Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

1500 ரூபாய்கள் வரும் என்கிறார் ஓட்டோக்காரர். அவ்வளவு தூரமா என்கிறேன் நான். கரடிப்போக்குச் சந்திக்குப் போக அவ்வளவு தேவையில்லையே தம்பி என்று கணவர் கூற 1000 ரூபாய்க்குக் குறைக்க ஏலாது என்கிறான்.

4-D433685-740-E-4-E01-AC94-C59-FCD6-EABB

  • Replies 378
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்தொன்பது    எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் ந

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இங்கு ஜேர்மனியிலும் டிப்ஸ் கட்டாயம் இல்லை. டிப்ஸ் அதிகமாக வரும் இடங்கள் என பார்த்தால் உணவகங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் தான் முன்னணியில் நிற்கின்றன.

கட்டாயம் இல்லை.  ஆனால் டிப்ஸ் தரும் போது  இரு பக்கமும் ஒரு மன நிறைவு வருகிறது.

யேர்மனியில் உணவகத்தில்  பரிமாறுபவருக்கு பில்லில் ஒரு வீதம் டிப்ஸாகத் தருவது வழமை. அதாவது 100 யூரோவுக்கு சாப்பிட்டால் 10 யோரோ டிப்ஸ்.

உணவகங்கள்,சிகையலங்காரங்கள், துப்பரவுத் தறைகளில் பணியாற்றுபவர்கள் குறைந்த சம்பளத்தில் (மணித்தியாலத்துக்கு 12 யூரோக்கள்) பணிசெய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2023 at 22:38, நிழலி said:

ஒருவர் பயணம் போகும் போது, மடிக்கணணியைக் கொண்டு போகாமல், பெரிய கணணியை கொண்டு போனதை வாழ்க்கையில் முதல் தடவையாக இன்றுதான் கேள்விப்பட்டேன்.

பெரிய server farm வைச்சு நடத்திறா போலிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதற்கும் அம்மாச்சிக்கே இப்ப போவோம். மாலை உணவுக்கு அங்கே போகலாம் என்கிறேன். அங்கு சென்று பார்த்தால் நிறையப்பேர் இருக்கிறார்கள். 2017 இல் வந்தபோது இருந்த அம்மாச்சி உணவகம் சுத்தமாக இருந்தது. தொங்கலில் வெறுமையாக இருந்த மேசையில் சென்று அமர்கிறோம். மேசையில் ஆங்காங்கே உணவுப் பருக்கைகள் கிடக்கின்றன. உண்ட தட்டுக்களும் யாரும் எடுப்பாரற்றுக் கிடக்க கணவர் அங்கு வேலை செய்த பெண்ணை கூப்பிட்டு துடைக்கும்படி கூற அவர் தண்ணீருடன் ஒரு துண்டைக் கொண்டுவந்து துடைத்துவிட்டுப் போகிறார். 

போன வருஷம் பருத்தித்துறையில் இருந்து திரும்பும்போது அம்மாச்சி உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டேன். தரமும் நன்றாக இருந்தது. விலையும் மலிவு.

10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

1500 ரூபாய்கள் வரும் என்கிறார் ஓட்டோக்காரர். அவ்வளவு தூரமா என்கிறேன் நான். கரடிப்போக்குச் சந்திக்குப் போக அவ்வளவு தேவையில்லையே தம்பி என்று கணவர் கூற 1000 ரூபாய்க்குக் குறைக்க ஏலாது என்கிறான். சரி என ஏறி அமர்ந்தால் ஒரு மூன்று கிலோமீற்றர் போக கோட்டல் தெரிகிறது. 

போன வருடம் இருந்த எரிபொருள் நெருக்கடிக்குள்ளும் கொழும்பில் பம்பலப்பிட்டியில் இருந்து சுதந்திர சதுக்கம் போக நாலு தடியன்களுக்கு 1000 ரூபாதான் கொடுத்தோம்! ஊரில் பேரம் பேசமுடியாத நிலை போலிருக்கு!

குடையின் பழைய விலையை கிழிக்க மறந்த கடைக்காரரின் பேச்சை நம்பும் அளவுக்கு அப்பாவியா நீங்கள்?😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் டிப்ஸ் குடுப்பது வழமைதான்......அநேகமான இடங்களில் அவற்றை ஓரிடத்தில் வைத்துவிட்டு பின்பு சமையல் காரரில் இருந்து எல்லோரும் பகிர்ந்து கொள்வார்கள்....... தொடருங்கள்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

4-D433685-740-E-4-E01-AC94-C59-FCD6-EABB

அவா இவ்வளவு தங்க நகைகள் அணிந்திருக்கிறா 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நொந்து போனவருக்கு உதவி செய்யும் போது கிடைக்கின்ற மகிழ்ச்சி மனநிறைவு  டிப்ஸ் கொடுக்கும் போது கிடைப்பதில்லை.  டிப்ஸ் கொடுக்க கூடாது என்று கடைபிடிக்கும் நண்பர்கள்,தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். நான் வேண்டா வெறப்பாக தான் டிப்ஸ் கொடுப்பது.

On 11/4/2023 at 12:57, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

"ஒண்டும் குடுக்கத் தேவையில்லை அப்பா. அது அவரின் தொழில்" என்கிறாள் மகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அதெண்டால் உண்மைதான். அங்கிருப்பவர்களின் ஆடம்பரத்தை பார்த்தால் வெளிநாட்டில் வாழும் அதிக தமிழர்கள் பாவிகள்  

உண்மைதான் குமாரசாமி.

13 hours ago, குமாரசாமி said:

இங்கு ஜேர்மனியிலும் டிப்ஸ் கட்டாயம் இல்லை. டிப்ஸ் அதிகமாக வரும் இடங்கள் என பார்த்தால் உணவகங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் தான் முன்னணியில் நிற்கின்றன.

பலர் டிப்ஸ் வருவாய்  மூலம் தமது மாதாந்த சம்பளத்தை கூட  சேமிக்க முடிகின்றது. அதே நேரம் முதலாளிகளாக இருந்தால் டிப்ஸ் மூலம் வரும் பணத்தை இரு தொழிலாளிகளுக்கு சம்பளமாக வழங்க முடியும்.

இங்கு கொரியன் சைனீஸ் உணவகங்களில் டிப்ஸ் பணத்தை முதலாளிகளே எடுப்பதாகக் கேள்வி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

4-D433685-740-E-4-E01-AC94-C59-FCD6-EABB

கரடிப் போக்குச் சந்திக்கு போக வெறும் 400 ரூபாய்கள் தான். அவன் எங்களிடம் கேட்டது மிக அதிகம். நகைநாட்டுப் போட்டாலும் அது நாங்கள் கஷ்டப்பட்டு உலைச்சுக்க சம்பாதிச்ச பணம் அண்ணா. இலங்ககையில் பார்த்தால் எல்லோருக்கும் தான் எம்மோடு ஒப்பிடும்போது கஸ்டம். அதுக்காக பாக்கிறவை எல்லாருக்கும் தானதருமம் செய்தால் நாணக்கள் கடன் பட்டுத்தான் திரும்ப இங்கு வரவேண்டும். கொழும்பில் மீட்டர் ஓட்டோ. ஒரு ஏழெட்டுக் கிலோமீட்டர் போகவே 1000 ரூபாய்தான். தமிழர் பகுதிகளில் மிக மோசம்.   

