Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று  சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பரவி வாழ்கிற என் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என என் உயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சொன்னது போல, ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும். அத்தகைய இலட்சிய இலக்கான, மண்ணின் விடுதலையை அடைய தலைவர் வழிநின்று தன்னிகரற்றபோர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள்.

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கனவு கண்ட தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள் உலகம் இதுவரை கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள். தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தாய் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு கூடிய பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த சுதந்திரப் பயிர். அதைக் கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள்.

அத்தகைய மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் உளம் நெகிழ்ந்து நினைவுகூரப்படுகிறது. ‘மாவீரர் நாள்’ என்பது அழுது புலம்பும் நாள் அல்ல; அது தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவு கூறும் புனித நாள். பகை முடிக்க, படை நடத்தி தாயக விடுதலை என்கின்ற ஒற்றை இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமான மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள். ஏகாதிபத்திய காரிருளை நீக்க, தங்களையே தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, இந்த கார்த்திகை மாதத்தில் நம் ஆன்மாவில் பொருத்தி எதிர்கால இலட்சிய பாதைக்கு வழிகாட்டுகிற திருவிளக்குகளாக அவர்களை நினைத்துப் போற்றி வணங்குகிற பொன்னாள்.

அத்தகைய புனிதத் திருநாளை தமிழர்கள் பெருமளவில் வாழும் தாய் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு மாவீரர் நாளானது மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் (ஜி கார்னர் திடல், டி. வி. எஸ். சுங்கச்சாவடி அருகில்) நாம் தமிழர் கட்சியால் பேரெழுச்சியாக முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், அப்பெருநிகழ்விற்கான ஏற்பாட்டிற்குப் பொருளாதார நெருக்கடி என்பது மிகப்பெரிய பெருந்தடையாக உள்ளது. எனவே நிகழ்வு ஏற்பாட்டிற்கான நிதி பற்றாக்குறையைப் போக்க மக்களிடம் திரள்நிதி (Crowd Funding) திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.toptamilnews.com/thamizhagam/maaveerar-day-naam-tamilar-katchi-seeman-statement/cid12778733.htm

  • Replies 154
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Crowd Funding திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது]

விளங்கிவிட்டது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

Crowd Funding திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது]

விளங்கிவிட்டது 🤣

அட, விளங்க நிணைப்பவருக்கு விளங்கிவிட்டது.

தலைவர் இறந்த உடலை சிங்களம் காட்டிய போது கூட, அது சும்மா, தலைவர் அவசரமா பணம் வேணுமாம் என்று திரட்டி ஆட்டையப் போட்ட கோஸ்டிகளுள், பணத்தை கேட்டாலும், கொடுப்பதற்கு அமைய சிறப்பா செய்து காட்டுவது பரவாயில்லை தானே 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சிண்டு முடிவதற்காகவே இந்தச் செய்தியை கொழும்பான் இங்கே இணைத்துள்ளதாகத் தெரிகிறது. 

ஆதலால் இந்தத் திரியில் இனிக் கருத்தெழுதப்போவதில்லை என முடிவெடுத்துள்ளேன். 

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

சிண்டு முடிவதற்காகவே இந்தச் செய்தியை கொழும்பான் இங்கே இணைத்துள்ளதாகத் தெரிகிறது. 

ஆதலால் இந்தத் திரியில் இனிக் கருத்தெழுதப்போவதில்லை என மிடிவெடுத்துள்ளேன். 

நிச்சயமாக அல்ல. இப்படி நீங்களே நினைத்து மற்றவர்களையும் தவறாக வழிந‌டத்தாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பத்து இலட்சம் நிதி சேகரிப்பு திட்டம். தமிழகத்தினுள் மட்டும் இன்று வரை 93% திரண்டுள்ளது.

எப்படியும் 100% இலக்கை அடைந்துவுடும் என மகிழ்ச்சியடைகிறார்கள்.

வழக்கமாக50 - 52% தான் தமிழகத்தினுள்.

இது மாவீரர் நாள் உணர்வு, தமிழகம் எங்கும் பரவி முக்கியத்துவம் உணரப்பட்டதாலா அல்லது நாம் தமிழர் மக்கள் நம்பிக்கை பெறுவதாலா என சிறு விவாதம் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

பத்து இலட்சம் நிதி சேகரிப்பு திட்டம். தமிழகத்தினுள் மட்டும் இன்று வரை 93% திரண்டுள்ளது.

