Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு எல்லாரும் வருவினம். ஏனெனில்.. அங்கு பணப்புழக்கம் அதிகம். இல்லாவிட்டால்.. சர்வதேச வர்த்தகக் கண்காட்சி.. உட்பட பல யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க.. என்ன மூல காரணம்..??! அதேபோல்.. போதைப்பொருட்களும்.. மதுபானமும் வந்து குவிகிறது. காரணம்.. மீண்டும் யாழில் பணப்புழக்கம் அதிகம். குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் பணம் அதிகம். அதை வறுக.. எல்லாரும் வருவினம்.

யாழுக்கான சொகுசு பஸ் சேவையை சிங்களவர்கள் தமிழர்களை விட திறம்பட நடத்தி.. ஒரு பஸ்ஸுக்கு இப்ப 10 பஸ் விடுகிறார்கள்.

  • Replies 148
  • Views 15.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    அடிதடியில் அரிகரன் நிகழ்ச்சி! ***************************************** *இது முள்ளிவாய்க்காலில்  கஞ்சி  வாங்க நின்ற கூட்டமல்ல!, *முத்த வெளியில்    கரிகரனைப் பார்க்க வந்த   கூட்டம்.!

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    இந்த இசை நிகழ்ச்சியை பல மில்லியன் செலவு செய்து ஒழுங்கு செய்தது.. இந்திரன் (நடிகை ரம்பாவின் கணவர்). காரணம்.. தான் அமைத்த நொதேர்ன் யுனி க்கு புரமோசனுக்கு. இவர் வெளியில் சொல்வது போரால் பாதிக்கப்பட்ட

  • புலவர்
    புலவர்

    இந்த நிகழ்ச்சியை காணொளியாக எடுப்பதற்கு விஜய்  தொலைக்காட்சிக்கு மட்டுமே அனமதி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதற்குப் பெருந் தொகைப் பணத்தை ஏற்பாட்டாளர்கள் வாங்கியிருப்பார்கய். அதனால்தான் முதலில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240209-WA0037-750x375.jpg

யாழில் தமன்னா!

நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் ஆகியோர் இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கலைஞர்களுக்கு யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி இன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240209-WA0040-600x338.jpg

IMG-20240209-WA0038-600x338.jpg

https://athavannews.com/2024/1369129

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இசை நிகழ்ச்சியை பல மில்லியன் செலவு செய்து ஒழுங்கு செய்தது.. இந்திரன் (நடிகை ரம்பாவின் கணவர்). காரணம்.. தான் அமைத்த நொதேர்ன் யுனி க்கு புரமோசனுக்கு.

இவர் வெளியில் சொல்வது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்குவதாக..

ஆனால்.. இவரின் யுனியில் முதுமானிப் பட்டங்களுக்கான கல்வி தான் வழங்கப்படுகிறது தற்போது. அதற்காக அறவிடப்படும் பணம்.. இலங்கையின் இதர அரச சார் பல்கலைக்கழகங்களில் அறவிடப்படும் தொகையிலும் அதிகம்.மேலும் இவரின் யுனியில் கல்வி கற்பிப்பது.. 90% தென்னிலங்கை பேராசிரியர்களும்.. விரிவுரையாளர்களும். 

ஆக.. கல்வி தமிழர்களின் முதலீடு என்று தெரிந்து.. அதில் முதலிட்டு இலாபம் ஈட்டுவதற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்வே இது.

தனது மனைவிக்கிருந்த செல்வாக்கை.. இதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார் அவ்வளவே.

