Jump to content

சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல் ஒன்றை தமிழ் இனம் சார்ந்து தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளுகின்ற இந்த நேரத்தில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான சில உணர்வுகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது ஒரு ஊடகமாக எமது கடமையாக இருக்கின்றது.

  1. தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், தமிழ் தரப்பு பலமான பிரதிநிதித்துவத்தை அந்த நாடாளுமன்றத்தில் பெறுவது என்பது தமிழ் மக்களின் இருப்புக்கு பெரிதும் இன்றியமையாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ⁠
  2. ⁠ஊழலற்ற, மாற்றத்திற்கான ஒரு அலை இலங்கை முழுவதும் படுவேகமாக வீச ஆரம்பித்துள்ள இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியும்- ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் களத்தில் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
  3. ⁠தமிழ் மக்களின் அபிலாசைகளையும், நிலைப்பாடுகளையும் பிரதிபலிக்காத வரலாற்றைக்கொண்ட முன்நாள் பிரதிநிதிகளை இம்முறை நிச்சயமாக தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகின்றார்கள்.
  4. குறிப்பாக சுமந்திரன் போன்ற தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கட்சியையும், தமிழ் மக்களையும் மையப்படுத்திச் செய்த பல காரியங்கள் தமிழ் மக்களின் அரசியல் நீரோட்டத்தில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவருவதாக மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றார்கள்.  
  5. ⁠தமிழ் மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருவது, தமிழ் மக்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் தமிழ் மக்களை குற்றவாளிகளாக உலகிற்குக் காண்பிப்பது, தென்னிலங்கை மற்றும் சில தூதராலயங்களின் ‘தரகராக’ செயற்படுகின்ற நடவடிக்கைகள்..- இப்படி அவர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்ற பல காரியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது.
  6. அதேபோன்று, ‘பார் லைசன்ஸ்’ உட்பட பல்வேறு தனிப்பட்ட சலுகைகளுக்காக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீதும் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்துவருகின்றார்கள்.
  7. எந்தவிதக் கொள்கையோ, தர்மமோ இல்லாமல் மூன்று வெவ்வேறு கொள்கைகளையுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு, வெட்கமே இல்லாமல் அதனை ஊடகங்களின் முன்பும் கூறிய மாவை சோனாதிராஜா மீதும் மிகுந்த வெறுப்போடு தமிழ் மக்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.
  8. எனவே மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கின்ற இதுபோன்ற தலைவர்களை தமிழரசுக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.
  9.  ⁠ஊழல்பேர்வழிகளையும், தரகர்களையும், உளறுவாயர்களையும் விட்டுவிட்டு, கல்வி அறிவுள்ள, பண்புள்ள, துடிப்புள்ள, தேசியப் பற்றுள்ள இளைஞர்களுக்கு தமிழரசுக்கட்சி இம்முறை வாய்ப்பளித்து களமிறக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
  10. அப்படியல்லாமல் புதிய மொந்தையில் பழைய கள்ளையே ஊற்றுவோம் என்று வளமை போலவே அடம்பிடித்தால், தமிழரசுக் கட்சி பாதகமான ஒரு மக்கள் ஆணையை களத்தில் சந்திக்கவேண்டி ஏற்படும்.

https://ibctamil.com/article/peoples-opean-letter-to-itak-1727382220

ஐபிசி தமிழ் தானே எழுதி வெளியிடுகிறதோ?!
பகிரங்க மடல் எழுதினவர்கள் யார் என குறிப்பிடப்படாததால் இங்கே இணைத்துள்ளேன்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

கல்வி அறிவுள்ள, பண்புள்ள, துடிப்புள்ள, தேசியப் பற்றுள்ள இளைஞர்களுக்கு தமிழரசுக்கட்சி இம்முறை வாய்ப்பளித்து களமிறக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

 

தமிழரசுக்கட்சி வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஐ பி சி கருதும்பரிந்துரை செய்யும் வேட்பாளர்கள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஏராளன் said:


பகிரங்க மடல் எழுதினவர்கள் யார் என குறிப்பிடப்படாததால் இங்கே இணைத்துள்ளேன்.

