Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 மாதங்களில் 1043 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டும் : நெருக்கடிக்கான தீர்வு என்ன ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் தற்போது 2.2 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்பே காணப்படுகிறது. இதில் 1.7 பில்லியன் டொலரை மாத்திரமே பயன்படுத்த முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 1043 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிக்கு என்ன தீர்வு? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார்.

அத்தோடு தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் 2010, 2011 மற்றும் 2012 தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நினைவுபடுத்துவதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

harshade_silwa.jpg

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெறும் 5 பில்லியன் டொலர் தற்போது முற்றாக இல்லாமல் போயுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றதில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாக 4.5 பில்லியன் என்ற அதிகபட்ச அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. மாறாக ஏனைய வருடங்களில் சராசரியாக 2.4 பில்லியன் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கப் பெறும்.

இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் அதேவேளை இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது 1.6 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.

தற்போது சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான காரணம் கொவிட் தொற்று அல்ல. அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமேயாகும்.

கொவிட் தொற்றின் பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் 0.7 வீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 4.5 வீதமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி தடுப்பூசி கொள்வனவு உள்ளிட்ட கொவிட் செலவுகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றன.

கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களையே தற்போது தாம் செலுத்திக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி கூறுவது உண்மைக்கு புறம்பானது. காரணம் கடந்த ஆண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2010 இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெற்ற கடனாகும்.


விவசாயிகளின் கழுத்தை பிடித்து இறுக்கி சேதன உரத்தை பயன்படுத்துமாறு கூற முடியும் என்றும், எனினும் தான் அவ்வாறு செய்யவில்லை என்றும் ஜனாதிபதி கூறுகின்றார். 

 

அவர் நேரடியாக அவ்வாறு செய்யாவிட்டாலும் தற்போது விவசாயிகள் அவ்வாறானதொரு நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரை நியமித்து அவசரகால விதிகளை நடைமுறைப்படுத்திய போதிலும், அதன் ஊடாக எந்த செயற்றிட்டமும் வெற்றியளிக்கவில்லை என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

மக்களுக்கு தமது ஆட்சியில் நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி வாக்குறுதியளித்தார். ஆனால் இன்று அரிசி, சீனி, பால்மா, சமையல் எரிவாயு என அனைத்து அத்தியாவசியப் பொருட்களினதும் விலை பன்மடங்காக அதிகரித்துள்ளது. 
இதுவா ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணம்? விவசாயத்தை மேம்படுத்துவதாகக் கூறி அதனை முழுமையாக சீரழித்துள்ளனர். நாட்டில் வருட இறுதியில் விவசாயம் பாரிய வீழ்ச்சியடையும் என்று கடந்த ஜூலை மாதமளவில் 104 விவசாயத்துறை நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை இன்று உண்மையாகியுள்ளது.

நாடு தற்போது பாரிய அபாயத்தில் உள்ளது என்பதை ஜனாதிபதி உணர வேண்டும். 
தாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப் போவதில்லை என்றும், அஜித் நிவாட் கப்ரால் முஸ்லிம் நாடுகளிடம் கடன் பெறுவார் என்றும் ஜனாதிபதி செயலர் தெரிவித்துள்ளார். ஆனால் இங்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். அவ்வாறிருக்கையில் எவ்வாறு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியும்?
தற்போது மக்கள் ஒருவேளை உணவை மாத்திரமே உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியின் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கான கொள்ளை திட்டங்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றார்.

3 மாதங்களில் 1043 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டும் : நெருக்கடிக்கான தீர்வு என்ன ? - ஜனாதிபதியிடம் ஐ.ம.ச. கேள்வி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல ..

memees.php?w=240&img=Z291bmRhbWFuaS9nb3V

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடனை அடைப்பதுக்கு  மந்திரித்த தண்ணியை இலங்கையில் உள்ள ஆறுகளில் கலக்க வேண்டும் .

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமையை பயன் படுத்தி இலங்கையை வாங்கலாமா.😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த நிலமையை பயன் படுத்தி இலங்கையை வாங்கலாமா.😄

ஆரிட்டையிருந்து? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஆரிட்டையிருந்து? 🤣

இதென்ன கேள்வி.அலிபாபாவில் போட்டிருக்கு பாக்க வில்லையா.😄

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

ஆரிட்டையிருந்து? 🤣

நான் வேணுமெண்டால் ஒரு ஆயிரம் மில்லியன் தரலாம்....