இதில்.. தமிழர்கள் பெருமைப்பட எதுவும் இல்லை. இசை நிகழ்ச்சிக்கு போனாமா.. ரசிச்சமா என்றுவிட்டுப் போக வேண்டியான். அந்தச் சந்தர்ப்பத்தை பாவிப்பது தவறாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக நடிகைகளோடு.. கலைஞர்களோடு காசு கொடுத்து படமெடுக்கனும் என்பதை எல்லாம் ஒரு அறிவார்ந்த மக்கள் கூட்டமாக யாழ்ப்பாண கலாரசிகர்கள் செய்ய மாட்டினம் என்று நம்புவோமாக.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to யாழில் லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்😲 | ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நட்சத்திரங்களினால் ஸ்தம்பித்து போன யாழ் நகரம் ! இலங்கையில் இதுபோல் நடந்ததில்லை !

  • தமிழ் சிறி changed the title to யாழில் லட்சக்கணக்கில் குவிந்த மக்கள் | ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முற்றவெளிக்கு வந்த ஹரிகரன்; அதிரடியாக தடையை உடைத்து புகுந்த கூட்டம்!! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இந்த இசை நிகழ்ச்சியை பல மில்லியன் செலவு செய்து ஒழுங்கு செய்தது.. இந்திரன் (நடிகை ரம்பாவின் கணவர்). காரணம்.. தான் அமைத்த நொதேர்ன் யுனி க்கு புரமோசனுக்கு.

இவர் வெளியில் சொல்வது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்குவதாக..

ஆனால்.. இவரின் யுனியில் முதுமானிப் பட்டங்களுக்கான கல்வி தான் வழங்கப்படுகிறது தற்போது. அதற்காக அறவிடப்படும் பணம்.. இலங்கையின் இதர அரச சார் பல்கலைக்கழகங்களில் அறவிடப்படும் தொகையிலும் அதிகம்.மேலும் இவரின் யுனியில் கல்வி கற்பிப்பது.. 90% தென்னிலங்கை பேராசிரியர்களும்.. விரிவுரையாளர்களும். 

ஆக.. கல்வி தமிழர்களின் முதலீடு என்று தெரிந்து.. அதில் முதலிட்டு இலாபம் ஈட்டுவதற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்வே இது.

தனது மனைவிக்கிருந்த செல்வாக்கை.. இதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார் அவ்வளவே.

இதில்.. தமிழர்கள் பெருமைப்பட எதுவும் இல்லை. இசை நிகழ்ச்சிக்கு போனாமா.. ரசிச்சமா என்றுவிட்டுப் போக வேண்டியான். அந்தச் சந்தர்ப்பத்தை பாவிப்பது தவறாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக நடிகைகளோடு.. கலைஞர்களோடு காசு கொடுத்து படமெடுக்கனும் என்பதை எல்லாம் ஒரு அறிவார்ந்த மக்கள் கூட்டமாக யாழ்ப்பாண கலாரசிகர்கள் செய்ய மாட்டினம் என்று நம்புவோமாக.

நெடுக்காருக்கு வயித்தெரிச்சல் 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஹப்பியாக   என்யோய் பண்ணுறாங்கள்..ஜாஸ்தியான கிராவுட்....

 

ஹரிகரனின் பாடல்கள் எல்லாம் நான் முப்பது வயசில ரசிச்ச பாடல்களாக் இருக்கே....
அது சரி இப்ப வாய்ப்புக்கள் இல்லாத பிரபலங்களை யாழுக்கு அனுப்பி பிரபலம் தேடுகிறார்கள் ...

எது எப்படியோ நோதேர்ன் யுனி ...என்ற வார்த்தை சகல இடங்களிலும் இருப்பது மகிழ்ச்சியே ..இந்த பிரபலங்களின் வாயிலிருந்து வடமாகாணம் என்ற சொல்லு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நடந்த கலவரங்களால் நிகழ்சசி  இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.  

கலவரத்தை அடக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனராம். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, island said:

யாழில் நடந்த கலவரங்களால் நிகழ்சசி  இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.  