பகிரங்கமாக யார் எழுதியிருக்கின்றார்கள் என்று தான் முதலில் அடியில் தேடினேன்........... பகிரங்க அநாமேதயக் கடிதம் என்ற புதுவகையைச் சார்ந்தது இது........... 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியில் யார்யார் கேட்க வேண்டும் என்று சீட்டுக் கொடுக்கும் நிலையில் சுமந்திரன் இருக்கும்போது

சுமந்திரனுக்கே சீட்டுக் கொடுக்க வேண்டாமென்கிறார்களே?

இது திருப்பதிக்கே லட்டுக் கொடுக்கிற மாதிரி இருக்கே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதியவர் லங்காசிறி அரசியல் சாணக்கியர் தமிழரசு (இவர் நிலாந்தன் மாஸ்டர் இளவல்). இவரது எழுத்து நடையை வைத்தே சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

இதை எழுதியவர் லங்காசிறி அரசியல் சாணக்கியர் தமிழரசு (இவர் நிலாந்தன் மாஸ்டர் இளவல்). இவரது எழுத்து நடையை வைத்தே சொல்லலாம்.

இவர் சுமந்திரன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு அதிகம் பாதிக்கப்பட்ட நபர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

இவர் சுமந்திரன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு அதிகம் பாதிக்கப்பட்ட நபர்!

சண் மாஸ்டர் என்று ஒருவர் ஆதன் தொலைக்காட்சிக்கு செவ்வியளித்திருந்தார். உரைநடை முதல் அனைத்தும் நிலாந்தன் மாஸ்ரர்ர போலவே இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

பொதுத் தேர்தல் ஒன்றை தமிழ் இனம் சார்ந்து தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளுகின்ற இந்த நேரத்தில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான சில உணர்வுகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது ஒரு ஊடகமாக எமது கடமையாக இருக்கின்றது.

  1. தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், தமிழ் தரப்பு பலமான பிரதிநிதித்துவத்தை அந்த நாடாளுமன்றத்தில் பெறுவது என்பது தமிழ் மக்களின் இருப்புக்கு பெரிதும் இன்றியமையாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ⁠
  2. ⁠ஊழலற்ற, மாற்றத்திற்கான ஒரு அலை இலங்கை முழுவதும் படுவேகமாக வீச ஆரம்பித்துள்ள இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியும்- ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் களத்தில் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
  3. ⁠தமிழ் மக்களின் அபிலாசைகளையும், நிலைப்பாடுகளையும் பிரதிபலிக்காத வரலாற்றைக்கொண்ட முன்நாள் பிரதிநிதிகளை இம்முறை நிச்சயமாக தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகின்றார்கள்.
  4. குறிப்பாக சுமந்திரன் போன்ற தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கட்சியையும், தமிழ் மக்களையும் மையப்படுத்திச் செய்த பல காரியங்கள் தமிழ் மக்களின் அரசியல் நீரோட்டத்தில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவருவதாக மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றார்கள்.  
  5. ⁠தமிழ் மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருவது, தமிழ் மக்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் தமிழ் மக்களை குற்றவாளிகளாக உலகிற்குக் காண்பிப்பது, தென்னிலங்கை மற்றும் சில தூதராலயங்களின் ‘தரகராக’ செயற்படுகின்ற நடவடிக்கைகள்..- இப்படி அவர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்ற பல காரியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது.
  6. அதேபோன்று, ‘பார் லைசன்ஸ்’ உட்பட பல்வேறு தனிப்பட்ட சலுகைகளுக்காக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீதும் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்துவருகின்றார்கள்.
  7. எந்தவிதக் கொள்கையோ, தர்மமோ இல்லாமல் மூன்று வெவ்வேறு கொள்கைகளையுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு, வெட்கமே இல்லாமல் அதனை ஊடகங்களின் முன்பும் கூறிய மாவை சோனாதிராஜா மீதும் மிகுந்த வெறுப்போடு தமிழ் மக்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.
  8. எனவே மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கின்ற இதுபோன்ற தலைவர்களை தமிழரசுக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.
  9.  ⁠ஊழல்பேர்வழிகளையும், தரகர்களையும், உளறுவாயர்களையும் விட்டுவிட்டு, கல்வி அறிவுள்ள, பண்புள்ள, துடிப்புள்ள, தேசியப் பற்றுள்ள இளைஞர்களுக்கு தமிழரசுக்கட்சி இம்முறை வாய்ப்பளித்து களமிறக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
  10. அப்படியல்லாமல் புதிய மொந்தையில் பழைய கள்ளையே ஊற்றுவோம் என்று வளமை போலவே அடம்பிடித்தால், தமிழரசுக் கட்சி பாதகமான ஒரு மக்கள் ஆணையை களத்தில் சந்திக்கவேண்டி ஏற்படும்.