3 hours ago, கிருபன் said:

பெரிய server farm வைச்சு நடத்திறா போலிருக்கு!

இப்போதெல்லாம் கணனிகள் சிறியனவாக வந்துவிட்டனவே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

போன வருஷம் பருத்தித்துறையில் இருந்து திரும்பும்போது அம்மாச்சி உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டேன். தரமும் நன்றாக இருந்தது. விலையும் மலிவு.

போன வருடம் இருந்த எரிபொருள் நெருக்கடிக்குள்ளும் கொழும்பில் பம்பலப்பிட்டியில் இருந்து சுதந்திர சதுக்கம் போக நாலு தடியன்களுக்கு 1000 ரூபாதான் கொடுத்தோம்! ஊரில் பேரம் பேசமுடியாத நிலை போலிருக்கு!

குடையின் பழைய விலையை கிழிக்க மறந்த கடைக்காரரின் பேச்சை நம்பும் அளவுக்கு அப்பாவியா நீங்கள்?😂🤣

யாழ்ப்பாணத்தில் ஓட்டோக்காரர் சரியான அதிக விலை வெளிநாட்டவர்க்கு.

கடைக்காரரின் பேச்சை நம்புவதல்ல பிரச்சனை. மகளின் 750  சொன்ன தொப்பிக்கு குறைத்தே கொடுத்திருந்தேன். பசி ஒருபுறம் மனிசன் ஓட்டோ பிடித்தாரா இல்லையா என்ற டென்ஷன் மறுபுறம். கணவர் வந்தால் ஓட்டோ தான் வந்திட்டுதே எதுக்குக் குடை என்று சொன்னாலும் சொல்வார் என்ற பயம் வேறு. வாங்கிக்கொண்டு வெளியே வந்தாச்சு.

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

4-D433685-740-E-4-E01-AC94-C59-FCD6-EABB

அவா இவ்வளவு தங்க நகைகள் அணிந்திருக்கிறா 😂

அதில என்ன குற்றம்???? . அவ தன் பணத்தில் தானே நகை வாங்கி அணிந்துள்ளா. உணக்கட அநியாயம் பெரிய அநியாயமாய் இருக்கே.

3 hours ago, suvy said:

இங்கும் டிப்ஸ் குடுப்பது வழமைதான்......அநேகமான இடங்களில் அவற்றை ஓரிடத்தில் வைத்துவிட்டு பின்பு சமையல் காரரில் இருந்து எல்லோரும் பகிர்ந்து கொள்வார்கள்....... தொடருங்கள்......!  😁

கூடுதலாக அப்படித்தான் இங்கும் செய்வது. அதிலும் சில தில்லுமுல்லு நடப்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

4-D433685-740-E-4-E01-AC94-C59-FCD6-EABB

ஏழைகளிடம் பேரம் பேசுவோம், மற்றவர்களிடம் கேட்டதை கொடுத்துவிடுவோம்👍

13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கரடிப் போக்குச் சந்திக்கு போக வெறும் 400 ரூபாய்கள் தான். அவன் எங்களிடம் கேட்டது மிக அதிகம். நகைநாட்டுப் போட்டாலும் அது நாங்கள் கஷ்டப்பட்டு உலைச்சுக்க சம்பாதிச்ச பணம் அண்ணா. இலங்ககையில் பார்த்தால் எல்லோருக்கும் தான் எம்மோடு ஒப்பிடும்போது கஸ்டம். அதுக்காக பாக்கிறவை எல்லாருக்கும் தானதருமம் செய்தால் நாணக்கள் கடன் பட்டுத்தான் திரும்ப இங்கு வரவேண்டும். கொழும்பில் மீட்டர் ஓட்டோ. ஒரு ஏழெட்டுக் கிலோமீட்டர் போகவே 1000 ரூபாய்தான். தமிழர் பகுதிகளில் மிக மோசம்.   

இப்போதெல்லாம் கணனிகள் சிறியனவாக வந்துவிட்டனவே. 

பொற்றோல் டீசல் விலை என்ன அங்கு தற்போது?, கொழும்பையும் யாழ்பாணத்தையும் ஒப்பிட முடியாது, 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

பெரிய server farm வைச்சு நடத்திறா போலிருக்கு!

பின்ன, 6 மாசம் இருக்கப்போறம், இந்த லப்ரொப் நிண்டு பிடியாதென்டு, டெஸ்க்ரொப்பை தூக்கி, bin பாக்குக்குள்ள போட்டுக்கொண்டு வெளிக்கிட்டாச்சு.

அதில என்ன பிரச்சனை எண்டு அக்கா சார்பா கேக்கிறன் 😜🤔

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில உள்ள அம்மாச்சி உணவகத்தில் இப்ப உணவு நன்றாக இல்லை.மற்றும் அங்கு வேலை செய்பவர்களுக்கும் திமிர் கூடிப்போச்சு.முன்பு அடிக்கடி போவேன்.இப்ப போவது சரியான குறைவு.நீங்கள் கரடிப்போக்குச் சந்தியில் இருந்து என்றால் பாரதிக்கு போயிருக்கலாமே.சரி அடுத்த முறை பாரப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2023 at 16:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கள் hand luggage ஐ மீளப் பெற முடியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, அதை செய்ய முடியாது. கொழும்பில் தான் அதை எடுக்கலாம் என்கிறார்

அதுக்குள்ள வெடிக்கிற சாமான் தவறுதல வைத்துவிட்டேன் என்று சொல்லியிருந்தால் எவ்வளவு மரியாதையுடன் எடுத்து தந்திருப்பார்கள்.

On 9/4/2023 at 16:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐயோ அந்த போனையும் நான் என் hand லக்கேஜ்ஜின் முன் பொக்கற்றில் வைத்துவிட்டேனே. யாரும் எடுத்தால் 800 பவுண்ஸ் எனக்கு நட்டம் என்கிறார் மனிசன்

அத்தார் என்ன தங்கத்திலா போன் வைத்திருக்கிறார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

ஏழைகளிடம் பேரம் பேசுவோம், மற்றவர்களிடம் கேட்டதை கொடுத்துவிடுவோம்👍

பொற்றோல் டீசல் விலை என்ன அங்கு தற்போது?, கொழும்பையும் யாழ்பாணத்தையும் ஒப்பிட முடியாது, 

ஒரு நாளில் கடைசி 20 பேர் வீல்சேர் பிடித்தாலும் எம்மைப்போல் சிலர் தவிர உங்களைப்போல் பலர் அவருக்கு 400 ரூபாய்ப்படி  அதாவது ஒருவர் 5 dollar கொடுத்தால் ஐந்து நாளில் எவ்வளவு? ஒரு மாதத்தில் எவ்வளவு பெற்றுக்கொள்வார் என்று கணக்குப் பாருங்கள். அதே அடைக்காரர் எனக்கு விபரம் தெரியாது என்று எண்ணியே  ஒரு பொருளை மட்டும் தானே விற்றார். அங்கு கடைகளில் பொருட்களை வாங்குபவர்களிடம் டொலரோ அன்றி ஐந்து பத்தோ கூடத் தாங்கோ என்றோ கேட்க முடியாதுதானே.

