Jump to content

பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா

ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் கூறுவது தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அணிய நிர்பந்திப்பதும் இழிவானது.

October 13, 2021
தொலைக்காட்சி மாடல் மற்றும் நடிகையான பத்மா லட்சுமி, கடந்த 2020-ம் ஆண்டு தனது யூ-டியூப் பக்கத்தில் சமையல் காணொலி ஒன்றில், பிரா எனப்படும் பிரெசியர் அணியாமல் மேலாடையோடு பதிவிட்டிருந்தார். இந்த காணொலியை மையமாக வைத்து அவர் பெரும் சர்ச்சையாக்குள் தள்ளப்பட்டார். பல்வேறு ஏச்சு-பேச்சுக்கள், ஆபாச நையாண்டிகள், கிண்டல்கள் என அவருக்கு கடுமையான தொல்லைகள் கொடுக்கப்பட்டன.
இப்படி ஒரு காணொலி வெளியிட்டது ஒழுக்கக்கேடான செயல் என சமூக வலைத் தளங்களில் ’நல்லவர்கள்’ பலர் பேசினர். இதனைத் தொடர்ந்து தனது அடுத்த காணொலியில் மேலாடைக்குள் இரண்டு உள்ளாடை அணிந்து அதற்கான பதிலையும் தந்தார் பத்மா. “Let’s not police women’s bodies in 2020 – OK “. அதாவது “2020-ம் ஆண்டில் பெண்களின் உடலை கண்காணிக்காமல் இருக்கலாமே” என்று கூறியிருந்தார்.
இதைப் போன்றே பாலிவுட் நடிகை சாமிரா ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதுகையில் பிரா, காண்டாக்ட் லென்ஸ் போன்றவை அழகின் குறியீடுயில்லை எனவும் அத்தகைய கண்ணோட்டத்திலிருந்து தான் வேறுபடுவதாகவும்  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். பலரும் அதனைப் பாராட்டினர். பலர் சாடினர்.
பெண்களின் ஆடையில் ஓரு அங்கமான பிரா, சமூகத்தின் மனப்போக்கில் எந்த மாதிரியாக இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள் ஒரு ஆதாரம்.
கடந்த ஆண்டு முதல் நிலவும் கோவிட் -19 நோய்த் தொற்று பிரச்சினை காரணமாக போடப்பட்டுள்ள லாக்-டவுன், வீட்டில் இருந்து அலுவலக வேலைகளை பார்க்கும் நிலைமையை ஏற்படுத்தியது. உண்மையில் இது பல பெண்களுக்கு ஒரு உடல்ரீதியான சுதந்திரத்தைக் கொடுத்தது எனலாம். அலுவலகத்திற்குச் செல்கையில் கண்டிப்பாக பிரா அணிந்து செல்வது அவசியம் என்ற சமூக நிர்பந்தம் இருக்கையில் வீட்டிலிருந்து வேலை பார்க்கையில் பெண்களுக்கு பிரா அணியும் கட்டாயத்திலிருந்து விடுதலை அளித்தது இந்த லாக்-டவுன் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆண்கள் வெளியே செல்கையில் பனியன் அணிந்து செல்வதோ, அணியாமல் செல்வதோ, சமூகத்தில் எவ்வித எதிர்ப்பையோ ஆதரவையோ பெறுவது இல்லை. ஆனால் ஒரு பெண் வெளியே செல்கையில் பிரா அணியாமல் சென்றால், அது இந்தச் சமூகத்தின் கண்களில், அவள் ஆபாசப் பண்டமாகவும், தவறான  நடத்தை கொண்டவளாகவும் தெரிகிறாள். இதன் காரணம் என்ன ?
பலரும் பிரா அணிவது பெண்களுக்கு நலன் பயக்கக் கூடியது என்று கூறுகின்றனர். அதற்குப் பல மருத்துவக் காரணங்களைக் கூறுகின்றனர். பெண்கள் பிரா அணியாமல் இருந்தால், மார்பகப் புற்றுநோய் வரும் என்கின்றனர். மேலும் பிரா அணியாவிட்டால், கூப்பர் தசைநார்கள் (Cooper Ligaments) பாதிக்கப்படும். மார்பகங்கள் தளர்வுற்று தொய்வடையும் என்கின்றனர். இவற்றில் ஏதேனும் உண்மை உள்ளதா ?
கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 15 ஆண்டுகால ஆய்வு முடிவுகளில், பிரா அணிவதால் எந்த நன்மையும் இல்லை என்று கூறப்படுவதோடு கூடுதலாக, அவை மார்பகங்களை ஆதரிக்கும் தசைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