https://ibctamil.com/article/peoples-opean-letter-to-itak-1727382220

ஐபிசி தமிழ் தானே எழுதி வெளியிடுகிறதோ?!
பகிரங்க மடல் எழுதினவர்கள் யார் என குறிப்பிடப்படாததால் இங்கே இணைத்துள்ளேன்.

யார் எழுதினாலும் ...இந்த முறை. மாவையும். சுமத்திரனும். போட்டி இடக்கூடாது   என்பது சரி தான்    👍

இவர்கள் வேறு தொழிலை தேடி செய்யட்டும். 

உழைப்பதற்கு பாராளுமன்றம் போக வேண்டிய அவசியமில்லை 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

எந்தவிதக் கொள்கையோ, தர்மமோ இல்லாமல் மூன்று வெவ்வேறு கொள்கைகளையுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு, வெட்கமே இல்லாமல் அதனை ஊடகங்களின் முன்பும் கூறிய மாவை சோனாதிராஜா

இந்த அறிவு கூட இல்லாமல் எப்படி இவ்வளவுகாலமும் தலைவராக இருந்தார் என்பதே உலக அதிசயம். அதனாற்தான் நேற்று நுழைந்த சுமந்திரன் இவ்வளவு சர்வாதிகாரம் செலுத்த முடிந்தது கட்சிக்குள். இனிவருங்காலத்தில் தேர்தல் வந்தால்; மாவையரின் இந்த நகைச்சுவையை மக்கள் மறக்க மாட்டார்கள்

8 hours ago, ரசோதரன் said:

பகிரங்கமாக யார் எழுதியிருக்கின்றார்கள் என்று தான் முதலில் அடியில் தேடினேன்........... பகிரங்க அநாமேதயக் கடிதம் என்ற புதுவகையைச் சார்ந்தது இது..

யார் எழுதியிருந்தால் என்ன? சொல்லப்பட்ட விடயம் பலகாலமாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதே!  காரணம் சரி, எழுதியவர் பிழை என்கிறீர்களா? சரி ..... அவர் எழுதியதில் தவறு காண்கிறவர்கள், உங்கள் கையை உயர்த்திக்காட்டுங்கள். தவறை யாரும் சுட்டிக்காட்டலாம். ஒரு சமூகத்தின் நிமித்தம் ஒவ்வொருவருக்கும் அந்த பொறுப்புண்டு. ஒருவர் விடும் தவறால் பாதிக்கப்படுவது, விடியலை நோக்கி போராடும் ஒரு இனம்.