பெற்றோல் நான் நின்றபோது கியூவார் கோட்டுக்கு மோட்டார் சயிக்கிளுக்கு வாரம் 4 லீற்றர் தருவார்கள். வரும்போது கோட் இன்றி எவ்வளவும் அடிக்கலாம். 525 என நினைக்கிறேன். இப்ப குறைந்திருக்குமோ கூடியாதோ தெரியாவில்லை.  

6 hours ago, Nathamuni said:

பின்ன, 6 மாசம் இருக்கப்போறம், இந்த லப்ரொப் நிண்டு பிடியாதென்டு, டெஸ்க்ரொப்பை தூக்கி, bin பாக்குக்குள்ள போட்டுக்கொண்டு வெளிக்கிட்டாச்சு.

அதில என்ன பிரச்சனை எண்டு அக்கா சார்பா கேக்கிறன் 😜🤔

உங்களுக்கு விளங்குது 😂

5 hours ago, சுவைப்பிரியன் said:

கிளிநொச்சியில உள்ள அம்மாச்சி உணவகத்தில் இப்ப உணவு நன்றாக இல்லை.மற்றும் அங்கு வேலை செய்பவர்களுக்கும் திமிர் கூடிப்போச்சு.முன்பு அடிக்கடி போவேன்.இப்ப போவது சரியான குறைவு.நீங்கள் கரடிப்போக்குச் சந்தியில் இருந்து என்றால் பாரதிக்கு போயிருக்கலாமே.சரி அடுத்த முறை பாரப்போம்.

அட நீங்கள் இலங்கையிலா தெரியாமல் போச்சே. 

5 hours ago, ஈழப்பிரியன் said:

அதுக்குள்ள வெடிக்கிற சாமான் தவறுதல வைத்துவிட்டேன் என்று சொல்லியிருந்தால் எவ்வளவு மரியாதையுடன் எடுத்து தந்திருப்பார்கள்.

அத்தார் என்ன தங்கத்திலா போன் வைத்திருக்கிறார்?

எடுத்துத் தந்து எங்கள் எல்லாரையும் உள்ளே வைத்தும் இருப்பார்கள்.

ஐ போன் 14 ஐ ஒருவர் புத்தகம் புதிதாக இலங்கையில் உள்ள சகோதரருக்கு கொடுத்துவிட்டிருந்தார்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஒன்பது 

 

அன்று மாலை எட்டு மணிவரை கணவருக்குத் தெரிந்தவர் வளர்ந்தவர்கள் என்று மனிசன் எம்மை ஓட்டோவில் அலைக்கழிக்க இரவு உணவையும் நண்பர் ஒருவரின் கரைச்சல் தாங்காது அங்கு உண்டுவிட்டு இரவு எட்டு மணிக்கு கோட்டலுக்கு வர தெரிஞ்ச ஓட்டோ தான் அவர்கள் பிடித்து விட்டார்கள். ஆனாலும் வீதிகள் இருட்டு கொஞ்சம் பயமாகவும் தான் இருந்தது. எனது பண்ணையை அடுத்தநாள் காலை பார்க்கப் போவோம் என உறுதிபூண்டு சுப் பிரமணிய பிரபாவிற்கு போன் எடுத்து நாளை காலை வருகிறோம் என்று கூற ஓகே அக்கா வாருங்கள் என்கிறார். ஓட்டோவுக்கு எவ்வளவு வரும் என்று கேட்க நான் ஓட்டோ அனுப்பட்டோ என்கிறார்.

காலையில் எட்டு மணிக்குத் தயாராகி மீண்டும் அம்மாச்சிக்கே சென்று காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் ஓட்டோவை அழைத்து கோணாவிலுக்குச் செல்ல எவ்வளவு என்று கேட்க மூவாயிரம் என்கிறார் ஒருவர். பிரபா சொன்னது ஆயிரம். என்ன தம்பி நாங்கள் அடிக்கடி போறனாங்கள். மூண்டு மடங்கு சொல்றீங்கள் என்றதற்கு 2000 தாங்கோ என்கிறார். 1000 தானே குடுக்கிறானாங்கள் என்றுகூற 1500 தாங்கோ பெற்ரோல் விலை ரோட்டும் சரியில்லை என்றவுடன் சரி என்று ஏறுகிறோம். 

 

இதாலபோனால் அந்த வீடுவரும். அதாலபோனால் வயல்வரும் என்று ஒவ்வொன்றையும் மனிசன் சொல்லிக்கொண்டு வர எரிச்சல் வந்தாலும் அடக்கியபடி கேட்டுக் கொண்டு வருகிறேன். வீதி சில இடத்தில் குன்றும் குளியுமாக இருக்கு. உருத்திரபுரம் சிவன்கோவிலுக்குப் பக்கத்தில் ஐந்து ஏக்கர் நிலம் தங்களுக்கு இருந்ததாகவும் இடப்பெயர்வின் போது உறுதி தொலைந்துவிட்டதாகவும் தகப்பன் இறந்ததானால் அதைப்பற்றி அக்கறை கொள்ளாமல் தாயும் சகோதரர்களும் விட்டுவிட்டதாகவும் மனிசன் புலம்பியபடியே வருகிறார். இனிப் போய் கண்டுபிடிக்க முடியாதா என்கிறா மகள். எத்தனை ஆண்டுகளாய் விட்டன. இப்ப வேறு யாரும் அதில் இருப்பார்கள். போரின் பின் எப்படி இருக்கோ. எமக்கு உது தேவையற்ற வேலை என்கிறேன். 

 

எவடம் என்று கேளுங்கோ என்கிறார் ஓட்டுநர். பிரபாவுக்கு போன் செய்து கேட்க நேரே வாருங்கள் நான் சந்தியில் நிற்கிறேன் என்றவர் எம்மைக் கண்டு கையைக் காட்டுகிறார். ஓட்டோவைப் பணம் கொடுத்து போகும்படி கூறிவிட்டு பிரபாவின் பின் செல்கிறோம். எனக்கு மனதுள் ஒருவித அவா ஏற்படுகிறது. அவர் இரும்புக் கேற்றை திறக்க ஆவலோடு உள்ளே பார்க்கிறேன். அவர் கூறியபடி ஐந்து ஏக்கர் நிலம் அல்ல. ஒரு ஏக்கர் கூட இருக்குமோ தெரியாது. மண் வெள்ளையாக வேறொரு நிறமாக இருக்கு. ஒரு இருபது முப்பது வாழைகள் குருந்தன் அடித்தபடி நிற்கின்றன. என்ன பிரபா இது என்கிறேன். இந்த மண்ணில் எப்படி வாழை வரும். யாரையும் காலந்தாலோசிக்கவில்லையா என்கிறார் கணவர். 1000 கோழிகள் வளர்க்கக்கூடிய கோழிக்கூடு என்று கூறி அதற்கென்று மேலதிகமாகப் பணமும் அனுப்பபட்டிருந்தது. கோழிகளையும் நெடுங்கேணியில் 20 மிகுதி மட்டக்களப்பு கிரானில் விசாரித்தது என்றெல்லாம் குழுவில் கூறியிருந்தார். ஒரு நூறு இருநூறு கோழிகளாவது இருக்கும் என்று பார்த்தால் எல்லாக் கூடுகளும் காலியாக இருந்தன. ஒரு ஐந்தே ஐந்து கோழிகள் மட்டும் வாழைக்கடியில் கிளறிக்கொண்டு நின்றன. 