கலவரத்தை அடக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனராம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kandiah57 said:

இந்திரன். சொல்லுகிறார். போர முடிச்சாது என்று  சினிமாகாரர் வந்தது சந்தோசமாம்  

இந்த சினிமாகாரரகள் இந்தியார்கள் அவர்களுக்கு மேள தாளத்துடன் பெரிய வரவேற்பு கொடுப்போம்  ஆனால் இந்தியாவை திட்டி தீர்ப்போம். ஏனென்றால் இந்த சினிமாகாரருக்கும் இந்தியாவுக்கும்  என்ன சம்பந்தம் ஒரு சம்பந்தமில்லை ஆமா இவர்கள் 2009 எங்கே போனார்கள்??  இந்தியாவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி உழைத்து கொண்டிருந்தார்கள்  வை.கோ வை  நெடுமாறனை திட்டுவோம். ஏன்?? அவர்கள் விடுதலை அமைப்பு வளர  எந்தவொரு எதிர்பார்ப்புகள் இன்றி உழைத்தவார்கள்  இந்தியாவுடன் தமிழ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் தீட்டி கொட்டுவோம்  ஆனால் இந்தியா சினிமாகாரரை நாங்கள் அழைக்கலாம். நாங்கள் தலைவர் வழியில் போரடுகிறோம். அடுத்த பாட்டுக் கச்சேரி முள்ளிவாய்க்காலில் வைத்தாலும் ஆச்சர்யமில்லை ஏனெனில் முள்ளிவாய்க்காலுக்கும் சினிமா கச்சேரிக்கும் என்ன சம்பந்தம் சம்பந்தமில்லை அல்லவா?? 

குறிப்பு,...இலங்கை போருக்கு பட்ட கடனிலிருந்து. போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும்  இன்னும் மீளவே இல்லை  ஆனால் புலிகள் தரப்பு 2009 இல் மீண்டு விட்டார்கள்   யார் மீட்டது ??  விடுதலை உணர்வு உள்ள தமிழர்கள்  🙏

சத்திய சோதனை 

🤣

11 hours ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாணத்திற்கு எல்லாரும் வருவினம். ஏனெனில்.. அங்கு பணப்புழக்கம் அதிகம். இல்லாவிட்டால்.. சர்வதேச வர்த்தகக் கண்காட்சி.. உட்பட பல யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க.. என்ன மூல காரணம்..??! அதேபோல்.. போதைப்பொருட்களும்.. மதுபானமும் வந்து குவிகிறது. காரணம்.. மீண்டும் யாழில் பணப்புழக்கம் அதிகம். குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் பணம் அதிகம். அதை வறுக.. எல்லாரும் வருவினம்.

யாழுக்கான சொகுசு பஸ் சேவையை சிங்களவர்கள் தமிழர்களை விட திறம்பட நடத்தி.. ஒரு பஸ்ஸுக்கு இப்ப 10 பஸ் விடுகிறார்கள்.

பபலாப்பழத்தில்தானே ஈ மொய்க்கும் ? 😉

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நடைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முன்னனி பாடகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பங்குபற்றும் குறித்த நிகழ்ச்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் இன்று (09.02.2024) நடைபெற்றுள்ளது.

யாழில் நடைபெற்று வரும் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை | Hariharan Musical Show In Jaffna

சனநெருக்கடி

இதன்போது இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதால் அங்கு சனநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

யாழில் நடைபெற்று வரும் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை | Hariharan Musical Show In Jaffna

இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் ஒருவர் மயக்கமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து ஏற்பட்ட குழப்ப நிலையை பொலிஸார் கட்டுப்படுத்தும் வரையில் இசை நிகழ்ச்சியானது சில நிமிடங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

யாழில் நடைபெற்று வரும் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை | Hariharan Musical Show In Jaffna

யாழில் நடைபெற்று வரும் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை | Hariharan Musical Show In Jaffna

யாழில் நடைபெற்று வரும் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை | Hariharan Musical Show In Jaffna

யாழில் நடைபெற்று வரும் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை | Hariharan Musical Show In Jaffna