எப்படியும் 100% இலக்கை அடைந்துவுடும் என மகிழ்ச்சியடைகிறார்கள்.

வழக்கமாக50 - 52% தான் தமிழகத்தினுள்.

இது மாவீரர் நாள் உணர்வு, தமிழகம் எங்கும் பரவி முக்கியத்துவம் உணரப்பட்டதாலா அல்லது நாம் தமிழர் மக்கள் நம்பிக்கை பெறுவதாலா என சிறு விவாதம் போகிறது.

நாதா இது உங்க‌ளுக்கு தெரியுமோ தெரியாது.............இந்திய நாட்டு குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு காசு அனுப்ப‌ முடியும்..........இந்திய‌ குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் ஜ‌ரோப்பா அமெரிக்கா க‌ன‌டா என்று ப‌ல‌ நாட்டில் வாழ்கிறார்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு இந்திய‌ன் வ‌ங்கி எக்க‌வுன்ட் இருக்கு அத‌ன் மூல‌ம் அனுப்ப‌லாம்.........க‌ட்டார் ம‌ற்றும் அர‌பு நாடுக‌ளில் வேலைக்கு போன‌ த‌மிழ் நாட்டு உற‌வுக‌ள் அவையும் அனுப்ப‌லாம்.........நாங்க‌ள் நாம் த‌மிழ‌ர் வ‌ங்கிக்கு அனுப்ப‌ முடியாது.............மாவீர‌ நாளுக்கு வ‌ரும் ம‌க்க‌ளே த‌ங்க‌ட‌ பார்க்கேட்டில் இருப்ப‌தை க‌ட்சி உண்டிய‌லுக்கை போடுவின‌ம் அதே பெரிய‌ காசாய் வ‌ந்து விடும்...............அது தான் அண்ண‌ன் சீமான் பொதுவாய் உல‌க‌ த‌மிழ‌ர் என்று சொல்லி இருக்கிறார்............இதுக்காக‌ தாங்க‌ள் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுட‌ன் விவாத‌ம் செய்ய‌ போக‌ கூடாது...............க‌ட்சியில் இருக்கும் பிள்ளைக‌ள் த‌மிழீழ‌ ப‌ற்றுக் கொண்ட‌ புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளுட‌ன் தொட‌ர்வில் இருக்கின‌ம் தேர்த‌ல் நேர‌ம் அதிக‌ ப‌ண‌ம் தேவைப் ப‌டும் அப்பேக்க‌ அவ‌ர்க‌ள் மூல‌ம் 100 அல்ல‌து 150 ப‌வுன்ஸ் குடுக்க‌ கூடும்🥰🙏...............

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி விடும் கயவர் கூட்டத்துடன் ஒப்பிடும் போது, மாவீரர் நாள் நிகழ்வை செய்ய காசு தாருங்கள் என்று சீமான் கேட்பது தவறு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி விடும் கயவர் கூட்டத்துடன் ஒப்பிடும் போது, மாவீரர் நாள் நிகழ்வை செய்ய காசு தாருங்கள் என்று சீமான் கேட்பது தவறு அல்ல.

அந்த கயவர் கூட்டமே, சீமானை திட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும். 

எனக்கு, கோடி தந்தாலும், கைது பயம் இருக்கும் கொழும்பில் அல்லது யாழ்ப்பாணத்தில், மாவீரர் நிகழ்வு நடத்த போக மாட்டேன் என்னும் போது, அதே பயம் இருந்தும், வருவது வரட்டும் என்று தொடங்கி,இன்று பல ஆயிரம் மக்களை திரட்டி மாவீரர் தினம் நடாத்தும் சீமான், எனக்கு மதிப்புக்குரியவராக தெரிகிறார். 

