Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஒரே நாடு ஒரே சட்டம்' -தமிழரை புறக்கணித்த கோட்டாபய

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'ஒரே நாடு ஒரே சட்டம்' -தமிழரை புறக்கணித்த கோட்டாபய...

இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான அரச தலைவர் செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில்  தமிழர் சார்ந்து எவரும் நியமிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Galagoda is the same Gnanasara Thera) தலைமையில் 13 பேர் கொண்ட அரச தலைவர் செயலணியே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணி உருவாக்கம் தொடர்பில் நேற்று (26) விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார(Professor Dayananda Bandara), பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க(Prof. Chandinandana Wijesinghe), பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி. சுஜீவ பண்டிதரத்ன(Prof. Sumedha Siriwardena), சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன(Attorney Iresh Seneviratne), சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே(Attorney Sanjaya Marambe), எரந்த நவரத்ன(Erantha Navaratne), பாணி வேவல(bani vevela), மௌலவி மொஹொமட்(Moulavi Mohammad), விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப்(Lecturer Mohamed Indikap), கலீல் ரஹுமான்(Khalil Rahman), அஸீஸ் நிசார்தீன்(Aziz Nisardin) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ibc tamil

Gallery

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாடு ஒரே சட்டம் குழுவில் ஒரு தமிழர் நியமனம் பெற்றால் பிறகு அவரை பதவி விலக சொல்லுவீங்க. துரோகி என்பீர்கள். கோத்தபாயாவுக்கு முண்டு கொடுப்பதாய் சொல்லுவீங்க. சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு துணை போவதாய் சொல்லுவீங்க. அந்த பாவப்பட்ட ஜீவனுக்கு சாணி அடிப்பீர்கள். இதைவிட ஒரு தமிழரும் செயலணியில் அங்கம் வகிக்காதது நல்லது தானே பெரியோரே!

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசாரர் தலைமை எனில் தமிழர் அக்குழுவில் இருந்தும் பலனில்லை.

இலங்கையின் நீதித்துறையை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் உள்ளே போனவர் ஒரு சட்டம் உருவாக்கும் குழுவின் தலைவர்!

இப்படி ஒரு நாடு இவ் உலகில் எங்கும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

நாலு இஸ்லாமியர்கள்....இவர்களுக்கு வகுப்பெடுத்து, தேரர் நேரம் போகப்போகுது.... நல்ல காலம் தமிழர் இதில் இல்லை. 😁

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமிழீழத்துக்கு சொந்தமானவர்கள்.. அதற்குரிய சட்டத்தால் தானே ஆளப்பட முடியும். கோத்தா அதை முடிவு செய்ய முடியாது என்பதாலாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நீதிபதியை குழுவின் தலைவராக நியமித்து தமிழர்களை அங்கத்தவர்களாக சேர்த்திருந்தால் கூட அந்த தமிழர்களை நியாயத்தை கதைப்போம் சொன்னது போல் துரோகிகள்  சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோனவர்கள் எலும்பு துண்டை சாப்பிடுகிறவர்கள் என்று எல்லாம் திட்டு அந்த தமிழர்களுக்கு நடப்பது உறுதி.அந்த தமிழர்கள் இப்போது தப்பி பிழைத்தார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா தமிழரால் தெரிவு செய்யப்பட்டவரல்லர், அவரால் பதவியிலோ, செயலணியிலோ தெரிவு செய்யும் தமிழர் தாமாகவோ, தமிழருக்காகவோ ஒரு புள்ளியைத்தானும் இட முடியாது. சிங்களத்தால் நடைபெறும் அனிஞாயங்களை தட்டிக்கேட்கவோ, தடுக்கவோ முடியாது. ஏன் தானாக ஒரு கேள்வி பதில் சொல்ல முடியாது.  ஒரு சிங்களவர் செய்யும் அடாவடியை விட கூடுதலாக நியமிக்கப்படும் தமிழர் தமிழருக்கெதிராக செய்து முடிக்க வேண்டும், அவரே சிங்களத்தின் ஊழியர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு நீதிபதியை குழுவின் தலைவராக நியமித்து