யாழில் நடைபெற்று வரும் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை | Hariharan Musical Show In Jaffna

https://tamilwin.com/article/hariharan-musical-show-in-jaffna-1707497246

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கடும் பதற்றம் -இடைநிறுத்தப்பட்ட இசைநிகழ்ச்சி - ரசகரை துரத்தி பிடித்த பொலிஸ்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
தமணாவை பார்க்க பனை ஏறிய ரசிகர் கூட்டம்.
May be an image of 3 people and lighting
 
 
 
 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தடையை உடைத்து முன்னேறிய தமிழர்கள்…

மணித்தியாலத்திற்கு ரேட் கேட்ட வைத்தியர்

35,000/= ரேட் பேசிய பொறியியலாளர்

 

நல்லதொரு சமூகம்

  • கருத்துக்கள உறவுகள்

இசை நிகழ்ச்சியை பார்பதற்காக அவர்கள் பனை ஏறியிருந்தாலும் குரங்கு தனமானவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இசை நிகழ்ச்சியை பார்பதற்காக அவர்கள் பனை ஏறியிருந்தாலும் குரங்கு தனமானவர்கள் தான்.

ரிக்கற். 25.ஆயிரம் ரூபாய்   காசு இல்லாதவன்  மரத்தில் ஏறி தான் பார்க்க வேண்டும்  இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட நோக்கம்  கல்வி நிலையம் கட்ட போட்ட பணத்தை  அதே மக்களிடம் வசூலிக்க  இது ஒரு வியாபாரம்   இவர் இந்திரன். தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்ய போவதில்லை    

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kandiah57 said:

ரிக்கற். 25.ஆயிரம் ரூபாய்   காசு இல்லாதவன்  மரத்தில் ஏறி தான் பார்க்க வேண்டும்

நீங்கள் இலங்கை சமாதான முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது வன்முறை தாக்குதல், எரித்தல் மேற்கொள்ளபட வேண்டும் என்கிறீர்கள் இப்போது ரிக்கெற்றுக்கு காசு இல்லாதவன்  மரத்தில் ஏறி தான் இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்கிறீர்கள் நீங்கள் தவறானவற்றை ஊக்குவிப்பதும் ஆதரிப்பதும் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகளாக நடிகர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன அதையெல்லாம் எமது இலங்கை வாழ் தமிழ் மக்கள் ஈழத் தமிழ் மக்கள் பார்ப்பதில்லை என்று நம்புவோமாக

ஆனாலும் ஈழத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால் கூட அதை பகிஷ்கரிக்க வேண்டும் என்று சிலரது மனநிலை இது என்னவாக இருக்கும் விரும்பியவர் பார்க்கட்டும் விருப்பமில்லாதவர் போகட்டும்

இன்று யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொண்டது உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் ஒரு இழுக்காகவே அமைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

யாழில் தடையை உடைத்து முன்னேறிய தமிழர்கள்…

மணித்தியாலத்திற்கு ரேட் கேட்ட வைத்தியர்

35,000/= ரேட் பேசிய பொறியியலாளர்

 

நல்லதொரு சமூகம்

பனங்காட்டு சனம் என்றால் சும்மாவா? 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமூகமக வாழ வேண்டும. என்றால் சட்டத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் ஆயுத்த்தாங்கிய இராணுவத்தால் அல்லது அமைப்புகளால்  மட்டுமே கட்டுப்படுத்த வேண்டிய கூட்டம் என்று ஆகிவிடும்.  1979 காலப்பகுதியில் என்று நினைக்கிறேன் திரு ஜேசுதாசின் கச்சேரி இதே முற்ற வெளியில. நடை பெற்ற போதும. தடுப்பு சுவர்களை உடைத்துக. கொண்டு உள்ள நுளைய முற்பட்ட கூட்டத்துக்கும் பொலிஸாருக்கும் இடையில் பாரிய ரகளை ஏற்பட்டது.  ஜேசுதாஸ் யாழ்பாண  மக்கள் மீது கோபம் கொண்டிருந்தார்.  