(உடான்ஸ் சுவாமியார் ஸ்டைலில்: பி.கு)

நான் சீமான் நடாத்தும் மாவீரர் குறித்து மட்டுமே பேசுகிறேன். நாதக அரசியல் குறித்தல்ல. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

Crowd Funding திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது]

விளங்கிவிட்டது 🤣

1,.2009 ஆம். ஆண்டு  இந்த சீமான்  என்ன செய்து கொண்டிருந்தார்???  போராடி இருக்கலாம்   

2,.ஜேர்மன்காரனுக்கு  புலிகள் பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் தெரிந்து இருக்கிறது    ஆனால் பக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி பேசும் தமிழருக்கு சீமான் முலை முடுக்கு எல்லாம் சென்று வீடு வீடாக  இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது   🤣😂😂

3,.தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு”  ஏதாகினும் ஒரு பிரச்சனையைப் போராடி வென்றது உண்டா ?? இல்லையே??  ஏன்   பயம் ...மத்திய அரசுக்கு மிகுந்த பயம்   தமிழ் நாட்டில் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் நிறையவே உண்டு”   எங்கே போகலாம்”?? என்ன செய்யலாம்?? என்னும் கேள்விகள் உடன்  இப்படியானவர்கள். எங்கே கூட்டம் நடந்தாலும் சேர்ந்து விடுவார்கள்   சிறந்த பொழுதுபோக்கு 🤣

4   இவரால் இலங்கையில் தமிழருக்கு தமிழ் ஈழம்  ஒருபோதும் அமைக்க முடியாது  ..இந்தியா மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மட்டுமே  இலங்கையில் தமிழ் ஈழம் அமையும்   தமிழ் நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியும்  இந்தியா மத்திய அரசை கொண்டு இலங்கையில் எந்தவொரு செயலையும் இலங்கை தமிழரின்  விருபத்துக்கு அமைய செய்யப்போவதில்லை 

5,.இலங்கைக்கு சீமானை அனுப்பி வைத்தால்  இலங்கை பிரதமருடன் கை குலுக்கி   பிரதமரின். நகைச்சுவையை ரசித்து சிரித்து படங்கள் எல்லாம்  எடுத்து கொண்டு வருவரா?? இல்லையா ?? 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

1,.2009 ஆம். ஆண்டு  இந்த சீமான்  என்ன செய்து கொண்டிருந்தார்???  போராடி இருக்கலாம்   

2,.ஜேர்மன்காரனுக்கு  புலிகள் பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் தெரிந்து இருக்கிறது    ஆனால் பக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி பேசும் தமிழருக்கு சீமான் முலை முடுக்கு எல்லாம் சென்று வீடு வீடாக  இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது   🤣😂😂

3,.தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு”  ஏதாகினும் ஒரு பிரச்சனையைப் போராடி வென்றது உண்டா ?? இல்லையே??  ஏன்   பயம் ...மத்திய அரசுக்கு மிகுந்த பயம்   தமிழ் நாட்டில் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் நிறையவே உண்டு”   எங்கே போகலாம்”?? என்ன செய்யலாம்?? என்னும் கேள்விகள் உடன்  இப்படியானவர்கள். எங்கே கூட்டம் நடந்தாலும் சேர்ந்து விடுவார்கள்   சிறந்த பொழுதுபோக்கு 🤣

4   இவரால் இலங்கையில் தமிழருக்கு தமிழ் ஈழம்  ஒருபோதும் அமைக்க முடியாது  ..இந்தியா மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மட்டுமே  இலங்கையில் தமிழ் ஈழம் அமையும்   தமிழ் நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியும்  இந்தியா மத்திய அரசை கொண்டு இலங்கையில் எந்தவொரு செயலையும் இலங்கை தமிழரின்  விருபத்துக்கு அமைய செய்யப்போவதில்லை 

5,.இலங்கைக்கு சீமானை அனுப்பி வைத்தால்  இலங்கை பிரதமருடன் கை குலுக்கி   பிரதமரின். நகைச்சுவையை ரசித்து சிரித்து படங்கள் எல்லாம்  எடுத்து கொண்டு வருவரா?? இல்லையா ?? 

