Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்திற்கான... உற்சாகமூட்டல்களே, போராட்டங்கள் – வைராக்கியத்துடன் எதிர் கொள்வோம் என்கிறார் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

அரசாங்கத்திற்கான... உற்சாகமூட்டல்களே, போராட்டங்கள் – வைராக்கியத்துடன் எதிர் கொள்வோம் என்கிறார் டக்ளஸ்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான  உற்சாகமூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் சகஜ நிலைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று(சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

நீண்ட பல வருடங்களாக எமது நாடு எதிர்கொண்ட பொருளாதார சவால்களின் திரட்சியே இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.

கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு அவற்றில் வெற்றி பெற்ற எமது அரசாங்கம், தற்போதைய பொருளாதார சவால்களையும் முறியடிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இவ்வாறான நிலையில், மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் எதிரணிகள், மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை மேற்கொள்வதுடன் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.

இவ்வாறான போராட்டங்கள் விளையாட்டுக் களங்களில் வீரர்கள்  சவால்களை  எதிர்கொள்ளுகின்ற போது, ரசிகர்களினால் வழஙகப்படுகின் உற்சாகமூட்டல்கள் போன்றே அமைந்துள்ளன.

ரசிகர்களின் உற்சாகமூட்டல்கள், விளையாட்டு வீரர்களுக்கு  வெற்றியடைய வேண்டும் என்ற வைராக்கியத்தினையும் உந்துதலை ஏற்படுத்தவது போன்றே, எதிரணிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற போராட்டங்கள் எமது அரசாங்கத்திற்கு உந்துதலாக அமைந்திருக்கின்றன.

எனவே, மக்கள் சகிப்புத் தன்மையுடனும் நம்பிக்கையுடனும் எதிர்வரும் சில நாட்களை எதிர்கொள்ள வேண்டும்.”  எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1274528

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு அவற்றில் வெற்றி பெற்ற எமது அரசாங்கம், தற்போதைய பொருளாதார சவால்களையும் முறியடிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கடந்தகால கானல் வெற்றியே தற்கால வீழ்ச்சிக்கு காரணம் என்பதை இந்த அறிவிலிக்கு எங்கே விளங்கப்போகிறது?  காரணம் அந்த வெற்றியின் பங்குதாரரும் இவர். எங்கே போராட்டங்கள் தனக்கு எதிராக திரும்பினால் கைகொடுக்க யாருமில்லையே என்கிற  பயத்தினால் உளறுகிறார். வெற்றிக்கு இந்த போராட்டம் உந்துதல் கொடுக்குமென்றால் ஏன் அவர்களை கைது செய்ய வேண்டும்? "அழிவுக்கு முந்தியது அகந்தை, வீழ்ச்சிக்கு முந்தியது வீண் பெருமை."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

கடந்தகால கானல் வெற்றியே தற்கால வீழ்ச்சிக்கு காரணம் என்பதை இந்த அறிவிலிக்கு எங்கே விளங்கப்போகிறது?  காரணம் அந்த வெற்றியின் பங்குதாரரும் இவர். எங்கே போராட்டங்கள் தனக்கு எதிராக திரும்பினால் கைகொடுக்க யாருமில்லையே என்கிற  பயத்தினால் உளறுகிறார். வெற்றிக்கு இந்த போராட்டம் உந்துதல் கொடுக்குமென்றால் ஏன் அவர்களை கைது செய்ய வேண்டும்? "அழிவுக்கு முந்தியது அகந்தை, வீழ்ச்சிக்கு முந்தியது வீண் பெருமை."

ஊரடங்கு சட்டம்,  பயங்கரவாத சட்டத்துடன்...  
சமூக வலைத்தளங்களை முடக்கி விட்டு...
அரசாங்கத்துக்கு எதிரான  போராட்டம், உற்சாகமூட்டல் என்று...
அந்தாள்... அரசுக்கு, முட்டுக் கொடுக்குது.  😁

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

நீண்ட பல வருடங்களாக எமது நாடு எதிர்கொண்ட பொருளாதார சவால்களின் திரட்சியே இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.

இவர் அந்த நீண்ட பல வருடங்களில் குறைந்தது 31 ஆண்டுகள் பல்வேறு சிங்கள அரசுகளோடு ஐக்கியமாகி அமைச்சராகவும் இருந்தவர். ஏன் இந்த சவால்களின் திரட்சிக்கு அனுமதித்தவர்.. தனது எஜமானர்களை எச்சரித்திருக்கலாமே..?! அவை பொக்கட்டை நிரப்பிறதில குறியா இருந்தது போல்.. இவரும் இருந்திட்டார். பாவம் இப்ப பொக்கட்டுக்குள்ளேயே கை வைக்கப் போறாங்கள் என்ற உடன பயந்திட்டார் போல.

எல்லாம் சும்மா வெறுவாய் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

ஊரடங்கு சட்டம்,  பயங்கரவாத சட்டத்துடன்...  
சமூக வலைத்தளங்களை முடக்கி விட்டு...
அரசாங்கத்துக்கு எதிரான  போராட்டம், உற்சாகமூட்டல் என்று.

