையுடன் சொல்லி இருந்தேன்.

மேலே முல்லைநிலவன் கேள்வியினை நீங்களே கேட்டு பெற்றுக் கொண்டீர்கள் என்று கருதுகிறேன்.

வருந்தத்தக்கது. 😰

முதலில் உங்கள் தெய்வம் சீமானை நாகரீகமான அரசியலை செய்யச் சொல்லுங்கோ நாதமுனி. உங்கள் தலைவர் சீமான் வார்த்தையில் வராத ஒருமையா நான் எழுதிவிட்டேன். 

நிலவு இருட்டு வெளிச்சம் என பக்கம் பக்கமாக நீட்டி புலம்பும் அனாமதேயம்  என் கருத்துக்கு பதில் சொல்லாமல் புலம்புகிறது. தனது இயலாமை 🐢 அல்லது நீங்கள் என்ன சொன்னாலும் எனது கருத்து இதுதான்.

இன்னும் அப்பாவித்தனமாக 🐢 நம்பும் உங்களுடன் கோபிக்கவில்லை. மன்னிக்கவும் இப்படி எழுதியமைக்காக.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

 

திரியை ஆரம்பித்தவரோ, தென்பகுதியில் பிறந்த... மத்திய கிழக்கில்....வேலை பார்க்கும், அகதி அவலம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவர்.

 

 

நாதமுனி என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? செய்தியை யார் வேண்டுமென்றாலும் இணைக்கலாம்
அவருடைய பின்புலத்தை ஏன் ஆராய்கின்றீர்கள்? தென்னிலங்கையில் பிறந்தேன், மத்திய கிழக்கில் வேலை செய்கின்றேன். ஆகவே எனக்கு யூ கே அகதி வாழ்வைபற்றி தெரியாது அப்படியா? சமீப‌ காலமாக இப்படியான கருத்துக்கள் எழுதி ஏன் அம்பானைக்கு பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டு போகின்றீர்கள்?

நீங்கள் இருக்கும் ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன், எனக்கு தெரியாதா? என்னுடன் அறையில் இருந்தவர் டொலொயிலட்டுக்குள் போனால் லேசில் வரவேமாட்டர், இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு வந்த பின் பலவருடம் மனைவியை அழைக்க முயச்சித்தார் முடியவில்லை. சில வருங்களுக்கு முன்பு இறந்து போனார். வீசா இல்லாமல் மன அழுத்தத்தில் சிலர் குடித்தே இறந்து போனது எனக்கு தெரியும். இவர்களுடன் நானும் ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டு குடித்தவன் என்ற அடிப்ப்டயில் எனக்கு எல்லமே தெரியும்.
நிறைய விடயங்கள் எழுத முடியாது. 

குரைடனில் உள்ள் தென் இந்திய தமிழ் சட்ட விரோத குடியேடிகள் சிலர் இவ்வாறு தமிழ் நாட்டில் இருந்து வருபவர்களிடம் கேஸ் எழுதி பணம் கரைப்பதியும் கண்டுள்ளேன். பல்வேறு மலையாளிகளயும், இந்தியர்களியும் எனக்கு தெரியும், அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன், (எல்லேரும் அல்ல சில நல்ல உள்ளங்களையும் கண்டுள்ளேன்) 

மே 2009ல் நானும் எதுவும் செய்ய திறணியற்று தலையில் கை வைத்துக்கொண்டு  க்றைடன் ஸ்டேசனில் பல மணி நேரம் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தவந்தான்.

இலங்கையில் எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உட்படதவர்கள் சந்தோசமா விசாவுடன் இருக்கும்போது, பலர் உண்மையாக பாதிக்கப்ட்டு எந்தவித வீசாவும் இன்றி உள்ளார்கள். 

இங்கு கருதாடுவது சீமான் செய்தது சரியா பிழையா? ஆனாவசியமாக இணைத்தவர்க்கு ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினத்தல் தவறு. தவாறாக எடை போட்டு விட்டீர்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

 

நாதமுனி என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? செய்தியை யார் வேண்டுமென்றாலும் இணைக்கலாம்
அவருடைய பின்புலத்தை ஏன் ஆராய்கின்றீர்கள்? தென்னிலங்கையில் பிறந்தேன், மத்திய கிழக்கில் வேலை செய்கின்றேன். ஆகவே எனக்கு யூ கே அகதி வாழ்வைபற்றி தெரியாது அப்படியா? சமீப‌ காலமாக இப்படியான கருத்துக்கள் எழுதி ஏன் அம்பானைக்கு பலரிடம் வாங்கி கட்டிக்கொண்டு போகின்றீர்கள்?

நீங்கள் இருக்கும் ஹரோ/ஸ்டன்மோர், பகுதியிலும் நான் வசித்துள்ளேன், க்ரொயிடனில்/டூடிங்/ஈஸ்காம் என தமிழர் வாழும் பகுதிகளில் சில‌வருடம் வாழ்ந்து உள்ளேன், எனக்கு தெரியாதா? என்னுடன் அறையில் இருந்தவர் டொலொயிலட்டுக்குள் போனால் லேசில் வரவேமாட்டர், இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு வந்த பின் பலவருடம் மனைவியை அழைக்க முயச்சித்தார் முடியவில்லை. சில வருங்களுக்கு முன்பு இறந்து போனார். வீசா இல்லாமல் மன அழுத்தத்தில் சிலர் குடித்தே இறந்து போனது எனக்கு தெரியும். இவர்களுடன் நானும் ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டு குடித்தவன் என்ற அடிப்ப்டயில் எனக்கு எல்லமே தெரியும்.
நிறைய விடயங்கள் எழுத முடியாது. 