இதுக்கெல்லாம் ஒரேயொரு பதில் செந்தமிழன் சீமான் அண்ணவை முதல்வராக்கிக் காட்டுங்கள் அவர் செய்கிறாரா இல்லையா என்று பார்ப்பம். எனக்கு இப்ப அந்தம்மா புது வீடியோ ஒண்டை போடப்போறா எண்ட பயமாக் கிடக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

1,.2009 ஆம். ஆண்டு  இந்த சீமான்  என்ன செய்து கொண்டிருந்தார்???  போராடி இருக்கலாம்   

2,.ஜேர்மன்காரனுக்கு  புலிகள் பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் தெரிந்து இருக்கிறது    ஆனால் பக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி பேசும் தமிழருக்கு சீமான் முலை முடுக்கு எல்லாம் சென்று வீடு வீடாக  இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது   🤣😂😂

3,.தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு”  ஏதாகினும் ஒரு பிரச்சனையைப் போராடி வென்றது உண்டா ?? இல்லையே??  ஏன்   பயம் ...மத்திய அரசுக்கு மிகுந்த பயம்   தமிழ் நாட்டில் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் நிறையவே உண்டு”   எங்கே போகலாம்”?? என்ன செய்யலாம்?? என்னும் கேள்விகள் உடன்  இப்படியானவர்கள். எங்கே கூட்டம் நடந்தாலும் சேர்ந்து விடுவார்கள்   சிறந்த பொழுதுபோக்கு 🤣

4   இவரால் இலங்கையில் தமிழருக்கு தமிழ் ஈழம்  ஒருபோதும் அமைக்க முடியாது  ..இந்தியா மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மட்டுமே  இலங்கையில் தமிழ் ஈழம் அமையும்   தமிழ் நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியும்  இந்தியா மத்திய அரசை கொண்டு இலங்கையில் எந்தவொரு செயலையும் இலங்கை தமிழரின்  விருபத்துக்கு அமைய செய்யப்போவதில்லை 

5,.இலங்கைக்கு சீமானை அனுப்பி வைத்தால்  இலங்கை பிரதமருடன் கை குலுக்கி   பிரதமரின். நகைச்சுவையை ரசித்து சிரித்து படங்கள் எல்லாம்  எடுத்து கொண்டு வருவரா?? இல்லையா ?? 

சரிதான், சீமான் பேச்சினை கேட்க்காமல், அவர் குறித்து வாசிக்காமல், பேசுகிறீர்கள் என்று சொன்னதை, மீண்டும், மீண்டும் எழுத்திலும் உறுதிப்படுத்துகிறீர்கள்.

நீங்கள் எழுதியதன் அர்த்தம் ஏதாவது, உங்களுக்கு, புரிந்தால், தயவுடன் விளக்கம் தரவும்.   🤣🤦‍♂️😁

1 minute ago, வாலி said:

எனக்கு இப்ப அந்தம்மா புது வீடியோ ஒண்டை போடப்போறா எண்ட பயமாக் கிடக்கு!

போடுவிட்டுது மனிசி. தனியா இல்லை. இரண்டு லட்சுமிகளும் ஆளுக்கொன்று.

நம்ம அண்ணி, திரிசா வுக்கு கொதிச்சு பொங்கி எழுந்த குஸ்பு, எனக்கு ஏன் பொங்கி எழவில்லையாம்.... 😁🤣
 

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களை வைத்து எவர் பணம் சேர்த்தாலும் தவறு தான். அதேவேளை மாவீரர் நாள் செலவை சிலர் பொறுப்பு எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் அவை நிறுத்தப் பட்டு விடக்கூடிய ஆபத்து உள்ளது. அதற்கான வரவு செலவு பகிரங்கமாக அறிவிக்கப்படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா அண்ணா சொன்ன ஐந்து காரணங்களும் யதார்த்தங்கள் உண்மை. 

32 minutes ago, Kandiah57 said:

இலங்கைக்கு சீமானை அனுப்பி வைத்தால்  இலங்கை பிரதமருடன் கை குலுக்கி   பிரதமரின். நகைச்சுவையை ரசித்து சிரித்து படங்கள் எல்லாம்  எடுத்து கொண்டு வருவரா?? இல்லையா ?? 

அது தான் நடைபெறும். அதற்கு ஒரு காரணம் சொல்லி அவர் செயல் யாழ்களத்தில் நியாயபடுத்தபடும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

மாவீரர்களை வைத்து எவர் பணம் சேர்த்தாலும் தவறு தான். அதேவேளை மாவீரர் நாள் செலவை சிலர் பொறுப்பு எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் அவை நிறுத்தப் பட்டு விடக்கூடிய ஆபத்து உள்ளது. அதற்கான வரவு செலவு பகிரங்கமாக அறிவிக்கப்படவேண்டும். 