 

பெரிய பகுதியில் பாசன் புரூட் நட்டு எல்லாம் வளர்ந்திருப்பதாக எமக்குப் படம் போட்டிருந்தார். பார்த்தால் அவையும் சிறு பகுதியில் அரைவாசி கருகியபடி இருக்க உங்கள் காசு என்றால் இப்படிக் கவனமின்றி இருப்பீர்களா?? ஆற்றையன் காசுதானே என்று விட்டுவிட்டீர்கள் என்று ஏசுகிறேன். பண்ணையைப் பார்க்கப் பார்க்க எம்மை அவர் நன்றாக ஏமாற்றிவிட்டது தெரிகிறது. உங்களை நம்பி இத்தனை பேரும் பணம் போட்டோமே. எம்மை ஏமாற்றிவிட்டீர்களே என்கிறேன். நான் என்ன அக்கா செய்ய. நான் கேட்டதுபோல் இன்னும் திரும்பவும் கொஞ்சம் எல்லாரும் தந்திருந்தால் நான் எதாலும் செய்திருப்பேன் என்கிறார். இந்த மண்ணுக்கு கச்சான் தான் வரும். வாழையோ மரக்கறிகளோ வாராது என்கிறார் கணவர். 

 

காணியை சுற்றிப் பார்க்கிறேன். காணியைச் சுற்றி தூண்கள் நட்டு தகரவேலி  நன்றாகப் போடப்பட்டிருக்கு. இரு அறைகளுடன் கூடிய சிறிய கட்டடமும் மலசலக்கூடம் குளியலறை போன்றனவும் இருக்கு. பக்கத்தில் கல்லரியும் யாட் என்று சிறிது வருமானம் காட்டியிருந்தார். அதற்காக எமக்குத் தரவும் இல்லை. வந்த வருமானத்தையும் அது செய்தேன். இது செய்தேன் என்று கணக்குக் காட்டியிருந்தார். பின்னர் அதுவும் இல்லை. அதைப் போய் பார்த்தால் பாழடைந்துபோய் இருக்கு. ஒரு excavator  வாங்கியதாகவும் கணக்குக் காட்டியிருந்தார். ஒரு சிறிய கட்டடம் கட்டி அதை ஏற்றி மழையில் நனையாதவாறு வைத்திருக்கு. இப்ப வேலை ஒன்றும் நடப்பதில்லையா   என்கிறேன். இப்ப குறைவக்கா, சீமெந்தும் விலையக்கா, மணலும் விலை என்கிறார். அப்ப உந்த excavator ஐ விற்றுவிட்டு எமக்கு பணத்தைப் பகிர்ந்து தாருங்கள். நாம் தந்ததில் சிறிது பணமாவது திரும்ப வரட்டும் என்று கூற அது எப்படியக்கா முடியுமென்கிறார். இளநீர் வெட்டித் தரவோ அல்லது தேனீர் போடவோ என்று கேட்க இளநீர் என்கிறோம். அவர் வேறெங்கோ இளநீர் எடுத்துவர மோட்டார் சயிக்கிளை எடுத்துக்கொண்டு போக கணவர் என் மேல் பாய்கிறார். 

 

முன்னரும் கல்லு அரியிறம் எண்டு சொல்லி காசு குடுத்து ஏமாந்தனி. இப்பவும் நான் சொல்லச் சொல்ல இல்லை எண்டு குடுத்தனி என்று ஏதோ எல்லாம் சொல்கிறார். நான் அப்பாவிபோல் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எனக்குப் பழைய நினைவு வருகிறது.

உப்பிடித்தான் நானும் இன்னும் இரண்டோ மூன்று பேரும் சேர்ந்து கிளிநொச்சியில் கல்லரியும் யாட் என்று ஒருவர் திறந்தார். இரண்டாம் மாதம் 4000 ரூபாய்கள் இலாபம் என்று கூற நான் உதவும் பெண்ணுக்கு அனுப்பச் சொன்னேன். அதன் பின் மூன்று மாதங்கள் மழை பெய்வதால் யாட்டில்  வேலை நடைபெறவில்லை என்று கூறிஅவர் எந்தப் பணமும் எனக்குத் தரவில்லை. நானும் நம்பிவிட்டேன். மூன்று மாதங்களின் பின் என் மாமியார் கிளிநொச்சி வந்தபோது என்ன மாமி மழையுக்குள் உங்கு வந்திருக்கிறீர்கள் என்றேன். இங்க மழை பெய்து நாலு மாதம் இருக்கும் என்றார். அதன் பின்தான் எம்மை அவர் ஏமாற்றுவது புரிந்தது. கடுமையாகக் கதைத்து நான் போட்ட முதலை மீளப் பெற்றுவிட்டேன். அப்போது என்னுடன் சேர்ந்து முதல் போட்ட ஒருவர் பிரபாவிடமும் பயணம் கொடுத்துள்ளார் என்ற விபரம் ஒரு சூம் மீட்டிங்கில் கதைத்தபோது தெரிந்தது. எனக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் யாழில் சொந்தப் பெயருடன் இல்லை அவர். அவர்தான் எனக்குத் தன்னை அறிமுகம் செய்துவிட்டு. அக்கா நெடுகவும் நாங்கள் ஏமாறுவதே வேலையாகிவிட்டது என்று சிரித்தார்.   . 

 

ஒருவரைப் பற்றி சரியாக அறியாமல் ஒன்பதுபேரும் மீளமுடியாமல் மாட்டிக் கொண்டோமே என மனம் அங்கலாய்க்கிறது. அவருக்குப் பணம் அனுப்பும்போது  ஒரு பவுட்ஸ் 220 ரூபாய்கள் மட்டும்தான். பிரபா இளநீருடன் வந்து வெட்டியும் தர மன எரிவுக்கும் வெயிலுக்கும் இளநீர் குளிர்மையாக, வேறு வழியில்லை என மனம் சாமாதானம் கொள்கிறது. இன்னும் சிறிதுநேரம் இருந்து என்ன செய்யலாம் என்று கதைத்தாலும் எதுவும் சரிவரவில்லை. பாசன் புரூட் கரைச்சுத் தரட்டோ என்று கேட்க, சரி குடுத்த காசுக்கு அதையும் குடிச்சிட்டுப் போவம் என மனம் சொல்ல தலையை ஓம் என்று ஆட்டுகிறேன். அறைக்குள் இருந்து ஒரு இளம் பெண் வெளியே வருகிறா. ஒரு மாதத்தின் முன்னர்தான் பண்ணையைக் கவனிக்க ஒரு குடும்பத்தை இருத்தப் போவதாகக் கூறி இருந்தார். அதை எண்ணியபடி இவைதான் பண்ணையைப் பார்த்துக் கொள்கிறார்களா என்கிறேன். இல்லை இது என் மனைவி. இப்ப நாங்கள் இங்குதான் இருக்கிறோம் என்கிறார். அவர் உள்ளே சென்று குழந்தையை தூக்கிக்கொண்டு வருகிறார். குழந்தையை வாங்கி தான் கையில் வைத்திருக்கிறார் மகள். சிறிது நேரத்தில் நாங்கள் போகவேணும். ஒரு ஓட்டோவுக்கு போன் செய்கிறீர்களா என்கிறேன். உடனே அவர் போன்செய்ய ஐந்து நிமிடங்களில் ஓட்டோ வருகிறது. 


