Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறை துறைமுகம் வழியாக... இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு, அனுமதித்தால்... ஒரு இரவிலேயே தீர்வு – டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

காங்கேசன்துறை துறைமுகம் வழியாக... இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு, அனுமதித்தால்... ஒரு இரவிலேயே தீர்வு – டக்ளஸ் தேவானந்தா

எரிபொருள், சீமெந்து, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு  அனுமதித்தால் ஒரு இரவிலேயே தீர்வு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று  (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

”கடற்தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கேட்டுள்ளார்கள். வட மாகாணத்தில் இருக்கக்கூடிய உரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை அதேபோன்று அத்தியாவசிய பொருட்களினுடைய பற்றாக்குறை நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அதே நேரத்தில் வடமாகாணமும் அதற்கு விதி விலக்கில்லாமல் அதற்கு முகம் கொடுத்த வருகின்றது.

இந்த வகையில் எங்களது நீண்டகால திட்ட முன்மொழிவாக இந்தியாவிலிருந்த பொருட்களை இறக்குமதி செய்வதாகும். பாண்டிச்சேரி, காரைக்கால் அல்லது நாகபட்டணத்திலிருந்து நேரடியாக காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்குமதி செய்வதன் ஊடாக விரைவாகவும், நியாயமான முறையில் எமது மக்களிற்கு கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்குவோம்.

எரிபொருள், உரம், சீமெந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை நீக்கி வெகு விரைவில் மக்களிற்கு அது கிடைக்க செய்வோம். என தெரிவித்தார்.

சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் பசளைகள் கிடைக்கவில்லை. இந்த காலப்பகுதியில் பசளையை பெற்றுக்கொடுக்க முடியுமா என ஊடகவியலாளர் வினவினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,

அது தொடர்பில் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் எனக்கு குறித்த அனுமதி கிடைக்கின்ற பட்சத்தில் ஒரு இரவிலேயே அதனை கொண்டு வந்து சேர்த்து விடுவேன் என தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1287430

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்  பகுதி என்றால் நல்ல திட்டம் என்றாலும் அரசு பின்னடிப்பது வழமை தானே. இவர் அமைச்சராக இருந்தும் அனுமதி  பெறுவதென்றால் பிறகேன் அமைச்சர் பதவி?

  • கருத்துக்கள உறவுகள்

துறைமுகம் தான் பிரச்சனையா …..

அப்ப டொலர் பிரச்சனை இல்லையா???

இது கூட தெரியாமல் நாட்டை ஆழ்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

துறைமுகம் தான் பிரச்சனையா …..

அப்ப டொலர் பிரச்சனை இல்லையா???

இது கூட தெரியாமல் நாட்டை ஆழ்கிறார்கள்.

அரசியல்ல, இதெல்லாம்.. சகஜமப்பா. 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

துறைமுகம் தான் பிரச்சனையா …..

அப்ப டொலர் பிரச்சனை இல்லையா???

இது கூட தெரியாமல் நாட்டை ஆழ்கிறார்கள்.

இதைத்தான் நாங்களும் கூறுகின்றோம்
வடக்கு கிழக்கை எங்களிடம் தாருங்கள்
ஒரு இரு இல்லை ஒரு மணி நேரங்களில்
நெருக்கடியைத் தீர்ப்போம் என்று இனி சூனா மாணா   அறிக்கை விடுவார்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஒரு இரவிலேயே அதனை கொண்டு வந்து சேர்த்து விடுவேன்

ஏன் பகலில்  அதனை செய்ய முடியாதோ, இரவில் தான் வசதியோ?
இருட்டில் வண்டி  மாற்றி ஏத்தி விடபோறிங்கப்பா கவனம். !!

  • கருத்துக்கள உறவுகள்

நேரே ஸ்பிக் , விசய் கம்பனி முதலாளிகளிடம் விழுந்துவிட உத்தேசம் போல கிடக்கு..