மாவீரர் நாள் கொண்டாட்டத்தை நிறுத்தினாலும் மக்கள் மனங்களில் இருந்து மாவீரர் நினைவு போகாது என நம்புகிறேன்.

90 களில் தமிழகத்தில் உள்ள அகதிமுகாமில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் அக்காலகட்டத்தில் மாவீரர் நினைவினை வெளிப்படையாக காட்ட முடியாது ஆனால் குறித்த நாளில் அவரர் தத்தமது மத ஆலயங்களுக்கு சென்று நினைவு கொண்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

1,.2009 ஆம். ஆண்டு  இந்த சீமான்  என்ன செய்து கொண்டிருந்தார்???  போராடி இருக்கலாம்   

2,.ஜேர்மன்காரனுக்கு  புலிகள் பற்றியும் இலங்கை தமிழர்கள் பற்றியும் தெரிந்து இருக்கிறது    ஆனால் பக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி பேசும் தமிழருக்கு சீமான் முலை முடுக்கு எல்லாம் சென்று வீடு வீடாக  இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது   🤣😂😂

3,.தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு”  ஏதாகினும் ஒரு பிரச்சனையைப் போராடி வென்றது உண்டா ?? இல்லையே??  ஏன்   பயம் ...மத்திய அரசுக்கு மிகுந்த பயம்   தமிழ் நாட்டில் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் நிறையவே உண்டு”   எங்கே போகலாம்”?? என்ன செய்யலாம்?? என்னும் கேள்விகள் உடன்  இப்படியானவர்கள். எங்கே கூட்டம் நடந்தாலும் சேர்ந்து விடுவார்கள்   சிறந்த பொழுதுபோக்கு 🤣

4   இவரால் இலங்கையில் தமிழருக்கு தமிழ் ஈழம்  ஒருபோதும் அமைக்க முடியாது  ..இந்தியா மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மட்டுமே  இலங்கையில் தமிழ் ஈழம் அமையும்   தமிழ் நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியும்  இந்தியா மத்திய அரசை கொண்டு இலங்கையில் எந்தவொரு செயலையும் இலங்கை தமிழரின்  விருபத்துக்கு அமைய செய்யப்போவதில்லை 

5,.இலங்கைக்கு சீமானை அனுப்பி வைத்தால்  இலங்கை பிரதமருடன் கை குலுக்கி   பிரதமரின். நகைச்சுவையை ரசித்து சிரித்து படங்கள் எல்லாம்  எடுத்து கொண்டு வருவரா?? இல்லையா ?? 

சீமான் ப‌ற்றிய‌ உங்க‌ட‌ புரித‌ல் இம்ம‌ட்டும் தான்............2009க‌ளில் சீமான் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ எத்த‌னை த‌ட‌வை சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார் தெரியுமா...........உதவி செய்யாட்டியும் உபத்திரம் செய்யக்கூடாது...............நீங்க‌ள் ட‌ங்கிள‌ஸ் ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரி போன்ற‌வைக்கு xxxxxxxx என்ப‌து என‌க்கு தெரிந்த‌ ஒன்று...........2009க்கு முத‌ல் ட‌க்கிள‌ஸ்சும் ச‌ரி ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரிக்கும் ஈழ‌ ம‌ண்ணில் ம‌க்க‌ள் ஆத‌ர‌வு துப்ப‌ர‌வாய் இல்லை............சீமானின் க‌ட்சி த‌மிழ‌க‌த்தின் மூன்றாவ‌து பெரிய‌ க‌ட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்த‌து............இந்த‌ திரியில் உங்க‌ட‌ ம‌ன‌சில் இருக்கும் வ‌ன்ம‌த்தை ந‌க்க‌லோடு கொட்டி இருக்கிறீங்க‌ள்.............புல‌ம் பெய‌ர் நாட்டு எலிக‌ளை விட‌ சீமான் 2009க‌ளில் ந‌ட‌ந்த‌ இன‌ப் ப‌டுகொலைய‌ த‌மிழ‌க‌ம் எங்கும்  எடுத்து சொல்லி விட்டார்...........இர‌வு ப‌க‌ல் பாராம.............