வேற யாரும்..... எப்படியாவது.... கஸ்டப்பட்டு.... மிச்சத்தை சேர்த்தால்..... பாவம் கோத்தாவிடம் குடுத்து கரை சேர்த்து விடலாம்... 🥲

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

இதென்ன கேள்வி.அலிபாபாவில் போட்டிருக்கு பாக்க வில்லையா.😄

அலிபாபா முதலாளியையே காணேல்லை எண்டு தேடுறாங்களாம் நீங்கள் வேறை 😂

3 minutes ago, Nathamuni said:

நான் வேணுமெண்டால் ஒரு ஆயிரம் மில்லியன் தரலாம்...

ஆயிரம் மில்லியன் ஓகே..... இப்ப கேள்வி என்னவெண்டால் எந்த நாட்டு ஆயிரம் மில்லியன்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஆயிரம் மில்லியன் ஓகே..... இப்ப கேள்வி என்னவெண்டால் எந்த நாட்டு ஆயிரம் மில்லியன்?

சிம்பாவே அல்லது சோமாலி தான் ....

43 மில்லியன் மட்டும் அமேரிக்கன்....

டீல் ஓகேயா....

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Nathamuni said:

சிம்பாவே அல்லது சோமாலி தான் ....

43 மில்லியன் மட்டும் அமேரிக்கன்....

டீல் ஓகேயா....

கொஞ்சம் பொறுங்கோ சிறிலங்காவை வைச்சிருக்கிற ஆக்களிட்டை கேட்டுட்டு சொல்லுறன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அனைத்து அரச, தனியார் ஊழியர்கள் சம்பளத்தை 2022ம் ஆண்டுக்கு 11 மாதங்களுக்கு மட்டும் வழங்கலாம். ஒரு மாத சம்பளத்தில் கடனை கட்டலாம்? அரச, தனியார் நிறுவனங்கள் தமது ஒரு மாதகால வருவாயை வழங்கலாம்? நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால்... 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால்...

அது ஒரே நாடு ஒரே சட்டத்திற்குள் இருப்பவர்களது பிரச்சினை எங்களது பிரச்சினை அல்ல 
LPG விலை எவ்வளவு அதிகரித்தாலும் வாங்கக்கூடிய நிலைமையிலிருக்கும் எனது தாயாரே முழுமையாக  விறகடுப்புக்கு மாறி 6 மாதங்கள் கடந்துவிட்டன. வீட்டுத்தோட்டம் செய்து எனக்கனுப்பிய புகைப்படங்களை பார்த்து விறைத்துப்போய்விட்டேன் நம்மடை வளவுதானா இது என்று 
பெரிய வளவென்பதால் சுற்றியிருக்கும் அயலவர்களையும் ஒன்றிணைத்து பெரிய அளவில் சாகுபடி செய்து
அவர்களுக்கும் பகிர்ந்தளித்து வருகிறார், உடலுழைப்பு அவர்களுடையது கூலியாக தேங்காய்களும் சாகுபடி செய்யும் மரக்கறிகளில் பங்கும்...இவையனைத்தையும் மனிசி சத்தமில்லாமல் செய்துபோட்டு சிரித்துக்கொண்டே படம் பிடித்து அனுப்புது. எங்கடை சனம் எப்பவோ ரெடி 
அடுத்தவன் சொத்தை கொள்ளையடித்து வயிறு வளர்த்த பயல்கள் முழி தான் இப்போ பிதுங்கிப்போய் இருக்கிறது  

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கொடுத்து காப்பாற்றி விட்டால் மறுபடி கடன் வாங்கமாட்டார்கள் என்பது என்ன நிட்சயம்? சும்மா இருந்து சொகுசு வாழ்க்கை வாழ யார் கொடுப்பார்? எங்களை சொந்த நாட்டிற்குள்ளேயே அகதியாய் அலைய வைத்து விட்டு, நமக்கு ஏது நாடு? ஓய்வு எடுக்க வருபவர்கள் நாட்டை மீளட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை அனைத்து அரச, தனியார் ஊழியர்கள் சம்பளத்தை 2022ம் ஆண்டுக்கு 11 மாதங்களுக்கு மட்டும் வழங்கலாம். ஒரு மாத சம்பளத்தில் கடனை கட்டலாம்? அரச, தனியார் நிறுவனங்கள் தமது ஒரு மாதகால வருவாயை வழங்கலாம்? நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால்... 