ஆமா...... சுமந்திரன் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையோ? ஒருவரும் அதை கூறியதாக தெரியவில்லை, அல்லது நான் தவறவிட்டு விட்டேனோ? பாராளுமன்றத்தில் தொண்டை கிழிய கத்திவிட்டு அதன் பின் அதற்காக பாராட்டுப்பெறுபவர்களை அனுரா கவனியாமலா இருந்திருப்பார்? கனடாவில் இருக்கிற தங்கமயிலே, சாணக்கியன் பேசியதை தனது அறையில் இருந்து கவனித்த கோத்தா, பின் அவரை அழைத்து பாராட்டியதாக புளகாங்கிதம் அடைந்தாரே. இவ்வளவுதான் அவர்களது உரை. பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக பேசுவார்கள், பாடுபடும் மக்களுக்காகவல்ல.

தங்கள் சாணக்கியத்தை காட்டுவதற்கு கிடைத்த அரங்கமே பாராளுமன்றம். இப்போ தங்கள் சொந்த  கட்சியையே விமர்ச்சிக்கிறார்கள் பாராளுமன்றில். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு விடிவு பெற்று தருகிரம் என்று கிளம்பிய அனைத்து அரசியல்வாதிகளும் முழு கொள்ளைகாரர் ஆக இருந்து இருக்கினம் .

அரசியல் பிரிவு நடேசன் போன்றவர்களை கொல்ல சொன்னதும் இவர்களாக இருக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கொள்ளைகாரர் ஆக இருந்து இருக்கினம்

கொள்கைக்காரர் என்று தவறுதலாக  மாற்றி வாசித்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில  விடயங்கள கதைக்கும் போது ஆயிரகணக்கான சிங்கள போலிஸ் சிங்களஆமியை கூட போட்டு தள்ளிய கருணா பிள்ளையானை எப்படி அதே அனுரா அரவனைகிறார் ?

அதே1972 jvp கிளர்சையில் இதே இந்திய ராணுவம் சிங்கள இளையோர்களை வீதியில் போட்டு நெரித்தார்காளே அப்படி இறந்து போன இளையயவர்களின் ஆன்மாக்கு இதே அனுரா என்ன பதில் சொல்ல போகிறார் ?

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

சில  விடயங்கள கதைக்கும் போது ஆயிரகணக்கான சிங்கள போலிஸ் சிங்களஆமியை கூட போட்டு தள்ளிய கருணா பிள்ளையானை எப்படி அதே அனுரா அரவனைகிறார் ?

இங்கு வெளிக்கும் அனுராவின்  தமிழர் எதிர்ப்பு முகம் ?

பார்ப்பம்  வழக்கம் போல் சிங்களவரா இல்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இப்போது உள்ள அரசியல்வாதிகளில் மக்களை தமிழ் வெறியேற்றி கொலைக்களம் அனுப்பாமல் சாணக்கியத்துடன் ஓரளவுக்கேனும் ஜனநாயகத் தன்மையுடன் செயல்ப்டுபவதோடு ஏதேனும் ஒரு நடைமுறைக்கு உகந்த தீர்வு ஒன்றை பெற்றுத் தரக்கூடிய ஒரே கற்றறிந்த அரசியல்வாதி திரு சுமந்திரன் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

சிங்கள போலிஸ் சிங்களஆமியை கூட போட்டு தள்ளிய கருணா பிள்ளையானை எப்படி அதே அனுரா அரவனைகிறார் ?

அப்படியா...... அரவணைத்து விட்டாரா? நான் அறியவில்லை. 

5 hours ago, பெருமாள் said:

பார்ப்பம்  வழக்கம் போல் சிங்களவரா இல்லை ?

இவர் சிங்களவரேதான். அதிலென்ன சந்தேகம்? தன்னை வித்தியாசமானவராக காட்ட முனைகிறார். தமிழர் அழிக்கப்படும்போது இவர் இரக்கம் காட்டவில்லை, முண்டு கொடுக்காவிட்டாலும் மௌனமாக இருந்து ரசித்தவர். அதைவிட தமிழர் தாயகத்தை இரண்டு படுத்தியவர். இனிமேல் இவரே நினைத்தாலும் பிரித்ததை இணைக்கமுடியாது. தமிழரின் முயற்சி, முன்னேற்றம் அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும். 