no-bra-1.jpgஆராய்ச்சியாளரும் விளையாட்டு அறிவியல் வல்லுநருமான ஜீன்-டெனிஸ் ரூலியன் பிரான்ஸ் இத்தகவலை பிரெஞ்சு வானொலி நெட்வொர்க்கிடம் நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், இளம் பெண்கள் பிரா அணிவதை நிறுத்தும்போது அவர்களின் மார்பகங்களின் தன்மை மோசமடையாது என்பதையும் ஆய்வு முடிவுகளில் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கிறார், ரூலியன்.
அதே போல, பிரா என்பது பெண்களின் ஆடையில் ஒரு பகுதியே அன்றி அது மருத்துவ சாதனம் அல்ல என்று “ஜீன் ஹெய்ல்ஸ்” மகளிர் சுகாதார அமைப்பின் மருத்துவர் அமண்டா நியூமன் கூறுகிறார்.
அடுத்ததாக, பிரா அணியாமல் இருப்பதால் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருப்பதாக சொல்லப்படுவதைப் பற்றி பார்க்கலாம். பிரா அணிவதால் புற்றுநோயை தடுக்க முடியும் என்று எந்த ஆய்வுகளும் இல்லை. இதற்கு எந்தவிதத்திலும் அறிவியலில் இன்றுவரை எந்தச் சான்றுகளும் இல்லை.
பிரா அணிவது அல்லது அணியாமல் இருப்பது மற்றும் மார்பக புற்றுநோயை வளர்ப்பது ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை நிரூபிக்கும் நம்பகமான ஆராய்ச்சி இல்லை. இதனை ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் கவுன்சில் தனது வலைத்தளத்தில் பதியப்பட்டுள்ளது.
பிரா அணிவது மார்பக தொய்வைக் குறைப்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்றால் அதற்கும் இல்லை என்பதே பதில். மார்பகங்கள் இயற்கையாக இருக்கின்ற விதம் அல்லது அதன் தளர்ச்சி போன்றவை மரபியல், ஹார்மோன்கள் மற்றும் எடையுடன் அதிக அளவில் தொடர்புடையதாக இருப்பதாகவும் மருத்துவர் அமண்டா நியூமன் கூறுகிறார். பிரா அணிந்தால் மார்பகங்களின் வளர்ச்சி குறைந்துவிடும் என்று நிலவும் சில கருத்துக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்கிறார் மருத்துவர் அமண்டா நியூமன்.
இந்த ஆய்வு முடிவுகள் இப்படி இருக்க, பின் ஏன் அசௌகரியமான இந்த ஆடையை பெண்கள் அணிகின்றனர் அல்லது அணிய நிர்பந்திக்கப்படுகின்றனர், என்ற கேள்வி எழுகிறது. கற்பு (ஒழுக்கம்) என்ற பெயரிலும், ஃபேஷன் என்ற பெயரிலும் பெண்கள் மீது இந்த உடை எவ்வாறு திணிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும் முன்னர், பிராவின் சுருக்கமான வரலாறு குறித்துப் பார்ப்போம்.
பிரா வரலாறு
பிரா என்றும் பிரெசியர்ஸ் என்றும் இன்னும் பலவிதமான பெயர்களில் பெண்களின் உடைகளில் ஒரு பிரிக்கமுடியாத ஒன்றாக நீடித்திருக்கிறது இந்த ஆடை.
வரலாறு நெடுகிலும், பெண்கள் தங்கள் மார்பகங்களின் தோற்றத்தை பராமரிக்கவும், மறைக்கவும், கட்டுப்படுத்தவும், வெளிப்படுத்தவும் அல்லது மாற்றவும் பல்வேறு ஆடைகளையும் சாதனங்களையும் பயன்படுத்தியுள்ளனர். வரலாற்று ரீதியாக, பிரா அல்லது பிகினி போன்ற ஆடைகள் மினோவான் நாகரிகத்தின் பெண் விளையாட்டு வீரர்களின் கலையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. கி.மு.14 ஆம் நூற்றாண்டுகளில்
கிரேக்க-ரோமன் நாகரிகங்களிலும் பெண்கள் மார்பகத்தை பராமரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிராவை ஒத்த சிறப்பு ஆடைகளை உருவாக்கியுள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன.
roman-bra.jpg
 