உங்களுக்கே இது நியாயமாக உள்ளதா?

ராஜபக்ச குடும்பம் ஆடிய ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியா??

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அது ஒரே நாடு ஒரே சட்டத்திற்குள் இருப்பவர்களது பிரச்சினை எங்களது பிரச்சினை அல்ல 
LPG விலை எவ்வளவு அதிகரித்தாலும் வாங்கக்கூடிய நிலைமையிலிருக்கும் எனது தாயாரே முழுமையாக  விறகடுப்புக்கு மாறி 6 மாதங்கள் கடந்துவிட்டன. வீட்டுத்தோட்டம் செய்து எனக்கனுப்பிய புகைப்படங்களை பார்த்து விறைத்துப்போய்விட்டேன் நம்மடை வளவுதானா இது என்று 
பெரிய வளவென்பதால் சுற்றியிருக்கும் அயலவர்களையும் ஒன்றிணைத்து பெரிய அளவில் சாகுபடி செய்து
அவர்களுக்கும் பகிர்ந்தளித்து வருகிறார், உடலுழைப்பு அவர்களுடையது கூலியாக தேங்காய்களும் சாகுபடி செய்யும் மரக்கறிகளில் பங்கும்...இவையனைத்தையும் மனிசி சத்தமில்லாமல் செய்துபோட்டு சிரித்துக்கொண்டே படம் பிடித்து அனுப்புது. எங்கடை சனம் எப்பவோ ரெடி 
அடுத்தவன் சொத்தை கொள்ளையடித்து வயிறு வளர்த்த பயல்கள் முழி தான் இப்போ பிதுங்கிப்போய் இருக்கிறது  

உங்கள் அம்மா மிகவும் திறமைசாலி, நீண்ட காலம் நலமாக வாழ வாழ்த்துக்கள். அம்மாக்கள் எல்லாம் திரண்டால் எதையும் சாதிக்கலாம், 70 களை போல. எங்கள் வீட்டை சுற்றி இருந்த 5 பரப்பு காணி பச்சை பசேல் என்று இருந்தது ஒரு காலம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

உங்களுக்கே இது நியாயமாக உள்ளதா?

ராஜபக்ச குடும்பம் ஆடிய ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியா??

போர் கண்ட பூமி இதையும் தாங்கும்  இதுவும் கடந்து போகும்.

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, satan said:

இப்போ கொடுத்து காப்பாற்றி விட்டால் மறுபடி கடன் வாங்கமாட்டார்கள் என்பது என்ன நிட்சயம்? சும்மா இருந்து சொகுசு வாழ்க்கை வாழ யார் கொடுப்பார்? எங்களை சொந்த நாட்டிற்குள்ளேயே அகதியாய் அலைய வைத்து விட்டு, நமக்கு ஏது நாடு? ஓய்வு எடுக்க வருபவர்கள் நாட்டை மீளட்டும்.

இவர்களின் தியாகத்தை வைத்தே இப்போது சில நாடுகள் இயங்கிவருகின்றது…! 

Bild

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

உங்களுக்கே இது நியாயமாக உள்ளதா?

ராஜபக்ச குடும்பம் ஆடிய ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியா??

 

போர் கண்டது தமிழர், போரால் உயிர், உடைமை, நிலம் என அனைத்தையும் இழந்தது தமிழர். போரால் வாழ்ந்தது, சுருட்டியது சிங்களம். போரைச்சாட்டி சொகுசு வாழ்வு தேடி ஓடிய பல நம்மவர்களுக்கு ஈட்டிய பணத்தை சுகமாக இருந்து வயோதிபத்தை கழிக்க நாடு தேவைப்படுகிறது. இழந்தவனே மீட்டால் நன்றாக வந்து தங்கலாம் என துடிக்கின்றனர். நாட்டைவிட்டு ஓடும்போது நாடு தேவையில்லை, நாட்டுப்பற்று இருக்கவில்லை. இப்போ நாடு கடனில மூழ்கினால் தாங்கள் வந்து இளைப்பாற முடியவில்லை என ஏக்கம். நொந்தவன் கொடுத்து காப்பாற்றட்டும் இதுதான் சிலரின்  நிஞாயம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.