 

5 hours ago, பெருமாள் said:

இங்கு வெளிக்கும் அனுராவின்  தமிழர் எதிர்ப்பு முகம் ?

அனுரா எங்கேயும் தான் தமிழருக்கு ஆதரவு என்று சொல்லவில்லை சொல்லவும் மாட்டார் ஆனால் அவர் அரசியலில் காலூன்றுவதற்கு தமிழரின் ஆதரவை எதிர்பார்ப்பார்.  "நம்ப நட, நம்பி நடவாதே." என்பதுதான் நமக்கு பொருந்தும். காலூன்றியபின்னே தன் சுய ரூபத்தை காட்டுவார்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகிடி said:

இலங்கையில் இப்போது உள்ள அரசியல்வாதிகளில் மக்களை தமிழ் வெறியேற்றி கொலைக்களம் அனுப்பாமல் சாணக்கியத்துடன் ஓரளவுக்கேனும் ஜனநாயகத் தன்மையுடன் செயல்ப்டுபவதோடு ஏதேனும் ஒரு நடைமுறைக்கு உகந்த தீர்வு ஒன்றை பெற்றுத் தரக்கூடிய ஒரே கற்றறிந்த அரசியல்வாதி திரு சுமந்திரன் தான் 

அப்படியா எந்த பல்கலையில் எப்போ படித்தவர் என்ற விபரத்தை தர முடியுமா ?

குதிரை ஓடிய கூட்டம் கோட்டு மாட்டிகொண்டு திரிந்தால் படித்தவர் என்ற விம்பம் தோன்றுவதை தவிர்க்க முடியாது .

இங்கு ரணிலும் இவரும் கோட்டு மாட்டும் கூட்டம் ரணில் வெளிநாடுகாளில் படிக்கவில்லை .

அங்கு அடிக்கிற வெக்கைக்குள் இவங்கள் இரண்டு பேரும் சனத்தை ஏமாற்றும் தோற்றம் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

யார் எழுதியிருந்தால் என்ன? சொல்லப்பட்ட விடயம் பலகாலமாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதே!  காரணம் சரி, எழுதியவர் பிழை என்கிறீர்களா? சரி ..... அவர் எழுதியதில் தவறு காண்கிறவர்கள், உங்கள் கையை உயர்த்திக்காட்டுங்கள். தவறை யாரும் சுட்டிக்காட்டலாம். ஒரு சமூகத்தின் நிமித்தம் ஒவ்வொருவருக்கும் அந்த பொறுப்புண்டு. ஒருவர் விடும் தவறால் பாதிக்கப்படுவது, விடியலை நோக்கி போராடும் ஒரு இனம்.

நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம். 

இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே.

சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும்.

நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம்.

இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அப்படியா எந்த பல்கலையில் எப்போ படித்தவர் என்ற விபரத்தை தர முடியுமா ?

குதிரை ஓடிய கூட்டம் கோட்டு மாட்டிகொண்டு திரிந்தால் படித்தவர் என்ற விம்பம் தோன்றுவதை தவிர்க்க முடியாது .

இங்கு ரணிலும் இவரும் கோட்டு மாட்டும் கூட்டம் ரணில் வெளிநாடுகாளில் படிக்கவில்லை .