இலங்கையின் சட்டமா அதிபரே தமிழர்தான், அவருக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் வேலையே
அரச படைகளுக்கெதிரான வழக்குகளை மீளப்பெறுவதும், கைவிட ஆவன செய்வதும் 
இந்த சீத்துவத்தில் செயலணியில் தமிழர்கள் இருந்தால் என்ன இல்லாமல் இருந்தால் தான் என்ன,
அதை விடப்பாவம் செயலணியிலுள்ள முஸ்லிம்கள் தேரையிடம் மாட்டி திக்குத்தெரியாமல் ஓடப்போயினம்  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் யாரும் நியமிக்கபடாதது நல்லதுதான். அப்படி தமிழர் எவரும் நியமிக்கப்பட்டிருந்தால் பெயரில் மட்டுமே தமிழை கொண்டிருக்கும் சிங்கள எஜமான விசுவாசம் கொண்ட ஒரு கதிர்காமர், டக்ளஸ் போன்றவர்களை நியமித்துவிட்டு சர்வதேசத்திற்கு தமிழருக்கும் உரிய அந்தஸ்து கொடுக்கிறோம் என்று காண்பித்திருப்பார்கள்.

எந்த வகையிலெல்லாம் இன்றும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு உலகிற்கு தேவை வாய் பேச்சுகளல்ல, ஆதாரங்கள்!, அந்த ஆதாரங்களை சிங்களவர்களே கொடுப்பது ஆரோக்கியமான விசயம்தான்.

ஒரேநாடு ஒரே சட்டம் என்று சொல்லிக்கொண்டாலும் ஒரே நாட்டில் ஒரே நீதி இல்லையென்பதை உலக அரங்கு கண்காணிக்க இதுவும் ஒரு நல்ல வாய்ப்புத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது – இரா.சாணக்கியன்

ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது – இரா.சாணக்கியன்

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள குறித்த செயலணி, முரண்பாட்டின் வரைவிலக்கணம் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விமர்சித்துள்ளார்.

நாட்டில் சட்டத்தை அமுல்ப்படுத்த முடியாது என்றால் எதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் குற்றவாளி ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை வகிப்பது கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவையாகவே இருக்கிறது என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1247011

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசாரதேரர் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகள் கடும் கண்டனம்

(நா.தனுஜா)

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கும் அந்தச் செயலணியில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் உள்வாங்கப்படாமைக்கும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தமது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிங்களவர்கள் அல்லாத தமிழ், முஸ்லிம்கள் தொடர்பில் ஞானசாரதேரர் வெளிப்படுத்திவரும் கருத்துக்களை அனைவரும் அறிந்திருப்பதுடன் அவர் ஏற்கனவே நீதிமன்றத்தினால் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டவராவார். 

அவ்வாறான ஒருவர் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையானது கேலிக்கூத்தானதும் நகைப்பிற்குரியதுமான விடயமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களின்றி உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தச் செயலணியின் பரிந்துரைகள் எவ்வாறு நியாயமானவையாக அமையும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கைக்குள் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபைத் தயாரிப்பதற்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் அடங்கிய விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவந்தவரும் அதன் காரணமாகப் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தவருமான ஞானசார தேரரின் தலைமையில் மேற்படி புதிய செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறித்தும் 13 உறுப்பினர்களில் 4 முஸ்லிம்கள் உள்ளடங்குகின்ற போதிலும் தமிழர்கள் எவரும் உள்வாங்கப்படாமை குறித்தும் தற்போது பலதரப்பட்டவர்களாலும் விமர்சனங்களும் கண்டனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் கேசரியிடம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், குறித்த செயலணியின் தலைவராக ஞானசாரதேரர் நியமிக்கப்பட்டமை கடும் கண்டத்திற்குரியது என்று சுட்டிக்காட்டினார். 

