Jump to content

சென்று வாருங்கள் அண்ணா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்திப்பொழுதில் ஓர் அவசர தொலைபேசி 
அவசர சிகிச்சைப்பிரிவில் நீங்களும் அனுமதியாம் 
தொலைபேசியும் அனுமதியில்லை 
தொடர்புகொள்ளவும் முடியவில்லை 
மீள்வீர்கள் என நினைத்திருந்தேன் 
மீளாத்துயில் கொண்டதேனோ!

சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடியதும் 
இரவினில் பயத்திலே நான் கட்டிப்பிடித்து உறங்கியதும் 
பசுமை நினைவுகளாய் இன்றும் என் மனதினிலே!
இடப்பெயர்வால் எந்தன் ஈராண்டுக் கல்வியது 
இல்லாமல் சென்றதனால் திகைத்து நிற்கையிலே!
ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் கற்பித்து 
சாதாரண தரமதிலே சிறப்பு சித்தி பெற வைத்தீர் 

கணக்கு முதற்கொண்டு சங்கீதம் வரையிலே 
தெரியாத பாடம் என்று உமக்கில்லைக் கண்டீரோ 
தெரிந்ததால் தானோ இறைவன் விடவில்லை உமையிங்கு 

இருபத்தொரு அகவையிலே ஆசிரியனாய் நீங்களும் 
படிப்பு செலவு முதல் உடுப்பு வரைக்கும் 
நான் கேட்க்காமலேயே செய்தீர்கள் 
அன்பால் எனை என்றும் அரவணைத்தே சென்றீர்கள் 
அலறித்துடிக்கின்றேன் ஆறுதல் சொல்ல வருவீரோ!

பிள்ளையின் பரீட்சசைக்காய் உங்கள் உடல் நலனை மறந்தீரோ 
பிள்ளைகள் கல்வியே உங்கள் கனவென்று சொல்வீர்கள் 
பாதிக்கனவினிலே பரலோகம் சென்றீரோ!

உங்களிடம் கற்றவரும் உற்றாரும் உறவினரும் 
உங்கள் பாசமுகம் காண ஏங்கியே தவிக்கின்றார் 
உறக்கம் கலைந்திங்கு ஓடித்தான் வருவீரோ!

பரபரக்கும் இப்புவியில் உங்கள் கடமை முடிந்ததென்று 
பாதியில் ஓய்வெடுக்க பரமனிடம் சென்றீரோ!
உங்கள் கனவனைத்தும் உறுதியாய் நிறைவேறும் 
பாசமாய் உங்கள் சகோதரர் நாமுள்ளோம் 
கவலை ஏதுமின்றி சென்று வாருங்கள் அண்ணா! 

  • Like 8
  • Thanks 1
  • Sad 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாவை சந்திக்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இத்துயரம் நிகழும் என எண்ணவில்லை. அப்பெருமகனின் சாதனையில் துளியளவைப் பகிர்ந்ததற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, வாதவூரான் said:

அந்திப்பொழுதில் ஓர் அவசர தொலைபேசி 
அவசர சிகிச்சைப்பிரிவில் நீங்களும் அனுமதியாம் 
தொலைபேசியும் அனுமதியில்லை 
தொடர்புகொள்ளவும் முடியவில்லை 
மீள்வீர்கள் என நினைத்திருந்தேன் 
மீளாத்துயில் கொண்டதேனோ!

சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடியதும் 
இரவினில் பயத்திலே நான் கட்டிப்பிடித்து உறங்கியதும் 
பசுமை நினைவுகளாய் இன்றும் என் மனதினிலே!
இடப்பெயர்வால் எந்தன் ஈராண்டுக் கல்வியது 
இல்லாமல் சென்றதனால் திகைத்து நிற்கையிலே!
ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் கற்பித்து 
சாதாரண தரமதிலே சிறப்பு சித்தி பெற வைத்தீர் 

கணக்கு முதற்கொண்டு சங்கீதம் வரையிலே 
தெரியாத பாடம் என்று உமக்கில்லைக் கண்டீரோ 
தெரிந்ததால் தானோ இறைவன் விடவில்லை உமையிங்கு 

இருபத்தொரு அகவையிலே ஆசிரியனாய் நீங்களும் 
படிப்பு செலவு முதல் உடுப்பு வரைக்கும் 
நான் கேட்க்காமலேயே செய்தீர்கள் 
அன்பால் எனை என்றும் அரவணைத்தே சென்றீர்கள் 
அலறித்துடிக்கின்றேன் ஆறுதல் சொல்ல வருவீரோ!

பிள்ளையின் பரீட்சசைக்காய் உங்கள் உடல் நலனை மறந்தீரோ 
பிள்ளைகள் கல்வியே உங்கள் கனவென்று சொல்வீர்கள் 
பாதிக்கனவினிலே பரலோகம் சென்றீரோ!

