Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய்க் கவிதை

Featured Replies

சபேசன்... இந்த இடத்தில் பாரதிதாசனின் கவிதை ஒன்றையும் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். நாய் பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றில் நாய்கள் நன்றியில்லாதவை என்று பொருள்படும்படி ஒரு கவிதை எழுதியிருந்தார். அதாவது நாய்கள் மனிதனுக்கு நன்றியுடையதாகவே இருக்கிறது, ஆனால் தனது இனத்துக்கு நன்றியுடையதாய் இல்லைல என்கிற பொருளில். அந்தக் கவிதை வேறு யாரிடமும் இருந்தால் அதை இங்கு இணையுங்கள். :)

பாரதிதாசன் கவி (நாய்)

என்றன் நாயின் பேர் அப்பாய்! அது

முன்றில் காக்கும் சிப்பாய்!

ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்

கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;

என்றன் நாயின் பேர் அப்பாய்...

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்

அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அது

முதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது;

மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!

என்றன் நாயின் பேர் அப்பாய்...

நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது

நான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்

வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்

வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்

என்றன் நாயின் பேர் அப்பாய்...

http://www.tamilnation.org/literature/bhar...dasan/mp093.htm

இளைஞன் இந்த கவியையா கேட்டீட்கள்...???

ஓம் இது தான் தயா.

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்

அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்!

இந்த வரிகள் தான். நன்றி இணைத்தமைக்கு. :)

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நாயும் நானும்!

மரியாதையின் காரணம் விளைந்த

அன்பு எண்ணத்தால்

கதவைச் சுரண்டி கவனம் திருப்பும்

சுதந்திரம் என்பதன் பொருள் அறிந்த

என் வீட்டு நாய்.

கவனம் கலைந்த வியப்புடன்

மரியாதையின் பொருள் யாது என்றேன்.

மரியாதையின் பொருள் அடுத்தவரை

அன்புசெய்தலில் உண்டு என்றது என் நாய்.

அன்பு செய்தலின் ருசி

ஒரு முறை சுவைத்தால்

தெரியும் அதன் தீராத எல்லை.

நாயாகப் பிறந்தால்தான் தெரியும்

மரியாதை என்பதன் பொருளும்

அன்பு செய்தலின் ருசியும்.

சிந்தனை வயப்பட்டு நான் மகிழ்வுடன்

சுதந்திரத்தின் பொருள் யாது என்றேன்

சுதந்திரத்தின் பொருள் அடுத்தவருக்கு

நன்றியறிதலில் உண்டு என்றது என் நாய்.

நன்றியறிதலின் சுகம்

ஒருமுறை சுவைத்தால்

தெரியும் அதன் தீராத எல்லை

நாயாகப் பிறந்தால்தான் தெரியும்

நன்றியறிதலின் சுகமும்

சுதந்திரத்தின் சுவையும்.

இது அருமை என்று

நான் கூக்குரலிட்டேன்

இதுவே என் பெருமை

எனக் குரைத்தது என் நாய்.

வியந்து போய் நான்

எனக்குள் சொல்லிக் கொண்டேன்

அற்புதம்!

இந்த உண்மையை இதற்குச்

சொல்லிக் கொடுத்தது யார்?

அன்பும், நன்றியும்

சிறந்த பண்பென

மனிதன் உணராமல் போனது ஏன்?

பரிவுடன் நாய் சொன்னது

உன் இயல்பை மறந்து

உள்தேடுதலை விட்டு

ஊதாரியாய் சுற்றுவதால்

உணர முடியாமல் போயிற்று

உனக்கு.

"அன்பு செய்!

நன்றியுடன் இரு!

உனக்கும் புரியும்!"

http://aaththigam.blogspot.com

  • 2 years later...

நாய்கள் குறித்து நிறைய கவிதைகள் கருத்துக்ள். சமூகம் சார்ந்த ஒரு காலத்தின் பதிவு

நாய்கள் குறித்து நிறைய கவிதைகள் கருத்துக்ள். சமூகம் சார்ந்த ஒரு காலத்தின் பதிவு

மண் தோண்டி கிண்டி கிழங்கெடுத்தது போல, இந்தக் கவிதையை மீண்டும் யாழ் கள உறுப்பினர்களின் பார்வைக்குள் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் (ம்ம்ம்... எல்லாம் சகாரா அக்காவின் இயங்கு முயங்கு கவிதையை மீண்டும் வெளியே கொண்டு வந்ததன் யோகம் போல இருக்கு :wub: )

Edited by நிழலி

மண் தோண்டி கிண்டி கிழங்கெடுத்தது போலஇ இந்தக் கவிதையை மீண்டும் யாழ் கள உறுப்பினர்களின் பார்வைக்குள் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் (ம்ம்ம்... எல்லாம் சகாரா அக்காவின் இயங்கு முயங்கு கவிதையை மீண்டும் வெளியே கொண்டு வந்ததன் யோகம் போல இருக்கு

தேண்டினால் ஏராளமான புதையல்கள் யாழ்க்களத்தில் கிடைக்கும். கவிதை கருத்தாடல்களில் உணர்வு மிகுதியானவை நிறைய இருக்கின்றது. அப்பப்ப தோண்டிப் படிப்பதுண்டு.