உங்கட மேல கேஸ் இருக்கு ..😢

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நேரே ஸ்பிக் , விசய் கம்பனி முதலாளிகளிடம் விழுந்துவிட உத்தேசம் போல கிடக்கு..

உங்கட மேல கேஸ் இருக்கு ..😢

தேசிகரே! அப்படி எல்லாம் எடைபோடக்கூடாது. கேசு அங்கு இருக்கும்போதே பாரதப் பிரதமருக்குக் கைலாகு கொடுத்து வந்தவர்தான் அந்த அத்தியடிக் குத்தியர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து எவ்வித தொடர்புகளும் வடக்கு கிழக்கு மக்களுக்கு கிடைக்க கூடாது என்பதில் , இ லங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து சிங்களம் தெளிவாக உள்ளது ....முக்கியமாக பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு அடை விட மாட்டார்கள்...காங்கேசன் துறை முகத்தை அபிவிருத்தி செய்வினம் பாதுகாப்பு படைகளுக்காக...பொருளாதார வளர்ச்சி அல்ல...
பிரிதானிய ஆட்சியில் பருத்திதுறை துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற்ற துறைமுகம் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில நம்ம ஈழத்து எம்.ஜீ.ஆருக்கு புலிகள் தடையாக இருந்தனர் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய...
இப்ப அவரின்ட எசமான்மார் தடையாக இருக்கினம் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய‌

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vanangaamudi said:

ஏன் பகலில்  அதனை செய்ய முடியாதோ, இரவில் தான் வசதியோ?

இரவில் உயிர்களை காவுகொண்டு பழகிப்போச்சு, அதை மாத்த ஏலுமோ?

23 hours ago, தமிழ் சிறி said:

ஆனால் எனக்கு குறித்த அனுமதி கிடைக்கின்ற பட்சத்தில் ஒரு இரவிலேயே அதனை கொண்டு வந்து சேர்த்து விடுவேன் என தெரிவித்தார்.

எப்படியும் அங்கதான்  சுத்தி சுத்தி வருவார் அனுமதி.

22 hours ago, nunavilan said:

இவர் அமைச்சராக இருந்தும் அனுமதி  பெறுவதென்றால் பிறகேன் அமைச்சர் பதவி?

இவர் சொல்கிற அனுமதி அதுவல்ல. மக்கள் தனக்கு வாக்கு அனுமதி வழங்க வேண்டுமாம். உடனே எல்லாம் வானத்திலிருந்து கொட்டுண்ணும்.

23 hours ago, தமிழ் சிறி said:

எங்களது நீண்டகால திட்ட முன்மொழிவாக இந்தியாவிலிருந்த பொருட்களை இறக்குமதி செய்வதாகும். பாண்டிச்சேரி, காரைக்கால் அல்லது நாகபட்டணத்திலிருந்து நேரடியாக காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்குமதி செய்வதன் ஊடாக விரைவாகவும், நியாயமான முறையில் எமது மக்களிற்கு கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்குவோம்.

அட....! இது பற்றி இதுவரை யாரும் சிந்திக்கவேயில்லை. இவ்வளவு இலகுவான வழியிருக்க, எல்லோரும் டொலரைப்பற்றியெல்லோ சிந்திக்கிறார்கள், கதைக்கிறார்கள் முட்டாள்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை தோசை அப்பளம் வடை!
தமிழ் மக்களுக்குச் சொன்னேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/6/2022 at 11:16, தமிழ் சிறி said:

ஆனால் எனக்கு குறித்த அனுமதி கிடைக்கின்ற பட்சத்தில் ஒரு இரவிலேயே அதனை கொண்டு வந்து சேர்த்து விடுவேன் என தெரிவித்தார்.

எதற்கெடுத்தாலும் சும்மா குத்தி முறிவதில் எனக்கு உடன்பாடில்லை. தனியே கூட்டமைப்பையும் விடுதலைப்புலிகளையும் சாடுவதிலும் எவ்வித பயனுமில்லை.