இன‌த்தை காட்டி கொடுத்து கூட்டி கொடுத்த‌வ‌ர்க‌ள் பின்னால் போகாம‌ 😡 அடுத்த‌ த‌லைமுறைக்கு ந‌ல்ல‌தை எடுத்து சொல்லும் ந‌ப‌ர்க‌ள் பின்னால் போவ‌து சிற‌ப்பு🙏............சிறு வ‌ய‌து முத‌லே ட‌க்கிள‌ஸ் ம‌ற்றும் ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரி துரோகிய‌ல் என்று முன்னோர்க‌ள் சொல்லி கேட்டு வ‌ள‌ந்த‌வ‌ன்...............எதிரிய‌ விட‌ துரோகியே ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள்...........இது த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் சொன்ன‌து🙏🙏🙏🙏🙏🙏.............
வாழ்க்க‌ பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்🙏🙏🙏
வாழ்க‌ வ‌ள‌ர்க‌ நாம் த‌மிழ‌ர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Edited by நிழலி
அநாகரீகமாக எழுதிய சொற்கள் நீக்கப்பட்டன

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

மாவீரர்களை வைத்து எவர் பணம் சேர்த்தாலும் தவறு தான். அதேவேளை மாவீரர் நாள் செலவை சிலர் பொறுப்பு எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் அவை நிறுத்தப் பட்டு விடக்கூடிய ஆபத்து உள்ளது. அதற்கான வரவு செலவு பகிரங்கமாக அறிவிக்கப்படவேண்டும். 

இதைதான் சொல்லுறது சும்மா கிடைக்கிற மாட்டை பல்லை பிளந்து பதம் பார்கிறதென்று.

அவர்கள் தேவையானதை அங்கேயே திரட்டி விட்டார்கள்.

நாங்கள் வாயை மூடுவது நல்லது. இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

இதைதான் சொல்லுறது சும்மா கிடைக்கிற மாட்டை பல்லை பிளந்து பதம் பார்கிறதென்று.

அவர்கள் தேவையானதை அங்கேயே திரட்டி விட்டார்கள்.

நாங்கள் வாயை மூடுவது நல்லது. இல்லையோ?

நான் க‌வ‌ணித்த‌ ம‌ட்டில் இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌ம் முத‌ல் என்ன‌ எழுத‌ப் ப‌ட்ட‌து ஏது எழுத‌ப் ப‌ட்ட‌து என்று வாசிக்காம‌ உப்புக்கு ச‌ப்பில்லாம‌ எழுதி போட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை குழ‌ப்பி விடுவ‌து...........நாங்க‌ள் இர‌ண்டு பேரும் புரியும் ப‌டி எழுதியும் புரிய‌ வில்லை என்றால் என்ன‌ செய்வ‌து நாதா................

2 hours ago, வாலி said:

இதுக்கெல்லாம் ஒரேயொரு பதில் செந்தமிழன் சீமான் அண்ணவை முதல்வராக்கிக் காட்டுங்கள் அவர் செய்கிறாரா இல்லையா என்று பார்ப்பம். எனக்கு இப்ப அந்தம்மா புது வீடியோ ஒண்டை போடப்போறா எண்ட பயமாக் கிடக்கு!

மன நோயாளிக்கு நல்லா டிரீட்மென்ட் கொடுத்தாச்சு இனி அவா அப்படி வீடியோ போட மாட்டா ஆன‌ ப‌டியால் நீங்க‌ள் அதை ப‌ற்றி க‌வ‌லைப் ப‌ட‌ தேவை இல்லை.............

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி விடும் கயவர் கூட்டத்துடன் ஒப்பிடும் போது, மாவீரர் நாள் நிகழ்வை செய்ய காசு தாருங்கள் என்று சீமான் கேட்பது தவறு அல்ல.

நீங்கள் குறிப்பிடுவதுபோல நிறைய பேர் பணம் , தங்க நகைகளுடன் இயக்கங்களை விட்டு ஓடிப்போய் வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்பாவி மக்கள் இங்கு பணத்தையும் , நகையையும், சொத்துக்களையும்,உயிரையும்   இழந்ததுதான் மிச்சம்.

அது சரி, சீமானுக்கு வெளிநாட்டு தமிழர்கள் மாதா மாதம் பணம் வழங்குவதா பேசிக்கொள்வார்கள். அப்படி இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இதைதான் சொல்லுறது சும்மா கிடைக்கிற மாட்டை பல்லை பிளந்து பதம் பார்கிறதென்று.