கிபி 14-ம் நூற்றாண்டில், பிராவின் முன்மாதிரி உடைகள் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்தன. அதன் பின் ஏறக்குறைய கிபி 16-ம் நூற்றாண்டு முதல், மேற்கத்திய நாடுகளின் பணக்காரப் பெண்களின் உள்ளாடைகளில் கோர்செட் (corset) எனும் உடை ஆதிக்கம் செலுத்தியது. இது மார்பகங்களின் எடையை தாங்கி நிற்க உதவும் என்று கருதப்பட்டது. மேலும் அவர்களின் அழகு சாதனங்களின் ஓரு பகுதியாக அவ்வுடை பார்க்கப்பட்டது.
உலகின் மிக பழமையான பிரா 1390 மற்றும் 1485 ஆண்டுகளுக்கு இடையில் ஆஸ்திரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் ஆஸ்திரிய லெம்பெர்க் கோட்டையின் தரைப் பலகைகளின் கீழ் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் சரிகைகளால் நெய்யப்பட்ட பிரா கண்டுபிடிக்கப்பட்டது.
கோர்செட்-டிலிருந்தே (corset) பிரா பிறந்தது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு மாற்றுகளைப் பரிசோதித்ததிலிருந்து தான் ப்ராவிற்கு வடிவம் கிடைத்தது. பின் காலப்போக்கில் இருவேறு பாகங்களாக பயன்படுத்தியதில் பிரா பெரும் வரவேற்பை பெற்றது.
brassiere.jpg
 