அதேவேளை தமிழ் பிரதிநிதிகளின்றி இந்த செயலணி உருவாக்கப்பட்டிருப்பதிலிருந்து ஜனாதிபதி இன்னமும் திருந்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

எமது நாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்தின் பல்வேறு அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் ஞானசாரரின் தலைமையில், தமிழ் உறுப்பினர்கள் எவருமின்றி 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற புதிய ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம். இது வெறுமனே நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான கண்துடைப்பு நடவடிக்கையே தவிர, இந்தச் செயலணியினால் எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை.

குறிப்பாக தமிழர்களின்றி உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தச் செயலணியின் பரிந்துரைகள் எவ்வாறு நியாயமானவையாக அமையும் என்ற வலுவான சந்தேகம் எழுகின்றது. இது இனங்களுக்கு இடையில் தேவையற்ற முரண்பாடுகளையும் பிளவுகளையும் தோற்றுவிப்பதற்கு வழிவகுக்குமே தவிர, ஒருபோதும் தமிழ்பேசும் மக்களுக்கு நியாயத்தை வழங்காது.

இனத்துவேசத்தை விதைப்பதன் ஊடாக எந்தவொரு விடயத்தையும் சாதித்துவிடலாம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் உள்ளடங்கலாக அண்மைக்காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கக்கூடிய சிங்கள மக்கள் மத்தியில் இனத்துவேசத்தை விதைப்பதன் ஊடாக உண்மையான பிரச்சினைகளை மறக்கடித்துவிடலாம் என்றும் அதன்மூலம் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் வென்றுவிடலாம் என்றும் அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய உத்திகள் சிங்களவர்கள் மத்தியில் எடுபடாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இதுகுறித்துக் கேசரிக்குக் கருத்துத்தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், 'ஞானசாரதேரர் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய ஜனாதிபதி செயலணியானது வெளிப்படையாக அரங்கேற்றப்படுகின்றதொரு கண்துடைப்பு நாடகம் மாத்திரமேயாகும். 

பெரும்பான்மையின சிங்களவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலணியின் பரிந்துரைகள் எவ்வாறு அனைத்து இனமக்களுக்கும் பொதுவானதாக அமையமுடியும்? குறிப்பாக தமிழர்களுக்குரிய தேசவழமைச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பல்வேறு முக்கிய விடயங்கள் படிப்படியாக இல்லாமல்செய்யப்பட்டுள்ளன. அதன் நீட்சியாக மாகாணசபைத்தேர்தல்களும் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டு வருகின்றன. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இனங்களுக்கிடையில் பிளவுகளைத் தோற்றுவித்து, இலங்கையைத் தனிச்சிங்கள - பௌத்த நாடாக மாற்றியமைப்பதற்கான பிரகடனமாகவே இந்த 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணியைக் கருதவேண்டியிருக்கின்றது' என்று கூறினார்.

மேலும் தமிழர்களின் பிரதிநிதித்துவமின்றி உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஜனாதிபதி செயலணி தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வினவியபோது அவர் கூறியதாவது:

'தற்போது நாட்டிலுள்ள 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கலகொட அத்தே ஞானசாரதேரர் தலைமையில் இந்தப் புதிய செயலணி நிறுவப்பட்டிருப்பதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கின்ற சட்டங்களை உரியவாறு நடைமுறைப்படுத்துவதே போதுமானதாக இருக்கும். 

அதாவது ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தை அனைவருக்கும் சமத்துவமான விதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கின்றது. ஆனால் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற புதிய செயலணியை உருவாக்கி, அதற்குத் தலைவராக இலங்கையின் சட்டங்களை மதிக்காத ஒருவரை நியமித்தமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது எதிர்வருங்காலங்களில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். 

ஏற்கனவே உரப்பற்றாக்குறை உள்ளடங்கலாக நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் சூழ்நிலையில், அவற்றிலிருந்து மக்களைத் திசைதிருப்புவதற்காக அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது' என்று சுட்டிக்காட்டினார்.