 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

ஒன்பது 

 

அன்று மாலை எட்டு மணிவரை கணவருக்குத் தெரிந்தவர் வளர்ந்தவர்கள் என்று மனிசன் எம்மை ஓட்டோவில் அலைக்கழிக்க இரவு உணவையும் நண்பர் ஒருவரின் கரைச்சல் தாங்காது அங்கு உண்டுவிட்டு இரவு எட்டு மணிக்கு கோட்டலுக்கு வர தெரிஞ்ச ஓட்டோ தான் அவர்கள் பிடித்து விட்டார்கள். ஆனாலும் வீதிகள் இருட்டு கொஞ்சம் பயமாகவும் தான் இருந்தது. எனது பண்ணையை அடுத்தநாள் காலை பார்க்கப் போவோம் என உறுதிபூண்டு சுப் பிரமணிய பிரபாவிற்கு போன் எடுத்து நாளை காலை வருகிறோம் என்று கூற ஓகே அக்கா வாருங்கள் என்கிறார். ஓட்டோவுக்கு எவ்வளவு வரும் என்று கேட்க நான் ஓட்டோ அனுப்பட்டோ என்கிறார்.

காலையில் எட்டு மணிக்குத் தயாராகி மீண்டும் அம்மாச்சிக்கே சென்று காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் ஓட்டோவை அழைத்து கோணாவிலுக்குச் செல்ல எவ்வளவு என்று கேட்க மூவாயிரம் என்கிறார் ஒருவர். பிரபா சொன்னது ஆயிரம். என்ன தம்பி நாங்கள் அடிக்கடி போறனாங்கள். மூண்டு மடங்கு சொல்றீங்கள் என்றதற்கு 2000 தாங்கோ என்கிறார். 1000 தானே குடுக்கிறானாங்கள் என்றுகூற 1500 தாங்கோ பெற்ரோல் விலை ரோட்டும் சரியில்லை என்றவுடன் சரி என்று ஏறுகிறோம். 

 

இதாலபோனால் அந்த வீடுவரும். அதாலபோனால் வயல்வரும் என்று ஒவ்வொன்றையும் மனிசன் சொல்லிக்கொண்டு வர எரிச்சல் வந்தாலும் அடக்கியபடி கேட்டுக் கொண்டு வருகிறேன். வீதி சில இடத்தில் குன்றும் குளியுமாக இருக்கு. உருத்திரபுரம் சிவன்கோவிலுக்குப் பக்கத்தில் ஐந்து ஏக்கர் நிலம் தங்களுக்கு இருந்ததாகவும் இடப்பெயர்வின் போது உறுதி தொலைந்துவிட்டதாகவும் தகப்பன் இறந்ததானால் அதைப்பற்றி அக்கறை கொள்ளாமல் தாயும் சகோதரர்களும் விட்டுவிட்டதாகவும் மனிசன் புலம்பியபடியே வருகிறார். இனிப் போய் கண்டுபிடிக்க முடியாதா என்கிறா மகள். எத்தனை ஆண்டுகளாய் விட்டன. இப்ப வேறு யாரும் அதில் இருப்பார்கள். போரின் பின் எப்படி இருக்கோ. எமக்கு உது தேவையற்ற வேலை என்கிறேன். 

 

எவடம் என்று கேளுங்கோ என்கிறார் ஓட்டுநர். பிரபாவுக்கு போன் செய்து கேட்க நேரே வாருங்கள் நான் சந்தியில் நிற்கிறேன் என்றவர் எம்மைக் கண்டு கையைக் காட்டுகிறார். ஓட்டோவைப் பணம் கொடுத்து போகும்படி கூறிவிட்டு பிரபாவின் பின் செல்கிறோம். எனக்கு மனதுள் ஒருவித அவா ஏற்படுகிறது. அவர் இரும்புக் கேற்றை திறக்க ஆவலோடு உள்ளே பார்க்கிறேன். அவர் கூறியபடி ஐந்து ஏக்கர் நிலம் அல்ல. ஒரு ஏக்கர் கூட இருக்குமோ தெரியாது. மண் வெள்ளையாக வேறொரு நிறமாக இருக்கு. ஒரு இருபது முப்பது வாழைகள் குருந்தன் அடித்தபடி நிற்கின்றன. என்ன பிரபா இது என்கிறேன். இந்த மண்ணில் எப்படி வாழை வரும். யாரையும் காலந்தாலோசிக்கவில்லையா என்கிறார் கணவர். 1000 கோழிகள் வளர்க்கக்கூடிய கோழிக்கூடு என்று கூறி அதற்கென்று மேலதிகமாகப் பணமும் அனுப்பபட்டிருந்தது. கோழிகளையும் நெடுங்கேணியில் 20 மிகுதி மட்டக்களப்பு கிரானில் விசாரித்தது என்றெல்லாம் குழுவில் கூறியிருந்தார். ஒரு நூறு இருநூறு கோழிகளாவது இருக்கும் என்று பார்த்தால் எல்லாக் கூடுகளும் காலியாக இருந்தன. ஒரு ஐந்தே ஐந்து கோழிகள் மட்டும் வாழைக்கடியில் கிளறிக்கொண்டு நின்றன. 

 

பெரிய பகுதியில் பாசன் புரூட் நட்டு எல்லாம் வளர்ந்திருப்பதாக எமக்குப் படம் போட்டிருந்தார். பார்த்தால் அவையும் சிறு பகுதியில் அரைவாசி கருகியபடி இருக்க உங்கள் காசு என்றால் இப்படிக் கவனமின்றி இருப்பீர்களா?? ஆற்றையன் காசுதானே என்று விட்டுவிட்டீர்கள் என்று ஏசுகிறேன். பண்ணையைப் பார்க்கப் பார்க்க எம்மை அவர் நன்றாக ஏமாற்றிவிட்டது தெரிகிறது. உங்களை நம்பி இத்தனை பேரும் பணம் போட்டோமே. எம்மை ஏமாற்றிவிட்டீர்களே என்கிறேன். நான் என்ன அக்கா செய்ய. நான் கேட்டதுபோல் இன்னும் திரும்பவும் கொஞ்சம் எல்லாரும் தந்திருந்தால் நான் எதாலும் செய்திருப்பேன் என்கிறார். இந்த மண்ணுக்கு கச்சான் தான் வரும். வாழையோ மரக்கறிகளோ வாராது என்கிறார் கணவர். 