20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், சமகால பிராக்களை ஒத்த உடைகள் தோன்றின, இருப்பினும் வணிக அளவிலான உற்பத்தி 1930-கள் வரை நடக்கவில்லை. அப்போதிருந்து ‘கோர்செட்’களின் காலம் முடிந்து பிராக்களின் காலம் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட உலோகப் பற்றாக்குறை கோர்செட்டின் முடிவை ஊக்குவித்தது. பிரா வடிவமைப்பு அதன் எளிமையான தன்மையால் பிரபலமடைந்தது.
போர் முடிவடைந்த நேரத்தில், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும், ஃபேஷன்  ஆடை வடிவமைப்பு பரிணாமம் அடையத் துவங்கியது. மனிதர்களுக்கு வசதியான வகையில் உடைகளை வடிவமைக்கும் நோக்கம் கொண்டதாக நவீன ஆடை வடிவமைப்பு தோன்றினாலும், பெண்களை பாலியல் நுகர்வுப் பண்டமாக மாற்றும் வகையிலும் அது பரிணாமம் அடைந்ததும் அந்தக்காலத்தில் தான். ஃபேஷனின் இந்தப் பரிணாமம், பெண் உடலின் மீதான பார்வையை மாற்றியிருக்கிறது.
ஃபேஷன் என்ற பெயரில், பெண்களின் மார்பளவை அதிகப்படுத்திக் காட்டுவது, பெண்களின் மார்பை வெளிப்படுத்திக் காட்டுவது போன்ற வகையில் வடிவமைக்கப்பட்டு சந்தைக்குள் தள்ளப்பட்டது பிரா. பெண்களின் அழகை மார்பகங்களின் அளவிலிருந்தும், அதனை வெளிப்படுத்துவதிலிருந்தும் நிர்ணயித்தது முதலாளித்துவம். அழகிற்கான நியதியையும் வரையறையையும் உருவாக்கியது. அதனை நோக்கி  தம்மை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தது முதலாளித்துவம்.
இதன் ஒரு அம்சமாக ‘ஃபேஷன் ஷோ’க்களும், அழகிப் போட்டிகளும் நடத்தப்பட்டன. பொருளாதார ரீதியான கட்டுப்பாடு ஆண்களின் கையில் இருக்கும் நிலையில், பெண்கள் தங்களை ‘அழகாக்கிக்’ கொண்டு ஆண்களை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட உடைகளை ஃபேஷனாக களமிறக்கினர்.
இதற்கு எதிராக அமெரிக்காவில் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினர்.
பெண்களை ஆபாசப் பண்டங்களாக மாற்றுவதற்கு எதிரான முதல் போர்:
1968-ம் ஆண்டில் அமெரிக்காவில் மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டிக்கு எதிரான முதல் போராட்டம் நடந்தது. அங்கு சுமார் 400 பெண்கள் வெளியே கூடி பிராக்கள், ஐ லேஷர்ஸ், ஹேர்ஸ்ப்ரே மற்றும் ஹை ஹீல்ஸ் செருப்புக்கள் என பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் பொருட்களை எல்லாம் ‘சுதந்திர குப்பைத் தொட்டியில்’ (Freedom Trash can ) இட்டனர். இது புகழ்பெற்ற “Burn the bra” இயக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. இது உலகெங்கிலும் இது குறித்த தலைப்புச் செய்திகளை உருவாக்கிய ஒரு நிகழ்வு.

spacer.png

spacer.png

spacer.png
spacer.png
“சுதந்திர குப்பைத் தொட்டி போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெண்களுக்கு சிவில் உரிமைகள் அல்லது வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கங்களில் முந்தைய அனுபவம் இருந்தபோதிலும், பெண்கள் உரிமைகளுக்காக அவர்கள் பங்கேற்ற முதல் போராட்டம் அது” என போராட்டத்தில் பங்கேற்ற மார்கேன் என்பவர் கூறுகிறார்.
அமெரிக்காவில் அழகு போட்டிபோட்டி பங்கேற்பாளர்கள் நல்ல உடல் தகுதி, உடல் அமைப்பு, வெள்ளை நிறம் போன்றவைகளை அத்தியாவசிய தேவைகள் காரணிகள் என வரையறைத்திருந்தது. வெள்ளை இனத்தின் அடுக்குமுறை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கைவிடப்பட்டிருந்தாலும், இந்த போட்டிகளில் வெள்ளை நிறத்தவர் அல்லாத வெற்றியாளர்கள் அதுவரை தேர்வு செய்யப்படவில்லை.
1921-ல் அழகிப் போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து, எந்தப் போட்டியிலும் ஒரு கருப்பின பெண் கூட இறுதிப் போட்டியாளராக இருந்தில்லை என்று அமெரிக்காவில் நடைபெற்ற “ஃப்ரீடம் ட்ராஷ் கேன்” போராட்டத்திற்கான செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
புவேர்ட்டோரிக்கன், அலாஸ்கன், ஹவாய், அமெரிக்க – மெக்சிகன், அமெரிக்க – இந்தியன் என வெள்ளை நிறத்தவரல்லாத எவரும் வெற்றியாளராக இருந்ததில்லை. அந்த அழகி போட்டிக்கான எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் சுட்டிக்காட்டிய 10 அம்சங்களில் இனவாதமும் ஒன்று. பெண்களின் எழுச்சியாக சுமார் 50 வருடம் கடந்து பேசப்படும் போராட்டமாக அமெரிக்காவில் தோன்றிய இப்போராட்டம் இருக்கிறது.
ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் மேலும் பல பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துவதும் தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அதை அணிய பிறரை நிர்பந்திப்பதும் இழிவானது.
சிந்துஜா
சமூக செயற்பாட்டாளர்
 