இன்று பல தசாப்தங்களுக்கு பின்பும் திருந்த வில்லை. ஒரு தேசமாக வாழத் தகுதி அற்றவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் இலங்கை சமாதான முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது வன்முறை தாக்குதல், எரித்தல் மேற்கொள்ளபட வேண்டும் என்கிறீர்கள் இப்போது ரிக்கெற்றுக்கு காசு இல்லாதவன்  மரத்தில் ஏறி தான் இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்கிறீர்கள் நீங்கள் தவறானவற்றை ஊக்குவிப்பதும் ஆதரிப்பதும் தவறு.

இதனை நான் முற்றாக மாறுக்கிறேன். 

1,. சமாதான  முயற்சிகள் ஒருவழி  பாதை இல்லை  இரண்டு பகுதியும் பூரண விருப்பத்துடன் ஈடுபாட வேண்டும்   அப்படி ஈடுபட்டதை நான்  60 வருட வரலாற்றில் பார்க்கவில்லை   சிங்களம் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது  மாகாண சபை 1987 இல் நிறுவப்பட்டது  அது ஏன் செயல்படவில்லை?   ரணில் கொள்கை பிரகடனத்தில். சொன்னார்  மாகாணங்களுக்கு பொருளாதாரம் கல்வி அதிகாரம் வழங்க யோசிப்பாதாக  அப்படி என்றால் பொலிஸ்  காணி அதிகாரம் இல்லை என்பது தான் கருத்து  பொலிஸ் அதிகாரம் கொடுத்தால் சிங்களவர். குற்றம்கள் வடக்கு கிழக்கு இல் செய்ய முடியாது உடன் தண்டிக்கப் பாடுவார்கள்.  காணி அதிகாரம் கொடுத்தால்  காணிகளை அபகரிக்க முடியாது  கண்ட இடங்களில் விகாரைகள் கட்டியெழுப்ப முடியாது   ஆகவே மாகாண சபை என்ற தீர்வு இறந்து விட்டது  அவர்கள் தரமாட்டார்கள். எனவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் ஏமாறிடாதீர்கள் என்று தான்  இது உங்களுக்கு ஒருபோதும் விளங்கப்போவதில்லை 

இசை நிகழ்ச்சியில் நடத்ததை தான் சொல்லி உள்ளேன்   நான் மரத்தில் ஏத்தி விடவில்லை  சாப்பிட்டுக்கு வழி இல்லாதவன் என்ன செய்ய முடியும்??? இந்த இந்திரன். ரணிலின் ஆள். அவர் தான் இறக்கி விட்டுள்ளதாக முகநூலில் எழுதி இருக்கிறார்கள்  பார்க்கவில்லையா??  

உங்களால் பதில் கருத்துகள் எழுத முடியாது விட்டால் ....தேவையற்ற குற்றசாட்டுகள் ஆதாரம் அற்ற குற்றசாட்டுகள் தவிர்க்ககவும். முடியுமானால். சிங்களவர்கள் தீர்வு தந்து தமிழர்கள்  தட்டி கழிந்த ஒரு சந்தர்பத்தை கூறுங்கள் பார்ப்போம்,. ...முடியாது    70 ஆண்டு காலமாக  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏன் கிடைக்கவில்லை???? குண்டுகள்   30 ஆண்டுகளாக போட்ட மாதிரி  தீர்வை அமுல் செய்திருக்க முடியாத???  இதற்கு தமிழர்களுடன்  பேச வேண்டிய அவசியமில்லை  

  • கருத்துக்கள உறவுகள்

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பநிலை – 6 பேர் கைது ! 3 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் ஹரிஹரன் இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்ப நிலையில்  சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் , 06 பேர் யாழ்ப்பாணம்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்து எறிந்துகொண்டு , கட்டண அனுமதி பெற்று இசை நிகழ்வை கண்டு களித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் வலயத்தினுள் நுழைந்து மேடை வரையில் சென்று இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