அதேவேளை 'சிங்களவர்கள் அல்லாத தமிழ், முஸ்லிம்கள் தொடர்பில் ஞானசாரதேரர் வெளிப்படுத்திவரும் கருத்துக்களை அனைவரும் அறிந்திருப்பதுடன் அவர் ஏற்கனவே நீதிமன்றத்தினால் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டவராவார். 

அவ்வாறான ஒருவர் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையானது கடும் கண்டனத்திற்குரியது என்பதுடன் மறுபுறம் நகைப்பிற்குரியதுமாகும் என்று தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேசரியிடம் தெரிவித்தார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையைப் பொறுத்தமட்டில் நாட்டிலுள்ள சட்டங்கள் அனைவருக்கும் சமத்துவமான வகையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். ஆனால் தற்போது நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவம் மற்றும் பாரம்பரியத்தை இல்லாமல்செய்து பெரும்பான்மையினத்தவரின் விருப்பத்திற்கு அமைவாகவே அனைவரும் செயற்படவேண்டும் என்பதை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தவரின் அபிலாஷைகளை நிராகரிப்பதாகவே இந்தப் புதிய செயலணியின் செயற்பாடுகள் அமையும். ஏனெனில் இத்தகைய செயலணிகள் உருவாக்கப்படும்போது அவை இனங்களுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஸ்தாபிக்கப்படவேண்டும். 

ஆனால் இந்தப் புதிய செயலணியின் உறுப்பினர்களில் மூன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில் சிங்களவர்களும் பெயருக்கு சில முஸ்லிம்களும் உள்வாங்கப்பட்டிருப்பதுடன் தமிழர்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள். 

எனவே இது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையின் உண்மையான தாற்பரியத்தைப் புரிந்துகொள்ளாமல் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய செயலணி என்பதுடன் இதன்மூலம் அரசாங்கத்தின் இனவாதப்போக்கையும் தௌ;ளத்தெளிவாக விளங்கிக்கொள்ளமுடிகின்றது என்று குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/116142

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2021 at 13:49, குமாரசாமி said:

'ஒரே நாடு ஒரே சட்டம்' -தமிழரை புறக்கணித்த கோட்டாபய...

இலங்கையில் ஏற்பட்டு வரும் பெரும் பொருளாதார சரிவுகளுக்கு பின் ராஜபக்சர்களின் மக்கள் செல்வாக்குபெரும் சரிவை ஏற்பட்ட பின் மீண்டும் பேரினவாத பெரும் விச அரசியலை முன் எடுத்து ஒரே நாடு ஒரே சட்டம்என்று அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் ஏனைய இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்களைஇரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்கி மீண்டும் மீண்டும் அமைதியும்  ஐக்கியமும் சமாதானமும் இல்லாததோர்தேசமாகவே இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கவிருக்கிறது.சர்வதேசதுக்கு தாங்கள் சமாதான தூதராகவும்காட்டி அதே வேளை புலம் பெயர் தமிழ் மக்களுடனும் பேசுவதாக அறிவித்து விட்டு முற்றிலும் மாறுபட்டகொள்கைகளை ஏனைய தேசிய இனங்களுக்கு எதிராக நடை முறைப்படுத்தவுள்ளது . எப்படி தாங்கள்ஆட்சிக்கு வருவதற்காக யுத்த வெற்றியையும் பேரினவாதத்தையும் முன் எடுத்தார்களோ அதே ஆயுதத்தைய்மீணடும் கையில் எடுத்து ஆட்சிக்கு வரும் நோக்கில் காய் நகர்த்தப் பார்க்கின்றனர். மீண்டும் இந்த மக்கள்ஏமாற்றப்படுவார்களா காலம் பதில் சொல்லட்டும்.

 

அன்று கொல்வின் ஆர் டீ சில்வா சொன்னார்

இரண்டு மொழிகள் ஒரு தேசம் - 

ஒரு மொழி இரண்டு தேசங்கள் என்று

இன்று கோத்தபய ராஜபக்ச சொல்கிறார் 

ஒரு நாடு ஒரு சட்டம் என்று.

 

பா.உதயன் 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.