குரைடனில் உள்ள் தென் இந்திய தமிழ் சட்ட விரோத குடியேடிகள் சிலர் இவ்வாறு தமிழ் நாட்டில் இருந்து வருபவர்களிடம் கேஸ் எழுதி பணம் கரைப்பதியும் கண்டுள்ளேன். பல்வேறு மலையாளிகளயும், இந்தியர்களியும் எனக்கு தெரியும், அதே போல் யாழ்பாணிகள் பெற்ரோல் செட் போன்ற வேலை செய்யும் இடங்களில் கூட்டக/குழுவாக‌ இணைந்து சக தமிழ் இனத்தவர்களுக்கு செய்யும் அட்டுழியங்களியும் கண்டுள்ளேன், (எல்லேரும் அல்ல சில நல்ல உள்ளங்களையும் கண்டுள்ளேன்) 

மே 2009ல் நானும் எதுவும் செய்ய திறணியற்று தலையில் கை வைத்துக்கொண்டு  க்றைடன் ஸ்டேசனில் பல மணி நேரம் பைத்தியம் பிடித்தவன் போல் இருந்தவந்தான்.

இலங்கையில் எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உட்படதவர்கள் சந்தோசமா விசாவுடன் இருக்கும்போது, பலர் உண்மையாக பாதிக்கப்ட்டு எந்தவித வீசாவும் இன்றி உள்ளார்கள். 

இங்கு கருதாடுவது சீமான் செய்தது சரியா பிழையா? ஆனாவசியமாக இணைத்தவர்க்கு ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினத்தல் தவறு. தவாறாக எடை போட்டு விட்டீர்கள்.

நன்றி.

100% உண்மை 👏👏👏👏👏👏 .

ஆனால் சோனகர்களும் இதற்கு விதி விலக்கல்ல.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

கரோவில் ஒரு தமிழ் பிரக்கிராசியார் இருந்தார். அவரது கடையை இழுத்து மூடிவிட்டார்கள்

இவர், பல தமிழ் கூட்டமைப்பு, தமிழக அரசியல்வாதிகள் கடிதங்களை வாங்கி வைத்து இருப்பார்.

ஒவ்வொரு கேசுக்கும், ஒவ்வொரு விதமா கடிதம் எழுதி, இந்த அரசியல் வாதிகள் கடிதங்கள் உடன் அனுப்பி வைப்பார்.

நாளைடைவில், பிரைன் செனிவிரத்னா போன்ற சிங்களவர் கடிதம் எல்லாம் கொடுத்தார்.

ஊர் விதானையார் கடிதம்..... டாக்குத்தர் கடிதம் எண்டு நீண்டது.....

கடைசீல, கடித விபரம் எப்படி முடிவுக்கு வந்தது எண்டால், பிரிட்டிஸ் தூதரகம், காத்திரமான நடவடிக்கை எடுத்து, தனியார் நிறுவனம் மூலமாக, கடிதங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு நடத்த தொடங்கிய பின்பு.

ஆகவே..... ஒரு அரசியல் கட்சித்தலைவராக சீமான், திருமாவளவன், வைக்கோ பொய் சொல்ல முடியாது. இல்லாத ஒன்றை நடந்ததாக கடிதம் கொடுத்து தமது நாடுகளில் சட்ட சிக்கலில் மாட்டமாட்டார்கள்.

ஒருவர் தமிழக அகதி முகாமில் இருந்தார் என்றால் குறித்த நாட்டு தூதரக அதிகாரிகள் அல்லது அவர்கள் முகவர்கள் விசாரிப்பார்கள்.

தவறான தகவல்களை கொடுத்த காலம் மலையேறி விட்டது.

இதனை இமிக்கிறேசன் பிராக்டிஸ் செய்யும் எந்த பிரக்கிராசியாரும் சொல்வார்.

பிரிட்டிஸ் தூதரகம் போலவே அணைத்து தூதரகமும் விசாரிக்கின்றன்.

அப்பாவை கொன்று விட்டார்கள், நான் தோணியில் ஏறி இந்தியா தப்பி இங்கே வந்தேன்.

அம்மாவும், தம்பியும் எங்கே என்றே தெரியவில்லை என்ற சோக கதைகளை, அப்பா, ஊரிலை விவசாயம் செய்யும் படத்தையும், தவறணைக்குள போய் கள் அடிக்கும் படத்தையும் காட்டி, அம்மா, தம்பி ஊர் வீட்டில் இருந்து கோவில் போற படத்தையும் காட்டி, இந்தியாவே போகவில்லை, ஏத்திய ஏஜன்சி விபரமும் கொடுத்து, பொய் சொன்னதாக கேசை நிராகரித்துள்ளார்கள்.

வை ஜி மகேந்திரன் நாடகம் நடாத்துகின்றோம் என்று, இலண்டணில், ரொரோண்டோவில் ரேடியோ விளம்பரம் செய்திருந்தார்.

அந்த திகதியில் நடக்கவில்லை. பார்த்தால், நாடக குழுவில் இருந்த சுமார் 34 பேருக்கு காசை வாங்கி விசா எடுத்து இருக்கிறார்.

அவர்களை ஏத்தி அனுப்பிவிட்டு, அவர் வரவில்லை, நாடகமும் நடக்கவில்லை.

இறுதியில் அமெரிக்க தூதரகம் அவர் மேல், விசா மோசடி செய்ததாக போலிஸ் முறைப்பாடு செய்தது.

மச்சான் ரஜனியை பிடித்து, கலைஞரை சந்தித்து தப்பினார்.

சீமானுக்கு அந்த வாய்ப்பு நிச்சயமாக இல்லை

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, shanthy said:

தலைவர் பிரபாகரன் என்ற மனிதரை புரிந்து கொள்ளாத உங்களுக்கும் சீமானுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

நான் நானகவே இருக்கின்றேன். மற்றவர்களை புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.