அத்துடன் , கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த உயரமான மேடைகள் , ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள் , பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் இசை நிகழ்வு இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு  பொலிஸார் , விசேட பொலிஸ் அதிரடி படையினர் மேலதிகமாக மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, இசை நிகழ்வை மீள ஆரம்பித்து சில ஒரு மணித்தியாலத்திற்குள்  முடித்துக்கொண்டனர்.

news-03-2.jpgnews-04-1.jpg
 

https://thinakkural.lk/article/291234

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எத்தனையோ ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகளாக நடிகர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன அதையெல்லாம் எமது இலங்கை வாழ் தமிழ் மக்கள் ஈழத் தமிழ் மக்கள் பார்ப்பதில்லை என்று நம்புவோமாக

ஆனாலும் ஈழத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால் கூட அதை பகிஷ்கரிக்க வேண்டும் என்று சிலரது மனநிலை இது என்னவாக இருக்கும் விரும்பியவர் பார்க்கட்டும் விருப்பமில்லாதவர் போகட்டும்

இன்று யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொண்டது உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் ஒரு இழுக்காகவே அமைகிறது.

ராஜா அதென்ன யாழ்ப்பாணத்து தமிழன் மட்டும் சுத்தமாக ,நல்ல பிள்ளைகளாக வாழ வேணும் என்ற ஒர் விம்பத்தை ஏற்படுத்துகின்றீர்கள் ...உலகத்தில் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது சில இடங்களில் அசம்பாவிதங்களும் நடை பெற்றுள்ளது ..பொலிசார் தடிஅடி பிரயோகம் செய்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சகஜம் .....

இதனால் யாழ்ப்பாணத்தானுக்கோ,உலக தமிழ் மக்களுக்கோ இழுக்கு என நான் பார்க்கவில்லை....
இசை நிகழ்ச்சியில் அசம்பாவிதம் நடை பெற்றுள்ளது அம்பிட்டும் தான்....

இனக்கொலை செய்தவர்கள் ,இனப் படுகொலை செய்பவர்கள் எல்லாம் உலகில் சிவப்பு கம்பள வரவேற்பில் கொர்ட் சூட் போட்டு உலா வரும் பொழுது ....

இந்த இசை நிகழ்ச்சி அசம்பாவிதம் உலக தமிழருக்கு ஒர் இழுக்காக நான் பார்க்கவில்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3-9-750x375.jpg

போர்களமாய் காட்சியளிக்கும் முற்றவெளி மைதானம்: 6 பேர் கைது : 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் ஹரிஹரன் இசை நிகழ்வில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் , 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , இலவசமாக இசை நிகழ்வை கண்டு கழித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்து எறிந்துகொண்டு , கட்டண அனுமதி பெற்று , இசை நிகழ்வை கண்டு களித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் வலயத்தினுள் நுழைந்து , மேடை வரையில் சென்று இடையூறு ஏற்ப்டுத்தியுள்ளனர்.

அத்துடன் , கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த உயரமான மேடைகள் , ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள் , பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி அட்டகாசத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் இசை நிகழ்வு இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு , பொலிஸார் , விசேட பொலிஸ் அதிரடி படையினர் மேலதிகமாக மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டு , நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து , இசை நிகழ்வை மீள ஆரம்பித்து சில ஒரு மணித்தியாலத்திற்குள் அவசர அவசரமாக முடித்துக்கொண்டனர்.

குழப்பங்களுக்கு நிகழ்வின் ஏற்பாடுகளில் உள்ள குறைகளே காரணம் என பலரும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3-8-600x338.jpg

3-7-600x338.jpg

3-10-600x338.jpg

3-6-600x338.jpg

3-1-450x600.jpg

3-2-600x338.jpg

3-3-600x338.jpg

3-5-600x338.jpg

3-4-600x338.jpg

https://athavannews.com/2024/1369204

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.