 

காணியை சுற்றிப் பார்க்கிறேன். காணியைச் சுற்றி தூண்கள் நட்டு தகரவேலி  நன்றாகப் போடப்பட்டிருக்கு. இரு அறைகளுடன் கூடிய சிறிய கட்டடமும் மலசலக்கூடம் குளியலறை போன்றனவும் இருக்கு. பக்கத்தில் கல்லரியும் யாட் என்று சிறிது வருமானம் காட்டியிருந்தார். அதற்காக எமக்குத் தரவும் இல்லை. வந்த வருமானத்தையும் அது செய்தேன். இது செய்தேன் என்று கணக்குக் காட்டியிருந்தார். பின்னர் அதுவும் இல்லை. அதைப் போய் பார்த்தால் பாழடைந்துபோய் இருக்கு. ஒரு excavator  வாங்கியதாகவும் கணக்குக் காட்டியிருந்தார். ஒரு சிறிய கட்டடம் கட்டி அதை ஏற்றி மழையில் நனையாதவாறு வைத்திருக்கு. இப்ப வேலை ஒன்றும் நடப்பதில்லையா   என்கிறேன். இப்ப குறைவக்கா, சீமெந்தும் விலையக்கா, மணலும் விலை என்கிறார். அப்ப உந்த excavator ஐ விற்றுவிட்டு எமக்கு பணத்தைப் பகிர்ந்து தாருங்கள். நாம் தந்ததில் சிறிது பணமாவது திரும்ப வரட்டும் என்று கூற அது எப்படியக்கா முடியுமென்கிறார். இளநீர் வெட்டித் தரவோ அல்லது தேனீர் போடவோ என்று கேட்க இளநீர் என்கிறோம். அவர் வேறெங்கோ இளநீர் எடுத்துவர மோட்டார் சயிக்கிளை எடுத்துக்கொண்டு போக கணவர் என் மேல் பாய்கிறார். 

 

முன்னரும் கல்லு அரியிறம் எண்டு சொல்லி காசு குடுத்து ஏமாந்தனி. இப்பவும் நான் சொல்லச் சொல்ல இல்லை எண்டு குடுத்தனி என்று ஏதோ எல்லாம் சொல்கிறார். நான் அப்பாவிபோல் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எனக்குப் பழைய நினைவு வருகிறது.

உப்பிடித்தான் நானும் இன்னும் இரண்டோ மூன்று பேரும் சேர்ந்து கிளிநொச்சியில் கல்லரியும் யாட் என்று ஒருவர் திறந்தார். இரண்டாம் மாதம் 4000 ரூபாய்கள் இலாபம் என்று கூற நான் உதவும் பெண்ணுக்கு அனுப்பச் சொன்னேன். அதன் பின் மூன்று மாதங்கள் மழை பெய்வதால் யாட்டில்  வேலை நடைபெறவில்லை என்று கூறிஅவர் எந்தப் பணமும் எனக்குத் தரவில்லை. நானும் நம்பிவிட்டேன். மூன்று மாதங்களின் பின் என் மாமியார் கிளிநொச்சி வந்தபோது என்ன மாமி மழையுக்குள் உங்கு வந்திருக்கிறீர்கள் என்றேன். இங்க மழை பெய்து நாலு மாதம் இருக்கும் என்றார். அதன் பின்தான் எம்மை அவர் ஏமாற்றுவது புரிந்தது. கடுமையாகக் கதைத்து நான் போட்ட முதலை மீளப் பெற்றுவிட்டேன். அப்போது என்னுடன் சேர்ந்து முதல் போட்ட ஒருவர் பிரபாவிடமும் பயணம் கொடுத்துள்ளார் என்ற விபரம் ஒரு சூம் மீட்டிங்கில் கதைத்தபோது தெரிந்தது. எனக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் யாழில் சொந்தப் பெயருடன் இல்லை அவர். அவர்தான் எனக்குத் தன்னை அறிமுகம் செய்துவிட்டு. அக்கா நெடுகவும் நாங்கள் ஏமாறுவதே வேலையாகிவிட்டது என்று சிரித்தார்.   . 

 

ஒருவரைப் பற்றி சரியாக அறியாமல் ஒன்பதுபேரும் மீளமுடியாமல் மாட்டிக் கொண்டோமே என மனம் அங்கலாய்க்கிறது. அவருக்குப் பணம் அனுப்பும்போது  ஒரு பவுட்ஸ் 220 ரூபாய்கள் மட்டும்தான். பிரபா இளநீருடன் வந்து வெட்டியும் தர மன எரிவுக்கும் வெயிலுக்கும் இளநீர் குளிர்மையாக, வேறு வழியில்லை என மனம் சாமாதானம் கொள்கிறது. இன்னும் சிறிதுநேரம் இருந்து என்ன செய்யலாம் என்று கதைத்தாலும் எதுவும் சரிவரவில்லை. பாசன் புரூட் கரைச்சுத் தரட்டோ என்று கேட்க, சரி குடுத்த காசுக்கு அதையும் குடிச்சிட்டுப் போவம் என மனம் சொல்ல தலையை ஓம் என்று ஆட்டுகிறேன். அறைக்குள் இருந்து ஒரு இளம் பெண் வெளியே வருகிறா. ஒரு மாதத்தின் முன்னர்தான் பண்ணையைக் கவனிக்க ஒரு குடும்பத்தை இருத்தப் போவதாகக் கூறி இருந்தார். அதை எண்ணியபடி இவைதான் பண்ணையைப் பார்த்துக் கொள்கிறார்களா என்கிறேன். இல்லை இது என் மனைவி. இப்ப நாங்கள் இங்குதான் இருக்கிறோம் என்கிறார். அவர் உள்ளே சென்று குழந்தையை தூக்கிக்கொண்டு வருகிறார். குழந்தையை வாங்கி தான் கையில் வைத்திருக்கிறார் மகள். சிறிது நேரத்தில் நாங்கள் போகவேணும். ஒரு ஓட்டோவுக்கு போன் செய்கிறீர்களா என்கிறேன். உடனே அவர் போன்செய்ய ஐந்து நிமிடங்களில் ஓட்டோ வருகிறது. 