தயவு செய்து பழையவற்றை கிழறவேண்டாம்.சகிக்கமுடியாது.இந்த ஒரு தலைப்பு மட்டுமல்ல பல தலைப்புகள் கிழரினால் எமது அரசியல் ஞானம் அத்துபடியாகிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து பழையவற்றை கிழறவேண்டாம்.சகிக்கமுடியாது.இந்த ஒரு தலைப்பு மட்டுமல்ல பல தலைப்புகள் கிழரினால் எமது அரசியல் ஞானம் அத்துபடியாகிவிடும்

ப்ளீஸ் , இதனை அப்படியே ..... கிடப்பில் போட்டு விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாய்யகர்கள் ஓய்வெடுக்கட்டும் கீழ்வானம் சிவக்கிறது.

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேசன், நன்றி இளைஞன்,நன்று நுனாவிலான் நாய் பற்றி இப்படியெல்லாம் கூடக் கவிதை எழுத முடியுமா. நாயைப் பற்றி கவிதை வாசிப்பது இதுதான் முதற் தடவை. மிக நன்றாக இருந்தன. உங்கள் கவிதைகள் பார்த்ததும் என் வீடிலிருந்த நாய் பற்றி நானும் ஒன்று எழுதினேன்.

என்வீட்டில் ஒரு நாய் எந்நேரமும் படுத்திருக்கும்

எங்கே போனாலும் எம் பின்னால் தானும் வரும்

எதை எப்போ கொடுத்தாலும் எதிர்க்காது உண்டுவிடும்

எமக்காக வாலாட்டி தன் நன்றி சொல்லிவிடும்

எதிர் வீட்டு நாயோடும் எமக்காகக் குரைத்துவிடும்

எதிரி எவராயினும் எமக்கதைச் சொல்லிவிடும்.

எப்பொழுதும் அதை நான் எட்டவே வைத்திருந்தேன்.

எட்ட நின்று வாலாட்டத் தட்டிக்களித்திருந்தேன்

எம்மோடு அது வாழ்ந்த அத்தனை காலங்களில்

எப்படி நீ என்று ஒருநாள் கதைத்ததில்லை.

மாலைப் பொழுதின் மங்கிய இருளில்

மனதை மயக்கிய இசையில் மகிழ்ந்து

மோனநிலையில் மெய்மறந்திருக்கையில்

மதில் கடந்து கேட்டது மரண ஓலம்

.

எட்டிக் கால் வைத்து எழுந்து ஓடினேன்

வீதி கண்டதும் விழி பிதுங்க

விறைத்துப் போனது எந்தன் நெஞ்சம்

முதன் முதலாக இழப்புக் கண்டத்தில்

முகத்தில் சக்கரம் ஏறியதில்

முழுப் பற்களும் வெளியே கிடக்க

முக்கல் முனகல் ஏதுமிலாது

முடிந்து போனது நாயின் வாழ்வு.

இருக்கும் வரை நீ என்ன செய்தாய்

இப்போது மட்டும் கலங்கிப் போக

இடித்துக் கேட்டது எள்ளிய நெஞ்சம்

இன்றுவரைக்கும் நேசம் தொடர

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்

முன்பு ஆரம்பத்தில் தொடர்ந்து யாழில் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு தலைப்பை நீங்கள் மீட்டிப் பார்த்ததில் மகிழ்ச்சி.

உங்களுடைய கவிதை நன்றாக இருக்கிறது. நாயின் இழப்பை மனம் கனக்கும் வகையில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

ஆயினும் ஒன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். "ஏறியதாலே", "இடித்தே" என்று "ஏ"கரத்தில் சொற்களை அமைப்பதும் "எந்தன்" போன்ற சொற்களும் கவிதைகளில் காலாவதியாகி விட்டன என்று படுகிறது.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அரை குறை என்பதனால் இப்படியான தவறுகள் வருகின்றன.

  • தொடங்கியவர்

இது தவறு இல்லை. கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டதே. சில முறைகள் out of fashion ஆகி விட்டதாக எனக்குப் படுகிறது. அதையே சொன்னேன்.