நீங்கள் அன்று சொன்னதை செய்ய நினைத்ததை செய்து காட்டுங்கள். உங்களுக்கு முட்டுக்கட்டை போட அல்லது குறுக்கே வர யாரும் இல்லையென நினைக்கின்றேன்.
 

சிலுவையை சுமக்க உங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

எதற்கெடுத்தாலும் சும்மா குத்தி முறிவதில் எனக்கு உடன்பாடில்லை. தனியே கூட்டமைப்பையும் விடுதலைப்புலிகளையும் சாடுவதிலும் எவ்வித பயனுமில்லை.

நீங்கள் அன்று சொன்னதை செய்ய நினைத்ததை செய்து காட்டுங்கள். உங்களுக்கு முட்டுக்கட்டை போட அல்லது குறுக்கே வர யாரும் இல்லையென நினைக்கின்றேன்.
 

சிலுவையை சுமக்க உங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம். 

இவருக்கு... போட்டியாக, அங்கஜன் நிற்கிறார். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, தமிழ் சிறி said:

இவருக்கு... போட்டியாக, அங்கஜன் நிற்கிறார். 😂

எல்லாரும் ஏட்டிக்கு போட்டியாய்த்தான் நிக்கினம்.ஆனால் நடுத்தெருவிலை நிக்கிற தேரை இழுக்கமாட்டாமல் நிக்கினம்.🤣

இன்று வரை எந்தவொரு நாடும் தமிழர் போராட்டம் தவறு என்று கூறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2022 at 05:16, தமிழ் சிறி said:

அது தொடர்பில் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் எனக்கு குறித்த அனுமதி கிடைக்கின்ற பட்சத்தில் ஒரு இரவிலேயே அதனை கொண்டு வந்து சேர்த்து விடுவேன் என தெரிவித்தார்

எதிர்ப்பு அரசியல் செய்யாமல் இணக்க அரசியல் செய்தால் மத்திய அரசிடமிருந்து எமக்கு வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம், அதனால்தான் ஆயுத போராட்டத்தை ஒதுக்கி அரசுடன் இணைந்து பயணிக்கிறோம் என்ற உங்கள் கீறல் விழுந்த சிடி வசனத்தை காலம் காலமாக சொல்வீர்கள்,

முப்பது வருசத்துக்கு மேல சிங்களவர்களுடன் இணக்க அரசியல் செய்தும் கேவலம் பசளையை இறக்குமதி செய்யும் அனுமதி கூட சிங்களவன் உங்க இணக்க அரசியலை மதிச்சு ஒரு உரிமையா தரவில்லையா?

இலங்கை என்பது இந்தியா சீனா அமெரிக்கா கனடா ரஷ்யாபோல ஒன்றும் பரந்து விரிந்த நாடு கிடையாது, இலங்கையின் எந்த துறைமுகத்தில்  பொருட்களை இறக்கினாலும்  நாட்டின் எந்த பகுதிக்கும் ஒரே இரவில்  கொண்டு சென்றுவிட முடியும்.

வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின் தற்போதைய பற்றாக்குறை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்னமோ துறைமுகங்களில் ஏற்றி இறக்கல்தான் என்பதுபோல் பேசிட்டு திரியுறாரே இவரு எப்படித்தான் இத்தனைகாலம் அவனுககூட சேர்ந்து இணக்க அரசியல் பண்றாரோ தெரியவில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் இதுவரை நாம ரூபாய் அடிச்சது போதும் இனி டொலர் அச்சடிப்பம் எண்டு குத்தியர்  கோட்டாவுக்கு ஆலோசனை கொடுக்கேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, vanangaamudi said:

நல்ல காலம் இதுவரை நாம ரூபாய் அடிச்சது போதும் இனி டொலர் அச்சடிப்பம் எண்டு குத்தியர்  கோட்டாவுக்கு ஆலோசனை கொடுக்கேல்லை.

டொலரை யாரிடம் கொடுத்து ஏமாற்றுவது? அப்பாவி மக்களை ஏமாற்றுவதுபோல் வெளிநாடுளை ஏமாற்ற முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.