https://www.vinavu.com/2021/10/13/problem-of-bra-a-historical-insight/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரா அணியாதவர்களை இழிவுசெய்யும் அந்த மூடர்களை எல்லாம் வரிசையில் வரச்சொல்லுங்க.
பச்சை மட்டையில் ஆளுக்கு நாலு சாத்து போட்டா போவுது. 😃 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பிரா அணிவது அணியாததுபற்றி ஆண்களே அதிகமாக கவலைபடுகின்றனர். அவ்வளவு வெறி மாப்பிள்ளைங்களுக்கு.

கேட்டால் கலாச்சாரம்பற்றி கவலைபடுகிறார்களாம்.

சாரம் கட்டிக்கொண்டு ஜட்டி போடாமல் முன்னாடி கலா வந்தா கூட கவலைபடாமல் காத்தோட்டமாக திரியும் ஆண்கள் பலர் கலாச்சாரம் பற்றிய கவலையில் உள்ளனர்.

அதுபற்றி எந்த பெண்களாவது கேள்வி கேட்டார்களா ஆய்வு கட்டுரைகள் எழுதினார்களா என்று மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கபடுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை போடவேண்டாம் என்றுதான் நாங்களும் நினைக்கிறம் .......அந்தக் கோதாரிதான் வயது வித்தியாசம், ஆள் அடையாளம் தெரியாமல் எல்லோரரையும் ஏமாத்துது......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2021 at 21:35, கிருபன் said:

தொலைக்காட்சி மாடல் மற்றும் நடிகையான பத்மா லட்சுமி, கடந்த 2020-ம் ஆண்டு தனது யூ-டியூப் பக்கத்தில் சமையல் காணொலி ஒன்றில், பிரா எனப்படும் பிரெசியர் அணியாமல் மேலாடையோடு பதிவிட்டிருந்தார்.

சும்மா பந்தி பந்தியாய் எழுதி நீட்டி முழக்காமல் சம்பந்தப்பட்ட வீடியோவையும் சேர்த்து இணைக்கிறதுதான் செய்திக்கு அழகு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சும்மா பந்தி பந்தியாய் எழுதி நீட்டி முழக்காமல் சம்பந்தப்பட்ட வீடியோவையும் சேர்த்து இணைக்கிறதுதான் செய்திக்கு அழகு...

பார்த்தேன்.. போடுகிற அளவுக்கு ஒன்றுமில்லை😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வயசு வட்டுக்க வந்திட்டுது அதால கண்டபடி கண்ட இடங்களில கண்களை நீட்டமுடியாது அதால வெளிப்புறம் மினுங்கிற கிளாஸ் கோட்டிங் போட்ட கூலிங் கிளாசைத்தான் அனேகமாக காதில தொங்கவிடுகிறனான்.

ஆகவே நீங்கள் அப்படி எதுவும் அணியாமல் வாறதுதான் எனக்கு வசதி. மின்னல் இந்தப்பக்கமும் ஒருக்கா வாம்மா.

"பிறந்த இடத்தை நாடுதே பேதமடை நெஞ்சு கறந்த இடத்தை நாடுதே கண்"

பட்டினத்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது அவங்களுக்குப் பிரச்சனையோ இல்லையோ, அது எனக்குப் பிரச்சனை. 

என்ன நா சொல்றது சரிங்தானே மஹாத்தயாவ்..