சபேசன் அண்ணன் , இந்த நாய்கவிதை சுட்ட நாய்கவிதை . பட் டிஃபறன்ற் ரைப்புங்க :lol: :lol: :D :D .

[size=5]வாலை ஆட்டும் நாய் [/size]

vaalai_aattum_naai.JPG

காலை எழுந்தவுடன்

கால் தொட்டு

கண்ணில் ஒற்றி

கன்னம் தடவி

செல்லமாய் முத்தமிட்டு

கள்ளத்தனாமாய் எழுப்ப...

வாலை ஆட்டும் நாயாய்

சேலைத் தலைப்பை பிடித்தபடி

தெரு வீதி வந்தவன்

காலை தினசரியை அக்குளிலும்

பால் பாக்கெட்டை கையிலும்

லாவகமாய் எடுத்துச் சென்று

அவளிடம் நீட்ட...

கிட்சன் சென்று

பாலைச் சூடேற்றி

பக்குவமாய் காபி ஆற்றி

பவ்வியமாய் கையில் ஏந்தி...

சோபாவில் அமர்ந்து

ஆயாசமாய் பேப்பர் படிக்கும்

சொக்கத் தங்கத்தையும்

ரொக்க பணத்தையும்

தட்சணையாய் தந்தவளுக்கு

சிந்தாமல் சிதறாமல்

சேதாரமின்றி கொடுத்தான்

வரதட்சணை வாங்கியவன்...!

http://www.rishvan.c...g-post.html?m=0

Edited by சொப்னா

பன்றிக்கு மலமே தீனி,

பருந்துக்கு பிணமே தீனி;

கன்றுக்கு புல்லே தீனி,

கழுதைக்கு ஏடே தீனி,

குன்றத்துப் பாம்புக் கெல்லாம்

குழி எலி,தவளை தீனி!

என்றைக்கும் தீனிக் கென்றே,

இவை தந்தான் தேவஞானி!

பன்றியை வளர்த்துப் பார்த்து,

பருந்துக்கும் உணவு போட்டு;

கன்றையும் வைத்துக் காத்து,

கழுதைக்கும் காவல் நின்று;

குன்றத்து பாம்பையெல்லாம்,

கூடவே வைத்து பார்த்தும்

நன்றியைக் காணாதாலே,

நாய் ஒன்றை வாங்கி வந்தேன்!

சீசர்'ரென்று அந்த நாய்க்கு,

செல்லப் பெயரிட்டு அழைத்தேன்!

ஆசையாய் எடுத்து கையில்,

அணைத்து மகிழ்வேன் நெஞ்சில் !

சீசரின் நேசத்தை பெற்றதாயின்

பாலிலும் கண்டேன் இல்லை!

தேசத்தை நேசிப்போருக்கு தேவை

ஒரு நாயின் நெஞ்சம்!

வாலிலே நன்றி சொல்லும்,

வாயில்லா பிள்ளை ஆகும்!

காலிலே அன்பு காட்டும்,

கண்ணிலே உறவு காட்டும்;

தோலிலே முளைத்து எழுந்த,

ரோமமும் தோழன் ஆகும்!

வேலினால் தாக்கினாலும்-என்,

தான் விழுந்து சாகும்!

வளர்த்தவன் சிரிக கின்றானா?

வாய் விட்டு அழுகின்றானா?

தளர்ச்சியில் விழுகின் றானா?

தனிமையில் குமைகின்றானா?

கிளர்ச்சியில் எழுகின் றானா?

கேலியில் சமைகின்றானா?

உளத்தில் உள்ளது எல்லாம்,

உணர்வது நாயின் நெஞ்சம்!

குடத்திலே இடுமுன் விரைந்து,

தொடர்ந்து வந்து சோற்றை;

வெடுக்கென பறிக்கும்;-மாந்தர்

விழுங்கிய பருக்கை உள்ளே,

படுக்குமுன் கேலி பேசும்,

மானிடப் பதர்கள் போல,

நடக்குமோர் குணம் இல்லாத

நாய் எந்தன் சீசர் குட்டி!

அன்னையே உன்னை கேட்பேன்,

அடுத்ததொர் பிறவி உண்டேல்;

என்னையும் நாயாய்ப் பெற்று,

இத்தலை கடனை தீர்ப்பாய்!

தன்னையும் உணர்ந்து ,தன்னை

தழுவிய கையும் காக்கும்;

மன்னவன் பிறப்பு நாய்தான்!

மனிதராய் பிறப்பது அல்ல!!

நன்றி கவிஞர் கண்ணதாசன்

http://generationnee...og-post_22.html

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.