உங்களிடம் கற்றவரும் உற்றாரும் உறவினரும் 
உங்கள் பாசமுகம் காண ஏங்கியே தவிக்கின்றார் 
உறக்கம் கலைந்திங்கு ஓடித்தான் வருவீரோ!

பரபரக்கும் இப்புவியில் உங்கள் கடமை முடிந்ததென்று 
பாதியில் ஓய்வெடுக்க பரமனிடம் சென்றீரோ!
உங்கள் கனவனைத்தும் உறுதியாய் நிறைவேறும் 
பாசமாய் உங்கள் சகோதரர் நாமுள்ளோம் 
கவலை ஏதுமின்றி சென்று வாருங்கள் அண்ணா! 

🙏.........

உங்களின் அண்ணாவின் மறைவிற்கு, இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், வாதவூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சகோதரரின் இழப்புக்கு வருந்துகின்றோம்........ஆழ்ந்த இரங்கல்கள்........!  

Link to comment
Share on other sites

அண்ணாவின் இழப்பு பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள், வாதவூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாதவூரான் said:

உங்கள் கனவனைத்தும் உறுதியாய் நிறைவேறும் 
பாசமாய் உங்கள் சகோதரர் நாமுள்ளோம் 
கவலை ஏதுமின்றி சென்று வாருங்கள் அண்ணா! 

large.IMG_6514.jpeg.d72319ac2c0441fb0fcb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

அண்ணாவை சந்திக்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இத்துயரம் நிகழும் என எண்ணவில்லை. அப்பெருமகனின் சாதனையில் துளியளவைப் பகிர்ந்ததற்கு நன்றி.

 நன்றி ஏராளன் 

17 hours ago, ரசோதரன் said:

🙏.........

உங்களின் அண்ணாவின் மறைவிற்கு, இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், வாதவூரான்.

 நன்றி ரசோதரன் 

15 hours ago, suvy said:

உங்கள் சகோதரரின் இழப்புக்கு வருந்துகின்றோம்........ஆழ்ந்த இரங்கல்கள்........!  

 நன்றி தாத்தா

12 hours ago, nunavilan said:

அண்ணாவின் இழப்பு பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள், வாதவூரான்.

 நன்றிநுணா அண்ணா

12 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6514.jpeg.d72319ac2c0441fb0fcb

 நன்றி கவி அண்ணா

9 hours ago, இணையவன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.

 நன்றி இணையவன் அண்ணா

9 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.

 நன்றி ஈழப்பிரியன் அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்... வாதவூரான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2024 at 15:22, வாதவூரான் said:

 

உங்கள் ஏங்கல் கண்ணீரை வரவழைக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 25/5/2024 at 15:04, யாயினி said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவுரன்.🙏

நன்றி யாயினி

On 25/5/2024 at 17:05, தமிழ் சிறி said:

ஆழ்ந்த இரங்கல்கள்... வாதவூரான்.

நன்றி தமிழ்சிறி அண்ணா

On 26/5/2024 at 18:06, நியாயம் said:

துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!

நன்றிநியாயம் அண்ணா

23 hours ago, குமாரசாமி said:

உங்கள் ஏங்கல் கண்ணீரை வரவழைக்கின்றது.

நன்றி தாத்தா

18 hours ago, புங்கையூரன் said:

கண்ணீர் அஞ்சலிகள்…!

 நன்றி அண்ணா

18 hours ago, பெருமாள் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவுரன்.🙏

நன்றி அண்ணா

17 hours ago, Ahasthiyan said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்

நன்றி அண்ணா

17 hours ago, கந்தப்பு said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்

நன்றி தாத்தா

Edited by வாதவூரான்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்த நால்வர் கைது! நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்பதியினர் உட்பட நால்வரை பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸாரின்  விசாரணையில் ” குறித்த சீன நிறுவனத்திற்கு தரம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து ஒரு வீடியோவிற்கு 50,000 முதல் 100,000  ரூபாய்  வரையில்  சந்தேக நபர்கள் விற்பனை செய்து வந்துள்ளமை” தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388415
    • Published By: DIGITAL DESK 7 17 JUN, 2024 | 02:46 PM   முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களிற்கு பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து. 4238 சிங்கள  குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள்.  குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள். இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது. அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்றுவரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186265
    • 17 JUN, 2024 | 02:28 PM ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.   கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.   இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.      இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வுசெய்யமுடியும். யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/186267
    • ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (ஜூன் 16) தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். புதிய உலகின் கல்விப் போக்குகளை மனதில் கொண்டு இந்தக் கல்வி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார். நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி தொழில்நுட்ப கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன ‘ஸ்மார்ட் போர்டுகள்’ வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடசாகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நட்பு ரீதியான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடர்பான ஆசிரியர் கையேடு பாட நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுற்றில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கணிதம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழிநுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303970
    • உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது. அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இன்று ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது. 3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303943
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.