 

நானும் ஏமாற்றமடைந்துள்ளேன்.   ...தனியாக..என்பதால் ஏமாத்திட்டீங்களே  ....ஒரு குழுவாக நாலு பேருடன். இணந்து செயல்பட்டிருந்தால்.  நல்லது என எண்ணி...நினைத்து கவலைப்பட்டு இருக்கிறேன்..உங்கள் எழுத்துகளை வாசிக்கும்போது   ஒன்பது பேரையும்   ஏமாற்றினார்கள்....நம்ப முடியவில்லை பிரபா. கொட்டிக்காரன். தான்   நல்ல மிகச்சிறந்த ஒரு அனுபவம்   அங்கு உள்ள இளம் சந்ததிக்கு உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம்...சிந்தனை...விருப்பம்..ஒரு துளி கூட கிடையாது...இவ்வாறு அனுப்பும் பணத்துக்கு நாலு போத்தல்கள் விஸ்கி    குடித்து விட்டு   அமெரிக்கர்களை திட்டி கொண்டு இருக்கலாம் 🤣😂நல்ல நித்திரையாவது வரும்........ஆமா புதிய பண்ணைகள். தொடங்கவில்லையா.?????🤣..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

பெரிய பகுதியில் பாசன் புரூட் நட்டு எல்லாம் வளர்ந்திருப்பதாக எமக்குப் படம் போட்டிருந்தார். பார்த்தால் அவையும் சிறு பகுதியில் அரைவாசி கருகியபடி இருக்க உங்கள் காசு என்றால் இப்படிக் கவனமின்றி இருப்பீர்களா?? ஆற்றையன் காசுதானே என்று விட்டுவிட்டீர்கள் என்று ஏசுகிறேன். பண்ணையைப் பார்க்கப் பார்க்க எம்மை அவர் நன்றாக ஏமாற்றிவிட்டது தெரிகிறது. உங்களை நம்பி இத்தனை பேரும் பணம் போட்டோமே. எம்மை ஏமாற்றிவிட்டீர்களே என்கிறேன். நான் என்ன அக்கா செய்ய. நான் கேட்டதுபோல் இன்னும் திரும்பவும் கொஞ்சம் எல்லாரும் தந்திருந்தால் நான் எதாலும் செய்திருப்பேன் என்கிறார். இந்த மண்ணுக்கு கச்சான் தான் வரும். வாழையோ மரக்கறிகளோ வாராது என்கிறார் கணவர். 

 

காணியை சுற்றிப் பார்க்கிறேன். காணியைச் சுற்றி தூண்கள் நட்டு தகரவேலி  நன்றாகப் போடப்பட்டிருக்கு. இரு அறைகளுடன் கூடிய சிறிய கட்டடமும் மலசலக்கூடம் குளியலறை போன்றனவும் இருக்கு. பக்கத்தில் கல்லரியும் யாட் என்று சிறிது வருமானம் காட்டியிருந்தார். அதற்காக எமக்குத் தரவும் இல்லை. வந்த வருமானத்தையும் அது செய்தேன். இது செய்தேன் என்று கணக்குக் காட்டியிருந்தார். பின்னர் அதுவும் இல்லை. அதைப் போய் பார்த்தால் பாழடைந்துபோய் இருக்கு. ஒரு excavator  வாங்கியதாகவும் கணக்குக் காட்டியிருந்தார். ஒரு சிறிய கட்டடம் கட்டி அதை ஏற்றி மழையில் நனையாதவாறு வைத்திருக்கு. இப்ப வேலை ஒன்றும் நடப்பதில்லையா   என்கிறேன். இப்ப குறைவக்கா, சீமெந்தும் விலையக்கா, மணலும் விலை என்கிறார். அப்ப உந்த excavator ஐ விற்றுவிட்டு எமக்கு பணத்தைப் பகிர்ந்து தாருங்கள். நாம் தந்ததில் சிறிது பணமாவது திரும்ப வரட்டும் என்று கூற அது எப்படியக்கா முடியுமென்கிறார். இளநீர் வெட்டித் தரவோ அல்லது தேனீர் போடவோ என்று கேட்க இளநீர் என்கிறோம். அவர் வேறெங்கோ இளநீர் எடுத்துவர மோட்டார் சயிக்கிளை எடுத்துக்கொண்டு போக கணவர் என் மேல் பாய்கிறார். 

 

சொந்த உறவுகளே தற்போது யாழில் ஏமாற்றுகின்றார்கள், யாரையும் நம்ப முடியாது. எனது மனைவியின் சொந்த மாமா, அவரால் பயன் அடைந்தவர்கள் பல, அதில் நானும் எனது நண்பர்களும், மிகச்சிறந்த மனிதர், அவருடைய மகனும் மகளும் வெளிநாட்டில், அவரின் நொருங்கிய சொந்தகாரர்கள் படுத்த படுக்கையாக இருக்கும் போது Power of Attorney வாங்கிவிட்டார்கள், அவர் இறந்தவுடன் வீடு வங்கியில் உள்ள பணங்களை முடக்கிவிட்டார்கள், மகன் கலியாணம் கட்டவில்லை தலைவருடன் இருந்து பின் முதுகெழும்பு பிரச்சனை மன நோய், மகனை வைத்து மகளுக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் நீதிமன்றமூடாக தடுத்துவிட்டார்கள், 50 கோடி வரும் சொத்து மதிப்பு, யாரையும் நம்ப முடியாது இந்த உலகில் 

14 minutes ago, Kandiah57 said:

நானும் ஏமாற்றமடைந்துள்ளேன்.   ...தனியாக..என்பதால் ஏமாத்திட்டீங்களே  ....ஒரு குழுவாக நாலு பேருடன். இணந்து செயல்பட்டிருந்தால்.  நல்லது என எண்ணி...நினைத்து கவலைப்பட்டு இருக்கிறேன்..உங்கள் எழுத்துகளை வாசிக்கும்போது   ஒன்பது பேரையும்   ஏமாற்றினார்கள்....நம்ப முடியவில்லை பிரபா. கொட்டிக்காரன். தான்   நல்ல மிகச்சிறந்த ஒரு அனுபவம்   அங்கு உள்ள இளம் சந்ததிக்கு உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம்...சிந்தனை...விருப்பம்..ஒரு துளி கூட கிடையாது...இவ்வாறு அனுப்பும் பணத்துக்கு நாலு போத்தல்கள் விஸ்கி    குடித்து விட்டு   அமெரிக்கர்களை திட்டி கொண்டு இருக்கலாம் 🤣😂நல்ல நித்திரையாவது வரும்........ஆமா புதிய பண்ணைகள். தொடங்கவில்லையா.?????🤣..

கஷ்டப்பட்ட ஒரு மாணவ or மாணவியை தேர்ந்தெடுத்து படிப்பியுங்கள், வருகாலத்திற்கு நல்ல முதலீடு

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அக்கா சுப்பிறமணிக்கு வாய் தான் மிச்சம் என்பது உங்களுக்கு முகப் புத்தகம் ஊடாக விளங்கிக்க கொள்ள முடியவில்லையா...🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, யாயினி said:

ஏன் அக்கா சுப்பிறமணிக்கு வாய் தான் மிச்சம் என்பது உங்களுக்கு முகப் புத்தகம் ஊடாக விளங்கிக்க கொள்ள முடியவில்லையா...🤔

அதுதான் நானும் யோசித்தேன் யாயினி, சுமே எப்பேர்பட்டவர், இவர்களிடம் சிக்கிவிடுவாரா, மற்ற பதிவுகளுக்கும் காத்திருப்போம்👍

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, உடையார் said:

கஷ்டப்பட்ட ஒரு மாணவ or மாணவியை தேர்ந்தெடுத்து படிப்பியுங்கள், வருகாலத்திற்கு நல்ல முதலீடு