😌

Link to comment
Share on other sites

On 20/10/2021 at 16:19, Sasi_varnam said:

பிரா அணியாதவர்களை இழிவுசெய்யும் அந்த மூடர்களை எல்லாம் வரிசையில் வரச்சொல்லுங்க.
பச்சை மட்டையில் ஆளுக்கு நாலு சாத்து போட்டா போவுது. 😃 

...அவர்கள் அணியாமல் விட்டால், அந்த கடைசி ஹூக்கை கழட்ட உதவும் போது கிடைக்கும் அந்த பேரின்ப அனுபவம் கிடைக்காமல் விட்டுடுமே சித்தனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல குக்கிங் சணலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.   கவனிக்காமல் விட்ட திரியை திண்ணையில் எழுதி கவனத்தை இங்கு திருப்பிய நிழலிக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

...அவர்கள் அணியாமல் விட்டால், அந்த கடைசி ஹூக்கை கழட்ட உதவும் போது கிடைக்கும் அந்த பேரின்ப அனுபவம் கிடைக்காமல் விட்டுடுமே சித்தனே

இண்டைக்கு ஆள் ஒரு மார்க்கமாத்தான் திரியுது......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்மா லக்ஷ்மி : சல்மான் ருஷ்டியின் ஒரு காலத்துக் காதலியென நினைக்கிறேன். சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

அதை போடவேண்டாம் என்றுதான் நாங்களும் நினைக்கிறம் .......அந்தக் கோதாரிதான் வயது வித்தியாசம், ஆள் அடையாளம் தெரியாமல் எல்லோரரையும் ஏமாத்துது......!  🤔

அவர வெளி உலகத்துக்கு விடாம ரூம் உள்ளையே அடைச்சி வச்சா அப்படி தான்..😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

பத்மா லக்ஷ்மி : சல்மான் ருஷ்டியின் ஒரு காலத்துக் காதலியென நினைக்கிறேன். சரியா?

 

6 minutes ago, குமாரசாமி said:

Salman Rushdie arrives with Padma Lakshmi at the 57th Film Festival in Cannes in 2004.

Padma Lakshmi And Salman Rushdie Indian Wedding

ஆஹா....நான் பார்த்ததில்லை சுக்கிரனும் வியாழனும் ஒத்துப்போன இடம் இதுதான்......இனி இப்படி ஒரு சந்திப்பு இடம் பெறுமோ தெரியாது......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2021 at 23:12, valavan said:

 

சாரம் கட்டிக்கொண்டு ஜட்டி போடாமல் முன்னாடி கலா வந்தா கூட கவலைபடாமல் காத்தோட்டமாக திரியும் ஆண்கள் பலர் கலாச்சாரம் பற்றிய கவலையில் உள்ளனர்.

 

பெண்கள் இவர்களை பழிவாங்க வேண்டும் எண்றால் பிரா அணியாமல் பொது இடத்தில் இவர்கள் முன்னால் வரவேண்டும்.. அப்பொழுது வேறு வழி இன்றி வெட்கக்கேட்டில் இவர்கள் ஜட்டி அணிந்தே ஆகவேண்டும்.. 😂

5 hours ago, குமாரசாமி said:

சும்மா பந்தி பந்தியாய் எழுதி நீட்டி முழக்காமல் சம்பந்தப்பட்ட வீடியோவையும் சேர்த்து இணைக்கிறதுதான் செய்திக்கு அழகு...

அண்ணேண்ட இலைக்கு பாயாசம் வையுங்கோ…😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரா அணியாமல் வாராது என்னமோ ஆண்களுக்கு பிடிக்காது எண்டமாதிரி இந்த புள்ளை எழுதி இருக்கு.. இஞ்சபாரும்மா இந்த திரியிலையே பூரா ஆம்பிளையளும் உனக்குதான் சப்போட்டு… என்சாய் அண்ட் லெட் அஸ் என்சாய்..😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஒரே வேண்டுகோள், பொம்பிளையள் என்ன வேணும் எண்டாலும் போடட்டும், போடாமல் விடட்டும். இந்த கோவிலுக்கு சேட்டை கழட்டி போட்டு வாற அங்கில்மாருக்கு இப்படி ஏதும் போட்டு விட முடியாதா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

எனது ஒரே வேண்டுகோள், பொம்பிளையள் என்ன வேணும் எண்டாலும் போடட்டும், போடாமல் விடட்டும். இந்த கோவிலுக்கு சேட்டை கழட்டி போட்டு வாற அங்கில்மாருக்கு இப்படி ஏதும் போட்டு விட முடியாதா🤣.