அறிவுக்கொழுந்து!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு அவற்றில் வெற்றி பெற்ற எமது அரசாங்கம், தற்போதைய பொருளாதார சவால்களையும் முறியடிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

th?id=OIP.M1wMsJE0GOSgAkgjQJKyMQHaEK&pid=Api&P=0&w=325&h=183

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஊரடங்கு சட்டம்,  பயங்கரவாத சட்டத்துடன்...  
சமூக வலைத்தளங்களை முடக்கி விட்டு...
அரசாங்கத்துக்கு எதிரான  போராட்டம், உற்சாகமூட்டல் என்று...
அந்தாள்... அரசுக்கு, முட்டுக் கொடுக்குது.  😁

ஆர்ப்பாட்ட கார்கள் மேல் கண்ணீர் புகை குண்டு தண்ணி அடியெல்லாம் 
ஆர்ப்பாட்ட காரர்களை உற்சாக படுத்துவத்துக்காவே .
சிலர் தவறாக எண்ணி போலிசை திட்டுவதைத்தான் மனம் ஏற்குதில்லை 

ஆடசியாளர்கள் 
போலீஸ் ஆமி 
நாட்டு மக்கள் 
எல்லோரும் இப்படி உற்சாகமாக இருந்து 
ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தும் மகிமை 
மகிந்த அண்ட் கோ வினால் கிடைத்த வரப்பிரதாசம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

ஆர்ப்பாட்ட கார்கள் மேல் கண்ணீர் புகை குண்டு தண்ணி அடியெல்லாம் 
ஆர்ப்பாட்ட காரர்களை உற்சாக படுத்துவத்துக்காவே .
சிலர் தவறாக எண்ணி போலிசை திட்டுவதைத்தான் மனம் ஏற்குதில்லை 

கேக்கிறவன் கேனையன் என்றால்,
எருமை ஏரோப்பிளேன்  ஓட்டுமாம்... என்று,
டக்கி சொல்லுறார்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

கேக்கிறவன் கேனையன் என்றால்,
எருமை ஏரோப்பிளேன்  ஓட்டுமாம்... என்று,
டக்கி சொல்லுறார்.  🤣

Image

சிறி அண்ணா ஜெர்மனியில் திறந்த சிந்தனைவாத சிங்களவர்கள் 
இலங்கையில் மனித உரிமையை நிலை நாட்ட ஏப்பிரல் 4ஆம் திகதி 
ஆர்ப்பாட்டம் செய்கிறார்களாம் ...... தயவு செய்து புலிக்கொடியுடன் சென்று பங்கேற்று கொள்ளுங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

Image

சிறி அண்ணா ஜெர்மனியில் திறந்த சிந்தனைவாத சிங்களவர்கள் 
இலங்கையில் மனித உரிமையை நிலை நாட்ட ஏப்பிரல் 4ஆம் திகதி 
ஆர்ப்பாட்டம் செய்கிறார்களாம் ...... தயவு செய்து புலிக்கொடியுடன் சென்று பங்கேற்று கொள்ளுங்கள் 

மருதங்கேணி,  நான் இருக்கும்  நிலையில்... 
அவ்வளவு தூரம் போக முடியாதே. 

  • கருத்துக்கள உறவுகள்+
43 minutes ago, Maruthankerny said:

Image

சிறி அண்ணா ஜெர்மனியில் திறந்த சிந்தனைவாத சிங்களவர்கள் 
இலங்கையில் மனித உரிமையை நிலை நாட்ட ஏப்பிரல் 4ஆம் திகதி 
ஆர்ப்பாட்டம் செய்கிறார்களாம் ...... தயவு செய்து புலிக்கொடியுடன் சென்று பங்கேற்று கொள்ளுங்கள் 

 

ஒற்றை நொடியில் அச்சிங்களவரின் பசுத்தோல் உருவப்பட்டு இனவாதம் கொந்தளிக்கும்... 😂

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எதிவரும் ஆட்சி அதிகாரத்தில்  உங்களுக்கு பங்கிருக்குமா ஐயா? இல்லையென்றால் என்ன செய்யப்போவதாக உத்தேசம்? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

போருக்குச் செலவழிக்கிறன் என்று சொல்லி பொக்கற்றில் போட்டதன் வினை இது....தெய்வம் நின்று கொல்லும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கத்திற்கான... உற்சாகமூட்டல்களே, போராட்டங்கள் – வைராக்கியத்துடன் எதிர் கொள்வோம் என்கிறார் டக்ளஸ்

பழைய வீர வசனங்கள் நெடுக சரிவராது

  • கருத்துக்கள உறவுகள்

உற்சாகமூட்டல்களால் கடைசியில் பதவி கூட போச்சே…. 

இன்னும் நாட்டின் நிலமையை புரிந்து கொள்ளாமல் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, MEERA said:

உற்சாகமூட்டல்களால் கடைசியில் பதவி கூட போச்சே….

என்னது அச்சாணி களண்டுடிச்சா....?
போனாப்போவுது  நமக்கு இருக்கவே இருக்கு சிறீதர் தியேட்டர்

Vadivelu Comedy GIF - Vadivelu Comedy Muthu - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்

பதவி தப்பிச்சோ..? 

  • கருத்துக்கள உறவுகள்

எனி என்ன செய்வார்.. வெளியில் இருந்து விசிலடிப்பாரோ..?! 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்க தான் இந்த உற்சாகமூட்டல் வீர வசனங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.