நல்ல யோசனை..நன்றி..முயற்சிக்கிறேன்......எனது விருப்பம்   இரண்டு   மூன்று    சுயமுயற்ச்சியாளரை.   உருவாகிறது....அல்லது தொழில் முனைவோரை    வளர்த்து எடுப்பது  ....முதலிலேயோ   தோல்வி கண்டு விட்டேன்   ...கவலையளிக்கிறது....இனிமேல் கவனமாக இருந்து நல்ல நம்பிக்கையான.  நபர்கள் கிடைத்தால்  நேரில் போய்ப் பார்த்து   செய்ய வேண்டும் ...படங்களை கதைகளை  நம்ப முடியாது    

  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள் இன்றைய பதிவை வாசிக்க ஆர்வமாக வந்து அங்கு உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டது சற்று மன இறுக்கத்தை கொடுக்கிறது.  மறு பக்கத்தில் சிறிது சந்தோசம் காரணம் அங்கு உள்ளவர்களில் 99% பொறுப்புணர்ச்சியோ, உழைத்து முன்னேற ஆர்வம் அற்றவர்கள் என்று நான் விவாதிக்கும் கருத்துக்கு வலு சேர்ந்திருப்பது உங்கள் அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sabesh said:

 உங்கள் இன்றைய பதிவை வாசிக்க ஆர்வமாக வந்து அங்கு உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டது சற்று மன இறுக்கத்தை கொடுக்கிறது.  மறு பக்கத்தில் சிறிது சந்தோசம் காரணம் அங்கு உள்ளவர்களில் 99% பொறுப்புணர்ச்சியோ, உழைத்து முன்னேற ஆர்வம் அற்றவர்கள் என்று நான் விவாதிக்கும் கருத்துக்கு வலு சேர்ந்திருப்பது உங்கள் அனுபவம்.

எனக்கும் பட்டறிவின் முடிவு இது தான்😭

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

நானும் ஏமாற்றமடைந்துள்ளேன்.   ...தனியாக..என்பதால் ஏமாத்திட்டீங்களே  ....ஒரு குழுவாக நாலு பேருடன். இணந்து செயல்பட்டிருந்தால்.  நல்லது என எண்ணி...நினைத்து கவலைப்பட்டு இருக்கிறேன்..உங்கள் எழுத்துகளை வாசிக்கும்போது   ஒன்பது பேரையும்   ஏமாற்றினார்கள்....நம்ப முடியவில்லை பிரபா. கொட்டிக்காரன். தான்   நல்ல மிகச்சிறந்த ஒரு அனுபவம்   அங்கு உள்ள இளம் சந்ததிக்கு உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம்...சிந்தனை...விருப்பம்..ஒரு துளி கூட கிடையாது...இவ்வாறு அனுப்பும் பணத்துக்கு நாலு போத்தல்கள் விஸ்கி    குடித்து விட்டு   அமெரிக்கர்களை திட்டி கொண்டு இருக்கலாம் 🤣😂நல்ல நித்திரையாவது வரும்........ஆமா புதிய பண்ணைகள். தொடங்கவில்லையா.?????🤣..

அவதிப் படக்கூடாது கண்டியளோ

7 hours ago, யாயினி said:

ஏன் அக்கா சுப்பிறமணிக்கு வாய் தான் மிச்சம் என்பது உங்களுக்கு முகப் புத்தகம் ஊடாக விளங்கிக்க கொள்ள முடியவில்லையா...🤔

கோவிட் மூட்டம் நிறையப்பேருக்கு கிட்டத்தட்ட 143 பேர் கொண்ட குழுவில் பயணம் சேர்த்து உணவுப் பொதிகள் எல்லாம் கொடுத்து ஒழுங்காகக் கணக்குக் காட்டியதும் எல்லோரும் நம்பிவிட்டோம்.

7 hours ago, உடையார் said:

சொந்த உறவுகளே தற்போது யாழில் ஏமாற்றுகின்றார்கள், யாரையும் நம்ப முடியாது. எனது மனைவியின் சொந்த மாமா, அவரால் பயன் அடைந்தவர்கள் பல, அதில் நானும் எனது நண்பர்களும், மிகச்சிறந்த மனிதர், அவருடைய மகனும் மகளும் வெளிநாட்டில், அவரின் நொருங்கிய சொந்தகாரர்கள் படுத்த படுக்கையாக இருக்கும் போது Power of Attorney வாங்கிவிட்டார்கள், அவர் இறந்தவுடன் வீடு வங்கியில் உள்ள பணங்களை முடக்கிவிட்டார்கள், மகன் கலியாணம் கட்டவில்லை தலைவருடன் இருந்து பின் முதுகெழும்பு பிரச்சனை மன நோய், மகனை வைத்து மகளுக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் நீதிமன்றமூடாக தடுத்துவிட்டார்கள், 50 கோடி வரும் சொத்து மதிப்பு, யாரையும் நம்ப முடியாது இந்த உலகில் 

கஷ்டப்பட்ட ஒரு மாணவ or மாணவியை தேர்ந்தெடுத்து படிப்பியுங்கள், வருகாலத்திற்கு நல்ல முதலீடு

எதைத்தான் நான் செய்யவில்லை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

நல்ல யோசனை..நன்றி..முயற்சிக்கிறேன்......எனது விருப்பம்   இரண்டு   மூன்று    சுயமுயற்ச்சியாளரை.   உருவாகிறது....அல்லது தொழில் முனைவோரை    வளர்த்து எடுப்பது  ....முதலிலேயோ   தோல்வி கண்டு விட்டேன்   ...கவலையளிக்கிறது....இனிமேல் கவனமாக இருந்து நல்ல நம்பிக்கையான.  நபர்கள் கிடைத்தால்  நேரில் போய்ப் பார்த்து   செய்ய வேண்டும் ...படங்களை கதைகளை  நம்ப முடியாது    

நேரில் பார்த்தாலும் நல்லவர்போல் நடித்து ஏமாற்றிவிடுவார்கள். அவர்களை அறிய ஒரு ஆண்டாவது கண்காணிப்பு அவசியம். நாம் அங்கிருந்தாலன்றி யாருமே எமக்கு விசுவாசமாக எதையும் செய்யப்போவதில்லை.

5 hours ago, Sabesh said:

 உங்கள் இன்றைய பதிவை வாசிக்க ஆர்வமாக வந்து அங்கு உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டது சற்று மன இறுக்கத்தை கொடுக்கிறது.  மறு பக்கத்தில் சிறிது சந்தோசம் காரணம் அங்கு உள்ளவர்களில் 99% பொறுப்புணர்ச்சியோ, உழைத்து முன்னேற ஆர்வம் அற்றவர்கள் என்று நான் விவாதிக்கும் கருத்துக்கு வலு சேர்ந்திருப்பது உங்கள் அனுபவம்.

சரியான கவலையான விடயம் தனக்கள் முன்னேற்றத்துக்குக் கூட தாம் உழைக்க மாட்டார்கள்.

9 minutes ago, விசுகு said:

எனக்கும் பட்டறிவின் முடிவு இது தான்😭

பட்டுப் பட்டும் என போன்றவர்களுக்கு அறிவே வருகுதில்லை அண்ணா

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.