அதான… கருமம் புடிச்சவனுங்க வேர்வை நாத்தம் வேர…

சேட்ட போடுரா *** யிருன்னு செவித்த புடிச்சி  ரெண்டு அப்பு உடனும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரா போடாமல் போக பொண்ணுகளுக்கு  மட்டும்தான்  அனுமதி..  ஆண்கள்  மாற்று  பாடையில்  போகவும்..

நாங்க சட்டைபோடாமல் உலாவ பொண்ணுகளுக்கு மட்டும்தான் ஆதரவு கொடுக்கிறோம்.. ஆனா கோயில் குளம் தெருவுன்னு போனா  ஏன்யா ஆங்கிளுங்க  எல்லாம் சட்டை இல்லாம வாரீங்க ...உங்கள வச்சிகிட்டு நாங்க என்ன பண்ணுறது..? 😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தத்தித் தாவிடும் முயல் குட்டிகளுக்கு கடிவாளம் எதற்கு?🙄எகிறிக் குதிக்கும் குதிரைகளுக்கு கடிவாளம் அவசியம் தான்👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாலி said:

தத்தித் தாவிடும் முயல் குட்டிகளுக்கு கடிவாளம் எதற்கு?🙄எகிறிக் குதிக்கும் குதிரைகளுக்கு கடிவாளம் அவசியம் தான்👀

எங்களுக்கு தெரிந்ததெல்லாம் தேசிக்காய், மிஞ்சி மிஞ்சு போனால் ஒரு விலாங்காய்... நீங்க முயல்குட்டி, குதிரை குட்டி என்று  போறீங்களே... விஷயம் பெருஸ்..சா.. இருக்குமோ. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

 

ஆஹா....நான் பார்த்ததில்லை சுக்கிரனும் வியாழனும் ஒத்துப்போன இடம் இதுதான்......இனி இப்படி ஒரு சந்திப்பு இடம் பெறுமோ தெரியாது......!  😂

வாய்ப்பேயில்லை ராஜா..! இது சூரிய கிரகணம் மாதிரி  அரிதாக நடப்பது - கொண்டாடுங்கள்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

எனது ஒரே வேண்டுகோள், பொம்பிளையள் என்ன வேணும் எண்டாலும் போடட்டும், போடாமல் விடட்டும். இந்த கோவிலுக்கு சேட்டை கழட்டி போட்டு வாற அங்கில்மாருக்கு இப்படி ஏதும் போட்டு விட முடியாதா🤣.

நடு சென்ரரிலை தங்க சங்கிலி பதக்கம் வேறை அலங்கரிக்கும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்புக்கச்சை மல்ரி பில்லியன் டொலர் வியாபாரம். வரத்தக மயப்படுத்தப்பட்டுள்ள மார்பு கச்சையின் பிடியில் இருந்து வெளியேறுவது மனித சமூகத்துக்கு சாத்தியம் இல்லை. 

மார்புகச்சையும் மார்பக புற்றுநோயும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை என கூறப்படுகின்றது. எனவே, தகுந்த விழிப்புணர்வு தேவை. பெண்களை சாவடிக்கும் உயிர்கொல்லிகளில் மார்பக புற்று நோய்க்கு முக்கிய பங்கு உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு கீழ வாறதில பிரச்சனை இல்லை. ஆனால் குத்தியன். @குமாரசாமி  க்கு கீழ வரக் கூடாது.
    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.