அங்கு அடிக்கிற வெக்கைக்குள் இவங்கள் இரண்டு பேரும் சனத்தை ஏமாற்றும் தோற்றம் 

Hon. M. A. Sumanthiran, M.P.

pdf_button.png Print Email
3194.jpg
Party
Illankai Tamil Arasu Kadchi (ITAK)
Electoral District / National List
Jaffna
Date of Birth : 09-02-1964
Civil Status : Married
Religion : Christianity
Profession / Occupation : Attorney-at-Law

Contact Details

On Non-Sitting Days
phone_ico.png 0112559352
On Sitting Days
phone_ico.png 0112366314
email_ico.png sumanthiran_m@parliament.lk

Political Career

Academic Qualifications

 

B Sc (Physics), LLM (Internet and Electronic Law);

O./L  A/L முடித்திரிருந்தால்தான் பொதுவாக மேற்படிப்பு  படிக்கலாம் என்பதால் அந்த விபரத்தை இங்கே இணைக்கவில்லை. 🤣

 

👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

O./L  A/L முடித்திரிருந்தால்தான் பொதுவாக மேற்படிப்பு  படிக்கலாம் என்பதால் அந்த விபரத்தை இங்கே இணைக்கவில்லை. 🤣

 

;பயித்தியம் களோடு விவாதம் செய்வது நேர விரயம் 😃

.....................................................................................................

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

;பயித்தியம் களோடு விவாதம் செய்வது நேர விரயம் 😃

.....................................................................................................

பெருசு, 

கோவிக்கக் கூடாது. பேராண்டி பேராண்டி என்று கூறிவிட்டு இப்போது இப்படி அழைப்பது தகுமா? 

😭

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

;பயித்தியம் களோடு விவாதம் செய்வது நேர விரயம் 😃

.....................................................................................................

பெருமாள் அவர்களே நீங்கள் கேட்ட சுமத்திரனின் கல்வித் தகுதி என்ன என்ற கேள்விக்கு @Kapithanபதில் கொடுத்து இருக்கிறார். 

குதிரை ஓடியவர் பொன்னம்பலம் கட்சியில் உள்ள கஜேந்திரகுமார்.

 

2 hours ago, Kapithan said:

அங்கு அடிக்கிற வெக்கைக்குள் இவங்கள் இரண்டு பேரும் சனத்தை ஏமாற்றும் தோற்றம்

அப்படியானால் இனி பாடசாலைக்கு சாப்பாத்து போடக்கூடாது என்றும் தமிழப் பெண்கள் கூறை உடுக்கக் கூடாது என்றும் ஐயர் பஞ்சகட்ச்ம் உடுக்கக் கூடாது என்றும் சட்டம் கொண்டு வந்து விடுவோமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

அப்படியா எந்த பல்கலையில் எப்போ படித்தவர் என்ற விபரத்தை தர முடியுமா ?

 

1 hour ago, Kapithan said:

பெருசு, 

கோவிக்கக் கூடாது. பேராண்டி பேராண்டி என்று கூறிவிட்டு இப்போது இப்படி அழைப்பது தகுமா? 

பேராண்டி நான் கேட்டது என்ன வந்த பதில் என்ன ? 

பதில் வராமல் போன கடுப்பில் பேராண்டி அப்படி எழுதி விட்டேன் மன்னித்து கொள்ளுங்கள் .

8 minutes ago, பகிடி said:

அப்படியானால் இனி பாடசாலைக்கு சாப்பாத்து போடக்கூடாது என்றும் தமிழப் பெண்கள் கூறை உடுக்கக் கூடாது என்றும் ஐயர் பஞ்சகட்ச்ம் உடுக்கக் கூடாது என்றும் சட்டம் கொண்டு வந்து விடுவோமா? 

உங்கள் பழைய ஐடியில் வந்து யாழில் எழுதுங்க சார் 😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

 

பேராண்டி நான் கேட்டது என்ன வந்த பதில் என்ன ? 

பதில் வராமல் போன கடுப்பில் பேராண்டி அப்படி எழுதி விட்டேன் மன்னித்து கொள்ளுங்கள் .

உங்கள் பழைய ஐடியில் வந்து யாழில் எழுதுங்க சார் 😄

இதுதான் என்னுடைய ஒரே id. உங்களுக்கு வேற கள்ள ID ஏதும் இருக்கா? 😄

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.