அவர்கள் தேவையானதை அங்கேயே திரட்டி விட்டார்கள்.

நாங்கள் வாயை மூடுவது நல்லது. இல்லையோ?

நான் நினைக்கிறேன் நீங்கள் செய்தியை புரிந்து வாசிப்பதில் லை எழுதுவது இல்லை என்று.

செய்தியும் வேண்டுகோளூம் வெளிநாட்டு தமிழர்களுக்கு. நன்றி 

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நான் நினைக்கிறேன் நீங்கள் செய்தியை புரிந்து வாசிப்பதில் லை எழுதுவது இல்லை என்று.

செய்தியும் வேண்டுகோளூம் வெளிநாட்டு தமிழர்களுக்கு. நன்றி 

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்களும் வாசிக்காமல் பதில் போடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

தேவையான நிதி 93% நேற்றுவரை உள்ளூரிலேயே கிடைத்திருக்கிறது. 100% இம்முறை அங்கேயே கிடைத்து விடுமளவுக்கு ஒன்று மாவீரர் புகழ் பரவியுள்ளது அல்லது நாதக வளர்ந்துள்ளது.

இந்த நிலையில், கணக்கு வேணும் என்று நாம் கேட்க முடியுமா என்ன?

வந்த நிதி, செலவு விபரம் சமர்ப்பிக்க வெண்டும் என, தேர்தல் ஆணையம் விதியாக வைத்துள்ளதே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Cruso said:

அது சரி, சீமானுக்கு வெளிநாட்டு தமிழர்கள் மாதா மாதம் பணம் வழங்குவதா பேசிக்கொள்வார்கள். அப்படி இல்லையா? 

கொடுத்தார்கள்வளரும் வரை.

இனி அங்கேயே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.

அட, அங்குள்ள தமிழர் பணத்தில் தான், சிங்களத்து அம்பாந்தோட்டையில் ஒரு பில்லியன் டாலர் முதலிட வந்தார் ஜெகதரட்சகன்.

அப்புறம்??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நீங்களும் வாசிக்காமல் பதில் போடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

தேவையான நிதி 93% நேற்றுவரை உள்ளூரிலேயே கிடைத்திருக்கிறது. 100% இம்முறை அங்கேயே கிடைத்து விடுமளவுக்கு ஒன்று மாவீரர் புகழ் பரவியுள்ளது அல்லது நாதக வளர்ந்துள்ளது.

இந்த நிலையில், கணக்கு வேணும் என்று நாம் கேட்க முடியுமா என்ன?

வந்த நிதி, செலவு விபரம் சமர்ப்பிக்க வெண்டும் என, தேர்தல் ஆணையம் விதியாக வைத்துள்ளதே.

பணம் சேர்ந்தது பற்றி அல்ல எனது பார்வை. பணம் யாரிடம் சேர்க்கப் பட்டது அல்லது கேட்கப்பட்டது??

உங்களுக்கு புரியாது விட்டால் இதற்கு மேல் விளக்கப் படுத்தமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

பணம் சேர்ந்தது பற்றி அல்ல எனது பார்வை. பணம் யாரிடம் சேர்க்கப் பட்டது அல்லது கேட்கப்பட்டது??

உங்களுக்கு புரியாது விட்டால் இதற்கு மேல் விளக்கப் படுத்தமுடியாது

நான் கொடுக்கவில்லை. ஆகவே கணக்கு கேட்கும் தார்மீக உரிமை இல்லை.

நீங்கள் கொடுத்திருந்தால், அதற்கு என்ன வேலை நடந்தது என்று தாராளமாக கேட்கலாம் விசுகண்ணை!

இதில் என்ன குழப்பம்??

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, நிழலி said:

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி விடும் கயவர் கூட்டத்துடன் ஒப்பிடும் போது, மாவீரர் நாள் நிகழ்வை செய்ய காசு தாருங்கள் என்று சீமான் கேட்பது தவறு அல்ல.

முற்றிலும் உண்மை.

எதற்கும் வரும் 27ம் திகதி நம்மவர்களின் நுண்ணறிவு தொழில் நுட்பம் எப்படி வேலை செய்கின்றது என பார்க்கலாம். 😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.